Showing posts with label நேரம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label நேரம் - சினிமா விமர்சனம். Show all posts

Monday, May 20, 2013

நேரம் - சினிமா விமர்சனம்

கே வி ஆனந்த் தின் கனா கண்டேன் படத்தின்  கதை முடிச்சை   சுவராஸ்யமான புது திரைக்கதை  வடிவில் அமைத்தால் அதுதான் மலையாள டப்பிங்க் படமான நேரம் படத்தின் கதை. 2 மணி நேர நறுக் சுருக் படம்.

ஹீரோவுக்கு திடீர்னு வேலை போய்டுது.சந்தர்ப்ப சூழ்நிலையால கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்க நேரிடுது.கடனை திருப்ப வேண்டிய கெடு நாள் ல  நண்பனிடம் கடன் வாங்கி கொடுக்கப்போகும்போது ஒருத்தன் பிக் பாக்கெட் அடிச்சுடறான். அதே நாள் தங்கையின் கணவர் பெண்டிங் டவுரிக்காக வசூலிக்க வர்றார். போதாத குறைக்கு ஒரு காதலி.வீட்டை விட்டு வெளில வந்துடறா.


 காதலனுக்காக காத்திருக்கும்போது அவ செயினை ஒருத்தன் அடிச்சுடறான். ஹீரோ இத்தனை பிரச்சனைல இருந்தும் எப்படி தப்பிச்சார்? என்பதை  ஒரு த்ரில்லர் படத்துக்கே உண்டான சுவராஸ்யத்துடன் சொல்லி இருக்காங்க .

 



 ஹீரோ புது முகம்  நிவின் ( வெற்றி ) . ஆள் செம ஸ்மார்ட் . பெண்களை வசீகரிக்கும்  முகம் .புது முகத்துக்கே உண்டான தயக்கங்கள் ஏதும் இல்லமால் அநாயசமா நடிச்சிருக்கார் . நல்ல எதிர்காலம் உண்டு . காதல் காட்சிகளில் பட்டும் ரொமான்ஸ் பத்தாது. நம்மளைப்போல கூச்ச சுபாவம் போல


ஹீரோயின் நஸ்ரியா நசீம் செம நைஸ். பிரனீதாவின் முகச்சாயல் ,  ஹன்சிகாவின் மனசு , நமீதாவின் தினுசு ,அக்னிநட்சத்திரம் அமலாவின் ரவுசு ,இதயத்தை திருடாதே( தெலுங்கு கீதாஞ்சலி ) கிரிஜாவின் நகாசு என கலந்து கட்டிய காக்டெயில்  குல்கந்து ஃபிகர் . தாரளமா 75 மார்க் போடலாம்.பளிங்குக்கற்களில் ஊற்றிய பாதரசமாய் அவரது கண்கள் இரண்டும் அலை பாயும்போது நம் மனமும் அலை பாயும்,

 பீட் ரூட் அல்வாவை தேனில் நனைத்து எடுத்தது மாதிரி அவர் உதடுகள் . ஷூட்டிங்க் ஸ்பாட்டில் ஈ மொய்ச்சிருக்கும். அவ்வளவு அழகு . சேலை , சுடிதார் என எந்த வித உடையிலும் கண்ணியமான தோற்றம் காட்டும் குடும்பப்பாங்கான கிளாமர் முகம் . தமிழில் அஞ்சலிக்கு சரியான போட்டியாக வருவார்னு தோணுது .

வில்லனாக  வரும் சிம்ஹா ஆர்ப்பரிக்க வைக்கும் வில்லத்தனமான நடிப்பு .வைதேகி காத்திருந்தாள் படத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமியாக வரும் ராதா ரவியின் கெட்டப் பில் கழுத்து நிறைய தங்கச்சங்கிலியில் வந்து மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கறார். படத்தின் முதுகெலும்பே இவர் நடிப்பை வழங்கி இருக்கார் . இவரது  பாடி லேங்குவேஜ் பிரமாதம் .


 ஹீரோயின் அப்பாவாக வரும் தம்பி ராமையா நடிப்பும் கன கச்சிதம் . போலீஸ் ஸ்டேஷனில் இவரது நடிப்பு சபாஷ் போட வைக்குது . போலீஸ் ஆஃபீசராக வரும் ஜான் விஜய் வசன உச்சரிப்பில் கலக்கறார் ( வ குவாட்டர் கட்டிங்க்கில் கலக்கியவர் )



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காதல் உள்ளே வந்த நேரம் பாடல் காட்சியில் ஒளிப்பதிவு , லொக்கேஷன் அட்டகாசம் .


