Showing posts with label கார்த்தி. Show all posts
Showing posts with label கார்த்தி. Show all posts

Monday, December 23, 2019

தம்பி - சினிமா விமர்சனம்

thambi movie के लिए इमेज परिणाम

த்ரிஷ்யம் படம் கேரளா சினி  இண்டஸ்ட்ரியையே புரட்டிப்போட்ட பிரமாதமான  படம், லோ பட்ஜெட் ல எடுக்கப்பட்டு ஹை கலெக்சன் பார்த்த மலையாள க்ரைம் த்ரில்லர் . அதே இயக்குநர் ஜீத்து  ஜோசப் அதை தமிழில் பாபநாசம் என எடுத்தார் . அதுவும் ஹிட் அவர் இப்போ  த பாடி என ஒரு ஹிந்திப்படம் ரிலீஸ் பண்ணார் , இது 2016ல வந்த ஒரு மெல்லிய கோடு எனும் தமிழ் படத்தின் அதிகார பூர்வ ரீமேக்  ( அதிகாராப்பூர்வ ரீமேக்னா அட்லீ, முருகதாஸ் மாதிரி ஆட்டையைப்போடாம காசு கொடுத்து உரிமையை விலைக்கு வாங்கி பண்றது )


 இப்போ தமிழில் தம்பி எடுத்திருக்கார் . இது  சீமான் இயக்கத்தில் மாதவன் நடிச்ச தம்பி கதை அல்ல ., வேற புதுக்கதை 

மேட்டுப்பாளையத்தில்  ஒரு அரசியல் தலைவர்  ( சத்யராஜ்) தன் மனைவி (சீதா) ,  மகள் ( ஜோதிகா) வுடன் வசித்து வருகிறார். அவரோட மகன் 15 வருசத்துக்கு முன்னாடி  காணாம போய்ட்டான்., காணாமப்போன  மகன் இப்போ கோவாவில் இருப்பதா தகவல் வருது , கோவா போய் மகனை அழைச்ட்டு வர்றார். ஆனா அவன் நிஜமான வாரிசு இல்லை , ஃபிராடு


 அவன்  ஊருக்கு வந்ததும்,  அந்தக்குடும்பத்துல என்ன மாற்றம் நிகழுது ? அவனை கொலை செய்ய யார் திட்டம் போடறா.? காணாமப்போன நிஜ மகன் கதி என்ன? என அடுக்கடுக்காக ச்ஸ்பென்ஸ் முடிச்சுகள் .


முதல் பாதி  கலகலப்பா போகுது.  ஃபிராடு பார்ட்டியா கார்த்தி விக் வெச்ட்டு வர்ற காட்சிகள் சகிக்கலை ,. அவருக்கு விக்கும் பொருந்தலை ,  வீட்ல ஒவ்வொரு கேரக்டர் கூடவும் ஹீரோ எப்படி மிங்கிள் ஆகறார். அல்லது ஆகலை என்ற கோணத்தில் முதல் பாதி பெரிய அளவில் சுவராஸ்யமா இல்லாட்டியும்  பரவால்லாம போகுது. 


 நிஜ வாழ்வில்  அண்ணியான ஜோதிகா சினிமாவில் அக்கா ரோல் . கார்த்தி அளவுக்கு இல்லைன்னாலும் நல்லாவே பண்ணி இருக்கார் ஜோ. இவருக்கான ஸ்கோப் கம்மி , ஆனா இவருக்கு காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கலக்கல் 


 குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு கேரக்டர்  இளவரசு , இவர் குணசித்திர வேடமாகட்டும்  வில்லன்  ரோல் ஆகட்டும் அடிச்சு தூக்கறார்

சத்யராஜின் அனுபவம் மிக்க நடிப்பு அங்கங்கே படத்தை தொய்வில் இருந்து காப்பாத்துது 


சவுகார் ஜானகிக்கு ஒரு ரோல் , ஓவர் மேக்கப் , க்ளோசப் காட்சிகள்ல படுத்துது ..


