Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Tuesday, March 05, 2013

ஹெலிகாப்டர் ஊழல் -இத்தாலி -அதிரடி ( A TO Z SECRETS)


டெல்லி டு இத்தாலி!

கிலி கிளப்பும் ஹெலிகாப்டர் ஊழல்


இந்திய அரசியல் வரலாற்றில் பல புகழ்​பெற்ற ஊழல்கள் பூதாகரமாகத் தோன்றி சாதாரணமாக மறைந்துள்ளன. அதிலும் ராணுவ ஊழல்கள் சுதந்திரம் அடைந்த மறு வருடத்திலேயே தொடங்கியது. கிருஷ்ணன் மேனன் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கிய ஜீப் ஊழல் முதல், இப்போதைய ஹெலிகாப்டர் விவகாரம் வரை பட்டியலில் உண்டு. எல்லா ஊழல்களுமே மர்ம​மாகவே முடித்துவைக்கப்பட்டன. இப்போது புதிதாக விஸ்வரூபம் எடுத்துள்ள ஹெலிகாப்டர் விவகாரமும் இந்த ரகம்தான்.  


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தூக்கப்போகும் இந்த ஹெலிகாப்டர் ஆயுத விவாதத்தில், பல திருப்புமுனைகள் வர உள்ளன. ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான அதிரடிகள் இதோ...


பூனைக்குட்டி வெளியே வந்தது எப்படி? 


1999-ல் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பைக் கருதி புதிய ஹெலிகாப்டர்களை வாங்க அன்றைய பி.ஜே.பி. அரசு முடிவுசெய்தது. மூன்று ஹெலிகாப்டர்கள் வாங்குவதாக ஆரம்பித்து, பின்னர் எட்டு ஹெலிகாப்டர்களாகி, இறுதியில் 12 வாங்க முடிவு எடுத்து டெண்டர் விடப்பட்டது. இந்த விவகாரம்தான் இப்போது வெடிக்கிறது.



51 மில்லியன் யூரோ ஊழல் தொகையாக இந்தியர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்​பட்டுள்ளது என்று கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இத்தாலி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது இந்திய ரூபாய் கணக்கில் 362 கோடி. 2010-ல் முடிவு செய்யப்பட்ட இந்த 12 ஹெலிகாப்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 3,546 கோடி ரூபாய். இதில் 10 சதவிகிதம் கமிஷன் என பேரம் நடந்துள்ளது என்று இத்தாலி அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல்செய்தது. 



 அந்த ஹெலிகாப்டர் நிறுவனத் தலைமை அதிகாரி கியூசெப் ஒர்சி என்பவர் கைதுசெய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்திய ராணுவத்தின் டெண்டரில் கொடுக்கப்பட்ட லஞ்ச விவகாரம் இத்தாலியில் வெடித்தது அதிர்ச்சியை பன்மடங்காக உயர்த்தியது.  



2011-ல் இத்தாலியில் பிரதமராக இருந்தவர் சில்வோ ப்ரூல்ஷ்கானி. அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள், செக்ஸ் ஊழல்கள் எல்லாம் சுமத்தப்​படவே, பதவி விலக நேர்ந்தது. அவருக்கு அடுத்துப் பதவி ஏற்றவர் மரியோ மோன்ட்டி. பதவி விலகிய ப்ரூல்ஷ்கானி தன் மீது உள்ள செக்ஸ் வழக்குகள் போன்றவற்றையும் தாண்டி, மக்கள் விடுதலைக் கட்சி என்ற பெயரில் மீண்டும் அரசியலில் தீவிரமாக இறங்கினார். 


76 வயதைக் கடந்த ப்ரூல்ஷ்கானி மூன்று தடவை பிரதமராக இருந்தவர். இப்போது மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க, இவருடைய அரசியலுக்கு வைக்கப்பட்ட குறிதான் இந்த ஹெலிகாப்டர் விவகாரம். இத்தாலி பிரதமர் மரியோ மோன்ட்டியின் அரசியல் ஆக்ஷன் இல்லை என்றால், இந்தியர்களுக்கு இந்த ஹெலிகாப்டர் பேரம் தெரியவே வாய்ப்பு இல்லை.  



இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்களை சப்ளை செய்த நிறுவனத்தின் பெயர் ஃபின் மெக்கனிகா. இது தனியார் நிறுவனம் என்றாலும், இதில் 30 சதவிகிதம் இத்தாலி அரசின் பங்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களை விற்பதில் ப்ரூல்ஷ்கானி செலுத்திய ஆர்வமும் இதில் நடந்த பேரங்கள் குறித்த தகவல்களும் பிரதமர் மரியோ மோன்டியால் கிளறப்படுகின்றன.


இத்தாலி தேர்தல்... இந்தியா ஆர்வம்! 



''இத்தாலியின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்... மோசமான நிர்வாகமும் இத்தாலி நிறுவ​னங்களின் பணம் வெளிநாடுகளுக்குத் தவறான வழியில் போவதும்தான்'' என்று கூறி இந்த நடவடிக்கைகளுக்கு மரியோ மோன்ட்டி விளக்கம் சொன்னார்.



இத்தாலி பிரதமர் மரியோ மோன்ட்டியின் பதவிக்​காலம் இந்த மாதத்தோடு முடிவடைகிறது. 24, 25-ம் தேதிகளில் இத்தாலியில் தேர்தல் நடந்து முடிந்தது. யார் பிரதமராக வருகிறார்களோ அவர்களைப் பொறுத்தே ஹெலிகாப்டர் பேர விவகாரத்தின் தலைவிதி உள்ளது. அந்தத் தேர்தல் முடிவுகளை இத்தாலி அரசியல்வாதிகள் மட்டுமன்றி, இந்திய அரசியல்வாதிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். கடந்த 2012 பிப்ரவரியிலேயே இந்த பேரம் குறித்த தகவல் வெளியாகியும் இந்திய ராணுவ அமைச்சகம் மட்டுமல்ல... எதிர்க் கட்சிகளும் தூங்கிக்கொண்டு இருந்ததுதான் வேதனை.  



இந்தியாவும் இத்தாலியும் 


இப்போதைய பிரதமர் மரியோ மோன்ட்டி தனது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்கிற நோக்கத்​தோடு தொடங்கியதுதான் ஃபின் மெக்கனிகா ஆபரேஷன். ஆனாலும், அவரது ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை சில கட்சிகள் வாபஸ்பெற, கடந்த டிசம்பர் மாதம் மெஜாரிட்டி பலத்தை இழந்தார்.


 மோன்ட்டிக்கு முன்பு பிரதமராக இருந்த சில்வியோ ப்ரூல்ஷ்கானி கூட்டணியில் ஏழுக்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. இதில் நார்த் லீக் என்கிற கட்சியைச் சேர்ந்த லிகா நோர்ட் போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் ஊழல் நடைபெற்றுள்ள இந்த ஃபின் மெக்கனிகாவின் தலைமைப் பொறுப்​பில் இருந்தனர்.


 இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இங்கிலாந்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கீழ்தான் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது கைதாகி இருக்கும் ஃபின் மெக்கனிகாவின் தலைவரான கியூசெப் ஓர்சி, முன்னாள் பிரதமர் ப்ரூல்ஷ்கானிக்கும் லிகா நோர்ட்டுக்கும் வேண்டப்பட்டவர். ஓர்சி லண்டனில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட்டில் முன்பு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த சமயத்தில்தான் இந்த ஹெலிகாப்டர் டெண்டரும் பேரங்களும் நடந்​திருந்தன. அந்தப் பணத்தைக் கட்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்து இருக்கிறது.


