Showing posts with label காஜல் அகர்வால். Show all posts
Showing posts with label காஜல் அகர்வால். Show all posts

Thursday, August 15, 2019

கோமாளி - சினிமா விமர்சனம்



ஹீரோ ஸ்கூல்ல படிக்கறப்ப தன் முத லவ்வை தன் முத காதலி கிட்டே முதல் தடவையா வெளிபடுத்தும்போது ஒரு விபத்து . 16 வருசம்   கோமா ல விழறான். அவன் உணர்வு தெளிஞ்சு எழும்போது படு,ம் ஆச்சரியங்கள் தான் சுவராஸ்யமான முதல் பாதி .


 ஆனா இயக்குநர்  பின் பாதி திரைக்கதைல எதுக்கு ரிஸ்க்? சேஃப்டி ஜோன்ல போய்டுவோம்னு வழக்கமான மசாலா ,சிலை கடத்தல் , அடைதல் , வில்லன் செண்ட்டிமெண்ட் என பேக் அடிச்ட்டார். இல்லைன்னா இது சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரி செம ஹிட் அடிச்சிருக்க வேண்டிய படம் ,


 ஹீரோவா செயம் ரவி 3 பட தனுஷ் மாதிரி  ஸ்கூல் ஸ்டூடண்ட்டா வரும்  தொடக்கக்காட்சிகள் அசத்தல் . க்ளைமாக்ஸில் பேசும் செண்ட்டிமெண்ட் வசனம் , வில்லனின் மனைவியிடம் பேசும் வசனம் எல்லாம் தாய்க்குலங்களை உச் கொட்ட வைப்பவை. ஜெயம் ரவிக்கு இது ஒரு ஹிட் படம் 



ஹீரோயினா 2  பேரு

 சம்யுக்தா ஹெக்டே  ஸ்கூல் மாண்வியா வரும்போது காட்டும் பாவனைகளை விட  பிஉன் பாதியில்  டாக்டரின் மனைவியாக வரும்போத்பு காட்டும் பாவனைகள் அசத்தல் 


இன்னொரு நாயகியா காஜில் ஜில் அகர் வாவ் வா;ல் . ஆனா பெரிய வாய்ப்பு எதும் இல்லை , க்ளைமாக்ஸ் ல செய்ற்கையான ஆச்சரியம் காட்றது , செயற்கையான நடிப்புனு ஒட்டலை . ஒரு டூயட் கிருக்கு,ம் சீன் பார்க்கறவங்க் லைட்டா பாத்துக்கலாம்



இன்னொரு ஹீரோ மாதிரி படம் முழுக்க யோகி பாபு வர்றார். இவருக்கு காமெடியை விட செண்ட்டிமெண்ட் நல்லா வருது.இதே ரூட் ல போறது நல்லது


கே எஸ்  ரவிக்குமார்  வில்லன்  ரோல்.  கொடூரம் அதிகம் இல்லாம செண்ட்டிமெண்ட் க்கு மயங்கும் ஆளாக  காட்டிட்டாங்க


 ஜெயம் ரவியின்  தங்கையாக வருபவர் அந்த நீளமான சோக கோப  டயலாக்கை கொட்டும்போது ஆக்டிங்கோ ஆக்டிங்க் ஓவர்  ஆக்டிங். வாங்குன ம்காசுக்கு மட்டும் நடிங்கம்மா 

டாக்டராக , ஹீரோவின் முன்னாள் காதலியின் இன்னாள் கணவராக வருபவர் நடிப்பு அடடே! இவங்க  3 பேர் சம்;பந்தப்பட்ட காட்சிகள் அல்லோலகல்லோலப்படுத்துது. பேசாம கதையை இதே டைப்புல் காமெடி  டபுள் மீனிங் கில்மா த்ரில்லரா கொண்டு போய் இருக்கலாம்


இசை சுமார் ரகம் தான் . வசனகர்த்தா பல இடங்களில் பளிச்


 இய்க்குநருக்கு இது  முதல் படம் என்பதால் ஆங்காங்கே நகாசு வேலைகள் , மெனக்கெடல்கள் தெரிகின்றன . தமிழ் சினிமாவுக்கு ஆரோக்ய வரவு



