Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Monday, December 24, 2012

திருப்பூர் பதிவர், ட்விட்டர்,ஃபேஸ்புக் சந்திப்பு - 30.12.2012

பதிவர் சந்திப்பு இதுவரை நடந்தவற்றில் பிரமாண்டமான வெற்றி பெற்றவை 


1. நம்ம உணவு உலகம் ஆஃபீசர் நடத்திய நெல்லை சந்திப்பு , அனைவரையும் அழைத்து பிரமாதபப்டுத்தினார் , 


2. அடுத்து மதுமதி யின் சென்னை பதிவர் சந்திப்பு . கலக்கு கலக்குன்னு கலக்கிட்டார் ,


 3. 3 வதா  கோவைல  சின்ன வீடு சுரேஷ் , சித்தார் சங்கவி ( அந்த தொட்டபெட்டா முட்டை புரோட்டா சங்கவி அல்ல)  ரக்சியமா நடத்தினது. அது எந்த அள்வு ஹிட் ஆச்சுன்னு சரியா தெரியல .( அதை ஏன் ரகசியமா நடத்தினாங்கன்னு ஒரு பதிவு போடலாம்னா 2 பேரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு “ விடுய்யா விடுய்யா நமக்குள்ளே என்ன?  அப்டினு பூசி மெழுகிட்டாங்க ;-)


4.  நாலாவதா  இப்போ நடக்கப்போகும் திருப்பூர் பதிவர் சந்திப்பு


வழக்கம் போல் அவங்க போட்ட பதிவோட காபி பேஸ்ட் பதிவு . நாம டைப் பண்ணி போடும் பதிவு காதலித்து கைப்பிடிக்கும் பெண் போல , ரொம்ப உழைக்கனும், காபி பேஸ்ட்  பதிவு மாமா பொண்ணு , அத்தை பொண்ணு மாதிரி, நமக்கு சொந்தமில்லை , ஆனாலும் ஜாலி ஹி ஹி

வாருங்கள் இணையத்தால் இணைவோம்

இதுவரை இணையம் மூலம் மட்டுமே பழகிய சொந்தங்கள் நேரில் காண ஒரு வாய்ப்பு .

 நாமும் வளர்ந்து நம்முடன் சமுதாயத்தையும் வளர்க்க ஒரு வாய்ப்பு.

தாய்  தமிழ் பள்ளி மாணவர்களின் அருமையான கலை நிகழ்ச்சிகள் காண ஒரு வாய்ப்பு ..

அந்த மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ ஒரு வாய்ப்பு .

தமிழ்நாட்டை கலக்கிய ஒரு அருமையான ஆட்சிபணி அதிகாரியை சந்திக்க நல்ல வாய்ப்பு


வலைதளங்கள் இனி என்ன செய்ய வேண்டும் , வருங்காலம் எப்படி இருக்கும் என மற்றவர்களுடன் விவாதிக்க ஒரு வாய்ப்பு .

நமது தளம் மேலும் வளர , நாமும் பல புது விஷயங்கள் கற்று கொள்ள ஒரு வாய்ப்பு ..

இந்த அனைத்து வாய்ப்புகளும் வேண்டுமா ????

இங்கே  வாருங்கள் :

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 

நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 

இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
                 திருப்பூர்.
 
 
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
  நம்மில் ஒன்றுமை நீங்கில்
  அனைவருக்கும் தாழ்வு " 

          இன்று நாம் காணப்போகும் இவ்விழாவானது  "தமிழ் உறவோடு உறவாடுவோம்"    என்னும்  புது சிந்தனையின் அறிமுகத்திற்கான துவக்க விழா ஆகும்.
மக்கள் சந்தை.காம் இணையத்தின் தொழிற்களம் மின் இதழ்  மற்றும் தமிழ் மீட்சி இயக்கம் இணைந்து திருப்பூர் மாநகரில் " உறவோடு உறவாடுவோம் " என்ற தலைப்பில் தமிழ் உறவுகளை ஒரு களத்தில் குவிக்க இவ்விழாவை எதிர்கொள்கின்றது.
நோக்கம் ஒன்றாகியதால் இவ்விழாவை ஒரு நல்ல கருத்தரங்க மேடையாக உருவாக்கி வருகின்றோம். 
பல அமைப்புகளை சார்ந்த நண்பர்களும் இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்து, தங்கள் ஆற்றல்களையும் உடன் அளித்து வருகின்றனர்.
இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."

       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.



நிகழ்ச்சி நிரல் : 

சரியாக மதியம் 2.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது

2.30  -   :   தமிழ்த்தாய் வாழ்த்து
            :  வரவேற்புரை
2.45  -   :   துவக்கவுரை ( விழாவின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து)

3.00  -   : கருத்தரங்கம் 
         
தலைப்புகள் :

குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பார்வைகள்:

1. தனி மனித ஒழுக்கம்,
2. இலஞ்சம், ஊழல், சாதி, மத வேறுபாடுகளைக் களையெடுத்தல்
3. தமிழன் என்ற அடையாளத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்
4. சிறந்த தொழில்முனைவோனாக உருவாக தகுதிகளை வளர்க்கும் விதம்
5. தொழில்நுட்பத்தின் உதவியை சரியாக பயன்படுத்துதல் உடன் இயற்கையை நேசித்தல்


என்ற தலைப்புகளின் கீழ் விபரங்களை தொகுத்து ஒரு சுவையான கருத்தரங்கம் உங்களுடனும், உடன் "தாய் தமிழ் பள்ளியை" சேர்ந்த மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியையும் அரங்கேற்ற உள்ளோம்.

அதைத்தொடர்ந்து இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்
திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் 
மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர்

தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.
 



தொழிற்களம் டிசம்பர் விழா அழைப்பிதழ்

பதிவுலகை சார்ந்த நண்பர்களுக்கென்றே இந்த அழைப்பிதழ் பதியப்பட்டுள்ளது.  


