Showing posts with label கூடன்குளம். Show all posts
Showing posts with label கூடன்குளம். Show all posts

Friday, December 07, 2012

அன்புள்ள முதல்வருக்கு கூடங்குளம் மக்கள் சார்பில் ஒரு கடிதம்



தமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடிதம்


பிப்ரவரி 25, 2012 13:32
அன்புள்ள அம்மா,

வணக்கம்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து தாங்கள் நடத்திவரும் நல்லாட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்னையில் 2001,செப்டம்பர் மாதம் எங்களை அழைத்து, நேரில் சந்தித்து, எங்கள் கருத்துகளை கரிசனத்தோடு கேட்டு, எங்கள் மக்களின் அச்சங்கள்,பயங்களை அகற்றும்வரை, அணு மின்நிலைய வேலைகளை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றி, உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் திருப்தி எனக்கும் எனது அரசுக்கும் முக்கியம் என்றும் உறுதியளித்தீர்கள். எங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சனநாயக முறையில் அறவழியில் பதிவுசெய்ய அனுமதித்தீர்கள்.இவற்றுக்கெல்லாம் நாங்கள் எங்கள் ஆழமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடங்குளம் அணுமின் திட்டம் மத்திய அரசின் திட்டமென்பதும், எங்கள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அணுசக்தி பிரச்சனையில் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை நாடறியும். 2007 சூன் 26 அன்று அமெரிக்க அணுசக்தி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, இதை கடுமையாக எதிர்த்தீர்கள். அதேபோன்று இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தையும் அது ஏற்புடையதல்ல என்று அறிவித்து தீர்க்கதரிசனத்தோடு அதை எதிர்த்தீர்கள். அணுசக்தியின் தீமைகள்,கடுமையான விளைவுகள் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள். இந்தப் பின்னணியில் தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எங்கள் போராட்டம் தொடங்கி, தங்களை நேரில் சந்தித்த பிறகு பல எதிர்வினைகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவை பற்றிய தன்னிலை விளக்கங்களை அளித்திட தயவுசெய்து என்னை என்னை அனுமதியுங்கள்.

1. 1980 களிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை பலர் தலைமையிலே நடத்திக் கொண்டு வருகிறோம். 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வரவிருந்த போது, மக்கள் போராட்டங்களால் அது கைவிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் நடந்த மாபெரும் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்து, ஆறு பேர் குண்டடிபட்டனர். தொடக்கத்திலிருந்து இன்றுவரை பல நூறு தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இவையனைத்தும் ஊடகங்களிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தங்களிடம் நான் நேரில் விளக்கியது போன்று, எங்கள் போராட்டத்திற்கும் திமுகவுக்கோ வேறு எந்தக் கட்சிக்குமோ எந்த தொடர்பும் கிடையாது. எனது தந்தையார் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து கொள்கைக்காக திமுகவில் இருந்தவர். அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்காக இயங்க ஆரம்பித்த பிறகு முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டவர். திமுக எம்பி கனிமொழி தனது பாராளுமன்றக் கன்னிப் பேச்சில் அணுசக்தியை ஆதரித்துப் பேசியபோது,. எங்கள் இயக்கம் அதைக் கண்டித்து அதை விமர்சித்து 'காலச்சுவடு' இதழிலே நான் கட்டுரை எழுதினேன். எனக்கோ, எங்கள் போராட்டக் குழு உறுப்பினர்களுக்கோ அரசியல் ஆசைகளோ, எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகள் மீது மோகமோ கடுகளவும் கிடையாது என்பதை தங்களுக்குத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

