Showing posts with label சேரன். Show all posts
Showing posts with label சேரன். Show all posts

Tuesday, January 28, 2020

ராஜாவுக்கு செக் - சினிமா விமர்சனம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் பற்றிய கதைக்கரு , திரைக்கதை அமைக்கும்போது சாமார்த்தியமா  விஷால் நடிச்ச நான் சிகப்பு மனிதன் கதைல வர்ற ஹீரோவுக்கு ஸ்லீப்பிங் சிண்ட்ரோம்கறதை கொஞ்சம், டெவலப் பண்ணி சுவராஸ்யமான திரைக்கதை ஆக்க முயன்றிருக்காங்க , அது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம்

ஹீரோவுக்கு ஒரு சம்சாரம் ஒரு பெண் குழந்தை . நல்லா போய்ட்டு இருக்கற குடும்பத்துல ஒரு பிரச்சனை , ஹீரோவுக்கு திடீர் திடீர்னு தூங்கும் வியாதி . அதாவது கார் ஓட்டிட்டு இருக்கும்போது கூட திடீர்னு தூக்கம் வந்துடும் , அவரு எப்போ எந்திரிப்பார்ங்கறது சொல்ல முடியாது , ஜெ மர்ம மரண விசாரணை முடிவு மாதிரி//


 இதனால மனம் வெறுத்த அவர் மனைவி டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணுது . பொண்ணு அம்மா கிட்டேதான் இருக்கு , கடைசியா ஒரு 10 நாள் மக கூட செலவு பண்ண அனுமதி வாங்கிடறாரு. கடைசி நாள் அன்னைக்கு மக பிறந்த நாள் கொண்டாடறப்ப தன் காதலனை அப்பாவுக்கு அறிமுகம் பண்றா.


 அவளோட காதலன் ஒரு பொம்பள  பொறுக்கி , ஏற்கன்வே ஒரு ரேப் கேஸ்ல மாட்டி போலீஸ் ஆஃபீசரான ஹீரோவால ஜெயில் தண்டனை பெற்றவன்

 ஹீரோவைப்பழி வாங்கத்தான் அவன் லவ் டிராமா போட்டிருக்கான்

 அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதுதான் திரைக்கதை

 ஹீரோவா இயக்குநர் சேரன். , தூக்கம் கெட்டு சோர்வடைந்த கண்கள் , சோம்பேறித்தனத்தின் அடையாளமாய் தாடி , ரிட்டையர்டான வயசான பாடி மாதிரி அவரோட உடம்பு , ஒரு போலீஸ் ஆஃபீசருக்கான எந்த அடையாளமும் இல்லை , என்ன கேரக்டர் ஸ்கெட்சோ ? ஆனா நடிப்பு  பக்கா . மகளுடனான காம்போ காட்சிகளில் , அந்த பாடல் காட்சியில் சில இடங்களில் செயற்கை தட்டினாலும்  சேரன் அனாயசமாக அந்த கேரக்டரை உள்வாங்கி நடிச்சிருக்கார்

 அவரது மனைவியா வர்றவர் ஆளும் சுமார் , நடிப்பும் சுமார். கேரளத்து கப்பக்கிழங்கு சரயு மோகன் தான் ஜோடி , ஆனா அவர் படத்துல நடிப்பும் காட்டலை , கிளாமரும் காட்டலை, எப்படி தமிழனால ஏத்துக்க முடியும் ? ( இங்கே தமிழன்னு சொன்னது என்னைத்தான் )

 மகள் ஆக வரும் நந்தனா வர்மா  நடிப்பு குட் , பிக் பாஸ் எபிசோடில் வரும் சில காட்சிகளை அப்பா மகள் காம்போ காட்சிகள் நினைவு படுத்துது



 வில்லனாக வருபவர் இர்பான் , பார்வை , நக்கல் சிரிப்பு , பாடி லேங்க்வேஜ் குட்

ஹீரோவுக்கு தூங்கும் வியாதி இருப்பதை வைத்து திரைக்கதையில் திருப்பத்தை காட்டும்போது அட போட வைக்கிறார் இயக்குநர்

 லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சராசரி த்ரில்லர் மூவி

நச் வசனங்கள்

குடிச்சுட்டா கோர்ட்டுக்கு"வரப்போறே?
அவனவன் கோயிலுக்கே குடிச்ட்டு"வர்றான் #Rajavukkucheckreview


2  ஒரு"மனுசன்"தப்பு"பண்ணாம"இருக்கறது அவன் தூக்கத்துல இருக்கறப்ப மட்டும்தான்
#Rajavukkucheckreview

3 husband is not only for physical companionship,also for emotional companionship #Rajavukkucheckreview

4 அவங்க எல்லாம் டைம் பாஸ் பண்ண குடிக்கறாங்க,நான் தனிமை ல டைம் கில் பண்ண குடிக்கறேன் #Rajavukkucheckreview


5 அவன் போலீஸ்காரன்,ரோட்ல தப்பு நடந்தாலே கண்டுபிடிச்சுடுவான்,தன்"வீட்ல நடக்கற தப்பை கண்டுபிடிக்காமயா இருப்பான்? #Rajavukkucheckreview

