Showing posts with label திருப்பூர். Show all posts
Showing posts with label திருப்பூர். Show all posts

Saturday, February 22, 2014

நெம்பர் ஒன் பனியன் சிட்டி திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மக்களின் நெம்பர் 2 பிரச்சனை

இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு கோரிக்கையா? என அதிர்ச்சியடையவைக்கிறார்கள். ஊரில் கழிப்பறை இல்லாததால், இருளை எதிர்பார்த்து வாழ்கிறார்கள் அப்பகுதி பெண்கள். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி 9வது வார்டு இந்திரா நகர் பொதுமக்களின் பரிதாப நிலைதான் இது. 


தாகம் தணிக்கும் உப்பு நீர் 

 
தண்ணீர் பிரச்சினைக்காக 10 நாட்களுக்கு முன்பு, திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். கடந்த 6 மாதங்களாக தண்ணீரின்றி அவதிப்பட்டவர்களுக்கு, மனு அளித்தபின் ஆறுதலாக, தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை உப்புத் தண்ணீர் மட்டும் கிடைக்கிறது. தண்ணீருக்கு ஊரில் சிக்கல் நீடித்த நிலையில், விலைக்கு வாங்கி பயன்படுத்துவது, அக்கம் பக்கத்தில் உள்ள சாலைகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து தாகம் தணித்துள்ளனர். 


இரவில் விநியோகம் 

 
‘எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது வீடுகட்டிக் கொடுத்தாங்க. அப்பயிருந்து நாங்க இங்க தான் குடியிருக்கோம். மின்சாரத்துக்கே ரொம்பக் கஷ்டப்பட்டு போராடி வாங்கினோம். இப்ப தண்ணீர் தட்டுப்பாடு ரொம்ப அதிகமாக இருக்கு. கலெக்டருகிட்ட மனு கொடுக்க, பத்து நாளைக்கு ஒருக்கா தண்ணீர் வருது. அதுவும் நேரங்கெட்ட நேரத்துல தான் வருகிறது. இரவு 11 மணிக்கு மேலதான் உப்புத் தண்ணீர் வருது’ என்கிறார் மூதாட்டி கண்ணாள். 



இருளை எதிர்பார்த்து 

 
‘இந்திரா காலனியில 300 பேர் குடியிருக்கோம். ஆனா எந்த வீட்டுலயும் கழிப்பறை வசதி கிடையாது. அன்னாடம் இருட்டை எதிர்பாத்துட்டு வாழ்றோம். காலை யில ஆம்பளைக நடக்க, அக்கம் பக்கம் காட்டுக்கு போகணும். இல்லைன்னா சாயங்காலம் பொழுதோட தான் போயாகணும். கழிப்பறை இல்லாதால பொண்டு புள்ளை, கொழந்தை குட்டினு எல்லாரும் கஷ்டப்படுறோம். ஒரு கழிப்பறை கட்டுனாங்க. அதுல கரையான்தான் குடியிருக்குது. காலனியில யாருக்கும் உதவாம கெடக்கு’ என வேதனையை பகிர்ந்துகொண்டார் கண்ணாள். 



மூடிய கழிப்பறை 


 
2006-07ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் எ.ஏஸ். மணி ரூ.1.50 லட்சம் ஒதுக்கி கழிப்பறை கட்டிக் கொடுத்தார். அப்போது நெடுநாள் குறை தீரப்போகிறது என மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், 7 ஆண்டுகள் முடிந்தும் திறப்பு விழா காணாமல், தண்ணீர் பிரச்சினையால் புழக்கத்திற்கும் கொண்டுவரமுடியாமல் போன தால், கழிப்பறை மூடிவைக்கப்பட்டுள்ளது. 



கழிப்பறைக்கு செலவு செய்யப்பட்ட மக்களின் வரிப் பணம், மக்களுக்கு பயன்படா மல் வீணாகிவிட்டது. கழிப்பறைகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்திருந்தால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால், அதை கடைசிவரை யாரும் செய்யவில்லை. தண்ணிருக்காக கழிப்பறையை மூடி வைத்திருப்பது வேறு எங்கும் பார்த்திராத விநோதம். இந்த கழிப்பறை உடனடியாக திறக்கப்பட்டால் பெண்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என்கிறார் திமுகவைச் சேர்ந்த முருகேசன். 



பூட்டப்பட்ட சமுதாயக்கூடம் 

 
ரூ.5 லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தில், பலருக்கும் திருமணம் தொடங்கி காலனியில் யாராவது இறந்துவிட்டால், அவர்களை சமுதாயக்கூடத்தில் வைப்பது வரை ஊரின் அனைத்து நல்லது கெட்டதுக்கும் சமுதாயக்கூடத்தை பயன்படுத்தினோம். 


அதையும் தற்போது பூட்டி வைத்துவிட்டனர். முன்பு எப்போதும் திறந்தே இருக்கும். தற்போது அப்படியொரு நிலை இல்லை. சமுதாயக்கூடத்தை சுற்றித்தான் ஊரின் கழிவு நீர் தேங்கி உள்ளது. கொசுக்களின் கூடாரமாக கழிவுநீர் தேக்கம் காணப்படுகிறது என்கின்றனர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர்கள். 



