Showing posts with label கொலை வழக்கு. Show all posts
Showing posts with label கொலை வழக்கு. Show all posts

Sunday, August 26, 2012

ராஜீவ் காந்தி கொலை பின்னணி - தமிழன் தொலைக்காட்சி

தமிழன் தொலைக்காட்சியில் 16.8.2011 அன்று இரவு 9 மணிக்கு சங்கே முழங்கு நிகழ்ச்சியில் ஒளிபரப்பான தொகுப்பு...

Sunday, July 22, 2012

கொலை செய்யப்பட்ட நடிகை லைலா கான் - கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம்

Laila Khan murder: a family vacation that turned tragic




இந்தி நடிகை லைலா கான், அவரது தாய் மற்றும் உறவினர்கள் என, ஆறு பேரை சொத்துக்காக கொலை செய்தேன் என, போலீசில் சிக்கியுள்ள பர்வேஸ் தக் தெரிவித்துள்ளார். இவர், லைலா கானின் தாயார் ஷலீனாவின் மூன்றாவது கணவர்.



மகாராஷ்டிர தலைநகர் மும்பையில், ஓஷிவாரா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் லைலா கான். பிரபல பாலிவுட் நடிகை. இவரது இயற்பெயர் ரேஷ்மா படேல். 


இவரின் தந்தை நாதிர் படேல், தாய் ஷலீனா படேல்,50. இவரின் மூத்த சகோதரி ஹஸ்மீனா. சகோதரர்கள் சாரா மற்றும் இம்ரான். இவர்கள், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்கள். திடீர் மாயம்பாலிவுட் நடிகை லைலா கான், கடைசியாக, 2008ம் ஆண்டு, பிரபல நடிகர் ராஜேஷ் கன்னாவுடன், "வாபா என்ற இந்தி படத்தில் நடித்தார். தன் தாய் ஷலீனா படேலுடன் வசித்து வந்த லைலா கான், கடந்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல், தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மாயமாகி விட்டார்.

அவர்களை காணவில்லை என, அவரின் தந்தை நாதிர் படேல், மும்பை போலீசில் புகார் செய்தார். புகாரை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை. நடிகையின் மொபைல்போன் எண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மும்பை புறநகர் பகுதி, லகாட்புரியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து, கடைசியாக பேசியது தெரிந்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை.


எலும்பு கூடுகள்: நடிகை லைலா கான் மற்றும் குடும்பத்தினர் மாயமாகி ஓராண்டுக்குப் பின், காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில், அவரது உறவினரும், வனத்துறை ஒப்பந்ததாரருமான பர்வேஸ் தக் என்பவர், போலீசில் சிக்கினார். மோசடி வழக்கில் கைதான அவரிடம் நடத்திய விசாரணையில், மாயமாகிவிட்ட லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தினர், கொலை செய்யப்பட்டு விட்டது தெரிந்தது. 


இரு தினங்களுக்கு முன், பர்வேஸ் தக்கை அழைத்துக் கொண்டு, நாசிக் அருகே உள்ள லகாட்புரி பகுதியில் உள்ள லைலா கானின் பண்ணை வீட்டுக்கு, போலீசார் சென்றனர். அங்கு போலீசார், பர்வேஸ் தக் குறிப்பிட்ட இடங்களை தோண்டிப் பார்த்த போது, ஆறு எலும்புக் கூடுகள் சிக்கின. அவற்றை போலீசார் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பினர்.

மூன்றாவது கணவர்தொடர்ந்து பர்வேஸ் தக்கிடம் போலீசார் விசாரித்த போது, அவர் கூறியதாவது:""நான் லைலா கானின் தாயார் ஷலீனாவின் மூன்றாவது கணவர். கடந்த ஆண்டு லைலா கான், விடுமுறையை கழிப்பதற்காக, தன் குடும்பத்தினருடன் லகாட்புரி பண்ணை வீட்டிற்கு சென்றார். அப்போது, தன் இரண்டாவது கணவரான ஷேக் ஆசிப்பை, சொத்தின் பாதுகாப்பாளராக நியமிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். 


