Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts

Tuesday, January 12, 2016

தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்!

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது.


காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன.


தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன.


இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "'வேதாளம்', 'ஐ' போன்ற மெகா பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களும் மக்களைப் பரவலாகச் சென்றடைந்தன.
காஞ்சனா 2- வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' திரைப்படம், 10 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, சுமார் 100 கோடியை வசூலித்தது. அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட் படமான 'காக்கா முட்டை', அதன் முதலீட்டைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு பணத்தை வாரிக் குவித்து, தேசிய விருதையும் தட்டிச்சென்றது.



அதைத் தொடர்ந்து, 'நானும் ரவுடிதான்', 'ஓ காதல் கண்மணி', 'அனேகன்', 'டிமாண்டி காலனி', 'டார்லிங்', 'மாயா' ஆகிய படங்களும், சோடை போகாமல் ஓடின. 'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றி, திட்டமிடப்பட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே எடுக்கப்படும் படங்களும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தியது.
பெரிய பட்ஜெட் படங்களான கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', 'தூங்காவனம்', விஜயின் 'புலி', சூர்யாவின் 'மாஸு' ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.



டோலிவுட்டில் எப்படி?
டோலிவுட் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த, ஆந்திரா பாக்ஸ்ஆபிஸைச் சேர்ந்த ஓம் தீபக், "எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம், தெலுங்கு திரைப்பட உலகை சுமார் 10 சதவீதம் விரிவடையச் செய்தது.
பாகுபலி, உலகம் முழுக்க சுமார் 600 கோடி ரூபாயை வசூல் செய்ய, கொரட்டலா சிவாவின் 'ஸ்ரீமந்துடு' திரைப்படம் சுமார் 200 கோடிகளை அள்ளியது" என்றார்.



சினிமா வர்த்தக ஆய்வாளரான ட்ரிநாத், இத்தகைய படங்களின் வெற்றி தெலுங்குத் திரையுலக மார்க்கெட்டை உயர்த்தியிருக்கிறது. பாகுபலியின் அனைத்து மொழி டப்பிங் படங்களும் நன்றாக ஓடின. அதன் இந்திப் பதிப்பு மட்டும் சுமார் 100 கோடி வசூலித்திருக்கிறது. நல்ல கதைதான் முக்கியம்; மொழி முக்கியமில்லை என்பதை இது உணர்த்தியிருக்கிறது.
'ராஜு காரி காதி', 'சினிமா சூப்பிஸ்தா மாவா', 'குமாரி 21 ஃபீமேல்', 'படாஸ்', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்ட குறைந்த பட்ஜெட் படங்கள், கதாநாயகர்களைத் தாண்டி, கதையின் நாயகர்களை மையப்படுத்தின.



'ராஜு காரி காதி', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்டவை இந்த வருடத்தின் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தன. 'ருத்ரமாதேவி', 'ஜேம்ஸ் பாண்ட்', 'சுப்பிரமணியம் ஃபார் சேல்', 'காஞ்சி' உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடினாலும், விநியோகஸ்தர்களுக்கு சிறிய தடையாகவே அமைந்திருந்தன" என்று கூறினார்.


டப்பிங் படங்களான 'ரகுவரன் பி.டெக்.', 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7', 'ஜுராசிக் வேர்ல்ட்' ஆகியவை வெற்றி பெற்றன. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ப்ரூஸ் லீ: த ஃபைட்டர்', 'அகில்' ஆகியவை பெரும் சோகமாக அமைந்தன.


மலையாளத் திரையுலகம் மலர்ந்ததா?
மலையாளத் திரையுலகம், வணிக ரீதியில் வெற்றி பெற்று, கலவையான விமர்சனங்களையும் பெற்றது. 'பிரேமம்', 'என்னு நிண்டே மொய்தீன்' ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றிவாகை சூடின.
12 கோடியில் தயாரிக்கப்பட்ட 'மொய்தீன்', சுமார் 50 கோடியை அள்ளியது. 5 கோடியில் உருவாக்கப்பட்ட 'பிரேமம்' வசூலித்ததோ சுமார் 60 கோடி.


இந்த வருடம் வெளிவந்த சுமார் 100 மலையாள படங்களில், 'மிலி', 'பிக்கெட் 43', 'ஃபைர்மேன்', '100 டேஸ் ஆஃப் லவ்', 'ஒரு வடக்கன் செல்ஃபி', 'என்னும் எப்பொழும்', 'பாஸ்கர் த ராஸ்கல்', 'சந்திரனேட்டன் எவிடயா' உள்ளிட்டவை வெற்றியைச் சுவைத்தன.




மலையாளத் திரையுலக விநியோகஸ்தரில் ஒருவரான அரவிந்த் நம்பியார், "ரீமேக் மூலமாகவும் திரையுலகம் சம்பாதித்தது. 'ஒரு வடக்கன் செல்ஃபி' தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது" என்று கூறினார்.



மம்முட்டி நடித்த 'பாஸ்கர் த ராஸ்கல்', தெலுங்கு உரிமையோடு, தயாரிப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு பணத்தை வசூலித்திருக்கிறது.
'லைலா ஓ லைலா', 'மரியம் முக்கும்', 'சிறகொடிஞ்ச கனவுகள்' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்போடு வெளியாகி ஏமாற்றத்தை அளித்துச் சென்றன.



கவனத்தை ஈர்த்த கன்னடத் திரையுலகம்
அனுப் பந்தாரியின் 'ராங்கிதரங்கா' மூலம் ஒட்டுமொத்த கன்னடத் திரையுலகமும் தன் கவனத்தை ஈர்த்தது. 88வது அகாடமி விருதுகளில் பட்டியலிடப்பட்ட சுமார் 300 படங்களில் ஒன்றாக 'ராங்கிதரங்கா' வந்தது. விநியோகஸ்தரான ரமேஷ் கவுடா, கன்னட திரையுலகம் குறித்துப் பேசினார்.



'' 'ராங்கிதரங்கா' படம் கர்நாடகாவில் மட்டும் சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது. இப்படம் நிறைய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை முறியடித்திருக்கிறது. ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களிலும் படம் சுமார் ஐந்து வாரங்கள் தொடர்ந்து ஓடியது. முதல்முறையாக அமெரிக்காவில் எட்டு வாரங்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய கன்னடப் படம் இது என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.