அனைத்து பதிவர்களையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்.
தொழிற்களம் விழாவில், நிறைவின் சிறப்பு பகுதியாக பதிவர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...!!


தலைப்பு :


நாளைய வலையுலகம்..?

நன்றி - தொழிற்களம் 




Tuesday, August 21, 2012

ஈரோடு -பெங்களூரு- அவினாசி- திருப்பூர் - பதிவர் சந்திப்பு

Tuesday, February 28, 2012

தமிழகம் தழுவிய மெகா , மகா ட்வீட்டர் கம் பதிவர் சந்திப்பு @சென்னை

http://www.technobaboy.com/wp-content/uploads/twitter-logo-1.jpg 

இது ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கான பதிவு. இந்த மெகா ட்விட்டப்பில் கழந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தான். உங்களின் கருத்துக்களையும், திறமைகளையும் வெளிக்கொணரத் தான் இந்த ஏற்பாடு. அவசியம் கலந்து கொண்டு இந்த வெளிச்சத்தில் உங்களை இந்த உலகிற்கு காட்டிக் கொள்ளுங்கள். நகைச்சுவை மிளிர இந்த அழைப்பு பதிவை எழுதிக் கொடுத்த அவினாசி அன்னாசி அடச்சே அண்ணாச்சி ,கொங்கு மண்டல சந்நியாசி நண்பர் ராஜன் லீக்ஸுக்கு TNmegatweetup என்றும் கடமைப்பட்டுள்ளது.




ஏப்ரல்-30ம் தேதிக்குள் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் [email protected] என்ற முகவரியில் உங்கள் Twitter handle குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளவும்.

விழா நடைபெறும் தேதி : 13-05-2012

நடைபெறும் இடமும், நேரமும் ஏப்ரல்-30ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும்.

R u want to know Mega tweetup updates plz follow our twitter handle : www.twitter.com/TNmegatweetup


@
டுவிட்டரப்பன் துணை
#Chennai Mega TweetUp
தமிழ் கூறும் நல்லுலகின் டுவிட்டர் சந்து/சமுதாய மக்கள் அனைவரையும் ஒரு குடைக்கீழ் கொணருமோர் பெருமுயற்சியாய் சென்னை மெகா ட்வீட் அப் 13-05-2012

சி.பி - இந்த 13ந்தேதி ஏன் செலக்ட் பண்ணோம்னா அந்த நாள்ல வேற நல்ல காரியம், அல்லது சுப முகூர்த்தம் எதுவும் இல்லை.. மாமா பொண்ணுக்கு திரட்டி, பக்கத்து வீட்டு பம்ஸ் குட்டிக்கு நிச்சயதார்த்தம்னு யாரும் சால்ஜாப்பு, ஒயிட் காலர் ஜாப்பு எதுவும் சொல்ல முடியாது..


இணையத்தின் மற்றெந்த சந்துகளையும் விட டுவிட்டர் சந்தில் நமது மக்களின் அளவளாவல் அடா, புடா ரேஞ்சில் மானாவாரியாக பொங்கி ஓடும் சமயத்தில், இயன்றவரை, எல்லாரையும் ஓரிடத்தில் சந்திக்கவைப்பது என்று முடிவு! மக்களனைவரும் குடும்பத்துடன் புளிசோறு கட்டிக் கொண்டு கிளம்பி வரலாம்! பொடுசுகளைத் தூக்கி வருவோர் பேப்பர்ஸ் சொந்த செலவில் கொண்டு வரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


சி.பி - ட்வீட்ஸ் போடும்போது நான் பிரமாதமா சமைப்பேன், என் சமையலை சாப்பிட்டு எங்க குடும்பமே மயங்கி (!!) கிடக்கும்னு ரீல் ரீலா விடும் தாய்க்குலங்கள் மாட்னாங்க.. )

தெருக்கள்தொறும் புண்ணியாத்மாக்களாய் உலவுவதால் கரண்ட் கட் எனும் கடுஞ்சாபமின்றி உய்யும் சென்னை மாநகரில் மேற்படி நிகழ்வை நடாத்துவதில்(!) புழுங்கிச் சாவும் பிறமாவட்ட மக்கள் நாங்கள் களிபேருவகை கொள்கிறோம்!

இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில், ரெஸ்டாரண்டுகள், உயர்தர ஜைவ உணவகங்கள், சோம்பேறி பார்க்குகள், புத்தகக் கண்காட்சிகள், பச்சை போர்டு டாஸ்மாக்குகள், பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிய வீடுகள் என சிறிய அளவில் டுவீட் அப்புகள் வெகுசிறப்பாக நடந்தேறியிருக்கலாம், ஆனால் இம்முறை வங்கக் கடலோரம் சிங்கத்தமிழரை அலைகடலென பெருந்திரளாய் ஒன்றிணைத்து, 2016 சட்டசபை தேர்தல் ரேசில் நாமும் இருக்கிறோம் என்பதனை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


சி.பி - ஒரு ரகசியச்செய்தி..இந்த ட்வீட்டப்புக்கு பாம்பு சட்டையை மாற்றுவது போல் தன் காதலரை மாற்றும் பிரபல கேரளா நடிகை வந்தாலும் வரலாம் . 

வழமை போல், சப்பைக் காரணங்கள் சொல்லி ஜகா வாங்கும் அப்பாட்டக்கர்கள் இம்முறையாவது திருமுகரையை வந்து காட்டிப் போகப் பிரையாசைப்பட்டே 2 மாதங்கள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிடுகிறோம்.



ட்வீட் அப் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை கூட, டேமேஜர் கூப்பிட்டார், ஹோம் மினிஸ்டர் திட்டும்னு கூவறவங்க எல்லாம் அன்றைய தினம் தாத்தா பாட்டிகளைப் போட்டுத்தள்ளவோ, சுளுக்கு, பேதிகளால் பீடிக்கப்படவோ ஆயத்தமாவீர்களாக.