திறந்தவெளி குப்பைத்தொட்டி 

 
இந்திரா காலனி முகப்பில் குப்பைகள் தான் குடியிருக்கின்றன. எந்நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. வீட்டின் காய்கறிக் கழிவு தொடங்கி அனைத்துக் கழிவுகளும் இங்கு கொட்டப்படுவதால் குடியிருப்புப் பகுதியில் எந்நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் பகுதியில் ஒரு குப்பைத்தொட்டி கூட வைக்கப்படாமல் துர்நாற்றத்தோடு வாழ்ந்து வருவோம் என்கிறார் இந்திரா காலனியைச் சேர்ந்த தங்கராஜ். 



சாபத்தில் இந்திரா காலனி


 
ஊரின் 2 பக்கமும் தண்ணீர்த் தொட்டி இருக்கு. ஆனால், தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருக்கு. கழிப்பறைக்கு தண்ணீரின்றி கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகி யும் தண்ணீரின்றி பூட்டி வைக்கப் பட்டே உள்ளது. கழிவுநீர் செல்வ தற்கு வழியின்றி குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் வருகின்றன. இங்குள்ள மக்கள் பெரும்பாலன வர்கள் விவசாயக் கூலிகள். ஆனால், கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்து வருமானமின்றி பலரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்கு செல்கின்றனர். 


கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்வதைப்போல், இன்னமும் இருளை எதிர்பார்த்து பெண்கள் வாழ்வது என பல்வேறு பிரச்சினைகள். ஒட்டுமொத்தமாக, மாவட்ட நிர்வாகம் தெற்கு அவி நாசிப்பாளையம் வினோபா நகர் இந்திராகாலனி பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் முருகேசன். 


 நன்றி - த தமிழ் இந்து
 
 

Monday, December 24, 2012

திருப்பூர் பதிவர், ட்விட்டர்,ஃபேஸ்புக் சந்திப்பு - 30.12.2012

பதிவர் சந்திப்பு இதுவரை நடந்தவற்றில் பிரமாண்டமான வெற்றி பெற்றவை 


1. நம்ம உணவு உலகம் ஆஃபீசர் நடத்திய நெல்லை சந்திப்பு , அனைவரையும் அழைத்து பிரமாதபப்டுத்தினார் , 


2. அடுத்து மதுமதி யின் சென்னை பதிவர் சந்திப்பு . கலக்கு கலக்குன்னு கலக்கிட்டார் ,


 3. 3 வதா  கோவைல  சின்ன வீடு சுரேஷ் , சித்தார் சங்கவி ( அந்த தொட்டபெட்டா முட்டை புரோட்டா சங்கவி அல்ல)  ரக்சியமா நடத்தினது. அது எந்த அள்வு ஹிட் ஆச்சுன்னு சரியா தெரியல .( அதை ஏன் ரகசியமா நடத்தினாங்கன்னு ஒரு பதிவு போடலாம்னா 2 பேரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு “ விடுய்யா விடுய்யா நமக்குள்ளே என்ன?  அப்டினு பூசி மெழுகிட்டாங்க ;-)


4.  நாலாவதா  இப்போ நடக்கப்போகும் திருப்பூர் பதிவர் சந்திப்பு


வழக்கம் போல் அவங்க போட்ட பதிவோட காபி பேஸ்ட் பதிவு . நாம டைப் பண்ணி போடும் பதிவு காதலித்து கைப்பிடிக்கும் பெண் போல , ரொம்ப உழைக்கனும், காபி பேஸ்ட்  பதிவு மாமா பொண்ணு , அத்தை பொண்ணு மாதிரி, நமக்கு சொந்தமில்லை , ஆனாலும் ஜாலி ஹி ஹி

வாருங்கள் இணையத்தால் இணைவோம்

இதுவரை இணையம் மூலம் மட்டுமே பழகிய சொந்தங்கள் நேரில் காண ஒரு வாய்ப்பு .

 நாமும் வளர்ந்து நம்முடன் சமுதாயத்தையும் வளர்க்க ஒரு வாய்ப்பு.

தாய்  தமிழ் பள்ளி மாணவர்களின் அருமையான கலை நிகழ்ச்சிகள் காண ஒரு வாய்ப்பு ..

அந்த மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ ஒரு வாய்ப்பு .

தமிழ்நாட்டை கலக்கிய ஒரு அருமையான ஆட்சிபணி அதிகாரியை சந்திக்க நல்ல வாய்ப்பு


வலைதளங்கள் இனி என்ன செய்ய வேண்டும் , வருங்காலம் எப்படி இருக்கும் என மற்றவர்களுடன் விவாதிக்க ஒரு வாய்ப்பு .

நமது தளம் மேலும் வளர , நாமும் பல புது விஷயங்கள் கற்று கொள்ள ஒரு வாய்ப்பு ..

இந்த அனைத்து வாய்ப்புகளும் வேண்டுமா ????

இங்கே  வாருங்கள் :

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 

நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 

இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
                 திருப்பூர்.
 