தர்ஷன் நடித்த 'மிஸ்டர். ஐராவதா படமும்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மூன்று வாரங்களில் இப்படம், சுமார் 32 கோடியை வசூலித்தது.
'ரன்னா', 'வஜ்ரகயா', 'ராணா விக்ரமா', 'சித்தார்த்தா' உள்ளிட்ட பெரிய படங்கள், சுமாராக ஓடி, போட்ட முதலீட்டை எடுத்திருக்கின்றன. கன்னட உலகைப் பொருத்த வரை, இந்த வருடம் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் வெற்றி பெற்றது குறைவே.


நன்றி - த இந்து

Sunday, December 27, 2015

தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்!

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது.


காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன.


தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன.


இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "'வேதாளம்', 'ஐ' போன்ற மெகா பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களும் மக்களைப் பரவலாகச் சென்றடைந்தன.



காஞ்சனா 2- வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' திரைப்படம், 10 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, சுமார் 100 கோடியை வசூலித்தது. அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட் படமான 'காக்கா முட்டை', அதன் முதலீட்டைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு பணத்தை வாரிக் குவித்து, தேசிய விருதையும் தட்டிச்சென்றது.



அதைத் தொடர்ந்து, 'நானும் ரவுடிதான்', 'ஓ காதல் கண்மணி', 'அனேகன்', 'டிமாண்டி காலனி', 'டார்லிங்', 'மாயா' ஆகிய படங்களும், சோடை போகாமல் ஓடின. 'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றி, திட்டமிடப்பட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே எடுக்கப்படும் படங்களும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தியது.



பெரிய பட்ஜெட் படங்களான கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', 'தூங்காவனம்', விஜயின் 'புலி', சூர்யாவின் 'மாஸு' ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.


டோலிவுட்டில் எப்படி?
டோலிவுட் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த, ஆந்திரா பாக்ஸ்ஆபிஸைச் சேர்ந்த ஓம் தீபக், "எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம், தெலுங்கு திரைப்பட உலகை சுமார் 10 சதவீதம் விரிவடையச் செய்தது.


பாகுபலி, உலகம் முழுக்க சுமார் 600 கோடி ரூபாயை வசூல் செய்ய, கொரட்டலா சிவாவின் 'ஸ்ரீமந்துடு' திரைப்படம் சுமார் 200 கோடிகளை அள்ளியது" என்றார்.


சினிமா வர்த்தக ஆய்வாளரான ட்ரிநாத், இத்தகைய படங்களின் வெற்றி தெலுங்குத் திரையுலக மார்க்கெட்டை உயர்த்தியிருக்கிறது. பாகுபலியின் அனைத்து மொழி டப்பிங் படங்களும் நன்றாக ஓடின. அதன் இந்திப் பதிப்பு மட்டும் சுமார் 100 கோடி வசூலித்திருக்கிறது. நல்ல கதைதான் முக்கியம்; மொழி முக்கியமில்லை என்பதை இது உணர்த்தியிருக்கிறது.


'ராஜு காரி காதி', 'சினிமா சூப்பிஸ்தா மாவா', 'குமாரி 21 ஃபீமேல்', 'படாஸ்', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்ட குறைந்த பட்ஜெட் படங்கள், கதாநாயகர்களைத் தாண்டி, கதையின் நாயகர்களை மையப்படுத்தின.


'ராஜு காரி காதி', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்டவை இந்த வருடத்தின் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தன. 'ருத்ரமாதேவி', 'ஜேம்ஸ் பாண்ட்', 'சுப்பிரமணியம் ஃபார் சேல்', 'காஞ்சி' உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடினாலும், விநியோகஸ்தர்களுக்கு சிறிய தடையாகவே அமைந்திருந்தன" என்று கூறினார்.



டப்பிங் படங்களான 'ரகுவரன் பி.டெக்.', 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7', 'ஜுராசிக் வேர்ல்ட்' ஆகியவை வெற்றி பெற்றன. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ப்ரூஸ் லீ: த ஃபைட்டர்', 'அகில்' ஆகியவை பெரும் சோகமாக அமைந்தன.




மலையாளத் திரையுலகம் மலர்ந்ததா?
மலையாளத் திரையுலகம், வணிக ரீதியில் வெற்றி பெற்று, கலவையான விமர்சனங்களையும் பெற்றது. 'பிரேமம்', 'என்னு நிண்டே மொய்தீன்' ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றிவாகை சூடின.



12 கோடியில் தயாரிக்கப்பட்ட 'மொய்தீன்', சுமார் 50 கோடியை அள்ளியது. 5 கோடியில் உருவாக்கப்பட்ட 'பிரேமம்' வசூலித்ததோ சுமார் 60 கோடி.



இந்த வருடம் வெளிவந்த சுமார் 100 மலையாள படங்களில், 'மிலி', 'பிக்கெட் 43', 'ஃபைர்மேன்', '100 டேஸ் ஆஃப் லவ்', 'ஒரு வடக்கன் செல்ஃபி', 'என்னும் எப்பொழும்', 'பாஸ்கர் த ராஸ்கல்', 'சந்திரனேட்டன் எவிடயா' உள்ளிட்டவை வெற்றியைச் சுவைத்தன.



மலையாளத் திரையுலக விநியோகஸ்தரில் ஒருவரான அரவிந்த் நம்பியார், "ரீமேக் மூலமாகவும் திரையுலகம் சம்பாதித்தது. 'ஒரு வடக்கன் செல்ஃபி' தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது" என்று கூறினார்.



மம்முட்டி நடித்த 'பாஸ்கர் த ராஸ்கல்', தெலுங்கு உரிமையோடு, தயாரிப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு பணத்தை வசூலித்திருக்கிறது.
'லைலா ஓ லைலா', 'மரியம் முக்கும்', 'சிறகொடிஞ்ச கனவுகள்' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்போடு வெளியாகி ஏமாற்றத்தை அளித்துச் சென்றன.



கவனத்தை ஈர்த்த கன்னடத் திரையுலகம்
அனுப் பந்தாரியின் 'ராங்கிதரங்கா' மூலம் ஒட்டுமொத்த கன்னடத் திரையுலகமும் தன் கவனத்தை ஈர்த்தது. 88வது அகாடமி விருதுகளில் பட்டியலிடப்பட்ட சுமார் 300 படங்களில் ஒன்றாக 'ராங்கிதரங்கா' வந்தது. விநியோகஸ்தரான ரமேஷ் கவுடா, கன்னட திரையுலகம் குறித்துப் பேசினார்.



