Showing posts with label பிசாசு VS PK -எது டாப்?. Show all posts
Showing posts with label பிசாசு VS PK -எது டாப்?. Show all posts

Monday, December 22, 2014

பிசாசு VS PK -எது டாப்?

பேய்ப் பட ரசிகர்களுக்கு வித்தியாசமான பேயை அறிமுகப்படுத்தும் படம் ‘பிசாசு’.
ஃப்ளாட்டில் தனியாக வசித்துவரும் இளம் இசைக் கலைஞர் சித்தார்த், சினிமாவில் வயலினிஸ்ட். ஒரு ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாவதைப் பார்க்கும் சித்தார்த், தலையில் படுகாயத்துடன் சரிந்து விழும் இளம்பெண்ணைப் பதற்றத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார். தன் கையைப் பிடித்தபடி உயிரை விடும் பெண்ணின் முகத்தைக் கண்டு நொறுங்கிப் போகிறார். அவள் விட்டுச் சென்ற ஒற்றைச் செருப்புடன் வீடு திரும்புகிறார். வீட்டுக் குள் வருவது அந்த ஒற்றைச் செருப்பு மட்டுமல்ல...
அதன் பிறகு படத்தின் மையத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் பேய் ஒவ்வொரு வரையும் மிரட்டி எடுக்கிறது. பேய் இருப்பதை உணர்வது, பயந்து நடுங்கும் மனிதர்கள், பேயை விரட்டும் முயற்சிகள், பேயின் வருகைக்குக் காரணமறியும் முயற்சிகள் என்று செல்லும் படம் எதிர்பாராத திருப்பத் துடன் முடிகிறது.
வழக்கமான பேய்க் கதைகள் போலவே பேயை வைத்து மிரட்டினாலும் பேயின் இன்னொரு பரிமாணத்தை அதற்கான கார ணத்தோடு காட்சிப்படுத்திய விதத்தில் மிஷ்கின் சபாஷ் போடவைக்கிறார். பார்வை யாளர்களுக்குப் பிசாசு தொடர்பான புது அனுபவத்தை ஏற்படுத்துகிறார். பிசாசு ஏன் சித்தார்த் வீட்டுக்கு வந்தது என்பதற்கான காரணம் தேவதைக் கதைகளின் ஈரத்தைக் கொண்டது. கதை முன்னகரும் விதத்திலும் தேவதைக் கதைகளுக்கே உரிய வியப்பை அடைய முடிகிறது.
காட்சி ரூபமாகக் கதை சொல்வதில் தேர்ச்சி பெற்ற மிஷ்கின் இதிலும் காட்சிப் படிமங்கள் மூலம் நம்மைக் கவர்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி ராயும் இசையமைப் பாளர் அரோல் குரோலி ஆகியோரும் மிஷ்கி னுடன் இணைந்து வளமான அனுபவத்தை வழங்குகிறார்கள். சுரங்க நடைபாதையில் உருப்பெறும் பிச்சைக்காரர்கள் சித்திரம் கவித் துவமானது. பிசாசின் கரங்கள் தகப்பனைத் தொடும் காட்சி நெகிழ்ச்சியூட்டுவது.
வித்தியாசமான கதையையும் அதற் கேற்ற திரைக்கதையையும் உருவாக்கி யுள்ள மிஷ்கின், தனக்கே உரிய சில பலவீனங்களின் மூலம் திரைக்கதையின் தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறார். ஏராளமான முடியுடன் சற்றே தலையைச் சாய்த்துக்கொண்டு வித்தியாசமான உடல் மொழியுடன் வரும் இளைஞன், பாத்திரங்கள் பேசும் முறை, சண்டை போடும் விதம், கால்களைப் படம் பிடிக்கும் கேமிரா, உறைந்து நிற்கும் காட்சிப் படிமங்கள் என மிஷ்கின் படங்களுக்கே உரிய க்ளீஷேக்கள் விரவிக் கிடக்கின்றன. இவை படைப்புக்கு வலிமை சேர்க்கவில்லை. சுமார் இரண்டு மணிநேரம் மட்டுமே ஓடும் படத்தில் பல காட்சிகள் கூறியது கூறலாகிச் சலிப்படைய வைக்கின்றன. பேயின் இருப்பையும் அதன் சுபாவத்தையும் காட்ட இத்தனை காட்சிகள் தேவையா? பேயின் தன்மையை மாற்றும் கதையில் பேயின் தோற்றத்தில் மட்டும் பழைய அடையாளமே இருப்பது ஏன்?
