Showing posts with label நடிகை. Show all posts
Showing posts with label நடிகை. Show all posts

Friday, November 20, 2015

ஸ்ரீதிவ்யாவுக்கும் ஆனந்திக்கும் போட்டி! - ஆனந்தி பேட்டி

ஆனந்தி
ஆனந்தி


‘விசாரணை’, ‘பண்டிகை’, ‘சாட்டை’ எம்.அன்பழகன் இயக்கத்தில் புதிய படம் என்று தமிழ்த் திரையுலகில் பரபரப்பாக இருக்கிறார் நடிகை ஆனந்தி. ‘தி இந்து’வுக்காக அவரை சந்தித்தோம்.


வெற்றிமாறன் இயக்கத்தில் நீங்கள் நடித்த ‘விசாரணை’ திரைப்படம் வெனீஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளதே?

‘விசாரணை’ படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரம்தான். அதனால் என் அம்மாகூட ஆரம்பத்தில் அதில் நடிக்க வேண்டாம் என்று தடுத்தார். எனக்கு வெற்றிமாறன் சாரின் படங்கள் மீது தனி பிரியம் உண்டு. என்னை தமிழில் அறிமுகப்படுத்திய பிரபுசாலமன் சாரிடம் இந்தப் படத்தில் நடிக்கலாமா? என்று கேட்டேன். அவர்தான், ’சின்ன ரோல் என்றாலும் பரவாயில்லை. மிஸ் பண்ணாமல் நடி’ என்று அறிவுரை கூறினார். அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் ‘விசாரணை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் மூலம் வெற்றிமாறன் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.


‘விசாரணை’ படத்தில் தெலுங்கு பெண்ணாக நடித்ததால் தாய்மொழியான தெலுங்கிலேயே டப்பிங் பேசியுள்ளேன். தமிழ் படத்தில் என் சொந்தக் குரலில் டப்பிங் பேசியது இதுதான் முதல்முறை. அது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ரஜினி சார் படத்தை பாராட்டியதாக சொன்னார்கள். அப்படி பாராட்டப்பட்ட ஒரு படத்தில் என் பங்களிப்பு இருப்பது பெருமையாக இருக்கிறது. பிரபுசாலமன், வெற்றிமாறன், சற்குணம் போன்ற இயக்குநர்கள்தான் என் ஆசிரியர்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன்.


பிரபுசாலமன் தயாரிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில், ‘கயல்’ நாயகன் சந்திரனுடன் ஜோடி சேர்ந்து நீங்கள் நடிக்கும் படம் எந்த அளவில் உள்ளது?

படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அது த்ரில்லர் படம். இயக்கு நர் அன்பழகன் மிகவும் இனிமை யானவர். படப்பிடிப்பில் திட் டவே மாட்டார். இதில் சின்னி ஜெயந்த் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இட்லி கடை நடத்தும், எளிமை யான வாழ்க்கையை பிரதி பலிக்கும் கதாபாத்திரம் எனக்கு. ஹீரோ சந்திரன், சின்னி ஜெயந்த், கிஷோர், ஹரீஸ், நான் என்று எங்கள் 5 பேரை சுற் றித்தான் கதை நகரும். பிரபு சாலமன் தயா ரிப்பு என்பதால் அவரது படங்களின் தனித்துவம் இதிலும் இருக் கும். என் கேரக்டர் தனித்து தெரியும். அதேபோல கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்துவரும் ‘பண்டிகை’ படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்து வருகிறேன். என் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்ற கதாபாத்திரத்தை இதில் செய்திருக்கிறேன்.


படிப்பு முடிந்ததா?

எதற்காகவும் படிப்பை விட்டுக்கொடுக்க மாட்டேன். பிசினஸ் மேனேஜ்மென்ட் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். படிப்பு பிடிக்கும் என்பதற்காக ‘ஷூட்டிங் நேரத்தில்கூட படிப்பீர்களா’ என்று கேட்கக்கூடாது. தேர்வு நேரத்தில் வீட்டில் படித்தாலே நிறைய மதிப்பெண்களை அள்ளலாம்.


சென்னை மழை எல்லோரையும் கலங்கடித்து விட்டதே?

சென்னையை இவ்வளவு சோகமாக பார்க்க பிடிக்கவில்லை. சீக்கிரமே எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்ப கடவுளிடம் பிரார்த்திப்போம். மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நானும் என்னால் முடிந்ததை செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.


‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் கதாபாத்திரத்தை விரும்பித்தான் ஏற்று நடித்தீர்களா?

இயக்குநர் அந்தப் படத்தின் கதையை சொல்லும் போது துணிச்சலான பெண் கதாபாத்திரம் என்று தான் விளக்கம் கொடுத்தார். ஆனால், படத்தில் இப்படி இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதை எல்லாம் சொல்லவில்லை. நல்லவேளையாக படம் பாசிடிவாக சென்றதால் நான் தப்பித்து விட்டேன். இனிமேல் மிகவும் ஆராய்ந்து கதை கேட்க வேண்டும் என்று எனக்கு உணர்த்திய படம் அது. இனி அதுபோன்ற கதைகளில் நடிக்க மாட்டேன்.


கோலிவுட்டில் உங்களுக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கும்தான் போட்டி என்று சொல்கிறார்களே?