6 தன் பொண்ணுக்காக ஒரு அப்பா தன்னோட கெட்ட பழக்கத்தை விட்டொழிக்கறது ஒரு சுகம் #Rajavukkucheckreview



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

 1 ஈரோடு சீனிவாசா வில் படம் பார்த்தேன். கூட்டமே இல்லை , 870 சீட்சுக்கு 18 பேர் . கரண்ட் பில்க்குக்கூட கட்டாது

 2 சேரனுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் உண்டு , ஆனா தியேட்டரில் மருந்துக்குக்கூட பொண்ணுங்க இல்லை 




சபாஷ் டைரக்டர்

1  மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் தான் சாய் ராஜ்குமார்னு பேரை மாத்தி இதை எடுத்திருக்காரு . முன் பாதியில் நிதானமாக செல்லும் கதை வில்லன் எண்ட்ரிக்குப்பின் விறுவிறுப்புடன் போகுது. செலவே இல்லாம  சும்மா 3 லொக்கேஷன்கள்லயே மொத்தப்படத்தையும் எடுத்தது சிறப்பு


2  கதை அமைப்பில் வாய்ப்பிருந்தும் ஆபாசம் , வன்முறைக்காட்சிகள் வைக்காதது சபாஷ் போட வைக்குது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1− மனைவியைப்பிரிந்து வாழும் ஹீரோ அதுவும் ஒரு போலீஸ் ஆபீசர் தன் மகளை வீட்டில் தனியா விட்டுட்டு போவாரா?ஒரு சமையல்காரி,வேலைக்காரி அட்லீஸ்ட் பக் வீட்டு லேடி னு யாரையும் பாதுகாப்புக்கு நியமிக்காம?
#Rajavukkucheckreview

லாஜிக் மிஸ்டேக் 2 −ஒரு பெண்ணை ரேப் பண்ணும் உத்தேசத்துடன் கடத்தும் வில்லன் அவகிட்ட இருக்கற செல்போனை பறிமுதல் பண்ணாமயா அடைச்சு வெப்பான்?சரியான மாங்கா மடையனா அவன்?
#Rajavukkucheckreview

3 போலீஸ் ஆபீசரால் பாதிக்கப்பட்ட வில்லன் ஒரு வருச ஜெயில்வாசத்துக்கு பின் வெளில வந்த உடனே மகளை கடத்தாம ஒரு வருசம் அவ பின்னால அலைஞ்சு லவ் பண்றதா ஏமாத்தி அப்றமா கடத்தறான்,காலம் பூரா குடித்தனம் பண்றவனதான்"லவ்வறதா ஏமாத்தனும்,ரேப்பறதுக்கு எதுக்கு டிராமா? #Rajavukkucheckreview


4 லாஜிக் மிஸ்டேக் 4− ஹீரோவைப்பழி வாங்கறதுக்காக ஒரு வருசம் காத்திருந்து மகளைக்கடத்தற வில்லன் அவளை ரேப் பண்ண போறப்ப வேற ஒரு பொண்ணு வாண்ட்டடா வந்து சிக்கிக்கிச்சுனு அதை ரேப் பண்றான்,அப்றம் அப்டி இவளை ரேப் பண்ணுவான்? #Rajavukkucheckreview

5 ஏற்கன்வே கார் ஓட்டும்போது தூங்கி விபத்து ஏற்படுத்துன ஹீரோ இப்போ மகளை காரில் கொண்டு போவது என்ன தைரியத்தில் ? டிரைவர் வெச்சுக்கலாமே?

6 கணவன் மனைவிக்குள் பிரச்சனை வர முக்கியக்காரணங்கள் அந்தஸ்து பேதம் , ஈகோ , கள்ளக்காதல் , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் . ஆனா அதெல்லாம் எதும் இல்லாம ஹீரோவுக்கு உள்ள சின்ன நோயால அவ்ளோ வெறுக்க முகாந்திரம் இல்லை

7 போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இந்த மாதிரி குறை உள்ளவரை க்ரைம் பிராஞ்ஸ் இன்ஸ்பெக்டரா எப்படி கண்ட்டிநியூ பண்ண விடுவாங்க ?

8 போலீஸ் கேசில் மாட்டி டிவி பேப்பரில் படம் எல்லாம் வந்ததை மக்ள் எப்படி பார்க்காம விட்டாங்க , அட்லீஸ்ட் அப்பா டிவி ல நியூஸ் வரும்போது இந்த கேஸ் நான் டீல் பண்ணதுதான் என காட்டி இருப்பாரே?


