Showing posts with label தி மு க. Show all posts
Showing posts with label தி மு க. Show all posts

Saturday, August 20, 2011

ஜெ சவால்- உள்ளாட்சித்தேர்தல் வரும்போது தி முக வி ஐ பிங்க எல்லாரும் உள்ளே இருப்பாங்க!

'உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்!''

சீறிய ஜெ.! சிலுப்பும் அறிவாலயம்!

நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.


நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார்.

''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. அதை சட்டரீதியாகத் தடுக்க முடியுமா என்று தி.மு.க-வும் சிலுப்பிக் கொண்டு தயாராகி வருகிறது!


தமிழ்நாடு முழுக்க நில அபகரிப்பு தொடர்பாக இதுவரை வந்த புகார்கள் 2,800-ஐத் தாண்டிவிட்டன. பெரும்பாலும் தி.மு.க. தொடர்புடையவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு. கடந்த மூன்று மாதங்களில் கைதான தி.மு.க. வி.ஐ.பி-கள் பற்றிய ஓர் அலசல் இது. போலீஸ் போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன!

ஜெயலலிதா கோபமும்... வீரபாண்டியார் கைதும்... 

சேலத்தில் உள்ள பிரீமியர் ரோலர் ஃபிளவர் மில்லை மிரட்டி வாங்கியதாக அதன் உரிமையாளர் கொடுத்த புகாரில்தான், வீரபாண்டி ஆறுமுகம் மீது கொலை மிரட்டல், நிலத்தை அபகரித்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் அவரைக் கஸ்டடியில் வைத்து விசாரித்தது போலீஸ். 

அந்த சமயத்தில் வெளியில் இருந்த தி.மு.க-வினர் சிலர் பச்சை சேலை உடுத்திய ஒருவரை அசிங்கப்படுத்துவதைப்போன்று சில சம்பவங்களை அரங்கேற்றவே, கடுப்பானார் ஜெயலலிதா. தாசநாயக்கன்பட்டி பால மோகன்ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆறுமுகம். இன்னும் ஜாமீன் வாங்கவும் முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.


 ஆப்பு வைத்த அரவை மில் அதிபர்! 

பெருந்துறையைச் சேர்ந்த கடலை அரவை மில் அதிபர் ராமசாமி, ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 'அந்தக் கடனுக்காக, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது மில்லை என்.கே.கே.பி.ராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என ஈரோடு மேயரான குமார் முருகேஷ் மிரட்டினார். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அந்த அரவை மில்லை அபகரித்துக்கொண்டார்கள்!’ என்பதுதான் ராமசாமியின் புகார். 

தி.மு.க. ஆட்சியில் பயந்துகொண்டு இருந்த ராமசாமி, ஆட்சி மாறியதும் போலீஸில் புகார் கொடுக்க... கொலை மிரட்டல், நில அபகரிப்பு உட்படப் பல பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜாவையும், மேயர் குமார் முருகேஷையும் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்தது ஈரோடு போலீஸ்.

கொலை மிரட்டல்.. ஆக்கிரமிப்பு.. மோசடி! 

சென்னை, நொளம்பூரில் அண்ணாமலை அவென்யூ என்ற 20 ஏக்கர் நிலத்தில் 120 குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான ரங்கநாதன், அவர்களை மிரட்டிக் காலி செய்யவைத்தார் என்பதுதான் புகார். பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி ரங்கநாதன் மீது புகார் கொடுக்க, விடுமா போலீஸ்? கொலை மிரட்டல், ஆக்கிரமிப்பு, மோசடி செய்தல் என 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனைத் தூக்கிவிட்டது. ரங்கநாதன் மீது ஏற்கெனவே நிலுவையில் இருந்த அத்தனை புகார்களும் தூசு தட்டப்படுகின்றன. இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரங்கநாதன்.


 
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 'பொட்டு’ சுரேஷ்! 

மதுரை மாவட்டத்தில் உள்ள வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பாப்பா என்ற பெண்தான் பொட்டு சுரேஷ§க்கு முதல் கொட்டு வைத்தவர். 'எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை, வெறும் 40 லட்சத்துக்கு பொட்டு சுரேஷ§ம், மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் தளபதியும் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க!’ என்று புகார் கொடுத்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பட்டது. 

இருவரும் எஸ்.பி. ஆபீஸுக்கு வர... ஏற்கெனவே போட்டுவைத்த திட்டப்படி இருவரையும் கைது செய்தது போலீஸ். ஆடிட்டர் அமர்நாத் என்பவரின் இடத்தை அபகரித்துக்கொண்டதாக பொட்டு மீது இன்னொரு வழக்கும் பதிவானது. உடனடியாக மதுரை கலெக்டர் சகாயம், 'பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில்வைக்க உத்தரவிடுகிறேன்!’ என்று ஆணை பிறப்பிக்க... வெளியில் வர முடியாதபடி சுரேஷ§க்குக் கிடுக்கிப்பிடி போடப்பட்டது.