நச் வசனங்கள்


1   1000 பேர் 1000 சொன்னாலும் நமக்குப்பிடிச்ச வேலையை நாம செஞ்சிட்டே இருக்கனும் விட்ரக்கூடாது,என்னைக்காவது ஒரு நாள் யூஸ் ஆகும் #ComaliReview



இந்த உலகத்துல அழறவங்க""தன் கஷ்டத்தை நீ தீர்த்து வைப்ப னு உன் முன் அழறதில்லை.நான்"இருக்கேன் ,கவலைப்படாதேனு நீ ஒரு ஆறுதல் வார்த்தை சொல்வே னு தான் அழறாங்க,அதனால உன் முன் யாராவது அழுதா ஆறுதல் சொல் ,போதும் #ComaliReview ( டச்சிங் டயலாக்)


3 டாக்டர்,உங்க ஒய்ப் இவனோட லவ்வர்

அய்யோ
இருங்க,மாத்தி சொல்றேன்,இவனோட லவ்வர் தான் உங்க ஒய்ப்
அய்யய்யோ #ComaliReview


4 போலிங்க எத்தனை வேணா இருக்கலாம்,ஆனா "அசல்" ஒண்ணு தான் #ComaliReview ( யாரோட ரெப்ரென்ஸ்னு தனியா ஒரு வரி எழுத தேவையில்லைனு நினைக்கறேன்)


5 ஒருத்தருக்கு நம்மைப்பிடிக்கனும்னா அவங்களை சிரிக்க வெச்சா போதும் #Comali (ஜோக் சொல்ல ட்ரை பண்ணுங்க, கிச்சு கிச்சு பண்ணி சிரிக்க வைக்கக்கூடாது)


6 சாப்ட்டியா? தூங்கினியா நல்லா? - இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் நம்ம அம்மாவைத்தவிர வேற யார் கேட்டிட ,முடியும்? #Comali



7 வாட்டர் தான் நம்மை சேவ் பண்ணும், இப்போ நிலைமை பாருங்க சேவ் வாட்டர்னு சொல்ற அளவுக்கு போய்டுச்சு #Comali


8 புருசனும் பொண்டாட்டியும் ஒரே வீட்ல வாழ்றதுதான் இப்போ ஜாயிண்ட் ஃபேமிலினு ஆகிடுச்சு #Comali


9 உன்னை மாதிரி சில பொண்ணுங்க சிங்கிளா இருக்கறதாலதான் என்னை மாதிரி பல பசங்க உயிரோடயே வாழ முடியுது #Comali


10 நம்ம அம்மாக்கள் நமக்கு நிலாவைக்காட்டி சோறு ஊட்டுனாங்க , இப்போதைய அம்மாக்கள் செல்ஃபோனை காட்டி சோறு ஊட்டுறாங்க ., ஆனா அடிப்படை சோறு ஊட்டறதுங்கறது மாறலை #Comali



11 டாக்டர், இது நம்ம குழந்தையா?

யோவ், என் குழந்தை

ஜாடை தெரியலயே? அதான் கேட்டேன் #Comali



12 என்னடி சொல்றே? உனக்கு காலேஜ் படிக்கற;ப்ப ஒரு லவ்வர் இருந்தானா?

டேய் , புருஷன் நான் தானே ஷாக் ஆகனும்? நீ எதுக்கு ஷாக் ஆகறே?

நீங்க புருஷன் ஆகறதுக்கு முன்னாடியே நான் அவளோட லவ்வர் #Comali

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  கோமாளி அதிகாலை ஷோ பாத்துட்டு ஒரு விமர்சகர் மெனக்கெட்டு 4 பக்கத்துக்கு விமர்சனம் டைப் பண்ணி இருக்காரு,நம்மாளு அதை"படிச்சுப்பாக்காம "ப்ரோ,காஜல் அகர்வாலுக்கு எதுனா சீன் இருக்கா?னு"கமெண்ட் போட்டிருக்காப்டி,விமர்சகர் நொந்து போய் இனி விமர்சனம் போடறதையே நிறுத்திடலாம்னு இருக்கேன்கறார்


2 திரும்பிய பக்கம் எல்லாம் பாசிடிவ் ரிவ்யூஸ் வரும் கோமாளி fdfs ஷோ 11 am @ கோட்டயம் சங்கணாச்சேரி அப்சரா 13 பேர் / 893 சீட்ஸ் #Comali