 விகடன் மார்க் ( யூகம்) - 43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3/5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 2.75 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-ராஜாவுக்கு செக் − பொள்ளாச்சி சம்பவத்தை கருவாகக்கொண்டு"உருவான த்ரில்லர்"மூவி.ஹீரோவுக்கு திடீர் திடீர் என தூங்கும் வியாதி தமிழுக்கு புதுசு.விறுவிறுப்பான திரைக்கதையில் லோ பட்ஜெட் நாடக பாணி படமாக்கம் மைனஸ்,சேரனுக்கு வெற்றிப்படம்", விகடன் 43 ரேட்டிங் 2.75 / 5

Thursday, March 12, 2015

ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை - திரை விமர்சனம் ( மா தோ ம)

படம் வெளியான சூட்டோடு, வீட்டிலேயே அமர்ந்து நமக்கு விருப்பமான நேரத்தில், சூழலில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை சேரனின் சி டூ ஹெச் திட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. முதல் வெளியீடான ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஃபார்வேர்டு, ரீவைண்ட் செய்து நம் விருப்பப்படி பார்க்கும்போது நமது வாழ்க்கையை நாமே திருப்பிப் பார்த் துக்கொள்வது போன்ற அனுபவம் ஏற்படு கிறது.
வாழ்க்கையைப் பெரிய விளையாட்டு மைதானமாக்கிக் களிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூடம் ஆக்குகிறது. அரட்டை, ஆர்ப்பாட்டம் எனக் கழித்த அவன் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாக உணர்கிறான். குடும்பத்துக்காகவும் சுற்றியுள்ளவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். இந்த மாற்றத்துக்குப் பின்னாலுள்ள காரணம் என்ன? என்பதை முன்னும் பின்னுமாக நகர்ந்து சொல்கிறது சேரனின் ஜே.கே. எனும் நண்பனின் கதை.
ஆட்டம் பாட்டம் கும்மாளம் எனத் திரியும் ஜே.கே. என்னும் ஜெயகுமாரின் (சர்வானந்த்) வாழ்க்கை சட்டென மாறுகிறது. பொறுப்பில்லாத மூத்த பிள்ளையாக இருந்த சர்வானந்த் தங்கைகளுக்காக, தம்பிக்காக, அப்பா, அம்மாவுக்காக ஓடுகிறார். கிடைக்கும் வாய்ப்புகளையும் சமயோசித புத்தியையும் சரியாகப் பயன்படுத்தி மேலே வருகிறார். ஏழு நண்பர்களின் துணையுடன் அவன் தொழில் வெற்றி நடைபோடுகிறது. இடையில் வரும் கடுமையான சவால்களைச் சாமர்த்தியமாக முறியடிக்கிறார். தன் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வெளிநாடுச் சுற்றுலாவுக்குக் கிளம்புகிறார். அந்தச் சுற்றுலாவுக்குப் பின் ஒரு ரகசியம் இருக்கிறது.
ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகி னாலே அது காதலாகவோ வெறும் மோகமாகவோ முடிந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிறிதும் தயக்கமின்றி வீட்டில் அமர்ந்து பார்க்கத்தக்க விதத்தில் கதையும் காட்சியமைப்புகளும் வசனங்களும் உள்ளன.
இருப்பினும், தொடக்கத்திலிருந்து விறுவிறுப்பாக நகரும் கதை, பிற்பாதியில் தொய்வடைகிறது. அப்பா, மகன், மகள் ஆகியோர்களின் உறவுச் சித்தரிப்பு டிவி சீரியல் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளது.
தெளிவாகவே நடிக்கும் சர்வானந்த், தமிழ் உச்சரிப்பை மேம்படுத்திக்கொண்டால் நல்லது. நித்யா மேனனின் நடிப்பு மனதைக் கவர்கிறது. பிரகாஷ் ராஜ் வழக்கம்போலவே தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் தன் பாத்திரத்தைக் கையாள்கிறார். கலகலப்புக்காக சந்தானம்... ஆனால் அவர் வரும் காட்சிகள் வசன ஜாலங்களாக மட்டுமே கடந்து போகின்றன.
சித்தார்த்தின் கேமரா உறுத்தலில்லாமல் படத்துடன் இணைந்து பயணிக்கிறது. விபினின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கவில்லை. ஜி.வி. பிரகாஷ்குமாரின் பாடல்களும் சுமார்தான்.
நேர்மையுடனும் திறமையுடனும் போராடினால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையைப் பெருமளவில் சுவாரஸ்யமாக விதைத்திருக்கிறார் இயக்குநர் சேரன். அதற்காகவே வரவேற்கலாம்


நன்றி  - த இந்து


டிஸ்கி = (  மா தோ  ம)= மாற்றான்  தோட்டத்து  மல்லிகை

தியேட்டரில்  மட்டுமே  சினிமா  பார்க்க  வேண்டும்  எனும்  கொள்கை  முடிவுடன்  இருப்பதால் இந்தப்படம்  பார்க்கவில்லை. எதிர்காலத்தில்  பல  படங்கள்  ரிலீஸ்  ஆனால்  என்  கொள்கை  மாறலாம்,. நான்  டாக்டர்  ராம்தாஸ் , கலைஞர்  போல . அப்பப்ப  என் பேச்சை  என் கொள்கையை  காத்துல  பறக்க விட்ருவேன் , ஹிஹி

Saturday, October 01, 2011

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்


 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/09/muran_review_cheran_muran_movie_review-300x254.jpg
அன்பே சிவம் படத்தில் வருவது போல் 2 மாறுபட்ட கேரக்டர்கள் சேரன் + பிரசன்னா ,இருவரும் ஒரு கார் பயணத்தில் எதேச்சையாக இணைகிறார்கள்.தனது காதலியை தன் தந்தையே கெடுத்து அவளது தற்கொலைக்கு காரணம் ஆகி விட்டார், அவரைப்பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் பிரசன்னா, கோடீஸ்வரியாக இருந்தாலும் தன் மனைவி தன்னை மதிக்காமல் பார்ட்டி, குடி என ஊர் சுற்றுகிறாளே என்ற ஆதங்கத்தில் வேறொரு காதலியுடன் தன் கவனத்தை திருப்பிய சேரன் இருவரும் எந்தப்புள்ளியில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும்?