நாயகியாக  நிகிலா விமல் ,  வந்தவரை குட் 


க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  பிரமாதம் இல்லை என்றாலும்  ரசிக்க வைக்கிறது 

 96 பட இசை அமைப்பாளர்  கோவிந்த் வசந்தா தான் இதுக்கும் இசை , பிரமாதம் என சொல்ல முடியலை


thambi movie nikhila vimal के लिए इमेज परिणाम

நச் வசனங்கள்

1   மீனுக்கு இரையைக்குடுத்து தரைல விட்ட மாதிரி.... #thambi



2  பசியைக்கூட சமாளிச்சுடலாம், ஆனா தனிமையை.....



3   எங்கே வெளீல போனாலும் வீட்டுக்கு வர்றப்ப சாப்பிட்டாச்சா?னு கேட்க 2 ஜீவன் இருக்கனும்

4  அன்பு எல்லாத்தையும் மாத்தும்


5  வாழ்க்கை பூரா இரண்டாவது இடத்துலயே இருக்கறது ரொம்ப சிரமம் , கஷ்டம் 

6   ஒரு குடும்பம் உடஞ்சு போகாம இருக்க எத்தனை பேர் எத்தனை தியாகங்களை செய்ய வேண்டியதா இருக்கு ?


7  ஒரு அக்காங்கறது 2 அம்மாவுக்கு சமம்



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1   சபாஷ் டைரக்டர் − ரியல் லைப்ல கார்த்தி யின் அண்ணியான ஜோதிகா வை படத்தில் அக்காவாக நடிக்க வைத்தது நல்ல ஐடியா,ஆடியன்ஸ் நல்லா ரசிக்கறாங்க,குறிப்பா ஜோதிகா வின் டிரஸ்சிங்சென்ஸ் அழகு,கார்த்தியின் குறும்புத்தன நடிப்பு படத்தின் +,இடைவேளை வரை ok #thambi


2  ஒரு கேரக்டருக்கான பில்டப்பை மத்தவங்க குடுக்கனும்,அவரு அப்டியாக்கும் ,இப்டியாக்கும்னு ,அதான் கெத்து,அந்த கேரக்டரே தற்குறிப்பு ஏற்ற அணியில் விளக்கீட்டு இருக்கக்கூடாது,சத்யராஜ்கேரக்டர் #thambi

3  விக் வெச்ச கெட்டப் கார்த்தி க்கு எடுபடலை,இப்ப எல்லாம் யார் சார் விக் வைக்கறாங்க? #thambi



சபாஷ் டைரக்டர்

 1  முதல் பாதியை ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் காமெடியாக கொண்டு போனது


2 இளவரசு , சத்யராஜ்  கேரக்டர் வடிவமைப்பு


3   பின் பாதி முழுக்க த்ரில்லராக திரைக்கதையை நகர்த்திய விதம் 



thambi movie nikhila vimal के लिए इमेज परिणाम
 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1− ஆள்மாறாட்ட பிளானில் இளவரசும்,கார்த்தியும் ஈடுபடுவதற்கு பொய்யான DNA டெஸ்ட் ரெடி பண்றாங்க,ஆனா வாரிசு இவர்தானா?என சந்தேகப்படும் போலீஸ் கேரக்டர் தனியா வேற ஒரு ஹாஸ்பிடல்ல அவர் மேற்பார்வை ல நடத்த ஏன் முயற்சிக்கல? #thambi


2  தம்பி படத்தோட இயக்குநர் ஜீத்து ஜோசப் (த்ரிஷ்யம் ,பாபநாசம்) கே.பாக்யராஜ் சாரோட ரசிகர் போல.8/5/1981 ல ரிலீஸ் ஆன விடியும் வரை காத்திரு மாதிரி கொஞ்சம்

14/4/1991 ல ரிலீஸ் ஆன பவுனு பவுனு தான் பட கதைக்கரு னு ட்ரை பண்றாரு போல.பத்தாததுக்கு முந்தானை முடிச்சு ல வந்த தவக்களை கேரக்டர் மாதிரி பிரமாதமான சுட்டிப்பையன் கேரக்டர் வேற #thambi



4 படத்துல போலீஸ் ஆஃபீசர் முதல் ஹீரோ வரை யாருமே டூ வீலர்ல போறப்போ ஹெல்மெட் போடறதில்லை , கார்ல போறப்ப சீட் பெல்ட் போடறதில்லை