முன்னாள் பிரதமர் சில்வோ ப்ரூல்ஷ்கானி ''லஞ்சம் கொடுப்பது இந்தியாவில் வேண்டு​மானால், அது சட்ட விரோதமாக இருக்கலாம். இத்தாலிய நிறுவனங்களில் இதுபோன்ற ஊழல்​களுக்காக டெண்டர்களை ஆய்வுசெய்தால், அது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும்'' என ஒரே போடாகப் போட்டு இருக்கிறார்.



இன்ஃபார்மர் 


2011-ல் இந்த ஊழல் வழக்கின் விசாரணை தொடங்கியது. இதில் வந்த முதல் இன்ஃபார்மர் இந்த நிறுவனத்தின் வெளி விவகாரங்களுக்கான முன்னாள் தலைமை அதிகாரி லோரென்சோ போர்கோனி. இவர்தான் முதன் முதலில் டெண்டர்களைப் பெறக் கொடுக்கப்பட்ட கையூட்டு விவகாரங்களை வெளிப்படுத்தினார். பின்னர் இத்தாலிய அரசு வழக்கறிஞர்களிடம் வாக்கு​மூலமாகவே கொடுத்தார்.


 இதில் இந்தியா சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் விவகாரத்தில் 51 மில்லியன் யூரோ வரை கையூட்டு கொடுக்கப்​பட்டது உட்பட பல விவகாரங்களைப் புலனாய்வுத் துறையிடம் கொட்டினார். மற்ற விவகாரங்​களும் ஒவ்வொன்றாகக் குவிந்தன. இதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் ரால்ப் கைடோ ஹேஸ்செக், கார்லோ ஹெரோஸா, கிறிஸ்டியன் மிஷெல் மற்றும் இந்தியாவில் பலன் அடைந்த ராணுவத் தளபதி தியாகி ஆகியோரின் பெயர்களை சொல்ல விசாரணை சூடுபிடித்தது. இதில் ஹேஸ்செக் மற்றும் கிறிஸ்டியன் மிஷெல் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் ரகசியப் பதிவுகள் பல உண்மைகளை வெளியே கொண்டுவந்து இத்தாலி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டே ஒப்படைக்கப்​பட்டன.


முதல் பலி 


இப்படி தொடங்கிய இந்த விசாரணையில் ஃபின் மெக்கனிகா நிறுவனத்தின் லண்டன் பிரிவான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்​தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் பலோ பஸ்காரி என்பவர்தான் முதன் முதலில் சிக்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் கைது​செய்யப்பட்டார். பிரேசில் மற்றும் பனாமா நாட்​டுக்கு முறையே ராணுவப் படகு மற்றும் ஹெலிகாப்டர் விற்ற விவகாரத்தில் நடந்த கையாடலில்தான் இவர் பிடிபட்டார். இந்தக் கைதுக்குப் பின்னர் இந்தியாவில் நடந்த ஹெலி​காப்டர் ஊழல்களும் தப்பாது என்று தெரிய... நம்ம புள்ளிகளின் வயிற்றையும் கலக்​கியது.


கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஊழல் விசாரணை தொடங்கியதுபற்றி தகவல் வந்தாலும், 'தவறு எதுவும் நடக்கவில்லை என்று ஃபின் மெக்கனிகா நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது’ என்றது இந்திய பாதுகாப்பு அமைச்சகம். தொடர்ந்து செய்திகள் வரவே, பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஏப்ரலில் இத்தாலியில் இந்திய தூதரகத்துக்குக் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்டதே தவிர, விசாரணையில் இறங்கவில்லை. இந்தியாவிடம் ஹெலிகாப்டர்கள் ஆர்டர்களைப் பெற, 362 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வந்துவிட்டது. இத்தாலியின் புலனாய்வு அமைப்பினர் 568 பக்க அறிக்கையை நீதிமன்றத்திலும் தாக்கல்செய்தனர்.



லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி இத்தாலி அரசியல்​வாதிகளுக்குச் சென்றது என்றும், மற்றொரு பகுதி இந்தியாவுக்கு வந்தது என்பதும் குற்றச்சாட்டு. பணம் எந்த வழியாக எங்கே போனது என்பதைப் பார்த்துவிட்டு, ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் நடந்த அரசியல் கணக்குக்கு வருவோம்.