எஸ்.. அதே தான்...பிரசன்னாவின் அப்பாவை சேரன் கொலை செய்வது, சேரனின் மனைவியை பிரசன்னா கொலை செய்வது.. யாருக்கும் சந்தேகம் வராது.. இது தான் பிரசன்னாவின் திட்டம்.. ஆனால் இதற்கு சேரன் உடன் பட வில்லை..


விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பல ட்விஸ்ட்களை சந்தித்து கடைசியில் என்ன ஆகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.. கதையோட  பேசிக் நாட் (BASIC KNOT) அமரர் சுஜாதாவின் எதையும் ஒரு முறை என்ற நாவலில் இருந்தும், திரைக்கதையை ஹாலிவுட்டின் திகில் கதை மன்னன் ஹிட்ச்சாக்-ன் STRANGERS ON THE TRAIN படத்தில் இருந்தும் சுட்டிருந்தாலும் , படத்தின் இயக்குநர் தமிழுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.. பிரசன்னாவின் காதலி அவரது தந்தையால் ரேப் செய்யப்படவில்லை,பிரசன்னாதான் ரேப் செய்தார் என்ற ட்விஸ்ட் எழுத்தாளர் சுபாவின் நீ நான் நிலா நாவலில் இருந்தும் சுடப்பட்டுள்ளது.

யதார்த்த நாயகன் என்ற பெயர் எடுத்த சேரன் என்னதான் அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் அசத்தினாலும், அசால்ட்டாக நடித்து பெயர் தட்டிக்கொண்டு செல்வதென்னவோ பிரசன்னா தான்.. அஞ்சாதே படத்துக்குப்பின் நல்ல வில்லன் வாய்ப்பு.. அவரது பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு எல்லாம் அட்டகாசம்.. ஆர்யாவுக்குப்பிறகு தமிழில் அசால்ட்டாக நடிக்க ஒரு ஆள் ரெடி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZI94K623jmkk-fZPC3IBMppGws8NNtYOf5PWzAo6gf5ruyMbjo2M_NMTHdWjnUk4SBTNvXD22q6GLHJjHtiXNmDt-xoOictx7YL_LO5UJGpkb6HfrxdqkpA8CQrz50QeNZVj6SSMQzfof/s1600/muran+movie+pictures.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. அப்பன் காசை அழிக்கறதுக்குன்னே ஒருத்தன் இருப்பான் இல்லையா? அதுல இவனும் ஒருத்தன்...

2. சாதாரண லெமன் சோடா .. எவ்ளவ் மப்புல இருந்தாலும் இவன் தமிழ்லயே தெளிய வெச்சுடுவான்

3. லைஃப்ல த்ரில்லிங்கா ஏதாவது செய்யனும்..

அப்படி செய்ய நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.. 

அப்படி செய்யாம இருக்க நான் ஒண்ணூம் கோழை  இல்லை..
4. நீங்க இப்போ பார்க்கப்போறது பயங்கர ஆக்சிடெண்ட்.. அல்லது மிரேக்கிள்..


5.  நான் எப்பவுமே லக்கை நம்பாதவன்.. அதுக்கு எல்லாம் கட்ஸ் வேணும்.. 

அப்போ என்னை தைரியம் இல்லாதவன்கறியா?

6. உங்க ஒயிஃபை ரொம்பவே லவ் பண்றீங்க போல.. 

சாரி..   அவள் என் ஒயிஃப் இல்லை..

உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு நினைச்சேன்...


மேரேஜ் ஆகலைன்னு சொல்லவே இல்லையே.. அவ எனக்கு ஒயிஃபா நடந்துக்கலை.. 

7.  லேடி - சார்.. நீங்கதான் என்னோட முதல் கஸ்டமர்.. 

வாட்?

ஐ மீன், இந்த சோப் பவுடர் வாங்க.. 

8. சார்.. உங்க வீட்ல லேடீஸ் இல்லையா?

எஸ்.. இருக்காங்க.. ஆனா இப்போ இல்லை.

சார்.. உங்க துணியை நீங்க தானே வாஷ் பண்றீங்க..?எப்டி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?

9. ஏம்மா.. இந்த அபார்ட்மெண்ட்ல இத்தனை பேர் இருக்கறப்ப என்னை மட்டும் ஏன் செலக்ட் பண்ணுனே?

 வேற யாரும் என்னை உள்ளே வர அலோ பண்ணலை சார்.. 

