Showing posts with label நயன்தாரா. Show all posts
Showing posts with label நயன்தாரா. Show all posts

Wednesday, September 02, 2015

‘இது நம்ம ஆளு’-மாமனார் டி ஆர் க்கும் ,மருமகள் நயன் தாரா க்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பாக்குது

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா
'இது நம்ம ஆளு' படத்தின் 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'இது நம்ம ஆளு'. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்து வருகிறார்.
'வாலு' வெளியீட்டு பணிகள் முடிந்தவுடன், 'இது நம்ம ஆளு' படத்தின் 2 பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு சார்பில் தெரிவித்திருந்தார்கள்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில் டி.ராஜேந்தர் தெரிவித்திருப்பது, "என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது.
‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார்.
பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம். நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்.
நயன்தாராவிடம், சிம்பு ‘கால்ஷீட்’ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தைப் பொருத்தவரை சிம்பு நடிகர்தான். அவர் மீது வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.” என்று அப்புகாரில் டி.ஆர் தெரிவித்திருக்கிறார்.


நன்றி -த இந்து

Tuesday, May 26, 2015

மாஸ் (எ) மாசிலாமணி -இயக்குநர் வெங்கட்பிரபு நேர்காணல்

‘‘பொதுவாக என் குழந்தைகளை மனதில் வைத்துத்தான் முதலில் கதையை எழுது வேன். அதன்பிறகு அந்தப்படத்தில் அஜித், சூர்யா மாதிரி நாயகர்கள் சேரும் போது கதையை அவர்களுக்கான இமே ஜுக்கு ஏற்றார்போல் மாற்றுவேன். ‘மாஸ்’ படத்தின் கதையும் அப்படித்தான். முதலில் இருந்தே குடும்பம், குழந் தைகளின் உலகம் என்று படம் அவர்களுக் கானதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே உருவாக்கினேன்’’ என்று கலகலப்பாக பேசத்தொடங்குகிறார், இயக்குநர் வெங்கட்பிரபு.
சூர்யா, நயன்தாராவை வைத்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாஸ்’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம்.
‘அஞ்சான்’, ‘பிரியாணி’ படங்களுக்கு பிறகு நீங்களும் சூர்யாவும் வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ் நிலையில் இருக்கிறீர்கள். ‘மாஸ்’ எப்படி வந்திருக்கிறது?
கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் எல்லா போட்டிகளிலும் 100 ரன்கள் எடுக்க முடியுமா என்ன? அப்படித்தான் சினிமாவும். நாங்கள் நிறைய வெற்றி களை கொடுத்திருக்கிறோம். அதே நேரத்தில் சில சமயங்களில் சில விஷயங்களை சரியாக கொடுக்க முடியாமல் போயுள்ளது. நாங்கள், எங் களின் ஏரியா, களம் ஆகியவற்றை உணர்ந்து ‘மாஸ்’ படத்தை எடுத்துள் ளோம்.
வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி என்றால் பாடல்கள் எப்போதுமே தனி அடையாளம் பெற்றுவிடுகிறதே?
சின்ன வயதில் இருந்தே நாங் கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்கள். நான் இயக்குநராக அடையாளம் பெறுவதற்கு முன்பே யுவன் இசையமைப்பாளராக பெரிய கவனத்தை ஈர்த்தவர். ‘சென்னை 28’ படம் வெளிவந்தபோது யுவன் சங்கர் ராஜாவைத் தவிர நாங்கள் எல்லோருமே புதியவர்கள். தியேட் டருக்கு ரசிகர்களை அழைத்து வந்ததே யுவன்தான். தொடர்ந்து நாங்கள் இணையும் போது வெற்றிப் பாடல்களாக அமைவதற்கு கடவுளின் ஆசிர்வாதம்தான் முக்கிய காரணம்.
‘மாஸ்’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால் ஒரு வித கிளாஸியான பார்வை தெரிகிறதே?
படத்தில் எதார்த்தம் அதிகமாக இழையோடும். அதே நேரத்தில் படத்தின் கலர், ஷங்கர் சார் படத்தில் வருவது போல் இருக்கும். அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். அவருடைய மெனக் கெடல் இந்தப்படத்துக்கு பெரிய பலம். மற்றபடி இது பேய் படமா? ஆக்‌ஷன், திரில்லர் வகையா? என் றெல்லாம் நிறைய சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. அதற் காகத்தான் டீஸரைக்கூட அப்படி, இப்படி இருக்கட்டும் என்று ரிலீஸ் செய்திருந்தோம். எல்லோருக்கும் பிடித்த கமர்ஷியல் விஷயங்கள் கொண்ட படமாக இது இருக்கும்.
படத்தில் நயன்தாராவின் பங்களிப்பு பற்றி அதிகம் தெரியவில்லையே?
திறமையான நடிகை. ‘கோவா’ படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என்று போனில் கேட்ட தற்கே, மறுக்காமல் வந்து நடித்து கொடுத்தார். இந்தப் படத்தில் நாய கியாக எந்த அளவுக்கு ‘மாஸ்’ காட்ட வேண்டுமோ, அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் மற்றொரு படத்தின் காப்பியாகவோ அல்லது பாதிப்புடனோ இருக்கிறதே?
தேநீர் கடைக்குச் செல்கிறோம். அங்கே ஒரு விஷயத்தை நான்கு நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். அடுத்து, ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அதில் ஒரு சில இடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத் தும். அதை பெரிதாக்கி நம் வாழ்க் கையோடு இணைத்து ஒரு படைப்பாக கொடுக்க முயற்சிக்கிறோம். இது இயல்புதான். சிறு வயதில் ‘ஜட்ஜ் மெண்ட் நைட்’ என்றொரு படத்தை பார்த்தேன். நான்கு பேர் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொள்வார்கள். அந்தப் படம் அப்படியே மனதில் இருந்தது. ‘சரோஜா’ படம் எழுதியபோது அந்த தாக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. ஆனால், அதை எழுதும்போது மீண்டும் அந்தப்படத்தை பார்க்க வேண் டும் என்று தோன்றவில்லை. சின்ன வயதில் மனதில் பதிந்த அந்த நினைவை மட்டும் வைத்து எழுதி னேன். இங்கே நம் ஸ்டைலில், எப்படி சொல்ல வேண்டுமோ அந்த விதமாக சொன்னோம். இதுவும் ஒருவித இன்ஸ்பிரேஷன்தான்.
பெரிய பட்ஜெட் படங்கள்தான் சிறிய முதலீட்டு படங்களை வெளிவர விடுவதில்லை என்று கோலிவுட்டில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளதே?
சிறிய பட்ஜெட் படங்களை திரை யரங்குக்கு சென்று பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. அதுதான் முதல் பிரச்சினை. இங்கே மக்களை திரையரங்குக்கு கொண்டு வருவதே பெரிய வேலையாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் ஒரே நாளில் ஏழெட்டு சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆனால் என்ன செய்ய முடியும். ‘சென்னை 28’, ‘சரோஜா’ படங்களை ரிலீஸ் செய்ய பெரிய சிரமங்களை நாங்களும் எதிர்கொண்டோம். படத்தை விற்க முடியவில்லை. யுவனின் இசை பிடித் திருந்ததால் ரசிகர்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள். அப்படி உள்ளே வந்தவர்களுக்கு படம் பிடித்ததால் அது சரியான இடத்தை போய் சேர்ந்தது.


