Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Saturday, November 24, 2012

கலைஞர் உருக்கம் ,வீரபாண்டி ஆறுமுகம் மறைவு

'வீரபாண்டி ஆறுமுகம் என்ற தூணை இழந்துவிட்டோம்'': கண்ணீர் விட்டு அழுத கருணாநிதி



சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார்.


 former minister veerapandi arumugam dead
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் கருணாநிதி உடனடியாக போரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக மிகப் பெரிய தூணை இழந்து விட்டது. ஒரு போர்ப் படை தளபதியை திமுக இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார் என்றார்.


3 நாள் துக்கம்.. கொடிகள் அரை கம்பத்தில்:


அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மறைந்தார்.


அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


ராமதாஸ் இரங்கல்:


வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, திமுகவின் மூன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.
வீரபாண்டியாரின் மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


தா.பாண்டியன் இரங்கல்:


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திமுக சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் தலைமைக்குழுவின் முக்கிய பொறுப்புக்களிலும், திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்த மூத்த அரசியல்வாதி வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டு, ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தார்க்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



திருமாவளவன்...


விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
வீரபாண்டியார் 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் சட்டமேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணியாற்றியவர். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து சாதனைகள் பல புரிந்தவர். அவரை இழந்து வாடும் திராவிட இயக்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

 
 

வீரபாண்டியார் மரணம்: சேலத்தில் அறிவிக்கப்படாத 'பந்த்'; வன்முறை-3 பஸ்கள் உடைப்பு: திமுக தொண்டர் சாவு

 
 
 
சேலம்: மூத்த திமுக தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவையடுத்து சேலத்தில் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும்ம் விடுமுறை விடப்பட்டது.




சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். 3 அரசுப் பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கண்ணாடிகள் உடைந்தன. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய இடங்களில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.




சேலம் மாநகரத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டுவிட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் சேலம் நகரமே வெறிச்சோடிப் போனது.




இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக திருப்பூர் எஸ்.பி, நாமக்கல் எஸ்.பி ஆகியோரும் சேலம் வந்துள்ளனர். இவர்களுடன் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீஸார் சேலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.


இன்று மாலை 6 மணி முதல் சேலம் மாவட்டத்தில் கிராமப் புறங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் நாலைந்து பேருந்துகளாக சேர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படவுள்ளன.




வீரபாண்டியார் மறைவை கேள்விப்பட்ட திமுக தொண்டர் மரணம்:




இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்ட சேலத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.




எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த காமராஜ் (45) டீக்கடை வைத்து நடத்தி வந்தார். தீவிர திமுககாரரான இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளர்.


வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்டதும் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.


  நன்றி - தட்ஸ் தமிழ்

Monday, July 30, 2012

மு.க. ஸ்டாலின் சமாளிஃபிகேஷன் பேட்டி @ கல்கி - 60 வயசாகியும் ஏன் இளைஞர் அணித்தலைவர் போஸ்ட்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 


இளைஞர் அணிக்கு வயது 33!



எங்கள் எழுச்சி எதிரிகள் வீழ்ச்சி!



ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பு!

ப்ரியன்



தி.மு.க. பொருளாளரும், அதன் நம்பிக்கை நட்சத்திரமுமான மு.க. ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். அவரது குஷிக்குக் காரணங்கள் இரண்டு


. ஒன்று, தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களுக்கு விஸிட் செய்து ஒன்றிய, நகர, பகுதி, மற்றும் பேரூர் இளைஞர் அணிக்கு, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்தது;


 அடுத்து, சமீபத்தில் நடத்திய சிறை நிரப்புப் போராட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாக நடந்தது. எங்கள் இளைஞர்களின் எழுச்சியால் எதிரிகள் நடுங்குகிறார்கள்" என்கிறார் ஸ்டாலின்.


 முப்பத்தி இரண்டு ஆண்டுகள் முடித்து முப்பத்தி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞர் அணி குறித்து இங்கே பேசுகிறார் ஸ்டாலின்.



சென்ற சட்டமன்றத் தேர்தலில் கழகம் தோல்வியடைந்த பின் இளைஞர் அணியை இன்னமும் பலப்படுத்தி, அதற்கு புத்துணர்வு ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கழகம் தோல்வியடைந்திருந்த நிலையில், தொண்டர்கள் விரக்தியினால் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும் கழக இளைஞர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை தளரவில்லை. மாவட்டம் மாவட்டமாக விஸிட் செய்தேன். ஆளும்கட்சி கிளப்பிய கைது பயத்தை தூக்கியெறிந்து விட்டு இளைஞர்கள் வெள்ளமென திரண்டார்கள். தமிழகமெங்கும் 4649 அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.


 ஒன்றிரண்டு மாவட்டங்களில், சில உரசல்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து அந்த மாவட்டங்களிலும் நிர்வாகிகளைப் போட்டிருக்கிறோம். இப்போது மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் போடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்கிறார் இளைஞர் அணியின் செயலாளராக விளங்கும் ஸ்டாலின். 1984 முதல் இந்தப் பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/cartoon-kagidha-odam.jpg


1949-ல் தோன்றிய தி.மு.க.வில் 1980ல்தான் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறதே!



பேரறிஞர் அண்ணாவின் பின்னால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அணி திரண்டார்கள். மொழி, இன உணர்வு, சமூக நீதி என்று கழகத்தின் இலட்சியப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களின் மொழி உணர்வின் உச்சகட்ட வெளிப்பாடு. தொடர்ந்து 1967ல் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பிறகு, கழகத்தில் இளைஞர்களின் புது வரவு கணிசமாக குறைந்து வருவது தெரியவந்தது.


