Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

Sunday, July 13, 2014

சிவாஜி, கமலை முந்திய நம்பியார்!- திகம்பரச் சாமியார்

அந்தநாள் ஞாபகம்
அந்தநாள் ஞாபகம்
எத்தனை படங்களில் ஒரு நட்சத்திரம் நடித்திருக்கிறார் என்பது எண்ணிக்கையில் நிகழ்த்தப்படும் சாதனை. அதைப் போலவே ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு எத்தனை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசம் காட்டி எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முதல் சாதனையைப் படைத்தவர், தமிழ் ரசிகர்களின் நித்திரையிலும் பயமுறுத்திய முத்திரை வில்லன் எம்.என்.நம்பியார்.


ஆனால் இன்றைய தலைமுறை தமிழ் ரசிகர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்ததும், அதேபோல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்ததும்தான் நினைவுக்கு வரும். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், அந்த நிறுவனத்தின் அதிபரும் இயக்குநருமான டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் 1950-ல் வெளியாகிப் பெரிய வெற்றிபெற்ற ‘திகம்பரச் சாமியார்’ படத்தில் 12 வேடங்களில் கலக்கினார் நம்பியார். 1934-ல் மும்பையில் படமாக்கப்பட்ட ‘ராமதாசு’ என்ற படத்தில் சிறிய வேடமொன்றில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி மெல்ல மெல்ல வளர்ந்து வந்த நம்பியாரை ஒரு முழுமையான வில்லன் நடிகராக அடையாளம் காட்டியது 1950-ல் வெளியான திகம்பரச் சாமியார்.


திகம்பரச் சாமியார் படத்தின் எழுத்தாளரான ‘வடுவூர் துரைசாமி ஐயங்கார்’ அன்று புகழ்பெற்ற துப்பறியும் நாவலாசிரியர். வடுவூரார் என்று வாசகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவரது புகழ்பெற்ற துப்பறியும் நாவல்களில் ஒன்றுதான் திகம்பரச் சாமியாராக உருவானது.


வடிவாம்பாள் என்ற இளம்பெண்ணை (நாயகி) கும்பகோணம் வழக்கறிஞர் சட்டநாதம் பிள்ளை என்பவர் கடத்தி வந்து அடைத்து வைத்து, அவளது மனதை மாற்றித் தன் சகோதரர் மாசிலாமணிக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கத் துடிக்கிறார். இப்போது கடத்தப்பட்ட வடிவாம்பாளை யார் கண்டுபிடித்து அவளது காதலனுடன் சேர்த்து வைப்பது? அவர்தான் திகம்பரச் சாமியார். பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி வடிவாம்பாளைச் சிறை வைத்திருக்கும் வீட்டைக் கண்டுபிடிக்கிறார்; காதலனோடு சேர்த்து வைக்கிறார்.


வடுவூரார் நாவலில் காட்டிய விறுவிறுப்பும் சுவையும் கொஞ்சமும் குன்றாமல் இருக்கத் தனது கதை இலாகாவைச் சேர்ந்த த. சண்முகம் என்பவரைத் திரைக்கதை எழுத வைத்து வெற்றிப்படமாக இயக்கிக்காட்டினார் டி.ஆர். சுந்தரம். நாவல்களைப் படமாக்கினால் வெற்றிபெற முடியாது என்ற மூடநம்பிக்கையை உடைத்துக் காட்டினார் மார்டன் அதிபர்.


திகம்பர சாமியாராக 12 வேடங்களில் தோன்றி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார் எம்.என். நம்பியார். முதலில் திகம்பர சாமியார் வேடத்தில் நடித்தவர் பழம்பெரும் நடிகரான காளி என் ரத்தினம்.



 ஆனால் ஏதோ ஒன்று உதைத்துக் கொண்டே இருக்க, படத்தின் கால்பகுதி எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் ‘ரஷ்’ போட்டுப் பார்த்தார் சுந்தரம். ஆனால் “துப்பறியும் படத்துக்கான பயம் வரவில்லை” என்று கூறியவர் காளியை நீக்கிவிட்டு நம்பியாருக்கு மேக் அப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். முதலில் ஐந்து தோற்றங்களுக்கான மேக்-அப் டெஸ்ட் செய்து பார்த்தவர் நம்பியாரிடம் “உன்னை இனிமே பிடிக்க முடியாதுய்யா!” என்று அந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கும் முன்பே பாராட்டியிருக்கிறார்.