அதற்கான பொது அதிகார பத்திரத்தையும் தயார் செய்தார். இதனால், நான் மிகுந்த கோபம் அடைந்தேன். சொத்தை அபகரிக்க திட்டமிட்டேன்.ஆத்திரத்தில் லைலாவின் தாயார் ஷலீனாவை கொலை செய்தேன். அதை நடிகை லைலா கானும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பார்த்து விட்டதால், எனக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு வாய்ப்புள்ளதால், அவர்களையும் தீர்த்துக் கட்டினேன்.


 கொலை செய்த பின், அவர்களது உடல்களை பண்ணை வீட்டிலேயே புதைத்தேன்.இவ்வாறு பர்வேஸ் தக் கூறினார்.நடிகை லைலா கானின் தாய் ஷலீனாவின் முதல் கணவர் நாதிர் படேல், இரண்டாவது கணவர் ஷேக் ஆசிப் மற்றும் மூன்றாவது கணவர் தான் பர்வேஸ் தக்.


நன்றி - தின மலர்

Wednesday, April 18, 2012

கொலை செய்யப்பட்ட ராமஜெயம் ஆவியுடன் பேசிய ஆவி ராணி பேட்டி காமெடி கும்மி

http://www.thehindu.com/multimedia/dynamic/01037/30THJAYAM_1037557f.jpg'ராமஜெயத்தைக் கொலை செஞ்சவங்களைப் பத்தி தெரிஞ்சுக்க திருச்சி போலீஸ் மோகனூர் போயிருக் காங்க...’ - போலீஸ் வட்டாரத்தில் நமக்கு கிடைத்த ஒரு வரித்தகவல் இது
மோகனூர் எங்கே என்று விசாரித்ததுமே, 'என்ன ஆவியோட பேசப்போறீங்களா?’ என்றுதான் பலரும் கேட்டார்கள். 'அடப் பாவ மே, போலீஸ் கடைசியில் இந்த வழிக்குப் போய் விட்டதா?’
நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் 16-வது கிலோ மீட்டரில் இருக்கிறது மோகனூர்.

சி.பி . - மைக் மோகன் வாழ்ந்த ஊர் தான் மோகனூர்?

 'ஆவியோடு பேசுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டதுமே, ''ஆமாங்க, 'ஆவி ராணின்னு ஒருத்தவங்க இருக்காங்க. மாரியம்மன் கோயிலுக்கு எதிர்லதான் அவங்க வீடு..'' என்று வழி சொல்லி அனுப்பி வைத்தார் பூ விற்கும் ஒரு பெண்.


சி.பி - ஓப்பனிங்க்லயே அவுட்.. ஆவியோட பேசற ஃபிகர் சுடுகாட்டுக்குப்பக்கத்துல தானே இருக்கனும்? அப்போ தானே டிரான்ஸ்போர்ட்க்கு வசதியா இருக்கும்? கோயில் பக்கத்துல இருந்தா ஆவிங்க வர பயப்படாது?

ஆவி ராணியின் வீட்டுக் கதவைத் தட்டினோம். உள்ளே இருந்து எட்டிப்பார்த்த ஒரு பெண், ''ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல மட்டும்தான் ஆவியோட பேச முடியும். அதுவும் நீங்க தனியா வந்தா பேச முடியாது. ஆணும் பொண்ணும் சேர்ந்துதான் வரணும்'' என்று வரிசையாக கண்டிஷன்களைச் சொன்னார்.

சி.பி - திங்கள் கிழமை ஆவி திங்கப்போயிடுமா?புதன் கிழமை பொண்ணு பார்க்கப்போயிடுமா?சனிக்கிழமை சரக்கடிக்கும் டேவா? என்னய்யா கலர் கலரா ரீல் விடறீங்க? மனுஷனுக்கே வாரத்துல ஒரு நாள் தான் லீவ்.. அதுலயும் சில டேமேஜருங்க மாசத்துல 2 சண்டே மீட்டிங்க் வெச்சு கொல்றாங்க. இதுல பேய்ங்களூக்கு எதுக்கு 3 நாள்   லீவ்? ஒரு வேளை அந்த 3 நாட்கள் பேய்களுக்கு மட்டும் மாசாமாசம் வராம வாரா வாரம் வருமோ? 


''நீங்க யாரு..?''

''நான்தான் ஆவி ராணி...'' என்று சொல்லிவிட்டு படக்கென்று கதவை சாத்திக்கொண்டார்.