Image



Image







3  படத்துல விஜய் ரெப்ரென்ஸ் இருக்குனு நிறைய ஸ்டேட்டஸ் பாத்தேன்,கடைசில கண்டுபிடிச்ட்டேன்

அது குஷி படம் தானே?
ஆமா,
அய்யோ .இடுப்பைக்காட்றாங்க
இத்துனூண்டு பிட் இடுப்புக்குத்தான் 100 நாள் ஓடுச்சு #ComaliReview ( S.J. சூர்யா பாத்தா கடுப்பாகிடுவாரு)






சபாஷ் டைரக்டர்

1   முதல் பாதி பூரா  கலகலப்பான ரசிகர்களுக்கு புதுமையான காட்சி அமைப்புகள்


2   இயக்குநர் விகரமன் டைப் பாசிட்டிவ் வ்  வசனங்கள் , கேரக்டர்கள் அனைவரும் நல்லவர்கள்


3    யோகி பாபுவை முதல் முதலாக கெட்டப் சேஞ்ச் பண்ண வைத்தது


4   வசனகர்த்தாவின் சிந்தனை , செயல் எல்லாம் அழகு 





 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  படத்தில் நச்சென்று அமைந்த அந்த ரஜினி  பொலிட்டிக்கல் எண்ட்ரி டயலாக் பிரச்சனை வரும்  என தெரிந்தும் ஏன் டீசர்ல விடனும்,. கமுக்கமா இருந்திருந்தா படம் ரிலீஸ் ஆகி இவங்க பார்த்து ஆட்சேபம் தெரிவிச்சு அதை  நீக்கறதுக்குள்ளே பாதி சனம் பார்த்திருக்கும்,

2   பின் பாதி திரைக்கதைல சிலையை திருடுதல் , வில்லன் மனைவி செண்ட்டிமெண்ட் என்றெல்லாம் ஊர் சுற்றாமல் ஹீரோ ஹீரோவின் முன்னாள் காதலி , இந்நாள் காதலி , முன்னாள் காதலியின் கணவன் இந்த 4 க் கேரக்டர்களை மட்டும் வைத்து காமெடி  மெலோ டிராமாவாக பண்ணி இருந்தால் இது இன்னொரு   ரெட்டை வால் குருவி


3  படத்தின் டைட்டில் கோமாளி என்பது சரி இல்லை

 ஏன் இப்படி மாறிட்டாங்க

கோமா

அன்பானவன்

 இப்படி எதுனா டைட்டில் வெச்சிருக்கலாம், ஏன்னா படத்துல செண்ட்டிமெண்ட் சீன்கள் அதிகம் இருக்கு , ஆனா டைட்டில் மைனஸ்

4   வில்லனின் இடத்துக்குப்போகும் ஹீரோ தன் உடம்பில் ஒயர்களை மாட்டி செல்வது , ஷாக் அடிப்பது , வீடியோ ஆடியோ பதிவு பண்ணுவது எல்லாம் அபத்தம்






 விகடன் மார்க் ( யூகம்)   42

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3.5 /5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


சி.பி கமெண்ட்-கோமாளி = வித்தியாசமான கதைக்கருதான்,சிக்சர் அடிக்கவேண்டியது ,திரைக்கதை முன்பாதி விறுவிறுப்பு பின்பாதில குறைவு என்பதால் 4
,ஜாலி காமெடி கலாட்டா ,ஏ சென்ட்டர் பிலிம் ,விகடன் 42,ரேட்டிங்க் 3 / 5 #ComaliReview

Monday, September 07, 2015

பாயும் புலி-திரை விமர்சனம்:

விளையாட்டு, அரசியல், நிழ லுலகம் என எதை முதன்மைப் படுத்தினாலும் அதில் வலு வான குடும்பப் பின்னணியை அமைத்து யதார்த்தமான சித்தரிப் புடன் படங்களைத் தருபவர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் குடும்பமும் உறவு களும் இருக்கின்றன. அவற்றுடன் குற்றவியல் நடவடிக்கைகளும் ஊடாடுகின்றன. நிழல் உலக தாதாக்களைத் தீர்த்துக் கட்டும் முயற்சிக்கு எதிர்பாராத இடத்தி லிருந்து சவால் வரும்போது காவல் துறை அதிகாரி என்ன செய்வார் என்பதுதான் ‘பாயும் புலி’.
சுதந்திரப் போராட்டத் தியாகியின் பேரன் காவல் அதிகாரியான விஷால். தன் அப்பா கேட்டுக்கொண்டதற்காக அரசியலில் நுழையாமல் இருக்கிறார் விஷாலின் அப்பா. ஆனால் விஷாலின் அண்ணன் சமுத்திரக்கனி அரசியலில் நுழையும் எண்ணம் கொண்டவர். அன்பும், பாசமும் மிக்க இவர்களது குடும்பம் வசிப்பது மதுரையில். இங்கே அடுத்தடுத்து நான்கு தொழிலதிபர்களைக் கடத் திக் கொல்கிறது ஒரு மாபியா கும்பல். இதனால் பயந்துபோகும் மற்ற தொழிலதிபர்களிடம் தலா இரண்டு கோடி கொடுக்காவிட்டால் நீங்களும் இதேபோல்தான் கொல்லப் படுவீர்கள் என்று பயமுறுத்திப் பணத்தைக் கறக்கிறது.
இந்தக் கொலைகளுக்குக் காரண மான குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையால் அனுப்பப்படும் விஷால் மறைமுக ஆபரேஷன் மூலம் முதல் கட்டமாகச் சில ரவுடிகளை என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்கிறார்.எல்லோரையும் கொன்று விட்டோம் என்று நினைக்கும்போது இதற்கெல்லாம் பின்னால் இன்னொரு வர் இருப்பது தெரியவருகிறது. அந்த நபரைக் கண்டுபிடிக்கும் வேட்டை யில் விஷால் இறங்க, அந்த நபர் திறமையாகக் காய் நகர்த்துகிறார். குற்றவாளி யாரென்று தெரிந்ததும் அதிர்ந்துபோகும் விஷால் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
ரவுடிகளை வேட்டையாடும் போலீஸ் படங்களுக்கே உரிய ‘ரத்தக் கவிச்சி’அடிக்கும் கதைதான் பாயும் புலி. இதைக் குடும்ப இழையுடன் பின் னிய விதத்தில் சுசீந்திரன் வித்தியாசம் காட்டுகிறார். ஒரு சில காட்சிகளும் திருப்பங்களும் அதிர்ச்சியும் ஆச்சரிய மும் தருகின்றன. ஆனால் இவை அதிகமாக இல்லை என்பதுதான் பிரச் சினை. பல காட்சிகள் முன்னரே யூகிக் கக் கூடியவையாக உள்ளன. காதல் சமாச்சாரம் சம்பிரதாயத்துக்காகத் திணிக்கப்பட்டதுபோல் இருப்பதால் படத்தில் ஒட்டவே இல்லை.
விஷால் யாரைத் தேடுகிறார் என்பதைப் பார்வையாளர்களுக்கு விரைவிலேயே அடையாளம் காட்டி விடுகிறார் இயக்குநர். அதாவது, வில் லன் யாரென்று பார்வையாளர்களுக் குத் தெரியும், கதாநாயகனுக்குத் தெரியாது. வில்லனால் கதாநாயக னுடன் நேருக்கு நேர் மோத முடி யாத நிலை. இத்தகைய சூழல் விறுவிறுப்பான திரைக்கதைக்கு உத்தரவாதம் தருகிறது. ஆனால் சுசீந்திரன் அதைச் சரியாகப் பயன் படுத்திக்கொள்ளவில்லை. விளைவு, தெரிந்த முடிவை நோக்கி நகரும் படத்தைப் பொறுமையோடு பார்க்க வேண்டிய நிலைக்குப் பார்வை யாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.
விஷால் காஜல் இடையிலான காதலில் புதிதாக எதுவும் இல்லை. தன் கண் முன்னால் விஷால் சில ரைச் சுட்டுத்தள்ளும்போது காஜல் காட்டும் உணர்ச்சி சூரியின் நகைச் சுவைக்கு ஈடாக இருக்கிறது.
விஷால் வழக்கம்போல ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம் காட்டுகிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக் கவும் செய்கிறார். எப்போதும் போல அழகும் உற்சாகமுமாய்த் திரையில் தோன்றும் காஜல் அகர்வாலுக்கு இது இன்னொரு படம். அவ்வளவுதான். சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். சூரியின் நகைச்சுவை முயற்சிகள் சில இடங்களில் சிரிக்கவைக்கின்றன.
ஒளிப்பதிவிலும் பாடல்களைப் படமாக்கிய விதத்திலும் வேல்ராஜ் படத்தைத் தூக்கிப்பிடிக்க முயற் சித்திருக்கிறார். இமானின் பின்னணி இசை சுமார்தான். ‘யார் இந்த முயல் குட்டி’, ‘சிலுக்கு மரமே’ ஆகிய பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.
ஒரு காட்சியில் கான்ஸ்டபிள் சூரி நன்றாகக் குடித்துவிட்டு பைக்கை ஓட்டிச் செல்கிறார். பின்னால் துணை கமிஷனரான விஷால் உட்கார்ந்திருக் கிறார். குடித்துவிட்டு வண்டி ஓட்டக் கூடாது என்னும் சட்டம் காவலர் களுக்கு இல்லையா? காவல் துறை யின் சாகசங்களைக் காட்டும் இயக்கு நர் அவர்களுக்கான பொறுப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா? அல்லது காவல் துறையினரைப் பற்றிய விமர்சனமாக இந்தக் காட்சியை அமைத்திருக்கிறாரா?
பிரதான குற்றவாளியை நாயகன் கொன்றுவிடுகிறார். ஆனால் அந்தக் கொலைக்கான பழியைப் பிறர் மீது போட்டு அதற்காக நான்கு பேரைச் சுட்டுக் கொல்கிறார். குடும்பப் பெரு மையைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் இந்தக் கொலைகளும் மோசமான குற்றம்தான். இப்படிப் பட்ட காவல் துறை அதிகாரிதான் தார்மீகமான சக்தியா?
படம் முழுவதும் வேட்டுச் சத்தம், வெட்டு, குத்து, ரத்தம். இவற்றைக் குறைத்து, குற்றத்திற்கான காரணம், புலனாய்வு, ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் புலியின் பாய்ச்சல் இலக்கை எட்டியிருக்கும்.