நன்றி = த இந்து

Monday, October 20, 2014

ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா? - சிம்பு பேட்டி

உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிம்பு. சர்ச்சையான கேள்வியாக இருந்தால் வேண்டாம் என்னும் நடிகர்கள் மத்தியில், எந்தக் கேள்வி என்றாலும் பளிச்சென்று பதில் சொல்லிவிடுவார் சிம்பு. அவருடன் பேசியதிலிருந்து.. 


‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் எப்போ ரிலீஸ்? 

 
‘வாலு’ படத்தில் ஒரு பாட்டு மட்டும் பாக்கி இருக்கு. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். தேதி முடிவு பண்ணிட்டுச் சொல்றேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். ‘இது நம்ம ஆளு’ முக்கியக் காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. இன்னும் மூணு பாட்டு மட்டும் பாக்கி. ஒரு மாதத்தில் இசை தயாராகிவிடும். 


உங்களோட படங்கள் வருதோ இல்லயோ, ஆனா சர்ச்சைகள் மட்டும் வந்துகிட்டே இருக்கே. உதாரணமா அந்த வீடியோ? 

 
வேறு யாருக்காவது இந்த மாதிரி வந்திருந்தால் அவர் க்ளோஸ். ஆனா, நமக்கு வீடியோ வந்தா அது மாஸ். நான் எதற்கு பீல் பண்ணிட்டு இருக்கணும்? நான் எதுவுமே பண்ணவில்லை என்றாலும், வாராவாரம் என்னைப் பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள். வாராவாரம் எழுதிட்டு, அதுக்குப் பதில் சொல்லுங்க, இதுக்குப் பதில் சொல்லுங்க என்று சொன்னால், நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க? திடீரென்று பாம் வெடிச்சா பதற்றம் இருக்கும். தினமும் பாம் வெடித்துக்கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதுக்குப் பயப்படணும். 


வீடியோ வந்த அன்றைக்கு, என்னிடம் பதற்றமாகக் கேட்டர்கள். “அப்படியா.. வீடியோவில் நான் என்ன பண்றேன்” என்று கேட்டேன். நீங்க ஒரு பொண்ணை கிஸ் பண்றீங்க என்றார்கள். யாரையாவது கத்தி எடுத்துக் குத்திட்டேனா... கிஸ்தானே பண்ணினேன். எல்லாரும் பண்ணினதுதானே. அடுத்த தடவை நல்ல லைட் எஃபெக்ட் எல்லாம் பண்ணி வீடியோ எடுத்துப் போடலாம் என்று இருக்கிறேன். ஆனா அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. 


உதவி செய்யும் விஷயத்திலும் அஜித்தை பாலோ பண்ணுகிறீர்கள் போல? 


 
உதவி பண்ண வேண்டும் என்று தோன்றியது பண்ணினேன். எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது. அஜித் சாரை இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறேன் என்று இல்லை. எப்போதுமே உதவி பண்ணியிருக்கேன். அதைப் பற்றி எல்லாம் சொல்லணும், பேசணும் என்று அவசியமில்லை. 



நயன்தாராவுடன் காதல் பிரிவுக்குப் பிறகு நடிக்கிறீங்க. இப்போ பார்ட்டி போற அளவுக்கு நெருக்கமாகிவிட்டீர்களே? 


 
முதல் விஷயம், நாங்க இரண்டு பேருமே சண்டை எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஒத்துப்போகவில்லை, பிரிந்துவிட்டோம். அவ்வளவுதான். எங்கள் இருவரது மனதிலும், இப்போது எதுவுமே இல்லை. அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க, என் வேலையை நான் பாக்குறேன். அதனால்தான் எங்களால் இணைந்து நடிக்க முடியுது. நான், தனுஷ், நயன்தாரா, அனிருத் எல்லாருமே நட்பா இருக்கோம். அன்றைக்கு எல்லாருமே ப்ரீயா இருந்தோம். வெளியே போனோம். அவ்வளவுதான். 



இந்திப் படங்கள், தயாரிப்பு நிறுவனம் எனப் போய்க்கொண்டிருக்கும் உங்களது நண்பர் தனுஷ் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? 


 
ரொம்ப சந்தோஷப்படுறேன். தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவிற்குப் போனது கொஞ்ச ஆட்கள்தான். அவரது முதல் படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. இப்போ அங்கேயும் தொடர்ச்சியா படங்கள் பண்றார். வேறொரு மொழி பேசும் திரையுலகுக்குப் போய் ஒரு நடிகர் நடிச்சு, பெயர் வாங்குறது பெரிய விஷயம். அந்த விஷயத்தில் தனுஷ் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. 


தங்கச்சி கல்யாணம் முடிந்தவுடன் எனது கல்யாண அறிவிப்பு இருக்கும் என்றீர்கள்? 


 
அப்போ ஒரு பெண்ணைக் காதலித்தேன். இப்போதான் இல்லையே. வீட்டில சொன்னா உடனே கல்யாணம் வைப்பாங்க. யாரை வேண்டுமானாலும் பண்ணுவது கல்யாணம் இல்லயே. என்னைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற ஒரு பெண் வர்ற வரைக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாது. 