thanx - the hindu

Sunday, May 27, 2012

கும்கி -ஒரு மாறுபட்ட சினிமா

''நடிக்கிற ஆசை எனக்கு இருக்குனு அப்பாவுக்குத் தெரியும். அதை நானா எப்போ சொல்லப்போறேன்னு என்னை ஆழம் பார்த்துட்டே இருந்தார். ஒருநாள் தயங்கித் தயங்கிச் சொன்னதுமே, 'இதோ பார் தம்பி, இன்னார் பேரன், இன்னார் மகன், எப்படி நடிப்பாரோங்கிற எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். ஆனா, அதைச் சமாளிக்கணுமேங்கிற பயமோ, தயக்கமோ இல்லாம இயல்பா நடி. ஒவ்வொரு சீனுக்கும் உன் உழைப்பைக் கொட்டு. எல்லாம் நல்லபடியா நடக்கும்’னு வாழ்த்தினார். எல்லாம் நல்லபடியா நடந்துட்டு இருக்கு!''- தன் சினிமா அறிமுகம் குறித்து கண்கள் மின்னப் பேசுகிறார் விக்ரம் பிரபு.


 அன்னை இல்லத்தின் மூன்றாவது தலைமுறையும் வெள்ளித் திரை தொடுகிறது. நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன், 'கும்கி’யின் கதை நாயகன்... விக்ரம் பிரபு!

 ''லிங்குசாமி சார்... எங்க குடும்பமே மதிக்கும் இயல்பான மனிதர். 'இனி சினிமா தான்’னு முடிவு பண்ணினதும் அவரைத் தான் சந்திச்சேன். 'என்ன மாதிரி படம் பண்ணலாம்?’னு ஆரம்பிச்சு, 'இந்த மாதிரி இருக்கணும், இப்படிலாம் இருக்கக் கூடாது’னு நிறைய விஷயங்களைப் புரியவெச்சார். பிரபு சாலமன் சார் படத்தில் கமிட் ஆனதும், 'நம்ம புரொடக்ஷன்லயே படம் பண்றீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு’னு சொல்லி என்னை அணைச்சுக்கிட்டார். எனக்குக் கிடைச்ச நல்ல அண்ணன் அவர்!''

''காடு, யானைனு முதல் படத்துலயே நிறைய சவால் போல..?'

'
''நிச்சயமா! ஒரு யானைப் பாகனாகவே வாழ வேண்டிய கேரக்டர். 'நம்ம ஹீரோ மாணிக்கத்தை முதல்ல ஃப்ரெண்ட் ஆக்கிங்கோங்க’னு பிரபு சாலமன் சார் சொல்லிட்டார். சும்மா ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்புனா, அக்செப்ட் பண்ற ஆளா மாணிக்கம்? மாணிக்கம் என்ற யானையை ஃப்ரெண்ட் பிடிக்க கேரளா போனேன். மாணிக்கம் மேல் எப்படி ஏறுவது, இறங்குவது, அவர் நடக்கும்போது எப்படி ஃபேலன்ஸ் பண்ணி உட்கார்றதுனு பதினஞ்சு நாள் பயிற்சி. மாணிக்கத்தோட பாகன் அதை மலை யாளத்தில் பழக்கியிருந்தார்.


 அதனால அதுக்குத் தெரிஞ்ச மலையாள வார்த்தை களை நானும் கத்துக்கிட்டேன். யானைகள் ரொம்ப ஸ்மார்ட். நம்ம கண்ணுல பயம் தெரியாத வரைக்கும்தான் நாம சொல்ற தைக் கேட்கும். 'இவன் பயப்படுறான்’னு அதுக்குத் தெரிஞ்சுட்டா... அவ்வளவுதான். அதனால உள்ளுக்குள்ள உதறுனாலும் வெளிய காமிச்சிக்காம கொஞ்ச நாள்லயே மாணிக்கத்தை நல்ல ஃப்ரெண்ட் ஆக்கிக்கிட்டேன்!''

''நடிக்க வர்றதுக்கு முன்னாடி ரஜினி, கமலைச் சந்திச்சு வாழ்த்து வாங்கினீங்களே... என்ன சொன்னாங்க?''


''கமல் சார் எனக்கு என்னென்ன தெரியும்னு முழுசாக் கேட்டுட்டு, இன்னும் என்னென்ன தெரிஞ்சுக்கணும்னு டீடெய் லாப் பேசினார். 'எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கணும்... ஒரு படத்தை எப்படிப் பார்க்க ணும்னு அவர் சொல்லிக்கொடுத்த எல்லாமே சினிமா பாடங்கள்.


 'முதல் படத்திலேயே ஹீரோயிசம், பெர்ஃபார் மன்ஸுனு மாட்டிக்காம எல்லாத்தையும் கலந்து பண்ணுங்க. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நம்மை அவங்க எப்படி ஏத்துகிறாங்கங்கிறதைப் பொறுத்து அப்புறம் முடிவு பண்ணலாம்’னு ரஜினி சார் சொன்னார். ரெண்டு பேருமே அவங்கவங்க சக்சஸ் ஃபார்முலாவையே எனக்கு சொல்லிக் கொடுத்ததாத் தோணுச்சு!''

