Showing posts with label காசி. Show all posts
Showing posts with label காசி. Show all posts

Sunday, October 07, 2012

காசி ஆனந்தன் கடிதம் -தமிழா, உனக்கு வெட்கமாக இல்லையா?

http://www.jaffnacnn.com/upload-files/sept/kasianandan02.jpgதமிழா, உனக்கு வெட்கமாக இல்லையா?


காசி ஆனந்தன்
ஆங்கிலமும் தமிழும் கலந்த இந்த வகைப் பாடல்களை இங்கே சாடுகிறார் கவிஞர் காசி ஆனந்தன். இப்படியே போனால் இன்னும் ஒரு நூறாண்டில் தமிழ் அழியும் என்கிறார்.

ஒரு மொழி அழிந்தால் போதும் அந்தத் தேசிய இனமும் அழிந்துவிடும். ஓர் இனத்தின் உயிர்நாடியே தாய்மொழிதான். ஓர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் தாய்மொழியை அழித்துவிடு என்று சொல்வார்கள். மொழி என்பது ஒரு கருவி மட்டும்தான் என¢ற கருத்து இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. அதுவல்ல. மனிதர்களின் உயிரோடும் உணர்வோடும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிற உயிர்மூச்சு. மொழி ஒரு தொடர்பு கொள்ளும் கருவி என்பதைப்போல தாய் என்பவள் பிள்ளை பெற்றுத்தருகிற கருவி என்று சொல்லமுடியுமா? 


அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும். ஆனால் மெல்ல தமிழ் மொழி அழிந்து மிகப்பெரிய அளவில் சுருங்கி தேய்ந்துகொண்டிருப்பது உணமை.


சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழ் மொழி இருந்தது என சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமை கவலைக்கிடமானது. கீழை ஆரிய மொழியான சமஸ்கிருதம் கலந்து தமிழை அழித்ததைப்போல, மேலை ஆரிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழ் சிதைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


 600 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மொழி மலையாளம். சேர நாடாக இருந்தது. சேரன் செங்குட்டுவன் கல் சுமந்து கண்ணகி கோயில் கட்டினான். சிலப்பதிகாரம் குறிப்பிடும் வளம் நிறைந்த நாடு. தமிழ்தான் சமஸ்கிருதம் கலந்து மலையாளமாக  மாறிப்போனது. இதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமா? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிற மொழி கலந்தால் கண்டிப்பாக தமிழ் அழியும். தஜுகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கவிஞன் ரசூல் கம்ஸதோவ் பேசிய மொழி அவார். அதுதான் அவனுடைய தாய்மொழி. "நாளை என்னுடைய தாய்மொழி இறக்குமானால், நான் இன¢றே இறந்துவிட விரும்புகிறேன்" என்று சொன்னான். 


 தன் தாய்மொழியை எந்த அளவுக்கு அவன் மதிக்கிறான் என்பதற்கு இதைவிட வேறொரு கருத்தைச் சொல்லமுடியாது. நாம் அதை நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.


ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போனால், மிகக் குறுகிய காலத்திலேயே தமிங்கிலர் என்ற புதிய தேசிய இனமாக நாம் மாறிவிடுவோம். புதிய  மொழியும் புதிய இனமும் உலகில் அறிமுகமாகும். நூறு ஆண¢டுகளுக்குள் இந்த மாற்றம் நடந்துவிடும். தமிழின் வயது இன்றைக்கு 50 ஆயிரம் ஆண்டுகள் என்று பாவாணர் சொல்லியிருக்கிறார். இக்கருத்தை மொழியியல் அறிஞர் லெவிட் ஒப்புக்கொள்கிறார். 50 ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒரு மொழியை  இழந்துகொண்டிருக் கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். 


உங்களுக்குக் கவலையாக  இல்லையா? தொன¢மையான ஒரு மொழியை இழக்கலாமா? உலகம் முழுவதும் இன்றும் பழம்பொருளை பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மிக அழகான ஒரு பேனாவைக்கூட பாதுகாத்து நினைவாக வைத்திருக்கிறோம். அந்த உணர்வு மொழியைப் பாதுகாப்பதில் உனக்கு இருக்கவேண்டும். 