 
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
  நம்மில் ஒன்றுமை நீங்கில்
  அனைவருக்கும் தாழ்வு " 

          இன்று நாம் காணப்போகும் இவ்விழாவானது  "தமிழ் உறவோடு உறவாடுவோம்"    என்னும்  புது சிந்தனையின் அறிமுகத்திற்கான துவக்க விழா ஆகும்.
மக்கள் சந்தை.காம் இணையத்தின் தொழிற்களம் மின் இதழ்  மற்றும் தமிழ் மீட்சி இயக்கம் இணைந்து திருப்பூர் மாநகரில் " உறவோடு உறவாடுவோம் " என்ற தலைப்பில் தமிழ் உறவுகளை ஒரு களத்தில் குவிக்க இவ்விழாவை எதிர்கொள்கின்றது.
நோக்கம் ஒன்றாகியதால் இவ்விழாவை ஒரு நல்ல கருத்தரங்க மேடையாக உருவாக்கி வருகின்றோம். 
பல அமைப்புகளை சார்ந்த நண்பர்களும் இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்து, தங்கள் ஆற்றல்களையும் உடன் அளித்து வருகின்றனர்.
இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."

       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.



நிகழ்ச்சி நிரல் : 

சரியாக மதியம் 2.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது

2.30  -   :   தமிழ்த்தாய் வாழ்த்து
            :  வரவேற்புரை
2.45  -   :   துவக்கவுரை ( விழாவின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து)

3.00  -   : கருத்தரங்கம் 
         
தலைப்புகள் :

குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பார்வைகள்:

1. தனி மனித ஒழுக்கம்,
2. இலஞ்சம், ஊழல், சாதி, மத வேறுபாடுகளைக் களையெடுத்தல்
3. தமிழன் என்ற அடையாளத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்
4. சிறந்த தொழில்முனைவோனாக உருவாக தகுதிகளை வளர்க்கும் விதம்
5. தொழில்நுட்பத்தின் உதவியை சரியாக பயன்படுத்துதல் உடன் இயற்கையை நேசித்தல்


என்ற தலைப்புகளின் கீழ் விபரங்களை தொகுத்து ஒரு சுவையான கருத்தரங்கம் உங்களுடனும், உடன் "தாய் தமிழ் பள்ளியை" சேர்ந்த மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியையும் அரங்கேற்ற உள்ளோம்.

அதைத்தொடர்ந்து இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்
திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் 
மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர்

தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.
 



தொழிற்களம் டிசம்பர் விழா அழைப்பிதழ்

பதிவுலகை சார்ந்த நண்பர்களுக்கென்றே இந்த அழைப்பிதழ் பதியப்பட்டுள்ளது.  


அனைத்து பதிவர்களையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்.
தொழிற்களம் விழாவில், நிறைவின் சிறப்பு பகுதியாக பதிவர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...!!


தலைப்பு :


நாளைய வலையுலகம்..?

நன்றி - தொழிற்களம் 




Wednesday, November 21, 2012

2000 வது பதிவு - திருப்பூர் - ஆஸ்திரேலியா மினி ட்வீட்டப்

நால்வர் அணி

கோவை சதீஷ் , கானா ப்ரபா, சி.பி , ராஜ நாயகம் சார் 

கானா ப்ரபாவை பிளாகரா, ட்விட்டரா கொஞ்ச நாளா தான் பழக்கம். ஆனாலும்  நீண்ட நாள் நண்பர் போல் அவர் மேல் ஈர்ப்பு வர 3 காரணங்கள் . முதல் காரணம் அவர் ஒரு ஈழத்தமிழர். அவரை நேரில் சந்திச்சா அங்கே உண்மை நிலவரம் என்ன போன்ற நாம் அறியாத வரலாற்று உண்மைகள் அறியலாம்.  2 வது காரணம் யாருடனும் அவர் சண்டை போட்டு பார்த்ததே இல்லை, எல்லோருடனும் இணக்கமாக இருக்கும் கலகலப்பு பிரியர் . மூணாவது காரணம் முக்கியம் , இதுல கொஞ்சம் சுய  நலம். அதாவது என் சினிமா விமர்சனத்தில் பலர் கிண்டல் பண்ணுவது - இயக்குநருக்கு சில கேள்விகள்.அது பொதுவா அவங்க படிக்க எழுதுவது அல்ல, மக்கள் ரசிக்க எழுதுவது. ஆனால் பலரும் அது தேவையற்றது என சொல்லி வந்த வேலையில் இவர் தான் முதன் முதலாக அதை ரசித்து முன்னிலைப்படுத்தினார்.


ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இவர் ஒரு ரேடியோ ஜாக்கியா பணி ஆற்றி வருகிறார், நம்ம கோமாளி கோபி செல்வா கூட ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்ற லட்சியம் உடையவர் தான்.இவரது கடுமையான உழைப்பு பற்றி நான் எப்போ அறிந்தேன் எனில் மவுன ராகம் படத்தின் பி ஜி எம் பற்றி அக்கு வேறு ஆணி வேறாய் இவர் அலசியது.அதுவரை இளையராஜாவின் இசை ரசிகனாக இருந்தவன் அப்பதிவு படித்த பின் நுணுக்கமாய் பலவற்றை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.பின்னணி இசை பற்றிய பல அரிய தகவல்கள் , கலெக்‌ஷன்கள் கிடைக்கப்பெற்றேன்.