 அண்ணாவின் பின் அணிவகுத்த இளைஞர்களும் முதியவர்களாகி வர, இந்த விஷயத்தில் புதிய பார்வையும், அணுகுமுறையும் தேவை என்று உணரப்பட்டது. மாறிவரும் சூழலை முற்றும் உணர்ந்து, காலத்திற்கேற்ற தேவையாக டாக்டர் கலைஞர் அவர்களால், கழகத்தில் மற்றொரு அணியாக இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. மதுரை ஜான்சி ராணி திடலில் இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது கழகம் ஆட்சியில் இல்லை. இருந்தும் அந்தத் தொடக்கம் மிகப் பெரிய எழுச்சியாக இருந்தது




உடனேயே நீங்கள் அதன் செயலாளர் ஆகிவிட்டீர்களா?!



இல்லையில்லை... இரண்டு வருட காலம் நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. 1982ல் திருச்சி வாசவி மகாலில் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பலரும் என்னை செயலாளர் ஆக்க வேண்டும் என்று மிக வலியுறுத்திப் பேசினார்கள். ஆனால் தலைவர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ‘மகனை நியமித்து விட்டார்’ என்ற விமர்சனம் வரும் என்று கடைசி வரை ஒப்புக் கொள்ள மறுத்தார். எனவே பேராசிரியர் மாற்று ஏற்பாடாக நானும் உள்ளிட்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவில் திருச்சி சிவா, பரிதிஇளம் வழுதி, தாரை மணியன், வாலாஜா அசேன், ஜெயம் ஜூலியஸ், பஞ்ச வர்ணம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


 அடுத்த இரண்டு வருடம் நாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட அளவில் நிர்வாகிகள் போட்டோம். அந்தக் காலகட்டம் மறக்க முடியாதது. ஒரே காரில் நாங்கள் செல்வோம். பெரும்பாலும் நான்தான் கார் ஓட்டுவேன். இந்தச் சமயத்தில் என் நெஞ்சில் என்றும் பசுமையாக இருக்கும் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



1967-68ல் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற பெயரில் சார்பு மன்றம் வைத்திருந்தோம். அதன் சார்பாக அண்ணா பொன்விழா கொண்டாட முடிவு செய்தோம். ம.பொ.சியை அணுகினோம். அவர் வர ஒப்புக் கொண்டார். நான் நண்பர்களுடன் அண்ணா அவர்களை விழாவுக்கு அழைக்கச் சென்றேன். அண்ணா மாடியில் உடம்பு முடியாமல் படுத்திருந்தார். கீழே என்.வி. நடராசன், சத்தியவாணி முத்து ஆகிய தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ‘அண்ணாவைப் பார்க்க முடியாது’ என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து, அண்ணாவின் கார் என் வீட்டுக்கு வந்தது. ஓட்டுநர் வந்து, ‘அண்ணா அழைத்தார்’ என்று கூப்பிட்ட போது பிரமிப்பு; ஆச்சர்யம். சந்தித்து விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்



 ‘ஏற்பாடு செய்... வருகிறேன்’ என்றார். ஆனால் அண்ணாவின் உடல்நிலை மேலும் மோசமாக அவர் விழாவுக்கு வர முடியவில்லை. ம.பொ.சி. தலைமையில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்தச் சம்பவத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. போன்று தமிழகமெங்கும் இளைஞர் மன்றங்கள் இயங்கி வந்தன. எனவே, நாங்கள் மாநிலம் முழுதும் இளைஞர் அணியை கட்டமைப்பது சுலபமாக இருந்தது. 1984-ல் நான் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டேன். இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி கழக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 25 லட்சம் பேர் இளைஞர் அணி. கழகக் கோட்டையின் காவல் அரணாக இளைஞர் அணி உருவாகியிருப்பது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHmxMbhxFIQZGqbQTJpDKuug3J4VLZlaAyGBQoS37xFVFRby1JXHF6hQ-WzlaBjdUHDMeJginPzXWwS8CTI3bx1UXTPIj8dkHaMPWAVcR-6oE559c4e9bz4y7de2683ByFtMrelyHpGCs/s1600/karuna+retair.jpg

கழகப் பிரமுகர்களின் மகன்கள்தான் இளைஞர் அணியில் பிரகாசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறதே?



தவறான கருத்து. உழைப்பும் பொது நல அர்ப்பணிப்பும் மிக்க இளைஞர்கள் எந்தவித பின்புலமுமின்றி உயர்ந்திருக்கிறார்கள். பொன்முடி, அன்பரசன், மா. சுப்பிரமணியன், முபாரக், கார்த்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம்."



தேர்தல் வந்தால் பெரும்பாலான சீட்கள் இளைஞரணிக்கு என்பதால்தான் ‘அணி திரள்கிறார்கள்’ என்பது உண்மைதானா?



நான் ஏற்கெனவே சொன்னது போல கழகத்தில் உள்ள மற்ற அணிகளைப் போலத்தான் இளைஞர் அணியும் இருக்கிறது. தேர்தலில் சீட் என்பது வெற்றி வாய்ப்பை மனத்தில் வைத்துத்தான் கொடுக்கப்படும். இளைஞர் அணியில் உள்ள திறமையாளர்களைப் போல மற்ற அணிகளிலும் திறமையானவர்கள், விசுவாசமிக்கவர்கள் இருக்கிறார்கள். எனவே இளைஞர் அணியில் இடம்பெற்றிருந்தாலே தேர்தல் சீட் கிடைக்கும் என்பது சரியல்ல."



