Showing posts with label நக்கீரன். Show all posts
Showing posts with label நக்கீரன். Show all posts

Monday, November 05, 2012

விஜய் டி வி - சூப்பர் சிங்கர் - போட்டி சர்ச்சைகள்


          சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு  நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.

ரியாலிட்டி ஷோ எனப்படும் தனிமனித திறமைகளை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சிகளில் தமிழக டி.வி. ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர். பிரபல பின்னணிப் பாடகர்களைப்பேல சிறுசுகள் அநாயசமாகப் பாடும் இந்த நிகழ்ச்சியை ஒரு சினிமாவைவிடவும் அதிகமாக பிரம்மாண்டமாக்கி பிரபலப்படுத்தியது விஜய் டி.வி. நிறுவனம். தொலைக்காட்சியில் பாடும் வாய்ப்பு, லட்சக்கணக்கில் பரிசுத் தொகை, பிரபலமாவதற்கேற்ற விளம்பரம் என இந்த நிகழ்ச்சி அமைந்திருந்ததால், பாடத் தெரிந்த தங்கள் பிள்ளைகளை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் போட்டிபோட்டனர்.


பல சுற்று தகுதிப் போட்டிகளில் தேறிவந்த இளம் பாடகர்கள், டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று, நடுவர்களான பிரபல பின்னணிப் பாடகர்கள் முன்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். நடுவர்களின் மதிப்பெண்ணும், டி.வி. ரசிகர்களின் எஸ்.எம்.எஸ். ஓட்டும்தான் இந்த ஜூனியர் சிங்கர்ஸை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றிச் செல்லும் என்பதால் போட்டிகள் விறுவிறுப்பாகவே இருந்தன.

இறுதிப் போட்டிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அதுதான், வெள்ளிக்கிழமையன்று நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 1.30 மணி வரை நீடித்த இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற பதைபதைப்பு ஜூனியர் சிங்கர்களின் பெற்றோர்களிடம் எக்கச் சக்கமாக இருந்தது. நேரில் பார்த்த ரசிகர்களிடமும் டி.வியில் லைவ் ஷோ பார்த்த ரசிகர்களிடமும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இந்த  டென்ஷனை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால், பாட்டு பாடிய குட்டீஸிடம் எந்த டென்ஷனு மில்லை. அவர்களுக்கு மகிழ்ச்சிதான் அதிகரித் திருந்தது. காரணம், போட்டியில் ஜெயிப்பவ ருக்கு பரிசு கொடுப்பதற் காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அங்கு வந்திருந்ததுதான். இந்தச் சின்ன வயதில் மிகப் பெரிய இசை ஜாம்பவான் முன்பாக பாடுகிறோம் என்பதே ஜூனியர்களுக் குப் பெரும் பரிசாக இருந்தது.

நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சியை நேரில் பார்த்த திருப்பூர் ரமேஷ் நம்மிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ""பிரகதி, யாழினி, கௌதம், ஆஜித், சுகன்யா ஆகிய 5 பேரும்தான் இறுதிச் சுற்றில் கலக்கியெடுத்தாங்க. அதிலும் பிரகதி தனது இரண்டாவது சுற்றில், ‘"மைய்யா... மைய்யா...'’என்ற மணிரத்னத்தின் "குரு' படத்தின் பாடலை ஆடியபடியே பாடி ரசிகர்களையும்  ரகுமானையும் அசர வச்சிட்டார். அதுபோலவே யாழினியும் "கொஞ்சம் நிலவு.. . கொஞ்சம் நெருப்பு'’ என்ற பாட்டை ஆட்டத்துடன் பாடி கைதட்டல்களை அள்ளிட்டார். பிரகதியின் பாடலுக்கு ரசிகர்களோடு அவரோட அம்மாவும் லைட்டா மூவ்மெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப்படுத்துனாங்க.
தென்மாவட்டத்திலிருந்து முதன்முதலா ஃபைனலுக்கு செலக்ட்டான தூத்துக்குடி கௌதம் பாடுனப்பதான் அந்தப் பையனோட அம்மா ரொம்ப பதட்டத்தோடு, தலையைக் குனிஞ்சி, கண்ணை மூடிக்கிட்டு சாமியை வேண்டிக்கிட்டே இருந்தாங்க. "வந்தே மாதரம்' பாட்டு பாடி, ஒட்டுமொத்த ஆடியன்சோட கைதட்டலையும் வாங்குன ஆஜீத்துதான் வின்னர்னு அறிவிச்சி, ரகுமான் கையால பரிசு கொடுக்கப்பட்டப்ப உலகமே சுழலுறமாதிரி அந்த சின்னப்பையனுக்கு அப்படியொரு சந்தோசம். ரகுமான் சார் ரசிகன், ரகுமான் சார் ரசிகன்னு சொல்லிக்கி ட்டிருந்தவனுக்கு அவரே பரிசு கொடுத்தாருன்னு சந்தோசம் இருக்காதா'' என்றார்.

நாம் ஆஜித்தின் சொந்த ஊரான திருச்சியில் விசாரித்தோம். ""எங்க ஊரு பையனுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசா கிடைச்சிருக்கு. அதுவும் ஏ.ஆர்.ரகுமான் கையால கிடைச்சிருக்குங்கிறது எங்க எல்லோருக்கும் பெருமைதான். ஆஜித்தை வளர்த்ததும் அவனுக்கு குருவா இருந்ததும் அவனோட பெரியம்மா சமீதாதான். ஆஜித்தோட அம்மா அப்பா சபானா-நிஷாருக்கு கல்யாணமாகி 10 வருசம் கழிச்சி பிறந்த குழந்தை இவன். 6 மாசக் குழந்தையா இருக்கிறப்பவே டி.வியில சினிமா பாட்டு கேட்டா அதை மழலை பாஷையில் குதப்புவானாம்.


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1ghdqzms0j1wSEtL0Z3B7fYYd84Mo1eRQPqrW3rbnR4Wwhpcyw-Ht2Ak8kCmmVoa-hTpmSAMKAKgtjszQOlaOcu8_lnAKrtS_TaLjzE0l-mrQ6FYI7XlPoUDUIJqSM3FVsc5dNGuH16GK/s1600/Pragathi+Guruprasad+in+airtel+super+singer+junior+3+at+vijay+tv+(13).jpg


 இது கடவுள் வரம்னு அவங்க குடும்பம் உற்சாகப்படுத்தியிருக்கு. கே.கே.நகரில் 4000 குழந்தைகள் படிக்கிற ஆல்ஃபா பள்ளிக்கூடத்தில்தான் ஆஜித்தும் படிச்சான். அவங்க பெரியம்மா அங்கேதான் டீச்சரா இருந்தாங்க. அதனால  அவனோட இசை ஆர்வத்தை கண்டுபிடிச்சி வளர்த்தாங்க. யு.கே.ஜி படிக்கும்போதே வந்தே மாதரம் பாட்டை பாடி, குட்டி ஏ.ஆர்.ரகுமான்னு பெயர் எடுத்தவன். அப்ப அதைக் கிண்டல்கூட பண்ணினாங்க. ஆனா இப்ப 11 வயசிலே, அதே ஏ.ஆர். ரகுமான் கையால பரிசு வாங்கி சாதிச்சிருக்கான்'' என்கிறார்கள் பெருமை பொங்க.

ஃபைனலுக்கு முன்னாடி நடந்த  போட்டியில் பாட்டு வரிகளை மறந்து  போய் டாப் 3 லிஸ்ட்டில் இடம்பிடிக்க முடியாமல் போனவர்தான் ஆஜித். அது மாதிரியே யாழினிக்கும் இடம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒயில்டு கார்டு என்கிற முறையில் ரசிகர்கள் எஸ்.எம்.எஸ். மூலமாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்தால், அவர்கள் ஃபைனலை நோக்கி முன்னேறமுடியும். இன்னாருக்கு இந்த நம்பரில் ஓட்டுப் போட்டு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களின் படங்களோடு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டியது விஜய் டி.வி. ஓட்டுகள் குவிந்தன. ஆஜித்துக்கு ஆதரவாக இதுவரை இல்லாத அளவுக்கு நான்கரை லட்சம் எஸ்.எம்.எஸ். ஓட்டுகள் குவிந்தன. அதுபோலவே, யாழினிக்கும் நிறைய பேர் ஓட்டுப் போட்டதால் அவரும் ஃபைனலை நோக்கி முன்னேறினார். இறுதிச் சுற்றில் ஆஜீத் முதலிடம்  பெற, இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பில் தங்க நகை, மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, சுகன்யாவுக்கும் கௌதமிற்கும் 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பள்ளிப் பருவத்தில், தமிழகம் தழுவிய அளவில் திறமைகளைக் காட்டி, உலகின் பல பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களின் மனங்களை தங்களின் திறமை யால் வென்ற இந்த ஜூனியர் சூப்பர்களின் ஆற்றலை இசை நுணுக்கம் அறிந்தவர்கள் மிகவும் பாராட்டு கிறார்கள். பிரபல இசைக் கலைஞரும் இசைப் பயிற்சி வல்லுநருமான மீரா காயத்ரி நம்மிடம், ""அந்தப் போட்டியில் கலந்துக்கிட்ட எல்லாப் பிள்ளைகள் கிட்டேயும் தனித் திறமை இருந்தது. அற்புதமா பாடி னாங்க. ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம்  அவங்களோட திறமைக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே மாதிரி திறமையுள்ள வர்கள் கிராமப்புறங்களிலும் இருக்கிறார்கள். நகரத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கிற வாய்ப்பு அவங் களுக்குக் கிடைக்கிறதில்லை. அவங்களையும்  கண்டு பிடிச்சி,  மேடையேற்றி வாய்ப்புகளைக் கொடுக்க ணும். அப்பதான் உண்மையான திறமைகள் வெளிப்பட்டுக் கிட்டே இருக்கும்'' என்றார்.

இசைப் பிரியரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான  திருவாரூர் ஜி.ரவி, ""அது ரொம்ப அற்புதமான நிகழ்ச்சி. இந்தத்  திறமைகளைத் தொடர்ந்து வளர்க்கிற மாதிரி வாய்ப்புகள் கொடுக்கணும். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பள்ளிக்கூடத்திலேயே இசை வகுப்பைத் தொடங் கணும்னு சொல்லியிருந்தார். அவர் சொன்ன கருத்து ரொம்பவும்  சரியானது. மனதை ஒருமுகப்படுத்தவும், ஒரு விஷ யத்தின் மீது கவனத்தை செலுத்தவும் இசை என்பது சரியான பயிற்சியாக அமையும். மாணவர்கள் மனதில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இசை மூலமா உருவாகும்போது  அவங்களால பாடத்தையும் நல்லா படிக்க முடியும். மனப்பாடப் பகுதிகளை எளிமையா உள்வாங்கிக்க முடியும். பள்ளிக்கூடங்களிலேயே தமிழிசையை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம்'' என்கிறார்.

http://metromasti.info/aimg,300,2012/09/05/gossip_image/6182-Airtel-Super-singer-jr-3-Unplugged-Round-Pragathi-performance.jpg
அதே நேரத்தில், இந்த சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியின் மறுபக்கத்தையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. முதல் பரிசு என்பது திறமையின் அடிப்படையிலா ஓட்டுகளின் அடிப் படையிலா என்ற குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் அவர்கள், ""முதல் சுற்றில் கிளாசிக்கல் சாங் பாடவேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்கள், அருமையா கிளாசிக்கல் பாடிய பிரகதியை விட்டுவிட்டு, கிளாசிக்கல் வரைமுறைக்குள்ளேயே வராத "வந்தே மாதரம்' பாடலைப் பாடிய ஆஜீத்துக்கு பரிசு கொடுத்தது எப்படி? 