போட்டிகள் இருக்கத்தானே வேண்டும். அது தவறான விஷயங்களுக்காக இருந்துவிடக்கூடாது. நானும், திவ்யாவும் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறோம். அவர் எனக்கு நல்ல தோழி. இப்போது தமிழில் கார்த்தி உள்ளிட்ட முக்கியமான ஹீரோக்களோடு அவர் நடித்து வருகிறார். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி உருவானால் அதை ஏற்றுக்கொள்ளவே செய்வேன்.


தமிழில் நடிக்கத் தொடங்கிய பிறகு தெலுங்கில் நடிப்பதை நிறுத்திக்கொண்டீர்களா?

தமிழ்ப் படங்கள் அளவுக்கு இயல்பான, நேர்த்தியான கதாபாத்திரங்கள் தெலுங்கில் அமைவதில்லை. எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரங்கள் தமிழில்தான் அமைகிறது. அதையே தொடர்ந்து செய்வோம் என்பதற்காகவே இங்கே கதைகளை கேட்டு நடித்துவருகிறேன். இதுபோன்ற கதாபாத்திரங்கள் அங்கு அமைந்தால் நடிப்பதைப் பற்றி யோசிக்கலாம்

thanks the hindu

Tuesday, July 14, 2015

முந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்படி? - ஊர்வசி அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மாவாக வலம் வந்துகொண்டிருந்த சரண்யா பொன்வண்ணன் எங்கே போனார் என்று தேடிக்கொண்டிருந்த இடைவெளியில் நகைச்சுவை கொப்புளிக்கும் அம்மாவாக அதிரடி கிளப்பிவருகிறார் ஊர்வசி. அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரியான உற்சாகத்துடன் வலம் வரும் ரகசியம் என்ன?
குடும்பமும் எனக்கு அமைந்த சூழ்நிலையும் முக்கியக் காரணம். எனது கணவர் சிவப்பிரசாத் தரும் ஊக்குவிப்பு இதில் முக்கியமானது. அவருக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் ஒரு ஆர்க்கிடெக்ட். குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். என் மகனுக்கு ஒரு வயது ஆகிறது.
இஷான் பிரஜாபதி என்று சிவபெருமானின் பெயரை வைத்திருக்கிறோம். நீலகண்டன் என்று அழைத்து அவனைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறோம். அவனை விட்டுவிட்டுப் படப்பிடிப்புகளுக்குச் செல்ல நான் விருப்பமில்லை. மகனையும் படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் செல்லக் கணவர் அனுமதித்தார். அதன் பிறகு தொடர்ந்து நடித்துவருகிறேன்.
சமீபத்தில் உங்களை ஆச்சரியப்படுத்திய பாராட்டு எது?
உத்தம வில்லன் படத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகரின் மனைவியாக நடித்தேன். அந்தப் படத்திற்காகப் பாராட்டுகள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேர்மாறாக போகுமிடமெல்லாம் “நீங்க வசந்தோட அம்மாவா கலக்கீட்டிங்க. உங்களாலதான் இதுமாதிரி கேரக்டர்ஸ் பண்ண முடியும்” என்று ஓடிவந்து கைகுலுக்கிப் பாராட்டினார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள். அப்போதுதான் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் எனது கதாபாத்திரத்தின் வீச்சை உணர்ந்துகொண்டேன்.
அந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அதில் வந்த அம்மா கதாபாத்திரம் எனக்குச் சட்டென்று பிடித்துப்போனது. காரணம் அம்மாக்கள் எல்லோருமே பிள்ளைகளுக்காகவே தங்களை அறிவாளிகளாக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டவர்கள். பொதுவாக சினிமாவில் வரும் அம்மா கதாபாத்திரம் என்பது மகனின் காதலுக்கு ஆதரவு கொடுக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் அப்படியே தலைகீழ். மகனின் அறிவியல் மூளைக்கு ஈடுகொடுக்கும் அந்தத் தாய் அவனுக்கு இணையாக அறிவியல் வார்த்தைகளையும் விஷயங்களையும் பேசியபோது, “அட! இந்த மாதிரி அம்மாக்கள் எவ்வளவு பேரை நாம பார்க்கிறோம்” என்று எனது கதாபாத்திரத்தை நெருக்கமாக உணர்ந்ததால் கிடைத்த வெற்றி இது.
முந்தானை முடிச்சு படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்து விட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அந்தப் படத்தில் நான் ஏற்ற பரிமளம் கதாபாத்திரம்தான் சினிமாவில் எனது பாதையைத் தீர்மானித்தது. கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் பொய், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் அறியாமை, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் தியாகம் என்று வயதுக்கு மீறிய உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கதாபாத்திரம் அது. என்ன வேடம் கொடுத்தாலும் இவர் தாங்குவார் என்ற பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதுவே ‘ஒருகை ஓசை’ படத்தில் வந்த சோகமான அஸ்வினியாக நான் முதலில் அறிமுகமாகியிருந்தால், முந்தானை முடிச்சு மாதிரி படம் பண்ண எனக்குப் பல ஆண்டுகள் பிடித்திருக்கும். ரசிகர்கள் நம்மை கதாபாத்திரங்களாகவே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நான் கிராமப் பகுதிகளுக்கு படப்பிடிப்புக்குச் சென்றால் “பச்சக் குழந்தையைப் போட்டு இப்படித் தாண்டிட்டியேம்மா...!? அந்தக் குழந்தை இப்போ நல்லா இருக்கா? ” என்று 30 வருடங்களுக்குப் பிறகு கேட்டவர்களும் உண்டு.
