Showing posts with label சக்தி விகடன். Show all posts
Showing posts with label சக்தி விகடன். Show all posts

Monday, November 19, 2012

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் -2.`12.2012 முதல் 21.6.2013 வரை

பொதுப் பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்



நிகழும் நந்தன வருடம், கார்த்திகை மாதம் 17-ஆம் தேதி (2.12.12) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூச நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில்- ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில், காலை மணி 10:51-க்கு (சூரிய உதயம் புக) நாழிகை 12.71/2-க்கு விசாக நட்சத்திரம் 3-ஆம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகு பகவானும்; கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள். ஆற்றல்- சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும்தான். எந்த கிரகத்துடன் சேர்கிறார்களோ, எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ, எந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ... அதற்கு தகுந்தாற்போன்று... அதேநேரம், தனக்கென விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.
ராகுவால் ஏற்படப் போகும் பலன்கள்
வியாபாரச் சின்னமான தராசு குறியைக் கொண்ட சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால், பாரம்பரிய வியாபாரிகள் பாதிப்படைவார்கள். சுதேசிப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை குறையும். உணவு பதுக்கல் அதிகமாகும். விலைவாசி ஏற்றம் கடுமையாக இருக்கும். 7.6.13 முதல் 11.12.13 வரை சனியும் ராகுவும் யுத்தம் செய்வ தால் விமான விபத்து, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, விபத்துகள், பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன், ஈத்தேன், ஆர்கன் போன்ற மந்த வாயுக்கள் வெளிப்பட, அதனால் பாதிப்புகள் ஏற்படும். முடி உதிர்வது, நரைப்பதைத் தடுக்க புதிய மருந்து கண்டறியப்படும். முகச்சீரமைப்பு, இதய அறுவை சிகிச்சை துறை நவீனமாகும். மலை மற்றும் கடலோர நகரங்கள் பாதிப்படையும். தங்கத்தின் விலை 2013 ஜூன் மாதத்திலிருந்து குறைய வாய்ப்பு இருக்கிறது.
மீண்டும் வளைகுடா நாடுகள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பும். சமூக எதிர் நடவடிக்கை கும்பல்கள் புதுத் தாக்குதலை நடத்தும். போதை மருந்து, தங்கம் கடத்தல் அதிகரிக்கும். வன்முறையாளர்களைத் தடுக்க கடும் சட்டம் வரும். மத்தியில் கூட்டணி மாறும். ஆட்சியாளர்கள் ஆட்சியைத் தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும். அனைத்து துறைகளிலும் பெண்கள் கை ஓங்கும். பெண் சாதனையாளர்கள் அதிகரிப்பார்கள். அதேநேரம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரிக்கும். பாமர மக்கள் பயனடையும் வகையில் புது சட்டதிட்டங்கள் உருவாகும். சாதாரணமானவர்களும் பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு மக்கள் அடிமையாவார்கள். உலகப் பொருளாதார நிலை சற்றே உயரும். அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டில் அதிக முதலீடு செய்வார்கள். ஐ.டி. நிறுவனங்கள் சரியும். வங்கிகளில் வராக்கடன்களை வசூலிக்க சட்டம் கடுமையாகும். அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். புதிய கனிம- கரிம வளங்கள் கண்டு பிடிக்கப்படும். ராணுவத்தில் புதிய ஏவுணைகள் சேர்க்கப்படும். காடுகள் சேதமடையும்.
அயல்நாடுகளைப் போன்று இந்தியாவிலும் நவீனமான பெரிய கட்டடங்கள் உருவாகும். பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். கம்ப்யூட்டர், ஆடியோ- வீடியோ சாதனங்களின் விலை வீழ்ச்சியடையும். செங்கல், சிமென்ட், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சில கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். பாலியல் சம்பந்தமான புதிய நோய்கள் உருவாகும். அவற்றுக்கான மருந்துகளும் கண்டறியப்படும். அணைக்கட்டுகள் உடையும். ஷேர் மார்க்கெட், தங்கத்தின் விலையில் ஏற்ற-இறக்கம் இருக்கும். வெள்ளி விலை உயரும். தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு உண்டாகும். முக்கிய தீவிரவாதிகள் பிடிபடுவார்கள். திரைத்துறை வளர்ச்சி அடையும்.
கேதுவால் ஏற்படப் போகும் பலன்கள்
கேது பகவான் சுக்கிரனின் ஸ்திர வீடான ரிஷப ராசியை விட்டு விலகி சர வீடான மேஷ ராசியில் அமர்வதால், பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் பாதிப்படையும். நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும். புதிய நகரங்கள் உருவாக்கப்படும். பத்திரப் பதிவுத் துறையில் போலிகளைத் தடுக்க சட்டம் வரும். கூட்டுக் குடும்பங்கள் உடையும். மக்கள் மனதில் தன்னம்பிக்கை குறையும். நிம்மதி தேடி புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். ஆன்மிகத் தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். பழைய கோயில்களில் புதையுண்டிருக்கும் மர்மங்கள் வெளி வரும். யோகாசனம், மூலிகை மருத்துவம் தழைக்கும். விபத்துகள் அதிகரிக்கும். காலபுருஷனின் முதல் வீட்டில் கேது அமர்வதால் ஒற்றைத் தலைவலி, மூளைக் காய்ச்சல் அதிகரிக்கும். விநோதமான முக அமைப்பில் உள்ள குழந்தைகள் அதிகம் பிறக்கும். ஈகோ, சந்தேகத்தால் விவாகரத்து அதிகரிக்கும். பூமி வெடிப்பால் நிலச்சரிவு அதிகரிக்கும். பாகப்பிரிவினை, சொத்துத் தகராறு ஆகியனவும் அதிகமாகும்.
மாணவர்களுக்கு தேர்வு முறைகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும். கல்வி நிறுவனங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவற்றின் தரம் மேம்படுத்தப்படும். நவீனரக க்ரேன், வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட் களின் உற்பத்தி அதிகரிக்கும். உண்ணாவிரதம், கடை
அடைப்பு மற்றும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே அதிகமாக நடக்கும்.
ராகு கடந்து செல்லும் பாதை
2.12.12 - 2.2.13 வரை விசாகம் 3-ல்
3.2.13 - 6.4.13 வரை விசாகம் 2-ல்
7.4.13 - 6.6.13 வரை விசாகம் 1-ல்
7.6.13 - 8.8.13 வரை சுவாதி 4-ல்
9.8.13 - 11.10.13 வரை சுவாதி 3-ல்
12.10.13 - 11.12.13 வரை சுவாதி 2-ல்
12.12.13 - 13.2.14 வரை சுவாதி 1-ல்
14.2.14 - 17.4.14 வரை சித்திரை 4-ல்
18.4.14 - 21.6.14 வரை சித்திரை 3-ல்
கேது கடந்து செல்லும் பாதை
2.12.12 - 2.2.13 வரை கார்த்திகை 1-ல்
3.2.13 - 6.4.13 வரை பரணி 4-ல்
7.4.13 - 6.6.13 வரை பரணி 3-ல்
7.6.13 - 8.8.13 வரை பரணி 2-ல்
9.8.13 - 11.10.13 வரை பரணி 1-ல்
12.10.13 - 11.12.13 வரை அசுவனி 4-ல்
12.12.13 - 13.2.14 வரை அசுவனி 3-ல்
14.2.14 - 17.4.14 வரை அசுவனி 2-ல்
18.4.14 - 21.6.14 வரை அசுவனி 1-ல்
பரிகாரம்
மூளை, முயற்சி, முனைப்பு, தன்மானம், உணர்ச்சி கிரகமான செவ்வாயின் மேஷ வீட்டில் கேது அமர்வதால் ஜாதி- மதப் பற்றை விட்டுவிட்டு நாட்டுப் பற்று, மொழிப் பற்றை வளர்த்துக்கொள்வோம். உணவு, உடை, உல்லாசம், கலைக்கு உரிய கிரகமான சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால் நவீன உடைகள் அணிவதை தவிர்த்து பாரம்பரிய உடைகளை அணிவதுடன் கலப்படமில்லா பாரம்பரிய உணவுகளையும் உட்கொள்வோம்.


1.
மேஷம்


ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார் ராகு. திறமைகள் வெளிப்படும். வீண் விவாதம், மன உளைச்சல்கள் விலகும். எந்த விஷயத்திலும் சுயமாக முடிவெடுங்கள். தம்பதியர் இடையே சந்தோஷம் நிலைக்கும். 7-ஆம் வீட்டில் ராகு அமர்வதால் மனைவியுடன் சிறு விவாதங்கள் ஏற்படும். அதைப்  பெரிதுபடுத்தவேண்டாம். மனைவிக்கு ரத்த அழுத்தம், கர்ப்பப்பை கோளாறு வந்து நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வாய்க்கும். அரசு வேலை விரைந்து முடியும்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் யோகாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். ராகு, தமது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால், வாகனங்களை கவனமாக இயக்கவும். வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சகோதர வகையில் கருத்துமோதல்களும் வந்துபோகும். வீடு- மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும். சொத்து சேரும். வழக்கில் வெற்றி, பழைய நண்பர்கள்- உறவினர்களால் ஆதாயம் உண்டு. நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மதிப்பு கூடும். ஜாமீன், காரண்டி கையெழுத்துக்கள் போட வேண்டாம். கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் விலகும். மாணவர்களுக்கு விளையாடும்போது சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில், அணுகுமுறையை மாற்றுவீர்கள். 7-ஆம் வீட்டில் ராகு வந்து அமர்வதால் கூட்டுத்தொழிலில் குழப்பங்களும், பிரிவுகளும் வரும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், கட்டட வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துகொள்ளுங்கள். பதவி உயரும். கணினித் துறையினருக்கு வேலை அதிகரித்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கலைத் துறையினர், போராடி வெற்றி பெறுவர்.
கேதுவின் பலன்கள்: கேது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால், சமயோசித புத்தியுடன் பேச வைப்பார். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்தும், கடன்கள் குறித்தும் கவலை எழும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். உங்களின் தன-சப்தமாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், பண வரவு உண்டு; திடீர் செலவுகளால் பணப்பற்றாக்குறையும் ஏற்படும். சாலைகளைக் கடக்கும்போது கவனம் தேவை. வாகனம் வாங்குவீர்கள்; வீடு கட்டுவீர்கள். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச்சல் வந்துபோகும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். குறிப்பாக, அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
சொத்து வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில், கொடுக்கல்- வாங்கலில் நிம்மதியுண்டு. பங்குதாரர்களுடன் விவாதங்கள் எழும்; பொறுத்துப் போகவும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக்கான வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். எனினும், மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி தெய்வ பலத்தாலும், கடின உழைப்பாலும் இலக்கை அடைய வைக்கும்.