ஆங்கில மொழி லத்தீன், பிரெஞ்சு, கிரேக்க வார்த்தைகளைக் கொண்டுதானே உருவாகியிருக்கிறது. அப்படி ஏன் பிற மொழி வார்த்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை? என்று கேட்கிறார்கள். அது சொற்கள் தட்டுப்பாடுள்ள மொழி. பிற மொழிகளை ஏற்றுக்கொண்டால் அம்மொழிக்கு வரவு. ஆனால் தமிழில் ஒவ்வொரு புதுச்சொல் நுழையும்போதும் நம்மிடம் இருக்கிற ஒரு பழஞ்சொல் வழக்கொழிந்துவிடும். 


இது நமக்கு இழப்பு. அவனுக்கு வரவு. ப்ளவர் என்கிற சொல்லை நாம் ஏற்றுக் கொண்டால் மலர்,  பூ என்கிற சொற்கள் காணாமல் போய்விடும். அது மொழியின் அழிவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற மொழி அறிவியல் சொற்களுக்கு இணையாக மொழியாக் கம் செய்கிற அளவுக்கு தமிழில் சொற்கள் இருக்கின்றன. சில புதிய சொற்களையும் உருவாக்கமுடியும்.



சிலர் வெட்கங்கெட்ட முறையில் ஆங்கிலச் சொற்கள் கலப்பைத் தவிர்க்கமுடியாது. தமிழில் பேசுவது இயல்பாக இல்லை என்று சொல்கிறார் கள். தமிழில் பேசுவது உனக்கு வெட்கமாக இருக்கிறதா? ஆங்கிலத்தை முழுமையாகப் பேசு. ஆங்கிலமும் வளரும். தமிழும் வளரும். வெளிநாட்டுக் குப் போனால் என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மொழிகளிலும் பேசுகிறார்கள். அங்கே போன பிறகுதான் கற்றுக் கொண்டார்கள். தமிழ்நாட்டுக்கு மார்வாடிகள் வருகிறார்கள். அவர்கள் ராஜஸ்தானில் தமிழைக் கற்றுக் கொண்டுதான் இங்கு வருகிறார்களா?



இங்கேயே ஆங்கிலேயனாக மாறி வாழத் தொடங்கிவிட்டோம். இன்றைய நிலையில் தமிழுடன் 50 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகள் கலந்துவிட்டன. அன்றாடப் பேச்சில் நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனர். கிட்டத்தட்ட மொழி மாறிக்கொண்டிருக்கிறோம்.


 தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. இனமும் மாறிக்கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையில் ஆங்கிலக் கலப்பு என்பது மிக  எளிதாக நடந்துவருகிறது. ஆங்கிலப் படங்களில் எங்காவது பிரெஞ்சு மொழியில் பேசுகிறார்களா. நீ ஏன் செய்கிறாய்? அவனது தாய்மொழிமீது விழிப்புடன் இருக்கிறான். இங்கிலாந்தில் மொழிக் கலப்பு தொடர்பான எதிர்ப்பு இயக்கத்துக்கு இளவரசர் சார்லஸ் தலைவராக இருக்கிறார். இயல், இசை, நாடகம் என்று சொல்லிவருகிறோம். இயலான பாடல்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிக்கிறோம். இசையில் பாப், ராக் என்று கலந்துவிட்டோம்.



ஒய் திஸ் கொலவெறிடி? என்று எழுதுகிறவனைப் பார்த்து தமிழ்மீது உனக்கு ஏன் இந்தக்  கொலைவெறி என்று கேட்கவேண்டும். நீ எளிதாகப் பாடி விடுகிறாய். ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிறாய். இந்த நொடியில் அழியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் அழியும். அதற்கு இதுதான் தொடக்கமாக இருக்கும். இதுபோன்ற பாடல்களுக்கு எதிரான இயக்கமே தொடங்கப் படவேண்டும்.


 தமிழும் தெரியும். தெலுங்கும் தெரியும். ஆனால் தமிழ், தெலுங்கு மொழியாக மாறிய காலம் தெரியுமா? குரங்கு தெரியும். மனிதன் தெரியும். குரங்கு மனிதனாக மாறிய படிநிலை தெரியுமா? அதுபோல தமிழும் மாறும். அது நமக்குத் தெரியாமல் போய்விடும். இன்று 'ஒய் திஸ்  கொலவெறிடி' என்று பாடி விடுகிறாய். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் முடிந்துபோய்விடும். உன்னுடைய மொழி புதிய மொழியாக மாறியிருக்கும்.