5 நட்ட நடு ராத்திரில திருடனுங்க வீட்ல மெயின் ஸ்விட்சை ஆஃப் பண்ணி கரண்ட் கட் பண்றாங்க , அப்போ ஃபேன் எல்லாம் ஆஃப் ஆகி வியர்த்து எல்லாரும் எழுந்திருக்கனு மே? 6 பேரும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க


6 ஒரு சீன்ல சவுகார் ஜானகி வெணும்னே கீழே விழற மாதிரி ஆக்ட் பண்றாரு அப்போ ஃபேமில இருக்கும் எல்லாரும் அவர் பக்கம் வர்றாங்க எல்லாரும் அவரையே பார்த்துட்டு இருக்கும்போது ஹீரோ க்கு மட்டும் சிக்னல் கொடுத்து அந்த ரூம்ல இருக்கற லெட்டரை எடுனு கண் அடிக்கறார். கிது க்ளோசப் ஷாட் ல , ஆனா லாங் ஷாட்ல எல்லாரும் அவர் முகத்தையே பார்த்துட்டு இருக்காங்க


7   கொலை செய்யப்பட்ட டெட் பாடியை  வீட்லயோ , அருகாமை இடத்துலயோ புதைப்பது பாதுகாப்பா ? கார்ல டிக்கில வெச்சு அதை போர்த்தியோ , மறைச்சோ கொண்டு போகாம  பெப்பரப்பேனு பப்ளிகா ஊரெல்லாம்   ரவுண்ட் அடிச்சு கொண்டு போறது பாதுகாப்பா? 


8  டெட்பாடியை புதைச்சு பல வருடங்கள் ஆன நிலைல அது எலும்புக்கூடாகி மண்ணோட மண்ணா கலந்திருக்கும், ஆனா 15 வருசம் கழிச்சு அந்த இடத்துல ரியல் எஸ்டேட் வர்றதால தோண்டுனா தன் குட்டு  வெளிப்பட்டுடும்னு கொலைகாரன் பயப்படுவது எந்த வகையில் ?


nikhila vimal hot के लिए इमेज परिणाम



 விகடன் மார்க் ( யூகம்)   43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5  / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 3 /5  ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-  தம்பி −(2019) முதல்பாதி நமக்குப்பழக்கமான குடும்ப வாரிசு ஆள்மாறாட்டக்காமெடி "பேமிலி டிராமா".பின் பாதி ஜீத்து ஜோசப்பின் ஸ்பெஷல் பிராண்ட் க்ரைம் த்ரில்லர், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓரளவு எதிர்பார்த்ததே,லேடீஸ் ஆடியன்சைக்கவரும் ஜோதிகா,கார்த்தி நடிப்பு குட் . க்ரைம் த்ரில்லரில் சென்ட்டிமென்ட்ஸ் ஒர்க் அவுட் ஆவது அபூர்வமே,விகடன் 43 ,ரேட்டிங் 3 /5 ,ஏ,பி சென்ட்டர்களில் ஹிட் அடிச்சிடும் ,சி.கா வின் ஹீரோ படத்துக்கு இந்தப்படத்தின் வெற்றி மேலும் ஒரு பின்னடைவு #thambi