''சினிமா குடும்பப் பின்னணியோட நடிக்க வர்றதும், முதல் வெற்றியும் ஈஸிதான். ஆனா, அதைத் தக்கவெச்சுக்கிறது வாழ்நாள் போராட்டமாச்சே...


''
''உண்மைதான்! ஆனா, அதுக்கு நான் தயாரா இருக்கேன். கலிஃபோர்னியா சாண்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தியேட்டர் பெர்ஃபார்மன்ஸ்ல ஆரம்பிச்சு, கார்பென்டரி, ஆடை வடிவமைப்பு, இயக்கம், நடிப்புனு சினிமா தொடர்பா 'ஏ டு இசட்’ கத்துக்கிட்டுதான் வந்திருக்கேன்.


'சர்வம்’ படத்தில் விஷ்ணுவர்தன் சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன்.என்னை சினிமாவுக்காக எப்படியும் வளைக்கலாம்கிற அளவுக்கு மாத்திக்கிட்டேன். தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கேன். நேர்மையா உழைச்சா எந்த விஷயமும் சாத்தியம்னு நம்புறவன் நான்!''

Wednesday, March 28, 2012

கர்ணன் - நன்றி உணர்ச்சியின் நாயகன் - சினிமா விமர்சனம்

http://cinegilma.com/wp-content/gallery/karnan-movie-stills/karnan-movie-stills-2.jpg 

புராணக்கதைகள் உண்மையில் நடந்த சம்பவமா? அல்லது கற்பனைக்கதையா? என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அதில் மனிதன் கற்றுக்கொள்ள  என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்க்கைப்பாடத்துக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வதே நல்லது.. அதைத்தான் நம் முன்னோர்களும் விரும்பினார்கள்..

கொடை வள்ளல் என்றே அறியப்பட்ட கர்ணனின் நன்றி உணர்ச்சி, செஞ்சோற்றுக்கடனுக்காக அவனது தியாகங்கள் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையே கர்ணன் என்னும் இந்த பிரம்மாண்டமான படம்.. 

குந்தி தேவிக்கு ஒரு வரம். அவர் மனதில் யார் நினைக்கிறாரோ? அல்லது யார் மேல் ஆசைப்படுகிறாரோ அவரே அவரது கணவராக வாய்க்கப்பெறுவார்.. விளையாட்டாக சூர்ய பகவானை கணவனாக அடைந்தால் எப்படி இருக்கும்? என்று மனதில் நினைக்க சாட்சாத் சூரிய பகவானே நேரில் வந்து தரிசனம் தந்து ஒரு குழந்தையையும் இன்சிடெண்ட்டாக தந்து செல்கிறார் .. 

 இப்போ குந்தி கன்னித்தாய்.. குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விடு விடுகிறார்.. அதை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். 

25 வருடங்கள் கழித்து.. வாலிபன் ஆனதும் தனது வளர்ப்புப்பெற்றோர்கள் பேசிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக அவர்கள் பேச்சை கேட்டு கர்ணன் உண்மை அறிகிறான்.. 

ஒரு வில் வித்தைக்கான போட்டியில் அர்ஜூனை விட கர்ணன் சிறந்த வில்வித்தை வீரன் என்று நிரூபணம் ஆகிறது.. ஆனால் அர்ஜீணன் சத்திரியன்.. கர்ணன் தேரோட்டியின் மகன்.. இந்த ஒரே ஒரு வாதத்தை முன் வைத்து கர்ணனை பலர்  பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்துகின்றனர். 

தக்க சமயத்தில் துரியோதணன் ராஜ்ஜியம் கொடுத்து அவனை மன்னன் ஆக்கி கவுரவம் காப்பாற்றுகிறான்.. அந்த நன்றிக்கடனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் துரியோதனனுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக சபதம் செய்கிறான் கர்ணன்.

தேவேந்திரன் மாறு வேடத்தில் கர்ணனிடம் வந்து அவனது கவச குண்டலத்தை  தானமாக பெறுகிறான்.. யார் வந்து என்ன கேட்டாலும் மறுக்காமல் தானம் செய்யும் தயாள குணம் படைத்தவன் அவன்.. 

 அர்ஜூணனை ஒழிக்க பிரம்மாஸ்திரம் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். அது பற்றி தெரிந்த முனிவர்  அந்தணர்களுக்கு மட்டுமே அதை கற்றுக்கொடுப்பார்.. சத்தியர்களுக்கு கற்றுத்தர மாட்டார்... எனவே தான் ஒரு அந்தணர் என  பொய் சொல்லி கர்ணன் அந்த வித்தையை கற்றுக்கொள்கிறான்.ஒரு சமயம் அந்த முனிவர் கர்ணனின் மடியில் அமர்ந்து உறங்கும்போது  ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் குத்திக்கிழிக்கிறது.. அவன் அசைந்தால் குருவின் தூக்கம் கெட்டு விடும் என்பதால் கர்ணன் அமைதியாக வலியைப்பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்.. 


