Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Monday, July 20, 2015

எம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்

ஓவியம் பாரதிராஜா
ஓவியம் பாரதிராஜா
இலங்கை வானொலியில் மயில்வாகனன் சர்வானந்தாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ ‘பொங்கும் பூம்புனல்’ என்று சொல்லும்போது கடிகாரம் எட்டு மணியைக் காட்டும். அப்படியொரு சர்க்கரைப் பொழுதில்தான் எம்.எஸ். விஸ்வநாதன் என் செவியில் நுழைந்து மனசுக்குள் ரங்கராட்டினம் சுழற்றினார்.
‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை.
நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.
இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில்
‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.
காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.
எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம்.
ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.
அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார்.
“நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.
எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.
‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,
'தேடினேன் வந்தது...
டின்டக்கு டின்டக்கு...
நாடினேன் தந்தது
டின்டக்கு டின்டக்கு'
என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.
‘அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற ‘சர்வர் சுந்தரம்' படப் பாடலை பாடும்போது பாடல் வரிகளுக்கு இடையே டிரிபிள் பாங்கோஸும், கிளாரிநெட்டும் சேர்ந்திசைக்கும்
‘பாபப்பப்பம் பாபபப பாபப்பப்பம்...
ன்ட்டாகு... ன்ட்டாகு... ன்ட்டாகு’ என்று தங்கராசுக்குள் எம்.எஸ்.வி. புகுந்து புறப்படுவார்.
‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்
‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'
என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி.
‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்
‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு
‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.
ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை.
சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.
பந்துலு, பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று பல இயக்குநர்கள் தங்களின் பல்லக்கை வெற்றிகரமாக நகர்த்த சக்கரமாக இருந்தவர் எம்.எஸ்.வி. திரைப்படப் பாடல்களை இசையை உரித்துவிட்டுப் பார்த்தால் அதில் உள்ள தமிழ் சட்டென்று நம்மைக் கவர்ந்திருக்காது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற கவிஞர்களை நாம் கொண்டாட விஸ்வநாதன் ஒரு மூல காரணம்.
தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களில் இசையை வாரி வழங்கியவர் எம்.எஸ்.வி.
‘அன்புள்ள மான்விழியே/ஆசையில் ஓர் கடிதம்/ நான் எழுதுவதென்னவென்றால்/ உயிர்க்காதலில் ஓர் கவிதை’ என்று அஞ்சல் அட்டைக்கு இசைச் சிறகு முளைக்க வைப்பார்.
‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி’ என்று கல்யாணப் பத்திரிகை வடிவில் அட்சதை தூவும் ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் ‘தங்கள் நல்வரவை விரும்பும்/ ரகுராமன் ரகுராமன் ரகுரா…மன்’ என்கிற வரிகளின்போது யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்ட பல அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன்.
‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.
‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி -த இந்து

  • Subramanyam  
    அதாவது, இந்தப் பாடல்கள்தான் என்றில்லை. பல ஆயிரக்கணக்கான பாடல்கள் சாம்ராஜ்ஜியத்துன் அதிபதி அவரும் திரு ராமமூர்த்தி அவர்களும். எதை எடுப்பது, எதை விடுப்பது? வரம் பெற்று பூமிக்கு வந்தவர்.
    Points
    32390
    3 days ago
     (1) ·  (0)
     
    V Up Voted
    • WWatcher  
      கண்கள் பனிக்க வாய்த்த கட்டுரை.அருமையான சொல்லாடல்.அற்புதமான நினைவஞ்சலி .நன்றி.

    Tuesday, August 02, 2011

    தோற்றுப்போன ராஜபட்சேவும், இற்றுப்போன அவர் எலக்‌ஷன் டெக்னிக்குகளும்

    ராஜபக்ஷேவுக்கு இது சம்மட்டி அடி!

    மக்கள் மனச்சாட்சியைச் சொன்ன உள்ளாட்சித் தேர்தல்!
    கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக அனுபவித்த வலியை, உள்ளாட்சித் தேர்தல் முடிவில் வலிமையுடன் காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்! 

    இலங்கையில் கடந்த 23-ம் தேதி வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ளாட்​சித் தேர்தல் நடந்தது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை, வல்​வெட்டித்துறை, சாவகச்சேரிஆகிய மூன்று நகர சபைகள், 10 பிரதேச சபைகள், கிளிநொச்சியின் பச்சிலைப்​பள்ளி, கரைச்சி, பூநகரி, முல்லைத் தீவின் துணுக்காய் உள்பட 17 உள்ளாட்சி அமைப்புகளில் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ வெற்றி பெற்றுள் ளது. கிழக்கில் திருகோணமலை மாவட் டத்தின் திருகோணமலை நகர் - புறநகர், அம்​பாறை மாவட்டத்தின் திருக்கோயில், காரைத் தீவு ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழர் கூட்டமைப்புக்கே வெற்றி.  

    யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில், வேலணை, ஊர்க் காவல் துறை, நெடுந் தீவு ஆகிய பிரதேச சபைகளில், அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டணியில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி வெற்றி பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில், சிங்களர்கள் கணிசமாக வசிக்கும் செருவில, குச்சவெளி ஆகிய பிரதேச சபைகளை மட்டுமே ராஜபக்ஷே கட்சி கைப்பற்றி உள்ளது.