2. டைட்டில் டிசைன் புதுமை . வித விதமான கடிகாரங்கள்  , கால மானிகள் என டைட்டிலை நினைவு படுத்த  இவர் எடுக்கும் முயற்சிகள் அட போட வைக்குது


3. ஹீரோ , ஹீரோயின் , வில்லன் உட்பட படத்தில் பங்கு பெற்ற அனைத்து நடிகர்களும் மிகச்சிறப்பாக தங்கள் பங்களிப்பை அளித்தது . அவர்களிடம் இயக்குநர் வேலை வாங்கிய விதம்


4. படத்தின் இயக்குநரே எடிட்டர் என்பதால் ஷார்ப்பான எடிட்டிங்க் . ஸ்லோ மோஷன் காட்சிகள் ஒரு படத்துக்கு எந்த அளவு முக்கியம் என்பதை  உணர்ந்து செய்திருக்கிறார்


5. வசனகர்த்தாவின் நக்கலான , நையாண்டித்தனமான் நகைச்சுவை உணர்வு படம் பூரா விளையாடி இருக்கு. கேரக்டர்களுக்கு பெயர் சூட்டுவதில் இருந்து , பழமொழி , சின்னச்சின்ன வசனங்களில் கூட மெருகேற்றப்பட்ட யதார்த்தம் கலக்கல் 

6. ஹீரோயின் அம்மாவாக வரும் ஆண்ட்டி யாரு? செம கட்டை. த்ரிஷாவின் அம்மா மாதிரி இந்த வயசிலும் ஹி ஹி






இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. வில்லனே டாமினேட் செய்து விடுவதால் ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகளில் அதிக ஈடுபாடு செலுத்தாதது மிகப்பெரிய மைனஸ். கைவசம் டக்கர் ஃபிகர் இருந்தும் வெளில பராக்கு பார்க்கும் சராசரித்தமிழனின் இழப்பு மாதிரி


2. படத்தில் வில்லனாக வரும் வட்டிக்கடை ஆளிடம் படத்தின் எல்லா முக்கியக்கேரக்டரும் கடன் வாங்கி இருப்பார்களா? வேற ஆளே ஊர்ல இல்லையா?


3. ஹீரோ வில்லன் வீட்டில் வட்டிக்கு கடன் வாங்க வரும்பொதே அவரது அராஜகத்தை நேரில் பார்த்து விடுகிறார். அப்போதே வேற இடம் பார்ப்போம் என அவர் ஏன் சொல்லவில்லை ?



4.  ஹீரோயின் நல்ல வசதி ..ஹீரோவுக்கு பணக்கஷ்டம் என்றால் அவர் ஏன் உதவவில்லை?அவர் கிட்டே தகவல் கூட சொல்லலையே/ எந்த காதலனும் தன் மனக்கஷ்டத்தை , பணக்கஷ்டத்தை காதலியிடம் சொல்லாமல் இருப்பதில்லை


5. வீட்டை விட்டு வெளியே வர முடிவெடுக்கும் ஹீரோயின் கட்டிய சுடிதாருடன் வருவதெல்லாம் ஓக்கே , ஆனா  அவரது செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராதது ஏன்?


6. நட்ட நடு வீதியில் ஹீரோயின் செயினை ஒருத்தன் அத்துட்டு ஓடறான் . ஹீரோயின் கூக்குரல்க் இடலை , யாரிடமும் உதவி கேட்கலை . சும்மா அழுத்துட்டு இருக்கு. இந்தக்கால ஃபிகருங்க  கொலுசு திருகாணி காணாம போனாலே அழுது ஆர்ப்பாட்டம் பண்னிடமாட்டாங்க ?


7. ஹீரோயின் ஒரு ஆள்ட்ட ஓ சி ஃபோன் வாங்கி கால் பண்றா. அப்போ பேசும்போது பர்சனல் மேட்டரை அவன் முன்னாலயே பேசுவாளா? கொஞ்சம் தள்ளி நின்னு பேச மாட்டாளா? அவன் பின்னாலயே ஃபாலோ பண்ணி தொந்தரவு தரும்போது அவ ஏன் பம்மனும்? ஈசியா அவனை கட் பண்ணலாமே? இந்தக்கால ஃபிகருங்களுக்கு பசங்களை கட் பண்ண சொல்லியா தரனும் ?