12 வருசம் முந்தி எடுத்த படங்களை டிபியில் வைத்துக் கொண்டு ஸ்டடி லீவில் இருப்பதாக ஸ்டேடஸ் போடும் பெர்சுகள், பாப்பா போட்டோ பூ போட்டோ போட்டிருக்கும் பாட்டிகள் என பலரையும் கண்டு களிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு!


சி.பி - மாறுவேடத்தில்  வரும் பெண்கள் மட்டுறுத்தப்படுவார்கள்

பதிவினைத் தந்தி போல் பாவித்து, கிளம்பத்தயாராகவும்! சனிக்கிழமை இரவே அவரவர் ஊர் காய்கறி மார்க்கெட்டிலிருந்து புறப்படும் உருளைக்கிழங்கு லோடு லாரிகளில் முன்பதிவு செய்து கொள்வீர்.

குடிவெறியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: சந்திப்பின் போது மட்டும் சாராயம் தவிர்ப்பீராக! போதையில் வரும் நபர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

( ஏன்னா எப்பவும் மப்புலயே இருக்கறவங்க அன்னைக்கு ஒரு நாளாவது தெளிவா இருக்கனும்கறதுதான் இந்த சந்திப்போட முக்கிய நோக்கமே.. )

சென்னை மெகா ட்விட் அப்பில் கலந்துகொள்ள உள்ளோர் தத்தமது டுவிட்டர் ஹேண்டில் உள்ளிட்ட விபரங்களுடன் chennaitweetup@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலிட்டு வருகையை உறுதி செய்யவும்.


( சி.பி - மெடிக்கல் ஷாப் மேனகா போனற வெவ்வேறு பெயர்களில் உலா வரும் ஒளிக்கதிர்கள் ஏதாவது ஒரு ஹேண்டில் மட்டும் குறிப்பிட்டால் போதும்.. )

எண்ணிக்கையை உத்தேசித்து, விரைவில் சென்னையில் நிகழ்வு நடைபெறும் அரங்கம் குறித்த விபரங்கள் வெளியாகும்.


சி.பி - க்ராசிங்க்20,000 ட்வீட்ஸ் முதல் தமிழ்ப்பெண் கொங்கு மண்டல தீக்கங்கு, ஆணாதிக்க வாதிகளுக்கு சங்கு, கோவை டேமேஜர் வாழ்த்துகள் (19780 ,கேள்விகள்,213 பதில்கள்,45 ஓய், 41கவிதைகள் ) இவர் விழா மேடையில் தோன்றி கேள்வி கேட்டே கொலையாய் கொல்லுவது எப்படி? என்ற தலைப்பில் உரை ஆற்றுவார்

மேலும் தகவல்களுக்கு டைம்லைனில் பதிலளிக்கக் காத்திருக்கிறோம்!



Tuesday, December 27, 2011

பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் - ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 3

 

15 பேருக்கு அவார்டு குடுத்ததும்  அவங்க கிளம்பிட்டாங்க .கில்மா படம் ஓடற சினிமா தியேட்டர்ல  பிட் ஓட்டிட்டு இடைவேளை விட்டதும் நம்ம ஆளுங்க இடத்தை காலி பண்ணுவாங்களே, அப்படி ஹால்ல பாதி பேரை காணோம்.சிறப்பு விருந்தினர் ,விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட எல்லாரும் கிளம்பிட்டாங்க, அப்போ மணி 12.30 .இப்போ மண்டபத்துல (ஹால்) சல சலப்பு ஏற்பட்டுச்சு.. பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த பதிவர்கள் கடுப்பாகிட்டாங்க.. இவங்க விருது வாங்கறப்ப கை தட்டத்தான் நாம வந்தமா?பதிவர்கள் கூடி பேச வந்தா ,இப்படி கூட்டத்தை கூட்டி காட்டவும்,வேலை முடிஞ்சதும் கழட்டி விடுற செயலும் ஏன்?ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க..

மேடைல பதிவர்கள் அவங்கவங்களை அறிமுகப்படுத்திக்குங்கன்னு சொன்னாலும் யாரும் அவ்வளவா ஆர்வம் காட்டலை.. யாருமே இல்லாத கடைல யார் டீ ஆத்தறதுன்னு நினைச்சுட்டாங்க போல.. முறைப்படி என்ன செஞ்சு இருக்கனும்னா  விழாவில் முதல் நிகழ்ச்சியா புதுமுக பதிவர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்திருக்கனும், அதுக்குப்பிறகு விருது வழங்கும் விழா நடந்திருக்கனும்.. 

ஃபிலாசபி பிரபா, ஆரூர்மூனா செந்தில்,மீ, ஜாக்கி,-----,யுவகிருஷ்ணா, கே ஆர் பி செந்தில் ,அதிஷா

இந்த சந்தர்ப்பத்துல சென்னைல நடந்த ஒரு பாலிடிக்ஸ் மேட்டரையும் சொல்லிடறேன்.. கேபிள் சங்கர்  சார் நடத்தற யூ டான்ஸ் + ஆதி ,பரிசல் சவால் சிறுகதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழா ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த அதே நாள்ல நடத்தப்பட்டது.. இது பிளான் பண்ணி செஞ்சாங்களா? அல்லது எதேச்சையா நடந்ததா? தெரில , ஆனா வந்திருந்த பல பதிவர்கள் பேசுனதை வெச்சு பார்த்தப்ப பதிவர்கள்  ஜாக்கிசேகர் குரூப், கேபிள்சங்கர் குரூப் என 2 பிரிவுகளாக பிரிந்ததை உணர முடிஞ்சது. ( இந்த மேட்டர் விழாவுக்கு வந்த சென்னை பதிவர்கள் சொன்னது)

சென்னையில் நடந்த பரிசளிப்பு விழா வேற தேதில நடத்தி இருந்தா  2 விழாவும் இன்னும் சிறப்பா நடந்திருக்கும்.. அரசியல் வாதிகள் கூட்டம் கூட்டி பலத்தை காட்ற மாதிரி சும்மா வீம்புக்காக போட்டி  கூட்டம் நடத்திட்டாங்க.. இது வரும் காலங்களில் தவிர்க்கப்பட்ட வேண்டும்..

