Showing posts with label தமனா. Show all posts
Showing posts with label தமனா. Show all posts

Friday, January 10, 2014

வீரம் - சினிமா விமர்சனம்


ஒட்டன்சத்திரம் - இந்த ஊர் ல  ஹீரோ தன் தம்பிங்க 4 பேர் கூட கட்டை பிரம்மச்சாரியா வாழ்றாரு.மேரேஜ் பண்ணிக்கிட்டா வர்ற மனைவி குடும்பத்தைப்பிரிச்சுடுவா என்பதால் அவர் மேரேஜே பண்ணிக்கலை. ஆனா தம்பிங்க 4 பேரும் ஆளுக்கு ஒரு பிகரை  தனித்தனியா லவ் பண்றாங்க .இப்டியே  அண்ணனை விட்டா  அவர்  நம்ம எல்லாரையும்  பிரம்மச்சாரியாவே ஆக்கிடுவார் என்பதால் அவருக்கு  ஒரு ஃபிகரை கோர்த்து விடலாம்னு சந்தானம்  கூட சேர்ந்து  ஐடியா பண்றாங்க. இவங்க பண்ற கலாட்டாக்கள் , கோர்த்து விடல்கள் என இடைவேளை வரை படம்  ஜாலியாப்போகுது .


இவர் ஊருக்கே  எஜமான் மாதிரி , அடிதடி ரகளைன்னு வாழ்ந்தவர் . இவருக்கு ஜோடி சேர்ந்த பொண்ணு அமைதியான டைப்.அவங்கப்பாவும்  அமைதியை விரும்பும் ஆள். அவங்க ஊருக்கு ஹீரோ  நல்லவர் மாதிரி அமைதியாப்போறாரு.போகும்போது  ரயில் ல  ரவுடிகள்  தாக்க வரும்;போது ஹீரோ  செம ஃபைட் போடறதைப்பார்த்து அந்தம்மா ஆடிப்போகுது. ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கைப்பார்த்து  ஷீலா தீட்சித் மாதிரி .இடைவெளை.


அதுக்குப்பின்  ஹீரோ அவங்க கிராமத்தில் போய் தங்கி நல்ல பேர் எடுக்கறாரு. ஹீரோயின் குடும்பத்துக்கு வேற ஒரு பகை வருது.அவங்க கிட்டே  இருந்து அவங்களைக்காப்பாத்தி எப்டி  கரை சேர்க்கிறார்? என்பதே  மிச்ச மீதிக்கதை 


ஆரம்பம் அதிரடிப்படம்  கொடுத்து அடுத்த 70 வது நாளில்  ஒரு  வில்லேஜ் சப்ஜெக்ட் செய்ய துணிச்சல் வேணும். ஏன்னா நம்ம  கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் செம்மல்கள்  ஒரு ஹீரோ  படம்  ஹிட் ஆகிட்டா அதே பாணில 25 படம் வரிசையா கொடுக்க நிர்ப்பந்திப்பாங்க . அந்த பாணியில் இருந்து  விலகி அஜித் இதில்  விநாயகம் கேரக்டரில்  நடிச்சுப்பட்டையைக்கிளப்பி இருக்கார் . 


இவர் வசனம் பேசும் காட்சிகளில்  பொறுத்து, நிறுத்தி நிதானமாப்பேசுவதும் , அடிக்குரலில் செந்தூரப்பூவே  கேப்டன் போல் கனத்த குரலில் பேசுவதும் அஜித்க்குப்புதுசு. நல்லாப்பண்ணி  இருக்கார். 

என்ன தான் மைசூர்பாக் ஸ்வீட்டா இருந்தாலும் தொடர்ந்து  3 சாப்பிட நேரும்போது  கொஞ்சம் மிக்சர் சாப்ட்டுட்டு அடுத்த ஸ்வீட்டை சாப்ட்டா தித்திப்பு திகட்டாது, அது மாதிரி அஜித்க்கு சால்ட்& பெப்பர்  லுக் மங்காத்தா , ஆரம்பம் 2ல் நல்லா எடுபட்டுச்சு என்பதற்காக  தொடர்ந்து ஒரே மாதிரி ஸ்டைலில் செய்தால் போர் அடிச்சுடும் , ஒரு படம் அப்படி , அடுத்த படம் இப்படி என மாத்தனும் .


டூயட் காட்சிகளில்  நெளிய வைக்கிறார். வேட்டி போட்டு கோட் போட்டு வரும் காட்சியைத்தவிர்த்து இருக்கலாம். அதே போல் பாடல்களுக்கான நடன அசைவுகளும் டூயட்களில் எடுபடவில்லை. தனிக்குத்தாட்டப்பாட்டு  ஓக்கே . 


சந்தானம்  இதிலும்  கோல் அடிச்சிருக்கார், வழக்கமா அவர் எந்தபப்டத்தில் வந்தாலும்  ஹீரோவை நேருக்கு நேர் கலாய்ப்பவர் இதில் பம்மி  இருப்பது ஏனோ? அவர் அடிக்கும்  ஒன் லைனர்கள் பரவாயில்லை. வழக்கம் போல் பழைய ஜோக்ஸ்களை உல்டா செய்வதும் இதில்  தொடருது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் கல கல .


 இடைவேளைக்குப்பின் தம்பி ராமையா காமெடி பேலன்ஸ் செய்யுது, 

தமனா தான்  ஹீரோயின் . பெரிய வாய்ப்பு தான், ஆனாலும் அதிக திறமை காட்ட வாய்ப்பில்லை என்ப்தால்  முடிந்த வரை  கண்ணீயமாக கிளாமர் காட்டி இருக்கார் (கிளாமரில் என்னய்யா கண்ணியமான கிளாமர், கண்ணியம் இல்லா கிளாமர் ? ) 


விதார்த் உட்பட்ட 4 தம்பிகள் நடிப்பும் ஓக்கே . கஜினி வில்லன் தான் இதிலும் வில்லன், பெரிசா எதுவும் செய்யலை. நாசர் நடிப்பு கன கச்சிதம் . 


இடைவேளைக்குப்பின் வரும் திரைக்கதை தடுமாறுது. எப்படி  சுவராஸ்யமாய்க்கொண்டு போவது என  தெரியாமல்  காமெடிக்காட்சிகளை வெச்சு  ஒப்பேத்தி  இருக்காங்க . 



சபாஷ் சத்யா 


1. படத்தில்  அஜித் வரும் காட்சிகளில் வரும் தீம் மியூசிக் வழக்கம் போல் கெத்து. மழையில்  குடையுடன்  வரும்  மாஸ்  சீன் , ரயில்  ஃபைட்டுக்கான ஓப்பனிங்க் பில்டப் , க்ளைமாக்ஸ் பஞ்ச் வசனங்கள் எல்லாம் அருமை 



2. ஹீரோ அண்ட்  கோ அமைதியான குடும்பம் என அறிமுகப்படுத்தி எல்லோரும் சாப்பிட உட்காரும்போது செல் ஃபோன்  ரிங்க் டோனாக “அட்ரா அட்ரா நாக்கு முக்க “ பாட்டு ஒலிப்பதும் நாசர்   திகைப்பதும்  செம காமெடி 



3. ஹீரோ , ஹீரோயின் இருவரின்  ஓப்பனிங்க் காட்சிகளில் சமாதானப்புறா பறக்க விடுவது , ஒரு காட்சியில்   நிர்மூல வானத்தின் பின்னணியில் கழுகு ஒன்று மேலே பறக்க அஜித்க்கு  கிரவுண்ட்   ஷாட் ஆங்கிளில்  பில்டப்  கொடுப்பது எல்லாம் அக்மார்க்  அஜித் ஸ்டைல் பிராண்ட்.விநாயகம்  என்ற பெயரில்  தீப ஒளிவிளக்கு வரிசை வருவது  வீரா படத்தில் மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே பாட்டின் ஓப்பனிங்க் லீடில்  இருந்து  உருவப்பட்டிருந்தாலும்  நேர்த்தியான காட்சி 


4.  ஃபேமிலி ஆடியன்சை கவரும் வகையில் இடைவேளை வரை கலகலப்பாக நகரும்  குடும்பக்கதை படத்துக்கு பெரிய பிளஸ். ஆல் செண்ட்டர் ரசிகர்களும் ரசிக்கும்படி முன் பாதி அமைஞ்சிருக்கு 


சொதப்பல் சொப்னா 


1. பெட்ரோல் பங்க்கில் மோதி கார் வெடிக்கும் காட்சி  மிக மோசமான கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ் ஒர்க் . இன்னும் மெனக்கெட்டு  இருக்கலாம் . 