அது அடுத்த இதழில்...



- சரோஜ் கண்பத்

READER VIEWS


1. பாவம் இப்போது வெளியே வந்தது பூனை குட்டிதான்....ஆம்..அதிலும் 51 மில்லியன் யூரோ....அதில் கமிஷன் தொகை 8 சதவீதம் ம்ம்ம்ம்ம் சும்மார் 280 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்)....

இது வெளி வந்ததில் மிகப்பெரிய பங்கு ரஷ்ய உளவு நிறுவனத்தின் பங்கு அதிகம்....காரணம்.... மிஸ்டர் தியாகி தனது உறவினர்கள் வழியே.....ரஷ்ய மாடல்களை குறித்து அதில் உள்ளவாறு மாற்றங்களை செய்ய சொன்னதுதான்....அவர்கள் பேசியதை பின்மெக்கானிக்கா டேப் செய்தது "லீக்" ஆனதுதான் விபரம் விவகாரமாகிவிட்டது...

அது கிடக்கட்டும்.... சமீபத்திய இங்கிலாந்து பிரதமர் தீடீர் விஜயம்??....

அடுத்து வர இருக்கும் " யானை உழல் " ஆம்..... 126 போர் விமானம் வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது..... 2013-ல் இருந்து 1216 - க்குள்.... 2 பில்லியன் டாலர் மதிப்பிலானது.....

அதிலும் ??!!! ஒரு 8 சதவீதம் என்றால் கணக்கிட்டு கொள்ளுங்கள்.....



2.பிஜேபி என்ன அடக்கி வாசிக்கிறதுன்னு சொல்லுங்க. அவர்கள்தான் தீவிர விசாரணை வேணும்னு சொல்கிறார்கள். காங்கிரசு போலியாக நாடாளுமன்ற விசாரணை போதும்னு சொல்கிறது. ஏன்னா அவங்க அதில் மெஜாரிட்டி. அப்பத்தான் விசாரணையை அமுக்க முடியும். ஹெலிகாப்டர் வாங்க முடிவு எடுத்தது மட்டும்தான் பிஜேபி. அதில் திருத்தங்கள் செய்தத்து காங்கிரஸ் அரசு. அமெரிக்க நிறுவனத்தை நிராகரித்து இத்தாலிய நிறுவனத்துக்கு கொடுத்தது காங்கிரஸ். ஆதாரம் இல்லாமல் எதையாவது பேசாதீர்கள்.

3. இந்த டெண்டர் குறித்த பேச்சுவார்த்தையின் போதும் ஆர்டர் கொடுத்த போதும் பணம் வாங்கிய போதும் பி.ஜே.பி.ஆட்சியில் இல்லையே, அவர்கள் எதற்கு அடக்கி வாசிக்க வேண்டும்? என்ன சொன்னாலும் காங்கிரஸின் உதவியால் வாழும் மைனாரிட்டிகள் மாறப் போவதில்லை. 

THANX - JU VI 

Wednesday, February 27, 2013

. ஹெலிகாப்டர். ஊழல் -முன்னாள் ராணுவ அதிகாரி அதிர வைக்கும் பேட்டி

போஃபர்ஸ்... ஹெலிகாப்டர்... இந்த பட்டியல் தொடரும்!''


அதிரவைக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி
 
 
தேசம் நிம்மதியாக சுவாசிக்க வேண்டுமானால், அதன் கவசமாகத் திகழும் பாதுகாப்புத் துறை வலுவாக இருக்க வேண்டும். ஆனால், அங்கேயே ஊழல்களும், இடைத்தரகர்களும், நிழல் பேரங்களும் நடக்கின்றன என்றால், பாதுகாப்புத் துறையும் பாதுகாப்பாக இல்லை; அதை நம்பி உள்ள தேசமும் பாதுகாப்பாக இல்லை என்றே அர்த்தம்.


