Showing posts with label நையாண்டிச்சிரிப்பு. Show all posts
Showing posts with label நையாண்டிச்சிரிப்பு. Show all posts

Monday, May 06, 2019

ஆட்சிக்கு சாம்பார்


1  ▪️சென்னை செங்குன்றத்தில் கிழிந்த ரூ.500 நோட்டை 100 ரூபாய் கமிஷனுக்கு மாற்றிய கதிர்வேல் என்பவரை அவரது நண்பர்கள் அடித்துக் கொன்றனர்

▪️50 ரூபாய் கமிஷன் எனக்கூறி விட்டு 100 ரூபாய் எடுத்துக் கொண்டதால் கதிர்வேல் கொலை - 4 பேரை போலீசார் கைது செய்தனர் # 50/4 =12.50 ரு க்கு ஒரு கொலை!



=============




2 "அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும், துரியோதனன் அமமுகவும் சேர்ந்து எதுவும் செய்ய முடியாது!" - அமைச்சர் ஜெயக்குமார்.

பாண்டவர் அணி வனவாசம் போற காலம் நெருங்கிட்ச்சுங்கறாரா?


===========

3    32 ஆண்டு காலம், ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து, அவரை காப்பாற்ற முடியாத பாவிகள், தற்போது, அ.தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என, தனியாக இயக்கத்தை தொடங்கி உள்ளனர்-OPS  நீங்க கூடத்தான் ஜெ கூடவே இருந்தீங்க, நீங்களாவது காப்பாற்றி இருக்கலாமே? 


ஜெ மரணம் பற்றிய விபரம் கேட்க  விசாரணைக்கமிஷன் உங்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகலையாமே? ஏன்?


அதிமுக வை வேற யாரும் வெளில இருந்து அழிக்கவே முடியாதுனு சொல்லிடுங்க 


======================


4    தமிழகத்தில், தேர்தல் விதி மீறல் தொடர்பாக, 4,723 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தேர்தல், டி.ஜி.பி., அஷுதோஷ் சுக்லா:  #  தீர்ப்பு வர 400 வருசம் ஆகுமே?


அப்போ ஒரு பயலும் தேர்தல் விதிமுறைகளை மதிக்கவே இல்லைனு சொல்லுங்க 


==================


5    :திண்ணை பிரசாரம் என்ற பெயரில், ஸ்டாலின், திண்ணை நாடகம் நடத்துகிறார். -தமிழிசை


ஆனா நிஜமான நாடகத்துல துண்டுச்சீட்டுக்கு அனுமதி இல்லை, மனப்பாடம் பண்ணி தான் வசனம் சொல்லனும்


=================


6   தன் கட்சியினரை, ஏற்கனவே, 'செட்டப்' செய்து, முன் தயாரித்த கேள்விகளுக்கு, பதில் கூறுவதாக ஸ்டாலின்  நடிக்கிறார். -தமிழிசை  # செட்டப் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆகிடுச்சா?


 நடிகர்க்ள் அரசியலுக்கு வருவதும் அரசியல்வாதிகள் நடிகர்கள் ஆவதும் சகஜம் தானே?


=================


7    மக்கள் எதைக் கேட்டாலும், நாங்கள் அதை செய்து தருவோம். மக்கள் தான், 'மாஸ்டர்!' -ராகுல்  # செய்து தருவீங்களா? கேண்ட்டீனா நடத்தறீங்க?

================
8    பிரதமர் மோடியோ அல்லது எந்த அரசியல் தலைவரும், மக்களுக்கு மாஸ்டர் கிடையாது. -ராகுல்  # ஆனா ஜனங்க ட்ரங்க்கன் மாஸ்டர்களா இருக்காங்களே? 



============
9நானும் நாட்டின் காவலாளி' என்ற புதிய நாடகத்தை, பா.ஜ.,வினர் துவக்கியுள்ளனர். அதை வைத்து, தங்களைக் கூட அவர்களால், காத்துக் கொள்ள இயலாது.  -மாயாவதி   #  ஏன்? அவங்க வந்தா  நீங்க சிலை  வைக்கறதுக்கு உலை வெச்சிருவாங்களா? 