 கொட்டிய ரத்தம் பட்டு விழித்து உண்மை உணர்ந்த முனிவர் கர்ணனுக்கு சாபம் விடுகிறார்..

சுபாங்கி எனும் இளவரசியை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கர்ணன் அவள் மேல் காதல் கொள்கிறான்.. துரியோதணன் மூலம் திருமணம் நடக்கிறது.. திருமணம் முடிந்த பின் கர்ணன் ஒரு தேரோட்டி என்ற உண்மை தெரிய வந்து மாப்பிள்ளையை அவமானப்படுத்துகிறார் மாமனார்.. 

 மகாபாரதப்போர் மூளும் நேரம்.. கிருஷ்ணர் கர்ணனை டம்மி ஆக்கினால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற முடியும் என்பதை கண்ணன் உணர்ந்து குந்தி தேவியை தூண்டி விட்டு கர்ணனிடம் தூது அனுப்புகிறார்..

குந்தி தேவி தான் தன் அம்மா, பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பதை அறிந்தும் நன்றி உணர்வின் காரணமாக கர்ணன் அவர்கள் பக்கம் வரவில்லை.. துரியோதணன் உடன் இருந்து போரிட்டு  மடிகிறான்

 நடிப்பு பற்றி சொல்லனும்னா சிவாஜி ஆக்டிங்க் கிளாஸ்.. கர்ணன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்கும் அளவுக்கு கம்பீரம் காட்டி கலக்கலான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது நடை ஆஹா... ( உத்தம புத்திரன், ராமன் எத்தனை ராமனடி,வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற படங்கள் அவர் நடை அழகுக்கு பெயர் போனவை)


சிவாஜிக்குப்பின் பேர் சொல்லும் நடிப்பு என் டி ஆர்.. கிருஷ்ணர்னா அப்படியே தெய்வத்தை நேரில் பார்ப்பது போலவே.. அப்படி ஒரு சாந்தமான, எதற்கும் அசைந்து கொடுக்காத முகம்.. தெய்வீக தோற்றம் அவருக்கு இயற்கை கொடுத்த வரம்.. ஆந்திராவின் எம் ஜி ஆர் என போற்றப்பட்டவர்.. அவர் வரும் காட்சிகள் எல்லாம் மற்ற நடிகர்கள் எல்லாரும் டம்மியாக தெரிவது அவரது ஆளுமைக்குச்சான்று..


துரியோதணனாக வரும் அசோகன் காமெடி கலந்த நடிப்பு தந்திருக்கிறார்,.. இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. வில்லத்தனம் கொஞ்சம் கம்மி தான்.. 

அர்ச்சுணனாக வரும் முத்து ராமன் ரொம்ப மென்மையான  முகச்சாயல் உள்ளவர்,.. அவர் சரத் பாபு மாதிரி ஜெண்டில் மேன் கேரக்டருக்கு ஓக்கே. அர்ச்சுனன் மாதிரி போர் வீரன் கேரக்டருக்கு..?? 

ஆடை வடிவமைப்பு, ஆர்ட் டைரக்‌ஷன் . ஒளிப்பதிவு எல்லாமே செம பிரம்மாண்டம்.. அப்படியே சம்பவங்களை கண் முன் நிறுத்துகிறது.. 3 மணீ நேர படத்தில் போர் அடிக்கும் காட்சிகள், அல்லது தேவை இல்லாத காட்சி என்று எதுவுமே இல்லை.. சபாஷ் எடிட்டிங்க்.. 

 பாடல்கள் 11.. அதில் சூப்பர் ஹிட் பாடல்கள் 4.. 

http://cinegilma.com/wp-content/gallery/karnan-movie-stills/karnan-movie-stills-3.jpg

மகா பாரதம் இயற்றிய வியாசரிடம் சில கேள்விகள்


1. குந்தி தேவி அரண்மனையில் மக்களுடன் மக்கள் பார்வையில் தான் இருக்கார்.. 9 மாசம் காணாம போய் குழந்தையோட வர்லை.. ஒரே நிமிஷத்துல குழந்தை பிறந்துடுது.. அவர் ஏன் அதை ஆத்துல விடனும்.. கண்டெடுத்ததுன்னு சொல்லி அரண்மனையில் வளர்த்தலாமே?மக்கள் ஏன் பழிக்கப்போறாங்க?