ஈரோட்டில் உள்ள முக்கியமான பதிவர்கள் நண்டு நொரண்டு வக்கீல் சார், நல்ல நேரம் சதீஷ்குமார் இருவரும் வரவில்லை. காரணம் கேட்டதற்கு உள்ளூர் ஆட்கள் எங்களை  விழா அமைப்பாளர் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை.எங்களுக்கு ஃபோன் நெம்பர் இருக்கு, மெயில் ஐ டி இருக்கு , ஆனா 4 நிமிஷம் ஒதுக்கி அழைக்காம இருக்கறப்ப நாங்க ஏன் வரனும்? என்றார்கள்.





போன வருடம் நடந்த சங்கமம் கூட்டத்தில் இது தெரிய வந்தது..இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஈரோடு சங்கமம் எனும் அமைப்பில் ஈரோடு பதிவர் யாரும் உறுப்பினர் இல்லை. மேடையில் அவர் சங்கமம் குழுமம் என அறிமுகப்படுத்திய 10 பேரில் எனக்குத்தெரிந்த முகங்கள் கோபி கோமாளி செல்வா, சித்தார் சங்கவி சதீஷ் மட்டும்தான்.

ஈரோடு நகரைச்சார்ந்த நண்டு நொரண்டு வக்கீல் ராஜசேகரன் சாரோ, சித்தோடு சதீஷ்குமாரோ, மற்றும் , சித்தோடு ஜேம்ஸ்பாண்ட் 07 சதீஷோ ,  கருங்கல் பாளையம் காட்டுவாசியோ  யாரும் இதில் உறுப்பினராக இல்லை.. ஏன்? அவர்களை முறைப்படி அழைத்துப்பேசி  எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் அவா.. 

வால்பையன் , ரோஹினிசிவா

போன வருடம் பணி நிமித்தமாக  நான் ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத போது நான் விழா அமைப்பாளர் க்கு போட்டியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த முயல்பதாகவும், அவர் மேல் எனக்குப்பொறாமை எனவும் ஒரு பேச்சு பதிவுலகில் கிளம்பியது.. அவை அனைத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையில் கிளப்பப்பட்டவை..

விழா அமைப்பாளர் பல சமூக நிறுவனங்கள் ,அமைப்புகளில் தொடர்பு உள்ளவர்.. நகரின் பல பெரிய மனிதர்களிடம்  பழக்கம் உள்ளவர்.. அவரைப்போன்ற திரமைசாலிகள் தான் சங்கமம் போன்ற ஒரு அமைப்பை நடத்த தகுதியானவர்.. நான் ஆஃபீஸ் வேலை பார்த்துக்கிட்டு, அப்பப்ப சினிமா பார்த்து விமர்சனம் எழுத மட்டுமே நேரம் உள்ளவன்.

இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் தாக்கவோ, மனம் புண்படும்படி நடத்தவோ எழுதப்பட்டது அல்ல.. அனைத்து பதிவர்களும் ஒன்றாக எதிர்காலத்தில் கூடி மகிழ வேண்டும், சந்தோஷமாக எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.. போட்டி அமைப்பு , போட்டி குழு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.


 திருப்பூர் சேர்தளம் குரூப்,இடம் இருந்து வலமாக 4 வது நபர்தான் ஜீரோ கிலோ மீட்டர் குறும்பட இயக்குநர் ரவிக்குமார்



Wednesday, December 21, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 2

தொகுத்து வழங்குவது ஈரோடு  கதிர் ,, தாமோதரன் ,திரையில் ஜாக்கி


பதிவர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தாச்சு.. யார் யார் என்ன பேரு, பிளாக் பேரு என்ன? அப்டின்னு ஈசியா அடையாளம் கண்டுக்க ஒரு ஐடியா பண்ணி இருந்தாங்க .அதாவது ரிசப்ஷன்லயே ஒரு ஐ டி கார்டு ,திடீர் உப்புமா, திடீர் கிச்சடி மாதிரி உடனடி ஐ டி கார்டு, அவங்கவங்க பேர் , பிளாக் நேம் எழுதி அதை சட்டைல மாட்டிக்கனும்.. எல்லாரும் மாட்டிக்கிட்டாங்க. ஆனா பாருங்க எனக்கு பின்னூசி குத்த தெரில ஹி ஹி , இதை வெளீல சொன்னாலும் கேவலம், உள்ள சொன்னாலும் கேவலம்.. 

அப்புறம் உள்ளே போய் எல்லார் சட்டை பாக்கெட்டையும் பார்க்க வேண்டியது , அவங்க கிட்டே வாலண்ட்டரியா போய் அறிமுகம் பண்ண வேண்டியது..ஃபோட்டோ எடுத்துக்க வேண்டியது. ( ஆரியக்கூத்தாடினாலும், திராவிட விஷால் கூத்தாடினாலும் காரியத்துல கண்னா இருடான்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க ஹி ஹி )


 ஆரூர்மூனா செந்தில், சங்கவி சதீஷ்,மெட்ராஸ்பவன் சிவக்குமார்,ஃபிலாசபி பிரபாகரன்,மீ, லக்கிலுக் யுவகிருஷ்ணா, நாய் நக்ஸ் நக்கீரன்

ஆனா லேடீஸ் பெரும்பாலும் பேட்ஜ் குத்திக்கலை. ஹேண்ட் பேக்லயே வெச்சுக்கிட்டாங்க, அதனால பெரும்பாலான பெண் பதிவர்களை அடையாளம் காண முடியாம போச்சு.. இதுல ஒரு உளவியல் ரீதியான சிக்கலும் இருக்கு..210 ஆண்கள் இருக்கற கூட்டத்துல 15 பெண் பதிவர்கள் இருப்பதால் அவங்களுக்கு ஒரு அன் ஈசி இருக்கும். அவங்களா போய் யார் கிட்டயும் அறிமுகம் பண்ணிக்க முடியாது, ஆண் பதிவர்கள் வாலண்ட்ரியா போய் அவங்க கிட்டே அறிமுகம் செஞ்சு பேசுனா மண்டபத்துல அது தனியா தெரியும்...பசங்க கிண்டல் பண்ணுவாங்க, பார்றா பொண்ணுங்க கிட்டே போய் வழியறான்னு.. அதனால இரு பிரிவும் தனித்தனியா  இருந்தாங்க, ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க மட்டும் கலந்து பேசிக்கிட்டாங்க, மத்தவங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க..