Friday, April 03, 2015

கொம்பனைக்கழுவி ஊற்றிய ட்வீட்டர் வம்பர்கள்

படம்: ட்விட்டர் பதிவுகள்
படம்: ட்விட்டர் பதிவுகள்
சில பல அமர்க்கள அரங்கேற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது கார்த்தி நடித்த கொம்பன். முதல் நாள் முதல் காட்சி பார்த்த கையோடும், தியேட்டரில் இருந்தபடியும் கொம்பன் பற்றிய குறும்பதிவு பார்வைகளை ட்விட்டரில் தெறித்து வருகிறார்கள் ரசிகர்கள். அத்தகைய கொம்பன்தெறிப்புகளின் சாம்பில்கள் இங்கே ட்வீட்டாம்லேட்டில்...
நடிகர் விவேக் ‏@Actor_Vivek - கொம்பன் பார்த்தேன். ஒரு மாமனார் மருமகன் உறவை உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த சாதியும் இழிவுபடுத்தப்படவில்லை.
ஷாந்தனு பாக்யராஜ் ‏@imKBRshanthnu - தவறான நோக்கத்தோடு படத்தின் வெளியீட்டை சிலர் தடுத்தனர். கொம்பன் அடைந்திருக்கும் வெற்றி, தமிழ் சினிமா துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன்.
சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - நான் மறுபடி மறுபடி கொம்பன் வெளியீட்டைத் தடுக்கக்கூடாது எனச் சொல்வதன் காரணம்... நாளைக்கு மெட்ராஸ் போன்ற படங்களையும் இதே பாணியில் தடுப்பார்கள். :-(
கோபிகாஷேக் ‏@kobikashok - இவங்க சொல்ற மாதிரி சாதிக் கலவரம் வராது என்பது படம் பார்த்தவங்களுக்கு தான் தெரியும். #கொம்பன் ஓர் அருமையான படம்.
கொம்பன் மோக்கியா ‏@Mokiyanew - @gvprakash ப்ரோ கொம்பன் பாடல் & பின்னணி இசை சூப்பர். ஒரே வருத்தம் என்னனா? க்ளைமேக்ஸ்ல மங்காத்தா மியூசிக் போட்டுடீங்களே ப்ரோ..
பாரதி ‏@BharathiBigB - ரிலீஸ் ஆகறதுக்கு முன்னதான்யா பதற்றமான சூழல் இருந்துச்சி. இப்ப ஒரு சத்தமும் இல்ல #கொம்பன்
முத்து ‏@ViscomMuthu - கொம்பன் படத்துல ஜெயில் கைதிகளுக்கு அதிகபட்ச Punishment டா ஜில்லா படத்த போட்டு காட்றாங்க.
களபிரர் ‏@ponnumanis - கொம்பன் ஓரளவு வசூல் பண்ணினா, அதில கொஞ்சம் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு கொடுக்குறது தான் தொழில் தர்மம்.
ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - ஆக எல்லாருமா சேர்ந்து ஒரு புள்ளப்பூச்சியை அடிச்சிருக்கீங்க... அதுல உங்களுக்கு வெங்கலக் கிண்ணம் வேற வேணுமாக்கும்! #கொம்பன்
தனிக்காட்டு ராஜா ‏@Er_Thameem - உஸ்ஸ்ஸ்! இந்த கொம்பன் படத்துக்கான அரசியல் எங்கூர்ல ஆரம்பமாகுது போல... ஐநூறுக்கும் மேல போலீஸ் குவிப்பு... நல்லா வருவீங்கயா.
clash of clans ‏@thunder - என்னடா கொம்பன் படத்துக்கு இவ்ளோ எதிர்ப்பு வருதேன்னு பாத்தா : )ஓப்பனிங் சீன்ல ஜில்லா படம் + இளையதளபதி என்டராமே?? #கொம்பன்
kandasamy ‏@kandasamykk - எதற்காக இந்த படத்திற்கு தடை கேட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!
கார்க்கிபவா ‏@iamkarki - கார்த்தி கைல இருக்கிற பச்ச கயித்த தவிர பெருசா ஒண்ணும் சேதாரத்த காணோமே.... கட் பண்ணிட்டானுங்கன்னு முட்டு கொடுப்போம் #கொம்பன்
kandasamy ‏@kandasamykk - எத்தனை முறை லென்ஸ் வைத்து பார்த்தாலும் ஜாதிச்சண்டையை தூண்டிவிடும்படியான ஒரு காட்சி கூட நமக்கு தெரியவில்லை #Komban
suguna.diwakar@facebook - "முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!"
"ஒரு பொண்ணுக்குப் பெத்தவன் நெத்தி மாதிரி. ஆனா கட்டினவன் பொட்டு மாதிரி"
"என் பையன் இருக்கானே, அவன் கொல்லையில இருக்கிற சாணி மாதிரி. அவனை இந்த ஊர்க்காரங்க எருவா மாத்திட்டாங்க. நீதான் அந்த சாணியைப் பிடிச்சுப் பிள்ளையார் ஆக்கணும்"
- இவையெல்லாம் #கொம்பன் படம் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ள தத்துவ முத்துகள்.
அதாரு Naveen ‏@mechnaveen1206 - கைதிகளே ஜெயிலில் இருக்கோம்னு சோகத்துல இருப்பானுங்க... அதுல அவைங்கள கூப்டு உக்கார வச்சு ஜில்லா படம் ஓட்டுறானுங்க... உஸ்ஸ் பாவம் யா #கொம்பன்
மதிஇளம்பரிதி.பெ.கொ.ப ‏@ortoncena007 - #கொம்பன் பழைய சோத்தை அழகான தட்டுல வெச்சு பரிமாறி இருக்குறாங்க!!
வாழவந்தார் ‏@Iam_SuMu - ஓஹோ! கொம்பன் படம் எப்படினு சொல்றதை வச்சி சாதி கண்டுப்பிடிக்குறாங்கடோய்!!
Qüëéñ Sāmãñthá ‏@sarath_krrish - கொம்பன் = குட்டிபுலி 2 | நண்பேண்டா = அழகுராஜா 2 | #சகாப்தம் ஏப்புடி???