2. உலகையே ரட்சிக்கும் கண்ணன் போர் நடக்காமல் காத்து இருக்கலாமே.. தனிப்பட்ட 6 பேரின் பகைக்காக ஏன் நாட்டு மக்களை போரில் இறக்கி பலிஆடுகளாய் மக்களை ஆக்கனும்? பல சித்து வேலைகள் தெரிந்த கண்ணன் துரியோதனன் மனதை மாற்றி இருக்கலாம்.. அல்லது ராஜ்யம் தானே பிரச்சனை? இந்தா ராஜ்யம் என புது ராஜ்யமே உருவாக்கி தந்திருக்கலாமே?

3. கர்ணனிடம் பிரம்மாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்க வேணாம் என வரம் வாங்கி வரச்சொல்லி குந்தியை அனுப்புவது ஏன்?அவருக்குத்தான் சக்தி இருக்கே? முதல் முறை கர்ணன் அதை பிரயோகிக்கும்போது எப்படி அர்ச்சுனரை காப்பாற்றினாரோ அதே போல் ஒவ்வொரு முறையும் காப்பாற்றலாமே?

4. முக்காலும் உணர்ந்த முனிவர்க்கு வந்திருக்கும் கர்ணன் அந்தணன் அல்ல என்பது ஏன் தெரியாமல் போச்சு.. அவரும் சராசரி மனிதர் தானா?

5. கர்ணன் உயிரோடு இருக்கும்போதே ஏன் அவனது 10 வயசு பாலகன் போருக்கு வர்றான்?அப்படி என்ன அவசியம்?

6. போர் நடந்து கொண்டிருக்கும்போது கண்ணன் அர்ச்சுணருக்கு கிட்டத்தட்ட 2 மணி நேரம் உபதேசம் செய்கிறார்.. அது வரை அனைவரும் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்களா?


http://static.moviecrow.com/movie/karnan/658.jpg
 கர்ணன் பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1. பீமன் கேரக்டர்க்கு நல்ல ஆஜானுபாவமாக ஒரு ஆளை போட்டிருக்க வேண்டாமா? பீமன் பஞ்ச பாண்டவர்களில் மிக பலம் பொருந்தியவர்.. ஆனா படத்துல அவர் பரிதாபமா இருக்கார்.. 

2. காந்தாரி கறுப்பு நிறத்துணியால் தான் தன் கண்களை கட்டி வாழ்நாள் முழுவதும் தன் கணவன் காணாத உலகத்தை தானும் காணப்போவதில்லை என்றாள்..என மகாபாரதம் கூறுகிறது..  ஆனால் படத்தில்  பச்சை ரிப்பனை கட்டி இருக்கார்..

3.  கர்ணனுக்கு மன்னன் பதவி அளிக்கபட்டதும் கர்ணனிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை, கூனிக்குறுகி இருக்கும் உணர்வு, தகுதிக்கு மீறிய மரியாதை  கிடைத்த குற்ற உணர்வு வர வேண்டாமா? ஆணவம் தெரியுதே அவர் நடை உடை பாவனையில்... 

4. பிரம்மாஸ்திரம் மறந்து போகும் என சாபம் கிடைத்ததும் ஏன் அந்த மந்திரத்தை ஒரு ஓலையில் எழுதி வைத்துக்கொள்ளக்கூடாது?

5. பிரம்மாஸ்திரம் கற்றுக்கொள்ளும் நாட்களில் தாடியுடன் இருக்கும் சிவாஜி கானகத்தில் அங்கேயே தங்கி பணி புரிகிறார்.. ஆனா அப்பப்ப அரண்மனைக்கு வர்றாரே.. அது எப்படி?

6. துரியோதணன் கேரக்டர் ஆட்காட்டி விரலில் மோதிரம் அணிந்து வருகிறார்.. ஆனால் மகா பாரதத்தில் மோதிர விரலில் தான் அணிவதாக வருது.. 

7. கண்ணனை பாண்டவர்கள், கவுரவர்கள் போய் பார்த்து கால் மாட்டில் தருமர், தலை மாட்டில் துரியோதணன் நின்று ஆதரவு கேட்கும் மிக முக்கியமான சீன் படத்தில் இல்லையே?

8. அமாவாசை அன்று பலி இட்டு போரை ஆரம்பித்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்று ஆனதும் கண்ணன் சூரிய சந்திரனை ஏமாற்றி ஒரு நாள் முன்னதாக அமாவாசை வரும்படி செய்கிறார்.. ஓக்கே.. ஆனால் துரியோதணன் அவன் கணக்குப்படி அமாவாசை அன்று தானே பலி தர்றான்.?