 


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஹவுஸ் ஒயிப் எல்லாம் நிறையப்பேசலாம்.ஆனா டெசிஷன் எடுக்கற ஏரியாவுக்கு வரக்கூடாது.புரியுதா ? 



------------------------------


2. ஏய். டோன்ட் மிஸ்டேக்கன் மீ.அந்தப்பொண்ணுக்கு மூஞ்சியே சரி இல்லடி. 



டேய் நீ மூஞ்சியையா பார்த்தே? 


-------------------------

3.என்னை கட்டிக்கப்போற பொண்ணு ரொம்ப கஷ்டப்படுவா-னு என் ஜாதகத்துல இருக்கு.என்ன? கஷ்டப்பட வர்றியா ?




---------------------


4.  ஆமா, உனக்கு ஒயிஃப் இருக்கா?

 இல்லை

 ஏன்?

 ஏன்னா? எனக்கு இன்னும் மேரேஜே ஆகலையே?


-----------------------------------


5. கொடுத்த வாக்கைக்காப்பாத்தறவனைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்கும்


--------------------


6.  உங்க பொண்ணு கிட்டே நான் வாக்கு குடுத்திருக்கேன் . அவ எனக்கு வாக்கு கொடுத்திருக்கா.  நீங்க இப்படி அடம் பிடிச்சா நாங்க வேற முடிவு எடுக்க வேண்டி வரும்




--------------------


7.  இந்த ஜானி ஜானி எஸ் பாப்பா வேலை எல்லாம் என் கிட்டே வேண்டாம்



--------------------


8.  போலீஸ் ஸ்டேஷன்  வாசலில்

 சார் . உள்ளே  போறது எப்படி?

 அவனைப்போட்டுத்தள்ளிடு , ஆட்டோமேடிக்கா உள்ளே போயிடுவே


----------------------


9. என்னது? உங்க பேரு சரவணர்? எப்டி?



 சின்னப்பையனா இருக்கும்போது அவன் இவன்னாங்க, பெரிய ஆள் ஆனதும் அவர் இவர்ங்களையா?



------------------


10.  தியாகராஜ பாகவதருக்கே  பாட்டு கத்துத்தர்றியா?




---------------





11.  மிஸ் ! ஐ லவ் யூ!

 ஸாரி , நான் ஆல்ரெடி கமிட் ஆகிட்டேன்

 நான் என்ன சரக்கு அடிக்கவா கூப்பிட்டேன், காபி சாப்பிடத்தானே கூப்பிடறேன்?


--------------------


12. மச்சி , நான் புதுசா ஒரு பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் .




ஆமா, ஆல்ரெடி பண்ணிட்டு இருந்த பிஸ்னெஸ் என்னாச்சு? லாஸ் ஆகிடுச்சு,ஹிஹி


--------------------------



13. அட, புது ஃபோனா?  எவ்ளவ்?



10,000 ரூபா. இந்த நெம்பரை அடி. என்னடா, பட்டனே இல்லை. என்ன ஃபோன் போ .



அண்ணே , இது டச் ஸ்க்ரீன்


-------------------


14. இந்த உலகத்துல முன் அனுபவம் இருக்கா?ன்னு கேட்காத ரெண்டே தொழில் 1. பிச்சை எடுக்கறது  2 திருடறது


----------------------------


15.  இவனை அடிச்சு செல்லுல போடுங்க


 சார், நீங்களே அந்த செல்லுல தான் இருக்கீங்க, நீங்க வெளீல வந்தாத்தான் போட முடியும்



---------------------

16.  எனக்கு குழந்தை பிறந்தப்ப எங்கப்பனுக்குப்பிறந்த பையன் இவன்




------------------


17. நாற வாயன் வீட்டுல பொண்ணு எடுத்தவனும் கெட்டான், நச்சு வாயன் வீட்டுல பொண்ணு கட்டுனவனும் கெட்டான்



-------------------------


18. சாரி டூ சே திஸ் ஹீ ஈஸ் நோ மோர் .



