Showing posts with label சுதா சந்திரன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி. Show all posts
Showing posts with label சுதா சந்திரன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி. Show all posts

Tuesday, October 09, 2012

சுதா சந்திரன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி @ மங்கையர் மலர்

http://homepreneur-online.com/wp-content/uploads/2009/08/image003.jpg 

என்னைச் செதுக்கிய சோதனைகள்!

சுதா சந்திரன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி

காட்டுப்பாக்கத்தில்சூரிய புத்திரிதொடருக்காகப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தமயூரிசுதா சந்திரனுடன் ஒரு சுவையான சந்திப்பு நடந்தது.
வாங்க, வாங்க, வணக்கம்" என சரளமான தமிழ் பேசி வரவேற்றார் சுதா சந்திரன்,
என்ன அப்படிப் பார்க்கறீங்க? நான் மும்பையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணுன்னாலும் நல்லா தமிழ் பேசுவேங்க.. என் சரியான தமிழ் உச்சரிப்புக்குக் காரணம் விஜயகாந்த் சார்தான்.. ‘வசந்தராகம்படத்துல அவருடன் இணைந்து நடிச்சப்போ, செட்டுல இங்லீஷ்லயே பேசிச் சமாளிச்சுடலாம்னுதான் பார்த்தேன். ஆனா அவர் விடலை.
தமிழ் சினிமாவுல நடிக்கன்னு வந்தாச்சு. அதுக்கப்புறம் தமிழ் கத்துக்கலைன்னா எப்படி? தமிழை சுலபமாகக் கத்துக்கலாம்"னு சொல்லிச் சொல்லியே என்னைத் தமிழ் பேச வெச்சுட்டாரு. அவருக்கு என் நன்றி!" என்று கலகலப்பாக ஆரம்பித்தார் சுதா சந்திரன்.
நீங்க சினிமாத் துறைக்கு வந்து இருபத்தேழு வருஷமாயிடுச்சாமே!

ஆமா... என்னவோ, இப்பதான் ஃபீல்டுக்குள்ள நுழைஞ்சமாதிரி ரொம்ப ஜாலியா, சந்தோஷமா போய்க்கிட்டு இருக்கு. தினம் புதுசு புதுசா ஏதாவது கத்துக்கிட்டே இருக்கேன், புதுபுது முகங்களைச் சந்திக்கறேன்.
குடும்ப விஷயத்திலும் ரொம்ப அதிர்ஷ்டசாலி நான். அருமையான, அழகான, அன்பான குடும்பத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் அப்பா, நான், என் கணவர் ரவி டாங் என எங்கள் மூன்று பேரையும் கொண்ட அற்புதமான குடும்பம் என்னுடையது" என்றவரை இடை மறித்து,
எல்லா சானல்களிலுமே வருகிறீர்களே.. உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?" என்று கேட்டபொழுது, சரசரவென வந்து விழுந்தது ஒரு பெரிய லிஸ்ட்!
ஹிந்தி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி. இதுல பஞ்சாபி கொஞ்சம் ஸ்பெஷல் ஏன்னா, என்னை 18 வருடங்களுக்கு முன் கைப்பிடித்தவர் ஒரு பஞ்சாபி!"
இத்தனை வருஷமாய் மேக் அப், கேமரா, ஆக்டிங்ன்னு இருந்துட்டீங்களே..சினிமாத் துறையைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன...?
இது ஒரு வொன்டர்ஃபுல் இன்டஸ்ட்ரி... சவால்கள் நிறைந்தத் துறை. கொஞ்சம் திறமை + நிறைய பொறுமை + நிறைய, நிறைய உழைப்பு இருந்துட்டா, எந்த உச்சிக்கும் போகலாம்! இதுவரை யாரும் என்னிடம் எதுக்காகவும் மிஸ்பிஹேவ் பண்ணினதே கிடையாது.
அந்தக் குறிப்பிட்ட விபத்துக்குப் பிறகு, செயற்கைக் கால் பொருத்திக்கிட்டு, ‘மயூரிபடம் செஞ்சீங்க; அதுவும் நாட்டியத் தாரகையா! இப்ப அதைப் பற்றி உங்க எண்ண ஓட்டம் எப்படியிருக்கு?

