Showing posts with label பிரதாப் போத்தன். Show all posts
Showing posts with label பிரதாப் போத்தன். Show all posts

Tuesday, April 26, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விமர்சனம்


இந்த வாரம் 24.4.2011 ஞாயிறு அன்று கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சி எப்பவும் போல கொண்டாட்டத்தோட தொடங்குச்சு,,ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேருமே இப்பவெல்லாம் நல்லா உற்சாகமா பேசறாங்க..  அப்பப்ப விட் அடிக்கறாங்க.. அது சூழ்நிலையின் இறுக்கத்தை தணித்து கலகலப்பாக்குது.. குட் சேஞ்ச்... 

1.அப்துல்லா,சிவா, டேனியல் - ரவிக்குமார்

ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ கார்ல போறப்ப அவரை வில்லன் போட்டுத்தள்ள பிளான் பண்றான். 2 பேருக்கும் என்ன பிரச்சனை? எல்லாம் பொம்பள சமாச்சாரம் தான்.. ( அதானே பார்த்தேன்)ஹீரோயினை வில்லன் லவ்வறான்.. ஆனா அவ ஹீரோவைத்தான் லவ்வறா.. ( அப்பத்தானே ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகும்?)ஹீரோ. வில்லன் 2 பேரும் கடத்தல் பிஸ்னெஸ் தான் பண்றாங்க.. (பின்னே சமூக சேவையா பண்ணப்போறாங்க)

ஹீரோ பணத்தை எடுத்துட்டு எஸ்கேப் ஆக திட்டம் போடறப்ப வில்லன் அவரை போட்டுத்தள்ள வழில வெயிட்டிங்க்..

ஹீரோ கார்ல போறப்ப ஒரு ஆள் வேகமா பின்னால துரத்திட்டே வர்றான்.. என்னமோ சொல்ல வர்றான்.. ஆனா ஹீரோவுக்கு பயம், வில்லன் தான் ஆள் அனுப்பி இருக்கான்னு நினச்சு காரை வேகமா ஓட்டி கரெக்ட்டா வில்லன் வெயிட் பண்ணிட்டு இருக்கற இடத்துல கொண்டு போய் சாத்தி அவனும் அவுட், வில்லனும் அவுட்.. ( ஹீரோ,வில்லன் 2 பேருக்கும்  சம்பளம் தர வேண்டியதில்லை.. டைரக்டருக்கு சவுகர்யம்..) 

அப்புறம் பார்த்தா துரத்திட்டு வந்தவன் ஹீரோவோட கார் டிக்கி ஓப்பன் ஆனதை எச்சரிக்க வந்தானாம்... அவன் ஆக்சிடெண்ட் ஆன காரை செத்துப்போன 2 பேரை பார்த்துட்டே ஹீரோ வெச்சிருக்கற லட்சக்கணக்கான பணத்தை லபக்கிடறான்.. அவ்வளவு தான் கதை..

லாஜிக் சொதப்பல்கள்

1. இந்தக்காலத்துல கார் பேனட் திறந்திருக்குன்னு பைக்ல போறவன் சொல்றதே அதிகம்.. அதுல 160 கி மீ வேகத்துல போற காரை துரத்திட்டு வந்து சொல்ல அவன் என்ன கேனயா?அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான். நிஜ வாழ்வுல.. 

2.ஹீரோவோட கார் வர்றதைப்பார்த்த பின்பு வில்லன் கல்லை எடுத்து ரோட்ல குறுக்கே போடறான்.. 4 கல்லை எடுத்து போடவே 2 நிமிஷம் ஆகுமே.. 160 கிமீ  வேகத்துல வர்ற கார் அந்த 20 மீட்டர் தூரத்தை 3 செகண்ட்ஸ்ல கடந்துடுமே..?முதல்லயே எடுத்துப்போட்டா என்ன?

மேஜிக் கலக்கல்கள்

1. படத்துல கார் ஆக்சிடெண்ட் ஆகற சீன் நல்ல சவுண்ட் எஃபக்ட்டோட  கிராஃபிக்ஸ்னு தெரியாத அளவு நீட்டா பண்ணி இருந்தாங்க.. எடிட்டிங்க்கும் பக்கா.. 

2. படத்துல யாருக்கும் வசனமே இல்லை.. எல்லாம் பேக் டிராப்ல கதை சொல்லும் உத்தி தான்.. நல்லா திங்க் பண்ணி எடுத்திருக்காங்க..