டாக்டர் , மோர் குடிச்சுட்டு அவன் சாகலைங்கறீங்களா? மார்ச்சுவரில இருக்கற டெட் பாடிக்கு நாடி பார்த்த ஆள் நீங்க மட்டும் தான்


-----------------



19 அந்த ஸ்டேஷன் எஸ் ஐ யார் தெரியும் இல்ல? கட்டை


 உருட்டுக்கட்டையா இருந்தாலும் பரவாயில்லை



---------------------


20.நம்ம பொண்ணை அவ ஆசைப்பட்ட பையனுக்கு கட்டி வைக்கலைன்னா என்ன ஆகும் தெரியுமா?


 அந்தப்பையனோட வாழ்க்கை நல்லா இருக்கும்




----------------------

21. டேய் , இப்போ யார்டா தமிழ் நாட்டின் சி எம்?

 நிச்சயமா நான் இல்ல





------------------

 


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43  ( இது ஒரு டப்பிங்க்படம் என்பதால் விகடன் விமர்சனம் வராது )



 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 ரேட்டிங்க் - 3.25 / 5



சி பி கமெண்ட்  - த்ரில்லர் ரசிகர்கள் , காதலர்கள் , பெண்கள் என அனைத்து தரப்பினரும் படம் பார்க்கலாம் . மிக கண்ணியமான இயக்கம் , நகைச்சுவை இழையோடும் திரைக்கதை . 2013 ஆம் ஆண்டின் முக்கியமான  படம் . ஈரோடு  வி எஸ் பி யில் படம் பார்த்தேன்

Sunday, May 19, 2013

நேரம் - சினிமா விமர்சனம் ( தினமலர் )

 
தினமலர் விமர்சனம்


"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "பீட்சா", "சூது கவ்வும்" படங்களின் வரிசையில் வித்தியாசமான கதையம்சத்தில் விறுவிறுப்பாக வெளிவந்திருக்கும் படம் தான் "நேரம்". என்ன ஒரே மாற்றம்.? விஜய் சேதுபதிக்கு பதில் இதில் நிவின் எனும் புதுமுகம் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கிறார் அவ்வளவே!

அமெரிக்காவில் சின்னதாக ஒரு பாம் வெடிக்க (குண்டு அல்ல...), இந்தியாவில் "நேரம்" ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய ஐ.டி. கம்பெனி வேலை பறிபோகிறது. தங்கையின் திருமணத்திற்காக ஊரையே தன் வட்டித் தொழிலால் கட்டி மேய்க்கும் வட்டி ராஜா எனும் சிம்ஹாவிடம் கைநீட்டி கொஞ்சம் பணம் அதிக வட்டிக்கு வாங்குகிறார். 
கூடவே சின்ன வயது முதல் கூட படித்த வேணி எனும் நாயகி நஸ்ரியா நசிம்மை காதலிக்க தொடங்குகிறார். முதலில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளும் வேணியின் அப்பா தம்பிராமையா, நிவினுக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். வேணி, வெற்றியுடன் ஓடிப்போய் வாழ வீட்டை விட்டு கிளம்புகிறார். அதேநாளில் வட்டிராஜாவுக்கு ஐம்பதாயிரம் வட்டி பணத்தை செட்டில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வெற்றி!


வீட்டில் இருந்து வெளியேறிய வேணி, வெற்றிக்காக வெயிட் பண்ணும்போது பட்டபகலில் தனது தங்க செயினை வழிப்பறி கொள்ளையர்களிடம் பறி கொடுக்கிறார். அதே நேரம் வெற்றியும், நண்பரிடம் வட்டிராஜாவுக்கு கொடுக்க வாங்கி வந்த ஐம்பதாயிரம் பணத்தை பிட்பாக்கெட் பேர்வழிகளிடம் பறிகொடுத்துவிட்டு பரிதவித்து போகிறார்.
 இந்நிலையில் ஊரில் இருந்து வெற்றியை தேடி வரும் அவரது தங்கை புருஷன், வரதட்சனை பணத்தின் மீதியை பிஸினஸ் செய்யப்போகிறேன் பேர்வழி... என வாங்கி போக வருகிறார். வேணியின் அப்பா போலீஸ்க்கு போகிறார். காத்திருக்கும் காதலி, தேடும் போலீஸ், டவுரி மீதியை கேட்கும் மச்சான், வட்டி ராஜாவின் கெடு என ஏகப்பட்ட சிக்கலில் தனது கெட்ட நேரத்தால் சிக்கி தவிக்கும் ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு நல்ல நேரம் பிறந்ததா?, இழந்ததை எல்லாம் மீட்டாரா? என்பது நேரம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