 இது எதிர்காலத்துல நடக்கற பதிவர் சந்திப்புல தவிர்க்கப்படனும்.. பதிவர் சந்திப்பே எதுக்குன்னா இதுவரை எழுத்தில் மட்டுமே அடையாளம் காணப்பட்டவர்கள் நேரில் உருவத்தை, அவர்கள் பழகும் விதத்தை காணூம் வாய்ப்பாக அதை பயன்படுத்தவே...

அப்புறம் கண்ணில் தென்பட்ட உறுத்தலான இன்னொரு விஷயம்.. பிரபல பதிவர்கள் எல்லாம் ஒரு குரூப், மீடியம் பதிவர்கள் இன்னொரு குரூப், அதிகம் எழுதாத பதிவர்கள் ஒரு குரூப் என பதிவர்கள் 3 பிரிவாக தனித்தனியே இருந்தது வருந்தத்தக்கது..

சாதனை புரிந்த பதிவர்கள் என 15 பேருக்கு விருது குடுத்தாங்க, அவர்கள் ஆரம்பத்துலயே மேடைக்கு அழைக்கப்பட்டு  கவுரவிக்கப்பட்டாங்க.. சிறப்பு அழைப்பாளர்கள், விருந்தினர்கள் பேசியதும், விருது வழங்கப்பட்டதும் அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க.. அதற்குப்பிறகு மீதி இருப்பவர்கள் அறிமுகம் நடந்தது.. இது பலருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.


 வீடு சுரேஷ்குமார், மீ


இவங்க பரிசு வாங்குவதை பார்க்க, இவங்களுக்கு கை தட்டவா நாங்க வந்தோம் என பலர் புலம்பியதை காண முடிந்தது. ஒரு விழா நடத்துவது  எவ்வளவு சிரமம், அதில் யார் மனதையும் புண் படுத்தாமல் எப்படி நடத்துவது, வந்திருந்தவர்களை எப்படி நடத்துவது என்று நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக இந்த நிகழ்ச்சி இருந்தது..

எந்த ஒரு நிகழ்வில் இருந்தும் பாசிட்டிவ் பார்வை வேண்டும் என்ற பெரியவர்கள் கூற்றுக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் இருந்து எப்படி எல்லாம் விழா ஏற்பாடு இருக்க வேண்டும் என்னும் பாடத்தை கற்றுக்கொண்டேன்.. இது யாரையும் குறை சொல்லும் நோக்கம் அல்ல.. நிறை  குறைகளை அலசும் ஒரு முயற்சி அவ்வளவுதான்..

விழாவில் தொகுப்பாளர்களாக 3 பேர் மிக பிரமாதமாக விழாவை தொகுத்து வழங்கினார்கள்.. அப்புறம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்.. சாதனையாளர்கள் 15 பேரின் பயோ டேட்டா , அவர்கள் வலைப்பூ பற்றிய விபரங்கள் அனைத்தும் மேடையிலேயே ஒரு திரை கட்டி அட்டகாசமாக தொகுத்து அளித்தார்கள்.அந்த அழகிய பணியை அகல் விளக்கு ராஜா ஏற்றுக்கொண்டார்.. முதலில் உண்மைத்தமிழன்



ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன்

1. உண்மைத்தமிழன்  - இவரைப்பற்றி சொல்லவே வேணாம், டைரக்டர் எழுதுன திரைக்கதையை விட சினிமா விமர்சனத்தில் இவர் எழுதும் கதையின் நீளம் அதிகமா இருக்கும், கடும் உழைப்பாளி.. பிரம்மச்சாரி .. தமிழன் எக்ஸ்பிரஸ் உட்பட பல பத்திரிக்கைகளில் பணி ஆற்றியவர், முருக பக்தர்..இயற்பெயர் சரவணன்,4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,சென்னையை சார்ந்தவர்

2. ஜாக்கிசேகர் - வலை உலகின் சூப்பர் ஸ்டார், இவர் பற்றி தாக்கி எழுதவே பல வலைத்தளங்கள் இயங்கி வருகிறது என்றாலும் காய்த்த மரமே கல்லடி படும் என்பதால் அதை பற்றிக்கவலைப்படாமல் 4 வருடங்களாக சினிமா விமர்சனம், சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.. 4 குறும்படங்கள் இயக்கி உள்ளார்.. உதவி ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் பணி ஆற்றி வருகிறார்.விஜய் டி வி யின் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேறு உள்ளார், அதில் பல விவாதங்கள் புரிந்தவர்,4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,சென்னையை சார்ந்தவர், இவர் பெயர் வாசிக்கப்பட்டதும் பலத்த கரகோஷம் ஹாலில்



3. ஜீவ்ஸ் எனும் அய்யப்பன் -  பிட்ஸ் இன் ஃபோட்டோகிராஃபி (PIT) எனும் வலைத்தளம் நடத்துகிறார்.. புகைப்படங்களூக்கான தளம் அது . கல்கி , அமுத சுரபி, வடக்கு வாசல் போன்ற இதழ்களீல் கட்டுரை எழுதி இருக்கிறார். 4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,பெங்களூர்வாசி


 அதிஷா , ஸ்டாலின் குணசேகரன்

4. அதிஷா எனும் வினோத்குமார் - புதிய தலைமுறை தலைமை நிருபர்.. மிகச்சிறந்த  எள்ளல் நடைக்கு சொந்தக்காரர். ட்விட்டர், பஸ், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் இவரது படைப்புகள் பிரபலம்.. சென்னையை சார்ந்தவர்


 தேனம்மை லட்சுமணன்,

5. தேனம்மை லட்சுமணன் - இவர் படைப்பு வராத புக்ஸே இல்லை.. இவர் பிளாக் திறந்தாலே அந்த புக்ல வந்த படைப்பு, இந்த புக்ல வந்த கதை என கலக்கலாக இருக்கும்.. பெண் பதிவர்களில் அதிகமாக எழுதுபவர். சென்னையை சார்ந்தவர்.