2.
ரிஷபம்



ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் இடத்தில் ஆற்றலுடன் வந்து அமர்கிறார். குடும்பத்தார் பாசத்துடன் நடப்பர். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். மனைவியின் ஆரோக்கியம் கூடும். தந்தை வழி உறவினர் களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். வருமா வராதா என்றிருந்த பணம் வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய் வீர்கள். எதிரிகளிடத்தும் உங்களின் மதிப்பு உயரும். பயணங்கள் திருப்தி தரும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் அஷ்டம - லாபாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்கள் உதவுவர். தடைப்பட்ட கல்யாணம் கூடிவரும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். புது வேலை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். 14.2.14 முதல் 21.6.14 வரை, உங்களின் சப்தம-விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், மறைமுக எதிர்ப்புகள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வீடு- மனை வாங்குவீர்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். கட்டடப் பணிகளைத் தொடர பணம் கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் கைகூடும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவியரின் நினைவாற்றல் பெருகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும் அரவணைப்பும் கிட்டும்.
வியாபாரத்தில் புது யுக்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். வெளிநாட்டு நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில், தொந்தரவு தந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். கணினித் துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய வாய்ப்பு தேடி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: கேது இப்போது 12-ல் சென்று அமர்கிறார். உங்களின் அகமும் முகமும் மலரும். தயக்கம், முன்கோபம், விரக்தி விலகும். ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். தடைப்பட்டிருந்த மகனின் திருமணம் முடியும். உங்களுக்கான மருத்துவச் செலவுகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படினும், ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் வேனல் கட்டி, கண் எரிச்சல் வரலாம். வேலை அதிகரிக்கும். சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். அரசு காரியங்கள் நல்லவிதமாக முடியும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  உங்கள் ராசிநாதனும் - சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கௌரவ பதவி தேடி வரும். கேது, தமது சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், சுற்றியுள்ளவர்களின் பலம்- பலவீனம் அறிந்து செயல்படுங்கள். தூக்கம் குறையும். குடும்பத்தில் சச்சரவு எழும். கையிருப்பு கரையும். பயணங்கள் அதிகரிக்கும். வேற்றுமொழி, இனத்தவரால் ஆதாயம் உண்டு. சொந்த  ஊரில் செல்வாக்கு உயரும்.
பிரபலங்களின் அறிமுகத்தால் சில தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில், பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சம்பளம்- பதவி உயர்வு உண்டு.
மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களுக்கு அதிரடியான முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்.



3.
மிதுனம்


 
ராகுவின் பலன்கள்: 2.12.12 முதல் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார் ராகு. 5-ஆம் இடம் ராகுவுக்கு உகந்ததல்ல என்றாலும், உங்கள் யோகாதிபதி சுக்கிரன் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார்.
சச்சரவு எழுந்தாலும், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம்  நீடிக்கும். புத்தி ஸ்தானமான 5-ல் ராகு அமர்வதால், மற்றவர்களை சந்தேகத்துடன் பார்ப்பீர்கள். முடிவுகளில் தெளிவில்லாத நிலை, இனம்புரியாத கவலைகள் ஏற்படலாம். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். சொத்து தாமதமாகவோ குறைவாகவோ வந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சப்தம-தசம ஸ்தானாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில், 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடனாகக் கொடுத்த தொகை கைக்கு வரும். பெரிய பதவி, கல்வியாளர்களின் நட்பு, விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை எழலாம். உத்தியோகத்தில் இடமாற்றங்களும், வேலைச்சுமையும் இருக்கும். ராகு, தமது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் அலைச்சல், பிள்ளைகளால் செலவு கூடும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உங்களின் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் சொத்து வாங்குவது- விற்பதில் இழப்பு வரும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவர். விபத்து ஏற்படலாம். கமிஷன், புரோக்கரேஜ் மூலம் திடீர் பண வரவு உண்டு. மகனின் கல்வி, வேலை தொடர்பாக நல்ல நிறுவனத்தில் வாய்ப்பு கிட்டும். குடும்பப் பிரச்னைகளில் அறிவுபூர்வமாக செயல்படவும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கூடிவரும். மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண்கள் மற்றும் போட்டிகளில் பரிசு-பாராட்டுக்களால் மகிழ்ச்சி உண்டு. உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகள், விமர்சனத்தைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். கடையை நவீனமாக்குவீர்கள். இரும்பு, உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினருக்கு சம்பள உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு நல்ல நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: கேது உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் வந்து அமர்கிறார். பணம் சேரும்; கடன் அடைபடும். வீட்டில் சுபகாரியங்கள் கூடிவரும். வேலையில் இருந்தாலும் சிறு முதலீட்டில் வியாபாரம் துவங்கவும் முயற்சிப்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பை சரியாகப் பயன்படுத்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வீடு கட்டும் பணி பூர்த்தியாகி புது வீட்டில் குடிபுகுவீர்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு விஷயம் சாதகமாகும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும். கௌரவ பதவியில் அமர்வீர்கள். உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் - விரயாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். திருமண முயற்சி பலிதமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. ரசனைக்கு ஏற்ற வீடு- வாகனம் அமையும். கேது, தமது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், வழக்கு நெருக்கடிகள் நீங்கும்.  சொந்த தொழில் தொடங்குவீர்கள்.
புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில்... ராகு உங்களை பின்னோக்கி இழுத்தாலும், கேதுவின் ஆதரவால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.


4.
கடகம்


ராகுவின் பலன்கள்: ராகு பகவான், 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் வந்து அமர்கிறார். 5-ஆம் வீட்டை விட்டு ராகு விலகுவதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம், நடந்து முடியும்.
தாம்பத்தியம் இனிக்கும். உங்களின் குடும்பப் பிரச்னைக்குக் காரணமானவர்களை விலக்குவீர்கள். வழக்கு சாதகமாகும். விலகிப்போன நண்பர்கள்- உறவினர்கள், இனி வலிய வந்து உறவாடுவர். ராகு 4-ல் அமர்வ தால் தாயாருக்கு ரத்த அழுத்தம், நரம்புக்கோளாறு ஏற்படலாம். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: சஷ்டம-பாக்யாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால், இழுபறியான வேலைகள் முடிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு- மனை யோகம், மகனுக்கு வேலை, மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கிக் கடன் கிடைக் கும். ராகு 7.6.13 முதல் 13.2.14 வரை தமது சுய நட்சத்திரமான சுவாதியில் செல்வதால், தாயாரின் உடல்நிலை பாதிக்கும். சிறு விபத்து கள் நிகழலாம். புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. சிலர், வீடு மாற வேண்டியது வரும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் - தசம ஸ்தானாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில், 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் செலவுகள் கட்டுப்படும். சொத்துச் சேர்க்கை, உத்தியோகத்தில் உயர்வு உண்டு. சகோதர-சகோதரிகளுடனான மனக்கசப்பு நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.  கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். லேசாக தலைச்சுற்றல் வரும் என்பதால், மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை.
கன்னிப்பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வர். மாணவர்கள் உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவர். அரசியல் வாதிகளுக்கு, கௌரவப் பதவிகள் தேடிவரும். வியாபாரத்தில், ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் கறார் தேவை. உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரியை விமர்சிக்கவேண்டாம். கணினித் துறைனருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
கேதுவின் பலன்கள்:  கேது 10-வது வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு பதற்றம், வேலைகளில் அலைச்சல் உண்டு. வி.ஐ.பி-கள் ஆதரிப்பர். மூத்த சகோதரருடனான கருத்து மோதல்கள் விலகும். குடும்பத்தில் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் உண்டு.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் யதார்த்தமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். சுக லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர் உதவுவர். வேலை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். திருமணம் கூடிவரும். மூத்த சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. கேது தமது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் பணவரவு உண்டு. திடீர் செலவுகளும் உண்டு. உத்தியோகத்தில் எதிர்ப்புகளும் இடமாற்றமும் இருக்கும். சொத்து வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.
வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியது வரும். விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசாங்க வரிகளை முறைப்படி செலுத்திவிடுங்கள். பங்குதாரர்கள் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சின்னச்சின்ன அவமானங்களைச் சந்திக்க வேண்டியது வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி ஓய்வெடுக்க முடியாதபடி உங்களை கசக்கிப் பிழிந்தாலும், இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரியவைப்பதாக அமையும்!


5.
சிம்மம்


ராகுவின் பலன்கள்: ராகு பகவான், 2.12.12 முதல் 21.6.14 வரை, உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால், எதிலும் வெற்றி உண்டாகும். கொஞ்சம் கொஞ்சமாக கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் மதிப்பு கூடும். தாம்பத்தியம் இனிக்கும்.
வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குழந்தை பாக்கியம் கிட்டும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகளுக்கும் நீங்கள் எதிர்பார்த்தது போன்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு கூடிவரும். சிலர், வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலன் மேம்படும். வீண் பயம், கனவுத் தொல்லைகள் நீங்கும். இளைய சகோதரரிடம் மனஸ்தாபம் வந்தாலும் பாசம் குறையாது.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும்-அட்டமாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வ தால் பயம், கவலை விலகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். நிரந்தர வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நாடாளுவோர் அறிமுகமாவர். மகளுக்குத் திருமணம் முடியும். ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வ தால், தைரியமாக முடிவெடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரம் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.                       உங்களின் சுகாதிபதியும்-பாக்கியாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் குடும்ப வருமானம் உயரும். பழைய சொத்து வந்துசேரும். மீதிப்பணம் தந்து சொத்தை கிரயம் செய்வீர்கள். புதிய பொறுப்புகள், பதவிகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவர். கன்னிப் பெண்கள் பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடர்வார்கள்.அரசியல்வாதிகள், ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில், புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். ஷேர், கமிஷன், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களை அலைக்கழித்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். கணினித் துறையினருக்கு அயல்நாடு செல்ல வாய்ப்பு அமையும். கலைஞர்களுக்கு, பெரிய நிறுவனங் களில் வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: கேது இப்போது ராசிக்கு 9-ஆம் இடத்தில் வந்து அமர்வதால், வேலைச்சுமை குறையும். குடும்பத்தில் குழப்பம் அகலும். மூத்த சகோதரர் உதவு வார். இளைய சகோதரியின் திருமணத்தை சிறப்பாக முடித்து வைப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சம்பளம்- பதவி உயர்வு உண்டு. 9-ஆம் இடத்தில் கேது அமர்வதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாயுத் தொந்தரவால் லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். உங்கள் திருதிய - ஜீவன ஸ்தானாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் தைரியமாக முடிவெடுப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் உதவுவர். வீடு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.06.14 வரை செல்வதால் பூர்வீகச் சொத்தை போராடி பெறுவீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்
களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.  பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில், கேது அலைக்கழித்தாலும் ராகுவின் அனுக்கிரகம் அதிரடி முன்னேற்றத்தைத் தரும்!