இயக்குநர் சிம்பு என்ன ஆனார்? 

 
அடுத்த வருஷம் ஒரு படம் இயக்க இருக்கிறேன். வரும் நாட்களில் நான் எந்த மாதிரி இருப்பேன், படங்கள் பண்ணுவேனா என்பதெல்லாம் சந்தேகமே. சினிமா ஈடுபாடு வரும் காலங்களில் எப்படியிருக்கும் என்பது தெரியாததால், அடுத்த வருஷம் நானே இயக்கி, நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன். 


ஆன்மிகப் பாதையில் இருந்துகொண்டே பார்ட்டிக்குப் போவது நியாயமா? 

 
ஆன்மிகத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன. நான் ஆன்மிகத்திற்குள் போனதுக்குப் பிறகுதான் நிறைய பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பித்தேன். முதல்ல நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் முதல்ல என்னைச் சந்தோஷமா வைச்சுக்கணும். நான் சந்தோஷமா இருந்தால்தான், என்னைச் சுற்றி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்க முடியும். ஆன்மிகத்திற்குள் போன பிறகுதான், நான் வெளியே போக ஆரம்பித்தேன். 



காதலித்துத் தோல்வியடையாமல் இருக்க என்ன பண்ணணும்? 

 
காதல் அப்படின்னாலே இரண்டு பேர் கிடையாது. காதலிக்க ஆரம்பித்த உடனே நீங்க ஒருத்தர்தான் அப்படின்னு ரெண்டு பேருமே உணரணும். ஒருத்தருக்கு அது புரியல, புரிய வைக்க முடியலன்னாலும் அது வேலைக்கு ஆவாது. எல்லா விஷயத்தையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் ஆகணும். 


உங்களுடைய காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் என்ன? 

 
என்னோட காதல் கதையைப் படமா எடுத்தால், பலருக்கு நெஞ்சு வலிதான் வரும். நிறைய சர்ச்சைகள் இருக்கும், சோகங்கள் இருக்கும். என்னோட சோகம் எல்லாம் என்னோடயே இருக்கட்டுமே. 

 

ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா? 

 
யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு பொண்ணு வந்து, எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா பண்ணிப்பேன். 100% எனக்குப் பிடிக்கணும். அதுதான் விஷயம். 


thanx - the hindu

Wednesday, April 02, 2014

நயன்தாரா,சோனாக்ஷி சின்ஹா களவாடிய பொழுதுகள் - பிரபு தேவா.பேட்டி

‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ படப்பிடிப்பில் அஜய்தேவ்கன், பிரபுதேவா
‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ படப்பிடிப்பில் அஜய்தேவ்கன், பிரபுதேவா
பாலிவுட் சினிமாவில் தொடரும் வெற்றிகளால் தமிழில் படம் இயக்க ஆசை இருந்தும் மீண்டு வர முடியாமல் இருக்கிறார், பிரபு தேவா. பாலிவுட்டின் மோஸ்ட் வான்டேட் இயக்குநராக பரபரப்பின் உச்சத்தில் இருந்தாலும் மகன்களின் நினைவு கண்களில் திரையோடினால் உடனே சென்னைக்குப் பறந்து வந்துவிடுகிற தகப்பனாகவும் இருக்கிறார். அப்படிச் சென்னைக்கு வந்தபோது ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து….

ஸ்பைடர்மேன் மாதிரி ஒரு படம் எடுக்கணும்: பிரபுதேவா



முழுக்க நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கத் திட்டமிட்ட உங்கள் படம் என்னாச்சு?


எனக்கும் ஆசைதான். தொடர்ந்து என்னிடம் ஆக் ஷன் படத்தையே எதிர்பார்க்கிறார்கள். நான் இயக்கும் ஆக் ஷன் படங்கள் நல்ல ரிசல்ட் தருவதால் அதையே எதிர்பார்க்கிறார்கள். டான்ஸ் படம் ரொம்பவே சுவாரஸ்யமா செய்யணும். உடன் பணியாற்ற அற்புதமான டான்ஸர் வேணும். அதை முழுமையாகக் கொண்டாடும் ஹீரோ, ஹீரோயின் வேண்டும். தயாரிப்பாளர் நடனத்தைக் காதலிப்பவராக இருக்க வேண்டும். எல்லாம் அமைந்தால் நானும் தயார்.



‘ஆர். ராஜ்குமார்' படத்துக்கு ஆஸ்கர் லைப்ரரியில் இடம், மீண்டும் அக்ஷய் குமாரோடு புதிய படம், ஏ.பி.சி.டி. பார்ட் 2 என்று உங்கள் பாலிவுட் கேரியர் பிரகாசமாக நகர்கிறதே?


தமிழ் உள்பட தென்னிந்தியப் படங்களில் சின்ன வயதிலேயே கேரியரைத் தொடங்கியாச்சு. நிறைய சினிமா நண்பர்கள் சந்திப்பு, நட்பு என்று கொஞ்சம் கொஞ்சமாக மனப் பக்குவம் கிடைத்தது. புதிதாக யாரையும் பார்க்கவில்லை. அனுபவமும், பக்குவமும்தான் பாலிவுட்டில் பயணிக்க உற்சாகத்தையும், உந்து சக்தியையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஏ.பி.சி.டி. பார்ட் 2 ஜூலையில் ஷூட்டிங் ஆரம்பம்.


 மும்பை, அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் நகரங்களில் 2 மாதம் படப்பிடிப்பு இருக்கும். உலக அளவிலான டான்ஸர். முழுக்க 3 டி படம். உண்மைக் கதை. ஒரு நடிகனாக என்னை ஒப்படைக்கப்போகிறேன். திரில்லான அனுபவமாக அமையும்.


‘ஆர்… ராஜ்குமார்' திரைப்படம் ‘ஆஸ்கர் லைப்ரரி' வரைக்கும் போயிருக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்கு.


