Showing posts with label கலைஞர் டி வி.குறும்படம். Show all posts
Showing posts with label கலைஞர் டி வி.குறும்படம். Show all posts

Monday, March 07, 2011

நாளைய இயக்குநர் - காதல் + கண்ணீர் கதைகள்

http://www.tamilgood.com/movies/wp-content/uploads/2011/01/Naalaiya-Iyyakunar55.jpg 
6.3.2011 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு கலைஞர் டி வி ல நாளைய இயக்குநர் நிகழ்ச்சில  ஹாய் மதன் சொன்ன தொடக்க வரி மனதைத்தொடுவதாக இருந்தது.இன்னொருவர் கஷ்டங்களைப்பார்த்து நெகிழ நாம் கத்துக்கனும்.அதற்கு அச்சாரமா டிராஜடிங்கற தலைப்புல இந்த வார படங்கள் அமைஞ்சிருக்குன்னார்.

அய்யய்யோ டிராஜடியா? மாட்னோம்டா அப்டின்னு நான் சலித்துக்கொண்டே தான் பார்த்தேன்.என் எண்ணங்களை தவிடு பொடி ஆக்கும் படி முதல் படமே கலக்கலான தொடக்கமா அமைஞ்சது..

1. அன்புடையீர்  - திருப்பூர் ராம்.

ஒரு சோக கதையை ஆக்‌ஷன் ஃபார்முலாவுல சொல்ல முடியுமா?ங்கற பிரமிப்பான தொடக்கத்தோட படம் அமைஞ்சது.ஒரு தூக்குத்தண்டனைக்கைதி தப்பி ஓடறப்ப போலீஸ் துரத்துது.. அந்த சேசிங்க் சீன்ல யே ஃபிளாஸ்பேக் அப்பப்ப வருது.

இந்த குறும்படத்தோட கதை சொல்லல் பாணி என்னை ரொம்பவே கவர்ந்துடுச்சு.மொத்தம் ஓடற 7 நிமிஷத்துல கதையை சொல்லி ஆகனும்,அதுல சோகம் இருக்கனும்,சுவராஸ்யமும் இருக்கனும்ங்கற கண்டிஷன்ஸை எல்லாம் அனாசயமா ஏத்துக்கிட்டு ஆக்‌ஷன் த்ரில்லர் லேபிள்ல சேர்த்தும் அளவு வித்தியாசமான படமாக இயக்கப்பட்ட இந்தப்படம் சமீபத்தில் நான் பார்த்த 65 குறும்படங்களில் சிறந்த படம் என கொள்ளலாம்.

படத்தோட பிளஸ் பாயிண்ட் ஹீரோயின். ரொம்ப பாந்தமான குடும்பப்பாங்கான மனைவியா வர்றவர் ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார்.கைதி தப்பி நேரா தன் வீட்டுக்கு வந்து தன் மனைவியையும் ,கைக்குழந்தையையும் பார்க்க வந்தவர் தன் மனைவி வேற ஒரு ஆள் கூட குடும்பம் நடத்துறதை பார்த்து திக் பிரமை அடைஞ்சு நிக்கறார்...

இந்தக்கதைல எனக்கு சில டவுட்ஸ்

1.கணவன் கைது ஆன உடனே ஒரு மனைவி உடனே செக்யூரிட்டிக்காக அப்படி வேற ஒரு ஆள் கூட போவாரா?

2. கதைல ஹீரோயின் (மனைவி) தனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும்கறா.. ஹீரோ பெண் குழந்தை தான் பிடிக்கும்கறான். பொதுவா பொண்ணுங்க எந்தக்குழந்தையா இருந்தாலும் ஓக்கே அது அவங்க குழந்தைன்னு நினைப்பாங்க.. ஆண்கள் தான் வாரிசுக்கு ஆண் வேணும்னு நினைப்பாங்க.

3.  தூக்கு தண்டனைக்கைதியை துரத்தி பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் அந்த கைதிக்கு முன்னாலயே தன்னோட உயர் அதிகாரிக்கு ஃபோன் போட்டு ,”சார்.. உடனே வாங்க.. நான் தனியா இவனை சமாளிக்க முடியாது”ங்கற  மாதிரி பேசுவாரா? ரிவால்வரால கால்லயோ, கைலயோ சுட்டு காயத்தை ஏற்படுத்தி கைதியை பலவீனன் ஆக்கி இருக்கலாமே..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigu7s621zl2WdvvbzlmIkQ1WQJ3x-Ap0Lkl7tCd8h11gQKI65yBvyDf6yR2lyFJOVFHQPl6yTJTdEnnP5aiQ8kZAvuFhjCS-EM5SFuPmA7h0bey2BsKhUxd03Yn9HrlcIgSIrnaVUNeipm/s320/director.png
இந்தப்படத்தில் கவர்ந்த வசனங்கள்

1. தப்பு செஞ்சவங்க நிறைய பேரு வெளில இருக்கறப்ப நான் மட்டும் ஏன் சாவனும்?

2,  எனக்கு பெண் குழந்தைன்னா உசுரு.மனைவியைக்கூட ஒரு குழந்தையாத்தான் பார்த்துக்கறேன்.