வர்த்தகமயமாகி விட்ட அரசியலில் பொதுநல அர்ப்பணிப்புடன் இளைஞர்கள் வருகிறார்களா?



சமூகத்தில் பல துறைகள் சீரழிவைச் சந்தித்து வருவதைப் போன்று அரசியலிலும் சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது. சுயநல நோக்கத்துடன் ஒருசிலர் வரக்கூடும். பாசறைக் கூட்டம் என்று பெயரில் இளைஞர்களின் உரத்த சிந்தனையையும், சமூக நோக்கங்களையும் செழுமைப்படுத்துகிறோம். கழகத்தின் அடித்தள லட்சியங்களை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றக்கூடிய அளவில் விதைக்கிறோம். எங்களை நோக்கி வீசப்படும் விமர்சனக் கணைகளை எப்படி எதிர்ப்பது என்ற பயிற்சியும் கொடுக்கிறோம்."



அது சரி ஸார். மாவட்ட அளவில் அமைப்பாளர்களுக்கு முப்பது வயது என்று வரம்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் மேல்மட்ட அளவில் பார்த்தால் அறுபது வயது ஆனவர் கூட பொறுப்பில் இருக்கிறார்களே. உங்களுக்கே கூட அறுபது ஆகிவிட்டதே...?




பொதுவாகவே இதுபோன்ற விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் முப்பது வயதுக்குள்தான் இருக்க வேண்டும். மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு வயது வரம்பு நாற்பது. ஆனால் கழக சட்டத்தின்படி தலைமைக் கழகத்தில் பொறுப்பில் உள்ள எங்களுக்கு வயது வரம்பு இல்லை. களத்தில் இருப்பவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், மேலே வழி காட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்த ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg

கழகத்தில் எதிர்பார்க்கப்படும் உயரத்தைத் தொட காத்திருக்கும் நீங்கள் தகுதிவாய்ந்த மற்றொருவருக்கு இளைஞர் அணி பொறுப்பைக் கொடுக்கும் காலம் வந்துவிட்டதா?



பொருளாளர் பதவியுடன் கூடுதல் பொறுப்பாகவே இளைஞர் அணி செயலாளர் பொறுப்பையும் வகிக்கிறேன். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அனைவரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறேன். மற்றபடி இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வேண்டியவர்கள் தலைவரும், பேராசிரியரும்தான். அவர்கள் தக்க நேரத்தில் முடிவெடுப்பார்கள்."





தலைவரது மகனாக இருப்பதால் இளைஞர் அணி சிறப்புச் சலுகைகளைப் பெறுகிறதா?




தலைவரைப் பொறுத்தவரை எல்லா அணிகளையும் சமநோக்கோடுதான் பார்க்கிறார். ஒரு உதாரணம்: அறிவாலயத்துக்கு கழக அலுவலகம் மாற்றப்பட்ட பின் அன்பகத்தை இளைஞர் அணி பயன்பாட்டுக்குக் கேட்டோம். அப்போது அங்கே தொழிற்சங்கமும் இயங்கி வந்தது. எந்த அணி பத்து லட்சம் கொடுக்கிறதோ அதற்குத்தான் அன்பகம் கொடுக்கப்படும்" என்று சொல்லிவிட்டார் தலைவர். அதன்பின் தமிழகமெங்கும் அலைந்து திரிந்து ரூபாய், ரூபாயாக சேர்த்து பதினொரு லட்சத் தைக் கொடுத்துதான் இளைஞர் அணிக்காக அன்பகத்தைப் பெற்றோம். தலைவர் மகனென்று தூக்கிக் கொடுக்கப்படவில்லை."



இளைஞர் அணியின் அடுத்தகட்ட நடவடிக்கை?



அமைப்பாளர்கள் போடுவது கூடிய விரைவில் முழுவதுமாக முடிந்துவிடும். அடுத்து இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு விரைவில் நடைபெறப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேதியும், இடமும், தலைவர், பேராசிரியர் ஒப்புதலுடன் அறிவிக்கப்படும்!"



அடேங்கப்பா!


இளைஞர் அணி சார்பாக அறக்கட்டளையொன்றை நிறுவியிருக்கிறார்கள். அண்ணா, கலைஞர் பிறந்த நாளின் போது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி என்று அசத்துகிறார்கள். பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு கோடியே பதினேழு லட்ச ரூபாய் பரிசுத் தொகை இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதாம்.



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி,அன்னா கண்ணன்


http://img.photobucket.com/albums/v144/annakannan/ulalal.jpg

Sunday, July 22, 2012

கேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..

பெரம்பலூர்:கேரள மாநில சிறுமியை கற்பழித்து, கொலை செய்த வழக்கில், பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட மூன்று பேரை, பெரம்பலூர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், 46. இவர், தன் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என, தன் நண்பரான காரை அன்பரசனிடம் தெரிவித்தார். அன்பரசன், கேரள மாநிலத்தில் உள்ள புரோக்கர் பன்னீர்செல்வம் மூலம், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், லாட்ரக் எஸ்டேட் லட்சுமி கோவில் அருகே உள்ள பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன், 49, என்பவரின் மூன்றாவது மகளான மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை, தான் சொந்த செலவில் படிக்க வைப்பதாக ஒப்புக்கொண்டார்.