10.  நைட் லேட்டா தண்ணி அடிச்சுட்டு இப்படி வீட்டுக்கு வர்றியே, நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அதை நீ கேட்காதே , உனக்கு எந்த தகுதியும் இல்ல.. என்னை விட நாலுல ஒரு பங்கு கூட சம்பாதிக்க கையாலாகாத ஆம்பளை நீ...





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK6EMMSa3mnqyy-f3aNYLXylYpLJOg1KkMjxkjffZRGaLexLFsUiIQVklckiCDIK4Dp2hJO6vr4NsmDktx4lzqCM-krIhWavfKQdkJEUzwByK6PbnbpYALe2w-ozL5HIaqZwiSx7S3mEnb/s1600/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D.jpg

11.  என் கிட்ட அவ என் ஃபோன் நெம்பர் வாங்குனா... எனக்கு அவ கால் பண்ணுனா,அவளுக்கு நான் கால் பண்ணுனேன்.. 2 பேரும் லவ்வ ஆரம்பிச்சுட்டோம்...

12. உங்க கிட்டே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன்.. உங்க ஒயிஃபை நீங்க லவ் பண்றீங்களா?

விதி என் லைஃப்ல விளையாண்ட மாதிரி யார் லைஃப்லயும் விளையாடக்கூடாது..

13. ஹாய்... நீ அழகா இருக்கே.. அது உனக்கு தெரியும்.. ஆனா எனக்குத்தெரியும்கறது உனக்குத்தெரியனும் இல்லையா? அதான் சொன்னேன்.. இதை நான் தான் உன் கிட்டே முதல்ல சொல்லி இருப்பேன்னும் நான் நினைக்கலை.. ( டேய், என்னதாண்டா சொல்ல வர்றே? )

14.  உன்னை மாதிரி பணக்காரப்பசங்களுக்கு என்னை மாதிரி பொண்ணுங்க வெறும் ஃபன் தான்..

15.  ஆம்பளைன்னாலே ஒரு இண்டிவிஜாலிட்டி வேணும்.. அப்பன் காசுல உக்காந்து சாப்பிடக்கூடாது.. 

ஏய்.. யார்ட்டடி பேசிட்டு இருக்கே?

யார்ட்ட பேசுனா என்ன? சரியாப்பேசறேனா? இல்லையா?

16.  என்னால இதை ஜீரணிக்கவே முடியலை./..

ஏன், இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலையே? எப்படி ஜீரணம் ஆகும்?

டோண்ட் ஜோக்.. நீங்க சொன்னதை ஜீரணிக்கவே முடியலைன்னு சொன்னேன்.. 

17.  நான் இப்படி ஒரு காரியம் பண்ணுனேன்னு லாவண்யா கிட்டே சொன்னா அவ நம்பவே மாட்டா...

சொல்லப்போறீங்களா?

நோ..

18.  உங்க மனைவியை கொலை பண்ணனும்னு உங்களுக்கு எப்பவாவது தோணி இருக்கா?

இல்லை..

தோணி இருக்கும்.. ஏன் பயப்படறோம்னா விளைவுகள்.. அதனால அப்புறம் போலீஸ்.. கேஸ், ஜெயில் இதான் பயம்..  வீ ஆர் ஸ்மார்ட் பியூப்பிள்..

19.  புரிஞ்சுக்காத பொண்டாட்டி இருந்தும் உங்க காதலி கூட நீங்க  வாழலை.. ஆனா புரிஞ்சுக்கற புருஷன் இருந்தும் உங்க மனைவி உங்க கூட வாழலை..

20.  அதுல ஒரே ஒரு பிராப்ளம் இருக்கு.. நீங்க ஷூட் பண்னப்போற அதே ரோட்ல தான் கமிஷனரும் வாக்கிங்க் வர்றார்.. 



http://cinema.dinakaran.com/cinema/CineGallery/Kollywood/Movie/Muran/vm-02.jpg

21. ஏய்.. இங்கே பாருடி.. உன் கிட்டே இருந்த அழகு திமிர் 2ம் எனக்கு பிடிச்சிருந்தது... இப்போ மேட்டர் ஓவர்,. என் த்ரில் குறைஞ்சிடுச்சு.. 

22. இங்கே பாரு... 24 வயசு வரைக்கும் கோடீஸ்வரனா வாழ்ந்துட்டு திடீர்னு பிச்சைக்காரனா என்னால வாழ முடியாது.. அதான் அப்பனையே போட்டுத்தள்ள முடிவு பண்ணிட்டேன்.. 

23. உன்னால முடிஞ்சதை பண்ணிப்பாருன்னு சவால் விட்டீங்க..  நான் பண்ரேன்.. நீ பாரு.. 

24. வாழ்றப்ப  யாரோட பரிதாபத்தையும் சம்பதிக்காம வாழறவன் வேஸ்ட்.. 
http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. சேரனின் ஃபிளாஷ்பேக் கதைக்கு பி கே பி யின் நாவல் கரு, பிரசன்னாவின் ஃபிளாஷ்பேக்கிற்கு சுபாவின் கதைக்கரு, படத்தின் மெயின் நாட்டிற்கு (KNOT) சுஜாதாவின் கதைக்கரு என இயக்குநர் ரொம்பவே ஹோம் ஒர்க் பண்ணி தெளிவாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.. 

