Showing posts with label எம் எஸ் வி. Show all posts
Showing posts with label எம் எஸ் வி. Show all posts

Thursday, March 07, 2013

நேற்று இன்று நாளை படத்தில் எம்.ஜிஆர் செய்த தில்லுமுல்லு - எம் எஸ் வி பேட்டி

 

எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்!''


விகடன் மேடை எம்.எஸ்.வி. பதில்கள்
வாசகர் கேள்விகள்
ட்டுக்குப் பாட்டெழுத மாட்டாராமே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... உண்மையா?''

 
''உண்மைதான். தன்னோட பாட்டு வரிகளுக்குத்தான் மெட்டுப் போடணும்கிறதை ஒரு வைராக்கியமாவே வெச்சிருந்தார் பட்டுக்கோட்டையார்.


'பாசவலை’னு ஒரு படம். அந்தப் படத்துல ஒரு காட்சிக்குரிய பாடலை முதலில் கண்ணதாசன் எழுதினார். தயாரிப்பாளர், இயக்குநரை அந்தப் பாட்டு வரிகள் அவ்வளவா ஈர்க்கலை. அப்புறம் கவிஞர் மருதகாசிகிட்ட எழுதச் சொன்னோம். அதுவும் சிறப்பா அமையலை. அப்போ ஒரு நண்பர் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்கு அறிமுகமானார். 'சரி... எதுக்கும் இவரையும் எழுதச் சொல்லிப் பார்ப்போம்’னு அவர்கிட்டே சிச்சுவேஷனைச் சொல்லி எழுதச் சொன்னோம். எழுதிட்டு வந்து கொடுத்தார். பிரமாதமான வரிகளா இருந்தன...


'குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச்  சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்’


-பாட்டு எங்க எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. உடனே மெட்டுப் போட்டு பாடல் பதிவாச்சு. இன்னிக்கும் அவர் பேர் சொல்ற பல பாடல்கள் அவர் எழுதின பிறகு மெட்டு போடப்பட்டதுதான். 'புதையல்’ படத்துல நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிட்டதால,  என் மெட்டுக்கு ஒரே ஒரு பாட்டு எழுதிக்கொடுத்தார். சினிமாவில் நான் பார்த்த மனிதர்கள்ல ரொம்பத் துணிச்சலானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!''



கி.மனோகரன், பொள்ளாச்சி.

''கண்ணதாசன்-வாலி... இரண்டு கவிஞர்களையும் அவர்கள் உச்சத்தில் இருந்த சம காலத்தில் எப்படிச் சமாளித்தீர்கள்?''


''கண்ணதாசன் - வாலி... இந்த ரெண்டு ஜாம்பவான்களுடன் வேலை பார்த்ததை இப்போ நினைச்சுப் பார்த்தாலும் எனக்குப் பிரமிப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு. எனக்கு இசைமட்டும் தான் தெரியும். தமிழ்ல புகுந்து விளையாடும் அவங்களுக்கு ஈடுகொடுக்கிறதுக்காகவே இசையில் கூடுதலா நான் உழைக்க வேண்டிஇருந்தது.



நானும் கண்ணதாசனும் இணைஞ்சு பரபரப்பா வேலை பார்த்துட்டு இருந்த காலகட்டத்துல, வாலியை எனக்கு அறிமுகம் செய்தது என் நண்பன் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். வாலியோட சரளமான, இனிப்பான தமிழ் எனக்குப் பிடிச்சிருந்தது. 'இதயத்தில் நீ’ங்கிற படத் துல ஒரு பாட்டு எழுதச் சொன்னேன். 'பூ வரையும் பூங்கொடியே... பூமாலை சூட வா...’ங்கிற அந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆச்சு. அடுத்ததா 'கற்பகம்’ படத்துல அவரைப் பாட்டு எழுதவைக்கணும்னு எனக்கு ஆசை. 


