Showing posts with label சினிமா நியூஸ். Show all posts
Showing posts with label சினிமா நியூஸ். Show all posts

Tuesday, August 03, 2010

ரஞ்சிதாவின் புதிய படம்-கோலிவுட் வி ஐ பி கள் கிலி

நடிகை ரஞ்சிதா என்றால் நாடோடித்தென்றல் என்றது ஒரு காலம்.
அமைதிப்படை அல்வாப்பார்ட்டி என்றதும் ஒரு காலம்.
இப்போதெல்லாம் ரஞ்சிதா என்றாலே நமது நினைவுக்கு வருவதே நித்யானந்தாவும்,கேமராவும்தான்.

கோடம்பாக்கத்தில் இப்போது எந்திரன் படத்துக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படுவது அடுத்து ரஞ்சிதா நடித்து வெளி வர உள்ள படமான ஓடும் மேகங்களே படம்தான்.
இந்தப்படம் எடுக்கப்பட்டு பல மாதங்கள் முடிஞ்சுது.வாங்க ஆள் இல்லாம பெட்டிக்குள்ள தூங்கிட்டு இருந்தது.


இப்போ நித்யாமேட்டரால மவுசு கூடிடுச்சு.ராவணன் படத்துல ஐஸ்வர்யாராய்க்குகூட அவ்வளவு கைத்தட்டல் கிடைக்களை.4 நிமிஷம் தலையை மட்டும் காமிச்ச ரஞ்சிதாவுக்கு ஏகப்பட்ட கைத்தட்டல்.பார்த்தாங்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்,
இப்போ அதை வாங்க ஒரே அடிதடி.

எப்படியும் படத்தை ஓட்டி விடலாம் என்ற தைரியம்.
சாப்ட்வேர் நிறுவன சேர்மனாக நடித்துள்ளார் ரஞ்சிதா.நாயகனும், நாயகியும் அவரது சாப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கும் சைபர் கிரைம் கிரிமினல்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை.இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளை அடிப்படையாக வைத்து இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார்.

நாயகனாக உதய், நாயகியாக ரோஷினி நடித்துள்ளனர்.
செழியன் என்பவர் இயக்குகிறார்.ஐயாவுக்கு அதிர்ஷ்டம் ஆசிரமத்தை பிய்த்துக்கொண்டு கொட்டப்போகிறது என சினிமா புலிகள் ஆரூடம் சொல்கிறார்கள்.


”பிரான்ஸ், ஜெர்மனி, தமிழ் நாடு என சர்வதேச அளவில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். ரஞ்சிதா கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது. படம் முழுக்க வருகிறார்” என்று படத்தின் டைரக்டர் கூறுகிறார்..


மலையாள பிட் படங்களுக்கு இணையான வசூலை இப்படம் தரும் என கோலிவுட்டில் பரபரப்பும்,எதிர்பார்ப்பும் உள்ளது.ஆனால் ஒரு முக்கிய செய்தி எல்லோரும் எதிர்பார்ப்பது போல் அவர்
கவர்ச்சியாகவோ,கிளாமராகவோ இதில் நடிக்கவில்லை.(சே,என்ன ஒரு பேடு ட்விஸ்ட்)


Sunday, August 01, 2010

பருத்தி வீரனை படுத்தி எடுத்த பெண்ணிய அமைப்புகள்

நடிகர் கார்த்தி சமீபத்தில் தினத்தந்தி இதழில் ஒரு பேட்டி அளித்தார்.அதில் நடிகை தமனாவுடன் காதலா? என கேட்டதுக்கு இல்லை வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்றார்.அத்துடன் விட்டிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.
வேலைக்குப்போகாத,வீட்டிலேயே இருக்குற அடக்கமான பெண்ணாக பார்க்கறோம் என்றார்.
அப்படியானால் வேலைக்கு போகிற பெண்கள் அடக்கமில்லாத பெண்களா? எனக்கேட்டு சில பெண்ணிய அமைப்புகளும்,மாதர் சஙங்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அவரது பேட்டியின் தொனி வீட்டிலேயே இருக்கும் பெண்கள் குடும்பத்துக்கு ஏற்றவர்கள்.வேலைக்கு போகிற பெண்கள் அடங்கமாட்டார்கள் என அர்த்தம் வருவதால் மாதர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


யாகாவராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு
 என வள்ளுவர் சொன்னது போல் லைம் லைட்டில் இருப்பவர்கள் சமூகம் தங்களை உற்று கவனிக்கிறது என்பதை உணர்ந்து எந்தக்கருத்தை சொல்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு 2 முறை யோசித்து பின் பேசுவது நல்லது.

ஏற்கனவே குஷ்பு கற்பு பிரச்சனையில் சிக்கி கோர்ட் கோர்ட்டாக அலைந்தார்.
வி ஐ பி கள் எப்போதும் ஜாக்கிரதையாக பேசுவது நல்லது.

Monday, July 26, 2010

சுஹாசினியா இப்படி நடித்தார்?திரை உலகம் அதிர்ச்சி


 http://www.manoranjanmovies.com/images/suhasini_laura_2.jpg


கடைசியாக உயிர் படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்த சங்கீதா சர்ச்சையில்
சிக்கினார்,சர்ச்சைக்கு காரணம் கணவனின் தம்பியை அடைய கணவனையே போட்டுத்தள்ளும் கேரக்டர்.அந்தப்படம் வந்த போது அதிர்ச்சி அலைகள் எழுந்தன.கண்டனங்கள் விழுந்தன.மாதர்சங்கங்கள் பொங்கின.
இப்போது அதே மாதிரி சர்ச்சையில் சிக்கியுள்ளவர் நடிகை சுகாசினி.இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக பெயர் எடுத்தவர்.கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நர்ஸ் கேரக்டரில்,சிந்துபைரவியில் பாடகியாக வாழ்ந்து காட்டியவர்.ஜெயா டி வி யில் ஹாசினி பேசும் படம் என நல்ல விமர்சனகர்த்தாவாகவும் பன்முகம் காட்டியவர்.இந்தியாவின் சிறந்த டைரக்டர் மணிரத்னத்தின் மனைவி.ராவணன் படத்தின் வசனகர்த்தா.

இவ்வளவு திறமைசாலி இப்போது  தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படும் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” எனும் படத்தில் சர்ச்சைக்குரிய
கேரக்டரில் நடிக்கிறார்.நந்திதாதாஸ் ஃபயர் படத்தில் நடித்தபோது எழுந்த
சர்ச்சை இப்போது கோடம்பாக்கத்தை ஆட்கொண்டுள்ளது.

இந்த வார குங்குமம் இதழ் கூட தன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.அப்படி என்ன கேரக்டர்?
தன் மகளின் காதலனை ஆசைப்படும் கேரக்டராம்.
அட ராவணா!