2.  இதுவரை என்னை தீண்டியதில்லை பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கவிதை.. அதே போல் நான் கண்டேன் நேற்று இல்லா இன்று  பாடல் வரிகளும் லொக்கேஷன்களும் அழகு..

3. சேரன், பிரசன்னா இருவருக்குமான வாய்ப்புகள், கதாபாத்திரத்தின் தன்மை எல்லாம் அளந்து வைத்திருப்பது போல் சம வாய்ப்பு.. 

4. இடைவேளைக்குப்பின் கதை எப்படி பயணிக்கும் என்பதை எளிதில் யூகிக்க வைக்காத திரைக்கதை..

5. பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும் இந்த மாதிரி   த்ரில்லர் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து பயன்படுத்திய விதம்.. சபாஷ்!!

http://mimg.sulekha.com/tamil/muran/stills/muran-stills-0204.jpg

இயக்குநரிடம் சில  கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்


1. சேரனின் மனைவியின் சகோதரன் ஒரு இன்ஸ்பெக்டர்.. அவருக்கு சேரன் மீது டவுட்.. ஓப்பனாக கேட்கிறார்.. கொலை செஞ்சியா? என, விரைவில் ஆதாரத்துடன் பிடிப்பேன் என்கிறார்.. ஆனால் அந்த இன்ஸ்பெக்டரே கொலை ஆன பின்னும் போலீஸ் நிர்வாகம் எப்படி சேரனை சந்தேகப்படவில்லை?

2.  பிரசன்னா செமயா பிளான் பண்ணி சேரனின் மனைவி, இன்ஸ்பெக்டர் என இருவரையும் கொலை செய்பவர் அதே போல் வேறு ஏதாவது பிளான் பண்ணி அப்பாவை கொன்றிருக்கலாமே? ஏன் படம் பூரா சேரன் பின்னாலயே தொங்கிட்டு இருக்கனும்?

3. கதைப்படி பிரசன்னா ஒரு லேடீஸ் செலக்டர். அதாங்க பொம்பள பொறுக்கி.. சேரனின் மனைவி ஒரு கில்மா லேடி.. சேரனின் மனைவியை கொலை செய்ய 2 மாசம் அவரை ஃபாலோ செய்யும் பிரசன்னா அவரை ஏன் யூஸ் பண்ணிக்கலை?

4. கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வேணும்கறதுக்காக சேரனின் காதலி பிரசன்னாவுக்கு காதலி மாதிரி ஒரு பிட்டை டவுட் வர்ற மாதிரி போட்டு ஏன் இயக்குநர் பேக் அடிச்சுட்டார்? அது இன்னும் செம த்ரில்லிங்காவும், ட்விஸ்ட்டாவும் இருந்திருக்குமே?

5. சேரன் வீட்டுக்குள்ள தெரியாம ரிவால்வரால நிலைக்கண்ணாடியை சுடறப்ப காதலி வீட்டுக்கு வர்றாங்க... என்ன சத்தம்?னு கேட்டதுக்கு கண்ணாடி விழுந்து உடைஞ்சிதுன்னு அவர் சமாளிக்கிறார்..காதலி வீட்டுக்குள்ள வந்தும் அந்த உடைஞ்ச கண்ணாடியை கண்டுக்கவே இல்லை.. குண்டு சத்தம் பற்றி எதுவும் கேட்கலை.. ஏன்?

6.  பிரசன்னாவின் காதலியின் தோழிக்கு பிரசன்னாவின் கேரக்டர் தெரிந்தும் அவ ஏன் தோழியை எச்சரிக்கை பண்ணலை?

7. தனது எல்லா வண்டவாளங்களும் தெரிந்த காதலி லிண்டாவின் தோழியை பிர்சன்னா ஏன் உயிரோட விட்டு வெச்சார்? அந்தப்பொண்ணு சேரனை பார்த்து உண்ஐயை சொல்றப்ப  பிரசன்னா ஏன் தடுக்க முயற்சி பண்ணலை?

8. பிரசன்னாவின் தந்தையை கொலை செய்ய சேரன் ரிவால்வரை நீட்டிக்கிட்டே வர்றப்ப திடீர்னு கமிஷ்னர் பிரசன்னாவின் தந்தையை பார்க்க வந்துடறார்..அப்போ சேரன் டக்னு ரிட்டர்ன் ஆகறாரே? அப்போ கமிஷனருக்கு டவுட் வராதா? ஏன் கண்டுக்கவே இல்லை?

http://600024.com/gallery/cache/events/muran-press-meet/muran-press-meet_08_w531_h800_600024.jpg

ஆனா இந்தக்குறைகளெல்லாம் பெரிசாத்தெரியாத அளவுக்கு படம் செம விறு விறுப்பா போகுது.. 

ஏ செண்ட்டர்கள்ல 50 நாட்கள், பி செண்ட்டர்கள்ல 30 நாட்கள் ( தீபாவளி வருதே? ), சி செண்ட்டர்கள்ல 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம்..