அப்பேற்பட்டவர் சிட்னியில் இருந்து தனது தாயகமான யாழ்ப்பாணம் வர்றதா சொன்னதும் சந்திக்க உறுதி பூண்டேன்.அவர் தமிழகம் வந்து கோவை , கொச்சின் வர்றதாகவும் வழியில் ஈரோடும் வருவதாக அவரது 12 அத்தை பெண்கள் மேலும் சத்தியம் செய்திருந்தார்.ஆனா பாருங்க இடையில் என்ன ந்டந்ததோ  திடீர் என டாக்டர் ராம்தாஸ் போல் பல்டி அடிச்சுட்டார். ஈரோடு புரோகிராம் கேன்சல். கோவை , அல்லது திருப்பூரில் உனக்கு இஷ்டம்னா வந்து என்னை பார் அப்டின்னுட்டார்.


 ஒரு பிரபல பதிவர்னா ஒரு இது இருக்கனும் இல்லையா? அதனால அதை எல்லாம் நான் சகிச்சுக்கிட்டேன் .ஈரோடு டூ கோவை 100 கிமீ ஈரோடு டூ திருப்பூர்  42 கிமீ என்பதால் திருப்பூரில் சந்திக்க முடிவாச்சு . சென்னிமலையில் இருந்து காலை 6 மணிக்கு பஸ் ஏறி ஈங்கூர் போனேன். கோவை பாசஞ்சர் ஈரோட்டில் 7 மணிக்கு அது ஈங்கூர் வர 7.30 ஆகும். டிக்கெட் எடுத்து வெயிட்டிங்க்.. ஈங்கூர் டூ திருப்பூர்  32 கிமீ அதுக்கு ரயில் டிக்கெட் ஜஸ்ட் அஞ்சு ரூபாதான் , அதே எக்ஸ்பிரஸ்னா 28 ரூபா , ரிசர்வ்ல வந்தா 46 ரூபா .


ஹோம் மினிஸ்டர் கால் .பம்மும் பிரபா

ஹோம் மினிஸ்டரிடம் பம்மும் கானா 


காலை 8.40 க்கு திருப்பூர் போய் சேர்ந்தேன். ஆகாய மனிதன் என பிளாக்கிலும், ஒன்லி 1 என ட்விட்டரிலும் அக்கவுண்ட் வெச்சிருக்கும் அண்ணன் யுவராஜ் ரெடியாக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தார். எனக்கு ரொம்ப சந்தோஷம். பொதுவா நமக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்பதே மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தானே?


சரவண பவன் ஹோட்டல்ல டிஃபன் சாப்பிட்டோம் .அண்ணன் 2 இட்லிதான் சாப்பிட்டார் ( ஹன்சிகா இட்லி ) நான் வழக்கமா 3 ரோஸ்ட் ,  ஒரு பொங்கல் சாப்பிடும் ஆளாக இருந்தாலும் கண்ணு பட்டுடக்கூடாது என்பதால் ஒரே ஒரு ரவா ரோஸ்ட்டும் , ஒரு பொங்கலும் மட்டும் சாப்ப்பிட்டுட்டு  டைம் பார்த்தா காலை 9 மணி . அண்ணன் கானாப்ரபா 10 மணிக்கு வருவதாக சொல்லி இருந்தார் .



 ஒரு மணி நேரம் வெட்டி அரட்டை அடித்தோம் .என் மொபைல் சார்ஜ் அங்கே ஹோட்டல்லயே போட்டுக்கிட்டோம் . சார்ஜ் போட்டுக்குடுத்த ரிசப்ஷனிஸ்ட் கோமதிக்கு கோடானு கோடி நன்றி ;-))

எம் ஜி ஆர் மாதிரி அட்டகாசமாய் காரில் வந்து இறங்கினார்  அண்ணன் கானாப்ரபா . ஹிந்திப்பட ஹீரோ மாதிரி முகம். ஐ டெக்ஸ் மையின் கலரில் கன்னங்கரேல் என்ற முடி . 38 வயசாகியும்  ஒரு நரை முடி கூட இல்லை என்பது பொறாமை தருவதாகவும், ஏமாற்ற மாகவும் இருந்தது,. ஏன்னா எனக்கு 5 வருஷம் முன்னாடியே அதாவது 25 வயசுலயே நரை முடி வந்துடுச்சு  ( டேய் நாயே அது இள நரை இல்லை, கிழ நரை )



ராஜநாயகம் சார் தன் திரைத்துறை அனுபவங்களை நவரசத்துடன் விளக்குகிறார்

ராஜ நாயகம் சார்   கோவை சதீஷ் , கானா ப்ரபா,  ஆகாய மனிதன் யுவராஜ்

காரை விட்டு இரங்கும்போதே அவருக்கு ரசிகையிடம் இருந்து ஃபோன் . ( ஏன்னா அண்ணன் வெட்கச்சிரிப்போட பம்மிக்கிட்டே பேசினாரு )கூட அவருடன் வந்தது கோவை சதீஷ் ட்விட்டர்ல சே சதீஷ் . ட்விட்டர்ல பல சீரியஸ் கருத்துக்கள் எல்லாம் போடுவாரு . ஆனா ஆள் நேரில் செம ஜாலி டைப்பாக இருந்தார்.


 அருகாமையில் உள்ள பார்க்குக்கு போனோம் .மூவரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம் . இலங்கைப்பிரச்சனை  , எம் ஜிஆர் ஆதரவு  , ஜெயின் கமிஷன் என விவாதம் வளர்ந்தது .


 கானாப்ரபாவை பேசவே விடாமல் கோவை சதீஷ் அடிக்கடி இடை மறித்து தன் விவாதத்தை சூடாக முன் வைத்தார் .