இந்தப் போட்டியில் கலந்துக்கிட்ட சின்னப்புள்ளைகளை டி.வி. நிறுவனத்தோடு காண்ட்ராக்ட் போடவச்சு, தங்களோட டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப் படுத்திக்கிறது சட்டப்படி சரியானதுதானா?'' என்று கேள்வி எழுப்புவதுடன் இந்தப் போட்டி நடத்தும் விதம், தேர்வு முறை, பரிசுத் தொகை அனைத்தையும் விமர்சனத்திற்குட் படுத்துகிறார்கள். 



"11 வயது பையனுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும்போது, அதன் மதிப்பு அந்தப் பையனுக்குத் தெரியாது. அது அவனது பெற்றோருக்குத்தான் பயன்படும். பெற்றோரின் வானளாவிய ஆசைகளுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தும் போக்கையே இத்தகையப் போட்டிகள் வளர்க்கின்றன' என்றும் "சமுதாயத்தால் இது  மற்ற பிள்ளைகளின் மீதும் மன அழுத்தத்தை உண்டாக்கும்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மனோ ரமா இதுபற்றி கூறும்போது, ""ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருவது பாராட்டுக் குரியதுதான். அதை ஒளி பரப்பும் முறைகள் சரியான வகையில் இல்லை. போட்டியில் தோற்றுப் போகும் குழந்தைகளின் அழுகையை க்ளோசப்பில் காட்டுவது, அப்போது  அவர்களின் பெற்றோர் படும் பதட்டத்தை ஸ்லோ மோஷனில் காட்டுவது, இதில் ஜெயித்தால் மட்டுமே வாழ்க்கை என்பதுபோல பிள்ளைகளை தீவிரப்படுத்துவது இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். அதுபோல பரிசுத் தொகையும் அவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பாகவோ, ஹாலிடே டூர்  புரோகிராமாகவோ, இசை சம்பந்தப்பட்டதாகவோ இருந்தால் வளர்ச்சிக்கு உதவும்'' என்கிறார் தெளிவாக.

இளம் வயதிலேயே திறமையால் அசத்திய சாதனைத் திலகங்களை சரியான  வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை பெற் றோருக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது. சக மனிதர்களான நமக்கும்தான்.           

நன்றி நக்கீரன் -லெனின்
ஜெ.டி.ஆர்., மனோ 


http://metromasti.info/aimg,300,2012/09/05/gossip_image/6182-Airtel-Super-singer-jr-3-Unplugged-Round-Pragathi-performance.jpg

Friday, November 02, 2012

தேனம்மை - இயக்குநர் மகேந்திரன் - சிறுகதை






         முதலில், தனது குடும்பக் கதையைப் பத்திரிகையில் எழுதுவதற்கு சம்மதம் சொன்ன கான்ஸ்டபிள் புகழேந்திக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

""என்னதான் இது உங்களின் உண்மைக் கதை என்றாலும், கதை எழுதுகிறவர்களின் இயல்புப்படி கொஞ்சம் கற்பனையும் சேர்த்துக் கொள்வேன்... பரவாயில்லையா?'' என்று கேட்டபொழுது, ""அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. என் கதையையே யாரும் நம்பப்போறதில்லை... அதுக்கு நீங்க காது மூக்கு வச்சு எழுதினா மட்டும் என்ன ஆயிடப்போறது'' என்றார் புகழேந்தி... இன்றுதான் முதன்முதலாக  அவரை இப்படி விரக்தியுடன் பார்க்கிறேன்... நேற்றுவரை சிரித்த முகத்தோடு உலாவந்த அவர் யாரும் அறியாத அவருடைய கதையை என்னிடம் இன்று சொல்லவைத்திருப்பதும் இந்த திடீர் விரக்திதான்.

""சொன்னா நம்பமாட்டீங்க'' என்ற எச்சரிக்கையோடு அவர் ஆரம்பித்தாலும், அவர் சொல்வதை எல்லாம் நான் நம்பத் தயாராக இருந்தேன்... அவர்மீது நான் கொண்டுள்ள மரியாதை அதற்கு அடிப்படை என்றால், அவர் என் ஊர்க்காரர் என்ற வகையில் கூடுதலான ஒரு நெருக்கம். புகழேந்தியும் நானும் செட்டிநாட்டில் உள்ள கொத்தமங்கலம் ஆட்கள். நான் சென்னைவாசியாகி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஹோட்டலில் வைத்து தற்செயலாக அவரைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் இருவருக்கும் சொந்த ஊர் ஒன்றுதான் எனத் தெரிந்ததும் நட்பாகிவிட்டோம். அவர் சென்னைக்கு மாற்றலாகி வந்து இரண்டு வருஷமே ஆகிறது.

அவர் இளைஞர். நான் நரைத்தவன்... இருந்தாலும் சகவயது நண்பனைப் போல் என்னைப் பாவித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து சந்தித்து சிரித்துச் சிரித்து பேசிவிட்டுப் போவார்... ஆனால் ஒரு தடவைகூட அவர் வீட்டிற்கு வரும்படி என்னை அவர் அழைத்ததே கிடையாது. அதற்கான காரணம் என்ன என்பதைத்தான் இன்று என்னிடம் சொல்லி என்னை அதிர்ச்சியும் வியப்பும் அடைய வைக்கிறார். இருந்தாலும் அவர் சொன்னதை எல்லாம் நிஜம்தான் என நான் நம்புவதற்கு, அவருக்கும் எனக்கும் உள்ள ஒரு பொதுவான குணாதிசயமே ஆதாரம்.

எல்லாரும் மதிக்கும் எழுத்தாளனாக என்னை நான் கற்பனை செய்து கொண்டு என்னையே நான் ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் போல, நேற்று வரை புகழேந்தியும்கூட ஒரு கற்பனை உலகில் வாழ்ந்திருக்கிறார்.


என் வீட்டில் உள்ளவர்கள் விடுமுறைக்கு கொத்தமங்கலம் போய் விட்டதால் வீட்டில் நிலவிய தனிமையும் நிசப்தமும் புகழேந்தியை மனம்விட்டுப் பேசவைத்தது.

புகழேந்தியின் என்றும் மாறாத சிரித்த முகத்தை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டு அவரது போலீஸ் காலனியைச் சேர்ந்த எல்லாரும் இன்று வரை "அதிசயப்படுவதற்கு'க் காரணமே புகழேந்தியை அவரது மனைவி சித்ரா தினம் தினம் சண்டையிட்டு வீட்டையே ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் கொடுமைதான்!

கடந்த இரண்டு வருடங்களாக ஒருநாள்கூட விடுமுறை விடாமல் ட்யூட்டி முடித்து அன்பான கணவன் வீட்டிற்குள் வந்ததுமே சித்ரா ஏன் சண்டைக் கோழியாக மாறி அவனைக் குதறி எடுக்கிறாள் என்பதைவிட, காலனிக் காரர்கள் வியப்பது எல்லாம் காலையில் சிரித்தபடியே வெளியே வரும் புகழேந்தியைப் பற்றித்தான்.

அதுவும் வீட்டிற்குள் சித்ரா என்னதான்  கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் எதிர்க் குரலாக புகழேந்தியிடமிருந்து ஒரு முணு முணுப்புகூட வருவதில்லை. ட்யூட்டிக்குப் போக காலையில் வீட்டிலிருந்து வெளியே வரும் புகழேந்தி, குலப்பெருமை காத்து நிற்கும் குணவதியோடு குடும்பம் நடத்தும் மகா அதிர்ஷ்டசாலிபோல அவர்கள் எல்லாரிடமும் சிரித்துப் பேசும் அதிசயத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை; குழப்பமடைகிறார்கள்.

இப்படிப்பட்ட அருமையான புருஷனை அவன் மனைவி ஏன் தினம் தினம் வதைத்துக் கொல்லவேண்டும்? இப்படி சண்டை போடத் தெரிந்த வளுக்கு புருஷன் பிடிக்காவிட்டால் அவனை உதறிவிட்டு சொந்த ஊருக்குப் போய் வசதியாய் பிறந்த வீட்டில் உட்கார்ந்து கொள்ளத் தெரியவில்லையா? இப்படியெல்லாம் காலனிக்காரர்கள் நினைக்க முடியாதபடி சித்ராவின் இன்னொரு வகையான முகம்தான் அவர்களை அதிர்ச்சியடைய வைத்துவிடுகிறது.

புகழேந்திபோலவே சித்ராவும் ஒரு வினோதப் பிறப்புதான். புகழேந்தி வீட்டில் இல்லாதபோது பல தேவைகளை முன்னிட்டு மற்றவர்கள் மாதிரி வீட்டிலிருந்து வெளியே வரும் சித்ரா, "மணாளனே மங்கையின் பாக்கியம்' என வாழ்கிற உத்தமக் குலவிளக்காய், காலனிப் பெண்களிடம் அன்பும் கருணையும் பொங்க அவள் இனிமையாகப் பேசிப் பழகும் வினோதம் எல்லார் வாயையும் அடைத்துவிடும். ""இவளுக்கே தெரியாமல் இவளுக்குள்ளே புகுந்துவிடும் மோகினிப் பிசாசுதான் புகழேந்தி யைக் குதறி எடுத்து அவனை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது. பாவம், புருஷனிடம் சண்டைக்கோழியாக தான் உருமாறுவதெல்லாம் இவளுக்குத் தெரியாது என்றுகூட அந்தக் காலனிவாசிகள் பயத்துடன் சந்தேகப்படத் தொடங்கினார்கள். இப்படி, சித்ராவைக் குறித்துப் பரிதாபப் படுகிறவர்களாகவும் புகழேந்தியைக் குறித்து அதிசயப்படுகிறவர்களாகவும் இரண்டு கோணங்களில் அல்லாடிக் கொண்டிருந்த காலனிக்கு வெளியூரிலிருந்து விருந்தாளியாக வந்த பெண் ஒருத்தி புகழேந்தி குடும்பத்தைப் பற்றி சகலத்தையும் கேட்டுவிட்டு புதிதாக ஒரு புதிரை அந்தப் பெண்களிடம் விதைத்து விட்டாள்.

""எனக்கும் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் பிள்ளை பிறக்கா மல் ஊருக்குள் நான் அவமானப்பட்டப்ப, இந்த சித்ரா மாதிரித் தான் எனக்கும் என் புருஷன்மேல ஆவேசம் வந்து தினசரிக்கும் அந்த ஆளை கொதிக்கிற எண்ணெயில் போடாத குறையாக வறுத்துக் கொண்டி ருந்தேன். ஆனா அந்த ஆளு இந்த அப்புராணி புகழேந்தி மாதிரி இல்லே... என்னைப் போட்டு காட்டடி மாட்டடியாய் உதை பின்னிப்பிடுவாரு. ஆனா என்னைக்கு எங்களுக்கு ஒரு புள்ளை பொறந்துச்சோ அந்த நிமிஷத்திலிருந்து நாங்க ரெண்டுபேரும் அடியோட மாறிட்டோம். இன்னிக்கும்கூட, நேத்துத் தான் தாலி கட்டினமாதிரி நாங்க நடத்துக்கிறதைப் பார்த்து ஊரே மூக்கில விரல் வைக்குது...'' என்று சொல்லி வைத்தாள் அந்த விருந்தாளி.