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி -1

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

டிஸ்கி 3 -

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்

 

 




http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12331_1.jpg

Sunday, September 25, 2011

முரண் படம் ஃபாரீன் பட ரீமேக் அல்ல - சேரன் முன்னுக்குப்பின் முரண் ஆன பேட்டி காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGWU-O5LxvkhnuQYsjGyTX0kNB4xRQgM4LbbWvCmtURPW6umiBJERKnmyVP-xob45_cvMw-XopLln8tsktSnbAbELtB8yMrQ_ahSsw7fJJrVCDHfoPQjVyH7-c_T2YDr6UIBQLk3rQmxQ/s1600/muran_movie_wallpapers_posters_01.jpg

தியேட்டருக்குப் போகாதீங்க!

சேரனின் புது ரூட்!

சேரனுடன் ஒரு சந்திப்பு...

 '1. ' 'முரண்’ என்ன மாதிரியான படம்?''


 சி.பி - ஒரு மாதிரியான படம்னு டைட்டிலைப்பார்த்து யாரும் ஏமாந்துடாதீங்க.. படம் பக்கா ஆக்‌ஷன் கதை, பாதி படத்துக்கு சேரனும், பிரசன்னாவும் கார்ல போய்ட்டே தான் இருக்காங்க.. 




''இந்தப் படம் ஒரு கதையா ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். 'அடுத்து இப்படித்தான் போகும்’ என்ற ரசிகனின் யூகத்துக்கு எதிர் திசையிலேயே படம் பயணிக்கும். பல இடங்களுக்குப் பயணம் போகிறோம். அப்போது யாரோ ஒருவரைச் சந்திக்கிறோம். சில சந்திப்புகள் உறவாக, நட்பாக, காதலாக மாறுகிறது. சில சந்திப்புகள் பிரச்னைகளாகவும் மாறும். தெளிவான ஒரு மனிதனும் புதிரான ஒரு மனிதனும் சந்திக்கும்போது நடக்கும் விஷயங்களும் அதற்குப் பிறகான நிகழ்வுகளும்தான் முரண்!''

சி.பி -படம் ரிலீசுக்குப்பிறகு முன்னுக்குப்பின் முரணா பேசிட்டார்னு யாரும் சொல்லாத அளவு படம் இருந்தா சரிதான்

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


2. ''படத்தில் என்ன ஸ்பெஷல்?''

சி.பி - பேட்டி எடுக்கற வெள்ள சொக்கா போட்டிருக்கற அண்ணே..  சம்பளம் சரியா தர்றதில்லையா?ஹைக்கூ மாதிரி குட்டி கேள்வியா கேட்டு பதிலை மட்டும் எஸ்ஸே டைப்ல வாங்க நினைச்சா எப்படி?


''முதலில் பிரசன்னா. அர்ஜுன் என்ற அவர் கேரக்டர் ஒரு புதிர். ஆனால், நந்தா என்ற என் கதாபாத்திரமோ, எதையும் அழகாக முடிவு எடுத்து நிதானமாகப் போகக் கூடிய தெளிவான ஆள். உண்மை யைச் சொல்ல வேண்டும்    என்றால், இருவருமே அழகாகப் பொருந்தி இருப்பதாகச் சொல்கிறார் கள். படத்துக்குச் சில பெரிய கேமராமேன்களின் பெயர் களைச் சொன்னேன். 'இல்ல சார், என்னைப் புரிஞ்சிக்கிட்டு தயக்கம் இல்லாமல் வொர்க் பண்றவரா இருந்தா நல்லா இருக்கும்’ என்ற இயக்குநர் ராஜன் மாதவ், பத்மேஷ் என்பவரை ரெகமெண்ட் பண்ணினார். அதேபோல் இசையமைப்பாளராக சாஜன் மாதவைச் சொன்னார். அவர், இயக்குநரின் சகோதரர்.

சி.பி - ஓஹோ. அப்போ இது ஒரு குடும்பப்படமா?  அண்ணன் டைரக்டர், தம்பி மியூசிக் , அக்கா பொண்ணு எடிட்டரா/?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-CkNTZR8rWr6d9PibbyTGZ2OJpNrLMZLTgxDcdaOhEPKWOTR1LAlvCWECisfzCKzw1ZBCJgksNA7FeaYK_JSMzK7gVddmEiCw8eqn2OQDk9XVQpfqRe9D7J7RfPGP4tEOQBMJCrCdJ28L/s1600/Muran+Press+Meet+Photos+Stills+Gallery+Cheran+in+Muran+Media+Meet+Pics+%252810%2529.jpg

இருவரும் ரவீந்தரன் மாஸ்டரின் மகன் கள். அவர் மலையாளப் படங்களின் இசையமைப்பாளர். நான் முன்னேறணும் என மனதளவில் என் அண்ணன்தான் நினைப்பான். என் இயக்குநரின் அந்த எண்ணம் எனக்குப் பிடிச்சிருந்தது.  கதை முதல் 20 நிமிடங்கள் ஹைவேயிலேயே நடக்கும்.