சி.பி - ஆவி ராணின்னா ஆனந்தவிகடன் படிக்கற ராணீயா?
செவ்வாய்க் கிழமை...மோகனூருக்குப் மீண்டும் சென்றோம். ஆவி ராணி வீட்டு வாசலில் மூன்று குடும்பங்கள் வரிசையில் நின்றது. அவர்களோடு நாமும் காத்திருக்க... மஞ்சள் பூசி, நெற்றி நிறையக் குங்குமத்தோடு சிவப்பு நிறப் புடவையில் வெளியில் வந்தார் ஆவி ராணி.



சி.பி - மறுபடியும் லாஜிக் மிஸ்டேக்.. பேய்க்கு வெள்ளை நிறம் தான் பிடிக்கும். மேல் மருவத்தூர் பக்தை தான் சிவப்பு புடவை கட்டனும். ஹி ஹி 


 ''ஆவியோடு பேசுறவங்க எல்லாம், அரை லிட்டர் நல்லெண்ணெய், சூடம், பத்தி, மூணு எலுமிச்சம்பழம், கை நிறையப் பூ வாங்கிட்டு வந்திடுங்க'' என்று மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்.


சி.பி - ஆவியோட கடலை போட கடலை எண்ணெய் தானே வாங்கிட்டு வரனும்? அதெதுக்கு நல்லெண்ணெய்?
அவர் சொன்ன பொருட்களை எல்லாம் அருகிலிருந்த கடையில் வாங்கிக்கொண்டு மீண்டும் காத்திருந்தோம்


சி.பி - நல்லா விசாரிச்சுப்பாருங்க.. அந்தக்கடையும் அக்கா காண்ட்ராக்ட்டாத்தான் இருக்கும். 

http://2.bp.blogspot.com/-6r2iTxnZnsQ/T3tGEMaNb7I/AAAAAAAABRo/D1x8kqm_njw/s1600/30RAMAJEYAM.jpg.crop_display.jpg
 வரிசைப்படி ஆட்களை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் ராணியின் கணவர். வெளிச்சம் வராத எட்டுக்குப் பத்து அளவுள்ள சின்ன இருட்டு அறை. தரையில் பெரிய சைஸில் மூன்று அம்மன் படங்கள். அதற்கு முன் விளக்கும், பத்தியும் சூடமும் புகைந்து திகில் சூழலை உருவாக்கி இருந்தது. பின்பக்கமாக காலைமடித்து உட்கார்ந்திருந்தார் ஆவி ராணி.


சி.பி - ராணீயின் கணவர் பேரு ராஜாவா? ஹி ஹி சரி இப்போதைக்கு ராணி மணாளன்னு மாத்திக்குவோம்.. அவர் சீக்கிரம் ராணி ”குணா”ளன் ஆகிடுவாரு.. 

ஆவி ராணிக்கும் நமக்கும் நடந்த உரையாடலை அப்படியே தருகிறோம். மற்றபடி இது எவர் சார்ந்த நம்பிக் கையும் அல்ல!

ஆவி ராணி: ''சொல்லுங்க.. என்ன கேட்கணும்?''

சி.பி - கேட்டதெல்லாம் கொடுப்பீங்களா? நீங்க என்ன கர்ணன் சம்சாரமா?
ஜூ.வி: '' செத்துப்போன ஒருத்தரின் ஆவி யோடப் பேசணும்''
ஆவி ராணி: ''செத்து 30 நாள் ஆகி இருந்தால்தான் முழுசாப் பேச முடியும். இருந் தாலும் நீங்க வந்துட்டீங்க. வருதான்னு பார்க்கலாம். ஆவி வந்தா மட்டும் காசு கொடுங்க. இல்லைன்னா வேண்டாம்.''



சி.பி -  நீங்க இதுக்கு முன்னால மணி மேகலைப்பிரசுரத்துல  வேலை செஞ்சீங்களா? அவங்க தான் 30 நாட்களில் சைட் அடிப்பது எப்படி? 30 நாட்களீல் ஃபிகரை செட் செய்வது எப்படி? அப்டினு 30 நாள் புக்கா அள்ளி விட்டாங்க..
நாம் வாங்கிக் கொண்டுபோன எண்ணெய்யை விளக்கில் ஊற்றினார். பத்தியை வாங்கிப் பற்ற வைத்தவர் அதையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார்.
ஆவி ராணி: ''செத்துப்போனவர் பேரைச் சொல்லு...''


