Showing posts with label பிரபாகர். Show all posts
Showing posts with label பிரபாகர். Show all posts

Thursday, September 03, 2015

சாமியாரின் ஆள்மாறாட்ட வழக்கும், லீலைகளும் -பட்டுக்கோட்டை பிரபாகர்

வழக்கமாக ஒருவர் இன்னொரு வராக நடித்து ஆள் மாறாட்டம் செய்வார். பல ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் ஒரு வழக்கில் குமார் என்கிற ஒருவர் ‘நான்தான் குமார்’ என்று நிரூபிக்க பல வருடங்கள் நீதிமன்றங்களில் போராடினார்.
1909-ம் வருடம் அந்த சம்பவம் நடந்தது. அப்போது இந்தியாவுடன் சேர்ந்திருந்த பங்களாதேஷில் டாக்கா நகரத்துக்கு அருகே 2,300 கிராமங்களை உள்ளடக்கிய பாவல் என்கிற ஜமீன் இருந்தது. அதன் தலைநகர் ஜெய்தேப்பூர்.
3 ராஜகுமாரர்கள் அந்த ஜமீனை நிர்வகித்தார்கள். அதில் மோஜோ குமார் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது ராஜகுமாரன்தான் நம் கதாநாயகன். குமாருக்கு மிருகங்களை வேட்டையாடுவதும், பெண்களோடு உல்லாசமா க இருப்பதும்தான் வேலை. பிபாவதியை திருமணம் செய்தபிறகும் ஆட்டம் குறையவில்லை.
மலைவாசஸ்தலமான டார்ஜி லிங்கில் ஓய்வெடுக்க குமாரை அழைத்தான் பிபாவதியின் அண்ணன் சத்யன். அங்கு சென்ற ஓரிரு நாள் கழித்து குமார் இறந்துவிட்டதாக பாவல் ஜமீனுக்கு தகவல் வந்தது. மறுநாள் காலை டார்ஜிலிங்கில் குமாரின் உடலை சுடுகாட்டில் எரித்தார்கள். பிபாவதி அரண்மனையை விட்டு வெளியேறி தன் அண்ணனுடன் சென்றாள்.
அடுத்த சில வருடங்களில் மற்ற ராஜகுமாரர்களும் இறந்து போனார்கள். 3 பேருக்குமே வாரிசு இல்லாததால் பாவல் ஜமீனின் நிர்வாகப் பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்துக் கொண்டது.
12 வருடங்கள் கழித்து 1920-ம் வருடம் டாக்காவுக்கு ஒரு சாமியார் வந்தார். அவர் இறந்துபோன ராஜகுமாரன் குமார் சாயலில் இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட குமாரின் சகோதரி ஜோதிர்மயி சாமியாரை தன் வீட்டுக்கு அழைத்தாள்.
நடை, உடல் மொழி, பேச்சு எல் லாமே குமாருடைய சாயலோடு ஒத்திருந்தது. சாமியாரிடம் அவரைப் பற்றி கேட்டதற்கு, ‘‘டார்ஜிலிங் அருகில் ஒரு காட்டில் நினைவில்லாமல் கிடந்த என்னை தரம்தாஸ் என்கிற சாது காப்பாற்றி தன் சீடராக்கிக் கொண்டார், அதற்கு முன்பான என் வாழ்க்கை நினைவில் இல்லை. கடந்த 12 வருடங் களாக குருவோடு பல ஊர்களுக்கு போய்வந்தேன்’’ என்றார்.
இறந்துபோனதாக நம்பப்பட்ட குமார்தான் அந்த சாமியார் என்று ஜோதிர்மயியும், ஊர் மக்களும் நம்பி னார்கள். டாக்காவுக்குத் திரும்பிய சாமியாருக்குக் கொஞ்சம் கொஞ்ச மாக பழைய நினைவுகள் வரத் தொடங்கின.