 சி.பி - படம் ஓடலைன்னா புரொடியூசர் எங்கே வரனும்னு வழி காட்டுதலா படம் இருக்கும் போல!!!!!!!!!

இரண்டே இரண்டு கேரக்டர் கள்தான். 20 நிமிடங்கள் பயணத்தி லேயே கதை சொல்வது கடினம். அங்கு தான் எங்கள் இருவரின் கதாபாத்திரங்கள் விவரிக்கப்படும். காண்பித்த ஷாட்டையே திரும்பக் காட்டக் கூடாது, எடுத்த இடத்திலேயே திரும்ப எடுக்கக் கூடாது எனப் பெரிய சவால். அந்தக் காட்சிகளை இப்போது பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது!''


சி.பி - பார்த்தவங்களே திரும்ப பார்க்கக்கூடாதுன்னு சொல்வீங்களோ? அப்புறம் ரிப்பீட் ஆடியன்ஸ் பற்றாக்குறை ஆகி ஹிட் பாதிக்கப்படுமே.?


http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/09/muran-press-meet-08.jpg

'3' 'முரண்’ ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல் என்கிறார் களே?''


சி.பி -  TWO STRANGERS  படத்துல வர்ற அனைத்துக்காட்சிகளும் தவறாது இடம் பெறும், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா 2 ஹீரோக்களுக்கும் தலா ஒரு டூயட், ஒரு குத்தாட்டப்பாட்டு உண்டு.. ஹி ஹி  ( கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சு கோவிந்தா!!!!)



''தழுவல் இல்லை. எப்போதோ பார்த்த ஒரு படத்தின் இன்ஸ்பிரேஷன் என ராஜன் என்னிடம் முதலிலேயே சொன்னார்.


சி.பி - அண்ணே!!!!! தழுவல் இல்லை இன்ஸ்பிரேஷனா? இது எப்படி இருக்குன்னா ...... ஒரு ஜோக் சொல்றேன் பாருங்க.


” அந்தப்பொண்ணை கையைப்பிடிச்சு இழுத்தியா?”

”அப்டி சொல்ல முடியாது, இங்கே வான்னு கூப்பிட்டப்ப லேசா கை பட்டிருக்கலாம்.”



ஆனால், அந்த விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுக்க முழுக்க தமிழ்ச் சூழலுக்குத் தகுந்த மாதிரி திரைக் கதை அமைத்திருக்கிறார். இன்ஸ்பிரேஷன் தவறு கிடையாது. எல்லோருக்கும் வருவதுதானே?''


சி.பி - குங்குமத்துல செல்வராகவன் பேட்டி படிச்சீங்க இல்ல.? ஃபாரீன் டி வி டி பார்த்து படம் எடுக்கறவங்களை மண்ணைக்கவ்வ வையுங்கள்னு கோபமா சீறி இருக்காரு.. அநேகமா அவர் உங்களை த்தான் தாக்கறார்னு நினைக்கறேன். http://tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Movies-Gallery/Muran-Movie-Stills/Muran-Movie-Stills-0002.jpg




4. ''எந்த விஷயமாக இருந்தாலும் தயங்காமல் கருத்து சொல்பவர் நீங்கள். தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?''

சி.பி - இப்படி உசுப்பேத்தி  உசுப்பேத்தி....................


''தொலைக்காட்சி சேனல்களை அரசு கேபிள் டி.வி-யின் மூலம் குறைந்த வாடகையில் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டுசெல்லும் முனைப்பு முதல் சாதனை. அதைச் செயல்படுத்து வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அரசால் அவை களையப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.


சி.பி =- ஜிங்க் ஜக் சிங்க் ஜக்


இந்த கேபிள் டி.வி. திட்டத்தின் மூலம் அரசு சிறு தயாரிப்பாளர்களின் பிரச்னையையும் தீர்க்க முடியும். எல்லாத் திரைப்படங்களும் லாபம் ஈட்டச் செய்து நஷ்டத்தில் இருந்து அவர்களைக் காக்க முடியும். அதற்கு என்னிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. இன்று மக்கள் அனைவரும் படம் பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான பணம் உரிய தயாரிப்பாளர்களிடம் போய்ச் சேர்வது இல்லை. யாரோ எங்கேயோ தொடர்ந்து திருடியபடி இருக்கிறார்கள். குடும்பத்தினர் புதுப் படங்களைப் பார்க்க திரையரங்கம் செல்ல வேண்டியது இல்லை. ஒரு படத்துக்கு 25 ரூபாய் கொடுத்தால் போதும். அந்தப் பணம் தயாரிப்பாளர்களுக்கு கேபிள் டி.வி. மூலமாக வர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசுக்கும் வருமானம் வரும். முதல்வர் அவர்கள் மனதுவைத்தால் அவரிடம் இதுபற்றி விளக்கத் தயாராக இருக்கிறேன்!''


சி.பி - நீங்க விளக்கி அவங்க கேட்டுட்டாலும்.. போங்க அண்ணே போங்க போய் புள்ள குட்டிகளை நடிக்க வைங்கண்னே!!!!!

நன்றி விகடன்