மகளின் பிணத்தை அப்பா பாதுகாத்து வைக்கும் விதம் நம்பகத்தன்மை அற்று, செயற்கையான திருப்பமாகவே துருத்திக் கொண்டிருக்கிறது.
மிஷ்கினின் வார்ப்புக்குள் நின்று தன் பாத்திரத்தைத் திறம்படச் செய்திருக்கிறார் இளம் நடிகர் நாகா. நாயகி பிரயாகா வரும் காட்சிகள் மிகக் குறைவு என்றாலும் மனதில் நிற்கிறார். ராதாரவி தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சத்தை அலட்சியமாகக் கிள்ளிச் செல்கிறார். நாயகனின் நண்பர்கள், அம்மா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி, ஆட்டிசம் பாதித்த சிறுவன், ஆட்டோ டிரைவர், வெட்டி அறிவுஜீவி இளைஞன் என எல்லாப் பாத்திரங்களுக்கும் நடிகர்கள் தேர்வு பொருத்தமானது.
ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை தூக்கி நிறுத்துபவை பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங். இளம் இசையமைப் பாளர் அரோல் குரோலி வயலினில் விளை யாடி இருக்கிறார். அந்த ஒற்றைப் பாடலும் அது உருவாக்கப்பட்ட விதமும் அற்புதம்.
பேய்ப் படங்களுக்கே உரிய மிரட்டல் காட்சிகளுக்குக் கூடுதல் வலு சேர்த்திருக் கிறது ரவி ராயின் கேமராவும், கோபிநாத்தின் எடிட்டிங்கும். இவை இரண்டுமே தனித்துத் தெரியாமல், காட்சிகள் மீது ஒட்டுமொத்த கவனத்தைக் குவியச் செய்யும் வகையில் பொருந்துவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, பேய்ப் படங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ‘ஈவில் டெட்’, ‘எக்ஸார்ஸிஸ்ட்’ முதலான ரத்தமும் கோரமும் நிறைந்த தீவிர மிரட்டல் படங்கள் ஒரு வகை. ‘சிக்ஸ்த் சென்ஸ்’ முதலான, அதீத அச்சுறுத்தல் இல்லாத சஸ்பென்ஸை உள்ளடக்கிய சைக்கலா ஜிக்கல் த்ரில்லர் மற்றொரு வகை. மிஷ்கின் இதில் இரண்டா வது வகையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பாடல்களையும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமா அனுபவத்தைத் தர முனையும் அவரது முயற்சி பாராட்டப்பட வேண்டியது. தனது க்ளீஷேக்களின் மீது இருக்கும் பற்று குறைந்தால் மிஷ்கினால் மேலும் நேர்த்தியான அனுபவத்தைத் தர முடியும். 

  • ravi  
    நல்லா இருக்கு
    about 14 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
  • பாலா  
    Nice I will see
    about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • siva rasu  
    நல்ல பிசாசு..... நன்றி மிஸ்கின்
    about 18 hours ago ·   (10) ·   (1) ·  reply (0) · 
  • Lee Vinoth at Allure Entertainment/ Allure Girls 
    100 times better than linga
    Points
    195
    about 18 hours ago ·   (40) ·   (1) ·  reply (0) · 
    siva-rasu  Up Voted
  • spr  
    நல்ல படத்த பாராட்டவேண்டாம் ஒரு சின்ன குறை இல்லாமல் உங்களால் விமர்சனம் எழுத முடியுமா?