சாமியார் மீண்டும் ஜெய்தேப்பூருக்கு அழைக்கப்பட்டார். மக்கள் கூட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சாமியாரை பலரும் கேள்விகள் கேட்டார்கள். சின்ன வயதில் தன்னை வளர்த்த தாதி, அரண்மனை பணியாளர்களின் பெயர்களை எல்லாம் சரியாக சொன்னார்.
எல்லோரும் சாமியார்தான் ராஜ குமாரன் என்று நம்பினார்கள். ஆனால், அராசாங்கத்திடம் இருந்து சொத்துக்களை அடைய சாமியார் நடத்தும் நாடகம் என்றார்கள் குமாரின் மனைவி பிபாவதியும், சத்யனும்.
மாவட்ட கலெக்டர் சாமியாரிடம் விசாரணை நடத்தி, குமாரின் உடல் எரிக்கப்பட்டதற்கு சரியான சாட்சிகள் இருப்பதால் ‘இவர் ராஜகுமாரன் இல்லை’ என தீர்ப்பு வழங்கினார்.
சாமியார் நம்பிக்கை இழந்து கொல்கத்தா சென்று தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டார். தாரா தேவி என்கிற பெண்ணை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் அவர் மேல் நம்பிக்கை கொண்ட ஆதர வாளர்கள் சேர்ந்து நிதி திரட்டி, பெரிய வக்கீல் மூலமாக கோர்ட்டுக்குப் போனார்கள்.
டாக்கா நீதி மன்றத்தில் 1933-ம் வருடம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. வழக்கு 3 ஆண்டுகள் நடந்தது. நிறைய சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். மருத்துவர்கள் சாமியாரைப் பரிசோதித்தார்கள். புகைப்பட நிபுணர் கள், சிலை வடிப்பவர்கள் என்று பலரும் குமாரின் பழைய புகைப்படங்களை வைத்து சாமியாருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்கள்.
குமாரின் ஆசை நாயகியாக இருந்த எலோகேஷி நீதிபதியிடம் குமாரின் அந்தரங்க உறுப்பில் இருந்த மச்சம் பற்றி சொன்னாள். சாமியாரை நீதிபதி சோதித்ததில் அந்தக் குறிப்பு சரியாக இருந்தது.
குமார் எப்படி யானை மேல் ஏறு வார்? எப்படி உண்பார் போன்ற கேள்விகளுக்கு சாமியார் சரியான பதில்களைச் சொன்னார். பிபாவதியும் சத்யனும் குமார் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தவர் என்று சில கடிதங்களை சமர்ப்பித்தனர். சாமியார் அதை மறுத் தார். பிறகு அந்தக் கடிதங்கள் போலி யாகத் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. சாமியாரின் குருவும், மற்ற சீடர்களும் விசாரிக்கப் பட்டனர். டார்ஜிலிங் அருகே ஒரு காட்டில் நினைவு தவறிய நபரை கண்டெடுத்த நிகழ்வை அவர்கள் ஒரே மாதிரி சொன்னார்கள்.
குமார் இறந்த மறுநாள் சுடுகாட்டில் எரிக்கப்பட்டபோது முகத்தை யாரும் பார்க்கவில்லை என்றும், அது துணி யால் மூடப்பட்டிருந்தது என்றும் பலர் சாட்சி சொன்னார்கள்.
நீதிபதி தன் இறுதித் தீர்ப்பில் சாமியார் தான் ராஜகுமாரன் என்று சொன்னார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பிபாவதி அப்பீல் செய்தார். 3 நீதிபதி களைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. ஒரு நீதிபதி சாதகமாகவும், ஒரு நீதிபதி பாதகமாகவும் தீர்ப்பு சொல்ல.. தலைமை நீதிபதி இங்கிலாந்தில் இருந்து தபாலில் அனுப்பிய தீர்ப்பு மக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. அவர் சாமியாருக்கு ஆதரவாக தீர்ப்பு தந்திருந்தார்.
அப்போது இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் இல்லாததால் வழக்கு லண்டனில் இயங்கிய பிரிவி கவுன்சிலுக்குச் சென்றது. அங்கே அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது.