சி.பி - செத்துப்போன பின்னாடி யாரா இருந்தாலும் டெட் பாடி தானே?
ஜூ.வி: ''ராமஜெயம்.''
ஆவி ராணி: ''ஊரைச் சொல்லு...''
ஜூ.வி : ''திருச்சி.''
ஆவி ராணி: ''எந்த ஆளுங்க?''
ஜூ.வி: ''ரெட்டியாருங்க...''



சி.பி - இது செம காமெடி.. ஆவிங்க கூட ஒத்துமையா இல்லாம கவுண்டர் ஆவி, முதலியார் ஆவி, செட்டியார் ஆவி அப்டி கேட்டகிரில கூடாரம் போட்டு தனியா தங்கி இருக்கா? அடங்கோ.. 
கொஞ்ச நேரம் பத்தியில் இருந்த புகையை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தவர், உடம்பை ஒரு உலுக்கு உலுக்கி, தலையைச் சிலுப்புகிறார். ராமஜெயத்தின் ஆவி என்று, ராணி பேசுகிறார். இனி, ராமஜெயம் ஆவிக்கும் ஜூ.வி-க்கும் நடந்த உரையாடல்.
ஆவி: ''யாருடா நீ... உன் பேரு என்ன?''
ஜூ.வி: ''ராஜா..''
ஆவி: ''உனக்கு இன்னொரு பேரும் இருக்கு சொல்லு.''
ஜூ.வி: ''ராஜாதிருவேங்கடம்.''
ஆவி: ''டேய்... டேய்... காரு எங்கடா..? டேய்... காரு எங்க..? அண்ணன் எங்கடா?''
ஜூ.வி: ''அண்ணன் ஊர்ல இருக்கார்...''
ஆவி: ( பெருங்குரலெடுத்து மிரட்டும் தொனியில்) ''டேய்ய்... அண்ணன் எங்கடா..? அண்ணனை வரச் சொல்லுடா... டிரைவர் யாருடா..? டிரைவர் எங்க? டேய்... போடா எழுந்திருச்சி. போடா... என்ன நடந்துச்சின்னும் தெரியல. இப்படி வெட்டுப் பட்டுக் கிடக்குறியே.. உன்னை யாரு என்ன பண்ணினாங் கன்னு ரிசல்ட்டு தெரியணும். இதைத்தான்டா கேட்க வந்திருக்க?''


சி.பி - நல்ல வேளை,.. செத்துப்போனது  ஒரு ஆம்பளை.. இதே ஒரு பொண்ணு ரேப் அண்ட் மர்டரா இருந்தா குற்றம் நடந்தது என்ன? கேட்கும்போது கில்மாக்கதையா வெளில வந்திருக்கும்.. அதைக்கேட்டு ஆவி ராணியும், ஜூ வி ராஜாவும் எசகு பிசகா ஆகி இருப்பாங்க.. வட போச்சே
ஜூ.வி.: ''ஆமா... சொல்லுங்க. என்ன நடந்துச்சு?''

ஆவி: ''தெரியலைடா... நான் வண்டியில வந்தேன்டா... ஆளுங்க பின்னாடி வந்தமாதிரி இருக்குடா. முன்னாடி யாரும் வரலடா.''


சி.பி - அண்ணனுக்கு கண்ணு முன்னாலயா? பின்னால பிடனிலயா?
ஜூ.வி: ''உங்களைத் தூக்கிட்டுப் போனது யாரு?''
ஆவி: ''எனக்கு கட்சி வேஷ்டி வாங்கித் தர்றியா? போய் வாங்கிட்டு வா... எனக்கு ஒய்ட் கலர் சட்டை வேணும். டேய் நான் அனாதையாடா? என்னை வாயைப் பொத்தி தூக்கிட்டுப் போயிட்டானுங்கடா... தூக்கிட்டுப் போய் என்னை வேற எடத்துல வெச்சி வேலையை முடிச்சிட்டானுங்கடா.''