2. பின் பாதியில்  வரும் காட்சிகள்  சோர்வைத்தருது. என்ன நடக்கப்போகுது என்பதை எளிதில்  யூகிக்க முடியுது . அஜித் மாதிரி  ஒரு மாஸ்  ஹீரோவை பின் பாதியில்  ரொம்ப அடக்கி வாசிக்க வைத்தது  இரிட்டேட்டிங்க்.


3.அஜித்க்கு பாடல் காட்சிகளில்   அணிவித்த  கூலிங்க் கிளாஸ் ஃபிரேம்  மேட்ச் ஆகலை . ரேபான் மெல்லிய ஃபிரேம் தான் செம கெத்து 


4. எஜமான் , சின்னக்கவுண்டர் படங்களில்  வில்லன்கள் ஏதாவது பெரிய சதி வேலைகள் செய்வாங்க, அதை  ஹீரோ முறியடிப்பார். இதில் அது மாதிரி  சுவராஸ்ய   முடிச்சுகள்  இல்லை 


நச் டயலாக்ஸ் 


சந்தானம்


1.  இங்கே பாருங்க வக்கீல் சார்.....

 அங்கே எல்லாம் பார்க்க  முடியாதுங்க , யூ புரொசீட்



2.  மழை வர்றதுக்கு முன்னே காய வெச்சிருக்கும் துணிகளை எடுத்துவிடுவது மாதிரி , மூஞ்சில அடிக்கும்  முன்  முன் ஜாமீன் எடுத்து வெச்சுடுவோம் 


3.  ஆடு அரிவாளை வாய்ல கவ்விட்டு வந்து  என்னை வெட்டு வெட்டுங்குது 


4.  சாரி அக்கா , என்னை மறந்துடு


 என்னது ? அக்காவா?

 பின்னே, பொண்ணுங்க மட்டும் தன்னைக்காதலிச்சப்பையனை கழட்டி விடும்போது அண்ணன், தம்பி அப்டினு சொல்ற மாதிரி பசங்க ஏன் காதலியை கழட்டி விட அக்கா, தங்கைன்னு அள்ளி  விடக்கூடாது? 



5.  நாங்க போறோம்.

 ஏன்? பம்பு செட்ல போய் இரண்டு பேரும் மீதிக்குளியலைப்போடறதுக்கா? 



6.  ரொம்ப நேரமா உன் மூஞ்சியைப்பார்த்துட்டு  இருக்க முடியலை, சீக்கிரம் சொல்லு உன் ஃபிளாஸ்பேக்கை 




7. பைலைப்போடுங்கடா கீழே 


 போலீசைப்போட வேணாமா?

 அட, கலவரத்துக்குப்பிறந்தவங்களா!


8. வாசக்கதவைச்சாத்திட்டியா?

லேடி - ம் 


கொல்லைக்கதவை?

 ம்

 ஜன்னல் கதவை?

 பீரோக்கதவைக்கூட சாத்தியாச்சு , வாங்க 


9. நான்  சொன்னபடி செய்யலை, இன்னைக்கு ராத்திரி நீ திராட்சை சாப்பிட முடியாது  ( டபுள் மீனிங்க் )



10 உன்னை அசிங்கப்படுத்தறதுல ஒரு அரசாணையே வெளியிடலாம் போல 


11 முதன் முதலா எங்கண்ண,ன் கண்ணாடியைப்பார்க்கறாரு 

 அப்போ இத்தனை நாளா செங்கல்லைப்பார்த்தா ஷேவிங்க் செஞ்சாரு ? 


12  டேய், கடைசி வரை நீங்க அண்ணி கையால சாப்பிடவே மாட்டீங்க , இந்தப்பன்னி கையால தான் சாப்பிடுவீங்க 



13  ஏண்டா, தம்பிங்க எனும் போர்வைல நீங்க எல்லாம் மாமா வேலை தானே பார்த்துட்டு இருந்திருக்கீங்க ?


14   வண்டியைத்தள்ளி ஸ்டார்ட் பண்ணத்தேவை இல்லை போல, தானா ஸ்டார்ட் ஆகிடும் போல ( டபுள் மீனிங்க் ) 


15  அதெப்பிடிடா இஞ்செக்சன் போட்டுக்கற குழந்தை மாதிரியே மூஞ்சியை வெச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ண முடியுது ? 
டேய்  பிசையறதை  நிறுத்துடா , கண்  கொண்டு பார்க்க முடியலை 


16  பீடி ஊதற வாயை வெச்சு பீ பீ ஊத வெச்சுடுவான் போல  இருக்கே?


17   ஆடத்தெரியாத  சிலுக்கு  கால்லசுளுக்குன்னாளாம்


18.  பறவை மேல இவ்ளவ் பாசத்தைக்காட்ட காரணம் ?


 டேஸ்ட் தான் 


19  ஐ  கோழி 

 பின்னே வீராட் கோலின்னா சொன்னேன்?


20   நீங்க ஒரு நல்ல குடும்பப்பொறுக்கின்னு பாப்பா சொல்லுது 


21  வீட்ல விளக்கேத்தலை ?

 லாரி டிரைவர் பின்னால போய் இருக்கார் ,வந்ததும் எல்லா விளக்கையும் ஏத்திடுவார் 


22  தமனா - விளக்கேத்த  ஹெல்ப் பண்ணுங்களேன் 


அஜித் - டியூப் லைட் போட்டுக்குங்க , நல்ல வெளிச்சம்  கிடைக்கும் 


23 , அவங்க என்ன குழம்பா ஊத்தறாங்க? போதும் போதும்னு சொல்ல? பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்கடா 


24  மாலை போடச்சொல்லிக்குடுத்தாங்களே, ஜட்டி போடச்சொல்லிக்குடுத்தாங்களா?


25   எங்கண்ணன்  கெஞ்ச ஆரம்பிச்சார்னா அனக்கோண்டாவே அழும் 


26  அவரைக்குத்து மதிப்பா எடைப்போட்டுடாதீங்க . குத்து - மதிப்பா எடை போடுங்க  


27 அந்தக்காலத்துலயே எங்கப்பா தினமும் 1000பேருக்கு சோறு போட்டவரு. சந்தானம் - ஏன்? உங்கப்பா ஹோட்டல்ல சர்வரா இருந்தவரா? # ஜோக் உ ராஜாஜி @ சாவி

28 எல்லாரும் மூட்டையைக்கட்டுங்க. சந்தானம் - ஏன் ? துணி துவைக்கப்போறியா?

29 சந்தானம் - நைன்ட்டி ( கட்டிங்) அடிச்ச ஆன்ட்டியைக்கூட நம்புவாங்க.நைட்டி போட்ட உன்னை மாதிரி ஆம்பளையை நம்ப மாட்டாங்க

30 தலைகால் புரியாம ஆடிட்டேன்.இப்போ தான் தல எது ? வால் எது?னு தெரியுது # வில்லன்


அஜித் பஞ்ச்

சந்தோஷம் வந்தா நாலு பேரோட பகிர்ந்துக்கனும்.கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கனும்.அவன் தான் மனுசன்

2 இது என் குடும்பம்.இவங்களை அடிக்கனும்னா என்னைத்தாண்டி தாஆஆண்டி த்தொட்றா பாக்கலாம்

3 சுடுகாட்டுக்கு எப்டிப்போகனும்னு கேட்டாங்க.நான் வழி சொன்னேன்.இந்நேரம்் போய்ச்சேர்ந்திருப்பாங்க

4 நீ கண்ணை மூடி 8 வரைக்கும் எண்ணு அதுக்குள் அங்க்கிள்் எல்லாரும் ஒளிஞ்சுக்குவாங்க

நம்ம கூட இருக்கறவங்களை நாம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருப்பவன் நம்மைப்பாத்துக்குவான் # 2014 ன் முக்கிய வசனம்

பொண்ணு னு ஒருத்தி நம்ம வாழ்க்கைல வந்துட்டா அவளுக்காக நாம் மாற வேண்டி இருக்கும்.ஏன் இந்த கஷ்டம்? நாம் நாமாவே இருப்போம்

7 நான் ம் னு சொன்னா 4 பேரும் உன்னை உழுதுடுவாங்க

8 எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

9 4 பேர் தான் இருக்கீங்க. 5 பேர் னு சொல்றே.யார் அந்த அஞ்சாவது ஆள் ? 
யாருக்கும் அஞ்சாத ஆள் !