3. அப்பாவோட வாசம் தெரியாமயே என் குழந்தை வளர்ந்துட்டு இருக்கு

இந்தக்கதைக்கான ரிசல்ட் ஆடியன்சிடமும் சரி,ஜட்ஜூங்க ரெண்டு பேர்ட்டயும் சரி அபாரமா இருந்தது.ஒரு படைப்பாளிக்கு கிடைக்கற சிறந்த அங்கீகாரமே பாராட்டுதான் என்ற அளவிலும்,பாராட்டு சிறந்த கிரியா ஊக்கி என்ற அளவிலும் அந்த காட்சியைப்பார்க்க மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தது.

2. நான் அமாவாசைல பிறந்தவன் - அழகு ராஜா

ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரோட போராட்டங்கள்,அவமானங்கள்,வலி இவற்றை சொல்லும் கதை. பொதுவா இந்த மாதிரி கதைகள் ஜனங்களால அதிகமா விரும்பப்படறது இல்ல... அன்றாட வாழ்வியலில் ஏற்படும் பிரச்சனைகளை மையமா வெச்சு படம் எடுக்கறதே நல்லது. இதுக்கு சினி ஃபீல்டுலயே உதாரணம் சொல்லலாம். தாவணிக்கனவுகள், சினிமா சினிமா,முகவரி...(இதில் முகவரி வெற்றிப்படம் என்றாலும் எதிர்பார்த்த வெற்றி இல்லைன்னு அதன் இயக்குநரே பேட்டி குடுத்திருக்கார்,)


பிடித்த வசனங்கள்

1. எனக்கு நடக்கறது  ஒண்ணும் புதுசு இல்லை...தமிழ் சினிமாவுல கதை சொல்ல நடையா நடந்துட்டு தான் இருகேன்..

2.  என்னய்யா.. ஒரு கிஸ் சீன்க்கு இத்தனை டேக் எடுக்கறே... நல்ல வேளை ரேப் சீன் எடுக்காம போயிட்டோம்..

இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1 . சினிமா வாய்ப்பு கிடைக்கலைன்னு மனம் வருத்தம்தான் படுவாங்க,இதுக்கு யாரும் தற்கொலை செய்ய மாட்டாங்க. அப்படியே எங்காவது ஒரு சம்பவம் நடந்திருந்தாலும் அதை படமாக்குவதால் புது ஆட்களுக்கு தன்னம்பிக்கை யை வளர்ப்பது போல்தான் நாம்(அதாவது நீங்க) படம் எடுக்கவேண்டுமே தவிர நெகடிவ் எண்ணங்கள் ஏற்படும்படி அல்ல.

2. தூக்கு மாட்டிக்கொள்ளும் ஹீரோ 3 முறை மட்டுமே கால்களை உதறுவது போல் சீன் இருக்கு.. கிட்டத்தட்ட 13 முறை உதறுவானாம்.அந்த கொடூரத்தை காட்டுவதற்கு சிம்ப்பிளாக சிம்பாலிக் ஷாட் வைத்திருக்கலாம்.
http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/10/paritala-sunitha.jpg
3. கடைசி வரை -சத்தி 

காதல் ஜோடி லவ் பண்றாங்க. காதலனுக்கு ஒரு விபத்துல கண் பார்வை போயிடுது.உடனே பிராக்டிகல் சேஃப்டி லைஃப்ஃபை காதலி செலக்ட் பண்றா. வீட்ல பார்க்கற மாப்பிள்ளைக்கு ஓக்கே சொல்றா....ஆனா காதலன் நடந்த சம்பவத்தை நண்பன் கிட்டே சொல்றப்போ காதலி மேல தப்பில்லைங்கற மாதிரி சப்போர்ர்ட்டா பேசறான்  .

1. என்னடா நண்பா.. பேசிட்டு இருந்தே , திடீர்னு ஆளைக்காணோம்..போய்ட்டியோன்னு பார்த்தேன்.

பாதிலயே விட்டுட்டுப்போக நான் என்ன உன் ஆள் தேவியா?


2.பார்வை இல்லாததால என் கவனம் கலையறதில்லை.. கூர்மையான புலன்கள் ....

3.  ஒரே ஜோக்கை ரெண்டு மூணு தடவை படிச்சுப்பாரு ,சிரிப்பே வராது..அதே மாதிரி பல தடவை அழுது பார்த்துட்டா எதுவுமே சோகம் இல்ல...( சோகத்தோட வலி குறைஞ்சிடும்)

4. ஹீரோயின் - உங்களை எந்த அளவுக்கு நான் விரும்பறேனோ அந்த அளவுக்கு  என்னை நான் அதிகமா விரும்பறேன். 


காதல் கதை எடுக்கறவங்க  அந்த கதைக்கு வில்லனா காதலர்களே மாறிடறதா காட்டறப்ப அந்த கதைல , காதல்ல வலு குறைஞ்சிடுது....இதை கவனத்துல வெச்சுக்கிட்டு திரைக்கதை அமைப்பது நல்லது.

இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. காதலர்கள் ஜாலியா பேசிட்டு இருக்கறப்ப ஒருத்தர் கண்ணை ஒருத்தர் பார்த்துப்பேச ஆசைப்படுவாங்க.. அதனால கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு பார்க்ல உட்கார்ந்து பேசற சீன் தேவை இல்லை.ஹீரோவை பந்தாவா காட்டனும்னு நினைச்சா பைக்ல போறப்ப, நடந்து வர்றப்ப அப்படி காட்டுனா போதும்.