=================

10  தினகரனுக்கு தேள் கொட்டினால், தி.மு.க., தலைவருக்கு நெறி கட்டுகிறது. அந்த அடிப்படையில் தான், சபாநாயகருக்கு எதிராக அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.  -தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார்


அடுத்ததா கமலையும் வம்பிழுப்பார் போல, அவரும் நம்பிக்கை இல்லாத்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிச்சாரே?

=================



11  சட்டசபையில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், 11 எம்.எல்.ஏ.,க்கள், ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டளித்தனர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை.- முத்தரசன் # மாமியார் உடைச்சா மண்குடம் மருமக உடைச்சா பொன் குடம் ,கதைதான்


===========

12 நடந்து முடிந்துள்ள, 18 சட்டசபை இடைத்தேர்தல், தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால், ஆட்சியை தக்க வைக்க, மூன்று, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடிய ஜனநாயக விரோத செயலை, ஆளும்கட்சி மேற்கொள்கிறது.-முத்தரசன்  # இதையே உங்க கூட்டணிக்கட்சித்தலைவர் பண்ணி இருந்தா  சாணக்கியத்தனம், ராஜதந்திரம்னு சிலாகிச்சு இருப்பீங்க? 

===============


13  நீட்' தேர்வுக்கு ஆடை, ஆபரண கட்டுப்பாடு: மூக்குத்தி, மோதிரம், வாட்ச் அணிய தடை  # ஒட்டியாணம் க்கு தடை இல்லையா? அதுல தான் ஏகப்பட்ட பிட் வைக்கலாம்


============

14 முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், பல முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்து. ஆனால், பா.ஜ., போல, அவற்றை நாங்கள் ஓட்டுக்காக பயன்படுத்தியதில்லை,'=மன்மோகன் சிங்,  # அந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கே இதுவரை தெரியாதாம், அதான் ஹை லைட்டே

===============


15   'பா.ஜ.,வும், காங்.,கும் ஒன்று தான். அதனால், காங்.,குக்கு ஓட்டளித்து, உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்-மாயாவதி  #  அப்போ பாஜக வுக்கு அளிச்சாலும் வீண் தானெ?


==============

16  பா.ஜ.,வை அழிக்கும் நிலைப்பாட்டில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். - பிரியங்கா,

 அப்போ ஆட்சிக்கு சாம்பார் வெச்சுடுவீங்கனு நம்பறீங்க?

===============

17  உ.பி.,யில் போட்டியிடும் ஒவ்வொரு, காங்., வேட்பாளர்களும், பா.ஜ.,வின் ஓட்டுகளை, கணிசமாக பெறுவார். -பிரியங்கா,

அப்போ உ பி ல காங் க்கு தனி வாக்கு வங்கி கிடையாதா?

==============

18  என் உயிரை கூட விடுவேனே தவிர, பா.ஜ.,வுக்கு ஒருபோதும் உதவ மாட்டேன்.- -பிரியங்கா,  #  இந்த மாதிரி பிரச்சாரம் பண்றதே பாஜக வுக்கு உதவி தான் . எதுனா உளறிட்டு இருங்க 

============


19   மோடி அலை இல்லை; ராகுலுக்கும் ஆதரவு அலை இல்லை. மக்கள் எப்படி ஓட்டளித்துள்ளனர் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை-காங்.,  தகவல் தொடர்புத்துறை தலைவர், பிரவீன் சக்ரவர்த்தி


அலை யே இல்லையா? அப்போ அலையே இல்லாத ராமேஸ்வரம் தான் குறியீடு, ராமர் புகழ் பாஜக தான் ஆட்சி அமைக்குமா?

=============

20   உ.பி.,யில் இந்த முறை நாங்கள் சிறப்பாக வருவோம்; மொத்தமுள்ள, 80ல், 71 இடங்களை கைப்பற்றுவோம்- பிரவீன் சக்ரவர்த்தி  #   மீதி இருக்கற 9 இடங்கள் பாஜக வுக்கு  போனாப்போகுதுன்னு விட்டுக்கொடுத்தீட்டீங்க போல 

===============

Saturday, May 04, 2019

அலிபாபாவும் 40 திருடர்களும் -2

1    தமிழகத்தின் காவலர், இ.பி.எஸ்., தான்- , ராஜேந்திர பாலாஜி: துணைக்காவலர் ஓபிஎஸ் அதை விட்டுட்டீங்களே?