9. கர்ணன் - துரியோதணன்  மனைவி சொக்காட்டான் ஆடும் காட்சி.. எடுக்கவோ கோர்க்கவோ என வசனம் பேசும் முக்கியமான சீன் - அதில் கர்ணன் துரியோதனன் மனைவியுடன் இன்னும் நெருக்கம் காட்டி இருக்க வேண்டும்..அப்போதான் துரியோதணன் எந்த சூழ்நிலையிலும் கர்ணன் மேலோ, தன் மனைவி மேலோ சந்தேகம் கொள்ள வில்லை என்பது நிரூபணம் ஆகும்.. மகாபாரதத்தில் மிக பிரமாதமாக வர்ணிக்கப்படும் இந்த காட்சி படத்தில் மிக சாதாரணமாகவே எடுக்கப்பட்டிருகிறது

http://i.ytimg.com/vi/LwMNIpHWs_o/0.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

.  1. வாரி அணைக்க வா என்றேன்... வறியவன் ஏதோ வரம் கேட்பதாய் எண்ணி அந்த மழலை எனக்கு வாரிக்கொடுத்தான்.


2. வில்லுக்கு ஒரு விஜயன் என்ற சொல்லுக்கு பிறந்தவன் அர்ச்சுணன்

3.  அம்மா, அப்பா இருவரும் இறந்து விட்டார்களா? குழந்தாய்?

 இல்லை, என்னை மறந்து விட்டார்கள்

4.  என் இனமடா நீ!! மேக நாதா!!

5. இந்த சமூகம் அடித்த இடத்தை துடைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் அடிக்கிறது

6. கொடுப்பது என்று உறுதி ஆன பின் உயிரும் ஒரு பொருட்டா?

7. பெண்கள் தோல்வியை தாங்க மாட்டார்கள். அதனால் நான் விட்டுத்தருகிறேன்.. 

ஆண்கள் பலசாலிகள்.. ஆனால் அறிவில்லாதவர்கள்

8.  ஏய்.. தேரோட்டி.. உன் ரத்தத்தில்  தேர் ஓடுகிறது.. 

 இல்லை.. எல்லோர் ரத்தத்திலும் சிவப்பு தான் ஓடுகிறது

9. நான் தேரோட்டுவதில் என்ன குறை கண்டீர்.. நான் ஒரு தேர்ரோட்டியின் மனைவி அல்லவா?

 ஆரம்பத்தில் இருந்து எல்லோரும் என்னை என்ன சொல்லி இகழ்ந்தார்களோ அதே பழி சொல்லை உன்னையும் அறியாமல் சொல்கிறாய்.. 

10.  வாயும் வயிறுமாய் உள்ள மனைவியை உயிரும் உணர்வுமாய் காக்க வேண்டும்..

11. விட்டுக்கொடுப்பதற்கே வீரம் அதிகம் வேண்டும்..

12.  இது என்னை நோக வைக்கும் கேள்வி... கர்ணா,,,

 ஆனால் கேட்க வேண்டிய கேள்வி கண்னா./..


13. போரில் மனிதனின் மதி மாறும், வெறி ஏறும். 

14. இறக்கும்போதும் நான் சிரிப்பை விரும்புகிறேன்

15. இந்த மனிதர்களுக்கு எப்போதும் எதற்கும் கடவுளை குறை சொல்வதே வழக்கம் ஆகி விட்டது..

16.  பாவ காரியங்கள் என்றும் மறைத்து வைக்க முடியாது.. எப்படியும் என்றாவது வெளியே வந்து விடும்.. 

17. வல்லவனாக ஒருவன் பிறக்கலாம்.. ஆனால் வளர்ப்பால் மட்டுமே  அவன் நல்லவனாக ஆக முடியும்.. 

18./. அண்ணன் ஜாதகத்துலயே சமாதானம் கற பேச்சே இல்லை.. 

19.  எல்லோருடைய முட்டாள் தனத்துக்கும் ஈடு கொடுக்க இந்த உலகத்தில் இருப்பது கடவுள் மட்டுமே.. 

20. உலகத்துக்கு துரியோதனன் எப்படியோ எனக்கு அவன் தான் கடவுள்.. செய் நன்றி கொண்டவன் நான்

21. வீரத்தை வீரம் ஒதுக்கி வைக்குமா? நீ க்டைசி வரை துரியோதனனுக்கு பக்க பலமாய் இருக்க வெண்டும் என்பதற்க்காகத்தான் உனக்கு போரில் எந்த பொறுப்பும் தரவில்லை

http://uyire.com/wp-content/uploads/mvbthumbs/img_7484_karnan-dts-version-trailer.jpg

 கலக்கலான பாடல்கள்

1. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதது வல்லவன் வகுத்ததடா கர்ணா.. வருவதை எதிர் கொள்ளடா.. 

2. இரவும், நிலவும் வளரட்டுமே.. நம் இளமை நினைவுகள் மலரட்டுமே.. 

3. கண்ணுக்கு குலம் ஏது?கர்ணா... கருனைக்கு நிறம் ஏது?