‘ரவுடி ரதோர்' வெற்றி விழாவில் அக்ஷய் குமாருக்கு விருது கொடுக்கும்போது, படத்தில் சிரிப்பு, கோபம், நடிப்பு எல்லாவற்றிகும் பிரபு தேவாதான் காரணம் என்று பாராட்டை என் பக்கம் திருப்பிவிட்டுவிட்டுப் போகிறார். ‘ஆக் ஷன் ஜாக்ஸன்' படத்தோட இறுதி கட்ட வேலைகள் மட்டும் இருக்கிறது. அக் ஷய் குமாரின் அடுத்த படப் பணிகளைத் தொடங்கிட்டேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சைஃப் அலி கான் படம். கதையை முழுமையாகக் கேட்காமலே அவர் ஆர்வத்தோடு இருக்கார். இப்படி எல்லோரும் என்மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். பொறுப்பும், பயமும்தான் அதிகரிக்கிறது. எல்லா நல்லதுக்கும் கடவுள் ஆசீர்வாதம்தான் காரணம்.



தமிழ்ப் படங்கள் பற்றி…


இங்கே கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய மாற்றமே நடந்திருக்கு. புதியவர்கள் படு திறமைசாலிகளா கலக்கிட்டிருக்காங்க. இவங்களோட போட்டிபோட முடியுமா என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கு.


குழந்தைகள் என்ன படிக்கிறாங்க?


எல்லா அப்பா, அம்மாவுக்கும் அவங்களோட குழந்தைங்கதானே அல்டிமேட். எனக்கும் அப்படித்தான். பெரியவன் வர்ற வருஷம் சிக்ஸ்த் போகிறான். சின்னவன் செகண்ட் ஸ்டாண்டர்ட். டிராயிங், கேம், ஸ்போட்ர்ஸுன்னு வளர்ந்து வர்றாங்க. அவங்களோட எதிர்கால ஆசை என்னன்னுகூட கேட்க வேண்டாம்னு இருக்கேன். அவங்களுக்கு என்னல்லாம் பிடிக்குதோ, அதையெல்லாம் செய்யட்டும்.



உங்களோட கனவுப் படம்?


'தி லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்', 'ஸ்பைடர்மேன்' மாதிரியான ஒரு படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி இதில் எதுவாக அமைந்தாலும் ஓ.கே. கடவுள்தான் அந்த வாய்ப்பைக் கொடுக்கணும்.



நயன்தாராவுடன் சிம்பு சேர்ந்துட்டாரே. நீங்களும் ஏன் ஒரு படத்தில் ஜோடி சேரக் கூடாது?


(சிரிப்புடன்) நம்ம பயணமே இப்போ வேற. முழுக்க மும்பைவாசியாகவே ஆனதால் இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போச்சு. நீங்க சொல்லித்தான் இருவரும் இணைந்து நடிக்கும் விஷயமே எனக்குத் தெரிகிறது. சென்னையில் இருக்கும்போதே இப்படியான விஷயங்களை எல்லாம் ஃபாலோ செய்ய மாட்டேன். காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 1 மணி வரை வேலைகள். போக்குவரத்து டிராபிக் நேரத்தைக்கூட சினிமா குறித்து பேசும் நேரமாக மாற்றிக்கொண்டு திரிகிறேன். இப்படியான பிஸியில் இதெல்லாம். அவசியமே இல்லைனு நினைக்கிறேன்.



தொடர்ந்து உங்க படத்தில் சோனாக்ஷி சின்ஹா இடம் பிடித்துவிடுகிறாரே?


அதற்கு தனி காரணம் எதுவும் இல்லை. என்னோட படங்களில் மிடில் டவுன், வில்லேஜ் லுக் அதிகம் இருக்கும். அதற்கு ஆப்டான நடிகையாக அவங்க பொருந்துவாங்க. இந்தியன் லுக், நல்ல ஆக்டிங் இதெல்லாம்தான் காரணம்.


‘களவாடிய பொழுதுகள்' திரைப்படம் என்னாச்சு?


அழகான காதல் படம். கண்டிப்பா ரிலீஸாகணும் ஆசையா இருக்கேன். தங்கர் எந்த மாதிரியான டென்ஷன்ல இருக்கார்னு தெரியலை. அதனால்தான் அவரிடம் பேசவும் இல்லை. என்னோட டிராவல்ல புதிதாக அமைந்த படம். கண்டிப்பா வரும்.


THANX - THE HINDU

Monday, February 17, 2014

‘நண்பேன்டா' - படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' இரண்டாம்பாகம் -உதயநிதி ஸ்டாலின்

சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாத சமத்துப் பையன் உதயநிதி ஸ்டாலின். அரசியல் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு வார்த்தைகளையும் அளந்து பேசுகிறார்.



 அதே நேரம் மனதில் பட்ட ஆதங்கத்தைப் பளிச்சென்று உடைக்கும் துணிவுக்கும் குறைவில்லை. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி‘ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகமான உதயநிதிக்கு இன்று வெளியாகியிருக்கும் 'இது கதிர்வேலன் காதல்' இரண்டாவது படம். பரிட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் +2 பையனைப் போல ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்... 



முதல் படத்தில் கிடைத்த நல்ல பெயரை இரண்டாவது படம் காப்பாற்றுமா?


 

நிச்சயமா! படத்தில் கதிர்வேலன் என்ற கேரக்டர் பண்ணியிருக்கேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' சரவணன் கேரக்டரருக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர். அப்பாவுக்கு ரொம்ப பயந்த பையன். ஆஞ்சநேய பக்தன். பெண்ணுங்களே பிடிக்காது. இப்படியிருக்குற ஒரு பையன் கோயம்புத்தூர் போறான். அங்க பவித்ராவைப் பாத்து காதலிக்கிறான். நண்பன் உதவுகிறான். இப்படிப் போகும் கதை. 



காதலர்கள், நண்பன் என்பதைத் தவிர வேறு என்ன புதுமை?


 

‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நான், ஹன்சிகா, சந்தானம் இப்படி எங்களுக்குள்ளதான் கதையே போகும். ஆனா, இதுல எல்லாரையும் சுற்றியும் கதை நகரும். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி', ‘சுந்தரபாண்டியன்' படத்தையும் சேர்ந்து பண்ணினா எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் படம். முகம் சுளிக்க வைக்கிற எந்த ஒரு காட்சியும் இருக்காது. படம் முடிச்சு வெளியே வர்றப்போ அப்பா -
பையன் உறவுக்கான படமா பேசப்படும். முழுக்க காதல் கதைன்னு சொல்ல மாட்டேன்.
ஃபேமிலியோட பார்க்க பெஸ்ட்டான படம்.
 