 அடுத்து வந்தவர்  சினிமாத்துறையில் உதவி  இயக்குநராகப்பணி ஆற்றிய ராஜநாயகம் சார். வாட் எ மேன்? மிமிக்ரி , மோனோ ஏக்டிங்க்  என ஆள் நவரச நடிப்பையும் , நாகேஷின் பாடி லேங்குவேஜையும் சந்திர பாபுவின் வேகத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார். கொங்கு மண்டலத்தில் இருந்ப்பவர்கள் அவசியம் அவரை சந்திச்சுடுங்க.. அரிதான மனிதர் , சுவராஸ்யமான பொக்கிஷ தகவல்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கு.



கே பாக்யராஜ் அவர்களிடம் அவர் ராசுக்குட்டி படத்தில் பணி ஆற்றிய சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார் . திரை உலகின் கறுப்புப்பக்கங்கள் , நீலப்பக்கங்கள் , பச்சைப்பக்கங்கள் அனைத்தும் பகிர்ந்தார் . 


 நீங்க ஏன் சினி ஃபீல்டுல சைன் பண்ணாம இங்கே வந்துட்டீங்க?


 ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தான். என்னை மாதிரி ஆட்களுக்கு சி நி ஃபீல்டு ஒத்து வர்லை


 பாக்யராஜ் சார்  உங்களுக்கு சம்பள விஷயத்துல நல்லா கவனிச்சுக்கிட்டரா?


 அதுல எல்லாம் குறை வைக்கலை..

 இல்லை, எதுக்கு கேட்கறேன்னா பாக்யா வார இதழ்ல் படைப்பாளிகளூக்கு சன்மானம் தர்றதில்லை, விசாரிச்சதுல வேட்டியை மடிச்சுக்கட்டு பட தோல்வியின் காரணமா ஏராளமாம்ன நட்டத்தை அவர் சந்திச்சார்னும் அதனால தான் சன்மானம் தர முடியலைன்னு சொன்னாங்க. அவர் வெற்றிகொடி நாட்டிய தருணங்களில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டாரா?


 அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. கூட இருந்தவங்க பலருக்கும் என்னை பிடிக்கலை,. பல காலம் ஆபீஸ் பாயாக இருந்து படிப்படியாக உதவி இயக்குநர் ரேஞ்சுக்கு வந்தவங்களால டக்னு மேலே  வந்த என்னை பிடிக்காம போயிடுச்சு


கானாப்ரபாவிடம் தனது 365 காதல் கடிதங்கள் நகல் அளிக்கும் ராஜநாயகம் சார்
சத்திய மூர்த்தி சார் ,பரிசல் , ராஜ நாயகம் சார்   , ஆகாய மனிதன் யுவராஜ்,கானாப்ரபா,   கோவை சதீஷ்

அவர் கூட ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.


 அடுத்து பரிசலுக்கு ஃபோனை போட்டு வர்லியா?னு கேட்டோம். 12 மணிக்கு கிளம்பி வர்றதா சொன்னார் . யூ ட்யூப்பில் சினிமா விமர்சனம் செய்யும் அவினாசி இட்ஸ் பிரசாந்த்க்கும் தகவல் சொல்லியாச்சு .



தனியா அனுப்பினா எங்கே போவாரோ என்றோ அல்லது தற்செயலாகவோ பரிசல் தன் இரு மகள்களின் கண்காணிப்பில் வந்தார் .  பைக்கில் வந்திருந்தார்.


 அவர் வந்ததும் விவாதம் சூடு பிடித்தது . ராஜன் பிரச்சனை குறித்து விரிவாக விளக்கினார். கானாப்ரபா ராஜனுடன் ஃபோனில் நலம் விசாரித்தார்.


பின்  பரிசல் ( இவர் பல வருடங்களுக்கு முன்  உல்லாச ஊஞ்சல் , உங்கள் ஜுனியர் மாத இதழ்களில் கே பி கிருஷ்ணகுமார் , உத்தம பாளையம் , திருப்பூர் என்ற பெயரில் கவிதை எழுதி வரும்போதே  பழக்கம் ) ஆஃபீஸ் வேலையாக தன் கம்பெனிக்கு தொழிலாளர்களை கமிஷன் பேஸில் அழைத்து வர ஒரிசா சென்ற அனுபவத்தை பகிர்ந்தார்.

அது 'கே.பி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணாபுரம் இல்லீன்னா உடுமலைப்பேட்டை இல்லீன்னா திருப்பூர் -ன்னு வரும்.   - பரிசல் பதில் ;-))


  ரத்த தானம் ,  உடல் தானம் , சில கேர்ள் ஃபிரண்ட்ஸ்களுக்கு முத்த தானம் என எல்லா தானமும் செய்த அவர் இணைய உலகில் முதன்  முதலாக லேப்டாப் தானம் செய்த சுவராஸ்யமான சம்பவத்தை திரைக்கதையுடன் விளக்கினார். அவர் கதை சொன்ன முறை சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்றே உணர்வைத்தந்தது .



