Showing posts with label கோவை மஸ்கட். Show all posts
Showing posts with label கோவை மஸ்கட். Show all posts

Thursday, July 28, 2011

ஃபாரீன் பதிவரை ஏமாற்றிய கோவையைச்சேர்ந்த டுபாக்கூர் பெண்ணின் கதை

ஏமாற்றப்பிறந்தவர்கள் ஆண்கள், ஏமாறப்பிறந்தவள் பெண் என்ற தவறான  கருத்து காலம் காலமாக நம்மிடையே வழக்கில் இருந்து வருகிறது. பெண் இனத்திலும் பேய்கள் இருக்கிறார்கள்,அவர்கள் ஆண்கள் வாழ்க்கையை அலங்கோலப்படுத்தி இருக்கிறார்கள்,அலைய வைத்திருக்கிறார்கள்  என்று சொல்லாமல் சொன்னது மஸ்கட் பதிவரின் கண்ணீர்க்கதை..

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் சாட்டுக்கு வந்தார். என்ன சிபி உங்க பதிவுல கணவனின் ந‌ண்பர் என்ற போர்வையில் வந்த கயவனைப் பற்றி  பேஸ்புக்கில் ஃபோர்ஜரி பண்ணுனவனை பற்றியும் எழுதி பொண்ணுங்களெல்லாம் ரொம்ப நல்லவங்கப் போலவும், ஆண்களெல்லாம் மோசமானவங்க போலவும் இமேஜ் கிரியேட் பண்ணிட்டே. ஒரு ஆண்மகனா இருந்துக்கிட்டு இப்படி சேம் சைடு கோல் போட்டுட்டியேனு கேட்டார் .


அப்படிலாம் இல்லீங்க, எனக்கு தெரிய வந்த ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி பதிவிட்டேன். அப்படியென்ன பெண்கள் ஆண்களை ஏமாற்ற முடியும்? மிஞ்சிப் போனால் காதலித்துவிட்டு வேறொருவனை கல்யாணம் கட்டிக்கிட்டு போவாங்க அவ்வளவ்தானேனு அசால்ட்டா கேட்டேன்.

அடப்பாவி சிபி, இப்படிதான் உலகம் தெரியாம இருக்கியானு கேட்டு தன்னோட நண்பர் கதையை சொன்னார்.

ஆண்களில் எப்படி விதிவிலக்கான ஆண்களால் மொத்த ஆண்வர்க்கமே கெட்டப் பேரை சுமக்குதோ, அதேப்போல போற்றத்தக்க பெண்களிலும் விதிவிலக்கை கண்டு அதிர்ந்துப் போனேன்.  

அவர் பெயர் ச‌ண்முகம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை அண்ணா பல்கலைகழகத்தில், மெக்கானிகல் இஞ்சினியரிங் முடித்து, இப்போது மஸ்கட்டில் வசிக்கிறார் .இல்லையில்லை மனைவியின் ஏகப் போக வாழ்க்கைக்கு பொருளீட்டிக் கொண்டிருக்கிறார் அந்த அப்பாவி கணவர்.


சிறு வயது முதற்கொண்டே தன் அக்கா பெண் மீது  அவருக்கு காதல். கட்டினால் அவளைத்தான் கட்டனுமின்னும் , வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பாராமலும்  படித்து முதல் வகுப்பில் தேறி, மஸ்கட்டில் வேலை கிடைத்து பறந்து போனார்.
 

4 வருடங்கள் மஸ்கட்டில் வேலை பார்த்தார், அவனுக்கு திருமணம் முடித்துவைக்க பெண்பார்க்க பெற்றோர் முனையும்போது, அக்கா மகளின்மீதான தனது விருப்பத்தை சொல்ல‌. சரியென்று அவர்களும் பெண் கேட்க போக, எனக்கு மாமாவை கட்டிக்க இஷ்டமில்லை என்று ஒருவரியில் சம்பந்தத்தை தட்டி கழித்துள்ளாள் அக்கா மகளான கோமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

சில மாதங்கள்  கழித்து, சண்முகமும் ஒருவாறாக மனதைத் தேற்றிக்கொண்டு, வேறொரு பெண்ணை மணமுடிக்க சம்மதத்துள்ளார். விடிந்தால் நிச்சயதார்த்தம், புதுப்பெண்ணுக்கு புடவை, நகையெல்லாம் வாங்கியாகிவிட்டது.

அன்றிரவு கோமதியிடமிருந்து சண்முகத்திற்கு ஃபோன். 