    about 19 hours ago ·   (35) ·   (1) ·  reply (0) · 
    NathaN · siva-rasu  Up Voted
  • Praveen Joseph at TATA Consultancy Services 
    படம் நல இருக்குனு சொல்றதுல உங்களுக்கு என்ன ப்றேச்டிகே வந்திடும் நு தெர்ல..கம்மேர்சியால் ந 5 ஸ்டார் குடுபிங்க..நல படத்துக்கு துபுவிங்க...நீங்க லேன் இருக்ற வரைக்கும் தமிழ் சினிமா இப்படி தன இருக்கும்
    about 19 hours ago ·   (42) ·   (1) ·  reply (0) · 
  • kumar kumar  
    சினிமா இவரது திரைக்கைதயை ரசிப்பவர்களுக்கும் தரில் கதையை விரும்புவர்களுக்கும் விருந்து
    about 19 hours ago ·   (8) ·   (0) ·  reply (0) · 
  • பட்டுக்கோட்டை மணி  
    பாடல்களையும், காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டால் அசல் சினிமா என்று யார் சொன்னது? நாம ஒன்னும் கொரியாவிலோ அரேபியாவிலோ வாழ வில்லை என்பதை இந்து டாக்கீஸ் குழு தெரிந்து கொள்ள வேண்டும்.


    இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் உறவினர்கள், நண்பர்கள், காதல், உணவு, ஆலயம் இப்படி எத்தனையோ விஷயங்களை மிஸ் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்பட்டியலில் முக்கியமாக இடம் பெற வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் சினிமா.
    ஹாலிவுட்டின் தலைவாசலாகிய அமெரிக்காவிலிருந்து சினிமாவை மிஸ் செய்கிறேன் என்று நான்கூறுவதை வேடிக்கையாக உணரலாம். ஒரு திரைப்படத்தை தனி அறையில் அமர்ந்து கொண்டு பார்த்தால், நம் ஊரில் வீட்டில் பார்ப்பதற்கும் இங்கே திரையரங்கில் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசங்களை உணர முடியாது. திரையரங்கம் இருக்கும், 70mm திரை இருக்கும், கனகனமான ஒலிப்பெருக்கிகள் இருக்கும் இருந்தும் திரையரங்கில் படம் பார்க்கிற உணர்வு பெரிதாக ஏற்படுவதில்லை. நம் ஊரில் கிடைக்கின்ற உயிரோட்டம் மிக்க அனுபவம் வெளிநாட்டில் எங்கு போனாலும் கிடைக்காது என்றே நினைக்கிறேன்.
    எப்போது போனாலும் திரையரங்கத்தில் பத்து பேருக்கு மேல் அமர்ந்திருப்பதைக் காணமுடியாத ஒரு நிலை சில நாட்கள் என்னை திரையரங்கத்திடமிருந்து விலக்கி வைத்தது. இங்கே சினிமாவில் பின்னணி இசை பின்னணியில் தான் ஒலிக்கிறது. காட்சிகளை உசத்திக் காட்டும் இரைச்சல் பிறந்திட வழியில்லை, அரங்கத்தை அலங்கரிக்கும் கைதட்டல் இல்லை, விசில் பாய்ச்சல் இல்லை. கண்ணீரோ, புன்னகையோ, ஆர்பரிப்போ, கோபமோ இதுயாவும் தனி மனிதன் தன் மனதுக்குள் உணர்ந்திடும் வகையில் தான் அமைந்துள்ளது.
    PK படம் பார்க்க சென்றேன்.
    எப்போதும் போல் இல்லாமல் திரையரங்கில் நாற்பது பேர் கூடிஇருந்தார்கள், நெஞ்சார்ந்த உவகையுடன் மக்கள் சிரிக்கின்ற சிரிப்பு சத்தத்தை முதன்முறையாக இங்கே உணர்கிறேன். வெகு நாட்கள் கழித்து ஓர் உயிரோட்டமிக்க திரை அனுபவத்தை PK தான் எனக்கு அளித்தது.