Tuesday, March 31, 2015

கொம்பன்' பிரச்சினை க்ளியர்டு - ஏப்ரல் 1 ல் முன் கூட்டியே ரிலீஸ்

'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் 'கொம்பன்' படத்தை இன்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன், கொம்பன் பட இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாணு : '' 'கிழக்குச் சீமையிலே' படம் மாதிரி காவியமான படம் 'கொம்பன்'. இந்தப் படத்தில் எந்த சாதிய மோதலும் இல்லை. எந்த சூழலிலும் யாரையும் இழிவுபடுத்தவேண்டும் என்று எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. ஆனா, ஏன் இப்படிப்பட்ட இன்னலில் சிக்கி இருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை.'' என்று தாணு பேசினார்.
சரத்குமார்: ''படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது.
மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.
மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.
எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.



பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து.'' என்று சரத்குமார் பேசினார்.
விக்கிரமன்: '' 'கொம்பன்' படத்தில் ஹீரோ எந்த சாதி என்பதைக் கூட படத்தில் சொல்லவில்லை. இரு சாதியினருக்கான மோதல் என்கிற பிரச்சினை கிடையவே கிடையாது. இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தவறாகத் தெரிகிறது.
இதில் சாதி மோதலைத் தூண்டுவதைப் போல இருக்கிறது என்று படம் பார்த்துவிட்டு யாராவது சொன்னால் நான் திரையுலகத்தை விட்டே போய்விடுகிறேன்.'' என்று விக்கிரமன் பேசினார்.
ஞானவேல்ராஜா: '' மார்ச் 27ம் தேதி 'கொம்பன்' ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டபோது எந்த போராட்டமும், வழக்கும் இல்லை. ஆனால், 'கொம்பன்' படத்தின் வேலைகள் முடியாததால் ஏப்ரல் 2ல் ரிலீஸ் என்று திட்டமிட்டோம்.2ம் தேதி ரிலீஸ் என்றதும் அத்தனைப் பிரச்சினைகளும் பூதாகரம் ஆனது. ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸ் என்றால் இந்தப் பிரச்சினையே எனக்கு இல்லை'' என்றார்.
பத்திரிகையாளார் சந்திப்பின்போது ஞானவேல்ராஜா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினார்.
ஏப்ரல் 2 அன்று வெளியாக இருந்த 'கொம்பன்' திரைப்படம் ஏப்ரல் 1 (புதன்கிழமை) அன்று ரிலீஸ் ஆகிறது.


'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 1 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ஏப்ரல் 2ல் 'கொம்பன்' திரைப்படம் வெளியாகிறது.