கதறல்:கடந்த, ஜூன் 23ம் தேதி, ராஜ்குமாரின் நெருங்கிய கூட்டாளியான ஜெய்சங்கர், கார் டிரைவர் மகேந்திரன் ஆகிய இருவரும், இன்னோவா கார் மூலம் மேகலா மற்றும் அவரது தாய் சுசிலாவை கேரளாவிலிருந்து அழைத்து வந்து, ராஜ்குமார் வீட்டில் விட்டனர். சுசிலா, மேகலாவை, ராஜ்குமார் வீட்டில் விட்டு விட்டு கேரளா சென்றார்.கடந்த, 25ம் தேதி, மேகலா, தன் தாய் சுசிலாவை போனில் தொடர்பு கொண்டு, "என்னால் இங்கு இருக்க முடியவில்லை. உடனே வந்து அழைத்து செல்' என்று கூறியுள்ளார். அதற்கு, 29ம் தேதி வந்து அழைத்து செல்வதாக சமாதானம் கூறினார். அன்றைய தினமே மேகலாவின் பெற்றோர், கேரளாவிலிருந்து பெரம்பலூருக்கு வந்து கொண்டிருக்கும் போது, ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு, மேகலா உடல் நிலை சரியில்லாமல்,


தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். மருத்துவமனையில் மேகலாவை பார்த்தபோது, அவர் சுயநினைவில்லாமல் இருந்தார். 30ம் தேதி ராஜ்குமார், ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோர் ஆகியோர், திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் மேகலாவை சேர்த்தனர். பண வசதியில்லாததால், ஜூலை 4ம் தேதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, 6ம் தேதி, காலை 11.30 மணியளவில் மேகலா இறந்தார். இதுகுறித்து மேகலாவின் தந்தை சந்திரன் கொடுத்த புகார்படி, பெரம்பலூர் போலீசார், 7ம் தேதி, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, மேகலாவின் உடலை சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

 சந்தேகம்:மேகலாவின் உடலை, கேரளாவுக்கு கொண்டு சென்று இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்த போது, மேகலாவின் உடலில் காயங்கள் இருந்ததால், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகசந்திரன், பீர்மேடு போலீசில் புகார் செய்தார். அங்கும் சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்யப்பட்டு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில், மேகலா கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் போலீசார், சந்தேக மரணம் என, பதிவு செய்த வழக்கை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவின் கீழ் வழக்கை மாறுதல் செய்து, ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன், பாபு, பன்னீர்செல்வம் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


 அன்பரசன் மற்றும் மகேந்திரனை கைது செய்தனர். இதையறிந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், பெரம்பலூர் போலீசில் சரணடைந்தார்.


ராஜ்குமார், அன்பரசன், மகேந்திரன் ஆகியோரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெய்சங்கர், பாபு, பன்னீர்செல்வம் ஆகியோரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் கோபாலசந்திரன், எஸ்.ஐ., வெங்கடேஸ்வரன் உட்பட ஐந்து பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைத்து, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.



நிரபராதி:ராஜ்குமார், சிறைக்குச் செல்லும் முன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்கு போடுவது போல், என்னை, சிறுமியை கற்பழித்து கொலை செய்ததாக, பொய்யான புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இந்த வழக்குக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் நிரபராதி என்று நிரூபிப்பேன். விசாரணைக்கு அழைத்ததால் இரவு 9.00 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தேன். மேல் இடத்திலிருந்து வந்த தகவலால், இரவு முழுக்க ஸ்டேஷனிலேயே தங்க வைக்கப்பட்டு, மீண்டும் மேலிடத்திலிருந்து தகவல் வந்ததாக தெரிவித்து, என்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.


திருச்சி ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் கூறியதாவது:சிறுமி, ராஜ்குமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மயக்கமடைந்து, பின்னர் அவர் மற்றும் அவர் கூட்டாளிகளான ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே, சிறுமியின் இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவரும். மேலும், இச்சம்பவத்தில் யாரெல்லாம் காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும்.இவ்வாறு ஏ.டி.எஸ்.பி., கூறினார்.

 நன்றி - தினமலர்

'மூளைக்காய்ச்சலால் இறந்தாள்''...கேரள சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்!





கொல்லம்: கேரள சிறுமி பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது மகள் மூளைக்காய்ச்சலால் தான் இறந்தாள் என்றும் அவளை யாரும் கொலை செய்யவில்லை என்றும் அந்த சிறுமியின் தந்தை தெரிவி்த்துள்ளார்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.



அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், டாஸ்மாக் ஊழியர் அன்பரசன், டிரைவர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனித்தனியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ராஜ்குமார் உட்பட 4 பேரும் ஆண்மை உள்ளவர்கள்தான் என மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பீர்மேடு சமூகநல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் சத்யாவி்ன் தந்தை சந்திரன், தாய் சுசீலா ஆகியோரிடம் கேரள குழந்தைகள் நல கமிட்டியினர் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரன் கூறுகையில், எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டேன். இந்நிலையில் எனது மகள் சத்யாவை பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி படிக்க வைக்கலாம் என்று கூறி பீர்மேட்டைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், விஜயகுமார் ஆகியோர் கூறினர்.


இதையடுத்து நானும், எனது மனைவியும் மகள் சத்யாவை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் உள்ள ராஜ்குமார் வீட்டில் விடுவதற்காக சென்றோம். அங்கு வைத்து எனது மகளை அவரது மகளுடன் சேர்த்து படிக்க வைப்பதாக ராஜ்குமார் கூறினார். மேலும் ரூ.5,000 பணம் தந்தார்.