2. எங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டிலிருந்தோ, பன்னாட்டு, இந்திய தொண்டு நிறுவனங்களிலிருந்தோ, தனியார், கட்சிகளிடமிருந்தோ எந்தப் பணமோ வேறு உதவிகளோ வந்ததுமில்லை. இப்போது வரவுமில்லை. எந்த சாதி, மத நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. எங்கள் மீனவ மக்களும், விவசாயிகளும், வர்த்தகர்களும், தொழிலாளர்களும், பீடி சுற்றும் பெண்களும் தருகின்ற சிறிய நன்கொடைகளை வைத்து மிகச் சிக்கனமாக செலவு செய்து காந்திய வழியில் எளிமையாகப் போராடி வருகிறோம். பிற ஊர்களில் இருந்து வருபவர்கள் போக்குவரத்து செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். போராட்டங்களுக்கு வருபவர்களுக்கு வெறும் தண்ணீர் மட்டுமே நாங்கள் கொடுக்கிறோம். இது முழு உண்மை.

 3. நான் 1989 ஆகஸ்ட் முதல் 2001 வரை அமெரிக்காவில் எம்.ஏ மற்றும் பிஎச்டி பட்டப்படிப்புகள் படித்துவந்தேன். பின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக, ஆசிரியராகப் பணியாற்றினேன். எனது மனைவியும் நானும் அன்றும் இன்றும் என்றும் இந்தியக் குடிமக்களாகவே இருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அந்நாட்டு குடியுரிமையை இயற்கையாகவே பெற்றாலும் அவர்கள் தமிழ்மண்ணில் தமிழர்களாக இந்தியர்களாக வாழவேண்டுமென விரும்பியதால் எங்கள் 2 வயது, மூன்று மாதக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கின்ற எனக்கு அமெரிக்க அரசுடனோ அதன் நிறுவனங்களோடா எந்தவிதமான தொடர்போ கிடையாது. அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு வருகைதரு பேராசிரியாராக மட்டுமே போய் வருகிறேன்.

 4. போராடுகின்ற எங்கள் மக்களில் இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரோ, சாதியினரோ நடத்துகின்ற போராட்டமல்ல இது. தமிழ் மக்களாக எங்கள் வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரத்திற்காக நடத்துகின்ற போராட்டம். நாங்கள் எங்களைத் தமிழராக இந்தியராக மனிதர்களாக மட்டுமே பார்க்கிறோம்.

 5. கூடங்குளம் அணுமின்நிலையம், எங்கள் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல், எந்தவிதமான உண்மைத் தகவல்களையும் தராமல், சனநாயக மரபுகளுக்கு எதிராக எங்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கூட 23 ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பெற்றிருக்கிறோம். இந்தியாவிலுள்ள மிகச்சிறிய அணுமின் நிலையங்களைப் போலல்லாமல் கூடங்குளம் அணு உலைகள் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்ற பூதாகரமானவை. ஒரு சிறிய அசம்பாவிதம் கூட பலத்த விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் கடினப்பாறைகள் போதுமான தடிமன் உடையவையாக இல்லை. இந்தப் பகுதியில் பல ஊர்களில் எரிமலைக் குழம்பு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்பகுதி பூமிக்குள் கார்ஸ்ட் குழிகள் என்னும் எபறும் வெற்றிடங்கள் இருக்கின்றன. எங்கள் பகுதி கடலுக்குள் பெரும் வண்டல் குவியங்கள் இருக்கின்றன. அவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டால் சுனாமி எழும் வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் நீரியல், நிலவியில், கடலியல் வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான எதிர்தரப்பு வாதங்களை சற்றும் பொருட்படுத்தாது, எங்கள் பகுதிக்கு வந்த டாக்டர் அப்துல் கலாம், மத்திய அரசு நியமித்த டாக்டர் முத்து நாயகம் குழு போன்றோர் கூடங்குளத்தில் நிலநடுக்கம் வராது, சுனாமி வராது, அணுஉலை பாதுகாப்பாக இருக்கிறது என்று வெறுமனே சொல்லிச் செல்கிறார்கள். அணுஉலை பாதுகாப்பு என்பது வெறும் கட்டங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்தது மட்டுமல்ல. மக்களின் பாதுகாப்பு பற்றி யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. அணு உலைகளின் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் பற்றி பேச மறுக்கிறார்கள். அணு உலை சாதாரணமாக இயங்கும்போதே அதிலிருந்து வெளிப்படும் "தினசரி வாடிக்கையான வெளிப்பாடுகள்" காற்றின் மூலமாகவும் நீரின் வழியாகவும் வெளிப்பட்டு மக்களைப் பாதிக்கும்.