 போஃபர்ஸ் பீரங்கி ஊழல் இதை 25 ஆண்டுகளுக்கு முன்பே வெளிச்சம் போட்டுக் காட்டியது. விடை தெரியாமல் முடிந்த அந்தப் புதிரின் தடம் மறைவதற்குள், இப்போது வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.   


ராணுவம் உள்ளிட்ட துறைகளில்நிலவும் இதுபோன்ற மோசமான நிலைக்குக்காரணங்கள் என்ன என்பது குறித்து, தெற்காசிய பிராந்தியத்​துக்கான ராணுவஉளவுத்துறையின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஹரிஹரனிடம் பேசினோம்.



''தேசத்தின் கவசமாக இருக்கும் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற என்ன காரணம்?''



''பணம்தான். அதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்? பணம் என்றால், சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒரு தேசத்தின் ஒட்டு​மொத்த பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்குப் பணம். 2009-ம் ஆண்டு கணக்குப்படி, உலக நாடுகள் தங்களுடைய பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிய தொகை 1.6 டிரில்லியன். இந்தப் பணத்தில்தான் ஒரு நாட்டுக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. அந்த 20 நாடுகள் வாங்கும் ராணுவத் தள வாடங்களை மொத்தமாகக் கணக் கிட்டால், அதில் 10 சதவிகிதத்தை இந்தியா வாங்குகிறது.  1,93,000 கோடி ரூபாயை இந்தியா இதற்காகச் செலவிடுகிறது.



அதில் ஊழல் நடைபெற, சிக்கலான நடை​முறைகளைக் கொண்ட நமது அரசு இயந்திரம்தான் காரணம். திட்டம் தயாரிப்பதில் தொடங்கி, குறிப்பிட்ட அந்தத் தளவாடத்தைக் கொள்முதல் செய்வது வரை, நாம் 12 படிநிலைகளைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் தாமதம், அர்த்தமற்ற கேள்விகள், பொறுப்பற்ற பதில்கள் சகித்துக்கொள்ளவே முடியாதவை. இந்தத் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு படிநிலையிலும் சரியான இடத்தை 'கவனிக்க’ வேண்டும். அப்படி கவனிக்கும் வேலையை இடைத்தரகர்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். தாமதம் செய்தால்தான் நாம் 'கவனிக்கப்படுவோம்’ என்பதை, அதிகார மையங்கள் புரிந்து வைத்துள்ளன. இந்தத் தெரிதலிலும் புரிதலிலும்தான் தொடங்குகிறது ஊழலின் ஊற்றுக்கண்.



அப்போது நடந்த போஃபர்ஸ் ஊழல், இப்போது வெளிவந்துள்ள வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் எல்லாவற்றிலும் இதுதான் ஆதார சுருதி. இவற்றோடு இது முடியப்போவதும் இல்லை. ஏனென்றால், இது​போன்ற பல ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் செய்யப்​பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும்போது, பின் விளைவுகளாக அதில் மறைந்துள்ள ஊழல்களும் வெளி​வரும்.''



''ஊழல்கள் வெளிவந்தாலும் யாரும் தண்டிக்கப்படுவது இல் லையே?''



''யாரைத் தண்டிப்பது? எப்படித் தண்டிப்பது? ஆயுதம் மற்றும் ராணுவத் தளவாட விற்பனை என்பது... வல்லரசு நாடுகள், உலகின் மிகப் பெரிய ஆயுத விற்பனை நிறுவனங்கள், இடைத்தரகர்கள், உள்நாட்டு அரசியல்வாதிகள், அரசுப் பொறுப்பில் உள்ள அதிகார மையங்களின் கூட்டு வலைப்பின்னல். இவர்கள் செய்யும் ஊழல்கள் வெளிவரும்போது, ஒருவர் மாற்றி ஒருவர் மற்றொருவரைக் கைகாட்டுவார்கள். நம் நாட்டில் அதிகபட்சமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும்.