    கிழக்கு மாகாண முதலமைச்சர் (கருணாவின் முன்னாள் சகாவான) பிள்ளையானின் டி.எம்.வி.பி. கட்சிக்கு, ஈழ மக்கள் நான்காவது இடத்தையே அளித்தனர். அம்பாறை மாவட்டத்தின் காரை தீவுப் பிரதேச சபையில் 1.57 சதவிகித வாக்குகளும், திருக்கோயில் சபையில் 5.28 சதவிகித வாக்குகளையும் மட்டுமே அந்தக் கட்சி பெற்றுள்ளது.

    யாழ் தீவகம் எனப்படும் நெடுந் தீவு, புங்குடு தீவு, காரைநகர், இழுவை தீவு, மண்டைத் தீவு, வேலணை, ஊர்க் காவல் துறை ஆகிய ஏழு தீவுகளிலும் நீண்ட காலமாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. ஆயுதக் குழுவின் ஆதிக்கம்தான் இருந்தது. 

    எந்தத் தேர்தலானாலும், அவர்களை மீறி யாரும் பிரசாரத்துக்குக்கூட அங்கு போக முடியாது. 2002 நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகளின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயரில், நான்கு தமிழர் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அப்போது, யாழ்குடா நாட்டில் இருந்து தீவகப் பகுதியை நோக்கி, கூட்டமைப்பினர் பிரசாரத்துக்காகச் சென்றபோது, அல்லைப்பிட்டி என்ற ஊரில் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலில், கூட்டமைப்பின் துணைத் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு மண்டை உடைந்தது. சிவாஜிலிங்கத்தின் கை முறிக்கப்பட்டது. இப்படியான வரலாறுகொண்ட தீவகப் பகுதியில், இந்த முறையும் கூட்டமைப்பினர் முறையான பிரசாரத்துக்குச் செல்ல முடியாதபடி, ஆயுதக் குழுவின் அடக்குமுறைகள் தொடரவே செய்தன. 

     கூடவே, சிங்கள ராணுவத்தின் முழு ஒத்துழைப்பும் இவர்களுக்குக் கிடைத்தது.  தீவகப் பகுதியின் முன்னாள் ராணுவ கமாண்டரும், இப்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநருமான நிகால் ஜெயவிக்கிரம என்பவரை, கூட்டணியின் பிரசாரத்துக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தினார் ராஜபக்ஷே. இவ்வளவையும் மீறி, தீவகத்தின் காரை நகர் பிரதேச சபையை தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியது.

    மொத்த யாழ்குடாப் பகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில், ராஜபக்ஷே அரசு சகல இயந்திரங்களையும் களத்தில் இறக்கியது. தமிழகத்தின் திருமங்கலம் பாணியில், பணம், இலவசப் பொருள்களைக் கொடுத்து, வாக்காளர்களை மயக்க ஏதேதோ செய்தனர்.

    மகிந்தவின் தம்பியும் அமைச்சருமான  பசில் ராஜபக்ஷே, 13 அமைச்சர்கள்​கொண்ட ஒரு படையுடன் இரு மாதங்களாக யாழ்ப்பாணம் பகுதியில் முகாமிட்டு இருந்தார். இவர் அடித்த தேர்தல் ஸ்டன்ட்கள், இந்திய அரசியல் வாதிகளே மூக்கில் விரல்வைக்கக்​கூடியவை!


    ஆனால் தமிழர் கூட்டமைப்பின்வேட்​​பாளர்​​​களுக்குப் பிரசா​ரக் கூட்டம் நடத்த ராணுவ அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மீறி நடத்தியவர்கள் மீது சிவில் உடையில் வந்த ராணுவம்  தாக்கியது. இதுபற்றி, நீதியான, சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், மனித உரிமைகளுக்கான மையம் போன்ற நடுநிலை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. 'ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தின. ஆனா லும், ராஜபக்ஷே கட்சி கூட்டணியினரின் வன்முறைகள் நின்ற பாடில்லை.


    இந்தச் சூழலில், ஈழ மக்கள் வாக்களிக்க வருவார்களா என்ற சந்தேகம் எழ... அதை மீறி, நொந்துகிடக்கும் அந்த மக்கள் வாக்களித்து தமது தெளிவான முடிவைக் காட்டிவிட்டனர்.

    ''போர் முடிந்த ஈழத்தில் மேம்பாடுபற்றி மட்டுமே அரசாங்கம் பேசுகிறது. ஈழ மக்களுக்கு அரசியல் அதிகாரமும் வேண்டும் என்கிறோம். அதே சமயம், இலங்கை அதிபரின் மீது யுத்தக் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகளும் வலியுறுத்தின. இந்த இரண்டையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதைத்தான் எமது மக்கள் இந்த உள்ளாட்சி சபைத் தேர்தலில் உறுதி​யாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!'' என்கிறார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் யாழ்ப்பாண எம்.பி-யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.  

    உண்மைதான், 'ஈழம் வேண்டுமா, வேண்டாமா?’ என உலகம் அறிய ஐ.நா. சபை வாக்கெடுப்புநடத்த வேண்டும்!

    நன்றி - ஜூ வி