Showing posts with label சிம்பு பேட்டி. Show all posts
Showing posts with label சிம்பு பேட்டி. Show all posts

Saturday, August 15, 2015

வாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை? விஜய் என்ன உதவி செய்தார்? - சிம்பு ஓப்பன் டாக்!

"ஒய் சோ லேட்டு..?
இதான் வந்துட்டோம்ல... அதான் மாஸ்!"
இந்த விளம்பரத் துண்டு ரீலில் அடங்கியிருக்கிறது, 'வாலு' ரிலீஸ் எதிர்கொண்ட பிரச்சினைகள், வழக்குகள், தடைகள்!
திரையரங்குகள் பஞ்சாயத்து, விஜய் உதவி, அரசியலில் களம் இறங்குகிறார் சிம்பு என பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவை சந்தித்து பேசியபோது...
"மூன்று 3 வருடங்கள் கழித்து படம் ரீலீஸ். உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?"
"நான் என்னை கடவுள்கிட்ட கொடுத்துவிட்டேன். அவர் என்ன நினைக்கிறாரோ அப்படி நடக்குது. 3 வருடங்கள் சிம்புக்கு படங்கள் வெளியாகவில்லை, அவன் காலி, இனிமேல் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்தார்கள். இப்போது என் படம் 'வாலு' ரிலீஸ். அதை வெளியிடுவதற்கும் வழக்கு, திரையரங்குகள் ஒப்பந்தம் என நிறைய பிரச்சினைகள் எழுந்தது.
மூன்று வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்தது என் ரசிகர்கள். அவர்களின் பாசத்துக்கு நான் எப்போதுமே அடிமைதான். இந்த பஞ்சாயத்து, வழக்கு என எதுவுமே இல்லாமல் இருந்தால் 'வாலு' எப்போதோ வெளியாகி இருக்கும். நான் எப்போதுமே மற்றவர்களுக்கு நிறைய உதவிகள் பண்ணியிருக்கிறேன். ஆனால், எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதைதான் இதுவரை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு புதுமுக இயக்குநரான விஜய் சந்தருடன் இணைந்து பண்ணியிருக்கிறேன். என்னை விடுங்கள், அவருடைய உழைப்பு, கஷ்டம் அனைத்துமே வீணாகி விடக்கூடாது. அதனால் 'வாலு' வெளியாகி வரை கூடவே நின்றேன்.
"தொடர் பிரச்சினைகள் வருவதால் அரசியலுக்கு வரப் போகிறீர்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறதே. உண்மையா?"
"அரசியலைப் பற்றி எனக்கு தெரியாது. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தனியாக நின்று எதிர்கொள்வேன். அந்த தகவலில் உண்மை இல்லை."
"விஜய் எந்த வகையில் 'வாலு' படத்துக்கு உதவி செய்தார்..?"
"பணம் கொடுத்து விஜய் உதவி செய்யவில்லை. இப்படத்துக்கு வெளியீட்டில் பிரச்சினை எழுந்தபோது விஜய் தரப்பில் இருந்து பி.டி.செல்வகுமார் தான் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இப்போதும் காலையில் இருந்து, இரவு வரை கூடவே இருந்து என்ன பிரச்சினை வந்தாலும் முடித்து கொடுத்து படம் வெளிவர உதவி செய்கிறார். அந்த வகையில் எனக்கு விஜய் அண்ணா செய்த உதவியை இன்றைக்கு அல்ல என்றைக்குமே மறக்க மாட்டேன்.
இன்னொரு உண்மையும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்பாக 'வாலு' பிரச்சினை நிலவி வந்த நேரத்தில் லதா ரஜினிகாந்த் மேடம் போன் செய்து, "'வாலு'வுக்கு என்ன பிரச்சினை. உங்களை ரஜினி சார் பார்க்க வேண்டும்' என சொல்கிறார் என்றார்கள். ஆனால், நான் சொல்லவில்லை. என் படத்தின் பிரச்சினையை நாமளே தான் முடிக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தேன். பிரச்சினைகள் முடிவுக்கு வந்தவுடன் ரஜினி சார் போன் பண்ணினார். "பிரச்சினை முடித்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். வாழ்த்துகள். நான் உங்களை அழைத்தேனே. ஏன் வரவில்லை" என்றார்.
பிரச்சினை எழுந்தபோது அனைவருமே எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என்ன பிரச்சினை வந்தாலும், எழுந்து நிற்பேனே தவிர, பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளியும் ஆள் சிம்பு இல்லை.
"நீங்கள் ஒரு அஜித் ரசிகர். அவர் தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..?"
" 'தல' மேல வருத்தமா... வாய்ப்பே இல்லை. 'வாலு' படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. அஜித்துக்கு, சக்ரவர்த்திக்கும் இடையே இருக்கும் பிரச்சினை என்ன என்பது திரையுலகுக்கு தெரியும். அப்புறம் எப்படி அஜித் உதவி செய்வார். படத்தை வாங்கியவுடன் அப்பாவுக்கு போன் பண்ணிய அஜித் சார், "எதற்குள் கவலைப்படாதீர்கள். அனைத்து பிரச்சினைகளையும் கடந்து சிம்பு வருவான்" என்று ஆறுதல் சொன்னார். இந்த விஷயத்தில் அஜித் உதவவில்லை என்று மாற்றி பேசி, அவர் மீது பழி போடுவதை நான் விரும்பவில்லை."
"உங்களுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தான் பிரச்சினை..?"
"ஒரு பிரச்சினையும் இல்லை. வருத்தம் இருக்கிறது. சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் வேறு ஒரு படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். 3 வருடம் கழித்து எனது படம் வெளியாகும் போது, பெரிய திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் எனக்கு கோபம் கிடையாது, வருத்தம் தான்.
இந்தப் பிரச்சினையால் எனது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் செய்த விஷயங்களை நிறுத்தச் சொல்லி முதலில் குரல் கொடுத்தது நான்தானே. அவர்களது கோபத்தில் நியாயம் இருக்கிறது. தனது நடிகரின் படம் பெரிய திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் ஆசைப்படத்தான் செய்வான். அதில் தவறு இல்லை.
"உங்களது அடுத்த படங்கள் குறித்து...?"
"கெளதம் மேனன் படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. 'வாலு' இப்போது ரிலீஸ். இனிமேல் செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். செப்டம்பரில் 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியீடு இருக்கும். அக்டோபர் அல்லது நவம்பரில் படம் வெளியாகும்.
கெளதம் மேனன், செல்வராகவன் படங்களை முடித்துவிட்டு அமீர் படத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன். அமீர் படத்தில் விஜய் சேதுபதி என்னுடன் நடிக்கிறார் என்பது எல்லாம் தவறான செய்தி. அந்த மாதிரியான ஒரு பாத்திரம், அப்படத்தில் இல்லை."