2.காதலி காதலனை கை விடற ஷாட்ல அவ கண்ல வருத்தமே இல்ல..வேற வழி இல்லாம அப்படி பண்றாங்கறதை நல்லா தெளிவா காட்டனும்.சப்போஸ் நடிகைக்கு ஆக்டிங்க் வர்லைன்னா ( IF THE EXPECTING PERFORMANCE IS NOT OBTAINED) லாங்க் ஷாட் வைச்சு சமாளிக்கலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfCXOzUpmBqLkEGK3eBANMrLDwnPPb_mw2GjbUVJf4KWkvaahfa6v08hTo3ENFowqihfuON-UThLoHLIZ6-Rn_iHJpjMjz6RDVL-S_sgC1QAztn1eVh8wNywrHcwGicZ4ifoFJels1kof4/s1600/clapboard.jpg
4. ஒரு நாள் - தீபக்   

இந்தப்படம் ஒரு பிரமிப்பான அனுபவத்தை குடுத்தது.2008 நவம்பர் மாதம் 26ந்தேதி நடந்த உண்மைசம்பவத்தை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கு.

ஒரே ஒரு கேரக்டரை வெச்சு இவ்வளவு பவர் ஃபுல்லா ஒரு திரைக்கதையை எழுத முடியுமா?அதை ரொம்ப பர்ஃபக்‌ஷனோட எடுக்க முடியுமா?என அனைவரையும் வியக்க வைத்து முதல் பரிசை தட்டி சென்ற படம். கடந்த ஆறு வாரங்களில் முதல் பரிசை பெறும் படங்கள் சரியான தேர்வுதானா  என மெல்லிய சந்தேக நூலிழை மனதில் ஓடும். ஆனா இந்தப்படம் சந்தேகத்துக்கு இடமில்லாம அனைவரது கவனத்தையும் பிரமாதமா கவர்ந்தது.

ஊடலுடனான கோபத்தில் மனைவி பெட்ரூம்ல படுத்திருக்கா.. அப்போ கணவன் கிட்டே இருந்து ஃபோன்.இவ எடுத்து 2 வார்த்தை கோபமா பேசிட்டு வெச்சிடறா..அவன் உடனே மெசேஜ் அனுப்பறான்.அடுத்த டைம் ஃபோன் பண்ணுனதும் அவ எடுத்துப்பேசும்போது மெல்ல மெல்ல தான் தீவிரவாதிகளால் தாக்கபட்ட ஹோட்டலில் இருப்பதாகவும், தன்னுடன் இருந்த அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் எனவும்,தான் மரண வாசலில் இருப்பதாகவும் பதட்டத்தோட சொல்றான்.

இறக்கும் தருவாயில் மனைவியுடன் கணவனுக்கோ,கணவ்னுடன் மனைவிக்கோ பேசும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதே கதையின் ஒன் லைன். அதற்கான கதைக்களனாக டெரரிஸ்ட் சம்பவத்தை கையில் எடுத்தது படத்தின் வெற்றியை உறுதி செய்யவும் , கதையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும்..

இந்த படத்துல நடிச்ச ஹீரோயின் நல்ல அழகான முகம். சடக் சடக் என மாறும் அம்சமான முக பாவனைகள். கோபம், ஊடல், காதல், பயம் , மரணத்தின் விளிம்பில் கணவன் இருப்பதும் வரும் பதட்டம் எல்லாமே கலக்கலான அம்சங்கள்.மேக்கப் அதீதமாக இல்லாமல் மிதமான இயற்கையான அழகு முகம் ஒரு பிளஸ் என்றால் அவரது பாடி லேங்குவேஜ்ஜூம் அற்புதம்.

சாகும் தருவாயிலும் கணவன்  பேசும் ஒரு டயலாக் கண் கலங்க வைத்தது,.
http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kajal-Agarwal-01/kajal-agarwal-photos-031.jpg
டாக்டரை கல்யானம் பண்ணுனது கூட ஒரு வகைல நல்லதா போச்சு.இப்போ முதல் உதவி சிகிச்சை எப்படி பண்றதுன்னு சொல்றியே.. நம்ம குழந்தையையும் டாக்டருக்கே படிக்க வைக்கனும்.

டைரக்டருக்கு சில வார்த்தைகள்

1. ஒரே ஒரு கேரக்டர் என முடிவு செஞ்சு ஷூட் பண்ணுனது பிரமாதமான ஐடியா என்றாலும் அதை ஒரே ஷாட்டில் சொல்லி இருந்தா இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்.கட் ஷாட்டே தேவை இல்லை. ஒரே ரூம். ஒரே கேரக்டர் எனும்போது குணா படத்தில் ஹாஸ்பிடல் சீனில் வரும் 4 நிமிட காட்சியில் கமல் அறையை சுற்றி வந்து பேசும்போது எப்படி கேமரா கோணங்கள் இருந்ததோ அப்படி இருந்திருந்தா கலக்கலா இருந்திருக்கும்.

2. அந்த சம்பவம் நடக்கறப்ப ஹீரோ ஹீரோயிண்ட்ட தீவிரவாத சம்பவம் பார்க்க டி வி யை ஆன் பண்ணு என சொல்றார்,அப்போ சிம்பாலிக் ஷாட் வைக்கும் உத்திக்காக கே டி வி ல ரோஜா படம் ஓடற மாதிரி காட்டி இருக்கீங்க. அந்த ஹோட்டல் சம்பவம் உண்மையா நடந்த அன்று அந்த படம் எந்த சேனல்லயும் இல்லை.