நிஜத்திலும் நீங்க ஆஞ்சநேயர் பக்தனா?


 

நிஜத்துல எனக்கு சாமி பக்தி எல்லாம் கிடையாது. கோவிலுக்கு எல்லாம் போகவே மாட்டேன். சில விஷயங்கள் ஒத்துப் போகும். அவ்வளவுதான்.
 



படத்தில் உங்க குடும்ப விஷயங்களும் நிறைய இடம் பிடிச்சிருக்காமே ?


 

படத்தோட கதை விவாதம் நடந்தப்போ
 எங்கப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கேன். அதை பிரபாகரன் அப்படியே படத்துல வைச்சிட்டார். எனக்கு டப்பிங் பேசறப்போ
கூட இது தெரியல. ‘உங்கப்பா பத்தி சொன்னீங்களே.. அதைத்தான் காட்சியாக மாற்றிவிட்டேன்' அப்படின்னு சொன்னார். நான் தினமும் எங்கப்பாகிட்ட பேசிருவேன், இல்லன்னா நேர்ல பாத்துருவேன். பேசாம ஒரு நாள்கூட இருந்ததில்லை. அதைத்தான் அவர் காட்சியாக வைத்து விட்டார். என்னோட காதலுக்கு முதல் சப்போர்ட் எங்கப்பாதான். என்னோட ஒரிஜினல் கேரக்டரை இந்தப் படத்துல பண்ணல. இயக்குநர் பிரபாகரனுக்கும் காதல் திருமணம்தான். அவரோட கதையா இருக்கலாம்னு நினைக்கிறேன்.
 




இதுக்கு அடுத்து நடிக்கிற படத்திலும் நயன்தாராவோட கூட்டணி தொடருதே? ஏதும் கெமிஸ்ட்ரி விசேஷமா?
 


கெமிஸ்ட்ரியும் இல்ல, பிசிக்ஸும் இல்ல.
என்னோட ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல ஹாரிஸ், சந்தானம், பாலசுப்பிரமணியம் இருந்தாங்க. ‘இது கதிர்வேலன் காதல்'
படத்துலயும் இருக்காங்க. ‘நண்பேன்டா'லயும் இருக்காங்க. அதே மாதிரிதான் அடுத்த படத்துல நயன்தாரா இருக்குறதும்.
ஒரு ஹிட் காம்பினேஷன் திருப்பியும் சேருவதில் தப்பில்லையே. 



நகைச்சுவைக் கதைகளிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?


 

எனக்கு காமெடி ஈசியா வருது, பண்றேன். அடுத்து நடிக்கப்போற ‘நண்பேன்டா' படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' இரண்டாம்பாகம்னு சொல்லலாம். நானும் சந்தானமும் பயங்கர கலாட்டா பண்ற படமாயிருக்கும். மற்ற படங்கள் பண்ணலாம் அப்படிங்குற நம்பிக்கை வரல. நம்பிக்கை வர்றப்போ பண்ணுவேன். 



நடிப்பு, தயாரிப்பு, விநியோகம்னு கலக்குறீங்க. பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டம் இல்லையா?


 

முதல் காரணம் நடிகர்கள் சம்பளம். பெரிய நடிகர்கள் பண்ணினா அவருக்கு ஏற்றாற்போல பெரிய இயக்குநரைத்தான் பாக்கணும். இரண்டாவது காரணம் இப்போ நானே ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னோரு ஹீரோ கிட்ட போய் தேதி கேட்கிறதுக்கு நானே நடிச்சுடுவேன். பெரிய பட்ஜெட் படங்கள் இனிமேல் பண்ண மாட்
டேன்னு சொல்ல மாட்டேன். பண்ணுவேன். ஆனால் வியாபார ரீதியில் நல்லா போக
ணும். அந்த மாதிரி கரெக்ட்டான டீம் அமைஞ்
சுட்டா தயாரிக்கத் தயாரா இருக்கேன். 



வரி விலக்கு பிரச்சனையில் தொடர்ந்து போராடிகிட்டு இருக்கிங்களே?


 

இப்ப இருக்குற வரி விலக்குக் குழுவே வேண்டாம் அப்படின்னு நீதிமன்றத்துல வழக்கு போட்டுருக்கேன். படத்தைப் பார்த்து அவங்களுக்கு முடிவு எடுக்கத் தெரியல. அதனால நீதிமன்றமே ஒரு குழு அமைக்க வேண்டும் அப்படின்னு கேட்டிருக்கேன். நீதி கிடைக்கும்வரை விட மாட்டேன். தயாரிப்பாளர் சங்கத்துலயும் புகார் கொடுத்தேன். யாரும் ஒரு நடவடிக்கையும் எடுக்கல. இப்போ எனக்கு மட்டும் நடக்கல.
அரசாங்கத்திற்கு யாரெல்லாம் எதிரா இருக்காங்களோ எல்லாத்துக்கும் வரி
விலக்கு கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. ஜில்லா, வீரம் இப்படி எந்தப் படத்துக்கும் வரிவிலக்கு கொடுக்கலயே. 


THANX = THE HINDU

Wednesday, November 27, 2013

முன்னணி கில்மா ஜோடி சிம்பு - நயன்தாரா மீண்டும் இணைந்ததன் பின்னணி என்ன?

இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சிம்புகோலிவுட்டின் இப்போதைய பரபரப்பான இயக்குநர் பாண்டிராஜ்தான். தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இவர், இப்போது மேலும் பரபரப்பாக காரணம் சிம்பு - நயன்தாரா. நீண்ட காலமாக பிரிந்திருந்த சிம்புவும் நயன்தாராவும் தன் படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிக்க ஒட்டுமொத்த தமிழகமும் அவரைத் திரும்பிப் பார்த்தது. “இதை எப்படி சாதித்தார்” என்று எல்லோருக்கும் வியப்பு. அந்த வியப்பையே முதல் கேள்வியாக்கி அவரைச் சந்தித்தோம். 