  • எந்த படத்தை எதிர்த்து வழக்கு போட்டா பிரபலமாக முடியுமோ அந்த படாத எதிர்த்து தான் எல்லாம் பண்ணுவாங்க.. ஒரு புது நடிகருட படமா இருந்திருந்த இத பத்தி பேசவே மாட்டாங்க !.... தட்டிய கேட்க 1000 ஜாதி பிரச்சனை நம்ம நாட்டுல இருக்கு , அதெல்லாம் விட்டுபுட்டு சினிமா படத்து மேல எங்க வழக்கு போடுறீங்க !...
    Points
    335
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Reegan Reegan Lecturer at lecturer in college 
      இனி வரும் காலங்களில் படத்தை தணிக்கை குழுவிடம் காண்பிபதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள எல்லா சாதி கட்சி மதம் சார்ந்த கட்சிகளிடம் காண்பிக்க வேன்டும் என சொல்லி போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி . ஒரு தணிக்கை குழுவினால் சான்றிதழ் வழங்கிய படத்தினை எதிர்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . எல்லாவற்றையும் விட சிறந்த ஒரு விசயம் என்னவென்றால் ஒரு படத்தை பொழுது போக்கு நிகழ்வாக பார்க்கும் பொழுது எந்த பிரச்சினையும் வர வாய்ப்பு இல்லை .
      about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Durairaj  
        திரைப்பட தணிக்கை துறையிலே இதற்கு ஆட்சேபனை எழுந்துள்ளது என்று கேள்வி. மறு தணிக்கை செய்யப்பட்டதே ஏதோ ஒரு காரணத்திற்குத்தானே. திரைப்பட துறையில் ஒரு குறிபிட்ட ஜாதியை பெருமைபடுத்தி படம் எடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.
        Points
        1315
        about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Parthi  
          கமல் சண்டியர் என பெயர் வைத்த உடனே வரிந்து கட்டி கொண்டு வந்த கிருஷ்ணசாமி சில மாதங்களுக்கு முன் சண்டியர் என படம் வந்த போது மட்டும் தூங்கி கொண்டு இருந்தாரா ...ஏன் பிரபலங்களின் படங்களை எதிர்த்தால் மட்டும் தான் கிருஷ்ணசாமி என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டவா
          Points
          2315
          about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
          • மாரிச்சாமி  
            பாரதி தம்பி திரு.க. கிருஷ்ணாசாமி எதிர்ப்பது ஜாதி ஏற்ற தாழ்வுகளை மட்டுமே தவிர வேருன்றும் இல்லை.....ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் உயர்த்தி பேசுவது சரி அல்ல.......
            about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Chandra_USA  
            ஜாதி வேறுபாடு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. அதை சினிமாவில் கட்டினால் தவறா?
            Points
            14240
            about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • DuraiRaj  
              நீங்கள் சொல்வது சரிதான். சமிபத்தில் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினாரால் 60 கொலைகள் நடந்துள்ளது. அந்த ஜாதியின் தவறை சுட்டிக்காட்டி யாராவது படம் எடுப்பார்களா?
              about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Navneeth  
              நல்லது . தேவையில்லாத விமர்சனங்கள் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு இது எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை போலும் ...முதலில் சண்டியர்.பின்பு விஸ்வரூபம்.அடுத்து கொம்பன் ..உழைப்பின் கஷ்டம் நம் அரசியல் வாதிகளுக்கு தெரியாது அல்லவா அதான் போலும்..அ
            நன்றி - த இந்து