6.
கன்னி


ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். செலவுகள் கூடும். வேலைகள் தடைப்பட்டு முடியும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், பேச்சில் கவனம் தேவை. முன்கோபத்தைத் தவிர்க்கவும். கண், காது, பல் வலி வரலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுக்க வேண்டாம். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் மற்றொரு மருத்துவரையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். புது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடனான மனக் கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணம் இனிதே முடியும். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் கடனை திருப்பித் தருவர்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சுக-சப்தமாதி பதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வீடு களைகட்டும். சிலர், சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். ராகு தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் ஆரோக்கியம் பாதிக்கும். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். பார்வைக் கோளாறு வந்துபோகும். உங்களின் திருதிய -அஷ்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் நிலம், வீடு வாங்குவது- விற்பதில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். மின்சார சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. பத்திரங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வழக்குகளில் இழுபறி ஏற்படும். கன்னிப் பெண்களுக்கு அலட்சியம், பயம் விலகும். நகைகளை கவனமாகக் கையாளுங்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள்.
வியாபாரத்தில், புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், மோதல்போக்கு மறையும். புதிய பதவி வாய்க்கும். கணினி மற்றும் கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
கேதுவின் பலன்கள்: கேது இப்போது உங்களின் ராசிக்கு 8-ல் வந்தமர்கிறார். அலைச்சல், பயம் ஏற்படும். சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். மனைவியுடன் விட்டுக்கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் பொறுமை அவசியம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் விரய ஸ்தானாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபச் செலவுகள்  உண்டு. வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம். உங்களின்  தன- பாக்கியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடிவரும்.
கணவன்- மனைவிக்குள் மனக்கசப்புகள் நீங்கும். வீடு- வாகனம் சேரும். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், தூக்கம் குறையும். விபத்துகள் வந்து நீங்கும். சிலர், உங்கள் மீது வீண் பழி சுமத்தினாலும் கலங்காதீர்கள். எதிர்பாராத தொகை கைக்கு வரும்.
கேது 8-ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். மற்றவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிக வேலையின் காரணமாக வீட்டுக்கு தாமதமாகச் செல்ல நேரிடும் ஆதலால், குடும்பத்தில் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்களின் பலம்- பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்!



7.
துலாம்


ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் பிரச்னைகள் குறையும். இடம் அறிந்து பேசும் கலையை அறிவீர்கள். செலவுகள் சுருங்கும். பண வரவு உண்டு.ஏற்கெனவே, உங்கள் ராசிக்குள் சனியும் இருப்பதால் நீரிழிவு, யூரினரி இன்ஃபெக்ஷன், ஹார்மோன் கோளாறு மற்றும் தலை, தோள் பட்டையில் வலி வந்துபோகும். முன்கோபம், சிறு வேலைகளிலும் சிக்கல் ஏற்படும். எனினும், உங்கள் ராசிநாதனான சுக்கிரனுக்கு ராகு நட்புக் கிரகமாக வருவதால், அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதிய- சஷ்டமாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் தடைகள் நீங்கும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏமாற்றங்கள், இழப்பு களைச் சந்திக்க நேரிடும். சிலர் வீடு மாறுவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள். ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உங்களின் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால், எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்னையைத் தீர்க்க புது வழி கிடைக்கும். மனைவிக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் வந்துபோகும். ராசியில் நிற்கும் ராகு சலிப்பை உண்டாக்குவார். வீண் பகை, மனக் கசப்புகள் வரும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். அயல்நாட்டு பயணங்கள் தேடிவரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கன்னிப் பெண்கள், முக்கிய விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளவும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். மாணவர்களுக்கு, போட்டிகளில் பரிசு- பதக்கம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையைப் பற்றி குறைகூற வேண்டாம்.
வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்க்கவும். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடியுங்கள். பங்குதாரர்களை அனுசரித்துப் போகவும். புது ஆர்டர்களை போராடி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். கணினித் துறையினருக்கு சம்பள உயர்வுடன் புதிய வாய்ப்புகள் வரும். கலைத் துறையினரின் திறமைக்கேற்ற நல்ல வாய்ப்புகள் வந்துசேரும்.
கேதுவின் பலன்கள்: கேது இப்போது ராசிக்கு 7-வது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். வீண் பயம் விலகும். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து போகவும். சொத்துப் பிரச்னை, பங்காளி சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம். அரசு காரியங்களில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை எவரிடமும் சொல்ல வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் லாபாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால், முன்கோபத்தால் புது பிரச்னைகள் உருவாகும். புது முதலீடுகள், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் வேண்டாம். உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவர். வீடு- மனை, வாகனம் வாங்குவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். கேது, தனது சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். உறவினர்கள் இடையேயான மனஸ்தாபங்கள் விலகும். 7-ல் கேது அமர்வதால், கூட்டுத்தொழிலை தவிர்க்கவும். வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறன் கூடும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, நீங்கள் எதிர்நீச்சலில் வெற்றி பெற்று சாதிக்கவைப்பதாக அமையும்.


8.
விருச்சிகம்


ராகுவின் பலன்கள்: ராகு 2.12.12 முதல் 21.6.14 வரை ராசிக்கு 12-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால் நோய் நீங்கும். சந்தோஷம் கூடும். உங்களை அலட்சியப்படுத்தியவர்களும் வலியவந்து பேசுவர். வேலைகள் உடனடியாக முடியும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். வர வேண்டிய பணம் தாமதமின்றி வரும். வீட்டில் தொடர்ந்து நல்லது நடக்கும். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கைக்குக் கிடைக்கும்.      

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தன-பூர்வ புண்ணியாதிபதியான விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணங்கள், பூர்வீகச் சொத்து, ஷேர் மூலம் பணம் வந்து சேரும். மகளின் திருமணம்; மகனுக்கு வேலை... எல்லாம் நல்லபடியாக முடியும். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை ராகு செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடிவரும். உங்கள் ராசி நாதனும் - சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். திடீர் யோகம் உண்டாகும். வீடு- மனை வாங்குவது, விற்பது லாபமாக முடியும். கடனை அடைப்பீர்கள். பிள்ளைகளை உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். தந்தையுடனான மனக் கசப்புகள் நீங்கும்; தாயின் உடல்நிலை சீராகும். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். கன்னிப்பெண்களின் மனம் தெளிவாகும்; வேலை கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவர். அரசியல்வாதிகள், தலைமையிடம் நல்ல பெயரெடுப்பீர்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகள் செய்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி லாபம் தரும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். கணினித் துறையினருக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கலைஞர்களுக்கு புகழ், வருமானம் உயரும்.
கேதுவின் பலன்கள்:  கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவர். பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பளம் உயரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரைகுறையாக நிற்கும் கட்டடப் பணியைத் தொடங்குவீர்கள்.   உங்களின் சப்தம-விரயாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ரசனைக்கேற்ற வீடு- வாகனம் அமையும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.  கேது, தனது சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், சிக்கல்கள் தீரும். எதிர்பாராத பணவரவு உண்டு. மகான்களிடம் ஆசி பெறுவீர்கள்.
கேது 6-ல் நிற்பதால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். புத்திசாலித் தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். மனைவி வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களை வாங்கிக் கொடுப்பீர்கள். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்தியோகத்தில் பதவி-சம்பள உயர்வு உண்டு.
இந்த ராகு-கேது பெயர்ச்சி, வாழ்வில் பல ஏற்றங்களைக் காண வைப்பதாக அமையும்!


9.
தனுசு


ராகுவின் பலன்கள்: ராகு 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசியின் லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும், பண வரவையும் தருவார். செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவர். உயர் கல்வியில் வெற்றி பெறுவர். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்னைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும்- சுகாதிபதியுமான விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும்; அவர் வழி உறவினர் மத்தியில் இருந்த மோதல்கள் விலகும். ராகு, தமது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விரயாதிபதியும் - பூர்வ புண்ணியாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். 11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும். குலதெய்வத்திடம் குழந்தைபேறு பொருட்டு வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். அரசியல்வாதிகள், இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். வியாபாரத்தில், போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடனான மோதல் போக்கு மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். பதவி - சம்பளம் உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு வேற்று மொழி வாய்ப்புகள் வரும்; சம்பள பாக்கியும் வந்துசேரும்.
கேதுவின் பலன்கள்:  கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் அலைச்சலும், செலவும் உண்டு. அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் அரசு காரியங்கள் விரைந்து முடியும். பணப் பற்றாக்குறை ஏற்படும். தந்தைக்கு நெஞ்சு வலி, வேலைச்சுமை வந்துபோகும். பிதுர்வழி சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சஷ்டம - லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் பண வரவு அதிகரிக்கும். புது வேலை அமையும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கௌரவ பதவிகள் தேடி வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். உறவினர் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். கேது, தனது சுய நட்சத் திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மூச்சுப் பிடிப்பு, ரத்தசோகை, சிறுநீர்ப் பாதையில் அலர்ஜி வரக்கூடும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
கேது 5-ஆம் வீட்டில் அமர்வதால் சொந்த ஊர் விஷயங்களில் அதிகம் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகை களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி - சம்பள உயர்வை கொஞ்சம் போராடி பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில் கேதுவால் ஞானமும், ராகுவால் வசதியும், நிம்மதியும் கிட்டும்.