சத்திய மூர்த்தி என்னும் ட்விட்டர் நண்பர் வந்தார். அவர் அறிமுகம் அப்போதுதான் . என்ன ஆச்சரியம் என்றால் அவர் ஆகாய மனிதன் யுவராஹின் அப்பாவின் நண்பர். அங்கே தான் அறிமுகத்தில் தெரிந்தது. முகவரி படத்தில் பால குமாரன் எழுதிய வசனத்தை ரகுவரன் சொன்னது நினைவு வந்தது  - இந்த உலகம் ரொம்ப சின்னது ,இங்கே நல்லவங்க சந்திச்சே ஆகனும் “


 அப்புறம் 1 மணி வரை பேசிக்கிட்டு இருந்தோம் . ஹோம் மினிஸ்டரிடம் இருந்து ஃபோன் வரும்போது மட்டும்  கானாப்ரபா பம்மிக்கொண்டே தனியே போய் பேசி வந்தார் .

 ஆனானப்பட்ட பரிசலே தன் மனைவியிடம் இருந்து ஃபோன் வந்த போது பம்மியது செம காமெடியாக இருந்தது, வீட்டுக்கு வீடு  வாசப்படி .


 பின் பரிசல் விடை பெற்றார்.  ராஜ நாயகம் சார் கிளம்பினார். அனைவருக்கும் கானாப்ரபா 18 வகை இனிப்புகள் கொண்ட கோவையில் வாங்கிய ஸ்வீட் பாக்சை  பரிசாக அளித்தார். எல்லா ஸ்வீட்டும் இருந்துது, ஆனா அல்வா மட்டும் இல்லை , கேட்டதுக்கு “ என்னய்யா விபரம் தெரியாத ஆளா இருக்கே..  அல்வான்னாலே அது பொண்ணுங்களுக்கு தர்றதுக்குத்தானே? என்றார்.


எங்கப்பா சின்ன வயசுல சினிமாப்ரியராக இருந்தார், நாலணாவுக்கு விற்கும் சினிமாப்பாட்டுப்புத்தகங்களை வாங்கி சேகரித்து வைத்திருந்தார். அபூர்வமான கலெக்சன். 100 புக்ஸ் கொண்ட பைண்டிங்க் புக்ஸாக 10 புக்ஸ் மொத்தம் 1000 பாட்டுப்புத்தகங்கள் இருந்தன. அவை 1960 - 1970 இல் வந்த படங்கள்.


 பேசிக்கலாக கானாப்ரபா பாடல் , இசை ரசிகர் என்பதால் அவருக்கு பாட்டுப்புத்தகங்கள் பரிசாக அளிக்க நினைத்தேன். ஆனால் மனசில் ஒரு தயக்கம். பழைய பாட்டுபுக் என அவர் ஏதாவது நினைப்பாரா? என . அப்படி ஏதும் நினைக்கவில்லை. மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். எனக்கு மிக்க மகிழ்ச்சி , எங்கப்பாவின் அபூர்வ கலெக்‌ஷன்  சிட்னியில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை .


பின் லஞ்ச் சாப்பிட   அவினாசி ரோட்டில் உள்ள  சரவண பவன் போனோம். சாப்பாடு காலி,. வெரைட்டி மீல்ஸ் , டிஃபன் அயிட்டம்தான் . வெஜிடபிள் ஃபிரைடு ரைஸ் , தக்காளி சாதம் , தயிர் சாதம்  ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம் .

 ட்வீட் லாங்கர் சாப்பாடு என கமெண்ட் போட்டு அதை ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் கானாப்ரபா போட்டார்.


 அப்போ பிரசாந்த் வந்தார். ஆள்  ட்விட்டர் டி பி யில் அப்பாவி மாதிரி முகத்தை வெச்சிருந்தாலும் நேரில் தாதா போல் ஆஜானுபாவத்துடன் இருந்தார். அவர் உள்ளங்கை முறம் போல் இருந்தது , ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் . அவருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம் .


 பிரியும் நேரம் வந்தது . எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு நானும் யுவராஜும்  திருப்பூர் ரயில் நிலையம் வந்தோம் . அப்போ  மாலை 3. 4 மணிக்கு ரயில் . உள்ளே வந்து ஒரு மணி நேரம் கம்பெனி குடுத்தார். பின் ரயில் வந்ததும் கிளம் பியாச்சு


 அனைவருக்கும் நன்றி !!!
 
 

Wednesday, August 22, 2012

ஈரோடு , திருப்பூர் - பிளாட் முதலீடு மோசடி, உஷார்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgErvq9vwBJBSEu1riHUdCLb2C2ArtAf2aKq-H3Vj1_G-Qx9zjpUUrkZglWlM8oY1A0Ph8rl4RACAu5ZBYYZaUoxA-gCoNUApk8NyTRMt2MPLHvxbw_ByOhfFeKvj8DI1tCqEBNYvJA59o/s1600/Rmwc13.JPG

5 வட்டிக்கு ஆசைப்பட்டு..!

தென் மாவட்டத்தில் பிளாட் மோசடி
முக் குளறுபடிகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த மோசடி அம்பல​மாகி சந்தி சிரிக்கிறது. 'ஐந்து லட்சம் ரூபாயை பிளாட்டில் முதலீடு செய்தால், மாதம்தோறும் ஐந்து சதவிகிதம் வட்டி’ என்று கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விட்டு இருக்கிறார்கள்! 


சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ராஜா,  தீப்பெட்டித் தொழிற்சாலையில் மேஸ்திரியாக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், மருது என்பவருடன் சேர்ந்து, 'ஆர்.எம்.வெல்த் கிரியேஷன்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். சில பெரிய நிறு வனங்களுக்கு ஏஜென்ட் போல தன்னைக் காட்டிக்​கொண்டவர், ஒவ்வொரு பிரிமியம் தொகைக்கும் 5 சதவிகிதம் கமிஷன் தருவதாகச் சொன்னார்கள்.


'பிரிமியம் தொகைக்கே கமிஷனா?’ என்று வாய் பிளந்த பலரும் வரிசை கட்டி நின்று அவர்​களிடம் இன்சூரன்ஸ் பாலிசி போட்டனர். இந்த நேரத்தில், சாத்தூர் அருகே எட்டூர்வட்டத்தில் 102 ஏக்கர் பரப்பளவில் கோல்டன் சிட்டி என்ற பெயரில் பிளாட் போட்டனர். 



ஒரு பிளாட்டுக்கு 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை என்று விலை வைத்தனர். எந்த பிளாட்டில்... எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அந்தத் தொகைக்கு ஐந்து சதவிகிதம் மாதம் தோறும் வட்டி என்றும், வட்டி வேண்டாம் என்றால் கிரையம் செய்து தரப்படும் என்றும் கவர்ச்சிகரமாக விளம் பரப்படுத்தினர்.


 உடனே, 'எனக்கு ஒண்ணு... எங்க அப்பாவுக்கு ஒண்ணு’ என்று கூட்டம் மொய்த்தது.


அதோடு ஐந்து பேரை இந்தத் திட்டத்தில் சேர்த் து விட்டால், ஓர் ஆளுக்கு 500 ரூபாய் கமிஷன் என்று, செயின் லிங்க் சிஸ்டத்தையும் அறிமுகம் செய்து இருக்கின்றனர். டீம் லீடர்களுக்கு கார், டூர் என்று ஏகப்பட்ட வசதிகளை அள்ளித்தரவே, மளமள​​வென்று ஆட்களைச் சேர்ந்தனர். இப்போது சாயம் வெளுத்துப்போகவே, கிட் டத்தட்ட 4,000 முதலீட்டாளர்கள் ஏமாந்து நிற்கிறார்கள்.



முதலீட்டாளர்கள் சார்பில் நம்மிடம் பேசிய வக்கீல் அழகர்சாமி, ''விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி போன்ற இடங்களில் வட்டித் தொகைக்கு ஆசைப்பட்டு பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். புதிதாகச் சேரும் வாடிக்கையாளர்களை டூர் அழைத்துச் சென்று நன்றாகக் கவனித்துள்ளனர்.



 குற்றாலத்தில் நடந்த மீட்டிங்கில், 'நாளைய தமிழகமே...’ என்று வரவேற்பு ஃப்ளெக்ஸ் அடித்து ராஜாவை பூப்பல்லக்கில் அழைத்துவந்து, பொதுமக்களை மயக்கியுள்ளனர். பிப்ரவரி மாதம் வட்டி தருவதில் சுணக்கம் ஏற்பட்டது. அதனால் சில மாதங்களுக்கு முன், எட்டூர் அருகே உள்ள ஆர்.எம்.டபிள்யு.சி. நிறுவனத்துக்குச் சென்ற முதலீட்டாளர்கள் ரகளை செய்தனர். அப்போது, போலீஸ் முன்னிலையில் பேசிய நிறுவனத்தின் சேர்மன் ராஜாவும் எம்.டி. மருதுவும், கொஞ்ச நாட்களில் பணத்தைத் திருப்பித் தருகிறோம், என்று உறுதி அளித்தனர். 



ஆனால் அதன் பிறகு, தலைமறைவாகி ​விட்டனர். இப்போது அவர்கள் திருப்பூர், ஈரோடு, போன்ற இடங்களில், 'எஸ்.எம்.’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். என் மூலமாகவே இதுவரை 300 பேர் போலீஸில் புகார் செய்துள்ளனர். இவர்கள் ஏமாந்து இருப்பது மட்டுமே 20 கோடி ரூபாய். ஆனால், மொத்தமாகப் பார்த்தால் எவ்​வளவு கோடியோ? உடனே, அவர்களைக் கண்டுபிடித்து பணத்தை மீட்கவேண்டும்'' என்றார்.


முத்துலிங்காபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பெருமாள்​சாமி, ''இந்தத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டதும், 'எப்படி சாத்தியம்?’ என்று ராஜாவிடம் கேட்டேன். 'குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி கூடுதல் விலைக்குத்தான் விற்கிறோம். மேலும், பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டு லாபம் பார்க்கிறோம். அந்த லாபத்தில் இருந்துதான் மாதம்தோறும் வட்டி தருகிறோம்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார்.




 நானும் அதைநம்பி, எனக்குத் தெரிந்தவர்களை பணம் கட்டச் சொன்னேன். பஞ்சாயத்துத் தலைவர் என்பதால் என்னை நம்பி 800 பேருக்கும் மேல் இந்தத் திட்டத்தில் சேர்ந்தனர். எங்கள் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்து விட்டனர். இப்போது எல்லோரும், பணம் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்...'' என்றார் ஆதங்கத்துடன்.



ராஜா, மருது ஆகியோரைச் சந்தித்து விளக்கம் கேட்க முயன்றோம். நிறுவனங்கள் மூடப்பட்டு ​விட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வீட்​டையும் காலி செய்து விட்டார்களாம். அதனால், அவர்கள் சார்பில் பேசவும் யாரும் முன்வரவில்லை.