'' 'ராங்கிதரங்கா' படம் கர்நாடகாவில் மட்டும் சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது. இப்படம் நிறைய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை முறியடித்திருக்கிறது. ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களிலும் படம் சுமார் ஐந்து வாரங்கள் தொடர்ந்து ஓடியது. முதல்முறையாக அமெரிக்காவில் எட்டு வாரங்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய கன்னடப் படம் இது என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.



தர்ஷன் நடித்த 'மிஸ்டர். ஐராவதா படமும்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மூன்று வாரங்களில் இப்படம், சுமார் 32 கோடியை வசூலித்தது.
'ரன்னா', 'வஜ்ரகயா', 'ராணா விக்ரமா', 'சித்தார்த்தா' உள்ளிட்ட பெரிய படங்கள், சுமாராக ஓடி, போட்ட முதலீட்டை எடுத்திருக்கின்றன. கன்னட உலகைப் பொருத்த வரை, இந்த வருடம் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் வெற்றி பெற்றது குறைவே.


தஹிந்து

Friday, October 09, 2015

கோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில்

'கோர்ட்' படத்திலிருந்து ஒரு காட்சி
'கோர்ட்' படத்திலிருந்து ஒரு காட்சி
சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற மராத்திய மொழி படமான 'கோர்ட்' இந்தியாவின் தேர்வாக ஆஸ்கருக்குப் போட்டியிடவுள்ளது.
ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கரில், மற்ற நாட்டு திரைப்படங்களுக்கென ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் என்ற அந்தப் பிரிவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் போட்டியிடும். தற்போது இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் ’கோர்ட்’, இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மூத்த நடிகரும், இயக்குநருமான அமோல் பலேகர் தலைமையில், 16 பேர் கொண்டு நடுவர் குழு ஒருமனதாக 'கோர்ட்' படத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
சமூகத்துக்காகப் போராடும் வயதான கவிஞர் ஒருவர் மீது வழக்கு தொடரப்படுகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. இந்திய நீதித்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் 'கோர்ட்', குற்றம் சாட்டப்பட்டவர், அவருக்காக வாதாடும் வக்கீல், அரசு வழக்கறிஞர், அந்த வழக்கை பார்வையிடும் நீதிபதி என பலரின் பார்வையில் விரிகிறது.
இம்முறை இந்தத் தேர்வுக்கு, 'மாசான்', 'பிகே', 'ஹைதர்', 'காக்கா முட்டை', 'பாஹுபலி' உள்ளிட்ட 30 படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


அமைதி.. அமைதி.. கோர்ட் நடக்கிறது
நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
குற்றம்: சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக.
எப்படித் தூண்டினார்?: அவர் மேடையில் பாடல்கள் பாடியதன் மூலமாக. உணர்ச்சிப் பாடல்கள் மூல மாக. ‘இவ்வுலகம் வாழ வழியில் லாதது. சாகத்தான் லாயக்கு’ என்றக் கருத்தைச் சொன்ன தால்.
அவருக்கு வருமானம்: குழந்தை களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது.
அவர் கைது செய்யப்பட்ட நாளில் சொல்லிக் கொடுத்தது: வண்ணத்துப்பூச்சிகள் பற்றி.
இதில் வரும் வழக்கறிஞர்கள் கூட மாறுபட்ட பாத்திரங்கள்தான்...
அரசாங்க வழக்கறிஞர்: கொஞ்சம் ஏழைதான். சாதாரண வீடு. பையனை பள்ளியில் இருந்து அவரே போய் கூட்டிக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. பேருந்து, தொடர்வண்டி நெரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தேங் காய் மூடி வக்கீல் என்ற பட்டப் பெயரும் உண்டு. பட்டினி இருக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. மக்களுடன் அதிக பழக்கம் கொண்டவராக இருக்கிறார். பெண்.
கவிஞருக்காக வாதாடும் வழக் கறிஞர்: கொஞ்சம் வசதியானவர். சாதாரண மக்களுக்கும் அவருக்கும் அதிகம் சம்பந்தம் இல்லை என்பது மாதிரி நடந்து கொள்கிறார். மாலை நேர பார், ஆங்கில பல்கேரியன் நடன நிகழ்ச்சிகளுக்குப் போவார். உயர்ந்த ரக மதுபானம் வாங்குபவர், ஜாஸ் கேட்பவர். சற்றே உயர் சாதிக்காரர். பெயர் வோரா.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நீதிமன்றத்தின் நீதிபதி: ஆங்கிலம் பிடிக்கும். அதேசமயம், ‘கவிதை, கவிஞர்... இதெல்லாம் என்ன?’ என்று எரிச்சல்படுபவர். சாட்சியாக வந்த பெண் - ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடை போட்டுக் கொண்டு வந்த காரணத்தால், நீதிமன்றத்துக்கு இந்த டிரஸ் கோடு சரிபட்டுவராது என்று வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்தி வைப்பவர்.
மாலை நேரத்தில் நாடகங்களுக்குப் போய் நகைச்சுவைகளை ரசிப்பவர். அவ்வப்போது பிக்னிக் என்று போகிறவர். கவிஞரிடம் இருந்து 40 தடை செய்யப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை ஆச்சரியம் பொங்கக் கேட்பவர்.
கவிஞர் மீதான விசாரணை நடக்கிறது. அவருக்கு வயது 65. ஆனால் வயது உடல் நிலை கருதி அவரது தரப்பு வழக்கறிஞர் ஜாமீன் கேட்டாலும், அரசாங்க பெண் வழக்கறிஞர் மறுக்கிறார். ‘இவர் பலமுறை விதிகளை மீறியவர். ஜாமீன் தரக்கூடாது. இவர் புரட்சிகர கருத்துகளை பாடி மக்களை தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டுவார்’ என்கிறார்.
செத்துப் போன துப்புரவு தொழிலாளியின் மனைவியிடம் நீதிபதி விசாரிக்கிறார். அவளுக்கு கணவனின் வயது தெரியவில்லை. கவிஞரின் பாடல் தற்கொலைக்குத் தூண்டித்தான் கணவர் செத்தாரா... தெரியாது. அவர் பாதுகாப்பு முகமூடி, கவசம், உறைகள் அணிய மாட்டார். அதுவும் காரணமாக இருக்கலாம்.
கவிஞருக்கு தற்காலிகமாக ஜாமீன் கிடைத்தாலும் அவர் சிறை, வழக்கு அனுபவங்களை புத்தகமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அச்சகத்தில் மீண்டும் கைது செய்யப்படுகிறார். விசாரணை தொடர்கிறது.
அழுக்கு நீதிமன்றம், நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், நெரிசலான இருக்கைகள் எல்லாம் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன.
கவிஞர் ஒருவரை முன்வைத்து ஒரு படம் நீளுவது விசேஷமானது, அவர் தலித் கவிஞர். மும்பை புற நகரில் வாழ்கிறவர். மேடையில் பாடும் தோற்றத்தில் கத்தார் போன்ற புரட்சிக் கவிஞரை - பாடகரை நினைவூட்டுகிறார்.
கடைசிக் காட்சியில் நீதிபதி தனது நண்பர்களுடன் பிக்னிக் போகிறார். பயணத்தில்... ஐ.ஐ.டி. படித்து பெரிய தொகையை சம்பாதிக்கும் இளைஞர்கள் பற்றி கவலைப்பட்டுக் கொள்கிறார். தூங்கிப் போகிறார். பையன்களோ கலாட்டா செய்து அவரை எழுப்பிவிடுகிறார்கள். பொறுப்பற்ற இளைஞர்கள் என்று ஒருவனை அறைகிறார். மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறார். கிண்டல் செய்து விமர்சிக்கும் இளைய தலைமுறை, தூங்கிக் கொண்டிருக்கும் நீதித்துறை என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ள இந்தப் படம் மும்பை திரைப்பட விழாவிலும் மூன்று பரிசுகள் வென்றுள்ளது. இதன் இயக்குநர் சைத்தன்ய தம்ஹனா 27 வயது இளைஞர். இதில் நடித்த துப்புரவு தொழிலாளியின் மனைவி அசலானவர்.
உண்மையில் சாக்கடை குழியில் இறந்த போன தொழிலாளி ஒருவரின் மனைவி! மற்ற நடிகர்களும் தொழில் முறை நடிகர்கள் அல்ல, இதற்கென்றே பயிற்சி தரப்பட்டு நடித்தவர்கள். சாதி, அரசியல் அதிகாரம் பற்றிய பல விவாதங்களைக் கொண்டிருக்கும், தூங்கும் யாரையும் தட்டி எழுப்பும் மராத்தி படம்தான் இந்த - ‘கோர்ட்’