=============

2  கோபாலபுரத்திற்கும், அறிவாலயத்திற்கும் மட்டும் தான், ஸ்டாலின் காவலாளியாக இருக்க முடியும்.= , ராஜேந்திர பாலாஜி: # முதல்வர் ஆவோம்னு ஆவலாளியா இருக்கக்கூடாதா?


============


தேர்தல் முடிவுக்குப் பின், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், காணாமல் போய்விடும்.-பொன்முடி:   # நம்ம ஆட்சில பலரோட நிலங்கள் காணாமப்போன மாதிரியா?


காணாமபோன கட்சிகள் திமுக கூட்டணிக்கே வந்துட்டா வரவேற்பீங்க தானே?வாசல்கத வுகள் 24 மணி நேரமும்  திறந்தே இருக்குமே?

=============


4  : தொழிலாளர் நலம் சார்ந்த கட்சியாக, த.மா.கா., செயல்பட்டு வருகிறது  -வாசன்  # கம்யூனிஸ்ட் கூட கூட்டணி நு உங்க கூட்டணி ஆளுங்க தப்பா நினைச்சுடப்போறாங்க 


===============

 மக்களின் பிரச்னைகளைக் கேட்டு, அதற்கு தீர்வு காண்பதற்கு, என் சகோதரர் ராகுலை போல், வேறு தலைவர்கள் யாரும் இல்லை.-    பிரியங்கா

காங்கிரசில் இல்லைனு விளக்கமா சொல்லுங்க 

============

 6  என் குடும்பத்தினரை, பா.ஜ., குறி வைத்து செயல்படுகிறது. -    பிரியங்கா  # உங்க கணவர் ,  அம்மா, அப்பா அப்டினு எல்லார் மேலயும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கே? நெருப்பில்லாம புகையுமா?அடுப்பில்லாம வேகுமா?

=============

7  தேர்தல் பிரசாரத்தின்போது, எங்கள் குடும்பத்தைப் பற்றி, நாங்கள் பேசுவதில்லை; மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசுகிறோம்.-  பிரியங்கா

மக்களோட பிரச்சனையே உங்க குடும்பத்தினர் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்குன்னுதானே? 

=================

8  , பா.ஜ., தலைவர்கள், தங்கள் பிரசாரங்களில், எங்களின் குடும்பத்தைத் தான் குறி வைக்கின்றனர். -    பிரியங்கா  # பாஜ க குடும்பங்கள் மீது குறி வெச்சா சேம் சைடு கோல் ஆகிடுமே?


===========


9  ,   லோக்சபா மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில், நாம் வெற்றி பெறுவோம். இதை, உளவுத்துறை மூலம் அறிந்து, அ.தி.மு.க., தரப்பில் அச்சத்தில் உள்ளனர்.-தினகரன் #   இப்போ நீங்க சொன்ன தகவல் உளவுத்துறைக்கே இப்போதான் தெரியுமாம்


==============

 10  ஆட்சியை குறுக்கு வழியில் காப்பாற்ற, நமக்கு ஆதரவான மூன்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு விளக்கம் கோரி, சபாநாயகர் மூலம், முதல்வர் பழனிசாமி தரப்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மே 23க்கு பின், பழனிசாமி ராஜினாமா செய்வார்.=தினகரன்  $ மே 23  இயக்கம் ல இவரும் ஒரு அங்கத்தினர் போல 



அதாவது அவங்க இப்போ எந்த இடத்துல இருக்காங்கனு இடம் சுட்டி பொருள் விளக்குகனு கேடிருக்காங்க 

=================1
11  “பிரதமர் மோடி நாட்டின் காவலாளி அல்ல... களவாணி..!” - மு.க.ஸ்டாலின் # நேத்துதான்"ராகுலுக்கு"கோர்ட்ல" கண்டனம்"கிடைச்சுது,இன்னைக்கு இவரு.நானும் ரவுடிதான்"மொமெண்ட்




============




12 ஜூன் 3ம் தேதி ஆட்சி அமைக்காவிட்டால்

அரசியலை விட்டு ஒதுங்கி விடுவாரா ஸ்டாலின்?” - அமைச்சர் ஜெயக்குமார் # அல்லது அவரோட சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி வைக்கத்தயாரா?ஒரு 10% போதும்


===========


13 எடப்பாடி கண் அசைத்தால் 40 தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரெடி' - ராஜேந்திர பாலாஜி # எதுக்கு?அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவா?