10 நீ எந்த ஜாதின்னு நினைக்கறயோ அந்த ஜாதி. உழைக்கிற ஜாதி

11 இனி விதைச்ச விவசாயி தான் ரேட்டை நிர்ணயம் செய்வான்

12 சாப்பாடு போட்டு அதுக்கப்புறம் ஏன் வெளுத்து வாங்கறீங்க? ஏன்னா அடி வாங்க உடம்பு ல தெம்பு இருக்கனும் இல்ல




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. வீரம் ,ஜில்லா 2 ம் சரி விகிதத்தில் + - இருப்பதால் 2 ம் ஒரே ரேட்டிங்கில் .மக்கள் தீர்ப்புக்காக ஐ ஆம் வெய்ட்டிங்.என்ன நான் சொல்றது?

2 அஜித் அடிக்குரலில் வசனம் பேசும் ஸ்டைல் செந்தூரப்பூவே வில் கேப்டன் பேசுவது போல். குட்

3 ரசிகர்கள் அல்லாத பொது ஜனங்களைக்கவர்வதில் ஜில்லாவை விட வீரம் முன்னிலை # இடை வேளை வரை

4 வீரம் இடைவேளை வரை சந்தானம் காமெடி ,அஜித் ஷார்ப் டயலாக் டெலிவரி னு ஜாலியாப்போகுது.பேமிலி ஆடியன்சை அதிகம் வர வைக்கும் கதை சம்பவங்கள்+

இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ரயில் பைட்டுக்கான ஓப்பனிங் பில்டப் தீனா பட காபி ஷாப் பைட்க்கு இணையான சீன்

6 தமனாவை குட்டைப்பாவாடையில் பாடல் காட்சியில் பார்த்ததும் GOOD டைப்பாவாடை என தோணுது

7 பைக் ஓட்டும்போதும் கை தட்னாங்க.மாட்டு வண்டி ஓட்னாலும் தட்றாங்க

8 அஜித் தமனா ஜோடிப்பொருத்தம் சுமார் தான் னு சொல்றவங்க தயிர் சாதம் VS லெமன் பிக்கிள் காம்பினேசனை கிண்டல் பண்ற மாதிரி # லெமனா வந்த தமனா

9 இனி ஏறுமுகம் தான் என்பதை சிம்பாலிக்கா சொல்வது மாதிரி தமனாவுக்கு ஓப்பனிங் ஷாட் கிரேன் ஷாட்

10 இன்னொரு டெண்டர் இருக்கு டயலாக் முடிந்ததும் கொட்டும் மழையில் குடையுடன் அஜித் வரும் காட்சி மாஸ் சீன்

11 ஒட்டன் சத்திரம் வெற்றிச்சித்திரம்

12 அஜித்தின் ஓப்பனிங் சீன் எஜமான் ரஜினி மாதிரி .சமாதானப்புறாக்கள் பின்னணி ல வருதே அது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?

13 விஜயா புரொடக்சன் டைட்டில் ஐடியா சூப்பர்.எம் ஜிஆர் ,ரஜினி வரிசையில் அஜித்



சி பி கமெண்ட்ஸ் 

வீரம் - பேமிலி ஆடியன்சைக்கவர்ந்திழுக்கும் முன் பாதி , யூகிக்க வைக்கும் திருப்பங்கள் இல்லாத பின் பாதி - 


விகடன்மார்க் =43


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே


,ரேட்டிங் =3.25 / 5

ரஜினிக்கு ஒரு எஜமான்.கேப்டனுக்கு ஒரு சின்னக்கவுண்டர் .அஜித்துக்கு ஒரு வீரம்

திருப்பூர் டைமண்ட் தியேட்டர் . வீரம் . மதியம் 1 மணி ஷோ .திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் உடன் பார்த்தேன்


டிஸ்கி: ஜில்லா-சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2014/01/blog-post_10.html 

Monday, April 09, 2012

ரகளை ( RAGALAI ) - தமனாவின் தெலுங்குப்பட விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid4cMeEzeaSslCr0aPwNnHKVhSHwIl0P-dZJUrLvuHQ_9QXV0gAzrZfTmrRqB8KIGnvcwzJ0YT6wn7k8iK-Wlg1uRmg8lacNUwoDSF1CPHj10Li7MHP8nQ45Vs5oP5QsET1cQMpyiGsZE/s400/Ragalai+Movie+Posters+Mycineworld+Com+(4).jpg 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோட சீமந்தப்புத்திரன் ராம் சரண் தான் ஹீரோ. இஞ்சி மஞ்சள் இடுப்பழகி, லூஸ் தனமான முக சேஷ்டை அழகி தமனா தான் ஹீரோயின். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி தான் புரொடியூசர்.. போட்ட முதலீடு 40 கோடியாம். ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .. வழக்கமா தமிழ்ல கதை கேட்டு ஷூட்டிங்க் போறவரு இதுல மறந்துட்டார் போல.

ஹீரோ ஒரு பெட் பைத்தியம். உடனே நித்யானந்தா மாதிரி எந்நேரமும் பெட்லயே கிடப்பாரா?ன்னு கேட்காதீங்க.. பந்தயம் எனும் பெட் கட்டற பைத்தியம்.  அவர் கிட்டே அஜ்மல் ஒரு பெட் கட்டறார்.. ஊருக்கே தாதா வில்லன். அவன் பொண்ணு  தமனாவை ஐ லவ் யூ சொல்ல வைக்கனும்.. அதுவும் 30 நாட்களில்... இதுதான் கண்டிஷன். பந்தயத்தொகை ரூ  20 லட்சம்.. 

 இதெல்லாம் ஒரு பந்தயமா?ன்னு யாரும் கேட்றக்கூடாது என்பதற்காகவும், தாய்க்குலம் உச்சு கொட்ட வைக்கவும் ஹீரோ அப்பா திடீர்னு சீரியஸ் ஆகி ஹாஸ்பிடல் செலவு வந்துடுது. பந்தயத்துல ஜெயிச்சா பொண்ணு , பணம் 2ம் கிடைக்கும். 

முதல் டைம் ஹீரோ ஹீரோயினுக்கு லவ் லெட்டர் தந்துட்டு அப்பா என்ன?ன்னு கேட்டதும் இது ரியாலிட்டி டி வி ஷோன்னு சொல்லி சமாளிக்கறார் .. அந்த கேனை அப்பனும் அதை நம்பிடறான்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZPuKLwrc7o9ttyZeETBq-i-dSZQqFqdrdgTHUkhbAwOg3rdiKSQe0PWLFxcwyLKAqy4R7r2AnEYRcxG3oVg5tWDzN_-kaVvFUNbqWZpUjl-Eo1ByN3NetIH1cypPGAPldnM70IxoZHo/s1600/tammah-Ragalai-Movie-Stills-4.jpg


2வது டைம் தமனா வீட்டுக்கே சாரி பங்களாவுக்கே போய் அங்கே இருக்கற அடியாளுங்க 346 பேரை அடிச்சுட்டு  லவ் லெட்டர் தர்றாரு.. 