ஆனா, அந்தப் படத்தோட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ் ணன், கண்ணதாசன் வெறியர். உலகத்துலயே கண்ணதாசன் மட்டும்தான் கவிஞர்னு நினைக்கிறவர். அவர்கிட்ட போய், 'வாலிக்கு உங்க 'கற்பகம்’ படத்துல ஒரு பாட்டு எழுத வாய்ப்பு தரணும்’னேன். மறுத்துட்டார். 'பூ வரையும் பூங்கொடியே...’ பாட்டை அவர்கிட்ட ரெண்டு மூணு தடவை திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டினேன். ரொம்பப் பிகு பண்ணிக்கிட்டுதான்... சரின்னார். வாலி எழுதின 'அத்தை மடி மெத்தையடி...’ங்கிற பல்லவியைக் கேட்டுட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அசந்துபோயிட்டார். அது மட்டும்இல்லாம, அதே படத்தில் 'மன்னவனே அழலாமா...’ங்கிற பாட்டு எழுதவும் வாலிக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார்.


வாலி அறிமுகமான இந்தச் சமயத்துல, 'விசு நம்மளை விட்டு விலகிப்போயிடுவானோ’ங்கிற ஒரு சந்தேகம் என் மேல கண்ணதாசனுக்கு இருந்தது. எல்லாரையும் சமமாக் கொண்டாடுற என் மனசால நாளடைவில் கவியரசரின் சந்தேகத்தையும் போக்கினேன்.


ரெண்டு கவிஞர்களையும் சமாளிக்க எனக்குக் காலமும் கைகொடுத்தது. எப்படின்னா... எம்.ஜி.ஆருக்கு வாலியும், சிவாஜிக்கு கண்ணதாசனும் நிறையப் பாடல்கள் எழுதும்படியான நேரம் அப்போ அமைஞ்சது. அதுவும்கூட என் வண்டி இவங்க மத்தியில கடகடன்னு ஓடுனதுக்கு ஒரு காரணம்!''  

கு.ராமலிங்கம், மதுக்கூர்.


'' 'நேற்று... இன்று... நாளை’ படத்தில் உங்களை வைத்து எம்.ஜிஆர். கேம் விளையாடினாராமே... என்ன விளையாட்டு அது?''


'' 'நேற்று... இன்று... நாளை’ படத்தைத் தயாரிச்சவர் நடிகர் அசோகன். எம்.ஜி.ஆர். ஹீரோ. அந்தப் படத்துல எல்லா பாட்டும் சூப்பர் ஹிட். ஆனா, கம்போஸிங்குக்கு முன்னாடி அந்தப் படத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் குறைச்சலா நூறு மெட்டுக்களாவது போட்டிருப்பேன். 


அதைத் தினம் ராமாவரம் தோட்டத்துக்கு எடுத்துட்டுப் போய் எம்.ஜி.ஆர்கிட்டே காட்டிட்டு... உதட்டைப் பிதுக்கிக்கிட்டே திரும்பி வருவார் அசோகன். எல்லா மெட்டையும் 'வேண்டாம்... நல்லாயில்ல... இது சரியில்ல’னு சொல்லி எம்.ஜி.ஆர். திருப்பிவிட்டுட்டே இருந்ததுல, நாலஞ்சு மாசம் ஓடிப்போச்சு. இதுக்கு மேலயும் என்னால மெட்டுப் போட முடியாதுன்னு நானும் உதட்டைப் பிதுக்கிட்டேன். 


அதைக் கேள்விப் பட்டதும் எம்.ஜி.ஆர். என்னைத் தேடி வந்தார். 'டேய்... விசு, நீ போட்ட ஒவ்வொரு டியூனுமே அற்புதம். ஆனா, உன் டியூன்களை நான் உடனே ஓ.கே. பண்ணியிருந்தா, அப்பவே ஷூட்டிங் கிளம்பியிருப்பாங்க. ஆனா, அப்போ என்கிட்ட கால்ஷீட் இல்லடா. அதான் உன்னைவெச்சு கேம் விளையாடினேன்’னு சொன்னாரு பாருங்க... குறும்புக்கார மனுஷன்!''


சு.பால்ராஜ், மதுரை-4.


''நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நல்ல பழக்கம் எது?''