"உன்னை கட்டிக்கப்போறவ ரொம்ப கஷ்டப்படுவா... என எங்கம்மாவும், ப்ரண்ட்ஸூம் சொல்லுவாங்க, கஷ்டப்பட வர்ரியா..." என தன் காதலை நாசுக்காக வெளிப்படுத்தும் வெற்றி எனும் நிவின், வட்டிராஜாவிடம் பணம் வாங்க போன இடத்தில் அவர் பண்ணும் சேட்டைகளால் காட்டு முகபாவனைகள், தேர்ந்த நடிகர்களையே திக்குமுக்காட செய்துவிடும் ரகம்! மனிதர் முதல் படத்திலேயே பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து விடுகிறார். கீப்இட் அப் நிவின்!
 


நாயகர் மாதிரியே, நாயகி வேணியாக வரும் நஸ்ரியா நசீமும் நடிப்பிலும் சரி, குடும்பபாங்கிலும் சரி செம சூப்பர்ப்! அம்மணி அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கிளாமர் காட்டினார் என்றால் தமிழ் சினிமாவின் நம்பர்-ஒன் இடத்திற்கு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

வில்லன் வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, செம சூப்பர்ப்பா! கழுத்து நிறைய தங்கசங்கிலிகளும், கூட இரண்டு கருப்பு சிவப்பு அடியாட்களுமாக படு பந்தாவாக வட்டி வசூலிக்கும் இவரது பாணியே தனி. டச்போனை ஆப்ரேட் செய்யத்தெரியாமல் "பத்தாயிரம் ரூபாய்க்கு போன் பட்டன் இல்லை... வேஸ்ட்!" என அவர் அலுத்துக் கொள்ளும் ஒரு காட்சி போதும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது!

வேணியின் அப்பா தம்பிராமையா, எஸ்.ஐ., கட்டகுஞ்சாக வரும் ஜான் விஜய், நாசர், அவரது தம்பி மாணிக்கம் அலைஸ் மாணிக் - அனந்த்நாக், லைட்ஹவுஸ் - ரமேஷ் திலக், காளான் - ஆனந்த், ஜான் - சபரீஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் பலே சொல்ல வைக்கும் படைப்புகள்!
 


அதேநேரம் ஊரிலேயே ஒரே ஒரு வட்டிக்காரர் இருப்பது மாதிரியும், அவரிடமே ஹீரோ, ஹீரோவிடம் பிக்பாக்கெட் அடிக்கும் ஆசாமிகள், ஹீரோவுக்கு வேலை தரும் நாசரின் தம்பி என எல்லோரும் அநியாய வட்டிக்கு கடன் வாங்கியிருப்பது, எஸ்.ஜான் விஜய்க்கு கட்ட குஞ்சு என வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கும் இயக்குனர், நாயகியின் அப்பா தம்பி ராமைய்யாவுக்கு சரவணன் என சாதாரணமாக அவரது வயதுக்கு பொருந்தாத பெயரை சூட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைபாடு இருந்தாலும், டைட்டில் கார்டு போடும் இடத்தில் விதவிதமான கை கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், காலமானிகள் என ஆரம்பத்திலேயே நம்மை வாய்பிளக்க வைக்கும் இயக்குனர், அடுத்தடுத்த காட்சிகளிலும் நமது திறந்த வாயை மூட விடாமல் இறுதிவரை அழைத்து செல்வது சிலிர்ப்பு!

ராஜேஷ் முருகேஷனின் மிரட்டும் பின்னணி இசையும், ஆனந்த் சி.சந்திரனின் அசத்தும் ஒளிப்பதிவும், பிரதீப்பாலாரின் டைமிங் வசனங்களும், அல்போன்ஸ் புத்ரனின் எழுத்து - இயக்கத்தில் "நேரத்தை - நல்ல நேரம்" ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "நேரம்" - ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இப்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் "நல்ல நேரம்!"
thanx -தினமலர்