10.
மகரம்



ராகுவின் பலன்கள்: ராகு 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்து அமர்கிறார். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. சுயதொழில் செய்யும் வல்லமை கிட்டும். உழைப்புக்கான நற்பலனை அடைவீர்கள். குல தெய்வத்தை மறக்காதீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதிய ஸ்தானாதிபதியும் - விரயாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால், தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால், உத்தியோகத்தில் இடமாற்றம் வேலைச்சுமை  உண்டு. எவரையும் நம்பி ஏமாற வேண்டாம். எவருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சுக - லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம், முதுகு, மூட்டு வலி வந்துபோகும். புது வேலை கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். ஒரு சொத்தை விற்றுவிட்டு வேறு சொத்து வாங்குவீர்கள்.           ராகு 10-ல் வருவதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். மகனின் திருமணம் சிறப்புற நடந்தேறும். கன்னிப்பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், தலைமையை அனுசரித்துப் போகவும்.
வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால்தான் லாபம் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தி, நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், முக்கிய ஆவணங் களைக் கையாளும்போது கவனம் தேவை. கணினித் துறையினருக்கு பதவி- ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு, புது வாய்ப்பு கதவை தட்டும்.
கேதுவின் பலன்கள்: கேது இப்போது உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், பக்குவம் கூடும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மகனை படிப்பு- வேலையின் பொருட்டு வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் அஷ்டமாதி பதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், மறைமுக எதிர்ப்பு கள் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவர். அரசாங்க வரிகளை உடனடியாகச் செலுத்துங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், இந்த காலகட்டத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பண உதவி, மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் மன இறுக்கம், வீண் டென்ஷன் வந்துபோகும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணம், நகைகளை கவனமாக கையாளுங்கள்.
கேது 4-ஆம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும்போது யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக்கொண்டு வீடு கட்ட தொடங்குவது நல்லது. வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பாராட்டு, பதவி உயர்வு உண்டு.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, தொலைநோக்கு சிந்தனையால் உங்களை வெற்றிபெற வைக்கும்!




11.
கும்பம்


ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு ராகுபகவான் இப்போது 9-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். செயல்களை எளிதில் முடிப்பீர்கள்.  தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சுபகாரியம் கூடி வரும். குழந்தை இல்லாதவர்க்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். கையில் பணம் புரளும். குலதெய்வக் கோயில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தன-லாபாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகுபகவான் செல்வதால் கல்யாணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் என வீடு களை கட்டும். பதவி தேடிவரும். நல்ல வேலை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். புது சொத்து வாங்குவீர்கள். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பம், செலவினங்கள் ஏற்படும். உடம்பில் இரும்புச்சத்து குறையும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கிய வேலையை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். சேவகாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 முடிய ராகுபகவான் செல்வதால் பயம், படபடப்பு வந்து செல்லும். உடன்பிறந்தோருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். சொத்து வாங்கும்போது கவனமாக இருங்கள்.  உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். ராகு 9-ஆம் வீட்டில் அமர்வதால் தந்தையின் ஆரோக்கியம் குறையும். பூர்வீகச் சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். மதிப்பு உயரும். வி.ஐ.பி-கள் நட்பாவர். பண உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். கன்னிப் பெண்களின் சோர்வு, களைப்பு நீங்கும். திருமணம் இனிதே முடியும். பாதியில் விட்ட கல்வியை தொடர்வீர்கள். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். போட்டியில் பரிசு கிட்டும். அரசியல்வாதிகள் மதிக்கப்படுவர்.   வியாபாரத்தில் சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். இரும்பு, பருத்தி, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் ஆதாயம் தரும். அரசு காரியத்தில் கவனம் தேவை. ராகு பகவான் 9-ல் நுழைவதால் உங்களின் மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி உயர்வு கிடைக்கும். வேலைச்சுமை குறையும். கணினித் துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும். கலைத் துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வந்துசேரும்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது 3-வது வீட்டில் அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் கூடும். சங்கடங்கள் தீரும். பணஉதவி கிடைக்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். தாயாரின் உடல்நிலை சீராகும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேதுபகவான் செல்வதால் மனைவிவழி உறவினர்கள் உதவுவர். அரசால் ஆதாயம் உண்டு. உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் உதவுவர். தந்தை வழி சொத்து வந்து சேரும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை கேது செல்வதால் தைரியம் பிறக்கும்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிநாட்டில் இருப்பவரால் ஆதாயம் உண்டு. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவுவர். வியாபாரத்தில். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவர். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். உயரதிகாரி பாராட்டுவார். வெளிநாட்டுத் தொடர்பு உடைய நிறுவனத்தில் இருந்து வாய்ப்பு வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
மொத்தத்தில், ராகுவால் முட்டுக்கட்டைகள் இருந்தாலும், கேதுவால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.


12.
மீனம்


ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 9-ல் அமர்ந்திருந்த ராகு பகவான் இப்போது, எட்டில் சென்று மறைகிறார். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். தம்பதிக்குள் சிறு விவாதம் ஏற்படும். ராகு 8-ல் அமர்வதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகுபகவான் செல்வதால் பணம் வரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். செலவு, வாகன விபத்து, மறைமுக விமர்சனம் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் எந்த விஷயத்தையும் போராடி முடிப்பீர்கள். எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். பித்தத்தால் தலைச்சுற்றல், வயிற்று வலி ஆகியன ஏற்படும். உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 முடிய திடீர் பணவரவு உண்டு. சொத்து வாங்குவது- விற்பது நல்லவிதமாக முடியும். மின் சாதனங்கள் வாங்குவீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள், பிதுர்வழி சொத்துப் பிரச்னை, பகை, ஏமாற்றம் ஆகியன வந்துபோகும். பிள்ளைகள், உயர்கல்வியில் தேர்ச்சி பெறுவர். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு மாறுவீர்கள். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். திருமணம் தடைப்பட்ட பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும். மாணவர்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்தவும். நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். அரசியல்வாதிகள் அவசர முடிவைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நயமாகப் பேசி பாக்கியை வசூல் செய்யுங்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிஷன் ஆகியன ஆதாயம் தரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பங்குதாரர்கள் இடையேயான கருத்து வேறுபாடு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். சலுகைகளுடன் பதவியும் உயரும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து வாய்ப்பு கிடைக்கும். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவர்.
கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 2-வது வீட்டில் நுழைகிறார். பல்வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். கையிருப்பு கரையும். மகளின் திருமணம் நடந்தேறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்துபோகும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்த்தவர் நண்பராவர். அரசியல்வாதிகள் உதவுவர். புது வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். கடனில் பாதியை அடைப்பீர்கள். உங்கள் சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் இளைய சகோதரர் ஆதரிப்பார். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமொழியினர் உதவுவர். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.06.14 வரை கேது செல்வதால் பணப்பற்றாக்குறை, டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்துபோகும். அடுத்தவருக்கு உதவுவதில் கவனம் தேவை. வழக்கில் அலட்சியம் வேண்டாம். கேதுபகவான் 2-ஆம் வீட்டில் அமர்வதால் பார்வைக் கோளாறு வரக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் கவனமாக இருங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.
இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்கள் திறமைகளை வெளிக் கொணர்வதுடன் ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.


 நன்றி - , சக்தி விகடன், 

Thursday, August 23, 2012

சனி தோஷம் நீங்க.... ( ஆன்மீகம்)

சனிக்கிரக தோஷம் நீங்க... பைரவருக்கு துலாபாரம்!

பலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்!
ன் உருக, அந்தப் பரவசத்தில் உள்ளமும் உருக, சித்தத்தில் சிவம் வைத்து நித்தமும் வழிபட்ட சித்த புருஷர்களது கனவில் ஒளி வடிவாகத் தோன்றி, தென்னாடுடையான் அருள்பாலித்த திருத்தலம் - என்.வைரவன்பட்டி.
காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். இங்கே, அருள்மிகு வளரொளி நாதராகக் கோயில்கொண்டிருக்கிறார் சிவனார். சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இப்படியரு நாமகரணம் இந்தச் சிவனாருக்கு. இங்கு அருளும் அம்மையின் திருநாமம்- ஸ்ரீவடிவுடைநாயகி.
பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம், நகரத்தார்கள் போற்றிப் பரவும் 9 ஆலயங்களில் முதன்மையானது என்கிறார்கள். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீபைரவ தரிசனம். அம்மையப்பனுக்கு அடுத்த பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப்படுகிறார்.


தேவாதிதேவர்களாலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றிருந்தான் சம்பகாசுரன். அவனை, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஸ்ரீபைரவ மூர்த்தி வதம் செய்தார். இதை நினைவுகூரும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில், சம்பகா சஷ்டி விழா இங்கே கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலில் ஸ்ரீவளரொளி நாதரும் ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர் (ஸ்ரீபைரவரையே வயிரவர், வைரவர் என்றெல்லாம் அழைப்பர்).



பிணி தீர்க்கும் பைரவ தீர்த்தம்!


ஸ்ரீபைரவர் மட்டுமல்ல, அவருக்கான வழிபாடுகளும் இங்கே விசேஷம்தான்! இந்தத் திருத்தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவர் சந்நிதிக்கு எதிரே உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீபைரவர் உருவாக்கிய தீர்த்தம் இது என்கின்றன புராணங்கள். இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்றும் போற்றுகின்றார்கள்.


ஸ்ரீபைரவர் சந்நிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இவையனைத்தையும் கட்டுப்படுத்தும் மூலவராக ஸ்ரீபைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.


குழந்தை வரம் அருளும் தெய்வ விருட்சம்!


தொடர்ந்து 3 புதன்கிழமை (அ) சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்குச் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்;  இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்கின்றனர். இந்த மரத்தடியில் தியானம் செய்வதை விருட்ச விசேஷம் என்பர்.


இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம். மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம் என்கிறார்கள்.


தோஷம் நீக்கும் துலாபாரம்!


ஸ்ரீபைரவருக்குப் பிடித்தமான உளுந்து, வெல்லம், பச்சரிசி ஆகியவற்றைத் துலாபாரம் செலுத்தி வழிபடுவதால், அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி, சனி தசை நடைபெறும் அன்பர்கள் சனிக் கிரக பாதிப்புகள் யாவும் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.


மேலும், படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து வழிபடச் செய்தால், விரைவில் அவர்களின் கல்வியறிவு மேம்படும்; பாலாரிஷ்ட தோஷம் முதலானவை நீங்கும் என்றும் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.