''எப்பவும் ஏகப்பட்ட பழக்கங்களை நான் கடைபிடிக்கிறேன். அதெல்லாம் நல்லதா... கெட்டதானு எனக்குத் தெரியாது. அதுல குறிப்பா சொல்லணும்னா, இப்பவும் மேடையில இசை நிகழ்ச்சி செய்யும்போது முதல் பாடலா கவியரசரின்  'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...’ பாட்டைப் பாடித்தான் ஆரம்பிப்பேன். அதே மாதிரி இசை நிகழ்ச்சியை முடிக்கிறப்ப, 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்’னு சொல்லி முடிப்பேன். இதைப் பழக்கமா இல்லை... வழக்கமாவே வெச்சிருக்கேன்!''


ரா.பாலகுமாரன், சென்னை-63.


''கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.எம்.சௌந்தர்ராஜன் என இந்த அட்டகாசக் கூட்டணியில் உருவான பாடல்களில் உங்கள் மனத்தைக் கவர்ந்த பாடல் எது?''


 ''  'வீடு வரை உறவு
 வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ’ பாட்டுதான் எங்க மூணு பேரு காம்பினேஷன்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு!''


ஆர்.சிவச்சந்திரன், வேலூர்-4.


''இசைத் துறையில் எத்தனையோ சாதனைகள் படைச்சிருக்கீங்க. உங்க மனசுக்கு நெருக்கமான சாதனை என்ன?''


''ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாம ராப்பகலா உழைச்சுப் போட்ட மெட்டுகளை இன்னிக்கும் நீங்கள்லாம் கொண்டாடுறதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம். சினிமாவில் இல்லாம என் மனசுக்கு நிறைவான பங்களிப்புன்னா... என் இசையில் உருவான 'கிருஷ்ண கானம்’ இசைத்தட்டைச் சொல்லலாம். தமிழ்ல வந்த பக்தி இசையில் இன்னைக்கு வரைக்கும் அந்த இசைத் தொகுப்பின் சாதனையை வேற எதுவும் முறியடிக்கலை. அடுத்து, தமிழ்த் தாய் வாழ்த்தான 'நீராரும் கடலுடுத்த...’ பாடலுக்கு நான் இசையமைச்சதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்யமா நினைக்கிறேன்!''


எஸ்.பார்வதி, தூத்துக்குடி.


''ஒரு பாட்டுக்கு நீங்க போட்ட மெட்டுகள் எல்லாமே நல்லா இருந்தா என்ன செய்வீங்க?''


''நிறைய தடவை அப்படி நடந்துருக்கு. உதாரணத்துக்கு, 'என் தங்கை’ படத்துல ஒரு பாட்டுக்காக நான் போட்ட எல்லா மெட்டும் அந்தப் படத்தோட தயாரிப்பாளர் நடிகர் பாலாஜிக்குப் பிடிச்சுப்போச்சு. எதை செலெக்ட் பண்றதுனு அவர் கையைப் பிசைஞ்சுக்கிட்டு இருந்தார். அப்போ அவர் ஆபீஸுக்கு லெட்டர் கொண்டுட்டு தபால்காரர் வந்தார். அவரைக் கூப்பிட்டு, எல்லா டியூனையும் போட்டுக் காட்டி ஒரு டியூனை செலெக்ட் செய்யச் சொன்னார். அந்த தபால்காரர் செலெக்ட் செஞ்ச மெட்டு... 


'கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்குத் தாளம் போடலாம்!''’


எம்.நாகப்பன், திருவாரூர்.


''இன்றைய சினிமா கலைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?''


''அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனா, ஒண்ணு சொல்றேன்... யாரா இருந்தாலும் உண்மையா இருக்கணும், கடுமையா உழைக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்கிற மாதிரி... அப்பா - அம்மாவை வணங்கணும். அந்த மனுஷ தெய்வங்கள் இல்லைன்னா நாம கிடையாது. அடுத்து, குரு பக்தி. நீங்க யாரால முன்னேறி மேல வந்தீங்களோ... அவங்களைக் குருவா மதிச்சு வணங்கணும். எனக்கு இசையமைப்பாளர்ங்கிற அடையாளம் கொடுத்தவர் என் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அவர் கடைசிக் காலத்துல, 'நான் இறந்துபோனா... என் உடலுக்கு விஸ்வநாதன்தான் கொள்ளி வைக்கணும்’னு எழுதிவெச்சிருந்தார். அவரோட விருப்பப்படியே நான்தான் அவருக்குக் கொள்ளி வெச்சேன். எது உங்களைக் கைவிட்டாலும், குரு பக்தியும் நன்றி உணர்ச்சியும் உங்களைக் கைவிடவே விடாது!''