இந்த மோசடியை விசாரித்துவரும் பொருளாதாரக் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் பேசினோம். ''கோவையில் பாசி நிறுவனம் ஏமாற்றியதுபோல் தென் மாவட்​டத்தில் ஆர்.எம்.டபிள்யு.சி. நிறு​வனத்​திடம் பலர் ஏமாந்துள்ளனர். 


 இது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன. சேர்மனாக ராஜாவும், எம்.டி-யாக மருதுவும் இருந்துள்ளனர். இயக்குனர்களாக மூன்று பேர் இருந்திருக்கிறார்கள். அந்த இயக்குனர்களை நம்பித்தான் பலர் முதலீடு செய்துள்ளனர். அந்த இயக்குனர்களும், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட் டதாகப் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ராஜா, மருது இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடிவருகிறோம். அவர்​களுக்​குச் சொந்தமான சொத்துக்களைக் கைப் பற்றி, முதலீட்​டாளர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம்...'' என்றார்.


டெயில் பீஸ்: சாத்தூர் வெங்கடாசல​புரத்தைச் சேர்ந்தவர் கல்யாணராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஊருக்குள் நல்ல மரியாதை. அதனால் இவரை இந்த நிறுவனத்தில் இயக்குனராக நியமித்து இருக்​கிறார்கள். இவரை நம்பி பலரும் லட்சக் கணக்கில் முதலீடு செய்தனர். 



பந்தல்குடி அருகே ஒரு நிலத்தைக் காட்டி பணத்தை வசூல் செய்த விவகாரத்தில் நிர்வாகத்துடன் பிரச்னை வரவே, கல்யாணராஜை இயக்குனர் பதவியில் இருந்து கழற்றி விட்டனர். உடனே, போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, கடந்த 17-ம் தேதி ஒரு கும்பல் இவரது வீட்டுக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதனால், மனஉளைச்சல்களுக்கு ஆளான கல்யாணராஜ், அன்று இரவே தோட்டத்தில், பன்றியைக் கொல்ல வைத்திருந்த விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம், ஏரியாவில் மேலும் கொதிப்பைக் அதிகரித்துள்ளது.

நன்றி - ஜூ வி

மோசடி செய்த நிறுவனத்தின் வெப் சைட்டில் வெளி வந்த விளம்பரம்



GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. RMWC

Contact Name  : subbu 09790407098   
Email ID          : [email protected]
Website: www.rmwcindia.com 


IT’S DEFINITE- 

A DAY GETS DAWN.... 

ONLY YOU CAN...



Welcome to RMWC

            Our organization has been started with appropriate recognition under the Indian Company Act, 1956. Through this business opportunity, we aspire to provide housing plots to the members of our RMWC family. Also we seek to provide Safety Policy Schemes to our members and their family. Our ultimate maxim is to create financial freedom to everyone, who adhere the business opportunity through our organization.

 


PRODUCTS

1) REAL ESTATE


2) INSURANCE








3) HOME APPLIANCE
















 OUR FUTURE VISION






Plan – I Products
Rs: 12,000(Minimum) (for one 1 id, you can get Home Appliances products worth Rs.12,000 
Or 
Plan – II Insurance Products
Insurance Products from Reliance or Bajaj worth Rs.12,000
                                                Or 
Plan-III Lands
If your investment is Rs: 50,000 to 1,00,00,000 You will get number of ids worth Rs. 12,000  you can calculate  from that amount as divided by 12,000 (ex. amount Rs. 50000/12 = 4 ids)

INCOME RETURNS

1) Rs. 500/Monthly for one id

2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)

3) Matrix Income in Auto filling system

4) AWARDS & REWARDS

 

1) Rs. 500/Monthly for one id, Payment will be credited to your bank account

2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)

 

"Successful Auto Filling System, 

1st time in World"


3) Matrix Income in Auto filling system

1level- 5Members Rs. 500 Rs. 2500
 
2level-  25Members  Rs. 400 Rs. 10,000
 
3level- 125Members  Rs. 200 Rs. 25,000
 
4level- 625Members  Rs. 200 Rs. 1,25,000
 
5level- 3125Members  Rs. 200 Rs. 6,25,000
 
6level- 15625Members  Rs. 200 Rs. 31,25,000
 
TOTAL 19530Members Rs. 1700 Rs. 39,12,500






4) AWARDS & REWARDS







GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. GET BRANDED PRODUCTS ON ENTRY AT MRP LIKE OTHER SHOPS. 

RMWC INDIA(P)LTD 

SAFE & SECURE PLANS

An ISO 9001:2008 Company, 

Company Having 13,000 CRORE ASSETS

For the First Time in India, our RMWC (RM WEALTH CREATION INDIA PVT.LTD) organization introduces a innovative business plan "AUTO FILLING SYSTEM'. By joining in this AUTO FILLING SYSTEM, EVERYONE who joins RMWC gets confirmed income (Minimum Guarantee). As per the Income Chart (given below), you will get income through AUTO FILLING SYSTEM / INCOME SHARING PLAN when members join under you. 

Contact Name  : subbu 09790407098    

Email ID          : [email protected]

Website: www.rmwcindia.com