Showing posts with label பஞ்ஜாரா ஹில்ஸ். Show all posts
Showing posts with label பஞ்ஜாரா ஹில்ஸ். Show all posts

Thursday, May 15, 2014

அல்வா குடுத்த காதலிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த காதலன் . விநோத வழக்கு @ ஹைதராபாத்

a
 
 

காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்

 
தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. 


ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் என சந்தோஷமாக சுற்றினர். காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கினாராம். 


இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்தனர். இந்த விஷயம் தெரிந்த காதலன், அந்த திருமணத்தை நிறுத்த பல்வேறு வழிகளை கையாண்டுள்ளார். ஆனால் பலனில்லை. காதலியும் ‘என்னை மறந்து விடு’ என் ஒரு வரியில் கூறிவிட்டாராம். 




இந்நிலையில் அப்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தான் செலவு செய்த சுமார் ரூ. 2 லட்சத்தை தனக்கு வாங்கித் தரவேண்டும் என்று என்று ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு அந்த இளைஞர் புகார் செய்தார். 


இந்த புகாரை பார்த்து திகைத்த போலீஸார், செய்வதறியாது அந்த இளைஞருக்கு புத்திமதி கூறினர். ஆனாலும் புகாரை திரும்பப் பெற அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “இதுவே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால், என்னை சும்மா விட்டிருப்பீர்களா? இந்தப் புகாரை பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுங்கள். இதுபோன்று மற்ற பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது” என போலீஸாருக்கே அறிவுரை வழங்கியுள்ளார் அந்த இளைஞர். இதனால் ஹைதராபாத் போலீஸார் என்ன வழக்குப் பதிவு செய்வது என்று குழம்பிப்போய் உள்ளனர். 