 3 வது டைம் தமனாவையே தூக்கிட்டு போய் ஒரு ஃபுல் டே தனிமைல வெச்சிருந்து ஐ லவ் யூ சொல்றாரு.. தமனா லவ்க்கு ஓக்கே சொல்லுது.. 

 இடைவேளை வரப்போகுது. எந்த திருப்பமும் இல்லைன்னா எப்படி? இது எல்லாமே தமனாவின் டிராமா தான்.. ஏன்னா தமனாவின் அப்பா உண்மையில் தமனாவுக்கு அப்பாவே இல்லை.. கார்டியன். தமனாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அவரோட 18 வது வயசுல ஆட்டையை போட அவர் போட்ட பிளானுக்கு எதிர் பிளான் தான் இது.. 

 ஹீரோ வேற யாரும் இல்லை.. சின்ன வயசுல தமனாவின் லவ்வர் தான்.. 

இடைவேளைக்குப்பிறகு ஒரே ஃபிளாஸ் பேக் மயம்.. அடி தடி மயம் தான். ஆந்திராக்காரங்க  அநியாயத்துக்கு இ வா வா இருக்காங்க.. என்ன குப்பை படம் குடுத்தாலும் அதை ஹிட் ஆக்கிடறாங்க. அவ்வ்வ்

 சிம்பு நடிச்ச சிலம்பாட்டம், சரவணா இந்த 2 படத்தையும் மிக்ஸ் பண்ணூனா ரகளை ரெடி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இதுக்கு 40 கோடியா? அய்யோ அம்மா.


 ஹீரோ ராம் சரண் ஆள் நல்லா தான் இருக்கார். அவர் பண்ற அலப்பரைகள் தான் தாங்க முடியல.. ஓடற ரயில்ல இன்னொரு ரயில்ல ஜம்ப் பண்றதெல்லாம் ஓவரோ ஓவர். ரயில் 190 கி மீ வேகத்துல வர்றப்போ அவர் ஜீப்ல 160 கிமீ வேகத்துல எதிர்த்திசைல வந்து சடார்னு கடைசி டைம்ல விலகறதெல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான். 


தமனா எப்பவும் போல லெமனா வர்றார். அவ்ரோட புறமுதுகு ஃபுல்லா காட்டறார்.. ராஜ வம்சம் போல்..... அப்புரம் எப்பவும் போல லோ ஹிப் , லோ கட் எல்லாம் உண்டு.  பாடல் காட்சிகளில் அவர் காட்டும் ஹிப் மூவ்மெண்ட்கலை எல்லாம் சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ.. ? நோ கேள்வி எஞ்சாய்.. 

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/ragalai-01/wmarks/ragalai-0102.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. மனசுல இருக்கறதை சாதிக்கறதுக்குப்பேருதான் தில்லு.



2. அந்தப்பசங்க வேலைக்கு கூப்பிடறாங்களே. ஏன் போகலை?

 அவங்க எல்லா “ மேட்டர்ஸ்”க்கும் கூப்பிடறாங்க.. போகவா?


3.  நீ  என்னை லவ் பண்ணுனா அது மரோ சரித்ரா, இல்லைன்னா ரத்த சரித்ரா.. 


4. ஜெயிக்கறதுல இருக்கற கிக் வேற எதுலயும் இல்லை.. தோக்கடிக்கறதுல உள்ள த்ரில்லே தனிதான்.. 

5. மாஸ்டர்.. யூ ஏஜ் பார்.... நீ லேட் பார்.. 


6. ஆண்டவனால சாதிக்க முடியாததை அரசியல் வாதி சாதிச்சுடறான்

7.  அவன் வந்து உன்னை அடிக்கற வரை நீ என்ன புடுங்கிட்டு இருந்தே?

 காமெடி ஆக்டர் பிரம்மானந்தம் - ஃபேஸ் டூ ஃபேஸ் சொல்றேனேன்னு சங்கடப்படாதீங்க.. உங்க மகளை அவன் கடத்திட்டுப்போனப்ப  நீங்க என்ன புடுங்கிட்டு இருந்தீங்களோ அதே தான் நானும் புடுங்கிட்டு இருந்தேன்

8. ஹீரோவின் கேவலமான பஞ்ச் டயலாக் - நீ கத்துனா கூச்சல்.. நான் கத்துனா அது மின்னல்.. 

9.  பஞ்சப்பரதேசிக்கு பர்கர் கிடைச்சாக்கூட ஃபிகர் கிடைக்க மாட்டேங்குதே?

10. என்னது? முட்டை சாப்பிட மாட்டீங்களா? 

 ஆமா.. ஆனா முட்டையோட அம்மாவை சாப்பிடுவேன் ஹி ஹி 

11.. பீஸ் ஃபிரெஸ்ஸா?

 ரெஃப்ரஸ் பண்ணிப்பாரு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim7ulWJFxOadJcXgdyYEpg4CEKlUoR4Utra5W8lBqA5TJSe0TxEtrmJ-xkuIy6GwI5li2GaxVrIY3d5QxDrA9H3IwkcsMqPpSSObEbToMl-OSCQFRRw81wA7YXM3IlxDhfjYXoqIutVfg/s1600/Indian+Actress+Tamanna+Bhatia+Very+Hot+%2528162%2529.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. டி வி ரியாலிட்டி ஷோ என சமாளிச்சு ஹீரோ வில்லனுக்கு சர்ஃப் எக்சல் சோப் பவுடர் பாக்கெட் தரும் இடம்.. செம அப்ளாஸ் வாங்கும் சீன்.. 

2. இந்த டப்பா கதையை ஆர் பி சவுத்ரியிடம் சொல்லி ஓக்கே வாங்கியது

3.  தமனாவை முடிஞ்சவரை திறமை  “ காட்ட “ வைத்தது

4.  டில்லக்கு டில்லக்கு டில்லா, உன்னை பார்க்கும், வெள்ளைப்பூவே, ரகளை ரகளை யூத் ரகளை என 4 பாட்டு சுமார் ரகம்.. படமாக்கப்பட்ட விதமும் ஓக்கே 



http://wallpaperpassion.com/upload/4119/tamana-hot-sexy-wallpaper.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்

 1. பல சீன்கள் சரவணா, சிலம்பாட்டம் ல சுட்டு இருக்கீங்களே? யாரும் கண்டு பிடிக்கலையா?

2. ரகளை ரகளை யூத் ரகளை பாட்டும்.. ஹீரோவுக்கான பில்டப் மியூசிக் தீமும் அப்படியே 100% சிலம்பாட்ட சுடல்./.. 

3.  ஹீரோ அடிக்கடி கூலிங்க் கிளாஸை கழட்டி ஆடியன்ஸை நோக்கி வீசிட்டே இருக்காரே ஏன்? அவருக்கு பிடிக்கலைன்னா போடாமயே விட்டிருக்கலாமே? ஸ்டைலு? அவ்வ்வ்

4.  ஓப்பனிங்க் சீன்ல அவ்வளவ் பெரிய பணக்காரப்பையன் யாகம் நடக்கும் இடத்துல இருந்து வீட்டுக்கு ஏன் நடந்து பொறான்? அதுவும் வெறும் கால்ல?

5. பாம் வெடிச்சு கார் எல்லாம் கரி ஆகுது.. பில்டிங்க் எல்லாம் பீஸ் பீஸ் ஆகுது. ஆனா அந்த ஒன்றரை அணா தாயத்து கயிறு அப்படியே இருக்கே.. அது எப்படி?

6. ஹீரோ கூடவே ஹீரோயின் 4 நாள் பகல், இரவு எல்லாம் சுத்தறா.. அப்ப எல்லாம் தாயத்தை  பார்க்காம வில்லன் ஹெலி காப்டர்ல வந்து கடத்தறப்பத்தான் பார்க்கறா.. ஏன்? 