இரவில் தங்கி... உச்சிப்பொழுதில் தரிசனம்!


இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு ஸ்ரீவடிவுடையம்மன். மற்ற கோயில்களில் உள்ள அம்மன்களைவிட ஸ்ரீவடிவுடையம்மனின் காது பெரிது எனச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு ஸ்ரீவடிவுடையம்மனைப் பிரார்த்தித்து, அங்கேயே தங்கியிருந்து, மறுநாள் உச்சிப் பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபட, நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேறும்.


நித்யாக்னி பூஜை!


வளரொளி நாதர் அக்னி சொரூபராக இருப்பதால், வருடத்தின் 365 நாட்களும் இங்கே நித்ய அக்னி பூஜை நடைபெறும். இதில் கலந்து கொண்டு வழிபடுவதால் தீராத பீடைகளும் நோய்களும் நீங்கும்; திருமண தோஷங்கள் தவிடுபொடியாகும். அதேபோன்று, அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள இரண்டு பல்லி உருவங்களை வழிபடுவதன் மூலம் பில்லி தோஷங்கள் அகலுமாம். வள்ளி- தெய்வானை தேவியருடன் ஸ்ரீசண்முகநாதராகவும், ஸ்ரீசுப்ரமணியராகவும் இரண்டு சந்நிதிகளில் முருகப்பெருமான் இங்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீசண்டீஸ்வரர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.



பெரும்பாலும் சிவாலயங்களில் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகப்பெருமான் சந்நிதி யும் அமைந்திருக்கும். ஆனால், இங்கே இடப் புறத்தில் முப்பலிக் கருப்பர் அருள்கிறார். இவரை வணங்கி வழிபட, மன தைரியம் உண்டாகும்; உடல் பலம் பெருகும் என்கின்றனர். நாமும் வைரவன்பட்டி தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவரை வழிபட்டுப் பலன் பெறுவோம்.



நன்றி - சக்தி விகடன்

Sunday, September 04, 2011

சுமங்கலிப்பெண்கள் வேண்டுதலுக்காக மொட்டை அடிக்கலாமா? ( ஆன்மீகம் கேள்வி பதில்கள் )

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1. விநாயகருக்கு கோயில் கட்டும் விருப்பத்துடன், அதற்கான வாஸ்து பூஜை செய்து திருப்பணி துவங்கும் நாளில், விநாயகர் விக்கிரகம் திருடுபோய் விட்டது. எங்குதேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருப்பணிகளைத் தொடரலாமா? கோயிலில் புதிதாக ஒரு விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யலாமா?


திருப்பணியைத் தொடருங்கள். புது விநாயகர் விக்கிரகத்தை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்யுங்கள். கோயிலில் குடியிருத்த இறையுருவம் வேண்டும். கைக்கு எட்டியது நழுவினால், மற்றொன்றை பெற்றுச் செயல்படுவது சிறப்பு. வருங்காலச் சந்ததியின ருக்கு வழிகாட்டும் அறத்தை, இறையுருவத்தின் இழப்பைக் காரணம் காட்டி தவறவிட்டுவிடக் கூடாது. 

கோயில்கள் நடைமுறை என்பது, பொது அறத்தைப் போதிக்கும் மௌன குரு; ஒருவனை, பண்பட்ட குடிமகனாக வார்த்தெடுக்கும் திறன் கோயில்களுக்கு உண்டு. எனவே, இடையூறை எதிர்த்துச் செயல்படுங்கள். வெற்றி உண்டு.


2. நானும் என் கணவரும் (வயது 55) அம்மன் விரதங்களில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடித்து வழிபட விரும்புகிறோம். எந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்?


அலுவல்களை மறந்து அம்பாளை நாடும் எண்ணம் மனதில் முளைக்கும் வேளை, வழிபாட்டுக்கு உகந்தது. அம்பாளின் பெருமைகளை விளக்கும் புராணக் கதைகள், உலகை துயரத்தில் இருந்து விடுவிப்பதற்காக அவள் செயல்பட்ட நாள்- நேரம் ஆகியன எல்லாம், மனதில் ஆழமாகக் குடிகொண்டிருக்கும் அம்பாளை நினைவுகூரப் பயன்படுபவை. 
 
அம்பாளின் பெருமை சொல்லில் அடங்காது. உமாமகேச்வர விரதம், கிருத்திகா சோமவாரம், நவராத்திரி போன்ற விழாக்கள், அம்பாளின் நினைவைப் பசுமையாக வைத்துக்கொள்ள உதவும். அலைபாயும் மனதை அடக்கிவைக்கவும் பயன்படும். தவிர, நித்யமாக அவளை வழிபடும் நடைமுறையை ஏற்படுத்திக் கொண்டால், மனம் அசையாமல் அவளிடம் நின்று விடும். அது நம்மை நல்வழிப்படுத்தும். 
 
பண்டைய காலத்தில் பஞ்சாயதன பூஜையை நித்யமாக ஏற்று வந்தோம். சூரியன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடுவது பஞ்சாயதன பூஜை. பெருமாளிடம் மனம் லயித்தவர்கள், சாளக்கிராமத்தை நடுநாயகமாக வைத்து, மற்ற நான்கு தெய்வங்களை பரிவார தேவதையாக அமைத்து வழிபடுவார்கள். அதேபோல், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மற்ற தெய்வங்களையும் நடுநாயகமாக வைத்து வழிபடலாம். புராணங்கள், கதைகள், வரலாறுகள், கோயில் நடைமுறைகள், சிறப்புகள், சம்பிரதாயங் கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிலடங்கா வழிபாட்டு முறைகள் உண்டு.

ஆனால், நமது விருப்பத்தை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி, பிறப்பின் பலனை அடையச் செய்யும் பஞ்சாயதன முறையை ஸனாதன தர்மம் நமக்குப் பரிந்துரைக்கிறது. அது, நமக்குத் தேவையான பலனை அளிப்பதால், பஞ்சாயதனத்தை (தேவி பஞ்சாயதனம்) ஏற்று வழிபடுங்கள்; வெற்றிகள் கைகூடும்.


3. வீணையை வீட்டில் வைத்திருந்தால் விருத்தி கிடையாது என்கிறார்களே... அப்படியா?


வீணையை வீட்டில் வையுங்கள்; அதனால் விருத்தி ஏற்படும். வீணையில் அலைமகள் குடிகொண் டிருக்கிறாள். எனவே, அதை வைத்துக்கொள்வது சிறப்பு; வீடு, செல்வச் செழிப்புடன் விளங்கும் என்கிறது வேதம் (ச்ரியாவா எதத்ரூபம். யத்வீணா. ச்ரியமேவாஸ்மின்...).

   'வீணையை வாசி. ஐஸ்வர்யம் கொட்டும்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. கலைமகள், வீணையும் கையு மாகக் காட்சியளிப்பாள். ஸீமந்தோன்னயனத்தில் வீணையை வாசிப்பார்கள். தர்மசாஸ்திரமும், வீணை வாசிக்கச் சொல்கிறது. வேதம் அறிமுகம் செய்த வாத்தியம் அது. எனவே, வீணையை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

4. சில மாதங்களில், ஒரே நட்சத்திரம் இரண்டு முறை வருகிறது. அந்த மாதத்தில் பிறந்த நாள் வரும் நிலையில், ஜன்ம நட்சத்திரமாக எதை எடுத்துக் கொள்வது?

இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை எடுத்துக்கொள்வது சிறப்பு. சாஸ்திரமும் அதை ஏற்கும். நட்சத்திர மாதம் 27 நாட்களில் முடிவடையும். நாம் ஸெளரமானத்தை ஏற்கிறோம். ஒரு ராசியில் சூரியன் நுழைந்து மறு ராசியில் காலெடுத்து வைக்கும் நாள் வரை கணக்கிட்டு, ஒரு மாதமாக ஏற்கிறோம். 

இதன்படி, மாதங்களில் 29 நாளிலிருந்து 32 நாள் வரை வித்தியாசம் காணப்படுவதுண்டு (அதாவது, ஒரு மாதத்தில் 29 நாட்கள் வரும்; இன்னொரு மாதத்தில் 32 நாட்கள் இடம்பெறும்).

நாட்களின் அடிப்படையில் மாதத்தைக் கணக்கிட, 30 நாட்கள் எடுத்துக்கொள்வோம். ஸெளரமானம், நட்சத்திரமானம், ஸாவனம் - ஆகிய மூன்று அளவையில் இருக்கும் மாதங்களை... செய்யும் சடங்குக்கு ஏற்ப, பொருத்தமானதை தேர்ந்தெடுப் போம்.

உதாரணத்துக்கு... மகப்பேறு மாதத்தைக் கணக்கிடும்போது, நட்சத்திர மாதத்தை ஏற்போம். அங்கு ஸெளரமானமோ, ஸாவனமோ பொருந்தாது. ஸெளரம் 29-ல் இருந்து 32 வரை இருப்பதும், ஸாவனம் 30 நாளாக இருப்பதும் கணக்கிடுவதற்கு இடையூறாக இருக்கும். ஆகவே, அதற்கு நட்சத்திர மாதம்தான் பொருந்தும் என்கிறது ஜோதிடம்.

27 X 10 =  270 நாட்கள் தாண்டினால் மகப்பேறு நடைபெறுவது உண்டு. பத்து மாதம் சுமந்து பெற்றாள் என்கிற கோட்பாடு, நட்சத்திரமானத்துக்கு பொருத்தமாக இருக்கும். ஸெளரமானாலும் ஸாவனமானாலும் 30X10 = 300; 31X10 = 310 என்று தெளிவில்லாத காலத்தைக் குறிப்பிடும்.


ஓர் அயனம்- 6 மாதங்கள் (30 நாள் கொண்டது), ஒரு பருவ காலம், 2 மாதங் கள் ( அதாவது 60 நாள்கள்), ஒரு மாதம் (30 நாட்கள்), ஒரு பஷம் (15 நாள்), ஒரு நாள், ஒரு முகூர்த்தம் ஆகியவற்றைக் கூட்டினால்... அதாவது, 6 2 1 அரை மாதம் ஒரு நாள் மூன்றரை நாழிகை ஆகியவற்றைச் சேர்த்தால்...  9 மாதம், 16 நாள், 1 மணி, 24 நிமிடம் கழிந்தால்... குழந்தை வெளிவர ஆயத்தமாகிவிடும் என்று ஜோதிடம் தகவல் அளிக்கும் (அயனக்ஷணமாஸ...). 270 நாட்கள் நட்சத்திர மாதம்.அதையும் தாண்டும் மகப்பேறு, 300 நாட்களுக்கு முன்பே நிகழ்ந்துவிடும்.