சிம்பு, நயன்தாரா உங்கள் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார்கள்?


 
இதைப்பற்றி நிறைய பேசிவிட்டேன். சிம்பு படத்தை நான் இயக்குவதாக ஒப்புக்கொண்ட அடுத்த நாளிலிருந்தே நாயகியை தேடிக் கொண்டிருந்தோம். இந்தப் படம் சிட்டி, ஐ.டி துறை சார்ந்த களம். படக்குழுவினரோடு பேசிக்கொண்டிருந்தபோது இதில் நாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேச்சு எழுந்தது. அவரிடம் பேசியபோது முதலில் கொஞ்சம் யோசித்தார். பிறகு கதை, சூழல் பிடித்திருக்கவே சம்மதம் தெரிவித்தார். படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. இதில் சிம்பு, சூரி சேர்ந்து கலக்கியிருக்கும் காமெடி காட்சிகளை எடுத்துள்ளோம். டிசம்பர் மாதத்தில் நயன் தாரா, சிம்பு நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். 
 

சிம்பு, சூரி புதுக்கூட்டணி எப்படி இருக்கிறது? 

 
முழுக்க நகர வாழ்க்கையைப் பேசும் படம். நான் பார்த்த, ரசித்த விஷயங்களை நிறைய சேர்த்திருக்கேன். சிம்பு, சூரி, நான் உட்பட எல்லோருக்குக்குமே வேறொரு இமேஜை இந்தப் படம் கொடுக்கும். கேமராமேன் பாலசுப்ரமணியம் கலர்ஃபுல்லாக எடுத்திருக் கிறார். படப்பிடிப்பின்போது சூரி, ‘‘ இவ்வளவு காஸ்ட்லியான சர்ட், பேண்டா? பொதுவா எனக்கு ஒரு கைலியும், டி-சர்ட்டும் கொடுத்து ஏமாத்திடுவாங்களே. இப்போதான் புரமோஷன் கிடைச்சிருக்கு!’’ என்று சிரித் தார். அந்த அளவுக்கு அவரை மாற்றிக் காட்டியிருக்கிறோம். எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் படமாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. 


சாதாரண மனிதர்களை, இயல்பான இடங்களை அழகா படமாக்குறீங்களே? 


 
படம் பார்க்குறவங்க அவங்களோட வாழ்க்கையில், கதை ஒன்றி வருகிற மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப் பேன். இப்படியும் கூட நடக்குமா என்று கேள்வியையோ, சந்தேகத்தையோ எழுப்பக் கூடாது. பார்த்த, கேள்விப்பட்ட படித்த சம்பவங்கள் - இதுதான் என் கதை. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு வார்த்தை விடும்போது அதை நீங்கள் ரசித்தால், உடனே குறிப்பெடுத்துக்கொள்வேன். எங்காவது ஒரு இடத்தில் அது கதையில் ஒட்டிக்கொள்ளும். 
 


ஒரு நல்ல இயக்குநர், தயாரிப்பாளராகவோ நடிகராகவோ பரிணமிக்கும்போது கிரியேட்டி விட்டி பாதிக்கப்படும் என்கிறார்களே? 

 
ஒரு விதத்தில் இது உண்மைதான். இயக்குநரே, தயாரிப்பாளராக இருப்பதில் நல்ல விஷயங்களும் இருக்கிறது. போராட்டம், பணத்தின் மதிப்பு எல்லாவற்றி லும் கூடுதல் கவனம் செலுத்த முடி கிறது. அதேபோல, எடுத்த ஒரு சீன் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அதிக சிரமத்தைக் கொண்டு படம்பிடிக்கலாம். இதே, தயாரிப்பாளர் வேறொருவராக இருக்கும்போது அதை விளக்கமாக சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்துகொள்ளவாவது ஒரு படத்தில் இயக்குநரே தயாரிப்பாளராக இருந்துவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 



மீண்டும் ‘பசங்க’ மாதிரியான படம் எடுப்பீர்களா? 


 
கண்டிப்பாக எடுப்பேன். கிராமத்து குழந்தைகளை மையமாக வைத்து கதை சொன்னது போல, முழுக்க நகரத்து குழந்தைகளை வைத்து படம் பண்ண ஆசை இருக்கிறது. ஒரு பெரிய ஹீரோ படம், அடுத்து ஒரு பசங்க படம் என்று மாறி மாறி பண்ண வேண்டும் என்பதுதான் என் ஆசை. பார்க்கலாம். 



மோசடி, பிரச்னை என்று உங்களை சுற்றி அவ்வப்போது ஏதாவது சுழல்கிறதே? 


 
சிலருக்கு உழைக்க கஷ்டமா இருக்கு. ஓடும் குதிரையில் பயணிக்க விருப்பப்படுகிறார்கள். இங்கே பிச்சைக் காரர்கள் குறைவு. காஸ்ட்லி பிச்சைக்காரர்கள் அதிகம். அவர்களால் உண்டாகும் இடை யூறுகள் இவை. அதை நான் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. 

 
குடும்பம், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? 


 
சில நாட்களுக்கு முன் சினிமா விழாவில் கலந்துகொண்டு வெளிநாடு சென்று திரும்பிய போது, என் மனைவி வசந்திக்கு ஒரு தங்க நகை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். ‘இதெல்லாம் எதற்கு, என்னோடும், குழந்தைகளோடும் 3 மணி நேரம் இருங்க. அதுதான் சர்ப்ரைஸ்!’ என்றார். அப்போது எனக்கு எதுவுமே பேசத் தோணல. ‘கொஞ்ச நாட்கள் பொறுத்திரு. எனக்கும் ஒரு என்ட் கார்டு வரும். சினிமாவில் நானும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவேன். அப்போது நீயே வேலைக்கு போ என்றாலும், என்னால் போக முடியாது. அப்போது உங்களுடன் செலவழிக்கிறேன்’ என்று சொல்லி ஆறுதல் படுத்தினேன். இப்போது குடும்பத்தை பொறுத்தவரைக்கும் நான் குற்றவாளியாகவே இருக்கிறேன். 



இந்த பயணம் எப்படி இருக்கிறது? 