இதற்குப் பிறகு "எதைக் குடித்தால் பித்தம் தீரும்' என்றிருந்த காலனிப் பெண்களுக்கு இப்போது தற்காலிகமாக ஒருவித ஆறுதல் கிடைத்தது. சித்ராவுக்கும் ஒரு குழந்தை பிறந்தால் புது மனுஷியாகிவிடுவாள்... அப்புறம் புருஷனை வதைப்பதை நிறுத்திவிடுவாள் என்று தீர்மானித்து கொஞ்சம் மௌனிக்கத் தொடங்கினார்கள்.

-இப்படி புகழேந்தி சொல்லிவரும்போது நான் அவசர மாய்க் குறுக்கிட்டேன்.

""புகழ்... இதுவரைக்கும் நீங்க சொல்லிவர்றதெல்லாம் சங்கீத வித்வான் ராக ஆலாபனை பண்றமாதிரித்தான் எனக்குத் தோணுது. நீங்கள் இன்னும் பாடத்தொடங்கவே இல்லையே.'

""என்னசார் சொல்றீங்க?''

""புகழ்! நீங்க இதுவரை சொன்னதுலே எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சுக்கிற மாதிரி தெளிவா இல்லே. உங்க சம்சாரம் ரெண்டு வருஷமா உங்களோட சண்டை போடுறாங்கன்னா, எதைக் காரணம் சொல்லி சண்டை போடுறாங்க? இந்தமாதிரி பொஞ்சாதியாலே வீட்டுக் குள்ளே அவஸ்தைப் படுற நீங்க வெளியே எப்படி சிரிச்ச படி நடந்துக்க முடியுது? இதெல்லாம் எனக்கு காத்துல கை வீசுறமாதிரி இருக்கு.''

""அடுத்தாப்ல அதைத்தான் சார் சொல்ல இருந்தேன். நீங்க பொறுமை இழந்துட்டீங்க.''

""சாரி புகழேந்தி...''

""எங்கிட்ட சண்டைபோடுறப்ப எல்லாம் சித்ரா திரும்பத் திரும்ப ரெண்டே ரெண்டு விஷயங்களைத்தான் குத்திக்காட்டுவா... "நீ பொழைக்கத் தெரியாத ஆம்பி ளைய்யா... நீ சம்பாதிச்சு கொண்டு வர்றதெல்லாம் ஒரு சம்பாத்தியமா?' ரெண்டாவது, நீ ஒரு கொலைகாரன்... உன் ஜாதக தோஷம்தானே என் புள்ளையைக் கொன் னுச்சு... எம் முன்னாலேயே வராதே....'' இந்த ரெண்டை வச்சே  எல்லாத்துக்கும் வம்புக்கு இழுப்பா... உன்னை மாதிரி ஒருத்தனுக்கு சட்டை எதுக்கு? சாப்பாடு எதுக்கு? இப்படி தொடுத்துக்கிட்டே போவா''

""என்ன புகழேந்தி.... உங்களுக்கு குழந்தை பெறந்து இறந்தது உண்மையா?''

""ஆமா சார்... ஆனா அது இங்கே இல்ல. ஊர்லே...''

""சாரி புகழ்... சரி, உங்க கல்யாணம் ஆனப்ப சித்ரா எப்படி?''

""எல்லாரும் அதிசயப்படற அளவுக்கு அன்பானவ  சார்... சித்ரா என் சொந்த மாமா பொண்ணு...  எங்க மாமாவுக்கு விவசாயம்தான் பிரதானம்... தவிர ஜோசியம் சொல்றது ஜாதகம் பாக்குறதுலே ஊருக்குள்ளே அவருக்கு பெரிய பேரு... நல்ல வசதியான வீட்ல பொறந்தும் சித்ராவுக்கு மட்டும் ஆடுங்களை மேய்க்கிறதுலேதான் அலாதிப்பிரியம்... ஆடுங்ககிட்டே காட்டுற அன்பை எல்லாம் ஊரிலே இருக்குற எல்லார்கிட்டேயும் காட்டுவா... அப்படி ஒரு பாசக்காரி... இப்படி இனிமையான ஒருத்திக்கு சித்ரான்னு பெயர் வச்சதுக்குப் பதிலா, எங்க நகரத்தார் பெண்களோட அழகான பெயர்கள்லே ஒண்ணான "தேனம்மை'ன்னு பெயர் வச்சுக்கலாமேன்னு நினைச்சுக்குவேன். எல்லாத்துக்கும் மேலே அவளோட அழகு...! காட்டுப் பக்கம் அவ ஆடு மேய்க்கிறதே பார்த்தா, "ஆடு மேய்க்கிற ராஜகுமாரி' மாதிரி இருப்பா. இதெல்லாம்தான் நான் அவளைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கக் காரணம். கல்யாணத்துக்கு முன்னாடியே நானும் சித்ராவும் புருஷன் பெஞ்சாதி மாதிரித்தான் நடந்துக்கிட்டோம். கல்யாணமாகி அஞ்சாவது மாசமே பெறந்த எங்க குழந்தை யைக் கையிலே ஏந்துறதுக் குள்ளே கண்ணை மூடிருச்சு. ஜோசியம் ஜாதகத்துல பெரிய ஆள்னு பேர் வாங்குன மாமாவுக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரியாமப் போச்சா? இதெல் லாம் நடந்து ஒரு வருஷம் ஆனப்பதான் ஏதோ மந்திரம் போட்ட மாதிரி சித்ரா திடுதிப் புன்னு அடியோட இப்படி ஆளே மாறிட்டா...  அப்பதான் சென்னைக்கு மாத்தல் ஆகி இங்கே வந்தேன்...

சித்ராவுக்கு இந்த மாதிரி எதிர்பாராம எப்படி திடீர் குண மாற்றம் ஏற்பட்டுச்சோ, அதே போல என்னைக்காச்சும் ஒருநாள் அவ மறுபடியும் அதிசயம்போல பழைய அன்பான சித்ராவா மாறுவாங்குற நம்பிக்கை இப்பவும் எனக்கு இருக்கு. அவளை ஒரு மனநோயாளியா நினைச்சு அனுதாபத்தோடதான் அவளைப் பார்த்தேனே தவிர அவளை வெறுக்குறதுக்கு என் அறிவு இடம் குடுக்கலே. ஆனா என்னைச் சுத்தி உள்ளவங்க என் சிரிச்ச முகத்தைப் பார்த்து சந்தேகப்படுறதுலே தப்பே இல்லே... என்னோட மகிழ்ச்சிகரமான கற்பனை வாழ்க்கையைப் பத்தி அவங் களுக்கு என்ன தெரியும்?''.

புகழேந்தி தனது கற்பனை வாழ்க்கையின் மர்மத்தை இப்போது உடைத்தபொழுது அந்த உண்மையை நான் ஜீரணிக்கவில்லை என்பதும் என் மனதிற்குள் அவநம்பிக்கை முளைத்துவிட்டது என்பதும் என் முக மாற்றத்தை வைத்தே புத்திசாலியான புகழ் புரிந்துகொண்டார்.

""என்ன சார்... போலீஸ்காரங்க பொய்க்கேசு போடுவாங்கன்னு சொல்ற மாதிரி நான் சொன்னதையும்

அந்த லிஸ்ட்லே சேர்த்துட்டீங்களா?''.

""அப்படி இல்லே புகழேந்தி. உங்களுடைய இந்த மானசீகமான வாழ்க்கை மட்டும் நடைமுறைக்கு சாத்தியம்னா, உங்களை முன்மாதிரியா எடுத்துக்கிட்டு யாருமே விவாகரத் துக்காக கோர்ட்டுக்கு ஓடமாட்டாங்க. மொத்தத்துலே புருஷன் பெஞ்சாதி பிரிவுக்கே உலகத்துலே அவசியம் இல்லாமப் போயிடும்''.

""சார்... நீங்க எந்த வெளிநாட்டுக்காவது போயிருக்கீங்களா?''.

""போனதில்லே... ஏன் கேக்குறீங்க?''.

""நீங்க போனதில்லே, பார்த்ததில்லேங்குறதுக்காக, இந்த ஜப்பான், சைனா, ரஷ்யா, அமெரிக்கா எல்லாம் இந்த பூமியிலே இல்லேன்னு ஆயிருமா?''.

""இது விதண்டாவாதம்''.

""அப்ப, சுய உணர்வோட நான் வாழ்ற கற்பனை வாழ்க்கை மட்டும் உங்களுக்கு சாத்தியமில்லாத ஒண்ணாகவும் கட்டுக்கதையாகவும் ஏன் தோணுது? பல வருஷங்களுக்கு முன்னாலே, கால் இல்லாத ஒரு மனிதனுடைய "ஒலிம் பிக்ஸ்லே ஓடணும்'ங்குற எண்ணத்தை சாத்தியமில்லாத ஒண்ணுன்னுதான் எல்லாரும் சிரிச்சிருப்பாங்க. ஆனா கால்கள் இல்லாத "ஆஸ்கர் பிஸ்டோரி யஸ்' செயற்கைக் கால்களோட ஓடி, போன ரெண்டுமுறை  தனக்கான பிரிவுள்ள ஒலிம்பிக்ஸ்லே உலக சாதனை படைச்சப்ப, ஆச்சரியப்பட்ட உலகத்துல நீங்களும் ஒருத்தர். இல்லியா சார்? என்னுடைய செயற்கையான வாழ்க்கைக் கான நியாயத்தை மட்டும் நீங்க புரிஞ்சுக்கிட்டா, என் கற்பனை உலகம் எனக்கு எப்படி சாத்தியமாச்சுன்னு தெரிஞ்சுக்குவீங்க. துரதிர்ஷ்ட வசமா என் அன்பு மனைவி சித்ரா இப்படி வேற ஒருத்தியா மாறினதைப் பொறுக்காம அவளை நான் பொறந்த வீட்டுக்குத் துரத்தி அடிக்கலே. இந்த விவாகரத்தைப் பத்தி நான் கற்பனைகூடப் பண்ணதில்லே. இன்னொரு பெண் ணைத் தேடி நான் ஓடவும் இல்லே... இதெல்லாம் எப்படி எனக்கு சாத்தியமாச்சு? இப்பவும் என் சித்ராவெ நேசிக்கிறேன். அவளுக்காகப் பரிதாபப்படுறேன். மறுபடியும் பழைய சித்ராவா அவ ஒருநாள் புதுப்பிறவி எடுப்பான்னு முழு நம்பிக்கையோட இருக்கேன். அந்த அற்புதமான நாள் வரும்போது வரட்டும்னு நான் முடிவு எடுத்தப்பதான்,

அப்படி ஒரு கனவு எனக்கு வந்துச்சு.''

""பகல் கனவா?''.