எனிவே ஹாட்ஸ் ஆஃப் தீபக்

பரிசு கொடுத்து முடிச்ச பிறகு எலிமினேஷன் ரவுண்ட் இது என்பதால் ஒருவர் எலிமினேட் பண்ணப்பட போகிறார் என அறிவித்தார்கள். அந்த மேடையில் 260 பேர் பார்த்துக்கொண்டிருக்காங்க. டி வி ல கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அதைப்பார்க்கறாங்க.. அப்போ போய் ஒருவரை மேடைல அழைச்சு கை குடுத்து உங்களை எலிமினேட் பண்றோம்.. சாரி என சொல்றாங்களே...

இது எந்த விதத்தில் சரி...? நிறைகளை பொதுவாக எல்லோருக்கும் முன் சொல்லுங்கள். குறைகளை தனியாக கூப்பிட்டு சொல்லுங்கள்.தோல்விகளை ருசித்தவன் என்ற முறையிலும்,சக படைப்பாளி அவமானப்படுத்தப்படுகிறான்  என்ற தார்மீக கோபத்திலும் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

அப்புறம் ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தது. இந்த வாரம் முதல் பரிசு போட்டிக்கு ராமின்  அன்புடையீர்,தீபக்கின் ஒரு நாள் ரெண்டுமே சம தகுதி இருந்தாலும் கடைசில முடி இழையில் முன்னணி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு நாள் படமே... 

வாழ்த்துக்கள்.

திருப்பூர் ராம் எனது நண்பர். நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. செல் ஃபோன் அறிமுகம் மட்டும்.

Thursday, February 17, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்ட்டசி கதைகள் - எஸ் ராமகிருஷ்ணன் கதை - விமர்சனம்

http://www.tamilgood.com/movies/wp-content/uploads/2011/01/Naalaiya-Iyyakunar55.jpg 
மேஜிக் ரியலிசம் எனும் அலிபாபாவும் அற்புத விளக்கும் கான்செப்ட் இந்த வார கலைஞர் டி வி யில் ஞாயிறு காலை 10 .30 மணிக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கொடுத்தாங்க. லட்டு மாதிரி சப்ஜெக்ட்.ஆனா கலந்துக்கிட்ட 4 கதைகள்ல சந்தேகத்துக்கு இடமே இல்லாம எஸ் ராமகிருஷ்ணன் கதை தான் கலக்கி முதல் பரிசை தட்டிச்சென்றது.அது கடைசில......

1. தேய் மச்சி தேய்  - இயக்கம் ராஜேஷ் குமார் ( எழுத்தாளர் ராஜேஷ் குமார் அல்ல)

க்ரெடிட் கார்டு யூஸ் பண்றது ரொம்ப டேஞ்ஜர்,கைல இருக்கற காசுக்கு தக்கபடி செலவு பண்ணி சிக்கனமா இருக்கனும்கற சாதாரன படிப்பினையை தரும் கதை. ஃபேண்ட்டசி எனும் தளத்துக்கு இவர் எடுத்துக்கிட்ட தீம் ரொம்ப சுமார்தான்.
2 நிமிஷத்துல கிட்டத்தட்ட 120 ஷாட்ஸ்ஸை ஸ்பீடா காண்பிக்கறாங்க. விழலுக்கு இறைத்த நீர். டைம் மிஷின் மாதிரி மினி ரிமோட் கிடைக்கப்பெற்றவன் இப்படி அல்ப சொல்பமா ஒரு ஷாப்பிங்க் மட்டும் தானா போவான்? கற்பனை எல்லைகளை இன்னும் விஸ்தாரப்படுத்தனும்.....பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

http://i.ytimg.com/vi/gDRftuVBnFc/0.jpg
2. கைக்குள் சொர்க்கம்  - ரமேஷ்

ஆட்டையைப்போட்டுட்டு வந்த ஒரு செல்ஃபோன்ல தற்செயலா கால் (CALL) சொர்க்கத்துக்கு போகுது... என்ன வேணும்னாலும் கேட்கலாம்.ரொம்ப சாதாரண ஆசைகளை நிறைவேத்திக்கறாரு ஹீரோ.க்ளைமாக்ஸ்ல ஃபோனுக்கு சொந்தக்காரர் வந்து அந்த ஃபோனை பிடுங்கிகறார். லாஜிக்கே இல்லை. 

கதைல குறிப்பிட்டு சொல்ற மாதிரி கிராஃபிக்ஸ் ஒர்க் மட்டும் தான் நல்லாருந்தது.அதுவும் செல் ஃபோன் எண் அப்படியே வளைஞ்சு வானத்துக்கு போற சீன் அழகு. எதிர்பார்த்த மாதிரியே அந்த பட  கிராஃபிக்ஸ் ஒர்க்கிற்கு பரிசு கிடைச்சுது.

3.  வானவில் - கல்யாண்

இது கொஞ்சம் அம்புலிமாமா கதை டைப்பா இருந்தது.பணக்கார வீட்டுப்பசங்க விளையாடறதை ஏக்கத்தோட பார்க்கறான் ஏழைச்சிறுவன்.. அவனோட ஆசை ,லட்சியம் எல்லாமே பிரியா கூட விளையாடனும், அவ்வளவுதான்.குளத்துல இருக்கற மீன், “ நான் தான் தேவதை ,உனக்கு என்ன வேணும்”னு கேக்கறப்பக்கூட பிரியா கூட விளையாடனும்கற அதே பல்லவியைதான் பாடறான்.அவனுக்கு அந்த சான்ஸ் கிடைக்குது. 