7. வில்லன் ஹீரோ கிட்டே அவனோட ஃபிலாஸ் பேக்கை ஏன் சொல்லி டைம் வேஸ்ட் பண்றான்?


http://s4.postimage.org/d3zfu7gv6/Tamanna_Hot_Pictures_Badrinath_6.jpg


எதிர் பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 

எதிர் பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - தமனாவின் ஜொள்ளர்கள் மட்டும் பார்க்கவும்.. வேற யாரும் பட டிரெயிலர் கூட பார்த்துடாதீங்க

 இந்த கேவலமான குப்பையை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்


http://www.bollywoodcollections.com/contents/member/hotdesibabes/photos/MidThumbs/07f1123e--10x25vhcgou1zdttjk.jpg

Friday, September 02, 2011

தமனா - விமன் (WOMEN)அழகிகளில் செம லெமன் அழகியா? தமனா பேட்டி-காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQFd7j91TEhbM9MbB6BK_80iDEUpWdsL59UfDgMtOx4pTcoqRLaAf0g5NYaDrsl2_jzz3oZDhyCJavdJKRWEWdRvW7qreEYtPyCkhRByG9Thwrtuw2JURdHBMxEoildw_wmbfjWb9EE2xy/s1600/tamanna+hot1.jpg 
என் ஃபுல் சப்போர்ட் அண்ணாவுக்குத்தான்!
ஹாய்ய்ய்ய்ய்... நல்லா இருக்கீங்களா? விஜய் சார் 'நண்பன்’ அப்டேட்ஸ் என்ன? அஜீத் சார் டிரைலரே செம ஹிட்டாமே! எப்போ ரிலீஸாம்? ஒண்ணுமே தெரியலைப்பா. ப்ச்... தமிழ் சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன்!''


சி.பி - அட போங்க. உங்க பேச்சு கா.. கோவை வருவீங்கன்னு நாங்க வெயிட்டிங்க்.ஏமாத்தீட்டீங்களே?


1. ''மேடம், தமிழ் சினிமா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுது. போன வருஷம் முழுக்க எல்லா தியேட்டர்லயும் டூயட் பாடிட்டு இருந்தீங்க... இப்போ ஆளையே காணோம்?''

சி.பி - ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்கறதைப்பாரு..  இப்போதான் அவங்க கொஞ்ச கொஞ்சமா கோவை சம்பவத்தை மறந்துட்டு இருக்காங்க. கால அவகாசம் வேணாமா?

http://mimg.sulekha.com/tamanna/stills/tamanna-hot06.jpg




 ''அச்சோ... தெலுங்கில் பிஸி... பிஸி... பிஸி! ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, கரண்னு மூணு பேர் கூடவும் மாறி மாறி டூயட் பாடிட்டு இருக்கேன்.

  சி.பி - நல்ல வேளை ,உங்க பேருல 3 எழுத்து மட்டும் இருந்துச்சு..


தமிழ்ல 'பையா’, 'கண்டேன் காதலை’ படங்களுக்கு அப்புறம் ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்குற கேரக்டரே எனக்கு வரலையே!


சி.பி -ஆனந்த தாண்டவத்துல நல்ல கேரக்டர் வந்தது, ஆனா படம் ஊத்திக்கிச்சு, அதை சொல்ல மாட்டீங்களா?


ஹீரோயின் கேரக்டரும் ஸ்கோர் பண்ற மாதிரி படத்தில் நடிக்கணும்னா, அதுக்கு நான்தான் கதை எழுதணும்போல. சின்ன வயசுல மாதுரி தீட்சித் மேல எனக்கு எவ்வளவு க்ரேஸ் தெரியுமா? ஸ்கூல் படிக்கிறப்ப என் பாடி லாங்குவேஜ்லாம் அவங்க மாதிரியே இருக்கும்.

சி.பி - மாதிரி சாரி.. மாதுரி தீக்‌ஷித், தமனா ஒரே பாடி லேங்குவேஜ்? !!! ஹி ஹி ஹி ம் ம் ம் 


http://www.indiancinegallery.com/wp-content/uploads/2008/10/tamanna-35.jpg

நடிகை ஆன பிறகு 'அவங்களை மாதிரி நடிக்கணும் தமன்னா’னு அடிக்கடி எனக்கு நானே சொல்லிட்டு இருப்பேன். 10 வருஷத் துக்கு முன்னாடி ஹீரோயின் களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போ இல்லவே இல்லை!''


சி.பி - யாருங்க அப்படி சொன்னது? எவ்வலவு பெரிய ஹீரோவா இருந்தாலும் ஹீரோயின் ரொம்ப முக்கியம்ங்க.. ஆனானப்பட்ட ரஜினியே ஐஸ்வர்யா ராய் வேணும்னு 4 படங்கள்ல அடம் பிடிச்சு 5 வதா எந்திரன்ல தான் ஜோடி சேர்ந்தாரு.. 




2. ''ஹீரோயின்களுக்கான ஸ்கோப் பத்திக் கவலைப்படுறீங்க. ஆனா, சினிமா ஹீரோயின்களுக்குள் எந்த அளவுக்கு நட்பு இருக்கு. ஒரே படத்துல அறிமுகமான இலியானாவுக்கும் உங்களுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கா?''

சி.பி - இதெல்லாம் என்ன கேள்வி.. 1000 ஆண் நண்பர்கள் ஒரே காம்பவுண்ட்ல இருந்திடலாம்.. ஆனா 2  பெண்கள் ஒரே காம்பவுண்ட்ல இருந்திட முடியுமா? எல்லாருமே ஜெ -சசி ஆக முடியுமா?

http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/tamanna25.jpg




''நாங்க திக் ஃப்ரெண்ட்ஸ் இல்லைன்னாலும், எங்களுக்குள் சண்டை எதுவும் கிடையாது.

 சி.பி - நீங்க லைட் லெமன் கலர், அவங்க லைட் காபி கலர். எப்படி திக் ஃபிரண்ட்ஸ் ஆக முடியும்?


ரிலாக்ஸா சந்திச்சு அரட்டை அடிக்க ரெண்டு பேருக்குமே நேரம் இல்லைங்கிறதுதான் உண்மை. எப்பவாவது ஃபங்ஷன்ல பார்க்குறப்ப சும்மா 'ஹாய்... பை’யோட முடிச்சுக் குற அளவுக்குத்தான் இப்போ எங்களுக்குள் ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.

ஆனா பூனம் பஜ்வா, ஹன்சிகா, காஜல், ஷமந்தானு என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஒரு பெரிய கேங்க்கே இருக்கு. எல்லாருமே செம சேட்டைக்காரிங்க. சென்னை யில் பார்ட்டி, ஹோட்டல், பீச்னு பயங்கரமா ஆட்டம் போடுவோம். ஆனா, வீட்டுக்குப் போயிட்டா தமன்னா குட் கேர்ள்!''

சி.பி - இந்தக்காலத்துப்பொண்ணுங்க எல்லாருமே வீட்டுல குட் கேர்ள் தான், ஆனா மவுண்ட் ரோட்ல மட்டும் டான்சிங்க் கேர்ள்.....


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-cmAsSgxV5fF1oWEdG26f-kr0L9zgpF3ODi5OoAOJb9b_a8h4VX1MUlzQLT2mZXfQ8s5HwCArsc2jI_o8lDfB10rXVmMU7DBtfDBJkAk4Z0tzyS7NqQIaOO-qSDk_P4afZ5jHJZpyxeVT/s1600/tamanna+hot.jpg

3. ''தமன்னாவின் காதல்கள்?''

சி.பி - சிங்குலர்ல கேட்காம ப்ளூரல்ல கேட்கறாரே? கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சா?


''இந்தக் கேள்வியை நீங்க விடாத வரைக்கும் அந்தப் பதிலையும் நான் விட மாட்டேன். நோட் பண்ணிக்கோங்க... அச்சோ... காதலிக்கிற அளவுக்கு எனக்கு வயசாகலைப்பா. நான் ரொம்ப சின்னப் பொண்ணுப்பா! உடனே, என்ன வயசுன்னு அடுத்து கேள்வி கேட்காதீங்க. சொல்ல மாட்டேனே!''