இங்கு ஸெளரமோ நட்சத்திரமானமோ பொருந்தாது ஸாவனம்தான் பொருந்தும் என்பது கண்கூடு. அதுபோல், ஸெளரத்தை அளவுகோலாக வைத்து பிறந்த நாளைக் குறிப்பிடும் முறையை நாம் பின்பற்றுவதால், 2-வதாக வரும் நட்சத்திர நாள், முழு வருஷம் வந்து விட்டது என்பதை ஏற்கும் வகையில் பொருத்தமாக இருக்கும். முதலில் வரும் நட்சத்திரத்தை ஏற்றால், நாட்களின் அடிப்படையில் வருஷம் முடியாமலும் இருக் கும். ஆகவே, 2-வதாக வரும் நட்சத்திரத்தை ஏற்பது சிறப்பு.


5. திருக்கோயில்கள் பலவற்றில், நீலோத்பல மலரை ஏந்தியவாறு காட்சி தருகிறாள் அம்பாள். இதற்கான தாத்பரியம் என்ன?



அலைமகள் கையில் செந்தாமரைப்பூ இருக்கும். கலைமகளோ வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள். இயற்கை யின் செல்வமான பூக்கள், இறைவன் ஆராதனைக்கு உகந்தவை. மென்மை யான மனமும் மென்மையான அணுகு முறையும் சேர்ந்து வாழும் நமக்கு சிறப்பை அளிக்கும்.

கவிஞர்கள், கண்களைப் பெருமைப் படுத்த அவற்றை நீலோத்பல மலரோடு ஒப்பிடுவார்கள். புஷ்பங்கள், இயற்கை அழகை நிலைநிறுத்துகின்றன. அவை, வண்டினத்துக்கு உணவளிக்கின்றன; புஷ்பாதிவாசத்துக்கும் பயன்படுகின்றன. இரண்டு கைகளாலும் பூக்களை அள்ளி சமர்ப்பித்து இறையுருவத்தை வழிபடுவோம். 

அதன் வாசனை, நுகர்பொருளாகப் பயன்படுகிறது. அயர்ந்த நித்திரைக்கு புஷ்பப் படுக்கை பயன்படுகிறது. காமதேவன், புஷ்ப பாணத்தால் இளம் உள்ளங்களில் ஆசையை விதைக்கிறான். காதலனைப் பிரிந்த காதலியர், பிரிவின் தாக்கத்தைத் தணிக்க புஷ்பங்களைப் பயன்படுத்துவர். 'மென்மையான உள்ளங்கள் சடுதியில் என்னை வந்து அடையலாம்’ என்று சொல்லாமல் சொல்லுகிறாள் அம்பாள்.


6. குறிப்பிட்ட தலங்களில் வேண்டு தலின் பொருட்டு பெண்களும் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். ஆனால், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சுமங்கலிகள் எக்காரணம் கொண்டும் மொட்டையடித்துக் கொள்ளக் கூடாது என்கிறார்களே... சரியா?


பெண்ணினத்தின் இலக்கணத்தில் ஒன்றாக கேசத்தைப் பார்க்கிறது சாஸ்திரம் (ஸ்தன கேசவதீநாரீ). முடியைத் துறந்த பெண்ணானவள், மாற்றுத் திறனாளியாகக் கருதப்பட்டாள். 

கணவனையே பறிகொடுத்த பிறகு, அவன் கையால் வருடப்பட வேண்டிய கூந்தல் இனி எதற்கு? எனும் நோக்கத்தில் முடியைத் துறந்த பெண்மணிகள் பண்டைய காலத்தில் உண்டு.


முடி, தாதுவின் கழிவுப்பொருள். அதை கடவுளுக்கு அளிப்பதில் தர்மசாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை. ஒருபக்கம் முடி வளர்வதற்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகளைத் தேடி அலைகிறோம். இன்னொரு பக்கம்... வளர்ந்த முடியை வெட்டி அழகுப்படுத்துகிறோம். அன்றாடம் அலுவல்களின் சுமை அழுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும், முடியை துறப்பதும் வளர்ப்பதும் தடங்கல் இல்லாமல் நடந்துகொண் டிருக்கிறது. 

காலாவதியான தர்மசாஸ்திரக் கோட்பாடுகளைப் புதுப்பிக்க முற்படுவது சரியில்லை. இதைவிட உயர்ந்த கோட்டுபாடுகள் எல்லாம் நினைவில் இருந்தே விலகிவிட்டன! கவலைப்படாதீர்கள்... காலத்தின் கோலம் அது!

thanx - sakthi vikatan

Sunday, June 26, 2011

கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி? (ஆன்மீகம்)


கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1. கோ தானம் எதற்காக... அதன் மகிமைகள் என்ன?

பசு மாட்டில் 14 உலகங்களும் அடங்கியுள்ளன. பசுவை தானம் அளித்தால், அகில உலகையும் தானம் அளித்த பலன் உண்டு. வேள்விக்குத் தேவையான நெய், இறைவனின் அபிஷேகத்துக்கு உகந்த பால், தயிர், நெய், பஞ்சகவ்யம் ஆகியன பசுவிடம் இருந்து கிடைக்கின்றன. பால், தயிர், நெய், கோமியம், சாணி ஆகிய ஐந்தின் கலவை பஞ்சகவ்யம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து; கவ்யம் என்றால் பசுவிடம் இருந்து வந்தது என்று பொருள். இது, நமது எலும்பு மற்றும் தொடு புலனோடு இணைந்த பாபத்தை அழிக்கவல்லது என்கிறது சாஸ்திரம் (யத்வகஸ்திகதம்பாபம...).

கோமூத்திரம் வெள்ளைப்பாண்டை அறவே அகற்றும்; பஞ்ச கவ்யகிருதம் மனநோயைக் குணப்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் பால் முழு உணவு. உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மையாக்குவதுடன், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது பசுவின் பால். நெய்யானது, ஜீரண சக்தியை வலுப்படுத்தி உடலுக்கு வலுவூட்டும். மருத்துவ குணமுடைய பொருள்களை மற்றவர்களுக்கு அளிப்பதால் உண்டாகும் பெருமை சொல்லில் அடங்காது. ஆறறிவு இல்லாதது, ஆறறிவு பெற்றவர்களை வாழ வைக்கிறது. பசுவின் பாலுக்கும் நெய்க்கும் ஈடான மற்றொரு பொருள் இல்லை. அதன் இழப்பை, தற்காலச் சூழலில் வாழும் ஆறறிவு பெற்றவர்களிடம் காணமுடிகிறது.



தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குத் தாய்ப்பாலாகச் செயல்படுவது பசும்பால்தான். இயற்கையின் படைப்பை கடைச் சரக்காக மாற்றக்கூடாது என்பதால், தானமாக (இனாமாக) அளிக்கச் சொன்னது தர்மசாஸ்திரம். பால் கொடுப்பது பசு; பணம் பெறுவது மற்றொருவர் என்று இருக்கக்கூடாது என்பதால், பசுவை தானமாக அளிக்கப் பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம். வேள்விக்குத் தேவையான நெய்யை அளிப்பதால், வேள்வி அரசன் கண்ணன், பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாகத் தோன்றினான்.




2. அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியம் என்பார்கள். ஆனால், அந்த அரிசி மாவை தின்ன வரும் எறும்புகள், நம்மையும் அறியாமல் காலில் மிதிபட்டு இறந்தால், பாபம் சேராதா?

அனுதினமும் மருந்தடித்துக் கொசுக்களைக் கொன்று குவிக்கிறோம். அது பாபம் இல்லையா? அதேபோல், நடக்கும் போது நமது செருப்புகளுக்கு அடியில் அகப்பட்டு ஈ- எறும்பு போன்றவை மடிகின்றனவே?! வெண்டைக்காயை நறுக்கும் போது, சில நேரம் எதிர்பாராதவிதமாக உள்ளிருக்கும் புழுக்களும் அறுபட்டுவிடுமே! மாவரைக்கும்போதும், அம்மியில் அரைக்கும் வேளையிலும் மிகச்சிறிய உயிரினங்கள் குழவியில் அடிபட்டு மடிந்துபோகலாம்; வரட்டி, விறகுகளில் ஒளிந்திருக்கும் உயிரினங்கள், அடுப்பு நெருப்பில் மடிய நேரிடுகிறதே? தேனுக்காக தேனீக்களைத் தெரிந்தே அழிக்கிறோமே?! வரையறை இல்லாத அஹிம்சையை ஏற்றால், பல நன்மைகளை இழக்க நேரிடும். எறும்பு வராமல் இருக்க, தெரிந்தே நாம் எறும்புப் பொடியை உபயோகிப்போம்.



விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோ, 'லக்ஷ்மண ரேகையை’ (சாக்பீஸ் கோடு போன்று) அறிமுகம் செய்து, எறும்புகளை அழிக்க வழி சொல்கிறது.



உங்கள் கவனத்துக்கு ஒரு விஷயம்... எறும்புக்கு உணவளிப்பதற்காக மாக்கோலம் போடுவதில்லை. தரையைச் சுத்தம் செய்து, கோலம் போட்டு, சுப காரியங்களை நிறைவேற்றும்படி பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம் (ரங்க வல்யாத்யலம் கிருதம்). கோலம் போட்டு அதில் விளக்கை வைப்போம். கோலத்தின் மீது கும்பம் வைப்பதும் உண்டு. கோலமிட்டு அதன்மீது தட்டு வைத்து, விருந்தினரின் கால்களை அலம்பிப் பணிவிடை செய்வோம். அக்னி குண்டத்துக்குக் கோலம் போட்டு அழகுபடுத்துவோம்.



மற்றபடி, எறும்புக்கு உணவளிக்கவே கோலம் பயன்படும் எனும் கூற்று, சாஸ்திரத்துக்குப் புறம்பானது. எறும்புகள் கோலத்தைத் தாறுமாறாக்கினால், வேறு கோலம் வரைந்து சரிசெய்ய வேண்டும். கோலத்தை அழிப்பது அபசாரம். ஈரம் காயும் வரை, நாமே கோலத்தை மிதித்து அழித்துவிடாமல் இருக்கக் கண்காணிப்போம் இல்லையா?!