 ஆனால், விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் எதுவும் அவர்கள் கைக்குப் போகாது. தேசியப் பாதுகாப்பு, ராணுவ ரகசியம் என்று காரணம் சொல்லப்பட்டு இழுத்தடிக்கப்படும். இறுதியில் விசாரணைக் குழு, பூனை தன்னுடைய வால் முனையை பிடிக்க முயன்று அதைச் சுற்றி சுற்றி வருவதுபோல், சுற்றிச் சுற்றி வந்து சோர்ந்து விடும். ஒரு கட்டத்தில் எல்லோரும் அதை மறந்து விடுவார்கள். போஃபர்ஸ் பீரங்கி ஊழல் தொகை 64 கோடி ரூபாய். ஆனால், அதை விசாரிக்க நாம் 250 கோடியை செலவிட்டோம். 25 ஆண்டுகள் ஆகின. இறுதியில் என்ன நடந்தது என்பதைப் பார்த்திருப்பீர்களே. அதேகதிதான் பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்தில் நடக்கும் ஊழல்களுக்கு ஏற்படும். இப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படுகிறார். முறைகேடான காரியங்களில் ஈடுபடும் 12 ராணுவத் தளவாட விற்பனை நிறுவனங்களை, கறுப்புப் பட்டியலில் சேர்த்து விட்டார்.''



''இதற்கு என்னதான் தீர்வு?''



''நம்முடைய ராணுவத்துக்கான தளவாடங்களை நாமே தயாரிக்க வேண்டும். நம்முடைய ஆயு தங்களை நாமே வடிவமைக்க வேண்டும். நம்முடைய தேசியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், இந்த ஆராய்ச்சிகளில் முன்னணியில் உள்ளது. ஆனாலும், ஆராய்ச்சி முடிவுகளுக்கு செயல் வடிவம் கிடைப்பது இல்லை. அவை காகிதங்களில் மட்டுமே உள்ளன. எனவே, ராணுவத் தளவாடங்களை வடிவமைப்பது மட்டும் அல்ல... அவற்றின் தயாரிப்புப் பணியிலும் அவர்கள் ஈடுபட வேண்டும். இப்போது, பொதுத் துறையிடம் மட் டுமே தளவாடங்கள் தயாரிப்புப் பட்டறைகள் உள்ளன. ஆனால், அவர்களிடம் வேகம் இல்லை. நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றிய புரிதல்கள் இல்லை. நாம் எதை நோக்கிச் செயல்படுகிறோம் என்ற நோக்கமும் இல்லை. இதை சரிசெய்தாலே போதுமானது.''


- ஜோ.ஸ்டாலின்

thanx - vikatan

Thursday, July 05, 2012

சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியா ? பொங்கி எழுந்த ஜெ. + கலைஞர் குடும்பத்துக்கு 2 ஜி ஊழலில் ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?? ,

http://rajkanss.files.wordpress.com/2008/09/pg2a1.jpg 

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது என்றும் இந்த பயிற்சிக்கு வந்த இலங்கை வீரர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெ., மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.


இலங்கையில் புலிகள் ஆதிக்கத்தை ஒழிப்பதாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பார்லி.,யிலும் எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக பெரும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு பணிந்து இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.



இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு ( விமானப்படை) இந்திய ராணுவ தரப்பில் பயிற்சி அளிக்கிறது. சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள விமான பயிற்சி முகாமுக்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.