============


1 4  ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உள்ள அதிகாரம் கூட, எம்.எல்.ஏ.,க்களுக்கு கிடையாது- திருவாடானை எம்.எல்.ஏ., கருணாஸ்:   # அதிகாரம் , குறள் இதெல்லாம் விடுங்க, சமபளம், அலவன்ஸ் பத்திஒ பேசுங்க


=================]

15   உ.பி.,யில், 41 லோக்சபா தொகுதிகளில், காங். வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு, எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், வாரணாசி தொகுதியில், நான் போட்டியிடவில்லை. -பிரியங்கா: # நீங்க வளர விடாம சதி பண்றாங்க, ஜாக்கிரதை


மோடியை எதிர்த்துப்போட்டியிட்டா டெபாசிட் வாங்கறதே கஷ்டம்னு சொன்னாங்களா?



==============



16   பா.ஜ., அல்லாத அரசு தான், மத்தியில் ஆட்சி அமைக்கும் -சிதம்பரம்  # அப்போக்கூட காங் தான் ஆட்சி அமைக்கும்னு தில்லா சொல்ல முடியலையா?


=============


17    : லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதில், நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளோம். -, சிதம்பரம்   #  காங் ஜெயிக்கும்னு சொல்ற நம்;பிக்கை இல்லை?


===============



18  -பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில், 'மோடி மோடி' என, மக்கள் முழக்கமிடுகின்றனர். அவை, வெறும் முழக்கங்களாக இல்லாமல், நாட்டு மக்களின் ஆசீர்வாதங்களாக உள்ளன.-அமித் ஷா # நல்லா கேட்டீங்களா? கோ பேக் மோடி யா இருக்கப்போகுது


===============


19   மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என, நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்-அமித் ஷா # அனைவரும்   விரும்பறாங்களா> அப்போ எதிர்க்கட்சிக்கு ஒரு சீட் கூட கிடைக்காதுங்கறீங்களா? 


=================


20    எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கோ, எம்.எல்.ஏ., ஆவதற்கோ தகுதியில்லாத ஸ்டாலின், ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்ற கனவில் மிதக்கிறார்.-சட்டத்துறை அமைச்சர், சண்முகம் # சுதந்திர நாட்டில் கனவு காணக்கூட உரிமை இல்லையா? அப்துல்கலாம் என்ன சொல்லி இருக்காரு? கனவு காணூங்கள்


==============

Monday, March 18, 2019

நாட்டு நடப்பு, நையாண்டிச்சிரிப்பு

1  நம் படைகளின் தாக்குதல்களால், எதிரிகள் மிரட்சியில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவது போல், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன -  மோடி:  # 

எதிரிகளை விடுங்க, நம்ம கட்சிக்கூட்டணி எடியூரப்பாவே எட்ட்ப்பா ஆகிட்டாரே? முதல்ல அதைக்கவனிங்க, எதிரியை எப்ப வேணா கவனிக்கலாம்., ஆனா கூடவே இருந்து குழி பறிக்கற துரோகியை முதல்ல கவனிக்கனும்


=====================


2   : லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி தொடரும். கூடுதல் தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்க மாட்டோம்.-ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர்தேவகவுடா # 

கூட்டணீக்கட்சிகளிடம் பேரம் பேசியே ஜவ்விழுப்பு இழுக்கும் தேமுதிக மாதிரி கட்சிகளூக்கு ஒரு பாடம்



======================


3: பீஹார் மாநிலம் பாட்னாவில், பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷும் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக கூறுகின்றனர். இதுபோன்ற ஒரு கூட்டத்தை, சாலையோர பெட்டிக்கடையில் கூட, என்னால் கூட்ட முடியும்.-  லாலு பிரசாத் யாதவ்n# 

ஜெயில்ல இருந்தப்ப ட்ரெய்னிங் எடுத்திருப்பாரோ?