ஹாய் மதன் கமெண்ட் - இந்த படத்துல வர்ற கார் நல்லா பிடிச்சிருந்ததுன்னு சொன்னீங்களே.. பிரதாப் ஜி அந்த பிராண்ட் பிடிச்சதா? சீன் பிடிச்சதா?

 2. ஆட்டம் - ராஜேஷ் குமார்

ஜீன் கிளாட் வேண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட்,விஜய்-ன் பத்ரி படம் பார்த்த எஃபக்ட்ல இந்த படம் எடுத்திருப்பாங்க போல.. குத்துச்சண்டை தான் கதைக்களன் கூடவே தொட்டுக்க ஊறுகாயாய் காதல்.. 

ஹீரோ ஹீரோயினை லவ்வறாரு ஜிம்ல பார்த்து வந்த பழக்கத்துல... ஹீரோயின் அப்பா காதல் கல்யாணத்துல முடிய ஒரு கண்டிஷன் போடறாரு.. பாக்சிங்க் டோர்னெமெண்ட்ல அவரோட சிஷ்யன் ஜெயிக்கனும்.. அதுக்கு ஹீரோ தோக்கனும்.. அவரு அதை விட்டுக்குடுத்தா இவரு இதை விட்டுக்குடுப்பாராம்.. ( வடிவேலு மாதிரி கேவலமான அப்பா போல)

ஆனா ஹீரோ என்ன முடிவெடுக்கறாரு?( என்னத்தை பெரிசா எடுப்பாரு?)பாக்சிங்க்ல ஜெயிச்சுட்டு அதே மேடைல பொண்ணை தூக்கிட்டு போறாரு.. போறப்ப ஒரு பஞ்ச டயலாக் வேற.. “ அந்த விளையாட்ல ஜெயிச்சாச்சு.. இனி வாழ்க்கை ஆட்டம்..இதுலயும் ஜெயிப்போம் இல்ல?

அப்பா கண் முன்னாலயே பொண்ணை தூக்கிட்டு (நிஜமாவே ) போறாரு.. அந்த இங்கிதம் தெரியாத ஹீரோயினும் சிரிச்சுக்கிட்டே அவன் கூட போயிடறா ( நல்ல குடும்பத்துப்பொண்ணு போல.. )

லாஜிக் சொதப்பல்கள் 

1. ஆர்ட்டிஸ்ட்ஸ் செலக்‌ஷன் சரி இல்லை.. ஹீரோ வில்லன் 2 பேரும் பாக்சிங்க் சேம்ப்பியன் என்றால் விக்ரம் ,சரத்குமார் ரேஞ்சுக்கு இல்லைனாலும்  ஓரளவாவது பாடி வேணாமா? ராமராஜன் மாதிரி, அப்பாஸ் மாதிரி சோப்ளாங்கிகளை போட்டது தப்பு.. 

2. சர்வ தேச டோர்னமெண்ட் நடக்கையில் ஒரே ஆரவாரம், மக்கள் கூட்டம் காட்டனும்.. அட்லீஸ்ட் கிராஃபிக்ஸ்லயாவது.. ஆனா நிஜத்துல சும்மா ஏதோ சாவடில செட் போட்டு எடுத்து நம்மை சாவடிக்கறாங்க.. 

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )

1. ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ்மேன் லைஃப்லயும் மறக்க முடியாத கேம் ஒண்ணு உண்டு

2.. டியர்... ஏதாவது பேசேன்... 

 எனக்கு ஸ்போர்ட்ஸ்னா உயிர்.. பாக்சிங்க்ல ஏதாவது சாதிக்கனும்.. ப்ளா..ப்ளா
.....

 நீ ரொம்ப மொக்கை போடறே,, நானே சொல்லிடறேன்.. ஐ லவ் யூ

3.  யூ நோ வாட்..? யூ லுக்கிங்க் சோ ஸ்மார்ட்.. 
 3. ----------------------------- -திருப்பூர் ராம்

 நிகழ்ச்சித்தொகுப்பாளினி படத்தோட டைட்டில் என்ன?னு கேட்டதுக்கு ராம் அதை சஸ்பென்சா படத்தோட கடைசில சொல்றேன்னார்.. நான் கூட எதுக்கு இந்த பில்டப்பு என நினைச்சேன்.. ஆனா க்ளைமாக்ஸ்ல அவர் சொன்னது கரெக்ட் தான்னு தோணுச்சு.. 