    வசூல் வேலை செய்யும் தாதா, உயிர்களின் மகத்துவத்தை அறிந்து அன்பு பயக்கும் Munna Bhai MBBS, அதே தாதா வன்முறையை முழுவதுமாக விட்டுவிட்டு காந்தியின் பாதையை நாடிச் செல்லும் Lage raho Munna Bhai, மதிப்பெண் அறிவல்ல என்று கூறி சமுதாயத்தில் வர்த்தகம் ஈட்டும் நோக்கத்தில் புகட்டப்படுகின்ற கல்வி முறையை எள்ளி நகையாடிய Three Idiots இப்படிப்பட்ட அற்புதமான படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி'.
    கிடைப்பதற்கு அரிதான பூனே திரைக் கல்லூரியில் எடிட்டிங் பயின்றவர் இவர். இவர் இயக்கிய படங்கள் எல்லாவற்றிலும் புதுமையான கதைக்களமும், ஹிந்தி படங்களுக்கே உரித்தான முலாம் பூசிய டிராமாக்கள் கலந்திருப்பதை உணரலாம். மொழி என்ற வரையறையும் கடந்து உணர்வுகளால் நம்மை தொடும் தன்மையுடையன இவரின் படைப்புகள்.
    வசூல் ராஜாவும், நண்பனும் இவருடைய படங்களின் ரீமேக்களே. இவரது படம் பார்த்த பிறகு நம்முள் சில கேள்வி பிறப்பதையும், நெஞ்சர்ர்ந்த உவகை பிறப்பதையும் தவிர்க்க முடியாது. இப்போது இவர் இயக்கத்தில் அமீர்கான் நடித்து வெளிவந்துள்ள PK-வும் இந்த வட்டத்தில் தான் விழுகிறது.
    புதிதாக ஒரு மனிதன் நம் உலகத்திற்கு வந்தால் நம் வாழ்வுமுறையையும், வழிமுறைகளையும் பார்த்து அவனுள் என்னென்ன குழப்பங்கள் பிறக்கும் என்ற கேள்வியின் அடிப்படையிலே PK படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
    வேற்று மண்டலத்திலிருந்து நமது பூமி எப்படி இருக்கிறது, இங்குள்ள உயிர்கள் எப்படி இருக்கிறார்கள் என்கிற வியப்புகளோடு ஒரு வேற்றுகிரக விண்வெளி வீரர் நம் கண்டத்திற்கு வருகிறார். அவர் திரும்பி செல்வதற்கான கருவியின் சாவி இறங்கிய முதல் நாளிலே களவாடப்படுகிறது. தான் இழந்தவற்றை நமது ஹீரோ அமீர் கான்' கண்டறிந்தரா இல்லையா என்பது தான் படத்தின் அடித்தளம்.
    அமீர்கான் தான் தேடும் பாதையில் மனிதர்களை பற்றியும், கடவுளைப் பற்றியும் அறிந்ததென்ன? அமீர்கானால் அவர் சூழ்ந்துள்ள சமூகம் பெற்றதென்ன? என்பது தான் படத்தின் கரு.
    ஒரு குழந்தை எப்படி உலகத்தில் பிறக்கிறதோ அதைப்போல நம் உலகத்திற்கு வருகிறார் அமீர். நம் கண்டத்தில் மனிதர்கள் உடை அணிந்திருப்பதை பார்த்து இவர் வியக்கின்ற விதம், தன் குழப்பங்களைப் பற்றியும் தான் பெற்ற தெளிவுகளை பற்றியும் அமீர் விளக்குகின்ற விதம் நம்மை வியக்க வைக்கிறது. உடைகளில் தொடங்கி மொழிக்குள் புகுந்து இவரின் குழப்பங்கள் கடவுளுக்குள் சரணாகதி அடைகிறது.
    நம்மை படைத்த கடவுள் ஒருவன், நாம் படைக்கின்ற கடவுள்கள் ஆயிரம். அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் அவரை சென்றடைய தூதர்கள் எதற்கு, கடவுளின் பெயரில் நம்முள் பேதங்கள் எதற்கு? கொலைகள் எதற்கு? மேனேஜர் எதற்கு? என்பன போன்ற எக்கச்சக்கமான சிந்தனைகளை PK' எடுத்து வைக்கிறான்.