thax-thehidu

Tuesday, August 11, 2015

விசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்

சட்டத்தின் ஆட்சியையும், எல்லா மக்களுக்கும் நீதியையும் உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, உண்மையில் என்ன நிலையில் இருக்கிறது? அதன் கைகளில் அப்பாவிகள் சிக்கினால் என்ன ஆவார்கள் என்பதை ‘விசாரணை’ படத்தின் டிரைலரே ரத்தம் உறையச் சொல்லிவிடுகிறது. உலகப்புகழ் பெற்ற வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடவிருக்கும் 20 படங்களில், வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’-யும் இடம்பெற்றுள்ளது. போட்டிப் பிரிவில் வெனிசில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்பதே விசாரணை குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து 1983-ல் ஆந்திர மாநிலம் குண்டூர் சென்று பொய்யான குற்றச்சாட்டில் அப்பாவியாய் சிக்கிய மு.சந்திரகுமாரின் கதை இது. மூன்று நண்பர்களுடன் சட்டவிரோதக் காவலில் 13 நாட்கள் காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்ட மு.சந்திரகுமார் என்ற ஆட்டோ சந்திரன், தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘லாக்கப்’ நாவல் தான் ‘விசாரணை’யாக மாறியுள்ளது.
“இந்தியாவில் காவல் துறையினரால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானவர்களின் அனுபவம் இது. எத்தனையோ துயரங்கள் பதிவாகாமலேயே போயிருக்கின்றன. சந்திரகுமார் தனது 13 நாள் சிறை அனுபவங்களை ஒரு டைரி போல எழுதியதன் மூலம் ஒரு காலகட்டத்தின் பதிவாக மாற்றியுள்ளார். அந்த நாவலில் இருந்த உண்மை என்னை ஈர்த்தது. ஆடுகளம் முடித்த பிறகு, ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடைவெளியில் பெரிய ஹீரோவை மையமாக வைத்துக் கதை பண்ணாமல் யதார்த்தமாக ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். அப்போது எனது நண்பர் பரிந்துரைத்த புத்தகம்தான் ‘லாக்கப்’.” என்றார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கூர்மையுடன் எழுதப்பட்டிருக்கும் ஆட்டோ சந்திரனின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இளம் வயதிலேயே வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்னை, மதுரை, தூத்துக்குடி என்று அலைந்த இவருக்கு வாழ்வையே திருப்பிப் போடும் அனுபவம் நேர்ந்தது ஆந்திராவில். குண்டூரிலிருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தெருவோர உணவு விடுதியில் பரிசாரகனாக வேலை கிடைத்தது. தினப்படிக் கூலி என்பது அவருக்கும் அவரைப் போன்ற நாடோடி நண்பர்களுக்கும் சந்தோஷமான விஷயமாக இருந்துள்ளது.
“நாள் முழுவதும் வேலை. அதற்கப்புறம் சினிமா பார்ப்பது, இரவில் நண்பர்களுடன் எதிர்காலத்தைப் பற்றி கனவுகளுடன் அசைபோடுவது என்று இருந்தபோதுதான் திருட்டுவழக்கில் என்னையும் மூன்று நண்பர்களையும் கைது செய்தார்கள். கேட்பதற்கு நாதியற்ற அநாதைகள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளை காவல்துறை எப்படி நடத்துகிறார்களோ அதேபோலவே நாங்களும் நடத்தப்பட்டோம். 13 நாட்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிதைக்கப்பட்டோம். நாங்களாகப் போராடித்தான் நீதிமன்றத்தின் பார்வைக்கே செல்ல முடிந்தது. பத்துக்கு பத்து அடி பரப்பளவே கொண்ட சின்ன அறையில் மார்ச் மாத வெயிலில் வழியும் வேர்வையுடன் மிருகங்கள் போல அடைக்கப் பட்டிருந்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. எங்களை ஜாமீன் எடுப்பதற்கோ, எங்களைத் தேடி காவல் நிலையத்துக்கு வருவதற்கோ யாரும் கிடையாது. அந்தக் கதையைத்தான் என் முதல் நாவலாக எழுதினேன்” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகும் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையைக் கழித்துள்ளார் சந்திரன்.
இவர் எழுதிய 160 பக்கம் கொண்ட லாக்கப்புக்கு 2006-ம் ஆண்டில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அங்கம் வகிக்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் ‘சிறந்த மனித உரிமைகள் ஆவணம்’ என்ற விருதைக் கொடுத்தது.
தமிழ் மட்டுமல்ல இந்திய வெகுஜன சினிமாக்கள் அனைத்திலும் காவல் துறையினர் கேலியாகவும் ஊழலாகவுமே சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால் அதேவேளையில், என்கவுண்டர் செய்யும் போலீஸ் நாயகர்கள் கடவுள்களாகச் சித்தரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைவதும் சாத்தியமாகவே உள்ளது. மோதல் சாவுகள் மட்டுமல்ல; காவல் கொலைகளும், சித்திரவதைகளும், காவல் நிலையத்தில் நடக்கும் வல்லுறவுச் சம்பவங்களிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எளிய மக்களாகவே இருக்கின்றனர். சமீபத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் ‘விசாரணை’ டிரைலரைப் பார்க்கும் போது ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது.
ஒரு நாவலின் கதையை எடுத்து திரைக்கதையை உருவாக்கி, அதை எழுதிய எழுத்தாளருக்கு சரியான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார் வெற்றி மாறன். தமிழ் சினிமாவில் அரிதான போக்கு இது. விசாரணை திரைப்படத்தின் இறுதியில் கதாசிரியரைப் பற்றிய ஆவணப்படமாக ஒன்றரை நிமிடப் படம் ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். “தமிழ் சினிமாவில் எழுத்தாளனுக்குச் செய்யப்பட்டிருக்கிற ராஜமரியாதை இது” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
நடிகர் தனுஷும், வெற்றி மாறனும் ‘காக்கா முட்டை’-க்குப் பிறகு தயாரிப்பாளர்களாக இணையும் இரண்டாவது திரைப்படம் இது. இரண்டு திரைப்படங்களும் உலகத் திரைப்படவிழாக்களுக்குச் சென்ற பெருமையையும் பெற்றுவிட்டன.
இப்படத்தின் மூலம் வெற்றி மாறன், காவல் நிலையச் சுவர்களுக்குப் பின்னர் இருக்கும் குரூரமான யதார்த்தத்தையும், சொல்லப்படாத குமுறல்களையும் விசாரணை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு நிஜமான அரசியல் திரில்லருக்கான நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. இந்தப் படம் மூலம் அது சாத்தியப்படலாம்.