ஆண்டுதோறும் 30 டன் அணுக்கழிவுகளை உற்பத்தி செய்து, அவற்றை எங்கள் மண்ணில் சேமித்து வைத்து, 40 முதல் 60 ஆண்டுகள் வரை அணு உலை இயங்கி முடித்தபிறகு, அதனை செயலிழக்கச் செய்து, பல்லாண்டுகள் பாதுகாத்து எங்கள் மண்ணை நீரை காற்றைப் பாதிப்புக்குள்ளாக்கும் அணுசக்தி துறை, கணக்கற்ற அளவு தண்ணீரை மீண்டும் கடலுக்குள் கொட்டும்போது எந்த பின்விளைவும் ஏற்படாது என்று எங்களை நம்பச்சொல்கிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் உள்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

இத்தகைய பாதுகாப்புக் குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகும் முத்துநாயகம் குழு அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை அளித்தது. நாங்கள் கேட்ட அடிப்படைத் தகவல்களைத் தரவில்லை. இந்நிலையில் தாங்கள் தலையிட்டு டாக்டர் இனியன் தலைமையில் மாநிலக் குழு ஒன்றை நியமித்தீர்கள். ஆனால் அணுசக்தித் துறையின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் அந்தக்குழுவில் இடம்பெற்றது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையால் அதனையும் ஏற்றுக்கொண்டோம்.





இனியன் குழு பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் அணு உலைக்குள் போய்விட்டு ஓரிரு மணிநேரங்கள் அங்கே இருந்துவிட்டு வந்தார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி நேரங்கள் எங்கள் போராட்டக் குழுவைச் சார்ந்த ஒன்பது பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தார்கள். அவர்களிடம் எ


ங்கள் நிபுணர் குழுவைச் சந்தித்துப் பேசவும், எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவந்து மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்கவும் மன்றாடினோம். அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்களின் அரசு என்று தங்களின் அரசை தாங்கள் கருதிச் சொல்லப்படுகின்ற நிலையில் தாங்கள் நியமித்த குழு எங்கள் மக்களைப் புறந்தள்ளியது வேதனை அளிக்கிறது. இதற்கிடையே இறுதி அறிக்கையை தங்களிடம் தருவதற்கு முன்பே கூடங்குளம் அணு உலைக்கு நற்சான்று வழங்கி தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது இனியன் குழு.

மக்களை அழிக்காது, வாழ்வாதாரங்களை நசுக்காது, எதிர்காலத் தலைமுறையை ஒழிக்காது, மாற்று வழிகளிலே மின்சாரம் தயாரிக்கு தங்களின் திட்டங்களை நாங்கள் வணங்கி வரவேற்கிறோம். ஆனால் அதற்கான உதவிகளைத் தர மறுக்கின்ற மத்திய அரசு, நான்கு தனியார் அனல் மின்நிலையங்களை முடக்கி தமிழகத்தில் மின்வெட்டை அதிகமாக்கி தங்கள் அரசையும், தமிழ் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் அறிவோம். நாங்கள் மின்சாரத்தை எதிர்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த ஏழை மக்கள் நலமாக வேண்டுமென்று விரும்புகிறோம். அவர்கள் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களாக மாற்ற தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நாம் செய்த செலவுகள் வீணாகாது. அமெரிக்காவிலுள்ள ஷோர்ஹம் அணுஉலை மக்களுடைய எதிர்ப்பால் இப்படி மாற்றப்பட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இறுதியாக தமிழகம் புகுஷிமா போன்ற ஓர் அணு உலை விபத்தை தாங்கிக்கொள்ளாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2006 ஆம் ஆஃண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கன்னங்குளம், அஞ்சுகிராமம், அழகப்ப்புரம், மயிலாடி, சுவாமித்தோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. கூடங்குளம் அணு உலை இயங்கினால் இப்படி ஒரு நிலநடுக்கம் நடந்தால் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வாழும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும்' என்பது வள்ளுவம்.