எல்லீஸ் டங்கன் என்ற ஆங்கிலேயன் தமிழில் படமெடுத்த காலத்தில் தமிழ் செழித்திருந்தது. நல்ல தமிழில் தலைப்புகளை வைத்தார்கள். இந்த மானங்கெட்ட தமிழன் படமெடுக்கும் போது தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. நீ தமிழனாக இருந்துகொண்டு இப்படி செய்வதில் உனக்கு கொஞ்சங்கூட வெட்கமாக இல்லையா?



மிக அண்மையில் சீனாவில், தொலைக்காட்சியில் வானொலியில், திரைப்படங்களில் ஆங்கிலத்தைக் கலந்தால் தண்டனை உண்டு என்று அறிவித்துள்ளார்கள். அதுபற்றி 2010, டிசம்பர் 23 அன்று வெளிவந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்
   என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் அகமதிநிஜாத்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறார். உலகமயமாக் கலின் விளைவாக ஆங்கிலம் வேகமாகக் கலந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கில மொழி கலப்புக்கு எதிரான இயக்கங்கள் தோன்றி வருகின்றன. அந்தவகையில் ஒய் திஸ் கொலைவெறிடி... போன்ற மொழிக் கலப்புப் பாடல்களை எழுதுகிறவர் களுக்கு தண்டனை அளிக்க வேண்டும்.

நன்றி - த சண்டே இந்தியன்

Friday, September 28, 2012

12 ஜோதிர்லிங்க தரிசனம் - பிரம்மா குமாரிகள்- பவள விழா - ஈரோடு

Embedded image permalink


 ஈரோட்டில் கொங்கு கலை அரங்கத்தில் சிவ லிங்க தரிசனம் இன்னும் 4 நாட்கள் இருக்கு. தினம் காலை 8 டூ நைட் 9 வரை. அது போக தினமும் கர்னாடிக் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகள் இருக்கு, அனுமதி இலவசம். டோண்ட் மிஸ் இட்


1. குஜராத் சோமநாத் சிவன்




குஜராத் சோமநாத் ஸ்தல புராணம்






2. ஆந்திரா மல்லிகார்ஜூனர்


ஆந்திரா மல்லிகார்ஜுன் ஸ்தல வரலாறு





3. மத்தியபிரதேசம் மகா காலேஸ்வரர்






மத்தியபிரதேசம் மகா காலேஸ்வரர் ஸ்தல புராணம்)
a



4. ஓங்காரேஸ்வரர் மத்யபிரதேஸ்




ஓங்காரேஸ்வரர் மத்யபிரதேஸ் புராணம்






5. வைத்ய நாத் ஜார்கன்ட்

வைத்ய நாத் ஜார்கன்ட் வரலாறு


6. மகாராஷ்ட்ரா பீமா சங்கர்


மகாராஷ்ட்ரா பீமா சங்கர் வரலாறு



7. ராமேஸ்வரர்







ராமேஸ்வரர் தமிழகம் வரலாறு



8. குஜராத் நாகேஸ்வரர்




குஜராத் நாகேஸ்வரர் வரலாறு


9. காசி விஸ்வநாதர் உத்தர்பிரதேஷ் 



காசி விஸ்வநாதர் உத்தர்பிரதேஷ்  வரலாறு






10, திரியம்பகெஷ்வரர்





திரியம்பகெஷ்வரர் மகாராஷ்ட்ரா வரலாறு



11. கேதார்நாத் சிவலிங்கம்





கேதார்நாத் சிவலிங்கம் இமயமலை வரலாறு









12. கிருஷ்ணேஷ்வர்


கிருஷ்ணேஷ்வர் மகாராஷ்ட்ர ா வரலாறு



தியான அறை.இதை பார்த்துட்டே இருந்தா மனசு ஒருமுகப்படுமாம்
ஈரோடு கொங்கு கலை அரங்கில் வீணை வாசிப்பு ஆன்மீக நிகழ்ச்சி
Embedded image permalink






இதுதான் இந்த அமைப்பின் யூனிபார்ம்.கண்ணியம்
 

Saturday, May 28, 2011

காசிக்கு நிகரான கோயில் தமிழகத்தில் எது? ஆன்மீக அலசல்

http://www.unitedhindutemple.org/Images/sivan.jpg 
விசாகத்தில் வழிபட்டால்... 16 சாபங்களும் நீங்கும்!