நன்றி- த இந்து

Wednesday, July 08, 2015

பாலக்காட்டு மாதவன் -திரை விமர்சனம்:

கதாநாயகனுடன் இணைந்து நகைச் சுவை; கதையுடன் ஒட்டாத டிராக் நகைச்சுவை என இரண்டில் எதைச் செய்தாலும் அதில் செய்தி சொல்ல விரும்புகிறவர் விவேக். இந்தப் படத்தில் தனக்குப் பொருந்தக்கூடிய நகைச்சுவை நாயகன் பாத்திரம் ஏற்றிருக்கிறார். தவிர தனது பாணியுடன் அம்மா பாசத்தையும் கலந்து கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
மனைவி சோனியா அகர்வாலுடன் ஒரே அலுவலகத்தில் வேலைசெய்யும் விவேக்குக்கு இரு பெண் குழந்தை கள். நடுத்தரக் குடும்பத்தின் தலை வனான அவருக்கு தன்னைவிட மனைவி அதிக சம்பளம் வாங்குவது குறித்து மன உளைச்சல். “உன்னைவிட அதிக மாக சம்பாதித்துக் காட்டுகிறேன் பார்” என்று வீர வசனம் பேசிவிட்டு வேலையை விடுகிறார்.
ஆனால் வேலை கிடைக்காமல் அல்லாடும் அவர், மாதா மாதம் கணிசமான தொகை கைக்குக் கிடைக்கிறது என்பதற்காக முதியோர் இல்லத்திலிருந்து 60 வயது பெண்மணியை (செம்மீன் ஷீலா) அம்மாவாகத் தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். விவேக்கின் பிள்ளைகள் புதிய பாட்டியுடன் பழக வீட்டில் பாசமழை பொழிகிறது. ஆனால் விவேக்கின் நிலை மோசமாகிறது.
தத்தெடுத்த அம்மாவுக்குச் செல வாகும் தொகை அவருக்கு வரும் மாத வருமானத்தை விட அதிகமாக எகிற, வலியப்போய் வலையில் சிக்கிவிட்ட தாக நினைக்கிறார் விவேக். தத்து அம்மாவுக்கு விடை கொடுத்து அனுப்ப முடிவுசெய்கிறார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் மீதிக் கதை.
விவேக் வீராவேசமாக வேலையை விட்ட பிறகு அமைச்சரின் நேரடி உதவியாளர், எம்.எல்.எம் வணிகம் என்று பணத்துக்காகப் பல வழிகளில் இறங்கிப் படாதபாடு படுகிறார். போலித் தொழிலதிபர் சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி கூட்டணியுடன் இணைந்து அடிக்கும் எம்.எல்.எம். வணிக லூட்டி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை ஒரு வழி பண்ணுவது, செல்முருகனுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு செய்யும் மெசேஜ் நகைச்சுவை என்று விவேக்கின் முத்திரை நகைச்சுவை தொடர்கிறது.
ஆனால் மெதுவாகப் பயணிக்கும் முதல் பாதி திரைக்கதையும், பல படங் களில் பார்த்துச் சலித்த பல நகைச் சுவைக் காட்சிகளையும் கருணையே இல்லாமல் களைந்திருக்க வேண்டும்.
கொஞ்சமும் சுவாரஸ்யமில்லாத பாடல்கள் படத்துக்கு உதவவில்லை. ஆனால் நகைச்சுவை உணர்வைப் பிரதிபலிக்கும் பின்னணி இசையைக் கொடுத்துத் தப்பித்துக்கொள்கிறார் காந்த் தேவா. தனது முத்திரையைத் தொலைத்து விடாத விவேக், நகைச் சுவையோடு தரமான குணச்சித்திரமாக வும் மாற முடியும் என்பதைப் படத்தின் இறுதியில் நிரூபிக்கிறார்.
சோனியா அகர்வால் பொறுப்புள்ள குடும்பத் தலைவி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக் கிறார். மூன்றாவது முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித் திருக்கும் ‘செம்மீன்’ ஷீலாவின் நடிப்பு படத்துக்கு பெரும் பலம். முதியோர் இல்லத்திலிருந்து விவேக் வீட்டுக்கு வந்த பிறகு கண்டிப்பான மாமியாராகவும் பாசமான பாட்டியாகவும் மாறி இவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் வண்ணம் இருக்கின்றன.
முதியோரை நடத்தும் விதம் பற்றி சமூகத்துக்குச் செய்தி சொல்ல வேண் டும் என்று முனைப்புள்ள ஒரு கதையை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் சந்திர மோகன்.
திரைக்கதையில் கோர்வை இல்லாமல் பல காட்சிகள் உதிரிகளாக உள்ளன. காட்சிகளில் சுவாரஸ் யம், திரைக்கதையின் கட்டமைப்பு, லாஜிக் முதலான அம்சங்களில் கவனம் செலுத்தியிருந்தால் ‘பாலக்காட்டு மாத வன்’ பார்வையாளர்களுக்கு இன்னமும் நெருக்கமாக இருந்திருப்பான்.