அடித்தட்டு மக்களுக்கும் வாழும் உரிமை, வாழ்வாதார உரிமை உண்டெனக் கருதும் செயல்படும் தாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நேரடியாகத் தைலயிட்டு எட்டு கோடி தமிழ் மக்களைக் காக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. இந்தியாவின் அரசியல் கட்சிகள் சிலவும் அரசியல்வாதிகள் பலரும் அமெரிக்காவுக்காக, ரஷியாவுக்காக, பிரான்ஸ் நாட்டுக்காக, பன்னாட்டு நிறுவனங்களுக்காக, இந்திய முதலாளிகளுக்காக, இந்திய முதலாளிகளுக்காக ஏவல் வேலை செய்யும்போது தாங்கள் சாதாரண மக்களுக்காக உழைப்பது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது. தங்கள் தலைமை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் கிடைக்கட்டும். 120 கோடி மக்களும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெறட்டும். வெள்ளைக்காரர்களின் அடிமை தேசமாக இல்லாமல் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற தலைமை தேசமாக மாற்றட்டும் என்று தங்களின் 64 ஆவது பிறந்த நாளில் போராடும் மக்கள் சார்பாக தங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். இறையருள் இனிது பயக்கட்டும்!

தங்கள் உண்மையுள்ள,

சுப. உதயகுமார்

ஒருங்கிணைப்பாளர்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
இடிந்தகரை



நன்றி - த சண்டே இந்தியன்

Monday, January 16, 2012

ஒய் திஸ் உலை வெறி? - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்

 ஓ பக்கங்கள் ஞாநி இந்த வார கல்கியில் ( கல்கி 14.1.2012 ) மத்திய அரசின்  பொய்யான பிரச்சாரம் பற்றி காட்டமாக விமர்சித்திருகிறார்.. சமீப காலமாக  மீடியாக்களில் அரசின் அணு உலை ஆதரவுப்பிரச்சாரம் ஒரு எல்லையை மீறி சென்று கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்..

கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன் அணுசக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் அவை போடும் விளம்பரங்களைப் பார்த்தால் அணு மின் நிலையம் இல்லாத இடங்களில்தான் புற்று நோய் அதிகம் என்றும் அணுமின் நிலையம் இருந்தால் புற்று நோய் அந்த வட்டாரத்தில் குறைந்துவிடுவதாகவும் தெரிகிறது.


உலக அளவில் இப்படி ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். 


புற்று நோய் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா புற்று நோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று அரசு பிரசாரத்தில் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. கதிரியக்கம் எப்படி புற்று நோயை ஏற்படுத்துகிது என்று மலைமலையாகத் தகவல்கள், ஆய்வுகள் கொட்டிக் கிடக்கின்றன இணையத்தில் உலகம் முழுவதும் கதிரியக்கம் புற்று நோயை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம். 


அதுவே பொய் என்று ஒரு டாக்டரை சொல்லவைக்கிறது இந்திய அரசு. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி ரொம்பத் தெளிவாகவே சொல்ல்யிருக்கிறான்.

இந்திய அரசு தூண்டிவிட்டிருக்கும் இன்னொரு பிரசாரம் கூடங்குளம் அணு மின் நிலையம் வராவிட்டால் தமிழகமே இருண்டுவிடும் என்பதாகும். கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் வருமாம். 


இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. 


ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான். 


இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான். 


இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம்.


ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 


இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில் 4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும். 


காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது. 


சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத் தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில் 300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில் இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம் 2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் ! 


சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று அணு ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வது இன்னொரு பொய். எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு கிலோவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம். 


இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. 


ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள். 


காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்பது அவர்களின் இன்னொரு வாதம். முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார், ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ் நடத்தச் சொல்வோமா ? 


இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம், விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது. 


இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத் தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம். 


மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில் ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது. அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது. 


சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம். போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம். 


வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி தெரியுமா? இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள் கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது.

உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. . 


இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது. 


இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல் பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது. 


அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டும். 

ஏன் இந்திய அரசுக்கு மட்டும் இந்த கொலைவெறியான உலைவெறி?


Saturday, September 17, 2011

'அணு சக்தி... அழிவு சக்தி! கூடங்குளம் குப்பைக்கூளம்!!!! ஜூ வி கட்டுரை..

கூடங்குளம் வேண்டாம்!''

உக்கிரமாகும் உண்ணாவிரதம்!
'அணு சக்தி... அழிவு சக்தி!’ என்ற கோஷம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில்... நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் ஆதரவுடன் அணு உலைகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதை எதிர்த்து, கொதித்தெழுந்து நெருப்பைக் கக்குகிறார்கள் மக்களும், மக்கள் இயக்கங்களும்!


ரஷ்ய அரசின் ஒத்துழைப்புடன் 13,500 கோடி முதலீட்டில் நடந்து வரும் இந்த அணு உலைகளின் மெகா திட்டத்தை நிறைவேற்றி, அதன் மூலம் இந்த ஆண்டுக்குள் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.


இதை எதிர்த்து போராடிய மக்களின் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றை ஒடுக்க, காவல் துறை அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்ய... கொந்தளித்த மக்கள், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜை சந்தித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் 127 பேர் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகத்துக்குப் பெரும் தலைவலி!



உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனிடம் பேசினோம். ''அணு சக்தியால் லாபத்தைவிடவும் இழப்பே அதிகம். 'நமக்கு மட்டும் அல்லாமல் வருங்கால சந்ததியையும் அழித்து ஒழிக்கக்கூடிய அணு உலையை இங்கே மட்டும் அல்ல, எங்கேயும் அமைக்க வேண்டாம்’ என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இந்த மக்களும், 'அணு உலையால் சாவதைவிடவும் பட்டினிகிடந்து அற வழியில் உயிரைவிடுவோம்’ என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்!' என்றார்.


இதற்கிடையே, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இடிந்தகரைக்கு வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பால பிரஜாபதி அடிகள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான குமாரதாஸ் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இது தவிர, அண்ணா ஹஜாரே, மேத்தா பட்கர் உள்ளிட்ட சமூகப் போராளிகளும் வருவார்கள் என்பதால், போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.


இதனிடையே, 'அணு உலை அமைக்கும் பணி முடிவடையும் சமயத்தில், இத்தகைய போராட்டங்கள் நடத்துவது நியாயமா? இதற்காகச் செலவிட்ட பணம் இழப்பாகிவிடுமே?’ என அணு மின் நிலையத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி போராட்டக் குழுவைச் சேர்ந்தவரும், தமிழகம் - புதுவை மீனவ மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான ஆண்டன் கோமஸிடம் கேட்டதற்கு, ''கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டோம் என்பதற்காக நாமே சாவைத் தேடிக்கொள்ள முடியுமா? ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் நிறையப் பேருக்கு புற்றுநோய் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

லட்சக்கணக்கில் செலவு செய்து மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்த பிறகு, கடைசி நேரத்தில் மணமகனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால், 'இவ்வளவு செலவு செஞ்சுட்டோமே... பரவாயில்லை’னு விட்டு விடுவோமா?' என்று எதிர் கேள்வி கேட்டார்.


அணு சக்தித் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் பிரதமரின் காதுகளுக்கு எட்டுமா இந்த அபலை மக்களின் கூக்குரல்?


-
 ''எவ்வித ஆபத்தும் இல்லை...''