===================


4  ஒரு புறம் எதிரியும், மறுபுறம் துரோகியும் சேர்ந்து, அ.தி.மு.க., ஆட்சியை வீழ்த்த நினைக்கின்றனர். -தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி பேச்சு: # 

அதான் 1000 , 2000 -னு நாம ரூபா நோட்டை இறக்கி இருக்கமே?கவலைப்படமாதீங்க, தமிழன் விசுவாசம் மிக்கவன், கை நீட்டி காசு வாங்கிட்டா நன்றியை காட்ட்டிடுவான்

====================


வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்குவது, தேர்தலுக்காக அல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி, தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. தகுதியுடையவர்களுக்கு மட்டுமே, 2,000 ரூபாய் வழங்கப்படும். - விஜயபாஸ்கர் #

 ஆமா, ,முக்கியத்தகுதி அவங்களூக்கு ஓட்டு போடும் வயசான 18 ஆகி இருக்கனும், அதானே? 17 வயசுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் மக்கள் எத்தனை பேருக்கு அந்தப்பணம் தந்தீங்க?>?


=====================


 பேச்சு: கல்வி துறையை மேம்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கல்வி நிலையங்களுக்கு, முன் எப்போதும் இல்லாத, தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டுள்ளது.- மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்  # 

ஆனா மாணவர்கள் குறைவா இருக்காங்கனு அரசுப்பள்ளிகளை தொடர்ந்து மூடிட்டே இருக்கமே?


==============


7நாட்டுக்கு, அமைதி தான் தேவை. ஆனால், அவசியம் ஏற்படும்போது, யுத்தமும் தேவைப்படுகிறது. தோட்டாக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில், நாம் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம். இனி, ஓட்டு சீட்டுகள் மூலம் நடத்தப்படும் தேர்தல் போரிலும், வெற்றி பெறுவோம். நாடு முழுவதும், 400 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்பார்- மத்திய உணவு துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான்  $  

 தோட்டாவை பயன்படுத்தறமாதிரி வாக்காளர்கள் நோட்டாவை பயன்படுத்தாம கிருக்கனுமே?த்மிழநாட்ல நனக்கு நோட்டாதானே டாட்டா காட்டுது?>

=======

========================

8கூட்டணி, தனித்துப் போட்டி என்பதெல்லாம், அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மாறுபடும்-  தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், $

 aரசியல்வாதின்னாலே பச்சோந்தி மாதிரி மாறிட்டே இருக்கறவங்கதானே?

=================

.9   கூட்டணி என்பது, தேர்தல் காலங்களை கணக்கில் வைத்து உருவாகக் கூடியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே, தனித்தும், கூட்டணி அமைத்தும் போட்டியிட்டு இருக்கிறார். ஆனால், கொள்கை, லட்சியம் மாறாது.-தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், # 

நம்ம கொள்கை எப்படியாவது ஜெயிக்கனும், அதானே?நமக்கு எதிர்மாறான கொள்கை உள்ள கட்சிகளையும்  சேர்த்துக்கலாம், நம்ம லட்சியம் ஆட்சியைப்பிடிஉக்கனும்

=======================

10   பாக்., பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தில், 'இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் தணியும் வகையில், பொறுப்பாக செயல்பட்ட, பிரதமர் இம்ரான் கானுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்' என தீர்மானம் # 

பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை  அமைதியா இருனு அடக்க முடியலையே?

=====================

11    தி.மு.க.,வினர் யாருக்கும் கொடுத்து உதவ மாட்டார்கள். இது, தி.மு.க.,வின் கொள்கை முடிவு.-பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:  #
இல்லையே, நில ஆக்ரமிப்புல பலருக்கு டார்ச்சர் கொடுத்து இருக்காங்களே? பொய்யான வாக்குறுதி ஜனங்களுக்கு கொடுத்து இருக்காங்களே?