thanx - the hindu

Monday, May 11, 2015

உத்தம வில்லன் - சிக்கல்கள் - காரணம் கமலா? லிங்குசாமியா?

சினிமாவைக் கொண்டாடும் ரசிகர் பட்டாளம்தான் அதன் அஸ்திவாரம். ரசிகர்கள் தரும் பணத்தின் மூலமே எத்தனை பெரிய தொழில்நுட்பத்தையும் பிரச்சினைகளையும் உள்வாங்கிச் செரித்து வணிக சினிமா தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது.
தங்கள் அபிமான நாயகனுக்கும் இயக்குநருக்கும் மன்றம் வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் பலர் அவர்களை அப்படியே பின்பற்றவும் தயங்குவதில்லை. தங்கள் அபிமான நாயகனின் படத்தை வெளியான முதல் நாளே திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் எனத் துடிக்கும் வெறித்தனமான ரசிகர்களின் எண்ணிக்கைதான் சம்பந்தபட்ட நாயகனின் வியாபார எல்லையை விஸ்தரித்துக்கொண்டே செல்கிறது.
நாயகர்களின் ஆன்மப் பலம் என்பதும் அவர்கள் தரும் நிபந்தனையற்ற ஆதரவுதான். அத்தகைய ரசிகர்களையே வில்லன்களாக மாற்றிவிடும் சூழல் துரதிஷ்டவசமானது. வெளியீட்டுத் தேதியை அறிவித்த நாளில் படம் வெளியாகவில்லை என்றால் திரையரங்குவரை சென்று ஏமாற்றதுடன் திரும்பும் ரசிகனின் கோபம் அவனை வில்லன் நிலைக்குக்கூடத் தள்ளிச் செல்லும்.
உத்தம வில்லன் வெளியாக வேண்டிய நாளில் வெளியாகாமல்போனதும் திரையரங்கின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தைக் காட்டிய சம்பவங்களே இதற்குச் சாட்சி. உத்தம வில்லன் வெளியீட்டில் ரசிகர்களைக் கொதிப்படையச் செய்தது யார் என்று அலசினால் முதலில் படத்தின் தயாரிப்பாளரே வந்து முன்னால் நிற்கிறார் என்கிறார்கள்.
கடைசி நேர உஷார்!
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரிக்கும் போது, சினிமா தொழிலுக்கு வட்டிக்குக் கடன் தருபவர்களை நம்பிக் களமிறங்குகிறார்கள் பல தயாரிப்பாளர்கள். அடுத்து விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் படத்தின் விநியோகம் மற்றும் திரையிடல் உரிமையைத் தருவதாக முன்பணம் பெறுகிறார்கள். இவற்றோடு பெரிய பட நிறுவனங்களிடம் படத்தின் நெகட்டிவ் உரிமையை முன்னதாகவே விற்றும் பணம் பெறுகிறார்கள்.
இப்படி எல்லாப் படங்களுக்கும் பணத்தைக் கடனாகத் திரட்ட முடியாது. தமிழ்நாடு , மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என எங்கும் வியாபார மதிப்பு கொண்ட முன்னணி நாயகர்கள் நடிக்கும் படம் என்றால் மட்டுமே நம்பிக் கடன் தருகிறார்கள். படம் முடிந்து, தணிக்கைக்குத் தயாராகும்போதே படத்தின் வியாபாரம் களை கட்டத்தொடங்கிவிடும். வியாபாரம் முடித்துப் பணம் கைக்கு வந்ததும் தயாரிப்பாளர் கடன் வாங்கிய அனைவருக்கும் வட்டியுடன் பணத்தைத் திரும்பக் கொடுப்பார்.
அதன் பிறகே படம் வெளியாகும். ஆனால் படத்தின் வியாபாரம் முடிந்தும் கடன் கொடுத்தவர்களுக்குக் கொடுத்த மொத்தப் பணமும் வட்டியுடன் கைக்கு வரவில்லை என்றால் படம் வெளியாவதைச் சட்ட ரீதியாகத் தடுத்துவிடுகிறார்கள். கடன் கொடுத்தவர்கள் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் உஷாராவதற்குக் காரணம், அப்போது கடனை வசூல் செய்யாவிட்டால் அந்தப் பணம் அவ்வளவுதான் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். எல்லாம் அனுபவம் தந்த பாடம்.
அகலக் கால் வைத்தால்
ஒரு படம் அறிவித்த தேதியில் வெளியாகாத சூழ்நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அதைத் தீர்க்க முன்னதாகவே தயாரிப்பாளர் களத்தில் இறங்குவார். கடன் கொடுத்தவர்கள், தயாரிப்பாளர் உருவாக்கி வைத்திருக்கும் நல்லெண்ணம், நாணயம் ஆகியவற்றை முன்னிட்டு வட்டியின் ஒருபகுதியை விட்டுக் கொடுப்பார்கள்.
படத்தின் நாயகனும் சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முன்னால் நிற்பார். ஆனால் உத்தம வில்லன் விவகாரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்க முனைந்து அகலக் கால் வைத்ததுதான் படம் சிக்கலில் மாட்டிக்கொண்டதன் பின்னணிக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
முதல் பிரதி அடிப்படையில் கமல் உருவாக்கித் தந்த இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை அவரது சம்பளத்தின் ஒரு பகுதியாக அவர் வசமானதாகத் தெரிகிறது. இதனால் பிரச்சினை வெடித்த நேரத்தில் கமல் ஊரில் இல்லாமல் வெளிநாட்டில் படத்தை விளம்பரப்படுத்தச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