நீங்கள் ஏற்கும் அம்மா கதாபாத்திரங்கள் மீது நகைச்சுவையின் நிழல் படிந்துவிடுவதற்கு என்ன காரணம்?
நான் மட்டுமே காரணம். ஒரு பெண் நடிகர் நிஜ வாழ்க்கையில் தாயாக மாறிய பிறகு அவளுக்கு சினிமாவில் கிடைக்கும் அதிகபட்ச புரமோஷன் அம்மா கேரக்டர்கள்தான். அக்கா அண்ணி எல்லாம் நடுவில் வரலாம். ஆனால் நிரந்தரமான இடம் என்பது அம்மாதான். அந்த அம்மாவுக்கான பாவம் என்ன என்பதை நமது கலாச்சாரம் ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருக்கிறது. புருஷனுக்காக அழணும், குழந்தைகளுக்காக உழைக்கணும்.
அவ்வளவுதான். இதிலிருந்து மாறுபடுவதற்கு ஒரே வழி அம்மா கதாபாத்திரத்தில் நகைச்சுவையை இழையோடச் செய்வதுதான் என்று நினைத்தேன். இளம் கதாநாயகியாக நடித்துவந்த காலத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மிகவும் சங்கடப்பட்டேன். அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக கொஞ்சம் நகைச்சுவையைக் கலக்க ஆரம்பித்தேன். அதுவே எனக்கு முத்திரையாகிவிட்டது. அதையே அம்மா கதாபாத்திரங்களுக்கும் இடம்மாற்றினேன்.
இன்றைய அம்மாக்கள் கணவன், குழந்தைகளால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக சிரிப்பதையே மறந்துகொண்டு வருகிறார்கள். எனது கதாபாத்திரங்களாவது சிரிப்பை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கட்டும் என்றுதான் நான் நகைச்சுவையை விட மறுக்கிறேன்.
25 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்த பல ஆண் நடிகர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும்போது உங்களைப் போன்ற பெண் நடிகர்களின் சாதனைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்று நினைத்திருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. ஏனென்றால் சினிமா தொடங்கியது முதலே ஆண்களின் கையிலிருக்கும் ஒரு கலை. அதில் பெண் என்பவளுக்கு எப்போதுமே இரண்டாவது இடம்தான். சினிமாவில் ஆண்களின் உழைப்பில் பெண்கள் பங்கேற்றுக்கொள்கிறார்கள் அவ்வளவுதான். அதேபோல ஆண்களுடைய விழாக்கள் நடத்தும்போதும் அங்கே அலங்கரிப்புக்காக நிற்கிறவர்கள் பெண்கள். இந்தப் பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்களது சாதனைகள் நினைத்துப் பார்க்கப்படும்.
உங்களை பாதித்த கதாநாயகிகள் என்று யாரைச் சொல்வீர்கள்?
என்னை யாரும் பாதிக்கவில்லை. ஆனால் பலரை மனதார ரசித்திருக்கிறேன். அந்த வரிசையில் சாவித்ரி அம்மாதான் எனக்கு மிகவும் பிடித்தவர். மனோரமா ஆச்சி. சுகுமாரி, ராதிகாவை ஆல்ரவுண்டர் என்ற வகையில் மிகவும் பிடிக்கும், அதேபோல் சரிதா, ஸ்ரீதேவி. பானுப்ரியா, ரேவதி ஆகியோரை தனித்து முத்திரை பதித்தவர்கள் என்பேன்.
உங்கள் முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனும் நீங்களும் தற்போது நண்பர்களாக இருக்கிறீர்களா?
கிடையவே கிடையாது. கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்த பின்னர் ஒரு கட்டத்துக்குப் பிறகு முன்னாள் கணவனும் மனைவியும் இன்னாள் நண்பர்கள் ஆகிவிடுவது யதார்த்தமானது. ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இதுவரை வாய்க்கவில்லை. என்னை எதிரியாக நினைத்துதான் பிரிய முடிவுசெய்தார். எனக்கு மனதளவில் பெரும் பாதிப்பு உண்டாக்கிய பிறகே என்னைப் பிரிந்தார்.
என் மகளின் நலனுக்காக அவர் மாற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். படப்பிடிப்புக்காக கேரளா செல்லும்போதெல்லாம் என் மகளுடன் தங்குவேன். தினசரி அவளுடன் போனில் பேசாவிட்டால் எனக்கு அந்த நாள் ஓடாது.
சமீபத்தில் உங்களைப் பற்றி வந்த சர்ச்சையான செய்தி மற்றும் வீடியோ பற்றி எதுவும் கூற விரும்புகிறீர்களா?
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று ஒப்புக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இரவுபகலாக நடந்த படப்பிடிப்பிலிருந்து அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு ஓடோடி வந்தேன். கொடுத்த தலைப்பில் சரியாகப் பேசினேன். அந்த நேர்மைக்குக்கூட இன்று மதிப்பில்லை. இதைத் தவிர இப்போதைக்கு நான் எதையும் கூற விரும்பவில்லை.
யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க விரும்பும் எவரும் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் அழுக்குகளை முதலில் களைந்துவிட்டு வரட்டும். இது சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கும் பொருந்தும்.


