Showing posts with label சி என் என் ஐ பி டி வி. Show all posts
Showing posts with label சி என் என் ஐ பி டி வி. Show all posts

Tuesday, March 29, 2011

2 ஜி ஊழலை வைத்து பாமர மக்களை ஏமாற்ற முடியாது - கலைஞர் பரபரப்பு பேட்டி

http://aakayam.files.wordpress.com/2010/05/p42.jpg 

மு.க.ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவினர் ஒருமனதாக ஏற்பார்களா.. தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமையுமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

 
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி, சிஎன்என் ஐபிஎன் செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

 கூட்டணி தொடருமா?

1. 'தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?'

"அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் காங்கிரஸும், தமிழக அளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.


கருத்து மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம். அதாவது திட்டங்கள் தமிழகத்துக்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல
 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/DMK/kk.jpg

2. இந்தத் தேர்தலில் திமுக முன்பை விட குறைந்த இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதனால், தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியும் அமையும் என எடுத்துக்கொள்ளலாமா?

"அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
 

மேற்கு வங்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து, இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் மற்றும் வலதுசாரி கட்சிகள் எல்லாம் இடம்பெற்று அவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு உகந்தவாறு அரசு அமைக்கிறார்கள். 


அதைப் போல நாம் நம்புகிறேன், எண்ணுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருவேளை வோட்டிங் பேட்டன் என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEFWi8FjQK7IBzwutFtXcbwu0jzyfQvjGZzCOGtclejXmE6Ckabz4vTsiu1IS-8oQSl_fOkmE5GJRVUPGPes_BcpsjEPblZr7gFbZJKmlGJ7tIXuxrHAEQQ-8yjvMwiVSI68i9PZCjOEM/s400/thamalachi5.jpg
அரசியல் வாரிசு... 

3. "நீங்கள் 12-வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறீர்கள். உங்கள் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்கிறதா?"  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuVlJl-9r_GrzZtNHAq_zQ5kaCsjQuknb4M1bOUVHlugEeOQVP-CO-WS3K62zSaV9EnKyhQqsff_gUPKH9QTQlNS7qGZEhddq2xSUhpoCBYAnTelyuz2bUMufewXlTM0YFeNOIgBIeHFb/s1600/Niira-Radia_2.jpg
"எந்தக் கேள்விக்குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அண்ணா தலைமையில் ஓர் அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணாவால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அது கேள்விக்குறியாக ஆவதற்கு எந்தவித நியாயமும் இல்லை,"


4. "கட்சியில் உள்ள அனைவரும் ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வார்களா?"

"திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது, மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது.

மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத நிறுவனம் அல்ல. இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழக செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitf1lIIvaUKl-mWbHf1H3J4FY1l-jH92OjOUdf-tY0XrY3wHrYD3nSQnnsIEuUyPsfprOdBd5wgMY1f7vhx6XRmBS_t7U2UIYVWbfu2vj-Y9QGbCp-FWBFDu-ax0Y7aVLUYz67jkmDyJKH/s1600/2.jpg
குடும்ப அரசியல்...

5. குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "எனக்கு குடும்பம் இருப்பதால் பெரிய தொல்லை, என்னைப் புரிந்த வர்கள் குடும்ப அரசியல் நடத்துகிறேனா இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார் - யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNwmT9eeXLTQr9A7es5yrhwXzHw6nPvrB60VCWy7cs-ULUa__geGN8cwv5EltixuQWNn-jYEw2jdAniAiVgzeWUVQREFc-HsrjfIyNILsXSCB1OPoeTI1L7Bgvful1isw3VoI12xegOc8/s1600/kanimozhi2.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம்... 

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாகத்திடமும் விசாரிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்கட்சிகள் கூறுவது குறித்து?

"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.


இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு அதற்கு வருமான வரித்துறைக்கும் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை," 
 http://www.alaikal.com/news/wp-content/stalin-ma.jpg
7. 2ஜி விவகாரத்தால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதா?

 சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது பல்லுக்கு பல் இருகாதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்,