6. வெய்யிலான் எனும் ஸ்ரீகாந்த் ரமேஷ் - விருதுநகர் வாசி, பணி திருப்பூர்.. 4வருடங்களாக வலைப்பூ வைத்துள்ளார், இவர் எனகு அறிமுகம் இல்லாதவர்.. திருப்பூரில் சேர்தளம் எனும் அமைப்பை சார்ந்தவர் போல.. ஒரு பெரிய குரூப்பே ஒரே மாதிரி வெள்ளை நிற டி சர்ட்டில் வந்து மண்டபத்தில் ஒரு கலகலப்பை ஏற்படுத்தினார்கள்.





7. வலைச்சரம் சீனா - வலைத்தளம் வந்த புதிதில் எல்லா பிளாக்குக்கும் கமெண்ட்ஸ் போட்டு பின்னூட்ட பிதாமகர் பட்டம் பெற்றவர்.. வலைச்சரத்தின் மூலம் பல புதியவர்களை அடையாளம் காட்டியவர்..




8. கே ஆர் பி செந்தில்  - இவர் எழுத்துக்கள் எல்லாம் படு சீரியஸ் ஆக இருக்கும்.. செம கோபக்காரர் போல என நினைத்தால் ஆள் படு ஜாலி டைப்.. சென்னை வாசி.. பயோடேட்டா ஸ்பெஷலிஸ்ட். கேபிள் சங்கரின் நெருங்கிய நண்பர்..





9. சுரேஷ்பாபு - இவர் புகைபட கலைஞர், பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் படைப்பு வர கண்டவர். இவர் எனக்கு அறிமுகம் இல்லை





10. லக்கிலுக் யுவகிருஷ்ணா - 2010 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்ற வலைத்தள வாசி. புதிய தலைமுறை நிருபர். தீவிர திமுக அனுதாபி.. ஆள் செம ஜாலி டைப். ட்விட்டரில் செம கலாட்டா செய்யற நபர். இவர் விருது வாங்கறப்ப ஒரு காமெடி. விருது தர்றப்ப கொடுத்த சில்வர் தட்டையும் எடுத்துட்டு போய்ட்டார். அப்புறம் ஒருத்தர் பதறி ஓடி வந்து தட்டு வேணும்னு கேட்டு வாங்குனது செம கலட்டாவான சீன்.. இவர் வரும்போது மட்டும் நிறைய பேர் கைதட்டுனாங்க.. ஆள்ங்களை ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டார் போல.




11. நாளைய இயக்குநர் புகழ் ரவிக்குமார் - இவர் எடுத்த ஜீரோ கிலோ மீட்டர் ஷார்ட் ஃபிலிம் எனக்கு மிகவும் பிடித்தது.. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பல படங்கள் இடம் பெற்று 3ம் பரிசு பெற்றவர். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்.




12. பாலபாரதி - நல்ல கவிஞர். பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் இவரது நீண்ட கவிதைகள் பிரசித்தம்.. எனக்கு பழக்கம் இல்லை,புதிய தலைமுறையில் பணி புரிகிறார்






13. இளங்கோவன் பாலகிருஷ்ணன் - குறும்பட இயக்குநர்.கோவை பி எஸ் ஜி ஆர்ட்ஸ் காலேஜ் லெக்சரர்.எனக்கு பழக்கம் இல்லை




14. மகேந்திரன் - சிறந்த சமூக ஆர்வலர்.. பல மன நிலை குன்றிய நண்பர்களுக்கு உதவி செய்தவர்..



15. ஓவியர் ஜீவா - திரைச்சீலை என்னும் திரைப்படத்தை பற்றி எழுதப்பட்ட புத்தகத்துக்கு  தேசிய விருது பெற்ற சாதனையாளர்..


---..... தொடரும்

டிஸ்கி -

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

Sunday, December 18, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

 
 மேலே இருக்கும் மேடம் பொதிகை சேனல்ல செய்தி வாசிக்கறவங்களாம்


ஈரோட்டில் பதிவர் சந்திப்பு இன்று 18.12. 2011 ஞாயிறு வெற்றிகரமாக நடந்தது, 210 பேர் மொத்தம் வந்திருந்தாங்க.. அதுல வலைப்பதிவர்கள், ஃபேஸ் புக் , ட்விட்டர் நண்பர்கள் அனைவரும் அடக்கம்.. சென்னையிலிருந்து ஜாக்கிசேகர், கே ஆர் பி செந்தில், ஃபிலாஷபி பிரபாகரன், தண்டோரா மணீ ஜி , உண்மைத்தமிழன் , மெட்ராஸ் பவன் சிவகுமார்.. என நீளும் லிஸ்ட்.. வரிசையா பார்ப்போம்..

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃபோன், நாய் நக்ஸ் நக்கீரன் என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு மிரட்டுனாரு.. நான் சிதம்பரத்துல ரயில் ஏறிட்டேன்.. ஈரோடு 8 மணிக்கெல்லாம் வந்துடுவேன், என்னை வரவேற்க ரெடியா இருந்துக்கோ என்றார்... அடங்கொன்னியா.. இவர் பெரிய சீமை சரக்கு ஷில்பாஷெட்டியா?ன்னு மனசுக்குள்ள நினைச்சுட்டு ஓக்கே டன் அப்டினு ஃபோன்ல சொன்னேன்.. 