 மதுரை குலுங்க.. குலுங்க..! 

தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் 'அட்டாக்’ பாண்டி. மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு நேர் எதிராக இருக்கும், சுமார்  2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும்கூட, அதைக் காலி செய்யாமல் ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டு வதாகத்தான் 'அட்டாக்’ மீது புகார். 

இதேபோல கல்பனா என்ற பெண்ணும், வாடகைக்கு விட்ட தன்னுடைய வீட்டை 'அட்டாக்’ பாண்டி திருப்பித் தராமல் மிரட்டுவதாகப் புகார் கொடுக்கவே, நில ஆக்கிரமிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு அமுக்கிவிட்டது போலீஸ். வீடு, கடைகளை அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான மதுரை வி.கே.குருசாமி மீதும் புகார்கள் எழுந்தன. ஏற்கெனவே சில வழக்குகள் அவர் மீது இருக்கவே, குருசாமியையும் குண்டர் தடுப்புச் சட்டத்திலேயே கைது செய்துவிட்டது போலீஸ்.

திருமங்கலத்தை சேர்ந்த சிவனான்டி என்பவர், தன்னுடைய நிலத்தை எஸ்ஸார் கோபி அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை காரை ஏற்றிக் கொலை செய்ததாக அதிரவைக்கும் வழக்கு என அடுத்தடுத்த புகார்களால் கோபியின் தலையும் உருள ஆரம்பித்தது. நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரான கோபியை உள்ளே தள்ளிவிட்டது போலீஸ்.

 சேப்பாக்கம் டு திருப்பூர் 

உடுமலை சீனிவாசனுக்குச் சொந்தமான ஜியான் பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது புகார். இந்த வழக்கில் சன் டி.வி. சக்சேனா, அய்யப்பனும் சிக்க... எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகனை எழுப்பிக் கைது செய்து, திருப்பூருக்குப் பறந்தது, போலீஸ். கண்டிஷன் பெயிலில் வெளியில் வந்த அன்பழகன், திருப்பூ ரில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.

 நகராட்சித் தலைவர்களும் உள்ளே... 

குளுகுளுப் பிரதேசமான கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருப்பவர், தி.மு.க-வைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். இவர் மீதும் பண்ணை வீடு ஆக்கிரமிப்பு புகார். கொடைக்கானலில் ஜான் ரோஷன் என்பவர், 'எங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை இடிச்சிட்டு அபகரிச்சுட்டாங்க. திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபருடன் சேர்ந்து முகமது இப்ராஹிம்தான் இதைச் செய்தார்.’ எனப் புகார் கொடுக்க... அதிரடி ஆக்ஷன்தான்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சித் தலைவரான கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டின் பேரில் கட்டுமானப் பணிகளுக்காக  45 லட்சம் கடன் வாங்கினார். கடனைத் திருப்பி கேட்டு வங்கியில் இருந்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கிருஷ்ணமூர்த்தி கண்டுகொள்ளவே இல்லையாம். கடனைக் கேட்கப் போன வங்கி அதிகாரிகளையும் கிருஷ்ணமூர்த்தி மிரட்டவே, அவர்கள் போலீஸில் புகார் கொடுக்க... அப்புறம் என்ன? ஜெயில்தான்!

 கரூரைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான வாசுகியின் கணவர் முருகேசன், தம்பி ரவிக்குமார் இருவரும் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். தளவாய்பாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கிரயம் செய்துகொண்டு, பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக இவர்கள் இருவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.

திருப்பூர் அருகே முருகம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் பொங்கலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான மணி கைது செய்யப்பட்டதுதான் லேட்டஸ்ட்.

திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கம்பி எண்ணுகிறார். 

கடைகளைச் சேதப்படுத்தியது, பள்ளி மாணவன் விபத்தில் இறந்து போனதற்குக் காரணம் எனப் பல்வேறு வழக்குகள் கலைவாணன் மீது பாய்ந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், கொலை முயற்சி வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க. நகரச் செயலாளரை கொலை செய்யத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருக்கிறது போலீஸ்.