நாங்கள் ஊருக்கு திரும்பிய மறுநாளே சத்யா எங்களுக்கு போன் செய்து எனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை, என்னை உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள். அதற்கு மறுநாள் பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சத்யாவை அனுமதித்திருப்பதாக போன் வந்தது.


இதையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது டாக்டர்கள் சத்யாவுக்கு மூளை காய்ச்சல் என்று கூறினர். அவளது நிலைமை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு தான் சத்யா இறந்தாள். எனது மகளை யாரும் கொன்றிருப்பார்கள் என நான் நம்பவில்லை என்றார்.


இது குறித்து குழந்தைகள் நல கமிட்டியின் செரியன் கு. குரியன் கூறியதாவது, சந்திரனும், சுசீலாவும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்கள். ராஜ்குமார் தனக்கு ரூ. 5,000 கொடுத்ததாக சந்திரன் கூறுகிறார். ஆனால் சுசீலா ரூ.3,000 கொடுத்தாகக் கூறுகிறார். இருவரது வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் மேலும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


thanx - thats tamil

Sunday, April 15, 2012

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மூவருடைய தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்க தி.மு.க. தயங்குகிறதா?''குஷ்பூ பேட்டி






1.  ''சினிமா, அரசியல் - எதில் நடிப்பது சிரமம்?''


சி.பி - சினிமால நடிக்க மேக்கப் போடனும், வெய்யில்ல நிக்கனும், ரிகர்சல் பார்க்கனும், டைரக்டர் ஓக்கே சொல்லனும்.. இத்தனை தடை இருக்கு.. அதனால அரசியல்ல நடிக்கறது தான் ஈசி.. 

 ''அரசியலை நடிப்புன்னு சொன்னா, அது முட்டாள்தனம். அரசியல்ல நடிப்பே கிடையாது

 சி.பி - என்ன மேடம் நீங்க இவ்ளவ் அப்பாவியா இருக்கீங்க? ஈழத்தமிழரைக்காப்பாத்த உண்ணா விரத நாடகம் போட்ட கலைஞர், ஜெ, சசி பிரிவு நாடகம், திராவிடக்கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லைன்னு காமெடி டிராமா போட்ட ராம்தாஸ்னு திரும்புன பக்கம் எல்லாம் நாடகம் தான்..

  அப்படி நடிச்சா, அவங்க உண்மையான அரசியல்வாதி கிடையாது. சினிமாவில் தினம்தினம் வேற வேற கேரக்டர்ல வாழ வேண்டி வரும். காலையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் கேரக்டர்னா, சாயங்காலமே ஒரு ஏழைப் பெண்ணா நடிக்கணும். தினம்தினம் வேற அனுபவங்கள். ஆனா, அரசியலைப் பொறுத்தவரை நடிப்பு கிடையாது. நீங்க எப்படி இருக்கீங்களோ, உங்க மனசுல என்ன இருக்கோ... அந்த உண்மையை மட்டும்தான் பேசணும்!''
2. ''நீங்கள் தமிழச்சியாகவே மாறிவிட்டேன் என்கிறீர்கள். ஆனால், கவர்ச்சி உடையுடன் நமீதா பொது நிகழ்ச்சிகளில் வலம் வருவதை, 'அது அவருடைய சொந்த விஷயம்!’ என்று ஆதரிக்கிறீர்கள். இது தான் தமிழ்ப் பண்பாடா?''


சி.பி - கேள்வியே தப்பு.. என்னமோ நாட்டுல நமீதா மட்டும் தான்  அப்படி வர்ற மாதிரியும் , மத்தவங்க எல்லாம்  இழுத்துப்போர்த்திட்டு வர்ற மாதிரியும் கேட்கறீங்களே. கலைஞர் டி வி மானாட மயிலாட பார்க்கவும்..

 ''இதை ஏன் தமிழ்ப் பண்பாட்டோட குழப்பிக்கிறீங்க. அது அவங்க சொந்த விஷயம்... அவ்வளவுதான். அவங்க எப்படி டிரெஸ் பண்ணணும், எப்படி வரணும்கிறது அவங்க சுதந்திரம். அவங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல நாம தலையிடுறது தப்பு. அதைப் பத்திப் பேச நாம யாரு? நமக்கு என்ன உரிமை இருக்கு?
நமீதாவைப் பொறுத்த அளவில் அப்படி டிரெஸ் பண்றதுதான் அவளோட இயல்பே. வேணும்னே கவர்ச்சியா வரணும்கிற எண்ணம் எல்லாம் அவளுக்குக் கிடையாது. 'நான் சினிமாவுல இருக்கேன். அதனால இப்படித்தான் இருப்பேன்கிற எண்ணம் அவளுக்குக் கிடையாது. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மும்பையில் அவளைச் சந்திச்சிருக்கேன். அப்பவும் அப்படித்தான் இருப்பா. அதனால அவளைப் பத்திக் கவலைப்பட்டு உங்க நேரத்தை வீணாக்கிக்காதீங்க .


சி.பி - நமீதா எந்த டிரஸ் போட்டாலும் அவருக்கு அது பத்தாது.. ஏன்னா அவர் யானை மாதிரி இருக்கார்... அவர் போடற டிரஸ் பூனை அளவு தான் இருக்கு.. இதுக்கெல்லாம் கண்டனம்  தெரிவிச்சுட்டு இருக்காம ரசிச்சுட்டு போவதே நல்லது.. 
3. ''தி.மு.-வில் மகளிர் அணிக்கு உரிய மரியாதை இருக்கிறதா?''