அடுத்து ஆரூர் மூனா செந்தில்... 24 மணி நேரமும் மப்புல இருக்கற மாதிரியே டி பி ல ஃபோட்டோ வெச்சிருப்பாரே அவர் தான்..அவர், அண்ணே, நான் சேலம் தாண்டிட்டேன் ( அவ்வளவு பெரிய ஊரை எப்படித்தாண்டுனாரோ..?). 7.30 மணிக்கெல்லாம் ஈரோடு வந்துடுவேன்னாரு..இவர் எஸ் எம் எஸ் ல, ரொம்ப சிக்கனமாம், அடங்கொய்யால, சரக்கு அடிக்கறப்ப மட்டும் அந்த சிக்கனம் தெரியாதா?  ( ஆனா ஆள் தான் தாதா மாதிரி மிரட்ற டைப்ல உருவம், பச்ச மண்ணுய்யா .. செம ஜாலி டைப்)


சொன்ன படி 8 மணிக்கு டான்னு வந்த நக்கீரன் மிஸ்டு கால் குடுத்தார்.. நாமே மிஸ்டு கால் மன்னன், நம்ம கிட்டேயேவா?அப்டின்னு நானும் பதில்க்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன்.. அவர் சொல்ல வந்த தகவல் நான் ஈரோடு வந்துட்டேன்.. நான் சொன்ன தகவல் நான் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டேன்.. வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் பண்புக்காக 80 பைசா செலவானாலும் பரவாயில்லைன்னு நானே அவர்க்கு கால் பண்ணி ?”யோவ் , எங்கேய்யா இருக்கே?” ந்னு கேட்டேன்.. அவர் நீங்க சொன்ன படி ரயில்வே ஸ்டேஷன் ஆர்ச் வந்துட்டேன்..ப்ளூ கலர் சர்ட் போட்டிருக்கேன்னு அடையாளம் சொன்னாரு.. 

ஆளை கண்டு பிடிச்சு அவரை பிக்கப் பண்ணிட்டு ( பாருங்க மகா ஜனங்களே.. நான் எந்த ஃபிகரை யும் பிக்கப் பண்ணலை, ஒன்லி ஆண் பதிவர்) பழைய பாளையம் பஸ் ஸ்டாப்க்கு போனோம்.. ரோட்டரி சி டி ஹால் தான் ஸ்பாட்.. அங்கே போய் விசாரிச்சோம்.. அப்போ நக்கீரன் கேட்டார்..

யோவ், நீங்க லோக்கல் தானே.. எங்கே மீட்டிங்க்னு கூட தெரியாதா?


தமிழ்வாசி பிரகாஷ் , மீ, நாய் நக்ஸ் பிளாக் நக்கீரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார்

 ஹி ஹி எனக்கு கோயில், ஸ்தலம், தியேட்டர்  மட்டும் தான் தெரியும், இந்த கிளப் மேட்டர் எல்லாம் நமக்கு தெரியாது”

சரின்னு சித்தோடு சங்கவிக்கு ஃபோனை போட்டேன்.. நிற்க.. சங்கவின்னா ஃபிகர்னு யாரும் நினைச்சுடாதிங்க, சங்கவி வலைப்பூ  சதீஷ் , இவருக்கும் கில்மாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.. கில்மா படத்துக்குப்பேர் போன மலையாளப்படம் அஞ்சரைக்குள்ள வண்டி,  கில்மா போஸ்ட்க்கு பேர் போனது அஞ்சறைப்பெட்டி ஹி ஹி . நிறைய பேருக்கு குழப்பம் வரும் , ஈரோடு மாவட்டத்துலயே 3 சதீஷ் இருக்காங்க.. 1. நல்ல நேரம் சதீஷ் ( ஜோதிடர்) 2. சங்கவி ( சதீஷ் ,சித்தார், பவானி) 3. ஜேம்ஸ்பாண்ட் 007 சதீஷ் ( டெக்னிக்கல் & இமேஜ்  ஃபோட்டோஸ் கலெக்‌ஷன்ஸ் போடற சதீஷ் )

கோமாளி செல்வா , வெங்கட் , மீ

சித்தார் சதீஷ்கிட்டே மண்டபம் எங்கேன்னு கேட்டா அவர் நமக்கும் மேலே இருப்பார் போல.. பழைய பாளையம் பஸ் ஸ்டாப்ல யாரையாவது விசாரிங்க, சொல்வாங்கன்னாரு.. அடங்கோ , அது எங்களுக்குத்தெரியாதாய்யா.. நீங்க வேணும்னா ஈரோடு  கதிர்க்கு ஃபோன் போட்டு கேளுங்களேன்.. இதுல ஒரு ரகசியம், நான் அவுட் கோயிங்க் கால் பேசறதுன்னா ஏர் செல் நெம்பரா இருந்தா மட்டும் தான் பேசுவேன், ஏன்னா எனக்கு ஏர் செல் டூ ஏர் செல் ஃப்ரீ.. இண்ட்டர் நேஷனல் ஃபிகரா இருந்தாலும் வேற கம்பெனி ஃபோன் என்றால் மீ பேச லேது ஹி ஹி , கதிர்ட்ட இருக்கற ஏர்செல் பிசியாவே இருந்துச்சு.. இன்னொரு பி எஸ் என் எல் நெம்பர் எனக்கு தெரியாது.. 

ஃபிலாஷபி பிரபாகரன் , மீ,
 அப்புறம் டீக்கடைல விசாரிச்சு ஸ்பாட்டை கண்டு பிடிச்சு மண்டபம் போனா அங்கே ஆல்ரெடி 8 பேர் இருந்தாங்க.. ஒரு அவசர அறி முகம்.. யார் யார்னு எல்லாம் நினைவில்லை.. அப்போ ஈரோடு கதிர் முதுகை தொட்டார் ( என் முதுகைத்தான் ) டக்னு திரும்பறப்ப அவர் செல் ஃபோனை தட்டி விட்டுட்டேன்.. ஜஸ்ட் மிஸ் ஆகி இருக்கும் , நல்ல வேளை பிடிச்சுட்டாரு..