''இத்தோடு முடியவில்லை... இன்னும் நிறை யவே இருக்கு. பார்க்கத்தானே போறீங்க..'' என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார் காவல்துறை உயரதி காரி ஒருவர். தி.மு.க.வினர் வயிற்றில் இவை புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது!

thanx - ju.vikatan

Monday, March 21, 2011

தி மு க வின் கதாநாயகி தமிழ்நாட்டுக்கு வில்லி

http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg 

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு வரை ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக பேசப்பட்டு வந்தது...எப்படியும் தி மு க வீழ்ந்து  விடும் என்ற நம்பிக்கையோடு தேச நலன் விரும்பிகள் நினைத்து வந்தார்கள். கலைஞர்  வெளியிட்ட தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடையே பெரிய பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 யார் வந்தாலும் ஊழல் தான் பண்ணுவாங்க...இவர் வந்தாலாவது நமக்கு கிரைண்டர் கிடைக்கும், இலவச பஸ் பாஸ் கிடைக்கும் என பேசி வருகிறார்கள்..எத்தனை  பதிவர்கள் எத்தனை விழிப்புணர்வுக்கட்டுரை எழுதினாலும் இனி பயன் இல்லை என்ற சோர்வே மிஞ்சுகிறது...


.1. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அனைத்து தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருமாவளவனுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வோம்; கருணாநிதியை ஆறாவது முறையாக முதல்வராக்க என்னென்ன வழிமுறை யுக்தி என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம்.


அடடா.. பச்சோந்தி என்ன அழகா பேசுது பாருங்க.. இதே ஆளு அன்புமணிக்கு  மந்திரி பதவி தரப்படலைன்னா என்னமா கூவுவாரு,,?
----------------------------------------------

2. வருமான வரித்துறை அதிகாரி தகவல்: வேட்பாளர்களின் கறுப்பு பணம் குறித்தும், அப்பணத்தைக் கொண்டு, அவர்கள் ஏதாவது சொத்து வாங்கியிருந்தால், அது பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். வேட்பாளரிடமிருந்து பெறப்படும் கறுப்பு பணத்திற்கு வசூலிக்கப்படும் வரியில் 10 சதவீதம், தகவல் தருவோருக்கு சன்மானமாக வழங்கப்படும்.

ஆனா அந்த சன்மானத்தை வாங்க அவர் உயிரோட இருக்கனுமே...?

-------------------------------------------------
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg?w=480&h=341
3. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மகிழ்ச்சியான செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்.

ஆஹா.. தமிழன்னா இப்படித்தான் இருக்கனும்... பேஷ் பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு..பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு கஷ்டம்னா பரிதாபப்படமா பழி வாங்கத்துடிக்கறாங்களே...

-------------------------------------

4. மத்திய அமைச்சர் அழகிரி: தி.மு.க., கூட்டணி அமைய, என் பங்கு மட்டுமல்ல, அனைத்து கூட்டணித் தோழர்களின் பங்கும் உண்டு. அவர்கள், கூட்டணி வெற்றிக்கு தூண்டுகோலாக இருப்பர்.

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகியே போதும்.. மக்கள் மாக்களாகத்தான் இன்னும் இருக்காங்க என்பதை நிரூபிக்க....

---------------------------

5. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: திருவாரூர் தொகுதியில், பீர், பிராந்தி மற்றும் ரம் பாட்டில்கள் என, மொத்தம், 1,858 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை, கருவூலத்தில் வைத்துள்ளோம். விசாரணைக்குப் பின், இவற்றை டாஸ்மாக் கடைகளுக்கு வழங்குவதா அல்லது வேறு எந்த வகைகளில், "டிஸ்போஸ்' செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.


அதை ஏன் டிஸ்போஸ் பண்ணனும்? எலெக்‌ஷன் கமிஷன் ஆஃபீசர்களுக்கு அதைப்பற்றி எக்ஸ்போஸ் பண்ணுனா போதுமே..ஊத்தி மூடிட மாட்டாங்க..?

-------------------------------
http://www.dinamani.com/Images/article/2011/2/17/cartoonfeb17b.JPG

6. மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது: மம்தா மீதும், அவரது கட்சி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர் அறிவித்த தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்த பிரச்னைக்கு, ஹோலி பண்டிகை முடிந்ததும், கட்சியின் மேலிடத் தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர்.

ஹோலி பண்டிகைல கலர் பொடி பூசுவாங்க...மம்தா உங்க முகத்துல கரியைப்பூசப்போறாங்க..

--------------------------------

7.  தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:மத ரீதியாக நாங்கள் தேர்தலை அணுகவில்லை; மக்களும் அப்படி அணுகக் கூடாது. பா.ஜ., ஆளும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை, தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அதெல்லாம் சிந்திக்க எங்கே விடறாங்க.. நாடு முழுக்க தேர்தல் கதாநாயகி பற்றித்தான் பேச்சு.. தமிழ்நாடு நாசமாப்போகப்போவதை யாராலும் தடுக்க முடியாது போல இருக்கே..