ஒரு கடத்தல் குரூப்.. பணம் வேணும்னு கேட்டு ஒரு ஆண், ஒரு பெண் (அவங்க 2 பேருக்கும் இதுக்கு முன்னே அறிமுகம் இல்லை) 2 பேரையும் கடத்திட்டு வந்து அடைச்சு வெச்சிருக்காங்க.. அவங்க தான் ஹீரோ, அண்ட் ஹீரோயின்னு கெஸ் பண்ணாம இருந்தா நாம படம் பார்க்கவே லாயக்கில்லை.. 

இதுல ஹீரோ ஹீரோயின் ஒரு கட்டத்துல லவ்வறாங்க.. ஹீரோவை விடுவிக்க பணயத்தொகை வந்துடுது.. ஆனா ஹீரோயினை விடுவிக்க பணம் வர்லை.. பணம் இல்லைன்னு ஹீரோயினோட அப்பா கையை விரிச்சுடறாரு.
 ( தத்தி வில்லனுங்க.. கடன் இல்லாத தொழில் அதிபர் மகளை கடத்த மாட்டாங்க.. ?) இப்போ ஹீரோ ரன்னிங்க்ல கார்ல ஃபைட் போட்டு 3 வில்லன்களையும் போட்டு ஹீரோயினை காப்பாத்தறாரு.. அவ்வளவுதான். கதை.

 லாஜிக் சொதப்பல்கள் 

1. ஒரு பணக்கார வீட்டுப்பையன் திடீர்னு 3 பேரை ரிவால்வரால சுடுவது எப்படி?அவன் என்ன ஜேம்ஸ்பாண்டா?

2.கடத்தப்பட்ட அந்த பொண்ணும், பையனும் அதிகபட்சமா 8 மணி நேரம் அடைக்கப்பட்டிருக்காங்க.. அதுக்குள்ள லவ் வருமா? ( அதுக்குள்ள வர்லைன்னா வேற எதுக்குள்ள வரனும்னு எதிர்பார்க்கறே..?) 

3. கடத்தப்பட்டவங்களை எந்த மாங்கா மடையனா இருந்தாலும் ( நிஜமான மாங்கா மடையர்கள் மன்னிக்க) தனித்தனி ரூம்ல தான் அடைச்சு வைப்பான்.. எதுக்கு 2 பேரையும் ஒரே ரூம்ல அடைச்சு வைக்கனும்? ( அடேய் சி பி நீ தாண்டா மாங்கா மடையன்.. ஒரே ரூம்ல அடைச்சு வெச்சாத்தானே 2 பேரும் லவ்வர்ஸ் ஆக முடியும்?)

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )


1. எந்தப்பிரச்சனை வந்தாலும் தைரியமா இருக்கறதுதான் முதல் தேவைன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. ( உங்கப்பா மட்டும் இல்ல.. எல்லாரோட அப்பாவும் தான் சொல்வாங்க.. ஆனா அதை ஃபாலோ பண்ணனுமே..?)

2. மிஸ்.. உங்க பேரென்ன?

 உயிரோட இருந்து மறுபடி நாம சந்திக்கும் வாய்ப்பு வந்தா பேர் சொல்றேன்..




3. ம் ம் இப்போ உங்களை காப்பாத்திட்டேன்.. இப்பவாவது பேர் சொல்லுங்களேன்.. 

 தேன் மொழி..  ( இதுக்குத்தான் இந்த பில்டப்பா? நான் கூட சொப்பன சுந்தரின்னு நினைச்சேன்)


செமி ஃபைனலுக்கு 3 பேரும் செலக்ட் ஆகிட்டாங்க.. 3வதா வந்த ராம் படம் பிரைஸ் வாங்குச்சு.. ஹீரோ ,ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துனாங்காட்டி அது செலக்ட் ஆச்சாம்.. ஓக்கே.. 

 ஒரு முக்கியமான விஷயம்.. 3 குறும்படங்கள்லயும் ஹீரோயின்ஸ் அழகு ஃபிகர்கள் தான் .. லாங்க்‌ஷாட்ல பளிச்னு மின்ன்னல் மாதிரி காட்டிட்டதால ( அதாவது சரியா காட்டாததால) அவங்களை சரியா வர்ணிக்க முடில.. ( ஆமா.. இவரு பெரிய சாண்டில்யன். வர்ணிச்சுட்டுத்தான் மறு வேலை)

 அதனால நாளைய இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை ஹீரோயின்ஸ்க்கு க்ளோசப் ஷாட் வைங்க.. நீங்க மட்டும் ரசிச்சா போதுமா? ஹி ஹி 