“மாமா, தாத்தாவும், பாட்டியும் பெண்கேட்டு வரும்போது எனக்கு உங்க மேல விருப்பமில்லை. ஆனால், இப்போ உங்களுக்கு வேறொரு பெண்ணுடன்  நிச்சயதார்த்தம் எனும்போதுதான், உங்க மேல காதல் வந்திருக்கு. (!!!!!!!!??????????????)கட்டினால் உங்களைத்தான் கட்டுவேன். இல்லாட்டி செத்துப் போயிடுவேன்”னு அழுதிருக்கிறாள். 

அக்கா மகளின் கண்ணிரைக் கண்டவுடன் மனம் பதறிப்போய், தன் சகோததரின் எதிர்ப்பையும் மீறி நிச்சயதார்த்தை நிறுத்தி , தனக்கும், கோமதிக்கும் நிச்சயதார்த்தம் நடத்தி, மஸ்கட் சென்றுவிட்டார்.

 இந்த இடத்தில் ஒரு சின்ன ஃபிளாஸ்பேக்..கோமதி ஆரம்பத்தில் தன் மாமாவை கட்ட மாட்டேன் என்று அடம் பிடித்ததற்கு காரணம் அவர் ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணியதுதான். ஆனால் சொத்து வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக கோமதியின் அம்மா கோமதியை பிரெயின் வாஷ் பண்ணி இருக்கார். 

“நீ யாரையோ காதலிச்சுக்கோ, எப்படியோ இருந்துக்கோ ,ஆனா என் தம்பியை கல்யாணம் பண்ணிக்கோ, கோடிக்கணக்குல சொத்து கை விட்டுப்போயிடக்கூடாது” ( நல்ல அம்மா ,நல்ல பொண்ணு குடும்பம் விளங்கிடும்)

அம்மாவின் வற்புறுத்தலால் வேறு வழி இல்லாமல் கோமதி கல்யாணத்திற்கு ஓக்கே சொலி இருக்கிறாள்.நிச்சயதார்த்தம் மாமாவுடன் நடந்து முடிந்ததும் மாமா மஸ்கட் போய்ட்டார்..


நிச்சயம் ஆன நிலையில் நிச்சயம் செய்த தன் தாய்மாமா மஸ்கட்டில் இருக்கும் நிலையில் கோமதி ஒரு துணிச்சலான காரியம் செய்தார் தன் முன்னாள் காதலுடன் ஓடிப்போய் திருமணம் முடித்து பத்து நாட்கள் குடித்தனமும் நடத்தியுள்ளார். அவர்பெற்றோர் அவரை கண்டுபிடித்து, வீட்டிற்கு கூட்டி வந்துள்ளனர்.

மஸ்கட்டில் இருக்கும்  தாய்மாமாவுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ந்து போனார்.

“ஏம்மா கோமதி. காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? ஏன் இப்படி பண்ணி குடும்ப கவுரத்தை கெடுக்கறே?
இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை வெறும் நிச்சயம் மட்டுமே நமக்குள் நடந்துள்ளது, நான் விலக்கிக்கிறேன். நீ உன் விருப்பம்போல் மணமுடித்துக் கொள்”

என்றிருக்கிறார்.உடனே கோமதி ஒரு குண்டை தூக்கிப்போட்டாள்.
”மாமா.. நான் யாரையும் காதலிக்கவும் இல்லை,விருப்பப்பட்டு மேரேஜ்ஜும் பண்ணிக்கலை.அவன் மேல் எனக்கு எந்த விருப்பமில்லை, அவன் தான் என்னை கடத்திக் கொண்டுப் போய் அடைச்சு வச்சி சீரழிச்சுட்டான். எனக்கு அவன் மேல் துளிக்கூட காதல் இல்லை”


கோமதியின் வார்த்தையை நம்பிய சண்முகம் தன் அக்கா பொண்ணாச்சே என்பதால் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லி விட்டார்.. 
ஜூலை 2002 ல் கோவையில் திருமணம் முடித்து சில நாட்கள் தங்கியிருந்தார்.முதல் இரவு முடிந்தது. சுமூகமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் 3  மாதம் புது மணத்தம்பதிகள் வாழ்க்கையை நடத்தினார்கள்.


லீவ் முடிந்து மஸ்கட் போக வேண்டிய சூழலில் சண்முகத்துக்கு புது சிக்கல். கோமதிக்கு விசா கிடைக்கவில்லை. தாமதம் ஆகும் சூழல். வேறு வழி இல்லாமல் 6 மாசம் கழித்து வந்து கூட்டி செல்கிறேன் என அக்காவிடம் சொல்லி விட்டு  மனைவி கோமதியை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டு தான் மட்டும் மஸ்கட் பறந்துள்ளார்.