------------------------------------
 8. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேட்டி: அ.தி.மு.க.,வை இயக்கும் ஒருவர், என் வீட்டு முன்,எங்கள் கட்சியின் கொடியை அவமதித்தார். இது குறித்து, ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினேன். இதற்கு அவரிடமிருந்து இதுவரை பதில் கடிதம் வரவில்லை. இதன் காரணமாக, அ.தி.மு.க.,வுடன் எங்கள் உறவு முறிந்தது; இனி, சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

அம்மாவுக்கும் சரி, அவங்க கட்சிக்காரங்களுக்கும் சரி ஆளுங்களை அவமானப்படுத்தித்தான் பழக்கம்..  உங்க கட்சிக்கொடி எதுன்னே அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது... தெரியாம பைக் துடைச்சிருப்பாங்க....

--------------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/veeramani-karunanidhi.jpg
9. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு: இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறைகளைச் சீரழித்து நவீன தொழில் நுட்பம் என்ற பெயரில், இயற்கைக்கு விரோதமான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், உற்பத்தி செய்யப்படும் விதைகளைக் கொண்டு உருவாக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால், நம் தேகத்திற்கும், தேசத்திற்கும் ஆரோக்கிய மற்ற நிலை உருவாகிறது.

தேகத்துக்கு ஆரோக்கியமற்ற நிலைன்னு சொன்னா சாரு நிவேதிதா கோவிச்சுக்குவாரு... அவர் நாவலை குறை சொல்றோம்னு....தேசத்துக்கு ஆரோக்கியமற்ற நிலை உருவாகுதுன்னா கலைஞர் கோவிச்சுக்குவாரு... அவரோட தேர்தல் அறிக்கை கதாநாயகியை நாம குறை சொல்றோம்னு....

-------------------------------------------

10. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி:தேர்தலில், விலைவாசி உயர்வு, "ஸ்பெக்ட்ரம்' முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட பிரச்னைகளை விளக்கி பா.ஜ., பிரசாரம் மேற்கொள்ளும். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், டெல்டா மாவட்டங்களில் நதிகள் இணைப்பு, சாயக் கழிவு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எல்லாம் வேஸ்ட் தான்..  தி மு க தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகி தமிழ்நாட்டின் பவர்ஃபுல் வில்லி

------------------------------------------
டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...

டிஸ்கி 2 - கடந்த 2 தினங்களாக வலைப்பக்கம் வராமல் போனவர்களுக்கு மட்டும் எனது முன் தினப்பதிவுகள்



3.


Wednesday, February 02, 2011

அரெஸ்ட் ஆன ஆ ராசா.. தி மு கவுக்கு ஆப்பு

http://www.maniyosai.com/cms/images/stories/a.raja%20-%20file%20pic.jpg 
ஆ.ராசா கைது: சிபிஐ நடவடிக்கை
புதுடெல்லி, பிப்.2,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
ராசாவின் உதவியாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் பெஹுரியா ஆகியோரையை சிபிஐ கைது செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, ஆ.ராசாவிடம் 4-வது நாளாக இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த முறைகேட்டில், ராசா தொடர்புடையதற்கான போதுமான ஆதாரங்களைத் திரட்டிய நிலையில், அவரை சிபிஐ கைது செய்தது.
முன்னதாக, ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கட்கிழமை விசாரணை நடத்தினர்.  அவரிடம் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இரண்டு தடவை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முந்தைய சூழ்நிலைகள், பண விவகாரம் ஆகியவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து ராசாவிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கிளை நிறுவனங்களில் ஆ.ராசா குடும்பத்தினரின் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சிபிஐ விசாரித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ராசாவின் கோதரர் ஏ.கே.பெருமாளிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தினர்.
http://www.makkalmurasu.com/images/articles/2010_11/23482/u1_ra.jpg
இதனிடையே, 2001-ம்  முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான நடைமுறைகள் குறித்து ஆராய்வதற்காக தொலைத் தொடர்புத் துறையால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் தலைமையிலான ஒருநபர் குழு,மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.  அதில், ஆ.ராசாவின் நிர்வாகத்தின் மீதே குறைகூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரத்தில் இந்த கைது பெரிய அரசியல் திருப்பத்துக்கு அடி கோலும் என சொல்லப்படுகிறது.


இந்த தகவலை எனக்கு அனுப்பி வைத்த ஆனந்த விகடனில் பணியாற்றும் நண்பருக்கு நன்றி..