சி.பி - சுமாரா 25 இருக்குமா?



http://www.cinejosh.com/gallereys/spicy/normal/tamanna_hot_stills_14_05_11_07_44/tamanna_hot_stills_14_05_11_07_44_01.jpg
4. ''சமூக அக்கறையோடு ஒரு கேள்வி... அண்ணா ஹஜாரே எதுக்காகப் போராடிட்டு இருக்கார்னு தெரியுமா? அவர் விஷயத்தில் உங்க ஸ்டாண்ட் என்ன?''  

சி.பி - பாப்பாவுக்கு கேள்விப்படாத பேரா சொல்லி ஏன் ஜெர்க் ஆக விடறீங்க?



''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க! ஒரு தனி மனுஷனா இந்தியா முழுக்க எல்லோர் மனசுலயும் இவ்வளவு வைப்ரேஷன் உண்டாக் குன அண்ணா தாத்தாவை எனக்குத் தெரியாம இருக்குமா? என் அண்ணன் ஆனந்த் மெடிக்கல் ஸ்டூடன்ட்.

சரியான படிப்ஸ் பார்ட்டி. ஆனா, அவனையே ஹஜாரே பத்தி தினமும் அப்டேட் பண்ணிட்டு ஃபாலோ பண்ண வெச்சிருக்கு அண்ணா ஃபீவர். என் ஃபுல் சப்போர்ட் அண்ணா ஹஜாரேவுக்குத்தான்!''

http://www.teluguone.com/tmdbuserfiles/tamanna_hot-photos.jpg

thanx - vikatan

Monday, July 11, 2011

கோவையில் கொண்டாட்டம்,ஈரோட்டில் திண்டாட்டம்

கார்த்தி ஹீரோ... ரஞ்சனி ஹீரோயின்!

கார்த்தி - ரஞ்சனியின் திருமண வரவேற்பு மற்றும் திருமண விழா ஸ்பெஷல் கேலரி
கோலிவுட்டின் நட்சத்திரக் குடும்பத்தின் 'கலர்ஃபுல்’ கல்யாணம் அது!

ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனியைக் கரம் பற்றி இருக்கிறார் கார்த்தி. திருமணத்துக்குக் கொங்கு மண்டலமே திரண்டு வந்ததில், கோவை கொடீஸியா வளாகம் கொள்ளாத கூட்டம்!

மணிரத்னம் பட ஷூட்டிங் கணக்காக, கார்த்திக்குப் பெண் பார்க்கும் படலம் சில வருடங்களாக நடந்துகொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் ''உனக்குப் பொருத்தமா பொண்ணு இனிமே ஆர்டர் கொடுத்துதான் செய்யணும்போல!'' என்று கார்த்தியிடம் செல்லமாக அலுத்துக்கொண்டே இருப்பாராம் அவரது தங்கை பிருந்தா. ''குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணைச் சொல்லுங்க... நான் ரெடி!'' என்று பவ்யமாகப் பதில் சொன்னார் கார்த்தி.




சொன்னதுபோலவே ரஞ்சனியைக் கண்ணில் காட்டியதுமே 'டபுள் ஓ.கே.’ சொல்லிவிட்டார் கார்த்தி. 'அட... இவ்வளவு தங்கமான பிள்ளையா நம்ம கார்த்தி!’ என்று ஆச்சர்யப்பட்டுப்  போனார்களாம். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்ததும்... காதல் கியர் போட்டுக் கிளம்பியது, ரஞ்சனிக்கு கார்த்தி அளித்த முதல் பரிசு... வேறு என்ன... ஒரு மொபைல் போன்தான்!


கோவை சூலூர் வட்டாரத்தில் உள்ள நெருங்கிய உறவுகளுக்கு, சூர்யாவும் கார்த்தியும் நேரிலேயே சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்தனராம். கார்த்தியைப் பார்க்கும்போது எல்லாம், ''புது மாப்ள... ஓவரா ஸீன் போடாத!'' என்று கலாய்த்துக்கொண்டு இருந்த அண்ணி ஜோதிகா, கவுண்டர் இன சம்பிரதாயங்களுக்கு இடையில் சிவகுமாரிடம் கேட்டுக்கொண்டு, மணமக்களுக்கு மெஹந்தி திருவிழா நடத்தினார்.



சென்னை ரெயின் ட்ரீ ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவின் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன்.

''கல்யாணம், ரிசப்ஷன் தேதியில் நான் ஊரில் இருக்க மாட்டேன். ஆனால், உங்களை ஜோடியாப் பார்க்கணும்னு ஆசை!'' என்ற கமலை, மெஹந்தி திருவிழாவுக்கு அழைத்திருக்கிறார் கார்த்தி. வட மாநிலத் திருமணங்கள்போல கலர்ஃபுல்லாக நடந்த நிகழ்வில், கமல் தன் பங்குக்கு கலகலப்பு சேர்த்தார்.  நிகழ்ச்சியில் கார்த்தி மற்றும் ரஞ்சனியின் குழந்தைப் பருவம் முதல் சமீபத்தில் க்ளிக்கிய புகைப்படங்கள் வரை வைத்து ஒரு ஜாலி சினிமா ஓட்டினார்கள். அந்த ஸ்பெஷல் சினிமாவை ரசித்துப் பார்த்த ஒரே பிரபலம் கமலாகத்தான் இருக்கும்!

இரண்டு நாட்களுக்கு முன்னரே கோவை வந்துவிட்ட சூர்யா, திருமண வேலைகள் ஒவ்வொன்றை யும் தன் மேற்பார்வையிலேயே வைத்துக்கொண்டார்.


மேடையில் திருமண சம்பிரதாயங்கள் துவங்கியதும், ''என் பையன் கல்யாணத்தைச் சொந்த மண்ணுல நடத்த வந்திருக்கேன். எல்லோரும் மனசார வாழ்த்திட்டுப் போங்க!'' என்று எமோஷனலாகப் பேசி, விருந்தினர்களை நெகிழவைத்தார் சிவகுமார்.



வாழ்த்து சொல்ல வந்த உறவினர் கூட்டத்தில் இருந்த ஒரு சுட்டிப் பையன் கார்த்தி முன் 'பருத்திவீரன்’ ஸ்டைலில் காலைப் பிணைந்து நின்று சட்டையை உயர்த்தி ''முத்தழகு... ஏய்... ஏய்... ஏய்...'' என்று சவுண்டு கொடுக்க, ரஞ்சனி முகத்தில் ஏக வெட்கம். ''டேய்! போஸீஸ்கிட்ட சொல்லிடுவேன்... ஓடுறா!'' என்று கார்த்தி மிரட்டிய பிறகுதான், இடத்தைக் காலி செய்தான்.

சமயங்களில் மணமக்களைவிட அதிகக் கவனத்தை ஈர்த்தார்... ஜோதிகா. அவர் மேடைக்கு வந்தாலே, மொபைல் கேமராவை நீட்டியபடி படம் பிடிக்க ஓடி அலைந்தது பெரும் கும்பல். இதனாலேயே, மணமக்க ளுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார்.

மனைவி, குழந்தையுடன் வந்திருந்த பாலா, ''என் தம்பி கல்யாணம்யா இது! யாரையும் சாப்பிடாம வெளியே விட்ராதீங்க!'' என்று உள்ளூர் சொந்தங்களிடம் உரிமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். 'பட்டினி சாதம், பந்தக்கால் நடுவது, இணைச்சீர், கைக் கோர்வை, பாத பூஜை என்று கவுண்டர் சமுதாயத்துக்கு உரித்தான அத்தனை சீர்களையும் மணமக்கள் செய்யச் செய்ய... சிவகுமார் கண்களில் ஆனந்தப் பரவசம். உருமால் கட்டு சீரின்போது தலையில் தலைப்பாகை கட்டியதும், மீசையை முறுக்கி கார்த்தி விறைப்பு காட்ட, பயப்படுவதுபோல ரஞ்சனி நடுங்க, ''ஹைய்யோ... பொண்ணு என்னமா நடிக்குது. ஜாடிக்கேத்த மூடிதான்'' என்று சொல்லிக்கொண்டார்கள் விருந்தினர் கள்.