தீர்ப்பு வந்த தினம் குமார் கோயி லுக்குச் சென்றார். அங்கே திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அடுத்த 2 நாட்களில் இறந்து போனார்.
குமாரின் சொத்துக்களுக்கு பிபாவதி சொந்தம் கொண்டாட முடியாது என்று, குமாரின் 2-வது மனைவி தாரா தேவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சொத்துக்கள் இரண்டு மனைவிகளுக்கும் சரிசமமாக ஒப்படைக் கப்பட வேண்டும் என்று தீர்ப்பானது. ஆனால் பிபாவதி தன் பங்காக வந்த சொத்துக்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிபாவதி சாகும் வரை சாமியாரை குமாராக ஏற்கவேயில்லை.
சரி, டார்ஜிலிங்கில் குமார் இறந்த இரவில் என்னதான் நடந்தது?
அப்போது சத்யனுடன் இருந்தவர்கள் பிறகு சொன்ன சம்பவம் இதுதான்: குமாரின் சொத்துக்கு சத்யன் ஆசைப் பட்டு உணவில் விஷம் கலந்து குமாருக்குக் கொடுத்தார்கள். அவசர மாக அன்றிரவே உடலை மயானத் துக்கு எடுத்துச் சென்றார்கள். திடீ ரென்று புயலுடன் கூடிய மழை வர, பாடையை கீழே வைத்துவிட்டு அருகில் இருந்த குடில்களில் ஒதுங்கி னார்கள். மழை நின்றதும் வந்து பார்த்தால் குமாரின் உடலை அங்கு காணவில்லை.
இரவோடு இரவாக வேறு ஒரு உடலைத் தேடிப் பிடித்து முகம் தெரியாமல் துணியைச் சுற்றி அதுதான் குமாரின் உடல் என்று சொல்லி மறுநாள் சுடுகாட்டில் எரித்துவிட்டார்கள்.
கொடுக்கப்பட்ட விஷத்தால் நினைவு தப்பிய குமார் மழையில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு தரம்தாஸ் என்ற சாதுவிடம் கிடைத்திருக்கிறார்.
தன்னை கொலை செய்ய முயன்றதாக குமார் ஒரு புகார் கொடுத்திருந்தால், தனியாக ஒரு குற்ற வழக்கு நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். ஜமீன் சொத்துக்களை அனுபவிக்காமல் தன் 63-வது வயதில் குமார் இறந்துவிட்டாலும், ஜமீனின் ராஜா நானே என்று போராடி உலகத்துக்கு நிரூபித்துவிட்டார்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

Tuesday, June 02, 2015

12.01.1967 எம் ஜி ஆரை சுட்ட வழக்கில் எம் ஆர் ராதா மாட்டியது எப்படி? -க்ரைம் வழக்கு

பட்டுக்கோட்டை பிரபாகர்

12.01.1967 அன்று எம்.ஜி.ஆர் சுடப் பட்டார். எம்.ஆர். ராதாவும் சுடப் பட்டார். வழக்கின் விசாரணையில் ‘எம்.ஆர். ராதா என்னை சுட்டார். பிறகு தன்னைத் தானே கூட்டுக்கொண்டார்' என்றார் எம்.ஜி.ஆர். ‘எம்.ஜி.ஆர் என்னை சுட்டதால், அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி நான் அவரை சுட்டேன்' என்றார் எம்.ஆர். ராதா. எது உண்மை?
சம்பவத்தை கண்ணால் பார்த்த ஒரே சாட்சி எம்.ஆர். ராதாவுடன் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் வாசு மட்டுமே. அவர் தன் சாட்சியத்தில், ‘எம்.ஆர். ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டுப் பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அவ ரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கப் போராடினேன். அப்போது அவர் தன் னைத் தானே இரண்டாவது முறையாக சுட்டுக் கொண்டார். அதன் பிறகு நான் அந்தத் துப்பாக்கியைப் பறித்தேன். பிறகு போலீஸில் ஒப்படைத்தேன்' என்றார்.