நன்றி - த இந்து

  • Juliet  
    do know what to say????????? if there s none of this option surely i will select as a rating.
    about 10 hours ago
     (0) ·  (0)
     
    • PPadmanabhan  
      படம் சுமாரா இருக்கு. ஆனா கான்செப்ட் ல் அங்கங்க தனி ஒருவன் வாடை அடிப்பதை நீங்கள் கவனிக்கலியா ?
      about 11 hours ago
       (0) ·  (0)
       
      • ஜோதி  
        சராசரி குடும்பத்தலைவனாக இருப்பவன் வெளி உலகின் வன்மம் மிகுந்த கொலைக்காரன், தன் தாய்,மனைவி, குழந்தைகள் அனைவரையும் பார்த்தபிறகும் தகப்பனையும், சகோதரனையும் அழிக்க முற்படுவதாக காட்டப்படுவது வன்முறையின் உச்சம்.
        about 14 hours ago
         (0) ·  (0)
         
        • SSebastian  
          Lingusamy Suraj listla ipo susintheeran....paayum puli pakravan balii
          about 18 hours ago
           (0) ·  (0)
           
          • SSenthil  
            குடித்து விட்டு மனைவியை எப்படி சரி கட்டுவது என்று போலிஸ் அதிகாரியே அறிவுரை ஐடியா தருகிறார் பாருங்கள்