நன்றி - த இந்து

Sunday, February 16, 2014

விஜயை எனக்கு எதிரியாக்கி விடாதீர்கள் - எஸ்.டி.ஆர் சிம்பு. பேட்டி @ THE HINDU

கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், தங்கையின் திருமணத்தில் பிஸி. ஹன்சிகாவுடன் காதல் என்று பரபரப்பாக இருக்கிறார் எஸ்.டி.ஆர் சிம்பு. எத்தனை பரபரப்புக்கு இடையிலும் எத்தனை சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டாலும் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிக்கிறார். 



‘சிலம்பாட்டம்’, ‘வாலு’, எல்லாமே மாஸ் ஹீரோ சிம்புவின் ஹீரோயிசத்துக்கான படங்கள். ஆனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘வானம்’ போன்றவை சிம்புவை கதாபாத்திரங்களாகக் காட்டின. இனி சிம்புவை இப்படியும் பார்க்கலாமா? 


 
எந்த திட்டமிடலும் என்னிடம் இல்லை. கௌதம் மேனன் முதலில் ‘சுராங்கனி’ என்ற கதையைத் தான் எனக்குச் சொன்னார். ஒரு இளைஞன் ரவுடியாகி பிறகு அவனே எப்படி டானாக மாறு கிறான் என்பதுதான் கதை. ஆனால் நான் பலமுறை விரும்பிப் பார்த்த காதல் படங்களில் ‘அலைபாயுதே’, ‘மின்னலே’ இரண்டுக்கும் தனியிடம் உண்டு. உங்களிடம் ‘மின்னலே’ மாதிரி ஒரு காதல் கதையைத்தான் எதிர்பார்த்தேன் என்று கௌதமிடம் சொன்னேன். எனது எண்ணத்தைப் புரிந்துகொண்டு உடனே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கதையை எழுதினார். என் வாழ்க்கையில் சில பக்கங்களை நினைவுபடுத்தியதும் அதில் ஒன்றிப்போனேன். அதேபோல ‘வானம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பைப் பார்த்தபோது அந்தப்படத்தில் ‘கேபிள் ராஜா’ என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. 

 

நிஜவாழ்க்கையில் நான் என்ன செய்வேனோ அதையே அந்த கேரக்டரும் செய்தது. அதனால் அந்தப் படத்தில் விரும்பி நடித்தேன். எனது இமேஜை விட எனது ரசிகர்களை நான் நடிக்கும் படங்கள் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக நடிப்புக்குத் தீனிபோடும் கதைகளை தேடிப்பிடித்து நடிக்க வேண்டும் என்றோ தேசியவிருது கிடைக்க வேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. நான் எவ்வளவுதான் இயல்பாக நடித்தாலும், நன்றாக நடித்தேன் என்று யாரும் எழுதப்போவதில்லை. எனது ஒரே பலம் எனது ரசிகர்கள் மட்டும்தான். அவர்கள் சொல்வதுதான் எனக்கு வேதவாக்கு. 



‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கார்த்திக் கதாபாத்திரத்தின் குணங்கள் சிம்புவுடன் எவ்வளவு ஒத்துப்போகும்? 