ஒவ்வொரு சொந்தங்களாக மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, மேடையை விட்டு இறங்கியபடி இருக்க, ஒரு சிறுமி மட்டும் கார்த்தியின் சட்டையைப் பிடித்தபடியே நின்றுகொண்டு இருந்தாள்.

''யாருடாம்மா நீ... உன் அம்மா எங்கே?'' என்று கார்த்தி அவளிடம் விசாரிக்க, அது வீடியோ திரையில் ஒளி பரப்பானது.

கார்த்தி - ரஞ்சனியின் திருமண வரவேற்பு மற்றும் திருமண விழா ஸ்பெஷல் கேலரி
உடனே, கூட்டத்தில் இருந்து முண்டியடித்து மேடையேறிய ஒருவர், ''ஸாரி சார்... அவ என் குழந்தைதான். டி.வி-யில் உங்க பாட்டு என்ன போட்டா லும் அழுகையை மறந்து பார்த்துட்டு இருப்பா. அதான் உங்களை நேர்ல காட்டலாம்னு கல்யாணத்துக்கு அழைச்சுட்டு வந்தேன்.

உங்களைப் பார்த்ததுமே மேடையில ஏறணும்னு துடியாத் துடிச்சுட்டு இருந்தா. அதட்டி மிரட்டி வெச்சிருந்தேன். ஏதோ ஒரு கேப்ல மேடை ஏறிட்டா. இவளைக் காணோம்னு அரை மணி நேரமா, பதற்றமா தேடிட்டு இருக்கேன். இவ இங்கே வந்து நிக்கிறா!'' என்று மூச்சு வாங்கியபடியே சொன்னார் அந்தப் பெண்ணின் அப்பாவி அப்பா. உடனே, முகமெல்லாம் பூரிப்பாக மணமக்கள் அந்தச் சிறுமியைத் தங்களுடன் இறுக்கிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அவர்களைக் காட்டிலும் அதிக பூரிப்பில் சிவந்து இருந்தது அந்தச் சிறுமியின் முகம்!

நன்றி - விகடன்

Sunday, May 08, 2011

பருத்தி வீரன் - ஈரோடு ரஞ்சனி நிச்சயதார்த்தம் - காமெடி கும்மி

 http://goob.mobi/slide/Karthi_first_gift_to_Ranjani-c0cdcb261aff3e31ad7e9c81e4766ee9.jpg


'இருவருக்கும் ஒரே அலைவரிசை!'' 


ருத்தி வீரன்’ கார்த்திக்கு ஜூலை 3-ம் தேதி கல்யாணம்!


சி பி - ஹூம்.. லெமனா இருக்கற நடிகை தவிர அனைவருக்கும் சந்தோஷமே.. 


 ''வாழ்த்துக்களால் என் செல்போன் இன்பாக்ஸ் நிரம்பி வழியுது. ''சிறுத்தை ஷூட்டிங்ல பார்த்தோமே...’ என்று பெரிய நெருக்கம் இல்லாதவர்கள்கூட வாழ்த்து சொல்ல, அறிமுகத்தோடு அழைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பேச வைக்கிறார்கள். 'ரெண்டு நாளைக்கு செல்போனை ஆஃப் பண்ணித்தான் போடேன்டா’ எனகிறான் நண்பன். எனக்கு
வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும் என அவர்களுக்கு என்ன வேண்டுதலா? அவங்க வீட்டுப் பையன் ஒருவனுக்கு நல்லது நடக்கிற மாதிரி, என்னை வாழ்த்தும் ரசிகர்களின் அன்புக்கு நான் அடிமை. அஞ்சே படங்கள் மூலம் நல்ல உயரததுக்கு அழைத்துச் சென்ற நல்ல உள்ளங்களைப் பெற்றுத் தந்த தமிழ் திரையுலகுக்கு நன்றி.''

1. ''வாழ்த்து, நன்றி எல்லாம் ஓ.கே. ரசிகைகள் சைடு ரெஸ்பான்ஸ் என்ன?''

சி பி - என்னது சைடு ரெஸ்பான்ஸா? அப்போ செண்ட்டர் ரெஸ்பான்ஸ் பற்றி அடுத்த கேள்வி உண்டா?


''ஹலோ, நான் எத்தனை பேரைத்தான் சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்?

சி பி - ஹி ஹி அண்ணன் உண்மையை ஒத்துக்கிட்டார்...

ஆன்லைன் பக்கம் போனால் அதிர்ச்சியா இருக்கு.

சி பி - ஆமா. பெண் லைன் பக்கம் போனாத்தான் குளிர்ச்சியா இருக்கும். 

'என்ன மாமா... கல்யாணமா? கங்கிராட்ஸ்’ என சாஃப்ட் டைப்பிலும், 'டேய், என்னை ஏமாத்திட்டில்ல?’ என மிரட்டும் தொனியிலும் ஏகப்பட்ட மெயில்கள்.

 மிரட்டற மெயில் ஐ பி நெம்பரை நோட் பண்ணுனீங்களா? எல்லாமே ஒரே ஆளாத்தான் இருக்கும்.. ஹி ஹி 


எல்லாருக்கும் பொறுப்பா, பொறுமையாப் பதில் தர ஆசைதான். ஆனால்... நேரம்? இருந்தாலும் நல்ல வார்த்தைகளைத் தேடிப் பிடித்து டைப் பண்ணி அனைவருக்கும் பொதுவா ஒரே கடிதம் மூலம் பதில் அளிக்கலாமான்னு யோசிக்கிறேன். அன்புக்கு நன்றி என்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல?

சி பி - என்னது அன்புக்கு நன்றி மட்டும் தானா? அப்போ ”அவங்களுக்கு” செட்டில்மெண்ட் ஏதும் இல்லையா? 
http://www.suryafansclub.com/wp-content/uploads/2011/05/karthi-engagement-photos-06-150x150.jpg
'2. 'வருங்கால மனைவியுடன் உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''

''எங்கள் வருங்கால மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு அப்பா - அம்மா ரெண்டு பேரும்  போட்ட ஒரே கண்டிஷன், 'படிச்சவங்களாவும் நம்ம பண்பாடு தெரிஞ்சவங்களாவும் இருக்கணும்.’ என்பதுதான்.

 அப்போ படிக்காதவங்களுக்கு பண்பாடு தெரியாதா? 


அம்மாவின் தம்பி தங்கராஜ் மாமா மூலமாகத்தான் ரஞ்சனி சம்பந்தம் வந்தது. அவங்களுக்கு ஈரோடு பக்கம் ஒரு விவசாயக் கிராமம்.  படிப்புக்காக, சென்னைக்கு வந்திருக்காங்க.  இன்னும் கிராமத்தில் வீடு நிலபுலன்கள் இருக்கு. கிராமம், விவசாயம் என்ற முதல் தகவலே அப்பாவுக்கு பிடிச்சுப்போச்சு. மீட்டிங் ஸ்பாட் ஈரோடு என்றால் கிராமமே கூடிடும் என்றார்கள். அதனால், சென்னையில் ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்திப்பு என முடிவானது. போய் ப்பார்த்தோம். பிடிச்சு இருந்தது. அவ்வளவுதான்!''

 அந்த பொது நண்பர் 3 எழுத்துக்காரரா? செம தில்லு தான்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Karthi-Ranjani-Engagement/Karthi-Ranjani-Engagement-0010.jpg
3.''இவ்வளவு சுருக்கமாக முடிச்சிட்டீங்க? என்ன பேசினீங்கனு சொல்லுங்க!''

சி பி - அடடா.. இவங்க தொல்லை தாங்க முடியலையே.. போடறது கடலை.. அதை பப்ளிக்கா ட்வீட்டவா முடியும்?

''விட மாட்டீங்களே? உண்மையைச் சொல்லணும்னா, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட்டையே மூணு நாலு மாசம் ஆறப்போட்டு யோசிச்சு ஒப்புக்கிற ஆள் நான். ஆனா, ரஞ்சனியைப் பார்த்ததும் ஓ.கே. சொல்லிட்டேன். அப்பாகூட, 'எனக்கு அப்பவே தெரியும்டா. நீ போட்டோவைப் பார்த்ததுமே விழுந்துட்ட!’னு கிண்டல் பண்ணினார்.