அங்கு, கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் பனியிலும், மனைவியை நினைத்தும், போனில் அவள் குரல் கேட்டும் பிரம்மச்சர்யத்துடன் பொருளீட்ட, கோமதியோ தன்னுடன் பயின்ற சங்கர் என்ற  மாணவனுடன் படுக்கையை பகிர்ந்துள்ளாள்.  (இது வேற,முதல்ல ஓடிப்போய் கட்ன ஆள் வேற...)

இந்த மேட்டர் தினமலர் இதழிலேயே வந்து கோமதியின் பேரும் கெட்டுப்போனது. மஸ்கட்டில் இருக்கும் சண்முகத்திற்கு தகவல் போனது.

ச‌ண்முகம் இதை கேள்விப்பட்டு, ஆத்திரம் கொள்ளாமல், 


“உனக்கு அவன்மேல் விருப்பமிருந்தால் நான் விலகிக்குறேன். நீ அவனையே கட்டிக்கோ”

னு பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கார். 

அதற்கு கோமதி , “இல்லீங்க எதோ தெரியாம (!!!!!!!!!!!!!!!!)பண்ணிட்டேன் இனி இப்படி செய்ய மாட்டேன்” என  சொல்லி அழ அவளை தன்னுடன் மஸ்கட்டிற்கு குடும்பம் நடத்த அழைத்து சென்றுள்ளார். 

சில மாதம் எந்த பிரச்சனையும் இல்லாமல் போக கோமதி கருத்தரித்துள்ளார். அதைக் காரணம் காட்டி இந்தியா வந்தவர், பிள்ளைப்பேறு முடிந்தும் மஸ்கட் போக ஆர்வம் காட்டாமல் சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்துள்ளாள். ச‌ண்முகமும் சரி, தன் மனைவிக்கு மஸ்கட் வாசம் பிடிக்கலைப் போலனு நினைச்சுக்கிட்டு, தன் சம்பாத்தியம் அனைத்தும் கொட்டி கோவையில் வீடு வாங்கி அதில் மனைவியை குடியமர்த்தி மஸ்கட் பறந்து போனார்.

ச‌ண்முகம் மஸ்கட்டில் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் இப்போது டிஸ்கோதே கிளப்பிலயும், கேளிக்கைவிளையாட்டிலும் கரையுது. .கோமதிக்கு பல ஆண்களுடனான சகவாசம் வேறு.


வயதான மாமியார், மாமனாரை கவனிப்பதில்லை. அக்கம் பக்கத்தினருடன் சண்டை. வருடம் ஓரிருமுறை இந்தியா வரும் ச‌ண்முகத்திற்கு  கணவன் என்ற மரியாதை கிஞ்சித்தும் இல்லை . வருபவருக்கு சரியான மரியாதை கிடையாது. தன் மேல் தவறை வைத்துக்கொண்ண்டு, அவரையே வேலைக்காரன் போல் நடத்துவார்

இவ்வளவு சம்பாதித்தும், வயதான் பெற்றோரை கவனிக்க முடியாத துக்கத்தினாலேயும் ,தன் குடும்ப மானம் இப்படி கப்பல் ஏறி விட்டதே  என்ற கவலையிலும்  அவர் இந்தியாவிற்கு அதிகம் வருவதில்லை. ஆனால், பணம் மட்டும் கரெக்டா மாசாமாசம்  வந்துவிடும். அது போதுமே அந்த மகராசிக்கு. 

இன்றும் சண்முகம் மஸ்கட்டில் பணி புரிந்து கொண்டுதான் இருக்கிறார். கோமதி தன் லீலைகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. அக்கா பெண், அத்தை பெண் என்பதற்காக இரக்கப்பட்டோ., சொந்த பந்தம் விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்கோ யாரும் திருமணம் செய்ய வேண்டாம்.. மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு தடவைக்கு பல தடவை அக்கம் பக்கம் கேரக்டர் பற்றி விசாரித்து கொள்ளவும். 

2. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ,ஆசை எல்லாருகும் இருந்தாலும் யாருக்கு அது போய்ச்சேர்கிறது என்பதை பார்க்க வேண்டும். மனைவி ஓரிடம், கணவன் ஓரிடம் என பிரிந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.. 

3.  குடும்பத்துக்கு ஆகாத பெண் என்று தெரிய வந்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவள் வழியில் விட்டு விட வேண்டும்.. சும்மா தாங்கிட்டு இருக்கக்கூடாது.. 

4. என்னதான் மனைவி பேரில் பாசம் இருந்தாலும் சம்பாதனை, சொத்து எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்க வேண்டும்.. மனைவி பேரில் எழுதி வைத்து விட்டால் பின் எதிர்காலம்?