அரிசி மாவால் கோலமிடுதல் என்பது, எறும்புகளுக்கு உணவளிக்கும் எண்ணத்தில் எழவில்லை. அரிசியில் விச்வே தேவர்கள் குடியிருக்கிறார்கள். கோலத்தில் நிரம்பியிருக்கும் அவர்களது சாந்நித்தியம், செய்யும் சடங்கின் நிறைவுக்குத் துணை புரியும் (தண்டுலா:வைச்வதேவத்யா:). ஆக, கோலத்தில் எறும்புகள் வராமல் பார்த்துக்கொண்டு, அதில் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். கோலத்தைக் காலால் மிதிக்கக்கூடாது. அதில் கவனம் வேண்டும். சடங்கு முடியும் வரை கோலம் இருக்க வேண்டும். கஷ்டப்பட்டுக் கோலம் போட்டுத்தான் எறும்புகளுக்கு உணவளித்து மகிழவேண்டும் என்பதில்லை; அரிசியை ஒரு மூலையில் கொட்டி வைத்தால் போதும்; எறும்புகள் எடுத்துக்கொள்ளும்; கால்களில் மிதிபட்டு மடியாமலும் இருக்கும்.




3. எங்கள் மகன், மகள் இருவருமே கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்கள் அந்திம காலத்துக்குப் பிறகு, எங்களுக்கு இவர்கள் கர்ம காரியங்கள் செய்யலாமா? கூடாது எனில், வேறு யார் மூலம் செய்யலாம்?



பண்பு, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றை ஒதுக்கி, தன்னிச்சையாகக் கலப்புத் திருமணத்தைச் சந்தித்த பிறகு, மீண்டும் சம்பிரதாயத்தை எட்டிப் பார்ப்பது சரியல்ல. தற்காலச் சூழலில், விருப்பப்படி திருமணம் செய்யலாம் என்று வந்த பிறகு, பழைய சடங்குகளை நிறைவேற்ற நினைப்பது பொருளற்றது. கலப்புத் திருமணத்தை ஏற்காதவர்களுக்கு, மரபுப்படி செயல்படுவது சிறப்பான விஷயம். அதன் சட்டதிட்டங்கள் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றிருக்கக்கூடாது. மரபை மீறியவனுக்கு அந்தச் சட்டதிட்டங்கள் பொருந்தாது; விருப்பப்படி செயல்படலாம்.



தங்கள் பங்காளிகளில் எவரேனும் முன்வந்தால், அவர்கள் உங்களுக்கானதை நிறைவேற்றலாம். அவர்கள் மரபோடு இணைந் தவராக இருக்கவேண்டும். நாம் விருப்பப்படி செயல்படுவோம்; தர்ம சாஸ்திரம் அதை ஏற்கவேண்டும் என நினைக்கக்கூடாது. வரம்பு மீறிய செயலுக்கு என்றைக்கும் தகுதி இழப்பு உண்டு. கலப்பு மணத்தில் மற்றொருவரின் மரபுப்படி செயல்படலாம். கலப்பில் இரண்டுக்கும் சம அந்தஸ்துதான். ஆகையால், ஒன்று இல்லையெனில் மற்றொன்றைப் பின்பற்றலாம்!


4. நவக்கிரகங்களை எந்தெந்த திசையை நோக்கிப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?



சூரியன் கிழக்கு முகமாக இருக்கலாம். சந்திரன்- மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்- வடக்கு; குரு- வடக்கு; சுக்கிரன்- கிழக்கு; சனி- மேற்கு; ராகு- தெற்கு; கேது- தெற்கு... இந்த முறையில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது, ஸம்ஸ்கார ரத்னமாலை எனும் நூல். அத்துடன், மற்ற எல்லா கிரகங்களையும் சூரியனை நோக்கி பிரதிஷ்டை செய்வதும் சிறப்பு என்றும் சொல்கிறது.



விண்வெளியில் இருக்கும் கிரக வரிசைப்படியும் பிரதிஷ்டை செய்யலாம். கோள வடிவில்... சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்கிற ஏழு கிரகங்கள் வரிசையாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து ராகு- கேதுவையும் பிரதிஷ்டை செய்யலாம். கிரகங்கள் காலத்துடன் இணைந்திருக்கும்; காலம், எப்போதும் நம்முடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு சுப காரியத்திலும் கிரக வழிபாடும் இணைந்திருப்பதால், நவக்கிரகங்களுக்கென தனி வழிபாட்டு முறை தலை தூக்காத காலம் இருந்தது. தினமும் நீராடியதும், கை நிறைய தண்ணீரை அள்ளி 3 முறை கிரகங்களுக்குத் தர்ப்பணம் செய்யும் நடைமுறையை, வேத காலத்திலி ருந்தே வேதம் ஓதுபவர்கள் கடைப்பிடிப்பது உண்டு.



பிற்காலத்தில் வந்த சிந்தனையாளர்கள், நவக்கிரகங் களை ஆலயப் பிரவேசம் செய்வித்து, பிரதிஷ்டை செய்யும் முறையையும் பரிந்துரைத்தனர். இன்றும் பல கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருக்காது. ஆலயத்தில் உறைந்திருக்கும் (மூலவர்) திருவுருத்திலேயே நவக்கிரக சாந்நித்தியம் இருப்பதாகச் சொல்வார்கள். இந்தக் கோயில் ராகு ஸ்தலம், இது கேது ஸ்தலம் என்று சுட்டிக் காட்டுவதும் உண்டு. தற்போது பக்தர்களின் விருப்பம், பொருளாதாரம் ஆகியவற்றை முன் வைத்து, மற்ற மூர்த்தங்களுடன் சேர்த்து, நவக்கிரகங்களும் கோயிலில் இடம் பெற்றுள்ளனர்.



முன்பு கோயிலைத் தேடிச் சென்று பக்தன் வழிபடுவான். இப்போதெல்லாம் பக்தனுக்கு வசதியான இடங்களில் கோயில் வந்துவிடுகிறது. தனித்தன்மை மாறி, வியாபார ஸ்தலமாகக் காட்சியளிக்கும் கோயில்களும் உண்டு. இந்த மாதிரியான சிக்கலைத் தவிர்க்க, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய முனையவில்லை முன்னோர்கள்.



எதிலுமே ஒரு புதுமை- ஒரு வித்தியாசம் இருந்தால், மக்களுக்கு ஈடுபாடு ஏற்படும். அதை அறிந்த அறிஞர்கள், புதுமையாகத் தோற்றுவித்ததே நவக்கிரக பிரதிஷ்டை. அதன் பிறகு, குறிப்பிட்ட திசைகள்வாரியாக அவர்களை பிரதிஷ்டை செய்யும் முறை பிரபலமானது.



5. வடநாட்டில், பெரியவர்களை வணங்கும்போது தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? அதேபோல், நம் கோயில்களில் நைவேத்தியம் செய்த பிறகே ஆரத்தி காட்டுகிறோம்; ஆனால், அங்கெல்லாம் ஆரத்திக்குப் பிறகே நைவேத் தியம் சமர்ப்பிக்கிறார்கள். ஏன் அப்படி?


தேசத்துக்கு தேசம் நடைமுறையில் மாறுபாடு தென்படும். இதை தேசசாரம்... அதாவது, நாட்டு நடப்பு அல்லது சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திர சட்டதிட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக் காதவற்றை சம்பிரதாயம் என்று ஏற்று, நடைமுறைப்படுத்துவார்கள்.



திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பு- ஜானுவாசம் என்றொரு சம்பிரதாயம் உண்டு. அதேநேரம், மணப்பெண் அழைப்பு எனும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படும். மாமன் மகள்- அத்தை மகன் இவர்களின் திருமணம் நடந்தேறும்; முறைப்பெண் என்று அதைக் கடைப்பிடிப்பார்கள். தலையில் முக்காடு இடுவது, வடநாட்டு சம்பிரதாயம். பிற பெண்களைக் கூர்ந்து கவனிக்கக் கூடாது. அதற்கு உகந்த வகையில் முக்காடு பயன்படும். ஸ்ரீராமனுடன் வனவாசம் செல்லும்போது, முக்காடு போட்டுக் கொண்டிருந்தாள் சீதை. 'மக்கள் உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டும்; முக்காடை அகற்றி, முகத்தைக் காட்டு’ என சீதைக்கு ஸ்ரீராமன் கட்டளையிட்டதாகத் தகவல் உண்டு.



சம்பிரதாயம் என்றால், எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று அல்ல. நைவேத்தியத் துக்குப் பிறகு ஆரத்தியும், ஆரத்திக்குப் பிறகு நைவேத்தியமும் சம்பிரதாயத்தில் விளைந்தது. கோயிலுக்கு பெரிய மனிதர்கள் விஜயம் செய்யும்போதெல்லாம் ஆரத்தி எடுக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் உண்டு. எனவே, சம்பிரதாயங்கள் குறித்த ஆராய்ச்சியைக் கைவிட்டு, வழிபாட்டில் கவனம் செலுத்துவதே நல்லது!


- பதில்கள் தொடரும்

நன்றி - சக்தி விகடன்

Sunday, June 19, 2011

கண்ணன் ஏமாந்தான்.... இளம் கன்னிகளாலே.....(ஆன்மீகம்)

http://guppic.com/uploads/2009/Oct/1256621501-1_406443875l.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

'பகவானுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அப்படியெனில் அந்த ஆயிரம் திருநாமங்களையும் சொன்னால்தான், பாபம் தீருமா?’ என்று கேட்கின்றனர் பக்தர்கள். 'தேவையில்லை. கேசவா எனும் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயரு முறை சொன்னாலே, நம் அத்தனைப் பாபங்களும் விலகிவிடும்’ என்கிறது கீதை.

அதற்காக ஒரேயரு திருநாமத்தை மட்டும், ஒரேயரு முறை சொன்னாலே போதுமானது என்று தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு, செயல்படக்கூடாது. 'கேசவா’ எனும் திருநாமத்தை மனதார ஒருமுறை சொன்னாலே, நாம் சேர்த்து வைத்திருக்கிற பாபங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றால், அவனுடைய நாமங்கள் அனைத்தையும் சொல்லி வந்தால்... அதுவும் அனுதினமும் சொல்லி வந்தால்... பகவான் நமக்கு எவ்வளவு பலன்களைத் தருவார், எத்தனை புண்ணியங்கள் நம்மை வந்தடையும் என்று யோசிக்க வேண்டும்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்கினால், நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் வளமுடன் வாழ்வோம்!