            Tuesday, March 24, 2015

            கொம்பன் -ராஜ்கிரண் நடிக்க வேண்டிய படம் - கார்த்தி பேட்டி

            “இயக்குநர் முத்தையாவோட வாழ்க்கையில் அவருடைய அப்பாவிற்கும், தாத்தாவிற்கும் நடந்த ஈகோ யுத்தத்தைத்தான் கதையாக வடிவமைத்திருக்கிறார். இதில் சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் கூட நடந்திருக்கின்றன” என 'கொம்பன்' படம் எப்படித் தனக்கு நெருக்கமானது என்று உற்சாகமாகத் தொடங்கினார் கார்த்தி
            கொம்பன் படத்தின் கதை என்ன?
            ராமநாதபுரம் ஏரியா ஆப்பநாடு பகுதியில் ஆடு வியாபாரம் செய்கிறவன்தான் கொம்பையா பாண்டியன். தண்ணி அடிக்காத, கெட்ட பழக்கம் இல்லாத நல்லவன். இந்த மாதிரியான கதாபாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணியது இல்லை. மாமனார் - மருமகன் ஈகோதான் கதைக்கரு. ராஜ்கிரண்தான் நடிக்கணும்னு பல ஆண்டுகளாக இந்தக் கதையை வைத்திருந்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
            திருமணமான புதிதில் புது மாப்பிள்ளைகள் மாமனாரை வம்புக்கு இழுப்பார்கள். அவர் வீட்டில் இருக்கும்போதே, “உங்கப்பா சாப்பிட்டாரா”னு கிண்டல் பண்ணுவாங்க. கல்யாணம் ஆன உடனே மாமனார் - மருமகன் இருவருக்குள் நடக்கும் காமெடி, உரசல் எல்லாம் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது.
            கல்யாணத்திற்கு முன்பு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பல கதைகள் வந்திருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகு நடப்பது பற்றிய காட்சிகள் அமைந்த படங்கள் குறைவு. அதிலும் மாமனார் - மருமகன் உறவில் சமீபத்தில் எந்தப் படமும் வந்ததில்லை. அந்த வகையில் ‘கொம்பன்' அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
            படத்தின் விளம்பரங்களில் ‘பருத்தி வீரன்’ படத்தின் சாயல் தெரிகிறதே..
            ‘பருத்தி வீரன்' படத்தில் இருந்து வேற மாதிரித் தெரிய வேண்டும் என்று மீசை எல்லாம் வைத்துப் போய்ப் பார்த்தால் எல்லாருமே அந்த மாவட்டத்தில் இதே மாதிரிதான் மீசை வைத்திருந்தார்கள். அந்த ஊர்க்காரனாக மாற என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாமே பண்ணியிருக்கிறேன்.
            ‘பருத்தி வீரன்' படத்தை இன்னும் மறக்காமல் இருப்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. முடிந்தளவிற்கு அப்படத்தின் ஞாபகம் வராமல்தான் நடித்திருக்கிறேன். ‘கொம்பன்' ஆரம்பிக்கும்போது ‘பருத்தி வீரன்' ஞாபகம் வந்தாலும், முடியும்போது கண்டிப்பாக இது வேறு படம் என்று ரசிகர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
            தொடர்ச்சியாகக் கிராமத்து வேடங்களே வருகிறது என்று லட்சுமி மேனன் சலித்துக்கொண்டிருக்கிறார் கவனித்தீர்களா?
            திரையுலகை விட்டு விலக இருக்கிறார் என்று செய்திகள்கூட வந்தது. பிறகுதான் அந்தச் செய்தி தவறு என்று கேள்விப்பட்டேன். லட்சுமி மேனனுக்கு உண்மையில் நடிப்பைவிடப் படிப்பில் ஆர்வம் இருக்கிறது. ஒரே மாதிரியான கிராமத்து வேடங்களே வருகிறதே என்ற எண்ணம் அவங்ககிட்ட இருக்கிறது.
            நகரத்தில் வளர்ந்த பெண், மார்டனான பெண். ஆனால் கிராமத்து வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவதால் அனைவருமே அதே மாதிரியான வேடத்திற்கு அவரைக் கூப்பிடுகிறார்கள். ஒரு நடிகையாக அவங்களுக்கு போர் அடிக்கத்தான் செய்யும். மற்றபடி சினிமா மேல கோபம் எல்லாம் இல்லை. திறமையான நடிகை.
            அண்ணனும், தம்பியும் வெவ்வேறு கதைக்களங்களில் படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறீர்களே எப்படி?
            அமையுறதுதான். நல்ல கதைகள், நல்ல இயக்குநர்கள் நம்மைத் தேடி வர வேண்டும். நல்லவேளை எனக்கு அவரை மாதிரிப் படங்கள் அமையவில்லை. அவர்கூட யார் போட்டி போடுவது? இருவருடைய படங்களும் வேறு மாதிரி அமைவது சந்தோஷமாக இருக்கிறது.
            ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ் மாதிரி உங்களுக்குப் போட்டி யார்?
            ஏன் இப்படிச் சிக்கலில் மாட்ட வைக்க நினைக்கிறீர்கள். என்னுடைய முந்தைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும்தான் போட்டி. என் படத்தைப் பார்க்க வருபவர்கள் என்னிடம் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். நான் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லையே!
            எனது முந்தைய படத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பொறுத்துதான் அடுத்த படத்திற்கு மக்கள் வருகிறார்கள். முந்தைய படத்தைவிட இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது, எவ்வளவு தரமாக இருக்கிறது இதைதான் பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்குமே அவருடைய முந்தைய படத்தோடுதான் போட்டி என்பது என் கருத்து.
            வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
            ஒவ்வொரு படத்துக்கும் உழைக்கிறேன். நிறைய உழைத்த படங்கள் சரியாகப் போகாதபோது ரொம்ப வருத்தப்படுவேன். ஆனால், அப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த படத்தைப் பாதிக்கும். ஒரு படம் தோல்விக்கு நான் மட்டுமே காரணம் கிடையாது. ஆனால், எல்லாப் பொறுப்பும் என்னைத்தான் பாதிக்கும். தோல்வி வரும்போது எல்லாம் அடுத்த படம் ஜெயிக்கிறோம் என்று தன்னம்பிக்கையோடு எழுந்துவிடுவேன்.
            இந்தப் படத்தை நான் பண்ணியிருக்கணும் என்று நீங்கள் நினைத்த படம் எது?
            ‘மெட்ராஸ்' அப்படி நான் பண்ணிய படம்தான். அந்தப் படம் எனக்காக உருவாக்கப்பட்டதில்லை. கதையைப் படித்தபோது ரொம்ப பிடித்தது. என்னை அப்படத்துக்குப் பொருத்திக் கொண்டேன். மற்றபடி நான் பார்க்கும் படங்கள் நல்லாயிருக்கும்போது, நாம் நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தது இல்லை. படம் நல்லாயிருக்கும் பட்சத்தில் படக்குழுவினருக்குப் போன் பண்ணி மனதாரப் பாராட்டிவிடுவேன். அது தான் என்னுடைய பாணி.
            உங்கள் படத்தின் கதை, காட்சிகள் பற்றி உங்கள் மனைவியிடம் பேசுவீர்களா?
            நீங்க வேற. அப்படி எல்லாம் பேச ஆரம்பித்தால் வீட்டில் சண்டை வந்துவிடும். வீட்டிற்குப் போனால் சினிமாவை மறந்துவிடுவேன். படத்தைப் பற்றி பேசினாலே, “24 மணி நேரமும் படத்தைப் பற்றி சிந்திக்கிறீங்களே” என்று மனைவி கேட்பார். அதனால் என் படத்தைப் பற்றி மனைவியோடு விவாதிப்பதில்லை.