பிரியா கிட்டே தேவதை பற்றி சொல்றான். அவ நம்பாம ஆற்றங்கரைக்கு வந்து பார்க்கறா.அப்போ இருட்டிடுது. தேவதை வர்ல.( தேவதைங்களுக்கு இருட்டுன்னா பயம் போல..?)உடனே நீ பொய் சொன்னே.. தேவதைனு யாரும் கிடையாதும்ன்னு அந்த பிரியா சொல்லீட்டு போயிடறா..அவ்வளவுதான் கதை.ரொம்ப சுமாரான திரைக்கதை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJVT62g6sO5-4ZpYF4aaC81A7zHq47G1DkFwlFeg5lnY7mKv-X0cl1tILaGWWtyQ8Tvc2DvaBcaKiNRE5qz7Kw9B0PWTU3-7maaVIPuPt9bnfmcDaAjOMUL4fnBTy0r0UIgUxKT8wQgA/s400/keerthi-sneha.jpg
4. கொக்கரக்கோ - அருண்

மத்த 3 படங்களும் சொதப்புனதுக்கு வட்டியும் முதலுமா இந்தப்படம் செம கலக்கு கலக்கிடுச்சு. எஸ் ராம கிருஷ்ணனின் கதையைப்படிக்கறப்ப இருந்த அதே பாதிப்பு, உற்சாகம்,பர பரப்பு , சஸ்பென்ஸ் இந்தப்படத்துல அட்சரம் பிசகாம அப்படியே கொண்டு வந்தது இயக்குநரின் சாமார்த்தியம்.

சரவெடி சண்முகம்னு ஒரு அரசியல்வாதி - ஒரு மேடைல அவருக்கு சேவல் டாலர்  செயினை பரிசா போடறாங்க. அப்போதிருந்து அவருக்கு பேச்சு வர்றதில்லை.. வாயைத்திறந்தா கொக்கரக்கோன்னு தான் சத்தம் வருது.அதை வெச்சு நடக்கற காமெடி கூத்துக்கள் தான் திரைக்கதை. க்ளைமாக்ஸ்ல அவர் மனம் நொந்துபோய் பீச்ல உக்காந்திருக்கறப்ப ஒரு திருடன் வந்து அவர் கிட்டே இருக்கற செயினை பறிச்சிட்டுப்போயிடறான்.இப்போ இவருக்கு பேச்சு வந்துடுது, திருடனுக்கு கொக்கரக்கோ குரல் வந்துடுது.

சரவெடி சண்முகமா வர்ற வரோட நடிப்பு, பாடிலேங்குவேஜ்,வசன உச்சரிப்பு எல்லாமே பிரமாதம்.கலக்கீட்டார் மனுஷன்.இந்தப்படத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா படத்துல வர்ற எல்லா கேரக்டரும் சீரியஸா இருப்பாங்க.. ஆனா பார்க்கற ஆடியன்ஸ் சிரிச்சிட்டு இருப்பாங்க.ரொம்ப ரேர் (RARE)  இந்த மாதிரி கான்செப்ட் கிடைக்கறது. கிட்டத்தட்ட எஸ் வி சேகரின் ஃபார்முலா..

ஜட்ஜா வர்ற ஹாய் மதன் பேசறப்ப தான் ஒரு அறிவு ஜீவிங்கறது எல்லாருக்கும் தெரியனும்கறது மாதிரி பேசறாரோன்னு டவுட்டா இருக்கு. சாதாரணமா பேசுனா தேவல. (நிறைய கமல் படம் பார்ப்பார் போல)

பிரதாப் போத்தன் - சொல்லவே வேண்டாம். வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கனும், அவங்க மூஞ்சில அடிக்கற மாதிரி கமெண்ட் தரக்கூடாதுங்கற அடிப்படை  நாகரீகம் கூட தெரியாம எடுத்த எடுப்புலயே உங்க படம் எனக்கு பிடிக்கலை, மோசம்னு தடாலடியா அவர் சொல்றதும் , படைப்பாளிகள் மேடைலயே கண் கலங்கறதும் பார்க்கறவங்க மனசை பாதிக்கற மாதிரி இருக்கு.

என்னோட கருத்து என்னன்னா இந்த 2 பேரையுமே தூக்கிட்டு கே பாலச்சந்தர்,கிரேசி மோகன் போன்றவர்களை ஜட்ஜ் ஆக்கினால் ரொம்ப நல்லாருக்கும். 

இயக்குநர் கே பாலச்சந்தர் கருத்து சொல்றப்ப நல்லாருந்தா அருமைங்கறார். நல்லாலைன்னா ரொம்ப நாசூக்கா இதப்படத்தை இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு இதமா சொல்றார்.

ஒரு படைப்பாளியை மேடைலயே அவமானப்படுத்தறதுக்கு இவங்க 2 பேருக்கும் சம்பளம் கொடுத்து ஏன் வெச்சிருக்கனும்?ஹாய் மதனைக்கூட ஒரு கணக்குல சேர்த்துக்கலாம். ஆனா பிரதாப் போத்தனின் அநாகரீகமான கமெண்ட்ஸ் வன்மையா கண்டிக்கத்தக்கது.