நன்றி - விகடன் 


 

Wednesday, December 26, 2012

பட்டணப் பிரவேசம். -வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா - பாடல் உருவான விதம் - எம் எஸ் வி பேட்டி

மீட்டருக்கு மேட்டர் - 5

நாலே நாலுலாதான் பாக்கி!

எம்.எஸ்.விஸ்வநாதன்

டைரக்டர் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான படம்பட்டினப் பிரவேசம்.’ அதற்கான இசை கம்போசிங்குக்காக நானும், கவிஞரும் கே.பி. சாரோடு உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர் சொன்ன சிசுவேஷனுக்கு நான் ஒரு மெட்டுப் போட்டேன். அதற்கு கவிஞர் பாட்டு எழுத வேண்டும். ‘விசு! மெட்டை வாசிடா!’ என்று உரிமையோடு சொன்னார் கவிஞர். என் விரல்கள் ஹார்மோனியத்தின் மீது விளையாடிக் கொண்டிருக்க, நான் வாயால் அந்த மெட்டைப் பாடிக் காட்டி னேன். ‘நா...நன்னா...நன்னா... நன்னா...நன்னா.. நான .. நா.’
மடையா! நிறுத்து!’ உத்தரவு போட்டார் கவிஞர். ‘என்னடா! நீ பாட்டுக்கு நா... நன்னான்னு வாயில வந்தபடி சொல்லிக்கிட்டே போறே! எனக்குச் சரியான வார்த்தைகள் வரணுமில்லையா? நீ என்ன பண்ணறே... நல்லதா வேற ஒரு மெட்டுப் போடு!’
எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் கே.பி., ‘அந்த டியூன் ரொம்ப நல்லா இருக்கே. அதையே படத்துல உபயோகிச்சுக்கலாமே!’ என்று சொல்லிவிட்டு, கவிஞரைப் பார்த்து, ‘இந்த டியூனுக்கு உங்களால அற்புதமான வார்த்தைகளைப் போட்டு, அருமையான பாட்டு ஒன்றைத் தர முடியும்என்றார். அடுத்து, கவிஞர் கவனத்தை ஈர்க்காமல், மெதுவாக என்னிடம், ‘டியூன் அபாரம்; கவிஞரை உசுப்பி விட்டு, ஒரு நல்ல பாட்டை வாங்கிடுங்கஎன்று சொல்லி விட்டு, அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டார்.

நான் கவிஞரிடம், ‘நீயெல்லாம் என்னயா பெரிய கவிஞன்? இந்தச் சந்தத்துக்கு ஒரு பாட்டு எழுத முடியாதுன்னு சொல்லறயே?’ என்று ஆரம்பிக்கவும், அவர், ‘இது ஒரு சாதாரணமான சந்தம் தான்! இதுக்குப் போய் என்னால பாட்டு எழுத முடியாதா?’ என்று வெடுக்கென்று கேட்டார். நான் உடனே கொஞ்சம் குழைவான குரலில், ‘இதெல்லாம் உனக்கு ஒரு பெரிய விஷயமா? முயற்சி பண்ணினால் கண்டிப்பாக ஓர் அற்புதமான பாட்டு தானாக வந்து விழும்!’ என்று ஐஸ் வைத்தேன்