  • Karthik Siva  
    He is not a real man who doesnt do such stupidity,coward act.
    about 5 hours ago ·   (0) ·   (3) ·  reply (0)
  • Karthik Siva  
    This guy shud be hanged publicly so that no one will do this type of idiotic things.Think about her life now. This guy only proposed her.He is the one who needed.Women shud find and avoid such type of foolish/mental fellows.Think about women,they are precious.
    about 4 hours ago ·   (1) ·   (10) ·  reply (0)
    Karthik Siva  Up Voted
  • Manikandan  from Mumbai
    காதலன் கேட்க்கும் கேள்வி சரிதான்.ஏமாற்றம் இருவருக்கும் பொது .சட்டமும் பொது. சட்டப்படி FIR போட்டு வழக்கு நடந்தால் ஒரு முடிவும் முன் உதாரணமும் கிடைக்கும்.
    about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • ASHIK RAJA  from Chennai
    நாயத்தை பெற்று தர இப்போ யெஇனஹ போனது மகளிர் சங்கம் ........ ஆண் சங்கம் ஆரம்பிக்கணும் போராடுவோம் ஓன்று படுவோம் .....
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • கணேஷ் துரைசாமி Managing Director at My Own Business from Coimbatore
    இந்த கருமத்துக்குதான் வீட்ல அப்பா அம்மா பாக்குறவங்ல கல்யாணம் பண்ணிகொங்கனு சொன்ன நாங்க புரட்சி பண்ணுறம் அப்படின்னு சொல்லி காசையும் கற்பையும் விட்டுட்டு ஐயோ அம்மனு கூப்பாடு போடுறது...இருக்குறது ஒரு வாழ்கை போய் வாழ பாருங்க...
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • ஜான்  from Bangalore
    பெண்கள் வன்கொடுமை சட்டம் போன்று ஆண்கள் இன்கொடுமை சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.
    about 2 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • A.Devarajan Devarajan Senior Engineer at Noorsat Satellite TV 
    பெண்ணோ ஆணோ பாஹு பாடு வேண்டாம் சம்பளத்தில் வேறு பாடு இல்லை எல்லாவற்றையும் சமமாஹா பகிரிந்து கொள்வது தான் நாயம் . எல்லோருக்கும் இது ஒரு பாடம்
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • vijayaraghavan  
    குத்துங்க எஜமான் குத்துங்க இந்த பொண்ணுங்களே இப்படித்தான். அந்த ஏமாந்த தோழனுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
    5 minutes ago ·   (17) ·   (0) ·  reply (0)
  • veeramani shankar  from Secunderabad
    Interesting one. Police should file a FIR and investigate the matter. It is lesson for youngsters. I do not understand why youngsters are wasting their money on such a silly things.
    about 2 hours ago ·   (7) ·   (0) ·  reply (0)
  • ரமேஷ்  
    சபாஷ்
    about 2 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
  • Pandiyan Chinnaiyan at South Central Railway-S.C.R from Kumbakonam
    காதலன் கேட்க்கும் கேள்வி சரிதான்.ஏமாற்றம் இருவருக்கும் பொது .சட்டமும் பொது. சட்டப்படி FIR போட்டு வழக்கு நடந்தால் ஒரு முடிவும் முன் உதாரணமும் கிடைக்கும்.
    about 3 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • sam  
    file a case under section 405 of IPC (Criminal breach of trust)
    about 3 hours ago ·   (6) ·   (0) ·  reply (0)
  • நந்தன்  
    கடைசியில் மன நோயாளி பட்டம் அவளால் அவளது பெற்றோரால் எனக்கு கிடைத்தது . நான் போலீசை உதவிக்கு நாடினேன்.கேரளா போலீசையும் கூட நாடினேன் .அப்போது கேரளாவில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் சொன்னார் . நீங்கள் அந்த பெண்ணை உபயோகித்தீர்களா ? அப்படி எனில் அதுவரை உங்களுக்கு லாபம் என கூறினார் . எனக்கு மிகவும் மன வேதனையுண்டானது .போலீசார் அவளை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை . எனது தந்தைக்கு மாரடைப்பு பிரச்சினைகள் வரவே அவரது சிகிச்சைகளுக்காக வேறு வழியில்லாமல் நான் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது . பின்னர் விசாரித்த போது அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பது தெரியவந்தது .என்னை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளாள்.அந்த பெண் ஒரு ஏழையாக இருந்து உண்மையிலேயே சந்தர்ப்ப சூழல் கொண்டு பிரிந்தால் வருத்தப்பட்டிருக்கமாட்டேன் .ஆனால் ஏழ்மையால் தனது உடலை விற்று சம்பாதிக்கும் பல தாசிகள் நம் நாட்டில் உண்டு . சுகபோகமாக வாழ்வதற்கு புனிதமான காதலின் பெயரை சொல்லி ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இத்தகைய ஈனப் பிறவிகளை என்ன சொல்ல ? ஆம் ஒரு நாகரீக சமூகம் அல்லவா ? ஆதாரம் இருப்பினும் சட்டங்களும் இன்று இவர்களுக்கே பாதுகாப்பு தருகிறது .
    about 5 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
  • George  from Chennai