கமலின் கால்ஷீட்டைப் பெற்றுப் படத்தைத் தயாரித்த லிங்குசாமி, அதன் பலனை அனுபவிக்க முடியாமல் தவித்தார். நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மத்தியஸ்தம் செய்து படத்தை வெளியிட உதவின. கடைசியில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் லிங்குசாமிக்குக் கைகொடுத்தது.
கடனுக்கான பொறுப்பை ஏற்று படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு உத்தம வில்லன் படத்தின் முக்கிய உரிமைகளை விற்க வேண்டிய சூழல் உருவானதாம். அப்படியும் கடன்களை அடைக்க முடியாததால் சூர்யாவை வைத்துத் தயாரிக்க இருந்த சதுரங்க வேட்டை 2 படம், சிவகார்த்திகேயன் நடித்து முடித்த ’ ரஜினி முருகன்’ படம் உட்பட மேலும் பல படங்களின் வியாபார உரிமையையும் லிங்குசாமி தாரை வார்க்க வேண்டியிருந்ததாகச் சொல்கிறார்கள்.
வெற்றிகரமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவரும் லிங்குசாமியை முதலில் கடன் சுமையில் சிக்க வைத்தது ’அஞ்சான்’ படம் ஏற்படுத்திய நஷ்டம் எனத் தெரிகிறது. யூடிவி வெளியீடு செய்திருக்க வேண்டிய அந்தப் படத்தை அதீத நம்பிக்கையுடன் தாமே வெளியிடுவதாக லிங்குசாமி நிறுவனம் எடுத்த முடிவு பெரும் இழப்பில் முடிந்துவிட்டது என்கிறார்கள்.
சினிமா தொழிலில் ஒரே நாளில் மொத்தக் கடனையும் அடைக்க வழி இல்லை. இதனால் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்க வேண்டிய நிலைக்கு லிங்குசாமி தள்ளப்பட்டாராம். இன்னொரு பக்கம் உத்தம வில்லன் படத்தை வெளியிடுவதாக ஈராஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்ததாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
ரசிகர்களுக்கு முதல் நாள் இழப்பு
உத்தம வில்லன் படம் அறிவித்த நாளில் வெளியாகாமல் மறுநாள் வெளியானதால் அந்த ஒரு நாளில் ஓபனிங் வசூலாகக் கிடைத்திருக்க வேண்டிய எட்டு முதல் பத்துகோடி ரூபாய் கணிசமான இழப்பாகிவிட்டதாகச் சொல்கிறார்கள் வசூல் வட்டாரத்தில். முதல் நாள் இழப்பு தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இணையங்கள் வழியே டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கும்தான்.
ரசிகர்களின் நஷ்டம் வெறும் பணம் சம்பந்தப்பட்டதல்ல. அதற்கும் மேலே. வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு, வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு திரையரங்கு நோக்கி ஓடி வந்தவர்களுக்குப் படம் வெளியாகாது என்ற செய்தி கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த ரசிகர்களின் ஏமாற்றத்தைத் திரையரங்கின் வாசல்களில் பார்க்க முடிந்தது. டிக்கெட் கட்டணத்தையாவது திரும்பப் பெற்றுச் செல்லலாம் என்று நினைத்தவர்களுக்குப் பணம் திரும்பத் தரப்படவில்லை.
காரணம் பெரும்பாலான ரசிகர்கள் சம்பந்தப்பட்ட திரையரங்கம் நடத்தாத ‘தேர்ட் பார்டி’ இணையதளங்களின் மூலம் முன்பதிவு செய்தவர்கள். இவ்வாறு சினிமா டிக்கெட் விற்பனை செய்துவரும் இணையதளங்கள் டிக்கெட் விலையோடு கமிஷனாக வசூல் செய்யும் கணிசமான கட்டணம் கணக்கில் வராத பணம் என்பதால் அதை திருப்பித் தருவதில்லை என்றும், எஞ்சிய டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்க ஒருவாரம் வரை ஆகும் என்றும் தெரிய வந்த காரணத்தால்தான் பல ரசிகர்கள் திரையரங்கின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கோபத்தைக் காட்டினார்கள் என்கின்றன திரையரங்க வட்டாரங்கள்.
எப்படியிருப்பினும் பெரும் முதலீட்டில் தயாராகும் ஒரு படம் சிக்கல்களில் இருக்கிறதென்றால், அது முன்னதாகவே தயாரிப்பாளருக்கும் நாயகனுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. படம் வெளியாகும் கடைசி நேரம் வரை படம் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகள் அமைதி காத்தால் உத்தம வில்லனுக்கு ஏற்பட்டதுபோன்ற சங்கடத்தைத் தவிர்க்க முடியாது என்பதுதான் தயாரிப்பாளர் வட்டாரத்தில் பலரது கருத்து.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் குறைகளைக் கவனிக்கத் தனித்தனி அமைப்புகள் உள்ளன. மனம் கவர்ந்த நாயகனின் படத்தை முன்பதிவு செய்துவிட்டு ஆவலோடு காண வந்த ரசிகர்களின் ஏமாற்றத்திற்குத்தான் பதில் சொல்ல யாருமில்லை.