4. போய் வா மகளே போய் வா.. 

5. மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை

6. என்னுயிர்த்தோழி. 

7. ஆயிரம் கரங்கள் உடையாய் போற்றி.. 

8. கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே?

9. மரணத்தை எண்ணி

 யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? என்ற கேள்வியே தேவை இல்லை.. அனைவரும் இந்தப்படம் பார்க்கலாம்.. 

 ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்

Saturday, April 30, 2011

எம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்?

கழுகார் பதில்கள் - காமெடி கும்மி

1.குணசீலன், தஞ்சாவூர்

சார்லி சாப்ளின் நடிப்பு பிடிக்குமா?
சாப்ளினை ரசிக்காதவர்கள் ரசிப்புத்தன்மை இல்லாதவர்கள்! அவர் நடிகர் மட்டுமல்ல...  தத்துவ மேதை! இதோ சில முத்துகள்...

. வாழ்க்கையே ஒரு நகைச்சுவை​தான்.
. மழையில் நனைவது பிடிக்கும், ஏனென்றால் நான் அழுவதை யாரும் கவனித்துவிட முடியாது.

. வாழ்க்கையை நெருங்கிப் பார்த்தால் சோகம், விலகிப் பார்த்தால் இன்பம்.

.நீங்கள் தலைகுனிந்து நடந்தால், வானவில்லை ரசிக்க முடியாது.


.நினைவுகள் இருந்தால் தனிமை தெரியாது.

சி. பி  - கம்யூனிச சிந்தனைகளை, தொழிலாளர் படும் கஷ்டங்களை அவர் அளவுக்கு நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர் யாரும் இல்லை.. பர்சனல் லைஃபில் அவர் போல் தோல்வியை சந்தித்த நகைச்சுவை நடிகரும் யாரும் இல்லை.

------------------------------
2.எல்லோரும் கரடியாய்க் கத்தி என்ன பயன்? நம் பிரதமரே வாக்களிக்கவில்லையாமே?

யாருக்கு வாக்களிப்பது என்று மன்மோகன் சிங் முடிவுக்கு வருவதற்குள், தேர்தல் முடிந்துவிட்டது. பாவம், பிரதமர் என்ன செய்வார்?



சி .பி. -அன்னையிடம் இருந்து ஆணை வரவில்லையோ என்னவோ?முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் எல்லாம் இந்த மாதிரி இருந்தால்நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்துவது எப்படி?

 -------------------------------

3.ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்

தி.மு.க-வுக்கு எதிரான செய்திகளுக்கு கழுகார் முக்கியத்துவம் தருவது ஏன்?

அ.தி.மு.க ஆட்சிக் காலமாக இருந்திருந்​தால் நீர், இதே கேள்வியை மாற்றிக் கேட்டிருப்பீர். காய்க்கும் மரமே கல்லடி படும். ஆளும் கட்சியே அதிக விமர்சனங்களை சந்திக்க நேரும்!

சி பி - உச்சியில் இருப்பவர்களைத்தானே குட்ட முடியும்?

----------------------------------
4. ஜி.விஸ்வநாதன், நாகர்கோவில்.

நல்ல நடிகர் சந்திரபாபுவை குடிதானே வீழ்த்தி​யது?

குடியும்!
ஆனால், மனசுக்குள் எதையும் மறைத்து வைக்​காமல் வெளிச்சத்தில் போட்டு உடைத்த குணம் உடையவர் என்பதால், அவர் வீழ்த்தப்பட்டார் என்பதே உண்மை!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகிய மூவரையும்பற்றி சந்திரபாபுவிடம் கருத்துக் கேட்டார் ஒரு நிருபர்.

'ஜெமினி என்னோட ஆதிகால நண்பன். அவனுக்கு காமெடி எப்படிப் பண்ணனும், லவ் சீன் எப்படிப் பண்ணனும் என்று நடித்துக் காட்டுவேன்.

அடே அம்பி, இத்தனை வருஷமாச்சு. நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை!

சிவாஜி நல்ல ஆக்டர், பட்... அவரைச் சுத்தி காக்கா கூட்டம். அந்த ஜால்ரா கூட்டம் போனாத்தான் தேறுவார்.

எம்.ஜி.ஆர்., கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். கம்பவுண்டராகப் போகலாம்’ என்று பதில் சொன்னவர் சந்திரபாபு. இடம், பொருள் பார்க்காமல், இப்படி கமென்ட்கள் அடித்ததால்தான் அவருக்கு சிக்கல் வந்தது!

சி பி - ஓப்பனா பேசக்கூடாது என்பது வி ஐ பி களுக்கான எழுதப்படாத விதி.. நம் ஆர் ராதாவும்,சந்திரபாபுவும் அதை மீறினார்கள். அவர்கள் பலமும் அதுதான்,பலவீனமும் அதுதான்

---------------------------------

5. போடி எஸ்.சையது முகமது, சென்னை-93

  மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பற்றி?