Wednesday, February 09, 2011

நாளைய இயக்குநர் VS சுஜாதா கதைகள் - விமர்சனம்

http://i1.ytimg.com/vi/SXqp9v22yvU/0.jpg 
கலைஞர் டி வி ல வர்ற உருப்படியான புரோகிராம்னா அது நாளைய இயக்குநர்  நிகழ்ச்சிதான்.வளரும் இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும்படியா குறும்படங்கள் வாரா வாரம் 4 போட்டு பரிசும் தர்றாங்க.கடந்த 3 வாரங்களா பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையமா வெச்சு குறும்படங்கள் வர்றது வரவேற்கத்தக்க விஷயம்.

1. மழைக்காலங்கள் ( சுபா)  - இயக்கியது அருண்குமார்

ஒரு மனிதனின் வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் சந்திக்கும் மழைக்காலத்தை பற்றி கவிதையா சொல்ல முயன்றிருக்கிறார்.கதையா படிக்கறப்ப இருந்த பாதிப்பு குறும்படத்துல வர்லை. பொதுவா இது சகஜமா நடக்கறதுதான்.ஏன்னா எழுத்தாளணின் பேனா எழுதிய விஷயங்களை படிக்கிற வாசகன் தன் கற்பனைக்கேற்றபடி இந்த சம்பவத்தை நினைச்சுப்பாத்துக்கறான்.. அதுவே திரையில் பார்க்கும்போது அவன் நினைச்ச பிம்பத்துக்கும், இயக்குநர் காட்டற பிம்பத்துக்கும் ஒரு இடைவெளி வந்துடுது.அதனாலதான் கதைகள் படங்களாக ஆகும்போது இயக்குநர் இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் பணி ஆற்ற வேண்டி இருக்கு.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அருண்.

2.மஹா என்கிற மாடு   ( சுஜாதா) -இயக்கியது திருப்பூர் ராம்

அமரர் சுஜாதா எழுதுன குதிரை என்ற ஹாஸ்யக்கதையை கையில் எடுத்துக்கிட்ட நண்பர் திருப்பூர் ராம் அடிப்படையில் ஒரு கவிஞர்.கவிதைல கலக்குனவர் காமெடிக்கதைல கை வரிசை காட்டுனது பாராட்டப்பட வேண்டியது.

மூலக்கதைல ஹீரோவை குதிரை ஒண்ணு கடிச்சிடும்.அதனால அவன் சந்திக்கிற பிரச்சனைகளை காமெடியோட சொல்லி இருப்பாரு சுஜாதா.ராம் இந்த கதைல குதிரைக்குப்பதிலா மாடு கடிக்கற மாதிரி கதையை கொண்டு போயிட்டாரு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdbJ95UT9TueS-YZUZJqLMjHmjSvRwvPQScMPA07KzH1w3qJTU3u4XlJiRVT_wtecPKs-jcN7qn8nmX0vj8a3hhVHi-Svp8CDR5BnrHv_-mDgU0wSHpzhkEC7wA7e-2xRCLClXrDNMUMC6/s1600/Naalaya.jpg
ரசித்த வசனங்கள்

1. டாக்டர்.. என்னை ஒரு மாடு கடிச்சிடுச்சு.. கடிச்சுட்டு முறைச்சுது..

உங்க சதை டேஸ்ட்டா இல்லையோ என்னவோ..?


2. வாடா .. ஜூஸ் கடைக்குப்போலாம்..

சரி.. எனக்கு அருகம்புல் ஜூஸ் குடு...

அடப்பாவி மாடு கடிச்சதுல இருந்து நீ மாடாவே மாறிட்டு வர்றே....

3. சரி,, மாடு கடிச்ச ராசி எப்படி இருக்குதுன்னு போய்பார்ப்போம்..யோவ்.. கிளி ஜோசியரே...எனக்கு ஒரு சீட் எடுத்து ராசிபலன் சொல்லுய்யா..

பரவால்ல .. உங்களுக்கு கோமாதா சீட்டு வந்திருக்கு.

மறுபடியும் மாடா... எஸ்கேப்.....


இந்தக்கதைல மாடு கடிச்சவரோட நண்பனா வர்றவரோட நடிப்பு நல்லாருந்தது.மாடு கடிச்ச நபரோட நடிப்பு ஓவர் ஆக்டிங்க்.இயக்குநர் ஒவ்வொரு சீன்லயும் தடுமாறி இருக்கறது அப்பட்டமா தெரியுது.ஒரு சீன் முடிக்கறப்ப நாம இந்த சீனை பக்காவா எடுத்துட்டோம்னு நம்பிக்கை வரனும். ஆனா ராம் ஏனோ சுஜாதா கதைங்கறதால டென்ஷன் ஆகிட்டார் போல..

ஆனா ஒரு ஆச்சரியம் இந்த படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.

3. குகை ( பி கே பி ) - இயக்கியது மணிவண்ணன்

தொல்பொருள்ராய்ச்சியாளர் தனது நண்பனும், பி ஏவுமான வில்லனை கூட கூட்டிட்டு போறார். போற வழில ஏற்படற வாக்குவாதத்தால வில்லன் ஹீரோவை போட்டுத்தள்ளிடறான்.மறுபடி ரிட்டன் ரயில்ல வர்றப்ப மற்ற ஃபிரண்ட்ஸ் மூலம் தான் கொலை செஞ்சவன் தன்னை நல்ல நண்பனா நினைச்சான் அப்படிங்கற மேட்டர் தெரிஞ்சு குற்ற உணர்ச்சி தாங்காம தற்கொலை பண்ணிக்கறான்.இதுதான் கதை. கதைல பெரிய மைனஸ் நம்பகத்தன்மை கொஞ்சம் கூட இல்லை.