          Monday, July 20, 2015

          மாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர்கள் 16 பேர் அதிர்ச்சி

          தாதா சினிமாக்களுக்கான ஆகி வந்த களமான சென்னையின் நெருக்கடியான பகுதிதான் கதைக்களம். அங்கே மாமூல் வசூல் செய்யும் குட்டி தாதா மாரி (தனுஷ்). ரவுடியிசம் தவிர புறா பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. அந்தப் பகுதியில் நடக்கும் புறா பந்தயங் களை நடத்துவதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மாரியின் இடத் துக்கு வரவேண்டும் என்று காய்களை நகர்த்துகிறார் மற்றொரு ரவுடியான பறவை ரவி (மைம் கோபி). அந்தப் பகுதியின் காவல்நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்) ஒரு கெட்ட போலீஸ் என்பதை அறிந்து அவருடன் கூட்டணி அமைக்கிறார்.
          அர்ஜுன் திட்டமிட்டு மாரியை ஜெயி லுக்கு அனுப்புகிறார். மாரி இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரது மாமூல் வசூல், புறாப் பந்தயம் இரண்டையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். சிறையிலிருந்து வரும் மாரி தனது இடத்தை மீண்டும் எப்படி திரும்பக் கைப்பற்றுகிறார் என்பதுதான் கதை.
          அழுத்தமான கதை இல்லாமல், துருவேறிய காட்சிகளை வைத்து மசாலா படம் ஒன்றைச் சமைத்திருக் கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். இன்ஸ்பெக்டர் அர்ஜுன், மாரியோடு சம்பந்தப்பட்ட பழைய கொலை வழக்கு ஒன்றைத் துருவ ஆரம்பிக் கும்போது அதுதான் கதையின் மைய இழையாக இருக்குமோ என்று பார்த் தால் அப்படி எதுவுமில்லை. தனது புறாவைக் கொன்றுபோட்டவனை மாரி கத்தியால் குத்திய விவகாரம் அது. அந்த அளவுக்கு அவர் தனது புறாக்களை நேசிக்கிறார் என்கிறார் கள். ஆனால் புறாக்களுக்கும் மாரிக்கு மான உறவு என்ன? அது எத்தனை அழுத்தமானது என்ற பின்னணி சில வார்த்தை வசனங்களிலேயே கடந்து போய்விடுகிறது.
          புறாப் பந்தயம், அதற்கான விதி முறைகள். ரெஃப்ரி என்றெல்லாம் விரிவுரை தருகிறார்கள். ஆனால் புறாப் பந்தயத்தில் பங்கேற்பதில் இருக் கும் போதை, புறாக்களைப் பந்தயத் துக்கு தயார்படுத்துவது என்று எதுவும் அழுத்தமாகக் காட்டப்படவில்லை.
          வணிக சினிமாவின் தவிர்க்க முடியாத நியதி ‘பில்ட்-அப்’புகள் நிறைந்த கதாநாயகனின் அறிமுகக் காட்சி. இந்தப் படத்தில் தனுஷ் வரு கிற எல்லாக் காட்சிகளும் அறிமுகக் காட்சிகள்போலவே இருக்கின்றன. பாலாஜி மோகன், தனுஷ் என்னும் நட்சத்திரத்தை எப்படிப் பயன்படுத்தி அப்ளாஸ் அள்ளுவது என்பதிலேயே கவனமாக இருந்திருக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.
          சில காட்சிகள் அழுத்தமாக அமைந் திருக்கின்றன. போட்டி தாதா குழு தனு ஷிடம் மாமூல் வாங்க வரும் காட்சி, தொடக்கத்தில் விஜய் யேசுதாஸுக் கும் தனுஷுக்கும் இடையே நடக்கும். மோதல்கள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. தீ விபத்துக்குப் பின் புறாக்கள் திரும்ப வரும் காட்சி மனதைத் தொடுகிறது.
          தனுஷின் ‘பில்ட் அப்’ காட்சிகளில் இசையமைப்பாளர் அனிருத் காது ஜவ்வு கிழிய பின்னணி வாசித்துத் தீர்க்கிறார். அதேசமயம் பாடல்களை அக்மார்க் மாஸ் பாடல்களாகத் தந்திருக்கிறார்.
          நையாண்டி, கெத்து ஆகியவற்றில் குறை வைக்காமல் செய்திருக்கிறார் தனுஷ்.
          காஜல் அகர்வால் தொடங்கி யாருக் கும் அழுத்தமான பாத்திரம் இல்லை என்பதால் அவர்கள் நடிப்பு பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. விஜய் யேசுதாஸின் பாத்திர வார்ப்பில் இருக்கும் பிரச்சினையால் அவர் நடிப்பு எடுபடவில்லை.
          தனுஷின் நண்பர்களாக வரும் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத் ஆகிய இரண்டு பேரின் நகைச்சுவை வசனங்கள் ஆங்காங்கே குபீர் கிளப்புகிறது.
          மசாலா படம் என்றாலும் அதற் கென்று ஒரு ஒழுங்கு இருக்க வேண் டும். இந்தப் படத்தில் அது இல்லை.
          நன்றி - த இந்து


          • Gnanasekaran  
            தனுஷ் நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார், கூடிய விரைவில் டைரக்டர் ஆக ஆகப்போகிறேன் என்று. அவருக்கே தெரியும் இனி நம் படம் தேறாது என்று.
            Points
            5885
            about 12 hours ago
             (2) ·  (0)
             