ஆரூர் மூனா செந்திலை பிக்கப் பண்ணிட்டு  வர்றேன் -னு கிளம்புனேன்.. அப்புறம் பார்த்தா அவர் பாட்டுக்கு இங்கே மண்டபம் வந்துட்டு மெசேஜ் அனுப்பறார்.. தமிழ்வாசி பிரகாஷ், வலைச்சரம் சீனா ஐயா ஆன் த வே-ன்னு சொன்னாங்க. நைட் 11 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தாங்க போல..

நான் சென்னிமலை கிளம்பி போய்ட்டேன், இன்னைக்கு காலைல 9.00 மணிக்கு பிரகாஷ் ஃபோன் பண்ணி நாங்க ஹால்க்கு வந்துட்டோம், நீங்க எப்போ வர்றீங்க?னு கேட்டாரு.. அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்னேன்..

ரவி, ஜேம்ஸ் பாண்ட் சதீஷ், மீ, உண்மைத்தமிழன்

9.40 க்கு ஹால்க்கு வந்துட்டேன்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் எண்ட்ரன்ஸ்ல ஒரு குரூப்போட பேசிட்டு இருந்தாரு. புதிய தலை முறை தலைமை நிருபர் அதிஷா இருந்தாரு.. அவர் கேட்ட கேள்வி என்னை அதிர வெச்சுட்டுது.. “ ஏன் என் ட்விட்டர் அக்கவுண்ட்டை பிளாக் பண்ணி வெச்சிருக்கீங்க? ஃபாலோ பண்ண முடியலை? உங்க பிளாக் எல்லாம் ரெகுலரா படிப்பேன், மொக்கை படமா விமர்சனம் போட்டு கொலையா கொல்வீங்களே?ன்னார்.. 
அய்யய்யோ, நான் எதும் பிளாக் பண்ணலை, என்னையும் அறியாம எதையாவது க்ளிக் பண்ணி இருப்பேன், நான் டெக்னிக்கல் மேட்டர்ல ரொம்ப வீக் ( மேட்டர்ல ரொம்ப ரொம்ப வீக் ), உடனடியா பார்க்கறேன்ன்னேன்.. 

யுவ கிருஷ்ணா அவர் பக்கத்துலயே இருந்தாரு.. ட்விட்டர்லயும் சரி, பிளாக்லயும் சரி 15 வருஷம் முன்னால எடுத்த ஃபோட்டோவை வெச்சிருக்காரு ஜனங்களே..  யாரும் ஏமாந்துடாதீங்க.. ( நாம எவ்வளவோ தேவலை , 4 வருஷம் முந்திய ஃபோட்டோ தான் வெச்சிருக்கோம்.. ) அவர்ட்ட கேட்டேன், 




அண்ணே, ஏன் பழைய ஃபோட்டோ வெச்சீருக்கீங்க?

 எனக்கு பழசுதான் ரொம்ப பிடிக்கும்னாரு ( இவர் நடு நிசி கீச்சு மன்னன் போல - மிட் நைட்ல கில்மா ட்வீட் தான் நநிகீ )

நக்கீரன், நான் 2 பேரும் அப்படியே கீழே இறங்கி வந்தோம், எதிர்ல கோகுலத்தில் சூரியன் வெங்கட், சேலம் தேவா வந்தாங்க

எனக்கு அடையாளம் தெரியலை.. நக்கீரன் தான் சொன்னாரு.. வர்றது வெங்கட் போல? 

இருக்காது, அவர் டி பி ல சிந்தாமணி கலர் சட்டை தானே போட்டிருப்பாரு?இதுல வேற கலர் போட்டிருக்காரு.. அதுவும் இல்லாம டி பி ல சிவப்பா இருக்காரு, இதுல கலர் கம்மியா இருக்கே?

கே ஆர் பி செந்தில் ,(எங்கே செல்லும் இந்தப்பாதை) , மீ


அப்புறம் பார்த்தா ஆள் வெங்கட் தான்.. சேலம் தேவா ட்விட்டர் டி பி ல குழந்தை மாதிரி முகத்தை வெச்சிருக்காரே.. ஆள் ஆறரை அடி , ஓங்காம அடிச்சாலே ஒன்றரை டன் வெயிட் வரும் போல அவ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைத்தமிழன் என்னை காட்டி என்னமோ மிரட்ற மாதிரி என்னமோ சொன்னாரு.. கிட்டே போய் என்னண்ணே? அப்டின்னேன்
தம்பி.. ரொம்ப ஓவரா ஆடாதே, உன் பிளாக்ல இனிமே ஃபிகருங்கற வார்த்தையே வரக்கூடாது, எந்த விமர்சனம் எழுதுனாலும் நீ ஹீரோயினை ஃபிகர்னு தான் வர்ணீக்கறியாம், நிறைய புகார் வருது.. அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னா நாங்க காப்பாத்த மாட்டோம்னாரு.. 

லக்கி லுக் மப்பு கிக் யுவ கிருஷ்ணா, மீ

ஃபிலாசபி பிரபாகரன் கிட்டே மெட்ராஸ் பவன் சிவக்குமார் வந்திருக்காரா?ன்னு கேட்டு செம பல்பு வாங்குனேன்.. அடப்பாவமே , அரை மணி நேரமா பேசிட்டு இருந்திங்களே. அவர் தான் சிவக்குமார்னார். அடங்கோ

மணி காலை 10.45  விழா ஆரம்பிச்சுது.. சிறப்பு விருந்தினர் புத்தகத்திரு விழா புகழ் ஸ்டாலின் குணசேகரன்....

தொடரும்