எம்.ஜி.ஆர் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், எம்.ஜி.ஆர் தரப்பின் நிர்பந்தத்தாலும் தயாரிப்பாளர் வாசு பொய் சாட்சி சொல்கிறார் என்றது டிஃபன்ஸ் தரப்பு.
அரசுத் தரப்பு இருவருக்கும் இடை யில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு களைப் பதிவு செய்தது. ‘தொழிலாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப் பட்ட ஒரு காட்சியில், தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பஸ் வாங்கும் சூழலில் எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ்தான் இனி தொழி லாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' என்று வசனம் பேச வேண்டும். எம்.ஜி.ஆர் ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என்றார். அதை எம்.ஆர்.ராதா ஆட்சேபித்தார். ‘சினிமாவுக்குள் உன் கட்சியின் சின்னத்தைக் கொண்டு வராதே' என்றார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட, படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தி இறுதியில் திரைக்கதையில் இருந்தபடி ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார்.
‘நாத்திகம்’ பத்திரிகையில் எம்.ஆர். ராதா எழுதிய ஒரு கட்டுரையில் எம்.ஜி.ஆரின் பெயரைக் குறிப்பிடாமல், ஆனால் அது எம்.ஜி.ஆர்தான் என்று புரியும்விதமாக ஒரு செய்தியைக் குறிப் பிட்டிருந்தார். காமராஜரைக் கொலை செய்ய ஒருவர் சதி செய்வதாக குறிப் பிட்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் மனம் புண்பட்டது.
டிஃபன்ஸ் தரப்பில் எம்.ஜி.ஆர் சினிமா வில் எம்.ஆர். ராதாவை வளரவிடாமல் இடையூறுகள் செய்ததாகவும், எம்.ஆர். ராதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்ததாகவும் வாதிட்டார்கள்.
போலீஸ் தரப்பு தங்களிடம் வாசு ஒப்படைத்த ராதாவின் துப்பாக்கியின் ஆறு சேம்பர் களில் மூன்றில் மட்டுமே குண்டுகள் இருந்ததாகவும், எம்.ஜி.ஆர் வீட்டில் கைப்பற் றப்பட்ட அவரது துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது எம்.ஜி.ஆர் அணிந்திருந்த உடைகள் அவசரமாக ஏன் துவைக்கப்பட்டன என கேள்வி எழுப்பியது ராதா தரப்பு. அவற்றில் ரத்தக் கறைகள் அழிக்கப்படாமல் இருந்திருந் தால் அதில் எம்.ஜி.ஆரிடம் இருந்து துப் பாக்கியைப் பறிக்க ராதா முயன்றபோது, சிந்திய அவரின் ரத்தத் தடயங்களை நிரூபித்திருக்க முடியும் என்றது.
வழக்கு விசாரணை முடிந்து 1967-ம் வருடம் நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித் தார். தீர்ப்பின் சுருக்கம்: ‘எம்.ஆர். ராதா குண்டுகள் நிரப்பப்பட்டத் துப்பாக்கியை எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றதிலேயே அவரின் கொலை நோக்கம் தெரிகிறது.
அரசியல் விரோதம் காரணமாக ராதாதான் தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத் தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது. ஆகவே, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்குகிறேன்.'
இந்த வழக்கில் உண்மை யைக் கண்டறிய மிக உதவி யாக இருந்தது தடயவியல் துறைதான். ஒரு துப்பாக்கி யில் இருந்து குண்டு வெளி யேறும்போது வெப்பத்தினால் சற்றே விரிவடைந்து சுழன்ற படி துப்பாக்கியின் குழலின் உட் பகுதியில் கடுமையான அழுத்தத் துடன் உரசியபடி வெளியேறும். அப்படி உரசுவதால் குண்டின் மேல் கோடுகள் விழும். குழலின் உட்புற அமைப்பு எல்லாத் துப்பாக்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. இரண்டு வெவ்வேறு துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்ட குண்டுகளின் மேல் இருக்கும் உராய்வுக் கோடுகள் வெவ்வேறு விதமாகவே இருக்கும்.
இதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா இருவரின் துப்பாக்கிகளி லும் குண்டுகள் போட்டு சோதனைக்காக சுட்டு அந்த குண்டுகளையும் அவர் களின் உடல்களில் இருந்து நீக்கப்பட்ட குண்டுகளையும் மைக்ராஸ்கோப் வழியாக ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந் தார்கள்.
தடயவியல் துறையின் நிபுணர் களான டாக்டர். கே.சி.பி.கோபால கிருஷ்ணன், டாக்டர். பி.சந்திர சேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த சோதனைகளை நடத்தி மூன்று குண்டு களும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டவை என்று உறுதி செய்தார்கள்.
தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே அவரது அப்பீல் தள்ளுபடி செய்யப் பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண் டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவ ருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
விடுதலைக்குப் பின் மலேசியாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ராதா பேசியபோது, ‘எம்.ஜி.ஆரும் நானும் 50 வருஷமா நண்பர்கள். சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுக்கிட்டோம். அந்த சமயம் கம்பு இருந்திருந்தா, கம் பால சண்டை போட்டிருப்போம். துப் பாக்கிதான் இருந்துச்சி. அதனால துப் பாக்கியால சுட்டுக்கிட்டோம்' என்றார்.
அன்றைய தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் ஆப்ரஹாம் சுகுமார் ராதாவுக்கு முதலுதவி செய்தபோது அவர், ‘நான் தான் சுட்டேன், போலீஸுக்கு ஸ்டேட் மெண்ட் கொடுத்தாச்சு' என்று சொன்ன தாக தன் பிளாக்கில் எழுதியிருக்கிறார்.
பிறகு ஒருநாள் எம்.ஜி.ஆர் தடயவியல் நிபுணர் பி.சந்திரசேகரனிடம், ‘மிகவும் பக்கத்தில் இருந்து சுடப்பட்டபோதும் நானும், எம்.ஆர்.ராதாவும் எப்படி பிழைக்க முடிந்தது?' என்று கேட்ட தால், அவர் அந்த ரவைகளை (குண்டு) தீவிரமாக ஆராய்ந்தார். ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தை உள்ளேயிருக்கும் ரவையின் பிடிப்புதான் தீர்மானிக்கிறது. ராதா பயன்படுத்திய ரவைகள் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட் டவை.
அவற்றை ஒரு தகர டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை யின் டிராயரில் வைத்திருந்தார். டிரா யரை ஒவ்வொரு முறை இழுத்து மூடும் போதும் ரவைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்திருக்கின்றன. அத னால் ரவையின் மேல் பிணைக்கப் பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. இப்படி அழுத்தம் குறைந்த ரவைகளைப் பயன்படுத்திய தால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றார்.
கதையில் உத்தி
நான் எழுதிய ஒரு கதையில் ஒரு கொலை. போலீஸ் சந்தேகிக்கும் ஒருவனைச் தேடிச் செல்வார்கள். அவன் தங்கியிருக்கும் அறை பூட்டப்பட்டிருக்கும். காத்திருப்பார்கள். அவன் கையில் சூட்கேஸோடு வருவான். தான் மூன்று நாட்களாக ஊரில் இல்லை என்று சொன்னபடி அறைக் கதவை சாவி போட்டு திறப்பான். கதவின் கீழ் இடுக்கு வழியாக உள்ளே தள்ளப்பட்டிருந்த மூன்று தினங்களின் தினசரி பேப்பர்களை எடுத்து மேஜையில் வைப்பான்.
அவனை சிக்க வைக்கும் எந்தத் தடயமும் கிடைக்காது. அந்த மூன்று தினங்களின் பேப்பர்களை செக் செய்வார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமையின் இலவச இணைப்புப் புத்தகம், சனிக்கிழமை பேப்பருக்குள் இருக்கும். அதை வைத்து அதட்டி விசாரித்ததும், தான் பேப்பர்களை செட்டப் செய்தபோது மாறிவிட்டதாகச் சொல்வான். செய்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து