 
இப்போதும் அடிக்கடி ஊருக்கு போய் வருகிறேன். எனக்குப் பிடித்ததே அதுதான். கையெழுத்து போடத்தெரியாத அப்பா, கைரேகை வைக்கத்தெரியாத அம்மா, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமத்திலிருந்து வந்து அடைந்திருக்கும் இந்த இடத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு தானே ஆகணும். என்னமோ தெரியலை, உதவி இயக்குநராக இருந்தபோது வாங்கிய 3000 சம்பளம் கொடுத்த திருப்தி, இப்போது லட்சங்களைப் பார்க்கும்போது இல்லை. அதேபோல, இப்போ வரைக்கும் ஒரு இயக்குநரா பொழுதுபோக்குக்கான படங்களைத்தான் இயக்கியிருப்பதாக நினைக்கிறேன். இன்னும் மனதுக்குப் பிடித்த படமும் கொடுக்கவில்லை. அதை செய்யும் வரைக்கும் இந்தப் பயணம் தொடரும். 

 a



நன்றி - த தமிழ் ஹிந்து

Monday, October 07, 2013

ஆரம்பம் , வேகம் , அதகளம் - அல்டிமேட் ஸ்டார் அஜித் பேட்டி @ த தமிழ் ஹிந்து

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது என்று டூப் போடாமல் நடிப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் நடிகர் அஜித். | 


அஜித், விஷ்ணுவர்தன் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறும். 'பில்லா'வில் இணைந்தபோதே, மீண்டும் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டார்கள். இப்போது 'ஆரம்பம்' மூலம் அது தொடர்ந்திருக்கிறது. தீபாவளி ரிலீஸுக்கு 'ஆரம்பம்' தயாராகிக் கொண்டிருக்க, 2014ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் 'வீரம்' ஷூட்டிங்கில் அஜித் பிஸி. படங்கள், உடல்நிலை, போட்டோகிராபி, பைக் ரேஸ் என அஜித்துடன் The Hindu நாளிதழுக்காக நிகில் ராகவன் பேசியதிலிருந்து... 


" 'ஆரம்பம்', 'வீரம்' படத்துல என்ன ரோல்ல நடிக்கிறீங்க?" 



"இரண்டு படங்கள்லயுமே என்னோட ரோல் வித்தியாசமானது. 'பில்லா', 'மங்காத்தா' படம் மாதிரி 'ஆரம்பம்' படத்துல ரொம்ப ஸ்டைலிஷான ரோல். முந்தைய ஏ.எம்.ரத்னம் படங்கள் மாதிரி, இந்த படத்துலயும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். உலகளாவிய பிரச்சினையை பத்தியும் இந்தப் படம் பேசும்.
'வீரம்' படத்துல அப்படியே 'ஆரம்பம்' படத்திற்கு எதிர்மறையான ரோல். ஆக்ரோஷமான கதாபாத்திரம். முக்கால்வாசி படத்துல என் காஸ்ட்யூம் வேஷ்டிதான். 'அட்டகாசம்' படத்துலதான் கடைசியா இந்த மாதிரி ரோல் பண்ணேன். 'ஆரம்பம்', 'வீரம்' இரண்டு படங்கள்லயுமே ஆக்‌ஷன் ரோல்தான்." 



"ஒரு கதாபாத்திரத்துல நடிக்க ஒப்புக்க, என்னென்ன இருக்கணும்னு எதிர்பார்ப்பீங்க?" 



"நான் ஒரு தொழில்முறை நடிகன். சம்பளம் வாங்கிகிட்டு, இயக்குநர் உருவாக்கியிருக்க கதாபாத்திரத்துல நடிக்கறவன். அதிர்ஷ்டவசமா, இதுவரை நான் நடிச்ச படங்கள்ல எனக்கேத்த ரோல் கிடைச்சுது. ரொமான்டிக் ஹீரோவா ஆரம்பிச்சு, அப்பறம் ஆக்‌ஷன் ரோல்ல நடிச்சு, இப்ப கொஞ்சம் கனமான கதாபாத்திரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். கதைக்கான ஸ்கிரிப்ட்ட நான் நம்பறேன். ஆனா, பல நேரத்துல நாம நினைக்கறது நடக்கறதில்லை. சில நேரம் இயக்குநரோட திறமைய நம்பிதான் இறங்கணும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரெண்டு பேரோடயும் நான் ஒத்துப் போகற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். படம் பண்றதே நம்மளோட பெஸ்ட் என்னவோ அதை குடுக்கத்தான். என்னைப் பொருத்தவரை திருப்தியா படம் பண்ண மனநிறைவு இருக்கணும். எனக்கு அது தான் தேவை." 


 
"நீங்க இயக்குநரின் நடிகரா? படத்திற்கு உங்களின் பங்களிப்பு என்ன?" 


"படத்துல இயக்குநர்களோட நோக்கத்தைதான் நான் நிறைவேத்தறேன். ஒரு நடிகனா, நான் என் ஆலோசனைகளை சொல்லுவேன். இயக்குநரோட கிரியேட்டிவிட்டில தலையிடாம, நாம நடிக்கறதுல நம்ம திறமையை மேம்படுத்திக்கிட்டா, அது படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நினைக்கறேன். ஷூட்டிங் நடக்கற இடத்துல ஈகோ இல்லாம போனாலே போதும், அது வாழ்க்கைய அற்புதமானதாக்கிடும், இல்லையா!" 


"ரொமான்டிக் ஹீரோ, ஆக்‌ஷன் ஹீரோ, வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரம்... எந்த ரோல் உங்களுக்கு மன திருப்தி தந்திருக்கு?" 



"என்னோட இளமைல நிறைய ரொமான்டிக் ஹீரோ ரோல் பண்ணினேன். வயசு கூட கூட, எனக்கு ஏத்த ரோல்களை மட்டுமே ஒத்துக்கறேன்... நரைத்த முடி உள்பட. அதிர்ஷ்டவசமா, மங்காத்தா, பில்லா-2 ரெண்டும் அமைஞ்சது. இப்ப 'ஆரம்பம்', 'வீரம்' படங்கள்லயும் இது தொடருது. வில்லத்தனம் கொண்ட ரோல்ல நடிக்கறதால ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லாம போகாது. எனக்கு சௌகர்யமான ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். வேலை செய்யறேங்கறது தான் எனக்கு உற்சாகத்தை குடுக்குது, அது எந்த கதாபாத்திரமா இருந்தாலும் சரி." 