 
கார்த்திக் கேரக்டரின் அத்தனை மென்மை, உண்மை, முரட்டுத்தனம், அப்பா, அம்மாவிடம் இருக்கும் பணிவு, காதலியிடம் காட்டும் துணிவு எல்லாமே எனது குணங்கள். அதனால்தான் அந்தக் கேரக்டரில் என்னால் அத்தனை ஒன்றிப் போக முடிந்தது. ஆனால் சிம்பு என்றால் வம்பு என்று இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். என் நண்பர்களிடம் கேளுங்கள், என் பெற்றோரிடம் கேளுங்கள், என் தங்கையிடம், தம்பியிடம் கேளுங்கள், என் வீட்டு ஊழியர் களிடம் கேளுங்கள்..அவர்கள் சிம்பு என்றால் அன்பு என்று சொல்லுவார்கள். 



உங்கள் ‘லவ் ஆன்தம்’ எந்த கட்டத்தில் இருக்கிறது? 

 
சர்வதேச பாப் இசைப் பாடகர் ஏகான் வந்து பாடிக்கொடுத்து விட்டார். இன்னும் அதில் சில இறுதி கட்ட வேலைகள் இருக்கின்றன. அவற்றை முடித்ததும், அதை எப்போது வெளியிட வேண்டும் என்று என் மனம் சொல்கிறதோ அப்போது வெளியிடலாம் என்ற முடிவில் இருக்கிறேன். 



உங்களையும் அஜித்தையும் இணைத்த புள்ளி எது? 


 
ஒரு மாஸ் ஹீரோவுக்கு இன்னொரு பிரபலமான ஹீரோ பரம ரசிகனாக இருக்கமுடியுமா என்ற சந்தேகத்தில் கேட்கிறீர்கள். நான் முதலில் சினிமா ரசிகன். அதன்பிறகே நடிகன், ஸ்டார் எல்லாம். ரஜினிக்குப் பிறகு என்னை கவர்ந்த ஆளுமை அஜித். எனது பள்ளி நாட்களில் அப்பா இயக்கி நடித்த ‘மோனிஷா என் மோனாலிசா’ படம் வெளியானது. ஆனால் அதேநாளில் வெளியான ரஜினி படத்தை நண்பர்களுடன் முதல்நாள் முதல் ஷோ விசிலடித்து பார்த்திருக்கிறேன்.



 நான் நடிகனாக இருந்தாலும் எனது படங்களை நானே எப்படி விசிலடித்து பார்ப்பது? ரசிகன் சிம்பு விசிலடித்து படம்பார்க்க ரஜினிக்குப் பிறகு அந்த இடத்தில் அஜித் வந்து சேர்ந்ததில் ஆச்சரியமில்லை. காரணம் நிஜவாழ்விலும் அஜித் ஹீரோவாக இருக்கிறார். அவரது நல்ல குணமே இன்னும் அவர் மீதான ஈர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. அஜித்தை எனது இன்னொரு வயதில் பார்ப்பதுபோலவே எனக்குத் தோன்றுகிறது. நான் இப்படிச் சொல்வதால் அண்ணன் விஜயை எனக்கு எதிரியாக்கி விடாதீர்கள். அவர் மீது எப்போதும் மரியாதை கொண்டவன் நான். 



அஜித் உங்களுக்குக் கொடுத்த அட்வைஸ்? 

 
அவர் வலிந்து யாருக்கும் அறிவுரை சொல்லமாட்டார். நாமே இதை யோசிக்காமல் விட்டு விட்டோமே என்று நறுக்கென்று ஆலோசனை சொல்லுவார். எனக்கு ஒன்றைச் சொன்னார். “உனக்கென்று இருக்கும் இடத்தை யாரும் அபகரிக்க முடியாது. கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்திருக்கிறாய். அதனால் உழைப்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் யோசிக்காதே. கவனம் சிதறவிடாதே” என்றார். எனக்கு ஒரு அண்ணன் இருந்து தலையில் கொட்டி சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. 

 

ஹன்சிகாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? 

 
ஹன்சிகாவிடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரிடம் இருக்கும் இயல்பு. பாசிட்டிவ் குணம், மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற இளகிய மனம். இவையெல்லாம்தான். 


நீங்களும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடிப்பது பரபரப்பாகியிருக்கிறதே? 


 
இணைந்து நடிக்கும் முன்பு, ரசிகர்களும் மீடியாவும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற குழப்பம், எனக்கு நயன்தாராவுக்கு, இயக்குநர் பாண்டிராஜூக்கு இருந்தது. ஆனால் நாங்கள் பயந்ததுபோல எதுவுமில்லை. 


ரசிகர்கள் உட்பட எல்லோருக்குமே வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன என்பது தெரிந்துவிட்டது. நான் அதிகம் பயந்தது ஹன்சிகாவின் தலையை உருட்டி விடுவார்களோ என்றுதான். எனக்கும் என் காதலுக்கும் கருணை காட்டிய அத்தனை ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. 


thanx - the hindu