 காரணம், கவிஞரை மட்டம் தட்டுவதைப் போல லேசாகத் தாக்கி விட்டு, உடனே, அவரைத் தூக்கி வைத்துப் பேசினால், அவரிடம் காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடலாம் என்ற தொழில் ரகசியத்தை நான் ரொம்ப நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருப்பவன் ஆயிற்றே! அவரது ஈகோவை லேசாகத் தட்டிவிட்டதும், கவிஞர் ஆவேசமாகச் \ செயல்பட ஆரம்பித்தார்.
விசு! எங்கே அந்த டியூனை வாசி!’ என்றார். கவிஞர் மூடுக்கு வந்து விட்டதைப் புரிந்து கொண்டேன் நான். இதுதான் சரியான சந்தர்ப்பம்! இப்போது தூண்டிலை வீசினால் பாட்டு மீன் சிக்கிக் கொள்ளும் என்று முடிவு செய்தேன். சற்று நேரத்துக்கு முன்பு, ‘நா...நன்னா... நன்னா...’ என்று போட்ட டியூனையே, ‘லா...லல்லா..லல்லா...’ என்று மாற்றிப் பாடிக்காட்டினேன். கண்ணை மூடிக்கொண்டு சில வினாடிகள் சிந்தித்த கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து கொட்டின. ‘வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா...’ எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பாட்டு வரிகள் தொடர்ந்தன. முதல் சில வரிகள் மட்டுமில்லை. அடுத்தடுத்த வரிகளும் கூடலாவில்தான் முடிந்தன.
அடுத்து கவிஞரைக் கிண்டலடிக்கும் நோக்கத்தோடு, ‘எல்லா லா வும் சொல்லிட்டீங்க. இன்னும் நாலே நாலுலாதான் பாக்கிஎன்றேன். ‘என்னடா சொல்லறே?’ என்றார் கவிஞர் ஒன்றும் புரியாமல். ‘புரியலையா? ஃபாதர் -இன்-லா, மதர் -இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லான்னு இன்னும் நாலே நாலுலாதான் உங்க பாட்டுல வரல!’ என்றதும், கவிஞர் பலமாகச் சிரித்துவிட்டார்.



கண்ணதாசனிடம் ஒரு சாதாரணமான அம்பாசிடர் கார் இருந்தது. ஒரு நண்பர் தான் வைத்திருந்த வெளிநாட்டு காரை விற்கப்போகிறார் என்ற தகவல் அவர் காதில் விழ, அந்த வெளிநாட்டு காரை வாங்க ரொம்ப ஆர்வமாக இருந்தார் கவிஞர். இருவரும் பேசி, காரின் விலையைக் கூட முடிவு செய்து விட்டார்கள். முழுப்பணத்தையும் கொடுத்து வாங்க முடியாத நிலைமையில் இருந்தார் கவிஞர். எனவே, மூன்றில் ஒரு பங்கு பணத்தை மட்டும் உடனே அட்வான்ஸாகக் கொடுப்பது என்றும், பாக்கிப் பணத்தை விரைவில் கொடுத்து விடுவது என்றும் இரண்டு பேரும் பேசிச் சம்மதித்திருந்தார்கள். கவிஞரும் தன்னிடம் வரப்போகும் புது வெளி நாட்டுக்கார் பற்றின கனவுகளில் மூழ்கினார். ஒரு குறிப்பிட்ட நாளில், நண்பரின் வீட்டுக்குப் போய் வெளிநாட்டு காரை எடுத்துக் கொண்டுவர முடிவு செய்திருந்தார்.
ஆனால் அதற்கு முந்தைய நாள் அந்த நண்பரின் சில நண்பர்கள், ‘பண விஷயத்தில் கண்ணதாசன் ரொம்ப மோசம்; அவருக்கு ஊர் முழுக்க நிறைய கடன். இப்போது அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, காரை எடுத்துக் கொண்டு போய்விடுவார். ஆனால், அதன் பிறகு, அவரிடமிருந்து பாக்கிப் பணம் எப்போது வரும் என்பதற்கு உத்தரவாதமில்லைஎன்று போட்டுக் கொடுக்க, காரை கண்ணதாசனுக்கு விற்க சம்மதித்திருந்த நண்பர், பல்டி அடித்து விட்டார்.