வை'காசி’ப் புண்ணியம்...
ட்சியும் அதிகாரமும் இருந்தென்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சுவதற்கும், ஆட்சிக் கட்டிலில் நாளை வாரிசாக அமர்வதற்கும் நமக்கொரு குழந்தைச் செல்வம் இல்லையே..!’ என்பதுதான் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த பிரதாபசிம்ம ராஜாவின் பெருங்கவலை. 
அன்னதானம் செய்தார்; வைணவ சம்பிரதாயத்தில் திளைத்த மன்னர், திருமாலுக்கு ஆலயங்கள் பலவும் கட்டிக் கும்பாபிஷேங்கள் நடத்தினார். ஆறு- குளங்கள் வெட்டினார். ஆனாலும் என்ன... 'பிள்ளைபாக்கியம் இன்னும் தகையலையே...’ என வருந்தினாள் மகாராணி யமுனாம்பாள்.  
மன்னரின் கவலை, மந்திரிமார்களையும் தொற்றிக் கொண்டது. மிகுந்த சிவபக்தரான அமைச்சர் ஒருவர், ஈஸ்வரனுக்குக் கோயில் எழுப்பினால், சந்தான பாக்கியம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். சரியென்று சம்மதித்த மன்னர், 'எங்கே கோயில் எழுப்புவது?’ என அமைச்சரிடமே கேட்டார். 'காசியில் இருந்து முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடமே கேட்டு, அவரின் ஆசியுடனும் அருளுடனும் கோயில் கட்டுவோம்’ என்றார் அமைச்சர்.

அதன்படி, அந்தக் காசி முனிவரைச் சந்தித்து, நமஸ்கரித்து, ஆசீர்வாதம் பெற்ற மன்னர், அவர் சுட்டிக்காட்டிய இடத்திலேயே சிவாலயத்தை பிரமாண்டமாக அமைத்தார். முனிவரின் யோசனைப்படியே, ஸ்வாமிக்கு ஸ்ரீகாசி விஸ்வநாதர் என்றும், அம்பிகைக்கு ஸ்ரீவிசாலாட்சி என்றும் திருநாமம் சூட்டி, கும்பாபிஷேகத்தைக் கோலாகலமாக நடத்தினார். இதில் மகிழ்ந்த முனிவர், 'காசிக்கு நிகரான தலத்தை எழுப்பிய உனக்கு, காசிக்குச் சென்றால் கிடைக்கக்கூடிய அத்தனைப் பலன்களும் கிடைக்கட்டும்!’ என அருளினார். அதன்படி, மன்னருக்கு குழந்தைச் செல்வம் கிடைத்தது என்கிறது ஸ்தல வரலாறு.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது நீடாமங்கலம். இந்த ஊரின் மையப்பகுதியில் கோயில் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகாசிவிஸ்வநாதர். அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் உண்டு எனினும், வைகாசி மாதத்தில் பிரம்மோற்ஸவம் விமரிசையாக நடந்தேறுமாம்.

பத்து நாள் விழாவாக நடைபெறும் பிரம்மோற்ஸவ விழா, தினமும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படுமாம் ஆலயம். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டிருப்பார்கள், நீடாமங்கலம் சிவாலயத்தில்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1rAvOXOvBtTvZ9wUnVl0GM7zspR79IqHnFfr5WP4_5JnfUslp2pyvkUYRY8o63M0xrPEB3uwkB6MaXuRQ7ouY8sao_zyG_hf-WVS1XHyCLD9mXxAdmWHvsWcP9t34hr3ZymBvzD4h5VeN/s1600/okom,.jpg
காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் முதலான சகல தோஷங்களும் விலகும்; திருமணம் மற்றும் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.  

வைகாசியை, ரிஷப மாதம் என்பர். அதாவது, ஈசனுக்கு உரிய மாதங்களில் இதுவும் ஒன்று. எனவே வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில், (ஜூன் 4 முதல் 13-ஆம் தேதி வரை) இங்கு வந்து வணங்கினால், 16 வகையான சாபங்களும் நீங்கி வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

நன்றி - சக்தி விகடன்