கூடங்குளம் அணு மின் திட்டத்தின் வளாக இயக்குநர் எம்.காசிநாத் பாலாஜியிடம் மக்கள் கூறும் புகார்கள் பற்றி கேட்டபோது, ''இந்தியாவில் செயல்படும் 6 அணு மின் நிலையங்களைப் போன்றுதான் கூடங்குளத்திலும் செயல்படப் போகிறது. எதிர்பாராத விபத்து, கதிர்வீச்சு போன்ற எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை.


உலக அணு சக்தி கழகம் வகுத்துள்ள பாதுகாப்பு கோட்பாடுகளை இங்கே பின்பற்றுகிறோம். தற்போது பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். இந்த சூழ்நிலையில் உள்ளூர் மக்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டுமோ என்றெல்லாம் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதுபோன்ற சூழ்நிலை எப்போதும் வராது.


உலகத்தில் எங்குமே இல்லாத விசேஷ பாதுகாப்பு ஏற்பாடு களாக,  40 மீட்டர் உயரத்தில் இயல்புநிலை குளிர்விப்பானை (ஹீட் எக்ஸ்சேஞ்சர்) வடிவமைத்து இருக்கிறோம். அதனால் கதிர் வீச்சு எந்தவகையிலும் வெளியேற வாய்ப்பே இல்லை. நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கக்கூடிய வகையில் கடல் மட்டத்தில் இருந்து ஏழரை மீட்டர் உயரத்தில் அணு மின் நிலைய கட்டடத்தை அமைத்துள்ளோம்.

அணு மின் நிலைய வளாகத்தின் ஒரு புறம் கடல் பகுதியை ஒட்டி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக 500 மீட்டர் வரை மீன் பிடிக்க வேண்டாம். அதற்கு அப்பால் தாராளமாக மீன் பிடித்துக் கொள்ளலாம். இதுகூட, நாட்டின் பாதுகாப்பு நலன் கருதிதான். கதிர்வீச்சு பாதிப்பு குறித்து ஆராய, பாபா அணு மின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வகம் ஒன்று கூடங்குளம் ஏரியாவில் 2004 முதல் இயங்கி வருவது மக்களுக்குத் தெரியும்.

அணு மின் நிலையம் துவங்கியபிறகும் அந்த ஆய்வகம் தொடர்ந்து இங்கேதான் இயங்கப் போகிறது. புற்றுநோய் வரும் என்பதெல்லாம் வெறும் வதந்தியே. இங்கே கதிர்வீச்சு வெளியே வரவே வராது எனும்போது எப்படி பாதிப்புகள் ஏற்படும்?'' என்று கேள்விகளை எழுப்பினார்.





சி.பி - சுனாமி எல்லாம் வரவே வராதுன்னு சொல்லலையா?வந்த பின் திண்டாடுவதை விட வரும் முன் காப்போம்!!

நமது பதிவர் பாலா உண்ணாவிரதத்தில் உள்ளார். 

http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_17.html#comments


1. டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தால், குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று கருத்துள்ளதே? 

சி.பி - மக்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி கூடத்தான் தவிர்க்கப்பட்டிருக்கும். யோவ்! நடந்து முடிஞ்சதைப்பற்றி என்ன பேச்சு? இனி ஆக வேண்டிய வேலையைப்பாருங்க!


அசம்பாவிதம் தடுக்கப்பட்டு இருக்கலாம்!

கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்கேனர் இயந் திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற பார் கவுன்சில் கோரிக்கை விடுத்து இருந்ததாம். ஏல நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தக் கருவிகள் இன்னமும் வந்து சேரவில்லை. டெல்லி போலீஸும் தங்களுக்குத் தேவையான சி.சி.டி.வி. கேமராக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை முடிவெடுக்க முடியாமல் நாட்களைக் கடத்தியது. இந்தக் காலதாமதமும் தான் இத்தனை உயிர்ப் பலிகளுக்குக் காரணம்!