            thanx  - the hindu



            • Gow  
              Enaku Surya Na Romba Pidikum Karthi Unga Padam Madras சூப்பர் Komban Padam Vetri Pera Vazhthukal
              2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Shankar  
                சூரியாவிடம் ஒரே போன்ற நடிப்பு உள்ளது.நமக்கு அவரிடம் இருந்த லயிப்பு போய் அலுப்பு வந்து விட்டது.இவரும் ஒரு groove இல் வந்து விட்டார்.இந்த இருவரின் அளப்பல்கள் வேறு நம்மை படுத்துகின்றன.
                Points
                15400
                2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • பூபாலன்  
                  அண்ணணோடு மோதினா அண்ணன் படம் ஓடாது
                  3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Jay  
                    ஒரு ஆண் அவன் வீட்டிலேயே அவன் செய்யும் தொழில் பற்றி சுதந்திரமாக பேச முடியவில்லை என்பதை கூட ஏதோ பெரிய நகைச்சுவை போல சொல்லிகொள்கிறான் ! கொடுமை !
                    Points
                    3525
                    3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                    • செல்வகுமார Chozhan  
                      சாதிய ரீதியான படங்களில் நடிப்பதை முதலில் நிறுத்தவும். ஏற்கனவே பருத்திவீரனில் சேர்வையாக, இப்போ கொம்பனில் மறவராக. நடிகர் சிவகுமாருக்கு மகனாக பிறந்து ஒரு தமிழரான நீங்களே எப்படி இது போன்ற படங்களில் கூச்ச நாச்சம் இல்லாமல் நடிக்கீன்றீர்கள்? கடந்த மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்ட கொலைகள். பாதிக்கப்பட்டது தமிழ் சமூகங்களான தேவேந்திர குல வேளாளர் (மள்ளர்), கோனார் (இடையர்), நாடார்(சானார்). கொலை செய்தது ஒரே சமூகம்....
                      3 days ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
                      • shankar  
                        இன்னும் இந்த தமிழ் சமூகம் இப்படி எதாவது பிடித்துகொண்டு உருப்படாமல்போய் கொண்டு இருங்கள்...படத்தை படமாக பாருங்கள் அது ஒரு சமூகத்தின் கண்ணாடி.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்.have tolerance .