""இல்லே சார்... சத்தியமா இல்லே... நான் ஆரம்ப காலத்து அன்பான சித்ராவ நினைச்சபடியே தூங்கப்போன ஒரு ராத்திரிதான் அந்த மாதிரி விநோதக் கனவு கண்டேன். எங்க ஊர் வயக்காட்டு வேப்பமரத்தடியிலே நான் களைச்சுப்போய் உக்காந்திருக்கிற மாதிரியும், என் பக்கத்துலே என் மனைவிபோல ஒரு பெண்- முகம் தெளிவாத் தெரியலே- எனக்கு நெருக்கமா உட்கார்ந்தபடி ஆசையோட உரிமை யோட என் கைவிரல்களை எடுத்து நீவி விடுறா. இப்படி அந்தக் கனவுலே வந்தவ மாதிரித்தான் என் சித்ராவும் நாங்க காதலிச்ச காலத்துலேயும், கல்யாணம் பண்ணிக்கிட்டப்பவும் என் கைவிரல்களை நீவிவிட்டு சந்தோஷப்படுவா.

அதே கனவுல சித்ராவும் தூரத்துலே நின்னு ஆடுங்களை மேய்ச்சபடி எங்க ரெண்டுபேரையும் பார்த்து ஏதோ பரிகாசம் பண்ணிச் சிரிக்கிறா.  ஆனா என் மனைவியாக என்னோட இருக்கறவள் என் விரல்களை நீவி விடுறதை நிறுத்தலே... அப்போ சித்ராவின் முரட்டு ஆடு ஒன்று எங்களைப் பார்த்து முட்டுவதுபோல பாய்ந்து வருகிறது. அவ்வளவுதான், கனவு மறைஞ்சிடுச்சு. விடிந்தபிறகும் அந்தக் கனவு எனக்கு இனம்புரியாத ஒருவித ஆறுதலைக் கொடுப் பதுபோல உணர்ந்தேன். நம்முடைய கஷ்டங்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் சொல்லி நிம்மதி அடைகிறோமே...!

அதுபோலவே... இன்னார் முகம் என்று சொல்ல முடியாத படி அந்தக் கனவில் என் மனைவியாக வந்தவள் எனக் குள்ளிருந்த மன இறுக்கத்தைத் தளர்த்தி விட்டாள் என்றுதான் சொல்வேன். பிறகு அந்தக் கனவு மனைவியே பகலிலும் எனக்கான பணிவிடைகளை ஆத்மார்த்தமான அன்போடும் பரிவோடும் செல்வதுபோல நான் விளையாட்டாக கற்பனை செய்ய அந்தக் கற்பனையே எனக் குள் இனம்புரியாத மலர்ச்சியைத் தோற்றுவித்தது. பிறகென்ன? அந்தக் கற்பனையே எனது நிரந்தரமான- செயற்கையான வாழ்க்கையாகிவிட்டது. என் மகிழ்ச்சியும் நிரந்தரமானது; சாத்தியமானது. என் கற்பனை மனைவிக்கு "தேனம்மை' எனப் பெயர் வைத்தேன். என் மனைவி சித்ராவைக்கூட கல்யாணத்திற்கு முன்னால் "தேனம்மை' என்று அழைக்க ஆசைப்பட்டவன் அல்லவா நான்?

தேனம்மை இரவு பகல் எந்நேரமும் என்னிடம் அன்பைப் பொழியும் மனைவியாக வாழ்வதுபோலவும், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லாத வாழ்வு வாழ்வதாகவும் என் மனம் குதூகலப் பட்டது.

இப்படி என் கற்பனை வாழ்க்கை என்னை எப்போதும் சிரித்தபடி வைத்திருக்க, சித்ரா என்னதான் கூச்சல் போட்டு ரகளை செய்தாலும் அவள் செய்கை எல்லாம் எனக்கு மௌனப்படம் பார்க்கிற மாதிரிதான் ஆனது. இப்படி என் அந்தரங்கம் மகிழ்ச்சியில் திளைக்கும்போது என் முகத்திலும் புன்னகையும் மலர்ச்சியும் நிரந்தரமாகிவிட்டது. இந்த என்னுடைய ரகசிய வாழ்க்கை பற்றி வேறு யாருக்கு என்ன தெரியும்? சித்ராவை ஒரு கொடுமைக்காரி என்றும் என்னை ஒரு அப்பாவி என்றும் நினைப்பவர்கள் எப்பேர்ப்பட்ட ஏமாளிகள்? இரவு பகல் எந்நேரமும் தேனம்மை அடிக்கடி என் காதுகளில் இதழ் பதித்து "எல்லாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுங்கள். உங்களுக்கு எந்தக் குறையும் வரவே வராது' என்று மந்திரம் சொல்லும்போதெல்லாம் பழைய சித்ராவைத்தான் தேனம்மை எனக்கு நினைவூட்டுவாள். இப்போதும் சித்ராவை நான் நேசிப்பதற்கு இந்தக் கற்பனை தேனம்மைதான் காரணம்...''.

""வீட்டுலே உங்களுக்குச் சமைச்சுப் பரிமாறுறதும் அந்தத் தேனம்மை தானா புகழ்?''.

""ஏன் சார் சுத்தி வளைக்கிறீங்க. இப்படி? நேரிடையாவே கேளுங்களேன். கனவுலே மனைவியாத் தெரிஞ்சவளை தேனம்மைன்னு பேர் வச்ச குடும்பம் நடத்துறதாச் சொல்றியே. நீ சிரிச்சபடி வாழ்றதுக்கு அவ தான்னு வேறே கதை விடுறியே... இப்படி எல்லாம் பித்துக் குளித்தனமாய் பேசுறதுக்கு உனக்கு வெக்கமா இல்லே?ன்னு கேக்க நினைக்கிறீங்க...

இல்லியா சார்''.

""நோ... நோ... அப்படி இல்லே புகழேந்தி''.

""இப்படி நீங்கள் இல்லேன்னு சொல்றது என் மேலே நீங்க வச்சிருக்கிற மரியாதையாலே சார். எனக் குப் புரியாதா என்ன. ஏன் சார்... "திருப்பதிக்குப் போய் ஏழுமலையானை வேண்டிக் கிட்டேன். என் வியாதி குண மாயிடுச்சு. வேளாங்கண்ணி போனேன், என் கஷ்டமெல் லாம் நீங்கிடுச்சு. பழனிக்குப் போய் நேந்துக்கிட்டேன். கோர்ட்டுலே என் கேஸ் ஜெயிச்சிடுச்சு...' இப்படி ஒவ்வொருத் தரும் தங்களோட கஷ்டம் தீர்ந்ததுக்கு ஆளுக்கொரு கடவுள் பேரைச் சொல்லுவாங்க. நீங்களும் நம்புவீங்க. ஆனா நான் உண்டாக்கின தேனம்மை எனக்கு சந்தோஷத்தைக் குடுக்கு றாள்னு சொன்னா மட்டும் நம்ப மாட்டீங்க. எல்லா தெய்வங்களுக்கும் பேர் வச்சதே நாம்பதான் சார்... இப்ப நான் ஒரு தெய்வத்துக்கு தேனம்மைன்னு பேர் வச்சேன். நீங்க பரிகாசமாப் பார்க்குறீங்க. இதையே நான் கொஞ்சம் மாத்தி பக்கத்து ஊருலே இருக்குற "தேனாண்ட அம்மன்' கோயிலுக்குப் போயி தினமும் விளக்கு ஏத்துனேன்.

அதுதான் என்னோட சந்தோஷத்துக்கும் சிரிப்புக்கும் காரணம்னு சொல்லியிருந்தா நம்புவீங்க, இல்லே?''

""புகழேந்தி... என் கேள்விகள் எல்லாம் வெளிச்சத்தை அதிகமாக்க விளக்கின் திரியைத் தூண்டி விடுகிற மாதிரிதான்... இப்பொழுது நான் உங்களிடமிருந்து இன்னும் பிரகாசமான வெளிச்சத்தை எதிர்பார்க்கிறேன். தேனம்மையுடன் நேற்று வரை மகிழ்ச்சிகரமாக இருந்த நீங்கள் இன்று திடீரென

அந்த விளக்கே அணைந்தமாதிரி விரக்தியோடு என்னிடம் வந்தது ஏன்?''.""நேத்து ராத்திரி என் தேனம்மை இறந்துட்டாள் சார்''.

""புகழேந்தி...?!''

""கற்பனை மனைவி எப்படி சாக முடியும்னுதானே நினைக்கிறீங்க? கனவுல வந்த பெண்ணைத்தானே என் மனைவியா பாவிச்சு ஏத்துக்கிட்டேன். அப்போ, கனவுலே தேனம்மை இறந்ததையும் ஏத்துக்க வேண்டியவன்தானே நான்?''.

""அந்தக் கற்பனைப் பெண்ணுக்கு நீங்கள் நினைத்தால் உயிர் கொடுக்கலாமே?''.

""தேனம்மையைக் கொன்றவனே நான்தான் சார்...

அவளுக்கு நானே எப்படி உயிர் கொடுக்க முடியும்?''.

""எனக்குப் புரியலே''.

""கடந்த ரெண்டு வருஷமா என்னை சந்தோஷமா வச்சிருந்த தேனம்மை நேத்து ராத்திரிகூட "எந்தக் கவலையும் இல்லாமத் தூக்குங்க ராஜா' என்று தட்டிக் கொடுத்துதான் என்னைத் தூங்க வைத்தாள். விடியல் கருக்கலில் ஒரு கனவு. அந்தக் கனவில் தேனம்மை இரண்டு பெண்களாக எனக்கு மாறி மாறித் தெரிகிறாள். என்னைப் பார்த்து ஆத்திரப்பட்டுச் சண்டையிடும்போது அவள் சித்ராபோலவும், அவளே எனக்கருகில் வந்து சிரிக்கும் போது தேனம்மையாகவும் தெரிகிறாள். நான் குழப்ப மடைகிறேன். இனிமேலும் உன்னோடு வாழத் தயாராய் இல்லை. உன்னுடைய ஜாதக தோஷத்தினால்தானே என் பிள்ளை செத்தது. நீ ஒரு கொலைகாரன். நிரந்தரமாக உன்னை விட்டுப் போகிறேன். என் பின்னால் வராதே...' என்று அவள் சித்ராவாக மாறிக் கூச்சலிட்டபடி தலைவிரிகோலமாகத் தெருவைப் பார்த்து ஓடுகிறாள்.

தெருவில் படுவேகமாகப் போய்க்கொண்டிருக்கும் வாகனங்களில் அடிபட்டுச் சாகவேண்டும் என்பதற்காகவே தெருவின் குறுக்கே வேகமாகப் போகிறாள். என்னால் சித்ராவைப் பின்தொடர முடியவில்லை. என் கால்கள் கட்டிப் போட்டதுபோல  உணர்கிறேன். "போகாதே' என்று கத்திக் கூப்பிடவும் எனக்கு வாய் வரவில்லை. ஆணி அடித்ததுபோல் நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்த போதுதான் வெளியே ஒரு லாரியில் சித்ரா அடிபட்டுத் தூக்கி எறியப் படுகிறாள். இப்போது என் கால்கள் நகரத் தொடங்க தெருவிற்கு ஓடுகிறேன். ரத்தச் சேற்றில் இறந்து கிடக்கும் சித்ராவைத் தூக்கி என் மடியில் கிடத்தி  அவள் முகத்தைப் பார்க்கிறேன். அது சித்ரா இல்லை. தேனம்மை. "எல்லாரையும் நேசியுங்கள்' என்பதுபோல அவள் முகத்தில் அந்தப் புன்னகை மட்டும் உயிரோடு இருக்கிறது.