சி.பி - தமிழ் இனத்தலைவரை பற்றி என்ன நினைச்சீங்க? மனைவிக்கு மரியாதை,  மகளிர் அணிக்கு தனி மரியாதை தர்றவர் ஆச்சே.. 
 ''அப்படி மரியாதை இருக்கிறதாலதான் ஒவ்வொரு மேடையிலும் சற்குணப் பாண்டியன் அம்மாவைத்தலைவருக்குப் பக்கத்து இருக்கையில் உக்காரவைக்கிறாங்க. அந்த மரியாதை இல்லைன்னா, ஒவ்வொரு அரங்கிலும் முன் இருக்கைகள் மகளிர் அணிக்காக ஒதுக்கப்பட வாய்ப்பே இல்லை


 இருக்கை முன்னுரிமை மட்டும் இல்லை, மனதில் தோன்றிய கருத்துக்களைத் தைரியமாகப் பேச மகளிர் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்ற கட்சிகளில் ஆண்களுக்கேகூட அந்த வாய்ப்பு வழங்கப்படுமாங்கிறது சந்தேகம்தான். எங்கள் மகளிர் அணியின் தலைவி சற்குணப் பாண்டியன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர். இதைவிட வேறு என்ன மரியாதை வேண்டும்?''





சி.பி - ஆஃபீஸ், வீடு, கட்சி எல்லா இடங்களிலும் லேடீஸுக்குத்தாங்க மரியாதை.. ஆம்பளைங்களை எவன் மதிக்கறான்? பொண்ணுங்களைத்தான் மதிக்கறான்.. அவ்லவ் ஏன்? நம்ம தமிழ் நாட்டின் சி எம் , இந்தியாவின் ரியல் பி எம்  , கவர்னர் எல்லாம் ஒரு பெண் தானே?

4. ''இன்றைய தமிழகப் பெண் அரசியல் தலைவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்... ஏன்?''


சி.பி - - என்னைக்கவர்ந்தவங்க ஜனாதிபதி  பிரதீபா பாட்டில் தான். அநாயமா கவர்மெண்ட் காசுல சாரி பணத்துல உலகத்தை ரவுண்ட் அடிச்சுட்டு வந்துட்டாங்களே?
 ''இங்க ஜெயலலிதாம்மா, ஜெயந்தி நடராஜன்னு ஒரு சிலர்தான் இருக்காங்க. ஜெயலலிதாபற்றி இங்க நான் எதுவும் சொல்ல விரும்பலை. ஜெயந்தி நடராஜன் மேடம்பற்றிச் சொல்லலாம். அவங்க ரொம்பவே போல்டான லேடி. மத்திய அமைச்சரா தங்களோட பணிகளை ரொம்பவே சிறப்பா செய்றாங்க. சமீபத்தில்கூட சுற்றுச்சூழல் பற்றிய கருத்தரங்கில் அவங்களுடைய பேச்சு, பலத்த கைதட்டல் வாங்கிச்சு.அவங் களோட உழைப்பு எனக்குப் பிடிக்கும்!''

5. ''உங்களுக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் உண்டா?''



சி.பி - எதிர் காலத்துல குஷ்பூ சி எம் ஆனா அவருக்கு வாரிசா ஒரு ஆண் குழந்தை  இல்லையேன்னு வருத்தம் இருக்கும் தான்.. 

 ''ச்சே... சான்ஸே இல்லை. ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கணும் என்பதுதான் என் கனவே. மூணு அண்ணனுங்ககூட வளர்ந்தவள் நான். அப்புறம் எப்படி நான் ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவேன். எப்பவும் பெண் குழந்தைகள் மீதுதான் எனக்கு ரொம்ப ஆசை. என் பொண்ணுங்களைப் பற்றியும் சொல்லிடுறேன். பெரியவள் ஆறாம் கிளாஸ் படிக்கிறா. ரொம்பக் குள்ளமா இருக்கா(?!). ஆமாங்க, இந்த 11 வயசுல ஆறடிக்கு இருக்கா. சின்னப் பொண்ணு 9 வயசுல என்னைவிட ஒரு இஞ்ச் உயரமா இருக்கா. நான் 5.4. அவள் 5.5. உயரத்தில் ரெண்டு பேருமே அவங்க அப்பா மாதிரி.


 பெரியவ பாக்குறதுக்கு பாதி நான், பாதி அவர். குணத்துல அவங்க அப்பா மாதிரி. அதிகமாப் பேச மாட்டா. அவ உண்டு, அவளோட புக்ஸ் உண்டுனு இருப்பா. நிறையப் படிப்பா. சைலன்ட். அவளோட எல்லா விஷயங்களையும் என்கிட்ட மட்டும்தான் ஷேர் பண்ணிப்பா. யார்கிட்டேயும் அவளோட ஃபீலிங்ஸை சொல்ல மாட்டாள். அவளுக்கு நான் மட்டும்தான்



 சின்னவள், சுந்தரை ஜெராக்ஸ் மெஷின்ல போட்டு வெளியில எடுத்த மாதிரி இருப்பா. எதுவா இருந்தாலும், அந்த நேரத்தில் பேசி சண்டை போட்டு முடிச்சிடணும். அடுத்த நாளெல்லாம் அவளால தள்ளிவைக்க முடியாது. அதுக்கு அவளுக்கு டைம் இல்லை. ஆனால், ரெண்டு பேரும் அப்பா செல்லம். பாதித் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும், அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க.