            Udhayakumar · karthi Up Voted
            • VVENKATESH  
              எச்செல்லேன்ட் மோவி ரேஅல்லி வி என்ஜோஎத் தனுஷ் rock's
              about 13 hours ago
               (0) ·  (0)
               
              • LVLinga Velu  
                nice movie dhanush mass . dhanush carrierla oru பிளாக் பஸ்ட்டர் movie
                about 14 hours ago
                 (0) ·  (1)
                 
                karthi Down Voted
                • GGopal  
                  பொறுக்கிகள் , ரௌடிகள் , குடிகாரர்கள் ஆகியோரை மேன்மக்களாக , போற்றதக்கவராக காட்டும் இது போன்ற திரைப்படங்கள் பூச்சி மருந்தை காட்டிலும் விஷம் அதிகமுள்ளது. மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
                  about 14 hours ago
                   (4) ·  (0)
                   
                  Udhayakumar · karthi · RBALAKRISHNAN · Siva Up Voted
                  • VV  
                    வேஸ்ட் படம்
                    about 15 hours ago
                     (1) ·  (2)
                     
                    Udhayakumar Up Voted
                    Antony · karthi Down Voted
                    • RRR  
                      ஒரு வேல மது பத்தி ஒரு பாட்டோ இல்ல டாஸ்மாக் பத்தி காண்பிச்சா, கேளிக்கை வரி விலக்கு கெடைக்கும் போல...வர்ற 90% தமிழ் படங்களே, குடிக்கற காட்சியே இல்ல ம இர்ருகர்து இல்ல. இன்னும் கொஞ்சம் வருஷத்துல தமிழ் நாடு நடமாடும் சுடுகாடா ஆகா போகுது.
                      Points
                      4950
                      about 15 hours ago
                       (1) ·  (0)
                       
                      karthi Up Voted
                      • VVara  
                        unbearable intolerable insuppoertable = well deserved flop
                        about 16 hours ago
                         (0) ·  (0)
                         
                        • Mmvnarayanan  
                          படம் பிடிக்கவில்லை
                          about 17 hours ago
                           (0) ·  (0)
                           
                          • Mmvnarayanan  
                            படம் நல்ல வேண்டும்
                            about 17 hours ago
                             (0) ·  (0)
                             
                            • ரிஸ்வான்  
                              குடிகார ஹீரோ, ரவுடி ஹீரோ, புகை பிடிக்கும் ஹீரோ, ஹீரோயின். மது குறித்த பாடல்கள், ஊற்றி கொடுக்கும் அரசு. எதை சொல்லித்தருகிறோம் இளைய சமுதாயத்திற்கு? தவறான வழிகாட்டலால் தறிகெட்டுப்போகிறது தமிழகம்.
                              about 18 hours ago
                               (1) ·  (0)
                               
                              Siva Up Voted
                              • AJAntony John  
                                சிருச்சா தங்கமாரி மொறச்சா சிங்கமாரி ஆக மொத்த மொள்ளமாரி
                                about 19 hours ago
                                 (1) ·  (0)
                                 
                                Antony Up Voted
                                • Mmohanram  
                                  Average movie.....
                                  about 19 hours ago
                                   (0) ·  (0)
                                   
                                  • SMSathya Moorthy  
                                    ஒருமுறை பார்க்கலாம் . ரோபோ சங்கர் அருமை !!! தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்க கூடிய மசாலா...
                                    about 20 hours ago
                                     (0) ·  (0)
                                     
                                    • Rram  
                                      நான் தனுஷ் ரசிகர் இல்லை. நா படம் பார்த்தேன் இவர் குறிப்பிட்டுள்ள குறைகள் எதுவும் எனக்கு படம் பார்க்கும் pothu தோனவில்லை. மாஸ் தெறி மாஸ்...ரோபோ செம காமெடி. Senjudanunga
                                      about 20 hours ago
                                       (0) ·  (1)
                                       
                                      Udhayakumar Down Voted
                                      • Nagarajanraja King  
                                        எனக்கு மாரில பிடிச்ச ஒன்னு கிளைமாக்ஸ் காஜல்ட்ட பேசுற வசனம் லவ் வேண்டாம் நண்பர்களா இருப்போம்