Showing posts with label கதாசிரியர்கள். Show all posts
Showing posts with label கதாசிரியர்கள். Show all posts

Monday, July 27, 2015

சிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்டி+அனிருத் = பிரம்மாண்டமான புதுப்படம்

ஆர்.டி.ராஜா
ஆர்.டி.ராஜா
ஹாலிவுட் திரைப்படங்களில் நட்சத்திரங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெறுவது திரைக்கதை. அங்கு பிரதான வேலையாக ‘ஸ்க்ரிப்ட் டாக்டர்’ என்ற கதை விவாதப் பணி பின்பற்றப்பட்டு வருகிறது. இது தமிழ் சினிமாவில் முன்பே இருந்ததுதான். இடையில் சில காலம் இதன் முக்கியத்துவம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அது முக்கியத்துவம் பெற்று வருகிறது.
அந்த வகையில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களின் படப்பிடிப்புக்கு பின் அதை சரியே முறைப்படுத்துவது, படத்தின் புரோமோஷனுக்கு யோசனைகள் கொடுப்பது என்று பிஸியாக இருந்து வருபவர், ஆர்.டி.ராஜா. இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ‘ஐ’ பட மேக்கப்மேன் ஸீன் ஃபுட், அனிருத் எனப் பிரமிக்க வைக்கும் கூட்டணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ‘24 ஏ.எம். ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் ஆர்.டி.ராஜாவை சந்தித்தோம்:
சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
‘மெரினா’ படம் முடித்த உடனேயே, “அடுத்த படத்தை நீங்களே தயாரிக்கலாமே” என்று சிவா என்னிடம் கூறினார். அதன் பிறகும் பலமுறை கூறினார். சில காரணங்களால் தள்ளிப்போன அந்த விஷயம் இப்போது கைகூடி வந்திருக்கிறது. சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் ஒரு உதவி இயக்குநரும்கூட. திரைக்கு வருவதற்கு முன்பே சின்னத் திரையிலும் பெரிய திரையிலுமாக, பல படைப்புகளில் அவர் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக் கிறார். அவரை வைத்து ஒரு படம் தயாரிப் பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
அவர்தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் என்றும் ஒரு பேச்சு இருக்கிறதே?
இந்திய அளவில் இன்றைக்கு 90 சதவீத நடிகர்கள் தயாரிப்பாளராக இருக்கிறார்கள். தமிழிலும் தனுஷ், ஆர்யா, விஷால், ஜீவா, விஜய் சேதுபதி என்று நிறைய ஹீரோக்கள் தயாரிப்பாளராக இருக்கிறார்கள். அப்படி யிருக்க சிவாவும் தயாரிப்பாளராக மாறுவதில் தப்பில்லை. ஆனால் அவருக்குத் தயாரிப் பாளராகும் எண்ணமில்லை. சிவா இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்றால் அதை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை.
பி.சி.ஸ்ரீராம் தொடங்கி ரசூல் பூக்குட்டி வரையிலான பிரமாண்ட கூட்டணியை எப்படி அமைத்தீர்கள்?
பி.சி.ஸ்ரீராமுக்கு நாங்கள் ஸ்க்ரிப்ட் புக்கையே கொடுத்தோம். அவருக்கு கதை மிகவும் பிடித்ததிருந்தால் சம்பளத்தைக்கூட ஒரு பொருட்டாக அவர் நினைக்கவில்லை. ‘இது உங்களோட முதல் படம் ராஜா. நல்ல டீம். அதனால எனக்குப் பெரிய சம்பளம் வேணாம்’ என்று சொன்னார். சிவாவின் மேக்கப் டெஸ்டுக்காக ஆறரை மணிக்கு மேக்கப்மேன் ஸீன் ஃபுட் வருவார் என்றால் பி.சி.சார் அங்கே ஐந்தரைக்கே வந்திடுவார்.