Wednesday, April 20, 2011

நாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்

இந்த வாரம் ஆக்‌ஷன் ஸ்டோரிஸ்ன்னு சொன்னதும் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.தெலுங்கு டப்பிங்க் படத்துல  வர்ற மாதிரி சொதப்பப்போறாங்கன்னு நினைச்சேன்.. ஆனா முத கதையே வெரைட்டியா இருந்தது..அதுவே முதல் பரிசையும் தட்டிட்டு போச்சு...( அப்போ இனி நாம எப்பவாவது படம் எடுத்தா முதல்ல போடச்சொல்லனும்)

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேர்ட்டயும் ஒரு மாற்றம்.. ரெண்டு பேருமே புது முக இயக்குநர்கள் முகம் சுண்டற ,மாதிரி பேசலை.. பூஸ்ட் அப் பண்ற மாதிரி பேசறாங்க.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,ஒரு படைப்பாளி கவுரப்படுத்தப்படும்போது ஆட்டோமேட்டிக்கா இன்னொரு படைப்பாளிக்கு சந்தோஷம் வந்துடும்..( ஏன் டாக்ஸி மேட்டிக்கா வராதா?)


1.  பார்த்திபன் - ரமேஷ்


அடியாளா வேலைக்கு வந்த இடத்துல சின்ன வயசுப்பசங்க அடி மாடுகளா விற்பதற்காக  கடத்தப்படறதை எதிர்க்கறான்.. தனி ஆளா சண்டைக்குப்போறான்.. அவனை அந்த கடத்தல் கோஷ்டி போட்டுத்தள்ளிடறாங்க...  சாகறப்பக்கூட அவன் அந்த சிறுவர்களை விடுதலை பண்ணிடறான்.

ஒரு ரவுடியா இருந்தாலும், அடியாளா இருந்தாலும் , கல்லுக்குள் ஈரம் இருக்கும்,முரடன் மனதுக்குள்ளும் அன்பு நேசம் போன்ற மென்மையான உணர்வுகள் இருக்கும்கற பாசிட்டிவ்வான கருத்தோட படம் முடியுது.

 படத்தோட மேக்கிங்க் ஸ்டைல் , பேக் கிரவுண்ட் மியூசிக் எல்லாம் நல்லாதான் இருந்தது.. ஆனா இயல்பா இல்லாம ஒரு சினிமாட்டிக் தன்மை தொக்கி நின்னுது.. ஆல்ரெடி கோலிவுட்ல கோலோச்சுன ஒரு டைரக்டர் எடுத்த குறும்படம் போல் இருந்தது.
இதுல வந்த ஒரு நல்ல வசனம்

அடியாள்ங்கறதுக்காக கசாப்புக்கடை வேலை பார்க்கனும்னு அவசியம் இல்லையே..?


 2. இன்னா செய்தாரை - அழகுராஜ்

இந்த தொகுப்பாளினி ஓரளவுக்கு கிரியேட்டிவ்வா சொந்த டயலாக் பேசுனாங்க.. வாங்க அழகா வந்திருக்கீங்க... அழகுராஜ்.. படத்தோட டைட்டில்
இன்னா செய்தாரை...படத்துல நீங்க என்னா செஞ்சிருக்கீங்க?ன்னு கேட்டு சூழலை இறுக்கமான சூழல்ல இருந்து கொஞ்சம் நார்மல்க்கு கொண்டு வந்தாங்க.. 

ஒரு கல்யாணம் ஆன தம்பதி ( கல்யாணம் ஆனாத்தானே அது தம்பதி ?#சொதப்பாம சொல்லு) ஒரு ஃபாரஸ்ட் ஏரியாவுக்கு ஜாலி டிரிப்பா வர்றாங்க..அவர் ஒரு கஸ்டம் ஆஃபீசர்.. ஏற்கனவே அவரால பாதிக்கப்பட்ட சட்ட விரோத கும்பல் அவரை அங்கே போட்டுத்தள்ளிடுது..அவரோட மனைவி அந்த கும்பலை அங்கேயே பழி வாங்கறா.

அவ பழி வாங்கற விதம் எல்லாம் பழைய எஸ் ஏ சந்திர சேகரன் படங்கள் மாதிரி வெரைட்டியான அப்ரோச்சா இருக்கு.ஒருத்தன் காதுல  வெடி குண்டு கட்டி, ஒருத்தனோட உடம்புல ஒரே சமயத்துல வெவ்வேற பிளட் குரூப் ஏத்தி,ஒருத்தன் மூக்குல  2 கஞ்சா சிகரெட் வெச்சு வாயை அடைச்சு,இன்னொருத்தனுக்கு காலால மர்ம ஸ்தானத்துல ஒரே அடி..
( பார்க்கறப்ப நமக்கு வலி.. ஹி ஹி )

இதுல எல்லாரும் சிலாகிச்ச படி லொக்கேஷன் செலக்‌ஷனும் கேமராவும் பக்கா.ஆந்திரா போய்  அங்கே ஏதோ ஒரு ஃபார்ஸ்ட்டை தேடிப்பிடிச்சு ஷூட் பண்ணி இருக்காங்க..