    மேலும், ஒவ்வொரு மதங்களின் வழிமுறைகளினாலும், கோட்பாடுகளாலும் தன்னுள் எழுகின்ற குழப்பங்களை எடுத்து வைக்கிறான்.
    "கடவுளே உன்னை எல்லா மத அடிப்படையிலும் பிரார்த்திக்கிறேன்.. நான்முட்டிபோட வேண்டுமா.. சலாம் போட வேண்டுமா.. நமஸ்காரம் செய்ய வேண்டுமா? எல்லாவற்றையும் செய்கிறேன். மாலையில் விரதம் இருக்கிறேன், காலையில் விரதம் இருக்கிறேன், உடம்பை சாட்டையால் அடித்துக் கொள்கிறேன் இத்தனை செய்தும் ஏன் எனது கோரிக்கையை கேட்க மறுக்கிறாய்? வாழ வழியின்றி தவிக்கிறேன். நண்பர்கள் இல்லை. நான் எந்த வகையில் தொழவேண்டும், யாரைத் தொழவேண்டும் என்று நீ தான் கூற வேண்டும்'" என்று வெள்ளந்தியாக அமீர்கான் கதறும் போதுஅவர் கதாபாத்திரம் மனதோடு ஒன்றிப் போகிறது.
    தனி மனித பார்வைகளை கடந்ததும் PK அனைத்து மதத்தவர் மனதிலும் வெறுப்பை ஈட்டிடாத காரணம் அமீர் கானின்'PK' கதாபாத்திரத்தில் அமைந்திருந்த நேர்மையே. உலகத்தை புரிந்து கொள்ள ஒரு குழந்தை கேட்கின்ற கேள்வியை போலத் தான் PK படமும். நிறைய முறை குழந்தைகளின் கேள்விகளிலிருந்து நமக்கு பல தெளிவுகள் பிறக்கிறது அல்லவா! அப்படித் தான் படம் பார்த்த பின் கிடைக்கின்ற அனுபவமும்.
    புகுத்தப்படாத பாடல்கள், அப்பழுக்கற்ற நகைச்சுவை, நிறைவான இயக்கம் அனைத்தும் இணைந்து PK-வை ஓர் இதமான அனுபவமாக உணரவைக்கிறது. ஏதோ வசனங்களோ, அபத்தமான காட்சிகளோ இல்லாமல் யதார்த்தமாக மனதுக்குள் இழைந்து காட்சிகள் புன்னகை பிறக்கச் செய்கின்றன.
    இந்த இடத்தில் படம் சர்ச்சையாக மாறிடக் கூடுமோ? என்று நாம் நினைக்கும் போது ராஜ்குமார் ஹிரானி தனக்கே உரித்தான மாற்றுப் பாதையில் அழைத்துச்சென்று யார் மனதையும் கடிந்திடாது பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரது படங்களில் யதார்த்தமாக காணப்படுகின்ற ஒரு நாடகத் தன்மை PK-'விலும் அமைந்திருக்கிறது. இருப்பினும், கதாபாத்திரங்களின் கண்ணியம் அதை திகட்டிடச் செய்யாமல் காத்திருக்கிறது.
    உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை வியந்து வியந்து அதை விசித்திரமாக கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் PK அமீர் கானின்' நடிப்பும், அவருடைய முகபாவங்களும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சர்யம் இல்லை. PK ஒரு நெஞ்சார்ந்த அனுபவம்.
    சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan

 நன்றி - த இந்து

  • இந்த படத்தை ஆட்சியாளர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.........
    Points
    18250
    about 17 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
       
    Dilli-Babu  Up Voted
  • yuvan sundar  
    இவரின் முந்தய படங்கள் நான் மிகவும் ரசித்த படங்கள்.. pk இன்னும் பார்கவில்லை கண்டிப்பாக பார்பேன்...
    about 18 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
    Dilli-Babu  Up Voted
  • kathir  
    yes very nice beautiful excellent awsome wonderful movie.
    about 18 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
    Dilli-Babu  Up Voted
  • HARIHARAN SRINIVASAN  
    நல்ல படம் - ஹரிஹரன். யோகா ஆசிரியர். திருச்சி.