'அது சரி... பகவானின் திருநாமத்தைச் சொன்னால், நம் ஊழிக்காலம் முதல் இன்று வரையிலான சகல பாபங்களும் தொலையும் என்கிறீர்கள். சுமார் ஆயிரம் வருடப் பாபம் என்றால், ஆயிரம் வருடங்கள் திருநாமத்தைச் சொல்ல வேண்டாமோ? அப்படிச் சொல்வதற்கு, ஆயிரம் வருடங்கள் நாம் உயிருடன் இருப்பது எவ்விதம்?’ என்றும் கேட்கலாம், 
சிலர்.
மிகப் பெரிய மலைப் பாறை. அங்கே, மிகச் சிறிய குகை ஒன்று. அந்தக் குகைக்குள் இதுவரை எவரும் சென்றதில்லை. குகையின் கதவை இதுவரை எவரும் திறக்கவும் இல்லை. ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, குகையின் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்ததும் என்னாகும்? பல்லாயிரக் கணக்கான வருடங்களாக அந்த குகைக்குள்ளேயே இருந்த இருட்டானது, சட்டென்று விலகிவிடும். 

http://farm1.static.flickr.com/133/352867983_87f8c184b6.jpg
அங்கே நம் கையில் உள்ள தீப்பந்தமானது, குகையின் இண்டு இடுக்குகளிலும் வெளிச்சப் பாய் விரித்திருக்கும். 'அதெப்படி... ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்த இருட்டை விரட்டுவதற்கு, ஆயிரம் தீப்பந்தங்கள் தேவை இல்லையா? அல்லது, அந்த இருளை அகற்றுவதற்கு ஆயிரம் வருடங்களேனும் வேண்டாமா?’ என்று கேட்பது புத்திசாலித்தனம் இல்லைதானே?

எத்தனை வருடங்களாக இருந்தால் என்ன... அந்த குகையின் கும்மிருட்டை விலக்குவதற்கு, ஒரு சின்ன தீப்பந்தமே போதுமானது. அதேபோல், நம் அத்தனைப் பிறவிகளின் பாபங்களும், அன்றைய பாபங்களும், ஏன்... இனி வரப் போகிற பாபங்களும்கூட, கண்ணனின் திவ்விய திருநாமம் ஒன்றைச் சொல்ல, பறந்தோடிவிடும். லட்சம் தீப்பந்தங்களுக்கு இணையானவன், பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எனவே, நம் பாபங்களை ஒரு நொடியில் பொசுக்கிவிடுவான், அவன்!

கேசவா எனும் திருநாமத்தைப் போலவே, 'ஹரி’ எனும் திருநாமமும் உசத்தியானதுதான்! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கச் சொல்கின்றனர், ஆச்சார்யர்கள். இன்றைய காலத்தில், நமக்கெல்லாம் பிரம்ம முகூர்த்தம் என்பதே காலை ஏழு, ஏழரை என்றாகிவிட்டது. பிரம்ம முகூர்த்த வேளை என்று சொல்லப்படும், நாலு நாலரை மணிக்கு எழுந்திருங்கள். 'ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி...’ என்று பகவானின் திவ்விய நாமத்தை ஏழு முறை உச்சரியுங்கள்; மனதாரச் சொல்லுங்கள். நம் ஏழேழு ஜென்மத்துப் பாபங்களும் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது உறுதி. ஹரி என்றாலே பாபங்களை அபகரிப்பவன் என்று அர்த்தம்.

ஒரேயரு விஷயம்... பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKcd5N_2iydpcE98o7KEZxCl0Quvt8xEIxpUHGhuio4d9Xir4pZe7K4I8O2QrAVPFrIMGmFvc6sTEpBmfNcP6hHUEcXBkCk8hslNaFtF4uaOTOtdnojDMcWHBEHZN7YuOxSK7FCXTxQhE/s1600/playing-vina.jpg

சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! 

அந்த ஆசையை, பகவானின்மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்மதிருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!  

முக்கியமாக ஒன்று... 'பகவானின் திருநாமத்தை 21 நாட்கள் சொல்லி வந்தால், செல்வம் சேரும்; 14 நாட்கள் உச்சரித்து வந்தால், கல்யாணம் கைகூடும்’ என்கிற கொடுக்கல்- வாங்கல் வியாபாரமாக, பக்தியையும் பிரார்த்தனையும் ஆக்கிவிடாதீர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி, ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்வதில், ஆழ்ந்த ஈடுபாடு காட்டி னால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவை அனைத்தையும் தருவான், ஸ்ரீகண்ணபிரான்!

கற்பக விருட்சம், காமதேனு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் எதைக் கேட்டாலும், அவை கொடுக்கத் தயாராக இருக்கும். ஆனால், 'என் தோட்டத்துக்கு வந்துவிடு’ என்று சொன்னால், கற்பக விருட்சமும் வராது; காமதேனுவும் சம்மதிக்காது. இந்த ஆசையால் துன்பப்பட்டவர்களின் கதைகளை, புராணத்தில் அறிந்திருக்கிறோம். 


http://www.dinamani.com/Images/article/2010/8/27/ve.jpg
ஆனால், ஸ்ரீகிருஷ்ணர்தான் கற்பக விருட்சம்; அவர்தான் காமதேனு என்பதை நாம் உணருவதே இல்லை. அப்படிக் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்கிற ஸ்ரீகிருஷ்ணரிடம், 'என் செல்லக் கண்ணா, நீ என் வீட்டுக்கு வந்துவிடேன்’ என்று அழைத்துப் பாருங்களேன்... மிகச் சந்தோஷமாக உங்கள் வீட்டுக்கு  ஓடி வந்துவிடுவான்! அது மட்டுமா? கேட்டதை, கேட்டதும் கொடுக்கிற கண்ணபிரான், அவனையே நமக்குத் தருவதற்குச் சித்தமாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.


மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவன், ஒரு முறை கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தான். அவன் பிடித்த மீனின் வயிற்றுக்குள் விலை மதிப்பற்ற ரத்தினக் கல் இருந்தது. அவனுக்கு மீனின் அருமையும் ருசியும் தெரியும்; ஆனால் ரத்தினக் கல் பற்றித் தெரியவில்லை. அதை வெறும் கல் என்றே நினைத்தான், அவன்.

எதற்கும் இருக்கட்டும் என்று, அந்த ஊரில் இருந்த நகை வியாபாரியிடம் சென்று அந்தக் கல்லைக் காட்டினான். வியாபாரி, அது ரத்தினக் கல் என்பதையும், இந்த விஷயம் மீனவனுக்குத் தெரியவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். 'இந்தக் கல்லோட விலை 20 ரூபாப்பா’ என்று சொல்லி, அந்தப் பணத்தைக் கொடுத்து, கல்லை வாங்கிக் கொண்டான். அந்தக் கல்லை அப்படித் திருப்பினால் நீல நிறமாகவும், இப்படித் திருப்பினால் பச்சை நிறமாகவும், இந்தப் பக்கம் திருப்பினால் சிவப்பு வண்ணத்திலும், அந்தப் பக்கமாகத் திருப்பிப் பார்த்தால் வேறொரு நிறத்திலுமாகத் தெரிய... குதூகலத்தில் திக்குமுக்காடிய வியாபாரி, விறுவிறுவென அரண்மனைக்குச் சென்று, மன்னனிடம் ரத்தினக் கல்லின் மகிமையைச் சொல்லி, அதன் விசேஷங்களை எடுத்துரைத்து, 'அதன் விலை ஒரு கோடி ரூபாய்’ என்றான். 

உடனே மன்னனும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து, அந்த ரத்தினக் கல்லை வாங்கிக்கொண்டான். அதை ஆபரணமாக்கி, ராணியின் கழுத்தில் போட்டான். ஆக... மீனவன், வியாபாரி, மன்னன்... இவர்களில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள்?

அதாவது, அந்த மீனவனைப் போல, ரத்தினத்துக்கு இணையான பகவானின் சகஸ்ரநாமங்களை அறியாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது, 'நோயிலிருந்து விடுதலை வேணும்; கல்யாணம் சீக்கிரமே நடக்கணும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டு, அந்த ரத்தினத்தை அந்த வியாபாரி ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதுபோல, செயல்படப் போகிறீர்களா? அல்லது, அந்த ரத்தினத்தை ஆபரணமாக்கித் தன் மனைவி கழுத்தில் போட்டு அழகு பார்த்த ராஜாவைப்போல, 'எனக்கு எதுவுமே தேவையில்லை. அனுதினமும் பகவானின் திவ்விய நாமத்தைச் சொல்வதே ஆனந்தம்; நிறைவு’ என்று வாழப் போகிறீர்களா?


அதாவது, நீங்கள்... மீனவனா? நகை வியாபாரியா? மன்னனா? இதை உணர்ந்து தெளிந்து நடப்பதில்தான், வாழ்வின் மொத்த இன்பமும் இருக்கிறது.
கோயிலில், நமது பெயர், நட்சத்திரம், கோத்திரமெல்லாம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். எதற்கு இது? அவசியமே இல்லை. 'நான் இன்னார்... என் பெயர் இது... கோத்திரம் இதுவே’ என்று நீங்கள் யாரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuIhmZn8dmfSJC1HQmU5Ox05sgDhCLg6E2kAm6hwnSuL0rsWlaljjswUWtltBuZE9-CDO7QorJ1oLTvXNbXStP3ZyAevKEBumOiYG7w4aeXosPmeem97H3yEm4n0eFob8GKCyxBOj4Pa2Q/s1600/krishna_lotusfeet.jpg
விடிந்ததும் எழுந்து, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற அப்பாவிடம், 'ஹலோ... என் பேரு கிருஷ்ணன்; எனக்கு இத்தனை வயசு; என் கோத்திரம் இதுதான்!’ என்று தினமும் சொல்லிக்கொண்டா இருக்கிறோம்? ஒருவேளை மூப்பு காரணமாக, பிணி காரணமாக, மறதி காரணமாக, அப்பாவிடமே நம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிற சூழலும்கூட ஒரு கட்டத்தில் ஏற்படலாம். ஆனால், நம் அப்பனுக்கெல்லாம் அப்பனாக, உலகத்துக்கே தந்தையாக, கடவுளாகத் திகழ்கிற பகவானிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், அவனுக்குப் பிணியும் இல்லை; மூப்பும் இல்லை; மறதியும் கிடையாது!

எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது... உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

நன்றி - சக்தி விகடன்