thanx - the hindu

Monday, May 04, 2015

சிம்பு வின் மூன்றாவது முன்னாள் காதலி பர பரப்புப்பேட்டி

விஜய், சிம்பு, ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. இப்போதெல்லாம் ஹன்சிகாவுக்கு நன்றாக தமிழ் பேச வருகிறது. “ஹலோ...நல்லா இருக்கீங்களா?” என்று அழகுத் தமிழில் கைகுலுக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
இந்த ஆண்டு வாலு, ரோமியோ ஜூலியட், உயிரே உயிரே, இதயம் முரளி, புலி என்று வரிசையாக உங்களது படங்கள் வெளியாக இருக்கின்றனவே?
நன்றி. ஐந்தாறு வருடங்கள் கழித்தும் இதே மாதிரி பரபரப்பாக நான் இருக்க வேண்டும். ஹன்சிகா நல்ல நடிகை. ஹன்சிகா நடிக்கிற படம் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நம்ப வேண்டும். இதுதான் என் ஆசை.
கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கற்றுக்கொண்டுவிட்டீர்களே?
ஆமாம். வணக்கம். நன்றி. எப்படி இருக்கீங்க என்பதுபோன்ற வார்த்தைகளைத் தாண்டி நிறைய கற்றுக்கிட்டே இருக்கேன். மேடையில் பேச சின்னதாகத் தயங்குகிறேன். குழந்தைகளிடத்தில் தமிழில் பேசும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழில் எனக்கு அக்கா என்ற வார்த்தை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அக்காவா? அப்படி உங்களை யார் அழைக்கிறார்கள்?
நான் தத்தெடுத்து வளர்க்கிற 30 குழந்தைகளும் என்னை அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். அந்த வார்த்தை எனக்கு மிகவும் அன்பான வார்த்தையாகத் தெரிகிறது.
முப்பது குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கான நோக்கம்?
என் அம்மா ஒரு டாக்டர். காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குடிசைப் பகுதிகள் என எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வார். சின்ன வயதில் இருந்தே அம்மா சொல்லி சொல்லி வளர்த்தது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் என் அம்மா மாதிரி முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நடிகை ஆனதும் எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 30 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
என்ன மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
நான் தத்தெடுத்துக்கொண்ட குழந்தைகளின் கல்விக் கட்டணம், உடைகள், விளையாட்டுப் பொருட்கள், திறமைகளை வளர்ப்பதற்கான பயிற்சிகள் என அனைத்துச் செலவுகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நான் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறேன்.
அவர்கள் என்னைப் பார்த்தவுடன் “ ஹய்.. அக்கா” என்று சந்தோஷமாக கோரஸ் பாடுவதைப் போல அழைப்பார்கள். அவர்கள் அன்பில் நான் கரைகிறேன். பொம்மைகள் வாங்கிக் கொடுத்து நானும் சேர்ந்து விளையாடுகிறேன். தென்னிந்திய உடுப்பி சாப்பாடு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். என் பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடுவதில் அலாதி ஆர்வம் உண்டு.
குழந்தைகளுக்கு மட்டும்தான் உதவி செய்வீர்களா?
அப்படியில்லை. என் சக்திக்கு உட்பட்டு தேவைப்படும் யாருக்கும் உதவத் தயார். கடந்த வருடம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டேன். தற்போது முதியோர்களுக்காக ஒரு இல்லம் கட்ட விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்காக ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்ற முயற்சியும் இருக்கிறது.
சினிமாவில் இப்போது என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
10 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இந்தியில் அமிதாப், ஹிருத்திக் ரோஷனோடு நடிப்பு, 15 வயதில் ஹீரோயின் என எனக்கு எல்லாமே நன்றாக அமைந்தன. அரண்மனை படம் என்னை நடிக்கத் தெரிந்த நடிகையாக அடையாளப்படுத்தியது. வாலு படத்தில் ப்ரியா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதில் என் நடிப்பில் இன்னும் முன்னேற்றத்தைப் பார்ப்பீர்கள். ரோமியோ ஜூலியட் படத்தில் சேட்டை செய்யும் குறும்புப் பெண்ணாக நடித்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்தும் ஹன்சிகா நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். கேமராதான் என் உலகம். ஒரு நடிகையா, ஒரு படத்துக்கு நூறு சதவிகிதம் உண்மையாக நடிப்பதே பெரிய சாதனைதான்.
மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பீர்களா?
தமிழ், தெலுங்கில் நல்ல நடிகையாக வர வேண்டும். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக ஜொலிக்க வேண்டும். இதுதான் என் இலக்கு. இந்தி சினிமாவுக்குப் போகும் எண்ணம் இல்லை. தமிழ் சினிமாவின் தரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இங்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழ் சினிமாவில் நானும் இருப்பது எனக்குப் பெருமை.
படத்துக்குப் படம் அழகாகத் தெரிகிறீர்களே, அந்த ரகசியம் என்ன?
நன்றி. நான் எதற்கும் கவலைப்படுவதில்லை, டென்ஷன் ஆவதில்லை, எனக்குக் கோபமே வராது. திட்டினால்கூட, நான் சிரித்துக்கொண்டேதான் இருப்பேன். என் மனசுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன்.
உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் யார்?
என் அம்மாதான். நான், பிரபல நடிகையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். என்னை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது, நம்பிக்கை கொடுத்தது, சாதிக்கத் தூண்டியது எல்லாம் என் அம்மாதான்.
காதலை முறித்துக் கொண்ட பிறகு வாலு படப் பாடல் காட்சியில் நீங்களும், சிம்புவும் இணைந்து நடித்திருக்கிறீர்களே... (கேள்வியை முடிக்கும் முன்பே)
ஸாரி.. இந்தக் கேள்வியை மறந்திடுங்க. சிம்பு நல்ல நடிகர். அவ்வளவுதான். நன்றி.