சி.பி - வேலையை முடிச்சுட்டானுங்களா? கேங்க் ரேப்பா? அவ்வ்வ்வ்
ஜூ.வி: ''உங்களைக் கடத்தியது யார்?  யாருன்னு சொல்லுங்க... உங்களை கண்ணைக் கட்டியாத் தூக்கிட்டுப் போனாங்க?''
ஆவி: ''என் மொபைல் எங்கடா..? என் மொபைல் எங்கடா?''
ஜூ.வி: ''தெரியலையே...''
கைவிரலையும், கழுத்தையும் காட்டி, மோதிரமும், செயினும் காணோம் என்று சைகையில் சொல்கிறார். கையை முறுக்கிக் காட்டி, கைகளைக் கட்டியதாகச் செய்து காட்டுகிறார். கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து வெட்டுவதைப்போல செய்து காட்டுகிறார்.
ஜூ.வி: ''கழுத்துல வெட்டினாங்களா?''
ஆமாம் என்பதைப் போல தலையை ஆட்டுகிறார்.
ஜூ.வி: ''யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரியலையா?''
ஆவி: ''தெரியலையே... ஒருத்தனா இருந்திருந்தா சமாளிச்சிருப்பேன். நாலு பேரு இருந்தானுங்கடா. நாலு பேரை நான் எப்படி சமாளிப்பேன்? என்னால எதுவும் பண்ண முடியல. முன்விரோதம் நிறைய இருந்தாலும் நான் யாரையும் பகைச்சிக்கலடா. ஊரே என்னைக் கண்டா, பயந்து நடுங்குவாங்கடா. யாரு செஞ்சாங்கன்னு தெரியலடா.''



சி.பி - என்னய்யா ஆள் நீர்/./ 4 பேரை சமாளிக்க முடியலைங்கறீங்க.. 9 தாரா பாருங்க.. எத்தனை பேரை சமாளீக்கறாங்க.. 
ஜூ.வி: ''உங்களை வீட்டுல இருந்து தூக்கிட்டுப் போனாங்களா? இல்ல... வெளியில இருந்தீங்களா? எங்க இருந்து உங்களைக் கடத்தினாங்க?''
ஆவி: ''வீட்டுல இருந்து என்னை எவனாவது தூக்கிட்டுப் போயிடுவாங்களா? எவனுக்குடா அந்தத் தைரியம் இருக்கு? மாந்தோப்புலதான் இருந்தேன். டிரைவரைக் காணோம். யாரோ பின்னால வந்து தூக்கிட்டானுங்கடா.''


சி.பி - நான் மாந்தோப்புல் நின்றிருந்தேன் ... அவள் மாம்பழம் வேண்டும் என்ராள்.. அதை கொடுத்தேன் அவள் வாங்க வில்லை.. என் உயிர் வேண்டும் என்றாள்.. நான் திமிறித்த்திமிறி கத்திப்பார்த்தேன்.. யாரும் எட்டிப்பார்க்கலையே..
ஜூ.வி: ''உங்க குடும்பத்துக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?''
ஆவி: ''கொலைகாரங்களைக் கண்டுபிடிச்ச பிறகு வா... அதுக்கப்புறம் எல்லாம் சொல் றேன்.''
இதுவரை ஆவியாகப் பேசியவர் அடுத்து ராணியாக மாறி, ''இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. 250 ரூபாய் பணத்தை வெத்தலை பாக்குல வெச்சி, சாமிக்கு முன்னாடி வெச்சிட்டுக் கிளம்புங்க. செத்துப்போய் 30 நாளைக்குப் பிறகுதான் ஆவிங்க நிதானமாப் பேசும். அதுக்குப் பிறகு வந்தீங்கன்னா... பேசலாம்'' என்று சொல்லி நம்மை அனுப்பி வைத்தார்.
கிறுகிறுத்துப் போய் வெளியே வந்தோம்!