===============


12பிச்சைக்காரர்கள் கூட, அ.தி.மு.க.,காரனை பார்த்து தான் பிச்சை கேட்பர்-ராஜேந்திர பாலாஜி: # 

அம்மா தாயே , ஓட்டுப்போடுங்கன்னு பிச்சை எடுப்பது எல்லாக்கட்சி அரசியல்வாதிகளும்தான்


===============


13  இரட்டை இலை சின்னம் கிடைக்காதது, எங்களுக்கு பின்னடைவு அல்ல. தேர்தலில் சின்னம் ஒரு பொருட்டே அல்ல.-தினகரன்: 

#  அப்போ குக்கர் சின்னம்தான் வேணும்னு அடம் பிடிப்பது ஏன்?


வெத்து கெத்து அரசியல்வாதிகளீன் அடையாளச்சின்னம்


ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதைதான்


=================


14 : எங்களின், 10 அம்ச கோரிக்கைகளை, அ.தி.மு.க., ஏற்று, உறுதி அளித்த பிறகே, கூட்டணிக்கு சம்மதித்தோம்-அன்புமணி # பிரமாதம், அடுத்த தேர்தல்ல கூட்டணீ மாறுனாக்கூட எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றதாதால்தான் மாறினோம்னு சமாளீச்சுக்கலாம்

======================


15 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. இந்த பயத்தால், ஆளும் கட்சியினர், நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர். என்ன தான் பணம் கொடுத்தாலும், தமிழக மக்கள், தி.மு.க., கூட்டணிக்கு தான் ஓட்டளிப்பர்; அந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும். மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி, தி.மு.க., தான்.-ராஜ்யசபா, எம்.பி., சிவா # யாரோட மக்களூக்கு? தலைவர்களின் , அரசியல் கட்சி எம் எல் ஏக்களீன் மகன் மகள்< மக்களூக்கா?>

==============
16  கொசு மருந்து அடிக்கும்போது, எத்தனை கொசுக்கள் இறந்தன என எண்ணுவது இல்லை,'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, வி.கே.சிங்  #  அப்போ 300 பேர் தாக்குதலில் இறந்தாங்கனு அறிக்கை விட்டது ஒரு குத்து மதிப்பாத்தானா?


===============


17   அ.தி.மு.க.,வுடனான கூட்டணிக்காக, 300 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைமாறியதாக, எங்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்துகின்றனர்-பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர், அருள்: # ரொம்ப அதிகமா சொல்லிட்டாங்க போல, நீங்கதான் க்ரெக்ட் ரேட்டை சொல்லிடுங்களேன்


================

18  லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக வைக்கப்படும் பேனர்களில், என் படமே, பிரதானமாக இடம் பெற வேண்டும். வேட்பாளர்களின் படம் மற்றும் கட்சி சின்னம் ஆகியவை, கீழ் பகுதியில், சிறிதாக இடம் பெற வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி: # எதுக்கு சுத்தி வளைச்சுட்டு? ஜெ வழியில் செயல்படனும்னு உத்தரவு போட்டுடுங்க

===============


19 கூட்டணி குறித்துப் பேச, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் என்னைச் சந்தித்தனர். இது குறித்து, ஸ்டாலிடம் தெரிவிக்க போன் செய்தபோது, அவர் துாங்குவதாக தகவல் வந்தது. 'ஏதும் முக்கிய விஷயமா?' என்று கேட்டனர்; ஒன்றுமில்லை என்று கூறி, இணைப்பை துண்டித்து விட்டேன் - துரைமுருகன்: # கட்சித்தலைவர் மதியம் தூங்கறவர்ங்கற ராணுவ ரகசியத்தை வெளிப்படுத்தீட்டீங்களே, இது கட்சிக்கட்டுப்பாட்டை மீறுவது ஆகாதா?


இந்த ஆட்சியைக்கலைக்கும் வரை தூங்க மாட்டேன்னு சபதம் போட்டாரே?

ஆதாரம் இருந்தா ரெக்கார்டு பண்ணினதை வெளியிடுங்க பார்ப்போம்



================

20 தென் மாவட்டங்களிலும், கொங்கு பகுதி மாவட்டங்களிலும், எங்களுக்கு இப்போதும், நல்ல செல்வாக்கு இருக்கிறது.-த.மா.கா., துணை தலைவர், ஞானதேசிகன், # எந்த அர்சியல் கட்சிகளாவது எங்களுக்கு இன்ன பகுதிகளீல் செல்வாக்கு இல்லைனு சொல்லி இருக்காங்களா?



=================