பாராட்ட வேண்டிய ஒரே விஷயம் இந்த 5 நிமிஷ குறும்படத்துக்காக இயக்குநர் ராஜஸ்தான் பாலைவனம் போய் படம் பிடிச்சதுதான்.பொதுவாவே தமிழ் சினி ஃபீல்டுல ஒரு பழக்கம் உண்டு. கதை சரி இல்லைன்னா படம் பூரா ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல எடுத்து மைனஸ்ஸை பிளஸ் ஆக்க ட்ரை பண்ணுவாங்க.அதைத்தான் நம்ம மணியும் பண்ணி இருக்கார். ஆனா எடுபடலை.
http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0905/07/images/img1090507079_1_1.jpg
4.  அதே முகம் ஆசை முகம் ( சுஜாதா) - இயக்கியது ரங்கநாதன்

2 வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதைகள் எந்தப்புள்ளில எப்படி இணையுதுன்னு சொல்ற மேஜிக் ரியலிச கதை.ஒரிஜினல் சிறுகதையின் தலைப்பு ஒரு கதையில் இரு கதைகள்.

சரித்திர காலத்தில் நடக்கும் கதையில் இளவரசியாக நடிப்பவர் சுமார் ஃபிகர்தான். கலக்கலான ஃபிகராக போட்டிருக்கலாம்.( சம்பளம் ஓவரா கேட்டிருப்பாரோ?)அவர் ஷகீலா ரேஞ்சுக்கு லோ கட்  டிரஸ்ஸில் வருவது பாத்திரத்தின் கண்ணியத்தையே குறைத்து விட்டது.அதே போல் லிப்ஸ்டிக்கும் ஓவர் டோஸ்.

2வது கதையில் வரும் இளஞ்சோடிகளின் வாக்குவாதம் அழகு கவிதை.

பளிச் வசன மின்னல்

டியர்.. உன் எண்ணங்கள்ல வண்ணம் (கலர் ) இல்லை.. எல்லாம் பிளாக் & ஒயிட்டாவே இருக்கு.. எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே..

இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டு பண்ணி இருந்தார்.இதுக்குத்தான் முதல் பரிசு கிடைக்குனு நினைச்சேன்.ஆனா ஹாய் மதன்  2 கதையும் எந்தப்புள்ளில இணையுதுன்னு நீங்க  காட்டவே இல்லைன்னு காரணம் சொன்னார். அவர் சுஜாதாவோட ஒரிஜினல் கதையை படிக்கல போல.

அப்படி காட்ட வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா அப்படி ஒரு சம்பவம் நடக்க சான்ஸ் இல்ல. சும்மா பார்வையாளரை திகைப்பில் ஆழ்த்த கணடறியப்பட்ட உத்தி அது.

சரி விடுங்க , ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தன்மை உடையது.

TASTE DIFFER FROM PERSON TO PERSON.

Tuesday, February 01, 2011

நாளைய இயக்குநர் - 30 01 2011 - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjJEVcMAaOphjPQVkyW_PlaQb7ug3S3LQwP55dUCrBbzkxnKwbuqrSYCZsXm7OtQlvHAOs2ZU0rMDN9EoOkcy1jQqLy7XZRa7FPzniuPRzbJhf7cr0xK-Q33Vg49DRT_4MvmURTkABLz4/s320/kalaingar-Tv-Naalaya-Iyakkunar_tamilkey-250x130.jpg 
முதல் படமா பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுன சிறுகதையை குறும்படமா எடுத்த சத்ய சந்தரனோட சொல்ல மாட்டேன் படம் போட்டாங்க. அவர் அமரர் சுஜாதாவோட ரசிகர் போல . வசனங்கள் எல்லாம் ரொம்பவே ஷார்ப்.ஒருபேஷண்ட் டாக்டர்ட்ட வர்றான். சார்.. நான் எது சொன்னாலும் நெகடிவ்வா செய்யற கேரக்டர்ங்கறான். சரி உங்க பிரச்ச்னை என்ன?ன்னு கேட்டா சொல்ல மாட்டேன் அப்ப்டிங்கறான்.. சரி சொல்லாதீங்கன்னதும் சரி டாக்டர்.. சொல்றேங்கறான்.. இப்படி காமெடியா போற கதைல டாக்டரோட லோடு செய்யப்பட்ட ரிவால்வரை பேஷண்ட் கைல எடுக்கறான்.. டாக்டர் பதட்டத்துல அவன் கேரக்டர் ஞாபகம் இல்லாம டேய்.. கன் லோடு பண்ணீ இருக்கு சுட்டுடாதேங்கறார். டப்புன்னு சுட்றான்..

ஹீரோ நடிப்பு வசனம் 2-ம் ஓக்கே.. சுமார் டைரக்‌ஷன்.

2.  சா அறிவழகன் எழுதுன கதை ..டைட்டில் மரண அடி.பிரமாதமான டைரக்‌ஷன்.கதையோட KNOT  என்னன்னா சுடுகாட்டு வெட்டியான் தன்னோட மகனை பரம்பரைத்தொழில் செய்ய பணிக்கறான்.. அவன் அதைக்கேக்காம வேலை வேலைனு அலையறான்.கடைசில அப்பா இறந்ததும் வேற வழி இல்லாம குலத்தொழிலை செய்யறான்..