ஏற்கெனவே மே 25-ம் தேதி இதே வளாகத்தில் குண்டு வெடித்தது. இப்போது இரண்டாம் முறை. 'உலகில் எங்குமே பயங்கரவாதிகள் ஒரே இடத்தை இரு முறை குறிவைத்துத் தாக்கியது இல்லை. இது இந்தியப் பாதுகாப்பு அமைப்பில் இருக்கும் படுகேவலமான கேலிக்கூத்து’ என்று டெல்லிப் பத்திரிகையாளர் ஒருவர் எழுதி உள்ளார். ஒரே இடத்தில் எத்தனை தடவை குண்டு வைத்தாலும் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது எல்லா பயங்கரவாத அமைப்புகளுக்கும் தெரிந்திருக்கிறது.


பிரதமரும் உள்துறை அமைச்சரும்  கணக்கில் கெட்டிக்காரர்களாக இருக்கலாம், ஆனால், காவலுக்குக் கெட்டிக்காரர்கள் இல்லை!



2. 'திருக்குறளின் நல்ல கருத்தைக் கேட்டுவிட்டு சபையைவிட்டு வெளியே வந்துவிடுகிறோம்’ என்கிறார்களே தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்? 

திருக்குறளின் நல்ல கருத்துகளைக் கேட்டு நடந்திருந்தால், எதிர்க் கட்சியாகும் நிலைமையே வந்திருக்காதே!

 சி.பி - யோவ், அதுக்கு ஏன்யா அங்கே போறீங்க? கலைஞரின் குறளோவியம் படிச்சுட்டு கமுக்கமா வீட்லயே இருந்துக்க வேண்டியதுதானே?



3. 'மதுவிலக்கு கொண்டுவருவதுபற்றியும் மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்றும் வாய் கிழியப் பேசுபவர்கள்தான், கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள்’ என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே! யார் என்று தெரிகிறதா? 


இதில் ரகசியம் என்ன இருக்கிறது? ராமதாஸைத்தான் சொல்கிறார் ஜெயலலிதா. இதே வார்த்தைகளைக் கருணாநிதி சொல்லி இருந்தால் ராமதாஸ் என்ன கர்ஜனை செய்திருப்பார்? ஜெயலலிதா சொன்னதைக் கேட்டும்... கேளாதவர் மாதிரி ஆகிவிட்டார். டாக்டரிடம்தான் எவ்வளவு மாற்றம்?

 சி.பி - அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!!!!!!


4. எதிர்த்துப் பேசிப் பதில் அளிக்க... எந்த எதிர்க் கட்சியும் இல்லாத சட்டசபை நிகழ்ச்சிகள்பற்றி..? 


'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்கிறார் முதல்வர். அவர் இதைத்தான் எதிர்பார்த்தார். அதுவே நடக்கிறது!

சி.பி - உள்ளாட்சித்தேர்தல்ல கேப்டன்க்கு  அல்வான்னு கன்ஃபர்ம் ஆகிடுச்சு, இனி பாருங்க, களை கட்டும் ...கேப்டன் மப்புல புள்ளி விபரம் சொல்வார் பாருங்க!



5. இரும்பு மண்வெட்டி 'ஸ்டாலின்’, வெள்ளி மண்வெட்டி 'அழகிரி’, தங்க மண்வெட்டி 'கனிமொழி’... போன்ற கதைகளை அமைச்சர் பேசியது சரியா? 


அமைச்சர் ந.சுப்பிரமணியம் தனது ஆதிதிராவிடர் நலத் துறையில் செயல்படுத்த எத்தனையோ ஆக்கபூர்வமான திட்டங்கள் இருக்கின்றன. இதுபோன்ற வெட்டிக் கதைகளை விடுத்து உருப்படியான காரியங்களில் ஈடுபடு வது மட்டுமே... அவரின் பொது வாழ்வுக்கு நல்லது!


  சி.பி - அண்ணன் அஞ்சாங்கிளாஸ் வரை தான் படிச்சிருப்பார் போல!!!!!!!


6. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்து சாதித்தது என்ன? 