‘மொழிங்கிறது அறிவு கிடையாது. நீ என்ன விரும்பினாலும் என்கிட்ட சொல்லு. நான் மேக்கப்மேனுக்கு அதை இங்கிலீஷ்ல சொல்லிடுறேன்’ன்னு புது இயக்குநர் பாக்யராஜுக்கு தைரியம் கொடுக்குறார். யார் கொடுப்பாங்க இப்படியொரு உற் சாகத்தை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் பி.சி.சார்.
மும்பைக்குப் போய் ரசூல் பூக்குட்டிக்கு கதை சொன்னோம். ‘இந்தக் கதையில எனக் கான வேலை அதிகம். நிச்சயம் பண்றேன்’ என்று அவர் சொன்னார். மேக்கப் மேன் ஸீன் ஃபுட்டுக்கு மொத்த ஸ்க்ரிப்டையும் மெயில் பண்ணினோம். அவருக்கும் பிடித்திருந்தது. இப்படித்தான் கதைக்கு ஏற்ற டெக்னீஷியன்களை ஒருங்கிணைத்தோம்.
நீங்கள் பல நிறுவனங்களுக்கு ஸ்க்ரிப்ட் டாக்டராகப் பணியாற்றி இருக்கிறீர்கள். எடுத்த படத்தை பிறரிடம் காட்டி சரி செய்யும் இந்த ஹாலிவுட் ஐடியா இப்போது தமிழ்த் திரையுலகுக்கும் வந்துவிட்டதா?
இந்த ஐடியா ஹாலிவுட்டுக்கு எப்போது வந்ததோ தெரியாது. ஆனால், தமிழில் இது பல காலமாகப் பின்பற்றப்பட்ட ஐடியாதான். ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் கதை இலாகாவையே உருவாக்கி வைத்திருந்தார்கள். ஒரு கதையை செய்து பலரும் பலவிதமாக விவாதிச்சு ஓகே செய்த பிறகே படங்களை எடுத்தார்கள். படம் முடிந்த பிறகும் அந்தக் கதை இலாகா வினர் படத்தைப் பார்ப்பார்கள்.
ஒரு ரசிகனின் மனநிலையோடு படத்தை சரிசெய்வார் கள். இடையில் காணாமல்போன அதே வழக்கம்தான் இப்போது மறுபடியும் வந்திருக் கிறது. ரசிகனோட பார்வைக்குப் போகும் கடைசி நிமிடம் வரைக்கும் ஒரு படத்தைச் சரிசெய்ய தொழில்நுட்பம் நிறைய வசதி களைச் செய்து கொடுத்திருக்கிறது. அதனால் மாற்றுப் பார்வைக்கு ஒரு படத்தைக் காட்டுவது தப்பில்லை. நான் நிறைய படங்களை அப்படிப் பார்த்து என் மனதில் பட்ட கருத்துக்களைச் சொல்லி இருக்கிறேன். ஃபாக்ஸ் ஸ்டார், திருப்பதி பிரதர்ஸ், ஸ்டுடியோ க்ரீன், ரெட் ஜெயன்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், பசங்க புரொடக்சன்ஸ் என பல நிறுவனங்களில் சில ஐடியாக்களுக்காக என்னை அழைத்திருக்கிறார்கள்.
படம் பற்றி கருத்து சொல்வதோடு புரோமோஷன் சம்பந்த மான ஐடியாக்களையும் நிறைய கொடுத்திருக் கிறேன். முறையான அனுபவத்துக்காக அறிவுமதி, செல்வபாரதின்னு பலரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். நிறைய விளம்பரப் படைப்புகள் பண்ணியிருக் கிறேன் ‘மான் கராத்தே’ உள்ளிட்ட படங் களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். ஒரு இயக்குநருக்கான எல்லா வேலைகளையும் தெரிந்துகொண்டுதான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன்.
எப்பவுமே திரைக்கதைதான் முதல் ஹீரோ. நல்ல திரைக்கதை எப்போதும் தோற்காது. ஹாலிவுட்டில் இப்பவும் முதலில் ஒரு நாவலைத்தான் தேர்வு செய்கிறார்கள். அதன் பிறகுதான் அதற்கேற்ற நடிகர்களை யும் டெக்னீஷியன்களையும் தேர்வு செய்வார்கள். இந்த முறையை எங்கள் ‘24 ஏ.எம். ஸ்டூடியோஸ்’ நிறுவனம் பின்பற்றும்.
தமிழ் சினிமா மீண்டும் கதாசிரியர்களின் கையில் வரும். அதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். என்னுடைய இந்த நிறுவனத்தில் லயோலா கல்லூரிப் பேரா சிரியர் ராஜநாயகம், அண்ணன் அறிவுமதி, இன்னும் சில பத்திரிகை நண்பர்கள் அடங் கிய ஆலோசனைக்குழு இருக்கிறது. இவங் களோட வழிகாட்டலில் சரியான திரைக்கதை கொண்ட சிறந்த படங்களை ‘24 ஏ.எம்.’ நிறுவனம் தேர்ந்தெடுத்து தயாரிக்கும்.

நன்றி - த இந்து