 ஆனா எல்லாருக்கும் தோணும் டவுட்ஸ்

1.  ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசர் அப்படி தனிமைல எந்த செக்யூரிட்டியும் இல்லாம வந்து சிக்கிக்குவாரா?அதுவும் மனைவி கூட வந்து.. 

2, மோதல் நடக்கறப்ப  அவர் ஒரு ஆஃபீசர் என்பதற்கான கம்பீரமே இல்லை..

3. அவருக்கே இல்லாத அந்த  வீரம் அவரோட மனைவிக்கு எப்படி வந்தது?

4. ரொம்ப மென்மையான பெண்ணா காட்டப்படும் அந்த மனைவி வில்லனின் ரத்தத்தை தொட்டு நாக்கில் வைத்து சுவைப்பது நம்ப முடியாத கொடூரம்.
( அட்ராட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க)

( அவர் என்ன பூலான் தேவியா?)

5. கஜினி பட க்ளைமாக்ஸில் அசினுக்கு ஒரு மரண அடி விழுமே அப்படி நங்க் என அடி விழுந்தும் அவர் தப்பிப்பது எப்படி?


ஆனா அந்த ஆஃபீசர் மனைவியா வந்த ஃபிகரோட நடிப்பு ஓக்கே தான்.. இதுல  குளியல் சீன் வேற.. ( சின்னத்திரை செம டெவலப்பு ஹி ஹி )

3. ரணம் - தமிழ் செல்வன்

 ஹீரோ ரவுடி.. ஹீரோயின் கம் காதலிக்கு லவ்வரோட தொழில் என்னன்னு தெரிஞ்சதும் பிடிக்கலை.. ( எல்லா காதலிகளுக்கும் ரவுடிங்களைப்பிடிக்கறதில்லை. ஆனா பெரும்பாலான ஹீரோயின்கள் ரவுடிகளத்தான் லவ்வறாங்க.. # ஒழிக தமிழ் சினிமா லாஜிக் )

ஒரு கட்டத்துல ஹீரோயினை ஒரு ரவுடி குரூப் கடத்திட்டுப்போகுது.. தன்னோட உயிரைக்குடுத்து ஹீரோ அவரைக்காப்பாத்தறாரு.. இப்போ அந்த பொண்ணு அவரை லவ்வுது.. ( அட போங்கப்பா... இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்.. பக்கத்துலயே இருக்கறப்ப கண்டுக்க மாட்டாங்க.. சொர்க்கத்துக்கு டிக்கட் வாங்கறப்ப பதறிட்டு வருவாங்க )

வில்லன் ப்ளேஸ் ல ஹீரோ வில்லன் கூட சண்டை போட்றது,அவங்களை வீழ்த்தறது எல்லாம் அக்மார்க் சிரஞ்சீவி படம் தோத்துது போங்க..

 ஒரே ஆறுதல் என்னான்னா  ஹீரோயின் ஃபிகர் நல்லாருந்தது. ( அதானே பார்த்தேன் )


முதல் பரிசை வழங்கறதுல, எந்தக்குழப்பமும் இல்ல. ஆனா இது குவாட்டர் ஃபைனல் என்பதால் (குவாட்டர் ஃபைனல்னா குவாட்டர் அடிச்சிட்டு ஃபைனல்ல கலந்துக்கறதா? #டவுட்டு)எலிமினேட் பண்ணனுமாம். 

( இல்லைன்னா உம்மாச்சி கண்ணைக்குத்திடுமா?)

 யாரை எலிமினேட் பண்ணலாம்னு மதன் சார் கேட்க பிரதாப் போத்தன் சிரிச்சுக்கிட்டே  மினி மினி மைனோ போட்டுப்பார்க்கலாமா? என காமெடி பண்ணுனது ஹா ஹா ( அது பிங்கி பிங்கி பாங்கி ஃபாதர் ஈஸ் ஏ டாங்க்கி மாதிரி ) 

 கடைசில எலிமினேஷன் இல்லைன்னு அறிவிச்சுட்டாங்க. 

 சந்தோஷம்.