அதை அவர்தான் சொல்லவேண்டும். ஆனால், அவர்தான் எதையும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லையே!

பேரறிவாளன், சாந்தன், முருகன் விஷயத்திலும் அவர் மௌனமே பதில். தூக்கு போட தேதி குறித்த செய்தியைக் கேள்விப் பட்டதும் ப.சிதம்பரத்துக்கு வைகோ போன் செய்திருக்கிறார். லைனுக்கு வரவில்லை ப.சி. காலை முதல் மாலை வரை பல தடவை முயற்சித்தும் ப.சி. பேசவில்லையாம். 'செய்தி உண்மையா? இல்லையா? என்பதையாவது கேட்டுச் சொல்லுங்கள்’ என்று உதவியாள ரிடம் சொல்ல... அதற்கு மட்டும் 'உண்மைதான்’ என்று பதில் சொல்லச் சொல்லி இருக்கிறார்

. இதை எனக்குச் சொன்ன ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர், 'புலிகளை ஆதரித்ததற்காக பொடாவில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த வைகோவை, சிவகங்கை தொகுதி பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தவரும் இதே சிதம்பரம்தான்’ என்றார்.


அரசியலும் பதவிகளும்தான் மனிதர்களின் குணங் களைத் தீர்மானிக்கின்றன!

சி.பி - மார்க்கெட் வால்யூ என்பதையும் சேர்த்துக்குங்க. 


7. ஓட்டுக்குப் பணம் குற்றம்... ஓட்டுக்குப் பின் இலவசம் குற்றம் இல்லையா? 


அது அதைவிடப் பெரிய குற்றம்தான்! ஓட்டுக்கு பணம், இரவில் தரப்படுகிறது. இலவசங் கள், பட்டப்பகலில் கிடைக்கின்றன. அது ஒரு கட்சியின், தனி மனிதர்களின் பணம். ஆனால் இலவசங்கள்... அரசாங்கத்தின், அனைத்து மக்க ளின் பணம்!


ஓட்டுக்கு பணம் வாங்குவதற்குச் சிலர் வெட்கப்படுகிறார்கள். ஆனால், டி.வி., மிக்ஸி கிடைத்ததைப் பெருமையாக நினைக்கிறார்கள். இரண்டுமே பாவங்கள்தான்!


சி.பி - கோயிலுக்கு உள்ளே போய் பாவம் பண்ணுனாலும், வெளில வந்து பாவம் பண்ணுனாலும் பாவம் பாவம் தானே?


8. தொடர்ந்து என்னைக் கவலைகள் வாட்டுகிறதே? 


'கவலைகள் - பறவைகள். அவை உங்கள் தலைக்கு மேலே பறப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால், உங்கள் தலையின் மேல் அவை கூடு கட்டவிடாமல் தடுக்க முடியும்’ என்கிறது சீனப் பழமொழி!

 சி.பி - ஒரு சம்சாரம்மட்டும் கட்டி இருந்தா ஒரு கவலை, பல சம்சாரம் கட்டி இருந்தா பல கவலை!


9. இன்றைய நிலையில் துணிச்சலான தமிழகத் தலைவர் யார்? 


தங்கபாலுதான்!


'நானும் எவ்வளவு நாள்தான் தலைவராவே நடிக்கிறது?’ எனத் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டும், எவ்வளவு தைரியமான 'தலைவராக’ வலம் வருகிறார்! அவரைவிடத் துணிச்சலானவர் உண்டா சொல்லுங்கள்?

 சி.பி - கலைஞர் தான். சன் டி வி , கலைஞர் டி விக்கு ஆப்புன்னு தெரிஞ்சும், தன் குடும்பமே ஜெயில் வாசத்துல இருந்தும் இன்னும் வலிக்காதது மாதிரியே நடிக்கறாரே? குருதிப்புனல்ல கமல் பேசும் வசனம் தான் நினைவு வருது.  தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி நடிக்கறது.

tks - ju vi


டிஸ்கி 1 -

எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2 -

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்