ரஞ்சனியும் நானும் ஒரு மணி நேரம் பேசினோம். பேசினோம்கிறதைவிட, நான் பேசினேன் அவங்க கேட்டுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். என்னென்ன பேசணும்னு ஒரு தயாரிப்போடத்தான் போனேன். ஆனா, பார்த்ததும் பதட்டம் வந்துருச்சு. அப்படியே, பேசப் பேச சகஜமாகிட்டேன்.

ரஞ்சனி எல்லாத் துறைகளைப்பற்றியும் அப்டேட்டடா இருக்காங்க. அவங்க எம்.ஏ., நான் எம்.எஸ். எனக்குப் பிடித்த, நான் பார்த்த அதே ஆங்கிலப் சினிமாக்களை அவங்களும் பார்த்திருக்காங்கனு இருவருக்கும் ஒரே அலைவரிசை. இந்த மனப் பொருத்தம் போதாதா?''




சி பி - இருவருக்கும் ஒரே அலைவரிசைன்னா ரெண்டு பேரும் ஏர்செல்லா?


 
4. ''நீங்க நடிச்சதில் ரஞ்சனிக்குப் பிடித்த படம் எதுவாம்?''

'' 'பருத்தி வீரன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு நான் தாடியும் லுங்கியுமா வந்து கூத்தடிச்ச ரெண்டு படங்களைத்தான் பார்த்து இருக்காங்க. அந்த அழுக்குப் பையன் லுக்தான் அவங்களுக்குப் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. அவங்களுக்காகவாவது அப்படி ஒரு படம் பண்ணணும்னு இப்பத் தோணுதுங்க!''

சி பி - அப்போ அமீருக்கு ஒரு தாங்க்ஸை சொல்லி வைங்க.. 

Thursday, April 14, 2011

அனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....

1. அனுஷ்கா:  ஆறடி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyyS9qlSaGGXFzIupHu7BoNKshggpUu12no2KYTy-xFkfCGurMZmgVH-AQqZJxcITTcRqpCBGP1UnvYTOXaJuhBEwhNafuO0gd27ptibBmt5BirR4Ok_LJuIG4qfBjKNkVzeWHDv3RtRjB/s400/anushka+shetty5.jpg
உயர அழகியின் ஆரம்ப கால எடை 108 கிலோவாம். (அடேங்கப்பா.. 80 கிலோவா இருக்கறப்பவே இம்புட்டு அழகா இருக்காரே....அப்போ 108 ல? # ஒரு வேளை ஆம்புலன்ஸ்க்கு 108 வெச்சது கூட.....)

யோகா டீச்சரான பிறகு 80-க்கு வந்திருக்கிறார். (என்னது? யோகா டீச்சரா? பார்த்தா மோகா டீச்சர் மாதிரி இருக்காரு..?)


காலையில் இட்லி, தோசை வெளுப்பார். மதியம் பறப்பன, ஊர்வன, நீந்துவன அனைத்தும் டைனிங் டேபிளில் ஆஜர். இரவு அரை டஜன் சப்பாத்திகளை அசால்ட்டாய் உள்ளே தள்ளுவார். 'சிங்கம்’ படப்பிடிப்பில் அம்மணியின் ஒரு நாள் சாப்பாட்டு செலவு 3,000-த்தைத் தாண்டியதாம். விழித்திருக்கும் நேரம் எல்லாம் குடித்துக்கொண்டே இருப்பார், மினரல் வாட்டரைத்தான்! (குடி மகளே... பெரும் குடிமகளே... ஏ ஏ .. நான் கொடுக்கட்டுமா? அதை உனக்கு..?)
 http://im.sify.com/sifycmsimg/may2006/Entertainment/Movies/Tamil/14201191_Thrisha_SS1_400.jpg

2. த்ரிஷா: காலையில் முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து பிரட் ஆம்லெட். மதியம் கொஞ்சூண்டு சாதம் சப்பாத்தி டூ பீஸ். இரவு ஆயில் இல்லாத சில்லி சிக்கனுக்கு தொட்டுக்க சப்பாத்தி. ஏதாவது பார்ட்டிக்குப் போனால், ஃபுல் கட்டு கட்டுவார்.

(அடேங்கப்பா.. ஃபுல் கட்டா? கேப்டனை விட பெரிய ஆள் தான் போல..)

ஷூட்டிங் கேன்சல் என்றால், காலை டிபன் கட். ஏன்னா அம்மணி எந்திரிப்பதே லஞ்சுக்குத்தான்! ( ஆமா , படுக்கறதே காலைல 6 மணீக்குத்தான்.. அது வரை பார்ட்டி, டேன்ஸ்,டிஸ்கொத்தேன்னு சுத்த வேண்டியது...)


3. ரீமாசென்: காலையில் சான்ட்விச் ப்ளஸ் ஆம்லெட். மதியம் கொஞ்சம் சாதம், பாதி வேகவைத்த காய்கறிகள், தொட்டுக்க மட்டன் சுக்கா. இரவு பீட்ஸா, தந்தூரி சிக்கன். அவ்வப்போது சுற்றிலும் இருப்பவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் காணாமல் போய்விடுவார், சீக்ரெட்டாக சிகரெட் பிடிக்க!

(ஓஹோ.. தம் பார்ட்டியா?புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றாரா?)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp29oyTJdfjmgDvF-dO8Wk7QDcvcslSk5Il0NeN3wq-G7Ol7DKEQrii_HXMZgCk0QChAEwHJFLzA69R5Psu86UoVz_BMC5h6GSbeJZkUjn-P3NG695bb7YvcZs8q0zxvChWjRUHeHg5bg/s1600/Reema+Sen1.jpg



4. ஸ்ரேயா: காலை, தோசையை கவுன்ட் பண்ணாமல் லபக்குவார். பர்கரைப் பார்த்துவிட்டால், குழந்தையாய் குதிப்பார். 

(ஹி ஹி  நல்லா குதிக்கட்டும்..ரசிப்போம்... )

ஜூஸ் வகைகளை ஜூஸ் செய்வதில் கில்லாடி, அடிக்கடி அருந்துவது மாதுளம் பழச்சாறு. மதியம் சப்பாத்தி ஒன்லி. இரவு பிரட் ஆம்லெட், ப்ளஸ் சிக்கன். வெயிட் போட்டா... டயட்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhszcleAsw6Mv-GyoKCfFQvY3Z9tFNqa4CfIDJCLQMhuwaWnkmXhGQzIaKE3GKi7e2Qwml_hAobcNlZAn-fw2xj1veK52EIuOg5tDZegw18Dk7nhyv91ni7nvJTfUqKeTqWkia6q4UddSBN/s1600/shreya-saran41.jpg

5. அசின்: காலை ஓட்ஸ் கஞ்சி மட்டும். மதியம் மட்டன் பிரியாணி வளைத்துக் கட்டு​வார். இரவு சப்ப​£த்தி கொஞ்​சூண்டு, மீன் வகையறா ஜாஸ்தி. அசின் அழகு​க்கு, கடல் வாழ் உயினங்கள்தான் காரணமாம்!

இப்படி ஃபிகர் உருவாகக்காரணம் சாகர்?
 http://www.telugudb.com/cinema/gallery/asin/asin.jpg

6. தமன்னா: காலை சான்ட்விச் வித் ஆம்லேட். மதியம் ஒயிட் ரைஸ் சிக்கன் கிரேவி. இரவு சப்பாத்தி, முட்டையின் வெள்ளைக் கரு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வெஜிடபிள் சூப், அம்புடுதேன்!

(வெஜிடபிள் சூப் அரை லிட்டர் குடிப்பாரோ...?) 

http://lh5.ggpht.com/_lMxNrZCbDdY/S8s_0MNx7oI/AAAAAAAABAA/-6JsxJoVOUc/645832_f520.jpg