இந்தக்கதைல 2 விஷயம் பாராட்டலாம். நம்ம அப்பா இருக்கறவரை நமக்கு அவரோட மதிப்பு தெரியறதில்லை.அவர் இறந்த பிறகுதான் அவரோட பெருமையை உணர்றோம். (எனக்கு அப்பா தவறிட்டார்)அதை ரொம்ப இயல்பா எடுத்திருக்காங்க.இன்னொன்னு குலத்தொழில் விஷயம்.நம்ம அப்பா பண்ணுன தொழிலை செய்ய நாம கூச்சப்படறோம்.. அப்புறம் முட்டி மோதி வேற வழி இல்லாதப்ப அதை ஏத்துக்கறோம்..

படத்துல கலக்கலான வசனங்கள்

1. எல்லாருமே பல்லக்குல ஏறி உட்கார்ந்துட்டா அப்புறம் பல்லக்கை சுமக்குறது யாரு?

2. அப்பா.. எதுக்கு உன் கதையை எல்லாம் என் கிட்டே சொல்றே..?

வேற யாரு என் பேச்சை கேக்கறா..?

3. ஒரு மனுஷன் 100 பேருக்கு நல்லது பண்ணீ இருந்தாலும் 4 பேருக்காவது கெட்டது பண்ணாமயா இருந்திருப்பான்..?அதை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் இந்த வெட்டியான் வேலையை செய்ய முடியும்..

4. வெட்டியான் பையன் வேலை கேட்டு நடையா நடக்கிறானே.. அவனுக்கு ஒரு வேலை போட்டுத்தர்றது?

அது சரி.. அப்புறம் வெட்டியான் வேலையை யார் செய்யறது?இவனுங்களை எல்லாம் மேலே வரவே விடக்கூடாது.

படத்துல ரெண்டே 2 கேரக்டர்.. அப்பா ,பையன்  2 பேர் நடிப்பும் அருமை. கேமராவும் கலக்கல். இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுப்பாங்கன்னு நினைச்சேன்...ஆனா 2வது பரிசுதான் கிடைச்சது.

http://vannitube.com/wp-content/uploads//2010/09/208.jpg
3. அருள் வரதனோட சத்யம் படம் அகதா கிறிஸ்டி எழுதுன WHO IS THE WITNESS  நாவல்ல வர்ற ஒரு சம்பவத்தை அடிப்படையா வெச்சு எழுதப்பட்ட சிறுகதை.

ஒரு கேரளா கிராமம்.. சுடுகாடு.ஒரு ஆள் வெயிட் பண்றான். போலீஸ் ஆஃபீசர் வர்றார்.. யாரப்பா நீ?ன்னு விசாரிக்கறாரு.. 20 வருஷத்துக்கு முன்னே காலேஜ் படிக்கறப்ப பெரிய ஆள் ஆனதும் இந்த தேதில இன்ன நேரத்துல சந்திக்க்றதா பிளான்..அப்படின்னு சொல்ல சரின்னு அவர் கிளம்பி போறாரு. போலீஸ் கூட்டம் வந்து அவனை கைது பண்ணுது. அவன் போலீசால் தேடப்படற குற்றவாளி.. அந்த போலீஸ் ஆஃபீசர்தான் அவனோட நண்பன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்த்ததுதான் என்றாலும் சுவராஸ்யமாவே இருந்தது.. ஆனா 2 பேருக்கும் நடிப்பு சரியா வர்லே.. படத்துல பாரட்ட வேண்டிய அம்சம் கேமரா கோங்கள்.

4. ஆனந்த விகடன்ல கதாவிலாசம் எழுதி இலக்கிய உலகை ஒரு கலக்கு கலக்கின எஸ் ராம கிருஷ்ணன் எழுதுன கதையை வீட்டுக்கணக்குங்கற டைட்டிலோட படமாக்குன அருண் பிரசாத்துக்கு முதல் பரிசு.

கதை என்ன? அப்பா ஒரு உருப்படாத கவிஞன். சினிமாவுக்கு பாட்டு எழுதறேன்.. சான்ஸ் கிடைக்கும்னு கனவோட இருக்கற உதவாக்கரை. அவனோட மனைவி வேலைக்குபோய் சம்பாதிச்சு குடும்பததினை பாத்துக்கறா. (மனைவியோட முகம் ஒரு ஷாட்ல கூட காட்டாம விட்டது டைரக்‌ஷன் டச்..)அவனுக்கு ஒரு மக. அந்த சின்னப்பொண்ணை கடைக்கு அனுப்பி ஓ சி ல சிகரெட் வாங்குறது.. பக்கத்து வீட்ல அஞ்சு பத்து கடன் வாங்குறதுன்னு இருக்கான்.. ஒரு சமயம் ஹவுஸ் ஓனர் காலி பண்ண சொல்லிடறார். அவன் குடும்பத்தோட காலி பண்ணிட்டு போயிடறான்.காலி பண்ணுன வீட்ல அந்த  சின்னப்பொண்ணு அப்பா யார் கிட்டே எவ்வளவு கடன் வாங்கி இருக்கார்னு சுவர்ல எழுதி வெச்சிருக்கா.

கேக்க சாதாரணமா இருக்கற இந்தக்கதைல அந்த சின்னபொண்ணோட நடிப்பு பிரமாதமான தூணா படத்துக்கு கை குடுத்திருக்கு...வெல்டன்..
எங்கப்பா ஒரு நாள் பெரிய ஆளா வருவாரு..உங்க கடனை எல்லாம் அடப்பாரு என எல்லோரிடமும் சலிக்காமல் கூறும்  நடிப்பு கலக்கல்.