நன்றி  - த இந்து

Thursday, April 23, 2015

‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான்ட்ரா சிறப்புப் பேட்டி

இளம் கதாநாயகி ரெஜினா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமும் தமிழ்நாடு. அள்ளிச் சூடிக்கொண்டதோ தெலுங்குத் திரையுலகை. தமிழில் ‘ராஜதந்திரம்’ தந்த வெற்றிக் களிப்பு முகத்தில் மின்ன ‘சுப்பிரமணியம் ஃபார் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டுக்கொண்டிருந்தவருடன். ஒரு குறும் பேட்டி:
தமிழ்ப் பெண்ணாக இருந்தும் தமிழ் சினிமாவில் நடிக்க பிகு செய்கிறீர்கள் போலத் தெரிகிறது..
திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்ய எனக்குப் பிடிக்காது. என் அதிர்ஷ்டமோ, என்னவோ இயல்பாக, யதார்த்தமாகத் தொடும் காரியம்தான் எனக்குச் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது. தெலுங்கில் கமர்ஷியல் ஃபார்முலா படங்களில் நடித்தால் போதும். நம்ம ஊரில் நல்ல கதை கொண்ட யதார்த்தமான படத்தில் நடித்தால் மட்டும்தான் கவனிப்பாங்க. அதனால்தான் இங்கே நிதானமாகப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் அறிமுகமான ‘கண்ட நாள் முதல்’ படம் வெளியாகிப் பத்து ஆண்டுகள் ஆகிறதே?
இந்நேரம் தமிழில் ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருக்க வேண்டாமா என்றுதானே கேட்கவருகிறீர்கள்? ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘கண்ட நாள் முதல்’ படம் வந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் பிஸியானாலும் எந்தக் காரணத்திற்காகவும் படிப்பை விடவே இல்லை.
பி.எஸ்.சி. சைக்காலஜி வரைக்கும் தொடர்ந்தேன். அப்படிப் பார்த்தால் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் எனது படிப்புக்காகவே டெடிகேட் செய்திருக்கிறேன். இந்த இடைவெளியில் நல்ல கதைகளை எப்படித் தேர்வு செய்வது என்ற ரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்குப் பிறகு ‘ராஜதந்திரம்’. இடைவெளி இருந்தாலும் ‘பளிச்’சென இடம்பிடித்துவிட்டீர்களே?
‘ராஜதந்திரம்’ படத்துக்கு நட்சத்திரத் தேர்வு முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில்தான் அந்தக் குழுவினருடன் இணைந்தேன். அவர்கள் திடீரென்று அழைத்த நேரத்தில் தெலுங்கில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியும் இருந்தேன். ஆனால் கதையைக் கேட்ட பிறகு சில தந்திரங்கள் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.
அந்த டீம் என்னைக் கவர்ந்ததும் அதில் நடிக்க முக்கியமான ஒரு காரணம். கேடி பில்லாவுக்குப் பிறகுகூட என்னை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு நிஜமான வெற்றிக்குப் பிறகு எல்லோரும் நம்மை எப்படிக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
உங்களைப் போலவே தெலுங்கிலிருந்து வந்த ஹன்சிகா தற்போது இங்கே முன்னணி கதாநாயகர்களின் படங்களில் இடம்பிடித்துவிடுகிறாரே?
என் கையில் எதுவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது மட்டும்தான் என் வேலை. இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினா, மூன்றாவது ஹீரோயினா என்பதைக்கூட நான் பார்ப்பதில்லை. தேடி வரும் கேரக்டர் புதிதாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் நான் பார்க்கிறேன். மற்றபடி பெரிய இயக்குநர்கள், முன்னணி நாயகர்கள் படங்கள் எல்லாம் அதுவாக அமைந்தால்தான். பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியார், ஜோதிகா என்று திருமணதுக்குப் பிறகு திரைக்கு மறுபிரவேசம் செய்து கலக்க ஆரம்பித்திருக்கும் முன்னாள் கதாநாயகிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இன்றைய ஹீரோயின்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள்தான் சினிமா ஆயுள் என்ற நிலை மாறி வருகிறது. திருமணப் பேச்சு தொடங்கியதுமே நடிகைகள் பிரேக் எடுத்துக்கொள்ளும் சூழல் முற்றிலும் மறைந்துவிட்டது. நடிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது, எங்களைப் போன்ற புதிய தலைமுறை நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனால் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையை இல்லாமல் செய்கிறது. குடும்பத்தின் முழுமையான ஆதரவும், சுதந்திரமும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் இவங்க மூணு பேருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.
நீங்கள் டிரெக்கிங் ப்ரியையாமே?
ஆமாம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஏலகிரி மலைப்பகுதிக்குக் கிளம்பிவிடுவேன். இந்த ஆண்டு கோடைகாலம் முழுவதும் அமெரிக்காவில் ‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கப்போகிறேன். அங்கே டிரெக்கிங் செய்ய உகந்த இடத்தைப் பிரவுஸ் செய்து கொண்டிருக்கிறேன். குளிர்ச்சியான இடம் விரைவில் சிக்கும். அப்டேட்டுக்கு என் ட்விட்டரைச் செக் பண்ணுங்கள்.




நன்றி - த இந்து 

Sunday, September 21, 2014

ஒரு லட்சம் லைக்குகளை அள்ளிய நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக் நிலைத்தகவல்


நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின் பார்வையை பதிவு செய்திருக்கும் அந்த நிலைத்தகவல் அப்படியே:


 
என்னுடைய பார்வை... 


ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்பதற்கு, ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கிறது. அது அவள் "ஆம்!" என்று சொல்கிற பொழுது மட்டுமே.


இந்த வரியை நான் மேலே எழுதுவதன் காரணம், நாமெல்லாம் இந்தியாவில் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொண்டிருக்கிற பார்வையை மாற்ற தீவிரமாக பாடுபடுகிறோம் என்பதே காரணம். இப்படி செய்வதன் மூலம் சமூகத்தை சமத்துவமின்மை, வன்புணர்வு, பயம், வலி அற்ற உலகை நோக்கி நடை போடவே நாம் விரும்புகிறோம். 


என்னுடைய தொழிலைப் பற்றி நான் எதுவும் தெரியாத அப்பாவியாக இல்லை. அது வெவ்வேறு விஷயங்களை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறது. சில வேடங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு நடிக்க வேண்டியிருக்கலாம், இன்னொன்று முழுமையாக நிர்வாணமாக நடிக்க வேண்டிய பாத்திரமாக இருக்கலாம். இதில் எதை நான் ஏற்று நடிக்க வேண்டும் என்பது என்னுடைய தேர்வு மட்டுமே. அது ஒரு வேடம் மட்டுமே, அதுவே உண்மை கிடையாது. எந்த வேடத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டியது என்னுடைய வேலை. 


நான் இதைத் தெளிவாக சொல்கிறேனா என்பதே என்னுடைய கவலை. அதை ஷாருக்கானின் 8 பேக் அல்லது வேறொரு ஆண் அல்லது பெண்ணின் உடலமைப்போடு குழப்பிக்கொள்ளக்கூடாது. பெண் சமத்துவம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக நாம் உழைத்துக்கொண்டிருக்கிற பொழுது இப்படிப்பட்ட கீழ்மையான தந்திரங்களின் மூலம் வாசகனின் கவனத்தை ஈர்ப்பதையே நான் எதிர்க்கிறேன். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் பெண்கள் முன்னேறுவதை கொண்டாடும் அதே சமயம் நிழல் மற்றும் நிஜ வாழ்க்கையை நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒரு பழைய கட்டுரையைத் தோண்டி எடுத்து “OMG: Deepika’s Cleavage Show!” என்று தலைப்பிட்டு வாசகர்களை ஈர்ப்பது பின்னோக்கி செலுத்தும் சிந்தனையை பெருக்கவே நம்முடைய தாக்கத்தை பயன்படுத்திக்கொள்வது ஆகும். 



ஒரு நடிகையின் உள்ளாடை உள்ளே எட்டிப்பார்க்க தூண்டுகிறது என்றால், அவள் அதை திட்டமிட்டு செய்யவில்லை. அதை ஜூம் செய்தோ, வட்டமிட்டு, அம்புக்குறியிட்டோ, புள்ளி வைத்தோ காட்டுவதைவிட அவளுக்கு ஏன் நீங்கள் கொஞ்சம் மரியாதை தரக்கூடாது. அதை அப்படியே விட்டுவிட்டு நகர்வதை விட்டு ஏன் அதை தலைப்புச்செய்தியாக ஆக்குகிறீர்கள்? நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஆம் நாங்கள் சினிமாவில் கதாநாயகர்களின் 8 பேக்ஸை ரசிக்கிறோம், விரும்புகிறோம், ஜொள்ளு வடிக்கிறோம். ஆனால், நாங்கள் ஆண்களின் கவட்டையை அவர் பொதுமக்கள் முன்னர் தோன்றும் பொழுது பெரிதுபடுத்திக்காட்டி அதை மலிவான தலைப்புச்செய்தி ஆக்குகிறோமா? 



என் உடலைக் கொண்டாடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆன் ஸ்க்ரீனில் எந்த வேடத்திலும் நடிக்க நான் வெட்கப்பட்டதில்லை. என் அடுத்த படத்தில் நான் உண்மையில் பார் டான்சராக நடிக்கிறேன். அந்த வேடத்தில் ஆண்களின் காம உணர்வுகளை தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக தூண்டிவிட்டு சம்பாதிக்கிற பெண் வேடத்தில் தான் நடிக்கிறேன். ஓர் உண்மையான நபரை போகப்பொருளாக மாற்றுவதற்கும், அவர் நடிக்கிற வேடத்தை அப்படி அணுகுவதற்கும் வேறுபாடு இருப்பதாகவே பார்க்கிறேன். என்னுடைய கதாப்பாத்திரங்களை அவை சுவராசியமாக இருக்குமென்றால் கூராய்வு செய்யுங்கள். அந்தப் பாத்திரத்தின் மார்பக அளவு, கால் நீளம் ஆகியவற்றை அந்த வேடத்தை அது ஏற்றுக்கொள்ளுமாறு ஆக்குமென்றால் நிச்சயமாக விவாதியுங்கள். ஒரு பெண்ணை திரைக்கு வெளியே மதியுங்கள் என்று தான் கேட்கிறேன். 



இது மார்பகம், ஆணுறுப்பு, மற்ற பாகங்கள் பற்றிய ரிப்போர்டிங் பற்றியது அல்ல. எந்தச் சூழலில் இந்த ரிப்போர்டிங் நிகழ்ந்தது என்பதைப் பற்றியது. ஒரு தலைப்பு விற்க வேண்டுமென்பதற்காகவே இப்படி செயல்பட்டுள்ளார்கள். அதுவும் பெண்கள் மீதான பார்வை மாற வேண்டிய அவசரத்தேவை இருக்கும் இந்த காலத்தில் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். 



இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக்கொள்கிறேன். எல்லாருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. இதை மேலும் கொண்டு சேர்த்தால் அது பெற வேண்டிய கவனத்தைவிட அதிகம் பெற்று, இன்னமும் என் வாதங்கள் திரிக்கப்பட்டும், தவறாக புரிந்துகொள்ளப்பட்டும் தேவையில்லாத தலைப்பு இன்னமும் அதிகமாக விற்பனையாகவே உதவும் என்று எண்ணுகிறேன். 


இவையெல்லாவற்றையும் சொல்லிய பின்னர் நமக்குள் அன்பு, கண்ணியம், மரியாதை ஆகியவற்றை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வோம். 


நன்றாக வாழ்வோம், அடிக்கடி சிரிப்போம், எல்லையில்லாமல் அன்பு செய்வோம் - தீபிகா படுகோன்

 
தமிழில்: பூ.கொ.சரவணன்

Wednesday, December 26, 2012

ஆரோகணம் - நடிகை விஜி பேட்டி

நடிகை விஜி பேட்டி

சின்னத்திரையும் சினிமாவும் ஒண்ணுதான்!

விஜய் கோபால்

ஆரோகணம்படம் மூலம் நல்ல நடிகை என பெயர் பெற்றுவிட்டார். இந்த சந்தோஷம் எப்படி இருக்கு என்றோம்.
நான் கடைசியா நடிச்சதுஅண்ணா மலைதொடர். அது முடிந்ததும் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஒரு தாயாக என் மகள்கள் சுரக்ஷா, லவ்லின் இருவரையும் கவனிக்க வேண்டும். கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும் என்பதிலேயே கவனம் இருந்தது. அவர்களோட படிப்பு எனக்கு முக்கியம். இப்போ இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்து போகும்வரை தங்களைப் பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால்தான்அழகிதொடரில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இயக்குனர் வி.சி.ரவி என்னிடம் வந்து கதை சொன்னபோது, இரவு 10.30 மணிக்கு வரும் சீரியலா? மக்களிடம் போய் சேருமா? என யோசித்தேன்.
நல்ல கதை. நிச்சயம் ரசிப்பார்கள் என்றார்இயக்குனர். குழப்பத்தோடு அக்கா சரிதாவிடம் போய்க் கேட்டேன்.
உனக்கு ஏத்த கதை. தைரியமா பண்ணுன்னு சொன்னா. கணவர், மகள் எல்லோரும் உற்சாகப்படுத்தினாங்க. இப்போது இந்தத் தொடர் பார்த்துட்டுப் பக்கத்து வீட்டு குடும்பத்தை ஜன்னல் திறந்து பார்ப்பதுபோல இருக்கு என பாராட்டுகிறார்கள்.
ஒரு தடவை நீலகிரி போயிருந்தேன். அந்த ஊரில் மக்கள் இரவு 8.30 மணிக்கே தூங்கிடுவாங்களாம். அழகி தொடர் பார்க்க இரவு 10.30 க்கு அலாரம் வைத்து, எழுந்து பார்க்கிறோம் என்றார்கள். சிங்கப்பூர், மலேசியா, என வெளிநாடுகளில் இருந்து பாராட்டு. நல்ல வேளை மிஸ் பண்ண இருந்தேன்.

அழகிசீரியல் பார்த்துட்டு தான் லட்சுமி ராமகிருஷ்ணன்ஆரோகணம்படத்துக்கு தேர்வு செய்தாரா?
சூர்யாவின்நந்தா’, பரத்தின்எம்மகன்போன்ற படங்களுக்கு அழைப்புகள் வந்தன. அப்பவும் குழந்தைகளுக்காக நடிக்கலே. ஒரு பங்ஷன்லே லட்சுமி ராமகிருஷ்ணன் என்னைப் பார்த்தாங்க. படத்திலே நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. கதை என்னன்னு கேட்டேன். ஸ்கிரிப்ட் கொடுத்து விட்டாங்க. ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.
இப்பவும் அக்கா சரிதாகிட்டே போய் ஒபினியன் கேட்டேன். இது ரீச் ஆகும் நடின்னு சொன்னாங்க. உடனே .கே. சொன்னேன். கோயம்பேடு, மைலாப்பூர் என பல பகுதிகளில் 20 நாட்கள் படமாக்கினார்கள். கோயம்பேடு பகுதியில் படமாக்கியபோது பல பெண்கள்அழகிசீரியல் நடிப்பைப் பாராட்டினாங்க."
சினிமாவில் இருந்து நடிகைகள் சின்னத் திரைக்கும் வருவாங்க. நீங்கள் சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு போகிறீர்கள்?
நல்ல கதை எங்கிருந்தாலும் அதை தேடி பயணிப்பதில் தப்பு இல்லை. சின்னத்திரை, சினிமா இரண்டுமே ஒன்றுதான். கதைதான் பேசவேண்டும்."


நன்றி - கல்கி , புலவர் தருமி 

Thursday, November 22, 2012

மங்கையர் திலகம் சோனாவும் , ஆண்கள் பாதுகாப்பு சங்கமும்

நடிகை சோனா மீது ராணிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு

 
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவர் பா.ம.க.வின் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் வக்கீல் ஜானகிராமன், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆண்களை இழிவாக பேசியதாக திரைப்பட நடிகை சோனா மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள குற்ற முறையீட்டில் கூறியிருப்பதாவது:- 

ஆம்பளைங்க எனக்கு டிஷ்யூ பேப்பர்தான் எனும் தலைப்பில் வந்துள்ள நடிகை சோனா பேட்டியானது ஆண் இனத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், கேவலப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாக, அருவருக்கதக்கதாகவும் அமைந்துள்ளது. 

ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் முட்டாள்தனம் என புனிதமான திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி பேட்டியளித்துள்ளார்.

தமிழ் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும், நாகரீகத்திற்கும் முன் உதாரணமாக திகழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கருத்துகளால் பண்பாடு, கலாசாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் மீது பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்த ஆண் இனத்திற்கும் உள்நோக்கம் கொண்டு அவதூறாக பேசியுள்ளார். 


நடிகை சோனா சினிமா துறையில் பிரபலமானவர் என்பதால் இந்த கருத்துகள் பெண்கள் மத்தியில் எளிதில் செல்ல வாய்ப்புள்ளது. பின் விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளளது.  நடிகை சோனா மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200-ன்கீழ் கோப்பில் எடுத்துக்கொண்டு நடிகை சோனாவிற்கு அழைப்பாணை அனுப்பி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 292 (1) (2), 293, 294, 499, 500, -ன்கீழ் வழக்கை விசாரித்து தகுந்த நீதி வழங்க கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த குற்ற முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்!

சண்டைக்கு தயார்!

ஆண்கள் சங்கத்தினர் மீது நடிகை சோனா புகார்!
















நடிகை சோனா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 21.11.2012 புதன்கிழமை புகார் மனு ஒன்றை கொடுத்தார். ஆண்கள் சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், ஆண்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.



நடிகை சோனா, வாரப்பத்திரிகை ஒன்றில், ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஆண்கள் செக்சுக்கு மட்டுமே பயன்படுவார்கள் என்றும், கையை துடைத்துவிட்டு, தூக்கி எறியப்படும் டிஷ்யூ பேப்பரை போன்றவர்கள் என்றும் சோனா தனது பேட்டியில் கூறியதாக, பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருந்தது. மேலும் நான் திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன் என்றும் தனது பேட்டியில் சோனா மேலும் கூறி இருந்தார்.



நடிகை சோனாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், சோனாவின் பத்திரிகை பேட்டியை கண்டித்து போர்க்கொடி தூக்கினார்கள். சோனாவை கண்டித்து, சென்னை தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சோனா தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.



இந்த நிலையில் நடிகை சோனா 21.11.2012 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாசை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.



பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஆண்களைப்பற்றி இழிவான கருத்து எதையும் சொல்லி பேட்டி கொடுக்கவில்லை என்று மறுத்திருந்தேன். குறிப்பிட்ட பத்திரிகை நிருபர் செய்தியை தவறாக கொடுத்துவிட்டார் என்றும் கூறி இருந்தேன்.


செய்தி வெளியிட்ட பத்திரிகை மீதும், செய்தியை கொடுத்த நிருபர் மீதும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் போட்டுள்ளேன். 


ஆண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்ததாக நடிகை சோனாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது கோர்ட்டில் வழக்க தொடரவும் தயாராகி வருகிறார்கள்.
 
தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக சோனா கூறினார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 
 
நான் ஆண்களை கேவலமாக பேசவில்லை. சொல்லாததை பத்திரிக்கையில் பேட்டியாக வந்துள்ளன. எனக்கு எதிராக ஆண்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அச்சங்கத்தை சேர்ந்த 120 பேர் என் வீட்டில் முற்றுகையிட்டு கோஷம் போட்டார்கள். நான் அப்படி பேட்டி அளிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டேன். 

சம்பந்தப்பட்டவர்களுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளேன். அதன் பிறகும் கண்டிக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். தொடர்ந்து மிரட்டல்களும் வருகிறது.
 

நான் எங்கு போகிறேனோ அங்கெல்லாம் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி உள்ளனர். இதனால் படப்பிடிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. நடிகர் சங்கத்தினர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். இப்பிரச்சினையில் எனக்கு உதவுவதாக உறுதி அளித்தார்கள். சில பெண்கள் சங்கத்தினரும், மனித உரிமை அமைப்பினரும் என்னிடம் பேசினார்கள். என்னை தொடர்ந்து மிரட்டி வரும் ஆண்கள் சங்கத்தினர் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.
 
இவ்வாறு சோனா கூறினார்.




=

இவ்வளவு நடவடிக்கை எடுத்தபிறகும், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எனது அலுவலகம் மற்றும் எனது நகை ஷோரூம் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். ராணிப்பேட்டை கோர்ட்டில் என்மீது வழக்கும் போட்டுள்ளனர்.


மேலும் செல்போனில் பேசி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள். வெளியில் நடமாடவிடமாட்டோம் என்கிறார்கள். வெளியில் வந்தால், என்மீது கற்களை வீசுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். இதனால் கடந்த 8 நாட்களாக நான் வெளியில் போகமுடியவில்லை. எனது அலுவலகமும், கடையும் மூடியே கிடக்கிறது.


எனவே எனக்கு பாதுகாப்பு கேட்டும், எனது அலுவலகம் மற்றும் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடும் படியும், என்னை செல்போனில் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரியும், கூடுதல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.


என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். செய்யாத தவறுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சட்டரீதியான சண்டைக்கு நான் தயார். இவ்வாறு சோனா தெரிவித்தார்.

 நன்றி - நக்கீரன்