    Priyadharshini urged the DGP to suspend R V Varun Kumar IPS from service and arrest him for cheated her. Tamilnadu state government suspended and arrested him. I accept it as a good judgement. If the boy cheated by girl, What will be the judgement?
    about 5 hours ago ·   (10) ·   (0) ·  reply (0)
    sam   Up Voted
  • K.krishnamurthi Krishnamurthi at Professional Lawyer from Chennai
    Moral of the news -; Before falling in love the adult boy and girl should enter into an agreement that they have begun to love; that they are genuine lovers; that in case of love failure and consequenlty either of the party marries some other person in such a contingency the deserted lover on will be entitled to have damages and also amount spent on him/her as gift etc
    about 5 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
  • நந்தன்  
    இது போன்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது உண்டு .மூன்றாண்டுகளுக்கு முன் திருமண தகவல் இணையம் மூலம் மூவாயிரம் ரூபாய் பணம் கட்டி உறுப்பினர் ஆகி அதில் உள்ள தகவலினடிப்படையில் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டேன்.கேரளாவில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த அந்த பெண் பெங்களூரில் எம்.எஸ் .சி நர்சிங் படித்து கொண்டிருந்தாள் . அந்த பெண்ணை தொடர்பு கொண்டால் தனது தந்தை பொறுப்பற்ற குடிகாரர் எனவும் தாய் இஸ்ரேல் நாட்டில் வேலை பார்ப்பதாகவும் சொன்னாள்.அதோடு என்னை பிடித்திருப்பதாகவும் கல்யாணம் செய்ய விரும்புவதாகவும் தனது படிப்பு மற்றும் அம்மா வரும் வரை பொறுக்கும் படியும் கேட்டு கொண்டாள்.நானும் அவளது பகுதியில் விசாரித்த போது அவள் கூறிய தகவல்கள் உண்மை தெரிய வரவே சம்மதம் தெரிவித்தேன்.இதன் பிறகு தனது படிப்புக்கு உதவி செய்ய கேட்டாள். ஒரு லட்சம்ரூபாய்க்கு மேல் படிக்க அவளது வங்கி கணக்கு மூலம் கொடுத்தேன் .படிப்பு முடிந்தது .திருமணம் பற்றி கேட்டேன் . விருப்பமில்லை என பதில் வந்தது. அவளது பெற்றோரிடம் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னேன். அவர்கள் எங்கள் மகளுக்கு நாங்கள் படிக்க பணம் அனுப்பி கொடுத்தோம் என்று சொன்னார்கள் .
    about 5 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • pradeep kumar  
    இத எல்லாம் எங்க தலைவர் படத்துல பாதசுப்ப
    about 6 hours ago ·   (1) ·   (2) ·  reply (0)
  • jeraldin  from Chennai
    சூப்பர் thalaiva
    about 6 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • திருமலை  from Kumar
    இதுவும் சரியான முடிவே கண்டிப்பாக வழக்கு பதியவேண்டும்
    about 6 hours ago ·   (13) ·   (0) ·  reply (0)
  • திருமலை  from Kumar
    மிகச் சரியான முடிவு அந்த இளைஞனை பாராடியே ஆகவேண்டும்
    about 6 hours ago ·   (10) ·   (0) ·  reply (0)
  • இருமேனி Irumeni  from Temoh
    கண்ட கருமாந்தரத்துக்கு லாம் ஓட்டுப் போடுர மாப்ளைங்க இதுக்கு குத்துங்கப்பா கும்மாங்குத்து.... எத்தன ஹிட்டு எத்தன குட்டு வருதுனு பாப்போம்...
    about 6 hours ago ·   (36) ·   (0) ·  reply (0)
    Richard  · derick   Up Voted
  • Vadivelalagan Av Linux System Administration at IBM from New Delhi
    Super..Police please take immediate action that girl!! That guy given to complaint very correct procedure...
    about 6 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Gopi Pravin Graphic Designer at vaao.net 
    super g super g
    about 6 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • parthi  
    Antha nanban seithathu 100 ku 100 sari
    about 6 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • Debi  
    10000000 likes
    about 6 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • Naveen Ravichandren  from Bangalore
    semma podu podu
    about 6 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Debi  
    10000000 likes :D
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • logeshwaran  from Mumbai
    apadi than pananum ivalungala ellam superb sir
    about 7 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Raj Kumar Trading at The Business (band) 
    சபாஷ் மாப்ள சபாஷ்....
    about 7 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
  • இருமேனி Irumeni  from Temoh
    இதுவும் நல்லா தான் யா இருக்கு... இதுவே ஆம்பள புள்ள விட்டுட்டு போய்ட்டா பொண்ணு வந்து கம்ப்ளைன் பண்ணா அந்த பையன மட்டும் இல்லங்க... மொத்த குடும்பத்தயே உள்ள போடுறீங்கல்ல... இப்ப என்ன செய்யப் போறீங்க போலீஸ் காரய்யா? நல்லா மாட்டிக் கிட்டீங்க போங்க!!1

    wநன்றி - த ஹிந்து