"எந்தப் பிரதிபலனும் பாராமல் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்' என்று இரண்டாண்டு காலமாகச் சொல்லிக் கொண்டிருந்த தேனம்மையின் மந்திரத்தை மறந்துவிட்டு, கனவில் தெருவை நோக்கி ஓடிய சித்ராவைத் தடுத்து நிறுத்த முடியாமல், "செத்தால் சாகட்டும்' என்று நினைத்து நின்று விட்டேனா? அப்படியா அவளை நான் வெறுத்தேன்? கிடையவே கிடையாது. தெருவில் அடிபட்டுச் செத்தவள் சித்ரா என்று பதறித்தானே அவளை எடுத்து என் மடிமீது போட்டேன். அப்புறம்தானே இறந்தவள் தேனம்மை என்று தெரிந்தது. அத்துடன் அந்தக் கனவு கலையவில்லை. தொடர்கிறது. ஒரு  மயானத்தில் நான் கண்ணீருடன் நிற்கிறேன். எனக்கு அன்பைப் போதித்த தேவதை சிதையில் எரிந்துகொண்டிருக்கிறாள்.

அப்போது, யாரோ ஒரு பெண் ணின் வளையல்கரங்கள் என் கண்ணீரைத் துடைத்து விடுகிறது. அவள் யாரென்று எனக்குத்  தெரியவில்லை. எரியும் கொள்ளியிலிருந்து ஒரு தீப்பொறி பறந்து வந்து என் முகத்தில் விழுந்து நீர்த் துளியாக மாறுகிறது. இத்து டன் அந்தக் கனவும் செத்து விட்டது. அவசரமாக எழுந்து உட்கார்ந்தேன். என் உடம்பெல்லாம் நடுங்கியது. ஏதோ கருகித் தீய்ந்த நெடி என்னைச் சுற்றிலும் பரவி யிருப்பது மாதிரி உணர்வு. கொஞ்சம் தள்ளியிருந்த சித்ரா வின் கட்டிலைத் திரும்பிப் பார்த்தேன். அங்கே சித்ரா வைக் காணோம். அவளைத் தேடவேண்டும் என்ற வழக் கத்திற்கு மாறான அவசரத் தூண்டுதல் எனக்குள்ளே.

அடுக்களைப் பக்கம் போனேன். அங்கேயும் அவள் இல்லை. புழக்கடையிலோ, வாசல் பக்கமோ எங்கேயும் அவள் தட்டுப் படவில்லை. என்னை மீறிய பதற்றம் எனக்குள் தொற்றிக் கொண்டது.

ஸ்டோர் ரூம் கதவுகள் திறந்து கிடந்தன. அவநம்பிக்கை யோடு எட்டிப் பார்த்தேன். அங்கே இருட்டில் சுவர் ஓரமாக தரையில் உட்கார்ந்து மேல் நோக்கி மடக்கியிருந்த கால் களைக் கட்டிக்கொண்டு முழங்கால்களில் முகம் பதித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள் சித்ரா. நான் எதுவும் கேட்கவில்லை. என் கனவுதான் என்னை இம்சித்துக் கொண்டிருக்கிறதே... கனவில் இடுகாடுவரை போய்த் திரும்பியிருக்கிறேன் என்பதால் அவசரமாகக் குளித்து முடித்தேன். இந்த இரண்டு வருஷத்தில் முதன்முறையாக என் தேனம்மை பக்கத்தில் இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு உங்களைப் பார்க்க வந்தேன்.''

புகழேந்தியிடம் உடனே என்னால் எதுவும் பேசமுடிய வில்லை. தேனம்மை பற்றி அவர் கடைசியாகக் கண்ட கனவு என்னையும் கொஞ்சம் பதற்றம் கொள்ள வைத்தது. அதேசமயம் புகழேந்தியின் வினோத சொப்பனம் என்னை யோசிக்கவும் வைத்தது. தேனம்மையே சித்ராபோல ஒரே உருவத்தில் மாறிமாறி அநிதக் கனவில் தெரிந்ததாக புகழேந்தி சொன்னார். ஆக, கனவில் இரண்டு பெண்கள் வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது. தேனம்மையின் அன்பு நிறைந்த உள்ளம் ஆரம்ப காலத்து சித்ராவைப்போலவே இருந்ததாக புகழேந்தி சொல்லியிருக்கிறார். தனக்குப் பரிச்சய மான எந்த ஒரு பெண்ணின் முகத்தையும் தேனம்மைக்கு ஒட்டவைத்துப் பார்க்காதது புகழேந்தியின் கண்ணியம். சித்ராவிற்கும் தேனம்மைக்கும் உடல் அமைப்பில் என்ன மாதிரி ஒற்றுமை அல்லது வித்தியாசம் இருந்தது என்ற நுணுக்கங்கள் எல்லாம் புகழேந்தி சொல்லவே இல்லை. அதை அவருடைய நாகரீகமாக எடுத்துக்கொள்ளலாம். சித்ராவிட மும் தேனம்மையிடமும் அவர் கண்ட பேரழகு அவர்களின் பரிசுத்தமான அன்பு மட்டும்தான் என்பதை புகழேந்தியின் வாக்குமூலம் மிக அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது. இந்த ஒரு வலுவான மன ஓட்டத்தின்படி பார்த்தால் அன்பே உருவான அந்தப் பழைய சித்ராவைத்தான் அவர் தேனம்மையாக கற்பனையில் உருவாக்கிக்கொண்டு, "இப்படி ஒருத்தியாக

 -அதாவது அந்தப் பழைய சித்ராவாக இன்றைய சித்ரா எப்போது மாறுவாள்?' என்ற அவரது ஆழ்மன ஏக்கமே அவரது கற்பனை வாழ்க்கையாக அமைந்துவிட்டதா? இந்தக் கற்பனை வாழ்விற்கு தூண்டுதலாக அவர் சொன்ன கனவில்கூட அவரது விரல்களை நீவிவிட்ட "மனைவி'யைப் பற்றிச் சொல்லும்போதுகூட "ஆரம்பத்தில் சித்ராவும் இப்படித்தான் என் விரல்களை ஆசையாக நீவிவிடுவாள் என்று குறிப்பிட்டாரே... நேற்று ராத்திரி அவருக்கு வந்த விபரீதமான கனவுகூட அவரது ஆழ்மன பயத்தின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது.

தன் மனதில் இருப்பதையெல்லாம் என்னிடம் இறக்கி வைத்துவிட்டு என் முன்னால் புகழேந்தி அமைதியாக உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றினாலும், அது உண்மை யான அமைதி அல்ல என்பதும், அதற்கான காரணமும் எனக்கு விளங்குகிறது.

""புகழேந்தி... உங்களிடம் அதீத அன்பு காட்டிய தேனம்மையை நினைத்துக்கொண்டு உடனே வீட்டிற்குச் செல்லுங்கள். சித்ரா இப்போதும் தனி அறையில் அமைதி யாக உட்கார்ந்திருந்தால், ஏன், என்னாச்சு... உடம்புக்கு ஏதாவது?'' என்று கனிவுடன் விசாரியுங்கள். கனவில் தெருவை நோக்கி ஓடிய சித்ராவைத் தடுக்க இயலாமல் நின்றுவிட்டதுபோல இப்போதும் நடந்துகொள்ளாதீர்கள். உடனே புறப்படுங்கள். பிறகு மறக்காமல் எனக்கு போன் பண்ணி விவரம் சொல்லுங்கள். வழக்கத்திற்கு மாறாக சித்ராவின் இன்றைய அமைதி எனக்குப் பயத்தைக் கொடுக்கி றது'. என் வேண்டுகோளை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல உடனே புறப்பட்டார் புகழேந்தி.

புகழேந்தி போன பிறகு புகழேந்தி சொன்னதையெல்லாம் ஆதி முதல் அந்தம் வரை திரட்டி வைத்துக்கொண்டு என் மனம் ஏதேதோ கற்பனைகளை யூகிக்கத் தொடங்கியது.

கொத்தமங்கலத்தில் சித்ராவின் குடும்பத்தைப்போல புகழேந்தியின் குடும்பம் வசதி படைத்த ஒன்றாக இருக்க முடியாது. அதனால்தான் போலீஸ் வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டாயம் புகழேந்திக்கு வந்தி ருக்கிறது. சித்ராவின் தகப்பனாருடைய ஜாதக ஜோசிய மெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் அவர் வசதி யானவர் என்பதால் சித்ராவிற்குப் பெரிய இடத்து மாப்பிள்ளை யைத்தான் எதிர்பார்த்திருப்பார். ஆனால் காதலோ அவர் களைக் கணவனும் மனைவியும்போல் பழகவைத்துவிட்டது. மகள் சித்ரா கருவைச் சுமக்கிறாள் என்று அறிய நேர்ந்ததும் அவரால், அவர்களின் கல்யாணத்தை தடுக்க முடியாது போயிருக்கும். ஆனால் குழந்தை பிறந்தவுடனேயே  இறந்த தும் சித்ரா மனம் நொறுங்கிப்போன தருணத்தில், மகளை ஆறுதல் படுத்தும் சாக்கில் புகழேந்தியின் ஜாதக தோஷம் தான் குழந்தை இறக்கக் காரணம் என்பதை எல்லாம் ஒன்றுக்கு பத்தாகச் சொல்லி மருமகன் மீதிருந்த வெறுப்பையும் ஆத்தி ரத்தையும் காட்டியிருப்பார். குழந்தையைப் பறிகொடுத்து நொந்திருந்த சித்ராவின் பலவீனமான மனம், அப்பாவின் ஜாதக விளக்கத்தை நம்பியதன் விளைவு புகழேந்திதான் கொலைகாரன் என நம்பிவிட்டாள். மருமகனைப் பழிவாங்கு வதாக நினைத்து மகளிடம் திரும்பத் திரும்ப புகழேந்தி

அவளுக்குப் பொருத்தமில்லாத கணவன் என்பதாக அவர் சொன்ன கட்டுக்கதைகள் எல்லாம் உலகம் அறியாத அந்தப் பெண்ணை மனம் பேதலிக்கச் செய்திருக்க வேண்டும்.

இப்படி நேரான வழியில் போன என் கற்பனை விபரீத மாகவும் யோசித்தது. புகழேந்தியிடம் சண்டை போடுகிறவள் காலனிப் பெண்களிடம் அசாத்திய அன்பு காட்டி அவர் களை அதிர்ச்சியடைய வைத்ததாக புகழேந்தி சொன்னாரே. வீட்டினுள் ஒருத்தியாகவும், உலகத்திற்கு ஒருத்தியாகவும் இரட்டை வேடம் போடுவது மனச்சிதைவு கொண்ட ஒரு பெண்ணிற்கு சாத்தியமா? இதுதான் எனது வினோதக் கற்பனைக்கு வழிகாட்டியது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு தேனம்மையுடன் இரண்டு வருடங்கள் புகழேந்தி வாழ்ந்ததுபோல... (இந்த நொடியே எல்லாம் புரிந்துகொண்டு வாசகர்கள் மனதில் கசப்பு உதயமாகியிருக்கும். சித்ராவை இழிவுபடுத்தும் வக்கிரம் எனக்கு இல்லை.)