 ''அமாவாசைக்குள் கொலையாளிகள் சிக்குவாங்க!''
ராமஜெயம் (?!) ஆவியோடு பேசிவிட்டு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, நமது நிருபர் ஒருவர் ஆவி ராணியை சந்தித்தார்.
அப்போது ராணி, நிதானமாகச் சொன்னது இதுதான்:
''எனக்கு சொந்த ஊரு திருச்சி மாவட்டத்துல இருக்கும் தொட்டியம். எனக்கு ஏழு வயசா இருக்கும் போது, 'பொன்னர் சங்கர்கோயிலுக்கு எங்க அப்பா கூட்டிட்டுப் போனார். அங்கேதான் பொன்னர் சங்கர் சாமி என் மேல இறங்கிட்டாங்க

சி.பி - நல்லா யோசிச்சுப்பாருங்க மேடம்.. மேலே இறங்குச்சா? கீழே இறங்குச்சா? ஹய்யோ அய்யோ.. 

 அதுல இருந்தே நான் அருள் வாக்கும், ஆவி வாக்கும் சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.



சி.பி - எப்படி? வாக் போய்ட்டே சொல்வீங்களே.. அதான் வாக்கா?

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-ash2/371799_100003242333571_964632245_n.jpg

 அந்த சமயபுரம் மகமாயிக்கு முன்னாடி உட்கார்ந்து ஊதுபத்தியைக் கொளுத்தி வைக்கிற வரைக்கும்தான் நான் ராணியா இருப்பேன். அதுக்குப் பிறகு, பத்தியில இருந்து வர்ற புகையைப் பார்க்க.. பார்க்க.. நான் கூப்பிடும் ஆவி அந்த புகை வழியா வந்து என் உடம்புல ஏறிக்கும். எனக்கு மட்டும் அந்தப் புகையில ஆவி நிற்கிறது தெரியும்.


சி.பி - அய்யய்யோ.. அப்போ உங்க ஃபர்ஸ்ட் நைட்;ல  சாம்பிராணிப்புகை போட்டு ஒரு மஜாவா இருக்கறப்ப பேய் இறங்கி இருக்குமே? உங்க வீட்டுக்காரர் இறங்குனாரா? ஓடிட்டரா>?

 
1996-ம் வருஷத்துல ஒரு வழக்கு சம்பந்தமாப் பேசணும்னு ஜெயலலிதா அம்மா என்னை வரச்சொன்னதா திருச்சியில இருந்து ஒரு எம்.பி. கூப்பிட்டார். ஆனா எங்க அப்பா, 'யாரா இருந்தாலும் உன்னைத் தேடித்தான் வரணும். நீ போகாதேன்னு சொல்லிட்டார்.



சி.பி - ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்கால பில் கிளிண்டன் கூப்பிட்டாக.. அள்ளீ விடுங்க.. காசா  பணமா? 


 தமிழ்நாடு முழுக்க எத்தனையோ கண்டுபிடிக்க முடியாத கேஸ்களைக் கண்டுபிடிக்க போலீஸ்காரங்க என்னைத் தேடி வருவாங்க.  

சி.பி - கேஸை கரெக்டா கண்டு பிடிச்சுவீங்களா? ஓ பாம்பின் கால் பாம்பறியும்கற மாதிரியா?  இன் கேஸ் உங்களால கண்டு பிடிக்க முடியாத ஏதாவது கேஸ் இருந்தா உங்களை விட பெஸ்ட் கேஸ்  யாராவது அந்த கேஸை கண்டு பிடிப்பாங்களா?

நானும் அவங்க சொல்லும் ஆவிகளோட பேச வச்சிருக்கேன். ஈரோடு கலெக்டரா இருந்தவர் ஒருத்தர், அவங்க குடும்பத்துல இறந்து போன ஒருத்தரோடு பேச என்கிட்ட வந்தார். எவ்வளவு கூட்டம் வந்தாலும், ஒரு நாளைக்கு நாலு பேருக்கு மேல பார்க்கிறது இல்லை'' என்றார்.


சி.பி -  ஓஹோ .. உங்க கெப்பாசிட்டி டெயிலி 4 பேரு.. நீங்க என்ன சினிமா தியேட்டரா? 4 உடன்  நிறுத்திக்க..  எல்லாம் முடிஞ்சு போறப்ப அந்த 4 பேருக்கு நன்றி நு டைட்டில் கார்டு போடுவீங்களா? 
ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளிகள் எப்போது சிக்குவார்கள் என்று கேட்டபோது, ''வரப்போற அமாவாசைக்குள்ள, கொலை செஞ்சவங்க போலீஸ்ல சிக்கிடுவாங்க'' என்று ஆருடம் சொல்லி இருக்கிறார்.