‘மயூரிபடம் முடிஞ்சப்பறம் ஏதோ ஃப்ளூக்ல ஒரு படம் ஹிட் ஆயிடுச்சு. தொடர்ந்து ஒரு ஹேன்டிகேப்ட் பெர்சனால் மீடியாவில் நிச்சயம் ஜெயிக்கவே முடியாதுன்னு என் காதுபடவே நிறைய பேர் சொன்னாங்க.. அந்தச் சொற்களை, நான் சவாலாய் எடுத்துகிட்டேன்... ஜெயிச்சே தீரணுங்கிற என்னுடைய வெறிதான், ஒரு ஏக்தா கபூர் என்னை வைச்சு ஹிந்தி சீரியல்கள் பண்ணி, என்னை ஒரு style icon ஆக என் ஹெவி நகைகளுக்காகவும், ஸ்டைலான பொட்டுகளுக்காகவும், சேலைகளுக்காகவும் பேச வெச்சுருக்கு. நம் மனம்தான் நம் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். நம்மால் நிச்சயம் முடியுங்கிற மனோபாவத்தை வளர்த்துக்கிட்டா நம்மால், எதையும் சாதிக்க முடியும் என்பது என் வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்த பர்சனல் பாடம்.
விபத்துல என் கால் போனபோது, ‘உன்னால் இனி நடனம் ஆடவே முடியாதுன்னு சொன்னவங்க முன்னாடி நடனம் ஆடியே காட்டணும்னு வெறியாயிடுச்சு. அதற்கு ஏற்றார் போல் எனக்கு உதவி செய்ய கடவுள் நல்ல மக்களை எனக்கு அனுப்புவார், அனுப்பியிருக்கார்.
எங்கப்பாதான் போதும்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, கொஞ்சமாவது ஸ்லோடவுன் பண்ணிகோ"ன்னு சொல்லுவாரு. நமக்காவது ரெஸ்டாவது!


http://www.tamiloviam.com/img/Kalasam-Sudha1.jpg
உங்க பெற்றோர்கள் உங்களோட ஒவ்வொரு முன்னேற்றத்துலயும் உறுதுணையா இருந்திருக்காங்க இல்லயா?
நிச்சயமா.. அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே நான் கேட்டுப்பேன்,
முதல் முதல்லா நான் ஒப்பந்தத்துல கையெழுத்துப் போடும்போது, ராகு காலத்துல மட்டும் எக்காரணம் கொண்டும் கையெழுத்து போடாதேன்னு பெத்தவங்க சொன்னாங்க; ஆனா அத அப்படியே ஃபாலோ பண்றேன்.

நான் ஒரு பஞ்சாபியைத் திருமணம் செஞ்சுக்கப் போறேன்னு வீட்ல சொன்னபோது, உனக்கு சரிபடாது. கல்யாணம் பண்ணிக் கிட்டு ஆறே மாசத்துல பொட்டிய தூக்கிட்டு திரும்பி வருவேன்னு அம்மா சொன்னாங்க. அதையும் ஒரு சவாலாய் எடுத்துகிட்டேன். கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் காத்திருந்து... அவரை நல்லா புரிஞ்சுக்கிட்டு, அப்புறம் தான் திருமணம் செஞ்சுக்கிட்டேன். எங்களுக்குள்ள காதல் என்பதைவிட புரிந்துணர்வுங்கிறது ரொம்ப அழுத்தமாக, ஆழமாய் இருந்தது, இருந்துகிட்டும் இருக்கு.
என் அம்மா, தான் இறக்கும் தருவாயில் வெப் காமெரா வழியாக அப்பொழுது கனடாவில் இருந்த என் கணவரைப் பார்த்து கைகள் கூப்பி நன்றி"னு சொன்னதை நான் எப்பொழுதும் நினைச்சுப் பார்த்துப்பேன்.
உங்கள் வெற்றிக்கான காரணம்?
100% கடும் உழைப்பு மட்டும்தான். செய்யும் வேலையை மனதார விரும்பி செய்றேன்...எனக்கு சாக்குப் போக்கு பிடிக்காது... ஏதோ கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன்னு சிலர் சொல்வாங்க. கடவுள் உழைப்பாளிங்க பக்கம்தான் நிற்பார், உழைக்காமல் இருப்பவங்க பக்கம் வெற்றிங்கிறது எப்படி வரும்?
நவராத்திரி சமயத்துல நம்ம பெண்களுக்கு நீங்க சொல்லும் வாழ்த்து மொழி என்ன?
நம் இந்திய பெண்கள் எல்லாருமே தைரியசாலிங்க. குடும்பத்துக்கு ஏதாவது ஒண்ணுன்னா, பாறை மாதிரி உறுதியாய் இருப்பாங்க. மேற்கத்திய நாடுகள்ல போய் பாருங்க ஏதாவது ஒரு சின்ன மனஸ்தாபம் வந்தாகூட மனம் ஒடிஞ்சுப் போய், குடி, தற்கொலைன்னு பெண்கள் போயிடுவாங்க. நம்ம பெண்கள் எதிலும் எப்பவும், ஸ்டெடியா நின்னு ஜெயிக்கக் கூடியவங்க. எப்பொழுதுமே ஏன்? இப்படி நடந்ததுனு கேள்வி கேட்காதீங்க! ‘அடுத்தது என்ன?’னு யோசியுங்க. வெற்றித் திருமகள் உங்கப் பக்கம் இருப்பாள்" என சிரித்தப்படி, முடிக்கிறார் சுதா சந்திரன் .
சந்திப்பு : நளினி சம்பத்குமார்


நன்றி - மங்கையர் மலர்  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuH8t2SD0bCCtNj9W7kWogHHeTuNMXATxv2rqef7VGs5zz1YS-rgYSUtRqrFciE_EhoURXOBmMEptss7uL-LFCrZS3Eueh4PLgSVJRQe467lBq2S60FItn8L9NpCaA_I6FRwS5xd2X1IY/s1600/sutha+chandran.jpg