சித்ராவும் ஏன் ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்ந்திருக்கக் கூடாது? மருமகன் தகுதியைக் கேவலமாகப் பேசிய அப்பா விற்குப் பதிலடியாக, அவளது  ஆழ்மனம் சாதாரண கான்ஸ்டபிளான புகழேந்தியை ஒரு உதவி கமிஷனராக கற்பித்துக்கொண்டு, சித்ராவின் மடி நிறையச் சம்பாதித்துக் கொட்டும் கணவனாக இருக்கும் புகழேந்தியின் பெருமைக் குரிய மனைவியாகப் பூரிப்படைந்தவளாய் காலனிப் பெண்களிடம் எந்தக் குறையும் இல்லாதவளாக இனிமை யாகப் பழகியிருக்கலாம். "எல்லாம் நம்ம மனசைப் பொறுத்தது' என்று சும்மாவா சொல்கிறார்கள்.

உதவி கமிஷனராக புகழேந்தி இப்போது கை நிறையச் சம்பாதிக்கிறான் என்ற பொய்யான மகிழ்ச்சியில் தனக்குப் பிறந்த குழந்தையின் இழப்பைக் கூட அவள் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கலாம். அல்லது மறந்திருக்கலாம்.

ஆனால் டியூட்டி முடிந்து வெறும் கான்ஸ்டபிள் புகழேந்தியாக கணவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன், அவளின் கனவு கள் இடிந்து நொறுங்கி, தகப்பனால் புருஷனை வெறுக்கப் பழகிவிட்ட சித்ராவாக மாறிவிடுகிறாளா? புகழேந்தி சொன்னதையெல்லாம் வைத்துக்கொண்டு இப்படி நான் தர்க்க சாஸ்திரத்திற்கு முரணாக யோசிப்பது முட்டாள்த்தனமாக இருக்கலாம். ஆனால் சித்ரா ஒரு விசித்திரமான மன நோயாளி. அதே சமயம், நேற்று ராத்திரி புகழேந்திக்கு வந்த விபரீதக் கனவு மாதிரியே சித்ராவிற்கும் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே? அவளது அந்தக் கனவில் முதல் முறையாக சித்ராவை, புகழேந்தி கடுமையாகத் திட்டியிருக்கலாம்.

"இனிமேலும் உன்னைப்போல ஒரு அரக்கியிடம் நான் வாழ விரும்பவில்லை' என்று கூச்சலிட்டுக்கொண்டு தெருவை நோக்கி ஓடியிருக்கலாம். லாரியில் அடிபட்டும்

அவன் செத்திருக்கலாம். பின்னாலேயே பதறி ஓடிய சித்ரா இறந்த புருஷனை மடியில் போட்டுக் கதறியிருக்கலாம். மயானத்தில் அவன் சிதையில் எரியும் கொடுமையைப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு அவள் அழுது மயங்கி யிருக்கலாம்.

-மிகப் மிகப் புராதானச் சிறப்பு கொண்டது மனிதனின் கற்பனைதான் என்றாலும், என் கற்பனை ஏன் இப்படித் தாறுமாறாகப் போகிறது?

புகழேந்தியிடமிருந்து நிச்சயம் போன்வரும். அப்போது இந்தக் கற்பனைக்கு எல்லாம் முடிவு தெரிந்துகொள்ளலாம். ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம். எந்த ஒரு கதைக்கும் இது தான் முடிவு  என்று ஒன்று இருக்கவே முடியாது. முடிவு என்று சொல்லப்படும் இடத்திலிருந்து புதிதாக இன்னொன்று ஆரம்பமாகும் என்பது என்னுடைய நம்பிக்கை.

போன் ஒலிக்கிறது. ஆமாம்... புகழேந்தியேதான்.

""வணக்கம்... சொல்லுங்க மிஸ்டர் புகழேந்தி... சொல்லுங்க.

ம்... ம்... அப்படியா? அப்படியா...?! அப்புறம்...?''






















நன்றி - நக்கீரன் -






Wednesday, June 27, 2012

ஜூவிக்கு சுளுக்கு, ஜெ கையில் சவுக்கு - பின்னணி என்ன?

http://www.vikatan.com/news/images/23.jpg 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,


கடந்த 24 ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் முதல்வருக்கு எதிராக "யாக பூஜையில் போயஸ் கார்டன், அதிகார பயம், பரிகார நிஜம்" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. எனவே இந்த செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் ஆசிரியர் கண்ணன், வெளியீட்டாளர் அசோகன், மாதவன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது ஜூனியர் விகடன் இதழும் சேர்ந்துள்ளது.


http://www.envazhi.com/wp-content/uploads/2011/06/jaya-news.jpg

சர்ச்சைக்கு உள்ளான அந்த கட்டுரை 

மிஸ்டர் கழுகு: யாகப் புகையில் போயஸ் கார்டன்!

கழுகாருக்கு மேளதாளம் வைக்காத குறையாக வரவேற்பு கொடுத்தோம்! 
புரியாதவர் போலவே நம்முடைய அலுவலகத்துக்குள் நுழைந்தார். லட்டைக் கிள்ளி கொஞ்சமாய் வாயில் போட்டுக்​கொண்டவரிடம், ''பிரணாப் பராக்... என்று நீர் சொன்னீர். அதுதான் நடந்தது!'' என்றோம்.


''அதிகாரப் பட்சிகளுக்குள் அடிக்கடி பிரணாப் முகர்ஜி பெயர்​தான் இடம் பெற்றது. அதை வைத்துத்தான் சொன்னேன். பிரணாப்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று, வெள்ளிக்​கிழமை மதியம்தான் சோனியா முடிவு எடுத்தார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு எத்தனையோ யோசனைகள். ஆனால், அத்தனையையும் மத்தியப் புலனாய்வுத் துறை கொடுத்த ஒற்றை வரி லாஜிக் அறிக்கை தகர்த்து விட்டதாம்!''


''அது என்ன?''


''ஜனாதிபதி பதவிக்கு யார் தகுதிஆனவர் என்று சோனியா கேட்ட அறிக்கைக்கு, எப்போதோ மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்து விட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலை ஒரு தகவல் தந்தார்களாம். 'பிரணாப் வேட்பாளராக நியமிக்கப்​பட்டால், காங்கிரஸ் வலுவான போட்டியை எதிர்கொள்ளத் தேவை இல்லை. 


அவரை ஆதரிக்க எதிர்க்கூட்டணியிலேயே பல கட்சிகள் தயாராக இருக்கின்றன’ என்றதாம் அறிக்கை. 'வெற்றி பெறுவதற்கான பலம் இருந்தாலும் வேட்பாளர் ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்த சோனியா, இறுதியாக பிரணாப் முகர்ஜியை ஓகே செய்தார்.


 இந்தத் தகவல் கிடைத்ததும், 'ஆண்டவனின் ஆசீர்வாதம்’ என்றாராம் பிரணாப்!''


''சோனியாவின் ஆசீர்வாதம் என்றுதானே சொல்ல வேண்டும்?''


''கடந்த மூன்று மாதங்களாக கோயில் கோயிலாக வலம் வந்தார்கள் பிரணாபின் ஆட்கள். 'எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை’ என்று உமது டெல்லி நிருபர் எழுதி கடந்த மாதமே ஒரு கட்டுரை நீர் வெளியிட்டு இருந்​தீர்


. 'இப்போது ஜோதிடருடன் சேர்ந்து மகாகாளியையும் நம்பத் தொடங்கி விட்டார் பிரணாப். எதிர்ப்புகளை நசுக்குவதற்காக தன்​னுடைய வீட்டிலேயே காளி பூஜையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் நடக்கும் இந்தக் காளி பூஜை, எதிர்ப்புகளை எல்லாம் உடைத்துத் தள்ளுமாம்’ என்று உமது நிருபர் எழுதி இருந்தார். அந்த அளவுக்கு பூஜையில் மூழ்கினார் பிரணாப்.

 http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg

கும்பகோணம் வந்து சூரியனார் கோயிலுக்கு ஒன்பது பசு மாடுகளைத் தானம் செய்து, அதற்கான சிறப்பு பூஜைகள் செய்து உள்ளார்கள் பிரணாபின் ஆட்கள். பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலும் பிரணாபின் வெற்றிக்காக சிறப்பு பூஜை நடந்துள்ளது. அவருடைய குடும்பத்தின் ஆஸ்தான புரோகிதர் என்று சொல்லப்​படும் ராஜேஸ் தைதபதி என்பவர்தான் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார். 


மூன்று மாதங்களுக்கு முன்பே அந்த ஆலயத்தில் பூஜை செய்யப்பட்ட வஸ்திரங்கள், பிரணாப் வீட்டு பூஜை அறையையும் அலங்கரித்து உள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய நம்பிக்கை​யின் அடிப்படையில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்​கொண்டாராம் பிரணாப்!''


''அடுத்த நிதி அமைச்சர்?''


''பலர் குறி வைக்கிறார்கள். ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ், பொருளாதாரம் படித்தவர். பிரணாப் முகர்ஜியோடு பணியாற்றி இருக்கிறார். திட்டக் குழு உறுப்பினர்போன்ற தகுதிகள் உண்டு. அதனால் அடுத்த நிதிஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்தான் என்பது சோனியாவின் சாய்ஸ்.''


''தி.மு.க-வுக்குப் பிடிக்காத ஆள் ஆச்சே?''


''ஆமாம். 2009-ல் ஜெய்ராம் ரமேஷ் மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, கேரளா புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்தார். இதைக் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். 'ஜெய்ராம் ரமேஷ§க்குக் கண்டனம் தெரிவித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும்’ என அப்போது தி.மு.க. அறிவித்தது.


 கேரள அணை தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அனுப்பாததையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகாராகத் தெரிவித்தார் கருணாநிதி. ஜெய்ராம் ரமேஷ§க்கு எதிரான போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், போராட்டத்தைக் கைவிட்டார். அப்படிப்பட்டவரை நிதி அமைச்சராக்க தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும்!''


''ப.சிதம்பரம் நிதிஅமைச்சர் ஆவதை தி.மு.க. விரும்புமே?''


''ஆமாம்! பிரணாப் முகர்ஜியை வேட்​பாளராக அறிவிக்கும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலுவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமா வளவனும் கலந்துகொண்டார்கள். வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கே பொக்கே, சால்வைகளை சோனியாவுக்கு இவர்கள் வழங்கியதைப் பார்த்து வட இந்தியத் தலைவர்கள் முகம் சுளித்தார்கள். 'பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற அவை முன்னவராகவும் இருக்கிறார். காலியாகும் அந்தப் பதவியை சோனியாவுக்கு வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸ்காரர்களே சொல்லாதபோது, அவர்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக மாறி டி.ஆர். பாலு பேட்டி கொடுத்ததையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் மௌனச் சிரிப்புடன் குறித்துக்கொண்டார்கள்!''

http://www.envazhi.com/wp-content/uploads/2012/02/vijayakanth_jayalalitha_59.jpg


'இப்படி பாலு ஐஸ் வைப்பதற்குக் காரணம் கேபினெட் மீது அவருக்கு இருக்கும் கண்தான்.’ என்கிறார்கள்!'' என்றவர், டெல்லிச் செய்திகளில் இருந்து தமிழக அரசியலுக்குள் புகுந்தார்.


''புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே, அ.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்கும். விஜயகாந்த்தும் நிறைய வாக்குகள் வாங்குவார். இது தொடர்பாக தமிழக உளவுத் துறை போலீஸார், முதல்வருக்கு அனுப்பி உள்ள ரிப்போர்ட்டையும் கடந்த இதழில் சொல்லி இருந்தேன். 'நாமதான் ஜெயிப்போம். அப்புறமா எதுக்கு செலவு செய்யணும்?’ என்ற மிதப்பில் பலரும் பணத்தைப் பதுக்கி​ விட்டதையும் சொன்னேன்.


தேர்தல் முடிவு வெளியான வெள்ளிக்கிழமை, அப்செட் ஆனார் முதல்வர். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் இருந்தவர், அதைப் பாதியில் முடித்துவிட்டு, கார்டன் கிளம்​பினார். வழக்கம்போல அம்மாவை வழி அனுப்ப போர்டிகோவில் காத்திருந்தார்கள் அமைச்சர்கள். சீரியஸான முகத்துடன் அவர்களைப் பார்த்து விட்டுக் கிளம்பினார். மறுநாள் காலை கார்டனில் இருந்து அமைச்சர்களுக்கு அழைப்பு போனது!''


''அனல் பறந்ததா?''


''11.30-க்கு வரச்சொல்லிவிட்டு, 1.30-க்குத்தான் அவர்களைச் சந்தித்தார். மொத்தம் 14 அமைச்சர்கள் போனார்களாம். பத்தே நிமிடங்கள்தான் பேசினாராம் முதல்வர்... அத்தனையும் அனலான வார்த்தைகள். தே.மு.தி.க. டெபாசிட் வாங்கியது எப்படி என்பதுதான் ஜெயலலிதாவின் கேள்வி.


 'ஜெயிச்சிடுவோம்கிற மிதப்பிலேயே இருந்திருக்கீங்க’

 என்றாராம் முதல்வர். '


நகர்ப் புறங்களில் நமக்கு ஓட்டு விழவில்லை. முஸ்லிம் வேட்பாளர் என்பதால் முஸ்லிம் வாக்குகள் அவருக்கு முழுமையாகச் சென்றுவிட்டன’ என்று மந்திரிகள் சில சமாதானங்களைச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எதையும் முதல்வர் ஏற்கவில்லை!''


''ஆனாலும், 1006 திருமணங்களை சந்தோஷமாகத்​தானே முதல்வர் நடத்தி வைத்தார்?''


'திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடக்கும் திருமண விழாவை தனது முக்கியமான பரிகாரமாகவே ஜெயலலிதா செய்து முடித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, சிலர் இதற்குத் தடை போடும் காரியத்தையும் பார்த்தார்கள். 


'திருமணம் நடப்பதற்காகக் குறிக்கப்பட்டுள்ள திருமண நாள் முழுஅமாவாசை நாள். எனவே இந்தத் தேதியில் திருமணம் செய்வது கெடுதல்’ என்று சிலர் கடிதம் எழுதி அனுப்பவும் ஆரம்பித்தார்கள். இந்து அறநிலையத் துறையில் இருக்கும் அதிகாரி ஒருவரைக் குறிவைத்து, அவருக்குப் பிடிக்காத கோஷ்டியினர் செய்த வேலைபோல அது இருந்தது. 


19-ம் தேதி செவ்வாய்க்கிழமைதான் அமாவாசை. அதன்படி பார்த்தால் 18-ம் தேதி இரவு 7 மணியில் இருந்துதான் போதாயன அமாவாசை தொடங்கும். ஆனால், முதல்வர் ஏற்பாடு செய்த திருமணங்கள், காலை 9.30-க்கு நடந்து விட்டன. எனவே, கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள பீதி இதற்குப் பொருந்தாது. 6, 9, 15, 18, 24, 27 ஆகிய தேதிகளில்தான் முக்கியமான தனது நடவடிக்கைகளை முதல்வர் வைத்துக்கொள்வார் என்பதால் இந்தத் தேதி குறிக்கப்பட்டதாம்!''


''அப்படியா?''


''19-ம் தேதி அன்று போயஸ் கார்டன் முழுக்க யாகப் புகை வீச இருக்கிறது. அதே நேரத்தில் பையனூரிலும் யாகம் நடக்க இருக்கிறது. சுமார் 11 மணி நேரம் நடக்கு​மாம் இந்த யாகம். 'ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலமும் சிறப்பாக இருக்க வேண்டும், எதிரிகளின் பலம் குறைய வேண்டும்... என்பதற்காக இந்த யாகம் நடத்தப்பட உள்ளது’ என்கிறார்கள்.

http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-21.jpg


 இதற்கென மாயவரத்தில் இருந்து பிரத்யேகமான புரோகிதர்கள் சென்னை வந்து நான்கைந்து நாட்களாக டேரா போட்டு உள்ளனர். இவை முடிந்த பிறகுதான் கொடநாடு பயணம் குறித்த திட்டங்களை வகுக்க இருக்கிறார்.''


''கொடநாடு பயணம் இருக்காது என்றும் சொன்னார்களே?''


''இறுதி முடிவுக்கு இன்னும் முதல்வர் வரவில்லை. அப்படிச் சென்றால், குறைந்தது இரண்டு மாதங்கள் வரை அவர் அங்கு இருக்கலாம் என்றும் சொல்​கிறார்கள்!''


''சசிகலாவை அழைத்துச் செல்வாரா?''


''கேட்பீர் என்று நினைத்தேன். இவர் செல்லும்போது அவர் செல்ல மாட்டார். அப்புறம் தனியாகப் போகலாம்!''


''ஓ!'' பெங்களூரு கோர்ட் மேட்டரை ஓப்பன் செய்தார் கழுகார்... ''சசிகலாவுக்கு தனி நீதிமன்றம் மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. கடந்த 6-ம் தேதி சசிகலா கோர்ட்டுக்கு வரவில்லை. கண்டித்தார் நீதிபதி. '18-ம் தேதி நிச்சயம் வருவோம்’ என்றார்கள். அன்றும் வராவிட்டால் நீதிபதிக்கு கோபம் பொங்கத்தானே செய்யும்!''


''தைரியம்தான்!''


''18-ம் தேதி காலை 11 மணிக்கு, 'சசிகலாவிடம் மிச்சம் இருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைப் பிடுங்க வேண்டும்’ என்ற வேகத்தில் வந்தார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. வந்ததும் குற்றவாளிக் கூண்டை நோட்டமிட்டவருக்கு ஷாக். சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரையும் காணவில்லை


. கடிகாரத்தைப் பார்த்தவர், 'ஒருவேளை தாமதமாக வருவார்கள்’ என்று நினைத்தார். ஆனால், வழக்கம்போல மூவரின் வக்கீல்களும் மனுவை நீட்டினார்கள். 'என்ன இது? கொஞ்சம்கூட சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் காட்டி இழுத்தடிக்கிறீர்கள்?’ என்று சீறினார் நீதிபதி.  


முதலில் எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், 16 பக்க அறிக்கையை ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார். அதில் ஆறு பக்க மருத்துவச் சான்றிதழும் இருந்தது. '63 வயதான சசிகலா சட்டத்தை எப்படி எல்லாம் மதித்து இருக்கிறார். மதிக்கப்போகிறார்’ என்பதை 10 நிமிடங்கள் விலாவாரியாக‌ எடுத்துச் சொன்னவர், '1991-ம் ஆண்டு சசிகலா கார் விபத்தில் சிக்கினார்.அப்போது இருந்து அவரது இடது கண்ணில் பிரச்னை இருக்கிறது. 


http://www.envazhi.com/wp-content/uploads/2012/05/jaya-vkanth.jpg

கடந்த 22 வருடங்களாக கண்ணில் 'குளுக்கோமா’ கோளாறு இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகிறார். கண் புரையும் இருக்கிறது. இதைத் தொடர்ந்தே கடந்த மே 26-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள உதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது..


. நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார்’ என்று சொன்னார் வக்கீல். இவர் வாதாடிக்கொண்டு இருக்கும்போது, வக்கீல் செந்திலும் ஜெயலலிதா வக்கீல் பி.குமாரும் அவருக்கு பாயின்ட்ஸ் எடுத்துக் கொடுத்தனர். அதனால் டென்ஷன் ஆன‌ நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, 'இது கோர்ட்டா? இல்லை மார்க்கெட்டா?’ என்று சத்தம் போட, செந்தில் எழுந்து மன்னிப்பு கோரினார்.


மேலும் டென்ஷனான நீதிபதி மல்லிகார்ஜுனையா, 'தமிழ்நாடு சி.எம். ஆக இருக்கிற ஜெயலலிதாவே கோர்ட்டின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டார். சசிகலா கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் இழுத்தடிக்கிறார். உலகில் வியாதி இல்லாத மனிதர்க‌ளே இல்லை. அதேபோன்று எல்லா குற்றவாளிகளுக்கும் எதாவது ஒரு வியாதி இருக்கத்தான் செய்கிறது. 


அதற்காக கோர்ட்டில் ஆஜராகாமலா இருக்கிறார்கள்? பிடிவாரன்ட் பிறப்பித்தால் கோர்ட்டைத் தேடி வருவீர்கள்தானே?’ என சீறிவிட்டு, சுதாகரன் வராத காரணத்தைக் கேட்டார். அப்போது எழுந்த வக்கீல் சரவணகுமார், 'சுதாகரனுக்கு கடுமையான முதுகுவலி. அதனால் பயணம் செய்ய முடிய​வில்லை’ என்றார். அதன் பிறகு இளவரசியின் வக்கீல் அசோகன் எழுந்து, 'இளவரசிக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது. தொடர் வாந்தி வேறு. அதனால் பயணம் செய்ய முடியவில்லை’ எனப் பள்ளிக்கூடத்துக்கு வராத பிள்ளைகள்போல் வரிசையாகக் காரணங்களை அடுக் கினார்கள்!''


''ஓஹோ!''


''நீதிபதி மல்லிகார்ஜுனையா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். 'அதெப்படி மூன்று பேரும் ஒரே காரணத்தை மாறிமாறிச் சொல்லி கோர்ட்டின் நேரத்தை வீணாக்குகிறீர்கள். ஒவ்​வொரு முறை தேதி கேட்பதும், ஆஜராகாமல் இழுத்தடிப்பதுமே வாடிக்கையாகி விட்டது.


 உலகில் குற்றவாளிகளுக்கு நோய் இருக்கிறது என்பதால், சட்டத்தையும் கோர்ட்டையும் மூடி விட முடியுமா? இவ்வளவு சொன்ன பிறகும் உங்கள் இழுத்தடிப்பு இன்னும் ஓயவில்லையே? இனி சசிகலா ஆஜராகத் தவறினால், சுதாகரனிடமும் இளவரசியிடமும் கேள்விகள் கேட்கப்படும். அதற்குத் தயாராக வந்து விடுங்கள்.


 அடுத்த முறை கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்காத ஆர்டர் வரும்’ என்று கடுமை​யாக எச்சரித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றும் வராவிட்டால், வாரன்ட் பிறப்பிக்கப்படுமாம்!''


''இதுவரை ஒழுங்காக ஆஜராகி வந்தாரே சசிகலா?''


''திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி சமாதிக்கு அமாவாசை தோறும் வருவதாக சசிகலா வேண்டி இருக்கிறாராம். இங்கு வந்தால் செவ்வாய்க்கிழமை அங்கு போக முடியாது என்று நினைத்தாராம். அதனால் வரவில்லையாம்!'' என்ற கழுகாரிடம்...