இது தெரியாமல், மறுநாள் காலை, வெளிநாட்டு காரை எடுத்துக் கொண்டு வருவதற்காக தம்முடைய டிரைவரை அழைத்துக் கொண்டு நண்பர் வீட்டுக்குப் போனார் கண்ணதாசன். நண்பரோ மிகுந்த தயக்கத்தோடு, தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டதை நேரடியாகச் சொல்லாமல், ‘இந்த கார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப ராசி! எனவே விற்க வேண்டாம் என்று தன் மனைவி சொல்லுகிறாள். எனவே, தற்போது காரை விற்பதாக இல்லைஎன்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இது கவிஞரை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது.
அன்று மதியானம், இயக்குனர் ராமண்ணா டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்தபணக்காரக் குடும்பம்படத்துக்காக சோகமான சிசுவேஷனில் ஒரு பாட்டு எழுத வேண்டி இருந்தது. கார் வாங்குகிற விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் தாக்கம் அந்தச் சமயத்தில் அவர் எழுதிய பாட்டில் வெளிப்பட்டது. பாடலை இப்படித் தொடங்கினார் கண்ணதாசன்:
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக - நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக’.
தாத்தா கிருஷ்ணனுக்கு திருச்சியிலிருந்து, கேரளாவில் கண்ணனூருக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது. கண்ணனூரில், விஸ்வநாதனை அவர் ஒரு ஸ்கூலில் சேர்த்தார். ஆனால், விஸ்வநாதனுக்கோ, பள்ளிக்கூட வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்களைவிட, அருகில் இருந்த இசைப்பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட இசைமேல்தான் அதிக ஈர்ப்பு.

விஸ்வநாதன் சங்கீதம் படிக்க விரும்பினாலும் வீட்டில் அதற்கு அனுமதி கிடைக்காது என்று தெரியும். அப்படியே அனுமதித்தாலும், மாதாமாதம் மூன்று ரூபாய் டியூஷன் ஃபீஸ் கட்ட வசதி கிடையாது. எனவே, தினமும் நல்ல பிள்ளையா காலையில் வீட்டிலிருந்து புத்தகப் பையோடு கிளம்பும் விஸ்வநாதன் ஸ்கூலுக்கு வந்து, அட்டெண்டன்ஸ் எடுத்ததும், நழுவி விடுவான். ஸ்கூலுக்கு அருகில் நீலகண்ட பாகவதர் என்ற சங்கீத வித்வான் தம் சீடர்களுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். ஜன்னல் ஓரமாக நின்று அவர் ஸோல்லிக் கொடுப்பதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, மாலையில் ஸ்கூல் விடும் நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவிடுவது வழக்கம்.
கர்நாடக சங்கீதத்தின் மீது மட்டுமில்லாமல் சினிமாப் பாட்டுக்கள் மீதும் விஸ்வநாதனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சினிமாப் பாடல்களை, தானும் பாட வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆனால், பாட்டுகள் கேட்க ரேடியோ கிடையாது. சினிமாப் பாட்டுக்களைத் திரும்பத் திரும்பக் கேட்க ஒரு வழி கண்டுபிடித்தான் சிறுவன் விஸ்வநாதன். அந்த ஊர் டூரிங் டாக்கீஸில் இடைவேளையின் போது சினிமாப் பாட்டுக்கள் ஒலிப்பெருக்கியில் ஒலிக்கும். அங்கே ஒரு கடைக்காரரைப் பிடித்து, இடைவேளையின் போது சினிமாக் கொட்டகையில் வடை, முறுக்கு விற்க ஆரம்பித்தார். கொட்டகைக்குள்ளே கால்கள் நடந்தாலும், கைகள் வியாபாரம் செதாலும் காதுகளின் கவனம் கொட்டகைக்குள் ஒலிக்கும் சினிமாப் பாட்டுக்கள் மீதே இருக்கும். ஆனால் இந்த வடை, முறுக்கு வியாபார யுக்தி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? அடுத்த வாரம்.
- ராணி மைந்தன்
தொகுப்பு: எஸ்.சந்திரமௌலி

நன்றி - கல்கி , புலவர் தருமி