 எங்கயோவது ஷாப்பிங், வெளியூர், வெளிநாடு போனாக்கூட அவங்க மூணு பேரும் ஒரு கேங்கா கைப்பிடிச்சு நடந்து போயிட்டு இருப்பாங்க. நான் பாவமாத் தனியா வருவேன். அவங்க அப்பா பக்கத்துலயே என்னை நெருங்கவிட மாட்டாங்க. வீட்லயும் அப்படித்தான். அவங்களுக்கு அப்பா பக்கத்துல யாரும் உட்கார்ந் துடக் கூடாது. அவர் நடுவுல உட்கார்ந்துஇருப்பார். ஒருத்தி இந்தப் பக்கம் இன்னொருத்தி அந்தப் பக்கம் உட்கார்ந்துஇருப்பாங்க. ஏன்னா, வீட்ல நான் ஹிட்லர்!''

 சி.பி - காலத்தின் கோலம் பார்த்தீங்களா? பட்லர் மாதிரி இருக்கேன்னு உங்களை வருஷம் 16 படத்துல கார்த்திக் நக்கல் அடிச்சாரு. இப்போ ஹிட்லர் ஆகிட்டீங்க.
6.''தி.மு.-வின் அடுத்த தலைவர் போட்டிக்கான களத்தில் நிற்பவர்களில், இந்த இயக்கத்தை வழிநடத்தும் தகுதி யாருக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?''


சி.பி - சீனியாரிட்டி பிரகாரம் அன்பழகன் தான் தலைவர் ஆகனும், ஆனா கலைஞர் ஸ்டாலினை ஆக்கப்பார்க்கறாரு.
 ''இப்போ தலைவருக்கு மட்டும்தான் அந்தத் தகுதி இருக்கு! அவருக்கு அடுத்து யாருன்னு தலைவரே யோசிச்சுவெச்சிருப்பாரு. நேரம் வரும்போது அவரே சொல்வாரு!''

7. ''ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மூவருடைய தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்க தி.மு.. தயங்குகிறதா?''


சி.பி - தயங்கலை, பம்முது.. காங்கிரஸ் கூட்டணி வேணும், அவங்களை எதிர்த்துக்க முடியாது. வேற என்ன பண்ண  முடியும்?
  ''இளகிய மனம்கொண்ட எங்க தலைவர் தயங்குவாரா என்ன? தூக்குத் தண்டனைக்கு எதிரா தலைவரே நிறையப் பேசியிருக்காங்க. அவங்க மூணு பேரையும் தூக்கில் போடக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. அப்படி இருக்கும்போது, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை. பாண்டுரங்கன் தவறான அரசியல் புரிதலோடு இருக்கார்னு தெரியுது


 இதை இன்னொரு கண்ணோட்டத்துலயும் பார்க்கணும். அவங்களுக்கு தண்டனைன்னா, 1991-லயே அவங்களைத் தூக்கில் போட்டிருக்கணும். 21 வருஷம் - அதாவது, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலம் - தங்களின் வாழ்க்கையை சிறையிலேயே கழிச்சிருக்காங்க. ஒரு தாய் தன் குழந்தையைப் பிரிஞ்சு வாழ்றாங்க. தாய், தந்தை அரவணைப்பு இல்லாம ஒரு குழந்தை வளர்ந்திருக்கா.


 இதைவிட அவங்களுக்கு வேற என்ன தண்டனையைத் தந்து விட முடியும்? 21 வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் தூக்குத் தண்டனைன்னா... அது எவ்வளவு பெரிய கொடுமை? தமிழக மக்களின் இந்த மன உணர்வை மத்திய அரசு கருத்துல எடுத்துக்கணும்!''


8. ''சினிமா பிரபலங்களின் காதல்அதிக காலம் நீடிக்காதது ஏன்?''

சி.பி - சினிமா இண்டஸ்ட்ரில இருக்கறவங்களூக்கு கைக்கு எட்டுனது வாய்க்கும் எட்டிடுது..  தப்பு பண்ண மத்தவங்களை விட அதிக சான்ஸ் கிடைக்குது.. ஃபாரீன் ஷூட்டிங்க் போறப்ப ஒரே ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூம்.. யார்க்கு தெரியப்போகுது? அதனால தப்பு அடிக்கடி நடக்குது.. அது தம்பதிகளுக்குள் தெரிய வரும்போது சண்டை வருது
 ''உங்களை மாதிரி பலர் கண்ணு வைக்கிறதுதான் காரணம். பொதுவா, இங்கே நிறையப் பேர் காதலிக்கிறாங்க; கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. அதில் பலர் காதலிக்கும்போதே பிரியுறதும்... கல்யாணத்துக்கு அப்புறம் டைவர்ஸ் பண்ணிக்குறதும் பெருசா வெளியில தெரியுறது இல்லை. அவங்களை நம்ம மீடியாவும் கண்டுக்கிறதும் இல்லை.