'அவருக்கு யாருய்யா சகாயம்னு பேர் வெச்சது? எந்த சகாயமும் பண்ண மாட்டேன்னு சொல்றாரே?’ என்று புலம்பினாராம் மத்திய அமைச்சர் அழகிரி.
'யார் என்னைத் தொந்தரவு செய்தாலும், இந்த சகாயம் நேர்மை தவற மாட்டான்’ என்பது அவர் அடிக்கடி சொல்வது.

2026-ல் யார் முதலமைச்சராக வருவார் என்பதைக்கூடக் கணக்குப் போட்டு காக்கா பிடிக்க நினைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கத்தில் தப்பிய சிலரில் சகாயமும் ஒருவர். இந்த சமூகம் இன்னும் மோசமாகிவிடவில்லை, நல்லவர்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு சாட்சி!

சி. பி -சகாயம் அரசியல்வாதிகளுக்கு ஒரு கசாயம். சேற்றில் செந்தாமரைகள் முளைப்பது மாதிரி நாட்டில் சில நல்லவர்கள் தோன்றுவது உண்டு

---------------------------

6.ரேவதிப்ரியன், ஈரோடு

  உங்கள் குரு யார்?

வாசகர்!

சி பி - காசு குடுத்து வாங்கிப்படிக்கறவங்களா? ஓ சி ல லைப்ரரில படிக்கறவங்களா?

--------------------------
7. வி.சுதாகரன், நெய்வேலி.

  ஈழத் தமிழர் பிரச்னையை முழுமையாக அறிந்துகொள்ள சில புத்தகங்களைப் பரிந்துரை செய்யுங்கள்!


போரும் சமாதானமும் - ஆன்டன் பாலசிங்கம்

சமாதானம் பேசுதல் - 'அடையாளம்’ வெளியீடு

ஈழத்தமிழர் போராட்ட வரலாறு - பாவைச் சந்திரன்

இந்த மூன்றும் புராதன இலங்கையில் தொடங்கி ராஜபக்ஷேவின் காலம் வரைக்குமான அனைத்து அழிவுத் தகவல்களையும் அப்பட்டமாகச் சொல்கின்றன!

சி பி - புத்தகங்கள் படிப்பதை விட ஈழ அகதியிடம் ஒரு நாள் இருந்து அவர்களுடன் பேசிப்பார்த்தாலே அவர்கள் வலியை உணர முடியும்.

-----------------------

8. எம்.செல்லையா, சாத்தூர்

  நரேஷ்குப்தா, பிரவீண் குமார் ஒப்பிடுக!

இரண்டுமே அணுகுண்டுகள். ஒன்று அமைதியாகவும், இன்னொன்று அதிரடியாகவும் வெடிக்கும்!

சி பி -ஆணவத்தால் ஆடிய அரசியல்வாதி மாப்புகளை ஆப்பு அடித்தவர்கள் இருவருமே..

------------------------------


9. வி.செல்லப்பா, திருநெல்வேலி.

  இந்தத் தேர்தலில் செலவான பணத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?

ஒரே ஒரு கட்சி செலவழித்தது மட்டும் இரண்டாயிரம் கோடியைத்  தாண்டுகிறது!  இதைத்தான் பூஜ்யங்களின் ராஜ்யம் என்கிறார்கள்!

சி பி - பிஸ்னெஸ்மேன் முதல் போட்டு பின் போட்ட காசை எடுப்பது மாதிரி சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்கிறார்கள்.பாக்கெட்டில் இருந்தா செலவு பண்ணுனாங்க.? ஏற்கனவே அடிச்ச காசில இருந்து ஒரு பர்சண்ட்டேஜ்ஜை செலவு பண்ரது பெரிய தியாகமா? என்ன?

----------------------------
10. என்.சொர்ணம், தூத்துக்குடி.

  ஆ.ராசா எப்படி இருக்கிறார்?

தேர்தல் முடிந்ததும் தன்னை வந்து தலைவர் சந்திப்பார் என்று நினைத்தாராம். ஆசை நிராசை ஆகி வருவது அவருக்கு வருத்தமாகத் தானே இருக்கும்!

 சி பி - மாட்டிக்கொள்ளாதவரை மகான், மாட்டிக்கொண்டால் மாக்கான் .
தலைவர் வராட்டி என்ன? தலைவி வந்தாங்களே போதாதா?


-------------------------------
11. சி.சாந்தி, மதுரை.

  அமைச்சர்களில் அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் யார்?

தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கிறார்!

 சி பி - அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் நம் முதல் அமைச்சர்?