''இன்று சொன்ன பாதி மேட்டர்கள் பூஜை, புனஸ் காரங்களாகவே இருக்கின்றனவே!'' என்று கேட்டோம். பதில் சொல்லாமல் சிரித்தார், பறந்தார்!


    
குண்டாஸ்..!
சேலம், அங்கம்மாள் காலனியில் இருந்த குடிசைகளுக்குத் தீ வைத்த விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அங்கம்மாள் காலனியில் இருந்த ஜெயலலிதா ஃப்ளெக்ஸுக்குத் தீ வைத்தது, கடந்த முறை அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் தி.மு.க-வினர் ஜெயலலிதா போன்று சேலை அணிந்து அசிங்கப்படுத்தியது என ஆறுமுகத்தின் மீது தீராத கோபத்திலேயே இருந்தது மேலிடம்.


 அதனால்தான், சென்னையில் கைது செய்யப்பட்டவரை சேலம், புழல், வேலூர் என்று அலைக்கழித்தது போலீஸ். இன்னும் சில நாட்களில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நிலையில், இப்போது குண்டர் தடுப்புச் சட்டம்  பாய்ந்திருக்கிறது. இப்போதைக்கு, ஆறுமுகம் வெளியில் வருவது கஷ்டம்தான்!



 நன்றி - தட்ஸ் தமிழ் , ஜூ வி , தகவல் சொன்ன ட்விட்டர் நண்பர்கள்,தினமணி, கார்ட்டூனிஸ்ட் மதி

Monday, January 09, 2012

கோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் ? - காமெடி கும்மி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSb3n_MMlxvf3H4Vevh-NS8TOrDl8KGbjoTT6DpWIlAVgoS1NsH-pymX_XjM3uwNOI_H9sTHvtwLVBRiNEf6Xn6sIN_GYNuGnYpZKN23veNlau2ZotMqoR4A_BNx-JthL4s_Mc3NQjDBD/s1600/1.jpg

1.மன்னா! மகாராணி மாட்டுக்கறி சாப்பிட்டதை  சஞ்சிகைகள் படம் பிடித்து விட்டன, இப்போ என்ன செய்வது? 

சஞ்சிகையை எரித்து விடு, பிரச்சனையை திசை திருப்பி விடு

----------------------------------

2. மிஸ்டர் கோபால்,உங்களுக்கு வேலூர் பிடிக்குமா? பாளையங்கோட்டை பிடிக்குமா?

மொதல்ல போலீஸ்தான் பிடிக்கும் போல

----------------------------------

3. உங்க பத்திரிக்கையை இன்சூர் பண்ணி இருக்கீங்களா? 

அது ஆல்ரெடி பண்ணிட்டேன், என்னைத்தான் இன்னும் பண்னலை, பண்ணனும்

--------------------------------

4. எடிட்டர் - எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கனும். 


அதுக்காக சேல்ஸ் அதிகரிக்க வழிவகை செய்த முதல்வருக்கு நன்றி-னு போஸ்டர் அடிக்கனுமா?

-------------------------------------

5. ஜட்ஜ் - எதுக்காக எடிட்டரை தாக்குனீங்க? 

கைதி- தலையங்கத்துல அவரு எங்க தலைவரை தாக்குனாரு, பதிலுக்கு அவர் தலை, அங்கத்தை நாங்க தாக்குனோம்

------------------------------

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/dece09/13.10.09/yutham1.jpg

6. ஜட்ஜ் - வழக்கை நல்லா விசாரிச்சுட்டேன், சம்பந்தப்பட்ட எடிட்டர்  தன் ஆயுள் முழுவதும் இனி சைவம் மட்டுமே சாப்பிடனும் 

கைதி - இதுக்கு ஆயுள் தண்டனை பெஸ்ட்

--------------------------------------

7. சார்,உங்க புக் பார்த்தேன், நியூஸ் எல்லாம் மட்டனா இருந்துச்சு, உங்க ரசனை ரொம்ப மட்டமா இருந்துச்சு

----------------------------------

8. சிங்கப்பூர்,மலேசியா புகழ் கோபால் பல்பொடிக்கு தடை, கம்ப்யூட்டர் கோர்ஸில் கோபால் லேங்குவேஜ் நீக்கப்பட்டது - ஜெ அதிரடி அறிவிப்பு@இமேஜினேஷன்

-----------------------------------

9. முதல்வர் ஜெயலலிதா சமையலில் ஈடுபடுவதே இல்லை- பொன்னையன் # சட்டசபைக்குப்போகச்சொன்னா அண்ணன் சமையல் அறைல போய் உக்காந்து சாப்பிட்டு இருக்காரு

--------------------------------------
10. ஜெ - நான் வெஜ்னு சொன்னதை அவர் தப்பா புரிஞ்சுக்கிட்டார்..

கோபால் - ஜெ நான்வெஜ்-னு நான் சொல்லவே இல்லை ஜெ நான் -வெஜ் அப்டினுதான் சொன்னேன்

-----------------------------

http://4.bp.blogspot.com/-S7lWYkJLaRU/Tc6HUM5r0II/AAAAAAAAAvA/G2lKaEE6d7Q/s1600/2132_1.jpg

11. பீஃப் எனக்குப்பிடிக்காதுன்னு சொன்னா அவங்க பக்கா  சைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல, பி எஃப் எனக்குப்பிடிக்காதுன்னா அவங்க பக்கா அசைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல # கில்மா கண்டு பிடிப்[பு

----------------------------------------

12. நீங்க மட்டன் சாப்பிட்டதை பார்த்த சாட்சிகள் 4 பேர் இருக்காங்க...

  ஓஹோ, அதை பார்க்காத சாட்சிகள் 4 கோடி பேர் இருக்காங்க ,4 பெருசா? 4 கோடி பெரிசா?

-----------------------------------

13. உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போறோம்

கோபால்- அப்போ இதுவரை எடுத்தது? 

போலீஸ் -சுளுக்கு

-----------------------------------------

14. நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன், எனக்கே ஓட்டு போடுங்க ... நான்  எதுவுமே சாப்பிட மாட்டேன்,எனக்கே ஓட்டு போடுங்க # 2016 எலக்‌ஷன்

-------------------------------------

15.மாட்டுக்கறி பிரச்சனையில் சிக்கியதால் இனி ஜெ கோமாதா என அழைக்கப்படுவாரா?

-----------------------------------

16. நக்கீரன் கோபால் மீது நெல்லை தொழிலதிபர் தீடீர் மோசடி வழக்கு #  ம்ஹூம்,இது எடுபடலை, யாராவது ஒரு லேடி என் கையைப்பிடிச்சு இழுத்துட்டார்னா OK

----------------------------------------------

17.பார்ப்பதற்கே பயங்கரவாதி தோற்றம் தரும் மீசையுடன் இருந்ததால்தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார், மற்றபடி பழி வாங்கும் எண்ணம்  அரசுக்கு இல்லை - ஜெ அதிரடி அறிவிப்பு

---------------------------------------

18. நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு# அட போங்கம்மா, உங்க ராசி நெம்பரை மறந்துட்டீங்களே? இன்னும் 3 சேர்க்கவும்

--------------------------------

டிஸ்கி -

PLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

 

விநாயகா - HITCH பட தழுவலா?-சினிமா விமர்சனம்

 

குங்குமம் வலைப்பேச்சு வாழ்த்துகள்

 



Saturday, January 07, 2012

நக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன? தமிழ்நாடே பரபரப்பு

முதல்வர் ஜெ., குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழை தீ வைத்து அ.தி.மு.க.,வினர் கொளுத்தினர் . சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் கல் மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.


சி.பி - வீரப்பன் மேட்டருக்குப்பிறகு நக்கீரன்  சர்க்குலேஷன் இறங்கிடுச்சேன்னு கவலைல இருந்தாரு. இதை வெச்சே 6 மாசம் ஓட்டிடுவாருன்னு நினைக்கறேன்..


நக்கீரன் இதழில் சசிகலாவுடனான பிரச்னையில் ஜெ., இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று அட்டைப்படத்தில் ஜெ., சசிகலா படத்துடன் செய்தி வெளியானது. இதில் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாக அ.தி.மு.க,வினர் இன்று ஆவேசமுற்றனர். மாநிலம் முழுவதும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், அரியலூர், ராசிபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து எரித்தனர். சில கடைகளில் அ.தி.மு.க,வினர் புகுந்து புத்தகங்களை அள்ளி சென்றனர்.


சி.பி - இவங்க ரகளை செஞ்சாக்கூட கண்ணியமா செஞ்சிருக்காங்க, சினிமால வர்ற மாதிரி கடை எல்லாம் உடைக்கலை, காசு கொடுத்துத்தான் புக் வாங்கி எரிச்சிருக்காங்க, அந்த வகைல பாராட்டலாம்.. இந்த மேட்டர் இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கோபால் நக்கீரன் காப்பியை டபுள் ஆக்கி இருப்பாரு.




இதற்கிடையில் இன்று காலையில் சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் அமைந்திருக்கும் நக்கீரன் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க.,வின் பல்வேறு பிரிவினர் கூடினர். நக்கீரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கும் இதழ்களை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் கல் மற்றும் கம்புகளால் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடி , அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தன. தொடர்ந்து போலீசார் வந்தும் தொண்டர்கள் கடும் ஆவேசமாக இருப்பதை காண முடிந்தது.


சி.பி - பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியதுதான், ஆனா நடந்த மேட்டர் ஜாதி வெறியை தூண்டுவதாகவும், தனி நபர் தாக்குதலாகவும் அமைஞ்சிருக்கு.கோபால் அண்ணனுக்கு களி கன்ஃபர்ம்.. .

இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில்: ஆளும் அரசின் அராஜகம் அத்துமீறி போயிருக்கிறது. போலீசாருக்கு பல முறை தொடர்பு கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது என்றார்.



சி.பி - அண்ணே, காமெடி பண்ணாதிங்க, நீங்க தாக்குனது சி எம்மை, போலீஸ் எப்படி உங்களுக்கு சப்போர்ட்டா வரும்னு எதிர்பார்க்கறீங்க? எதுக்கும் கொஞ்ச நாள் காட்டுக்குள்ள ஒளிஞ்சுக்குங்க..

கருணாநிதி கண்டனம் : இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜனநாயக நாட்டில் இது போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர் குறித்து அவதூறாக செய்தி வெளியானால் கோர்ட்டில் முறையிட்டு வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


சி.பி - தினகரன் பத்திரிக்கைல அழகிரி ஸ்டாலின் கருத்துக்கணிப்பு வந்தப்ப ஆஃபீஸ் எரிக்கப்பட்டதே அப்போ என்னங்கய்யா சொன்னீங்க?ரிவைண்ட் ப்ளீஸ்


நக்கீரன் மீது அவதூறு வழக்கு : நக்கீரன் செய்தி தொடர்பாக இந்த பத்திரிகை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு செயலர் பொன்னையன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முதல்வர் ஜெ., மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்யவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.பி -ஜாதி வெறியை தூண்டுகிறார் என்று கூட கேஸ் போடலாம்..அந்த அளவு கேஸ்ல ஒர்த் இருக்கு... 


நக்கீரனில் வந்த செய்தி...