  • திரு கமல்ஹாசன் அவர்களின் திரையுலக வாழ்வு மெல்ல மெல்ல சரிய சரிய துவங்கியுள்ளது கண்கூடாக தெரிகிறது. இவரைப்பார்த்து பார்த்து போர் அடித்துவிட்டது. இவரிடம் விஷயம் இல்லை. இவர் இன்னும் நிறைய உலக சினிமாக்களை பார்த்து காபி அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
    Points
    4275
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (1) · 
       
    JayennessJayaraman  Up Voted
    • மம்முட்டியும் மோகன்லாலும் எந்த ஒலக சினிமாவை காப்பி அடிக்கிறார்கள். எளிமையாக அதே சமயத்தில் பிரமாதமாக நடிக்கிறார்கள் இந்த கமல் ஹாசன் தான் தான் பெரிய அப்பாடக்கர் என்றே நடிக்க முயல்கிறார் ரசினி போல ரசிகர்கள் படங்களை குப்பையில் எறிகிறார்கள்.
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Jayenness Jayaraman at State Bank of India 
      கமலா ஹாசனை இந்திரன் சந்திரன் என்று கொண்டாடுகிறார்கள். இவர் என்ன சாதித்து விட்டார். மொகல் எ ஆஜம் பிருதிவி ராஜ் கபூர், மாதர் இந்தியா பால்ராஜ் சாஹாணி, அசோக் குமார், என் நமது பாலையா, எம் ஆர் ராதா எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் செய்யாததை இவர் செய்து விட்டாரா. இவர் நடித்த நல்ல படங்கள் எண்ணிக்கை 5 கூட இருக்காது.
      Points
      51275
      2 days ago ·   (0) ·   (1) ·  reply (1) · 
      PonrajA  Down Voted
      • இந்த வரிசையில் ஏன் எம் ஜி ஆரை சேர்க்கிறீர் அவர் வாயால் வடை சுட்ட மனிதர் அவ்வளவே. சினிமா வாயால் வடை சுடை அல்ல என நிருபித்தவர் சிவாஜி மட்டுமே.
        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Angel  
        முதல் நாள் ,முதல் காட்சி பார்க்க வண்டிய அவசிய என்ன ?, அடுத்த வாரம் பார்த்த என்ன?,
        2 days ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
        JayennessJayaraman  Up Voted
        • Anandan  
          உத்தம வில்லன் படம் பெருத்த நஷ்டத்தை திரை அரங்கு அதிபர்களுக்கும் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் தயாரிபாலருக்கும் ஏற்படுத்தி விட்டது.
          Points
          5035
          2 days ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
          JayennessJayaraman  Up Voted
          • Anandan  
            உத்தம வில்லன் படம் பெருத்த நஷ்டத்தை திரை அரங்கு அதிபர்களுக்கும் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் தயாரிபாலருக்கும் ஏற்படுத்தி விட்டது. இனிமேல் கோமாளி கமலை வைத்து படம் எடுத்தால் போண்டி தான்.
            Points
            5035
            2 days ago ·   (0) ·   (4) ·  reply (1) · 
            KumarSurean · Venkat · PonrajA  Down Voted
            • இது போல் தகாத வார்த்தைகளை இங்கே பதிய வேண்டாம் என்று யாராவது இவருக்கு எடுத்து சொல்லுங்களேன்
              2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • திரு வேங்கடம், யார் தான் சுயநலவாதி இல்லை
              3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • கமல் மிகவும் கரைகண்ட சினிமாக்காரர். தனக்கு மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வார். இந்த சுயநலம் தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.
                Points
                445
                3 days ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
                balan · LakshmiPriya · JayennessJayaraman  Up Voted
                • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila 
                  அப்படி முதல் காட்சியில் - அதிக விலைகொடுத்து பார்க்கவேண்டும் என்ற ஏமாந்த -வெறிபிடித்த - ரசிகர் கூட்டம் இருக்கும்வரை இவர்கள் கடனுக்கு என்ன...ரசிகனுடைய டிக்கெட் காசில் கூட (அட்வான்ஸ் ஆக வாங்கி) படம் எடுப்பார்கள்...
                  Points
                  1345
                  3 days ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                  Anandan · RSubramani  Up Voted
                  • சிவாஜி கனேசன், எம்.ஜி.ஆர். போன்ற எவெர்க்ரீன் சூப்பர் ஸ்டார்கள் இருந்த காலத்தில்கூட அவர்கள் நடித்த படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் பிறரிடன் கடன் வாங்கி படம் தயாரிக்கும் கேவலமான நிலையில் இருந்ததில்லை. ஏ.வீ.எம்மின் மெய்யப்ப செட்டியார், ஜெமினி வாசன், சுஜாதா ப்ரொடக்ஷன்ஸ் பாலாஜி , தேவர் ப்ரொடக்ஷன்ஸ் போன்ற பெரும் தாயாரிப்பு நிறுவனத்தார் பிறரிடம் கையேந்தாமல் தங்கள் சொந்த பணத்தை முத்லீடு செய்து பல வெற்றிப்படங்களை மக்களுக்குத்தந்த சினிமா உலக ஜையன்ட்ஸ். இக்காலத்தில் யார் யாரோ படம் தயாரிக்கிறார்கள் . கையில் பணம் இல்லாதவ்வர்கள் ஏன் படம் தயாரிக்கவேண்டும்? கடன் வாங்கி நடத்தும் பிசினெஸ் எதுவும் உருப்படாது...
                    Points
                    8135
                    3 days ago ·   (4) ·   (0) ·  reply (1) · 
                    balan · RSubramani · JayennessJayaraman  Up Voted
                    • Anandan  
                      இந்திய திரைஉலகில் எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவரே. வேறு எவனும் கிடையாது. சிவாஜி - நடிகர் திலகம், MGR - மக்கள் திலகம். குழப்பி கொள்ள வேண்டாம் நண்பரே !
                      2 days ago ·   (0) ·   (0) ·  reply (5) · 
                      • சுய லாபத்திற்காக ஜெயலிதா ஆட்சிக்கு வந்தால் கடவுளால் கூட தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி அவரையே வீரலட்சுமி சூரலக்ஷ்மி என்று வியந்த மாபெரும் முதுகெலும்பு தான் ரசினி.
                        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                        • சூப்பர் ஸ்டார் என்ற அசிங்கமான வார்த்தை சிவாஜி கணேசனுக்கு முன் வேண்டாம்.
                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • சிவாஜி கணேஷன் ஒரு நல்ல நடிகராக இருக்க முயன்றார் மற்றவர்களை போல சினிமாவை வைத்து வேறு எதற்கும் ஆசைப்படவில்லை.
                            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • இப்போதெல்லாம் கமல் படமே குப்பை தொட்டியில் ரஜினி படம் குப்பை தொட்டிக்கு வெளியே. சிவாஜி படத்தை இன்னும் நாற்பது வருடம் கழித்தும் பார்க்க முடியும்.
                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                              • தங்கள் "அவன் இவன்" என்ற ஏக வசனம் பேசும் அளவிற்கு ரசினி ஒன்றும் கிழித்து விட வில்லை.
                                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்... முதல் நாள் படம் பார்க்க மிகுந்த ஆவலோடு சென்று ஏமாற்றத்தோடு வெளியே வந்தோம்

                            thanx - the hindu