 ஆனா, சினிமாவில் இருக்கிறவங்களோட காதலையும் அவங்களுக்குள் ஏற்படுற ஊடலையும் நம்ம மீடியா ஊதிப் பெரிசாக் குது. இப்படி வரும் செய்திகள் அவங்களுக்குள் ஏற்படுற கருத்துவேறுபாட்டை இன்னும் அதிகமாக்குது. அதேபோல் நம்ம மக்களும் பேப்பர், டி.வி-யில் வர்ற செய்திகளை எந்தவித விசாரிப்புகளும் இல்லாம அப்படியே நம்பிடுறாங்க. ஒரு வதந்தியைக்கூட, 'இருக்கும்பா. இல்லாமலா இப்படி எழுதுறாங்கனு பேசுவாங்க. பிறகு, 'குறிப்பிட்ட அந்தச் செய்தி தவறுனு சம்பந்தப்பட்ட பத்திரிகையே மறுப்பு வெளியிட்டாக்கூட, 'அதெல்லாம் சும்மா... மறைக்கிறாங்கப்பா... சம்பந்தப்பட்டவங்க கூப்பிட்டுப் பேசியிருப்பாங்க. அதனால இப்ப சும்மா ஃபார்மாலிட்டிக்கு மறுக்கிறாங்கனு பேசிக்குறாங்க. நடிகர், நடிகைகளை தியேட்டரில் கொண்டாடுறீங்க .கே! ஆனா, அவங்க தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் கொஞ்சம் மரியாதை தரணும். இதெல்லாம்விட, யார் மேலயும் யாரும் வெச்சிருக்கிற அன்பு, காதல் உண்மையா இருந்தா... அது எவ்வளவு பிரச்னை வந்தாலும் கடைசி வரை நீடிக்கும். இது சினிமாவுல இருக்கிறவங்களுக்கு மட்டுல்லை.... எல்லாருக்கும் பொருந்தும்!''

9. ''ஸ்டாலின் - அழகிரி இவர்களில் யார் தி.மு.-வுக்குத் தலைமை ஏற்கப் பொருத்தமானவர்?''

சி.பி - அண்ணன் அழகிரி மொழி அறிவு இல்லாத நிதானம்னா என்னன்னு தெரியாத லோக்கல் ரவுடி.. தம்பி ஸ்டாலின் அண்ணன்  கமுக்கமான, அமுக்கமான ஆள்... 2 கொள்ளீல  எது பெஸ்ட் கொள்ளின்னு பார்த்தா ஸ்டாலின் தான்.. ஆனா அப்படி எந்த அசம்பாவிதமும் வராம ஏதாவது புது தலைவர்கள் வந்தா தேவலை
 ''அதுபற்றி எல்லாம் தலைவர்தான் முடிவு பண்ணணும்!''


10. ''இந்த கேரக்டரை நாம செய்திருக்கலாமேனு உங்களை யோசிக்கவைத்த கேரக்டர் எது?''  
 ''கிட்டத்தட்ட 200 படங்களில் நடிச்சாச்சு. இப்பவும் 'சின்னத் தம்பிகேரக்டர்ல நாம நடிச்சிருக்கலாமேனு யோசிச்சவங்க, யோசிக்கிறவங்கதான் நிறையப் பேர் இருக் காங்க. சமீபத்தில் மலையாளத்தில் நான் நடிச்ச 'கையப்புபட கேரக்டர்ல நடிச் சிருக்கலாமேனுகூட நிறையப் பேர் நினைச் சதா என்கிட்ட சொல்லியிருக்காங்க.
நான் தொடர்ந்து கதாநாயகியா நடிச்சிட்டு இருந்தப்ப இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா, பாலசந்தர் சாரின் ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்க ஆசைப்பட்டேன்னு சொல்லிஇருப்பேன். அப்புறம் நிச்சயமா 'மௌன ராகம்ரேவதி மேடம் கேரக்டர்ல நடிச்சிருக்கணும்னு சொல்லியிருப்பேன். அமிதாப் பச்சன் நடிச்ச 'சீனி கம்படத்தில் தபு கேரக்டர் மேல எனக்குப் பொறாமையே உண்டு. அந்தப் படம் பார்த்துட்டு, திட்டித் திட்டி தபுவுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன்!''       


சி.பி -  உங்களூக்கு மேட்டர் தெரியுமா? தபுவுக்கு செல் ஃபோன்ல மெசேஜ் படிக்கற பழக்கமே கிடையாதாம்.. ஸ்டார் டஸ்ட் இதழ் 1.6.2009 இதழ்ல   பேட்டி குடுத்திருக்காரு.. ஹய்யோ அய்யோ
11. ஒரு நடிகையாக நீங்கள் பெற்றது என்ன? இழந்தது என்ன?''


சி.பி - பெற்றது பல பாய் ஃபிரண்ட்ஸ்களை.. இழந்ததும் கழட்டி விடப்பட்ட பாய் ஃபிரண்ட்ஸ்களே ஹி ஹி 
 ''பெற்றது பேர், புகழ், பணம், குடும்பம், மரியாதை, எல்லாருடைய அன்பு. இழந்தது என்று எதுவும் இல்லை. 'நடிகையானதால் இதை இழந்துட்டேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்கும். சில நேரங்களில் பிரைவசி பாதிக்கப்படும். என் பெரிய பொண்ணு ரொம்பவே கூச்சப்படுற டைப். போட்டோவுக்கு முகம் காட்டக்கூடத் தயங்குவா. வெளியூர், வெளிநாடுகளுக்கு டூர் போனோம்னா, வளைச்சு வளைச்சு போட்டோ எடுப்பாங்க. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

 என் குழந்தைகள் வளர்ந்துட்டாங்க. அவங்க போட்டோக்கள் வெளியில வரக் கூடாதுனு நினைக்கிறேன். அதை இழப்புன்னு சொல்ல முடியாது. மக்களின் அதீத அன்புன்னு வேணும்னா சொல்லலாம்.''





டிஸ்கி - இதன் முதல், 2 வது,3வது , 4வது பாகம் படிக்க 

முற்றும்