"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 



"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க. 


 அவங்களை நாங்க மதிக்கறோம். ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது." 
 

"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 



"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன். சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 



"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை... ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க?" 



"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை. என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை." 


"நடிப்பைத் தவிர ஏரோ மாடலிங், போட்டோகிராபின்னு பல தளங்கள்ல விரியுது உங்க விருப்பங்கள்..." 


"ஆமா.. பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். 'ஆரம்பம்', 'வீரம்' ரெண்டு படமும் முடிஞ்ச பிறகு, கால்ல ஒரு சின்ன ஆபரேஷன் பாக்கி இருக்கு, அதை பண்ணிக்கப் போறேன். அதுக்கப்பறம் ஆறு மாசத்துக்கு புது படம் ஒத்துக்கப் போறதில்லை. கால் சரியா குணமாகறதுக்காக மட்டும் இல்லை, அந்த ஆறு மாசத்துல ஏரோ மாடலிங்ல ஈடுபடப்போறேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!" 

 

"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது.. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 



"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க.. அவங்களை நாங்க மதிக்கறோம்.. ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க.. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க.. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை கொடுக்கக் கூடாது." 



"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க.. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 



"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன்.. சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 



"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை.. ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க..?" 


"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை.என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை."


thanx - tamil the hindu


Thursday, September 26, 2013

ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லீ

ஆர்யா-நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமா கிறார் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர். ஒரு படத்தை மக்கள் மத்தியில் எப்படிப் பிரபலப்படுத்தலாம் என்பதில் ‘நிபுணர்’ என்று பெயர் வாங்கியிருக்கும் இவரைச் சந்தித் தோம்.


இயக்குனர் ஷங்கரிடம் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எப்படி அமைந்தது?


"மதுரையில் பிறந்து சென்னையில் படித்து வளர்ந்தவன் நான். பள்ளியில் படிக்கும்போதே டான்ஸ், ஸ்கிட் என கல்சுரல்ஸ் ஆர்வம் அதிகம். சினிமா என்று பள்ளிப்பருவத்திலேயே முடிவு செய்துவிட்டதால் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். அப்போது ‘தனிமரம்’, ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ ஆகிய இரண்டு குறும்படங்களை தயாரித்து, இயக்கினேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே உதவி இயக்குனராக சேர வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். இதற்காக ஷங்கர் சாரை சந்தித்து என் குறும் படங்களைக் கொடுத்தேன். அந்தக் குறும்படங்களைப் பார்த்த அவர் உடனடியாக என்னை உதவி யாளனாகச் சேர்த்துக் கொண்டார். அவரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் வேலை செய்தேன்."


ராஜா ராணி உங்கள் வாழ்க்கையில் நடந்த கதையா?


"என் வாழ்க்கையில் கொஞ்சம். எனது நண்பர்கள் வாழ்க்கையில் கொஞ்சம், என்னைச் சுற்றி இருப்ப வர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் என்று என் கண் முன்னால் நடந்த விஷயங்களைத்தான் கதையாக்கி னேன். உறவினர்கள், நண்பர்கள் என்று அம்மா எந்த கல்யாணத்துக்குப் போனாலும் நானும் தொற்றிக் கொள்வேன். அப்படி ஒரு கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. இது நடந்த சில மாதங்கள் கழித்து "டேய் அட்லீ… அந்தப் பொண்ணு டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டாளம்ப்பா!" என்று ஒருவர் வேதனையோடு சொன்னது என்னை ரொம்பவும் பாதித்தது. நம்மைச் சுத்தி பெரிய பிரச்சனையா ‘காதலும், மணவிலக்கும்’ இருக்கு! அப்படி இருக்கும்போது கதைய எதுக்கு வெளியே தேடணும்னு இதையே எடுத்துகிட்டேன். இதை பிரச்சனையா பேசாம பொழுது போக்கு திரைக் கதைக்குள்ள பிரச்சனைய மறை முகமா பேசியிருக்கேன். ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’



ஆர்யா- நயன்தாராவுக்கு கல்யாணம் என்று பத்திரிகை அடித்து விளம்பரம் பண்ணினது சீட்டிங் இல்லையா?



"கண்டிப்பா இல்லை! என்னதான் நாம காவியம் மாதிரி ஒரு படம் எடுத்தாலும் அது மக்கள்கிட்ட போய் சேரலன்னா இயக்குனர் உட்பட ஒரு 200 பேரோட உழைப்பு வேஸ்ட்! தயாரிப்பாளர் பணம் வேஸ்ட்! இந்தப் படத்தோட முதல் காட்சியே கல்யாணத்துலதான் ஆரம்பிக்குது. அதனாலதான் இந்த விளம்பர உத்தியை கையில எடுத்தேன். நயன் தாரா ஆர்யா இரண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்கிட்டுதான் பண்ணி னோம். இப்போ பாருங்க அதுவே பரபரப்பாயிடுச்சு."


நயன்தாராவுக்கு தனிப்பட்ட வாழ்க் கையில ஏற்பட்ட காதல் தோல்விகள் அவர் நடிப்புல எதிரொலிச்சுருக்கா?


"ஷாக்கடிக்கிற கேள்வி. இதுக்கு கண்டிப்பா நான் பதில் சொல்ல விரும்புறேன். நான் திட்டமிட்டு இந்தப் படதுக்கு அவங்கள தேர்வு செய்யல. நயன்தாராவிடம் தமிழ்பொண்ணுக்குரிய எல்லா ஹோம்லியும் அவங்ககிட்ட இருக்கு! எல்லாருக்குமான கதைய சொல்லும்போது நயன்தாராதான் சரின்னு முடிவுபண்ணினேன். ஆனா எதிர்பாராம அவங்க நடிச்ச பல சோகக் காட்சிகள்ல நிஜ வாழ்க்கையில் அவங்க சந்திச்ச காதல் தோல்வியோட வலியை கண் முன்னால பார்த்தேன். ஒரு பொண்ணோட மனக்காயம் நிஜமாவே பதிவாகியிருக்கிற காட்சிகளை ரசிகர்களும் பார்க்கப் போறங்க!"


thanx - the hindu