இலங்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெ., இன்று இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:



நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தமிழகத்திற்கும் , தமிழ் இனத்திற்கும் எதிரான செயல். சர்வேதச அளவில் இலங்கைக்கு எதிராக குரல் ஒலித்து வரும் போது இது போன்று பயிற்சிக்கு இந்தியா முன்வந்திருப்பது பொருத்தமற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு மவுனம் சாதித்து வருமு் மத்திய அரசு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். இந்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இது தமிழக மக்களின் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட தொடர்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இலங்கை வீரர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பிட மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



கருணாநிதி கண்டனம் : இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில்; இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


பிரதமர் கருணாநிதிக்கு கடிதம் : இலங்கை தமிழர் சீரமைப்பு மற்றும் அந்நாட்டு அமைச்சர் பேச்சு குறித்தும் சமீபத்திய ரியோடி ஜெனீரோ மாநாட்டின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.


http://athikalai.files.wordpress.com/2011/02/2g-cartoon.jpg


 2. கருணாநிதி குடும்பத்துக்கு ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?ஆதாரம் தாக்கல்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு, 773 கோடி ரூபாய் எப்படி கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.



தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், நேற்று முன்தினம் ஆஜராகி, சாட்சியம் அளித்தனர்.


அப்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஆதாயம் பெற்ற நிறுவனங்கள், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு, 223 கோடி மற்றும் 550 கோடி ரூபாய் என, தனித் தனியாக அளித்ததற்கான ஆதாரங்கள், தங்களிடம் உள்ளதாகக் கூறினர். அந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர்.



223 கோடி:கூட்டுக் குழுவிடம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி:அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிடம் இருந்து, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற டி.பி., குழும நிறுவனம், அதற்கு பிரதிபலனாக 223.55 கோடி ரூபாயை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது தொடர்பாக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டி.பி., குழுமத்திடம் இருந்து, கலைஞர்"டிவி'க்கு இந்த பணம், எந்த வழியில், எப்படி கைமாறியது என்பதற்கான பட்டியலையும் தாக்கல் செய்துள்ளோம்.



ஏர்செல் விவகாரம்:அடுத்ததாக, ஏர்செல் நிறுவனம், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனம், கருணாநிதியின் உறவினர் குடும்பத்துக்குச் சொந்தமான சன் டைரக்ட் "டிவி' லிட்., நிறுவனத்தில், 549.96 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இது தொடர்பாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 


கடந்த மே மாதம், இது தொடர்பாக சி.பி.ஐ.,யுடன் இணைந்து, மலேசியாவில் விசாரணை நடத்தினோம். இன்னும் சிலமுக்கியமான தகவல்கள், மலேசிய அதிகாரிகளிடம் இருந்து வர வேண்டியுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvtwsqNWE6NDerOtPlFj37dlMW7JyoLhTBcIgiMVRI1cE1MJRwRcXBwHDOWa8-KCIjD-yU78MmL7FLhX7ZmUxdrYk5wR31E0g9SMH2siGTnQaAZrP-MP6Fdimy3EEcsrqQPlnc4Whp4pnN/s1600/tamilmakkalkural_blogspot_madan_cartoon.jpg


நன்றி - தினமணி , மதி , தின மலர்

Sunday, January 08, 2012

ஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்த சு,சாமி

http://www.envazhi.com/wp-content/uploads/2011/09/P-Chidambaram.jpg 

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் சந்தித்துப் பேசி எடுத்த முடிவுகள் தொடர்பான ஆதாரங்களை, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று சமர்ப்பித்தார்.


சி.பி - அரசியல் கோமாளி என்று சு சாமி வர்ணிக்கப்பட்டாலும் ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பொறுத்தவரை  இவர் தான் அச்சாணியாக செயல்பட்டு  வழக்கின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக வருகிறார்.. பாராட்ட வேண்டிய விஷயம்.. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில், முன்னாள் அமைச்சர் ராஜாவோடு, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பரில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி, இவ்வழக்கில் சிதம்பரத்தை சேர்ப்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, கடந்த டிசம்பர் 17ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று சுப்ரமணியசாமி தன்னிடம் உள்ள அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைத்தார்.

சி.பி - இவரை விலைக்கு வாங்க முடியாது என்பதால் விபத்து மூலமாகவோ ,மிரட்டல் மூலமாகவோ தடை ஏற்படுத்த மேலிடம் முனையக்கூடும், கோர்ட் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சு சாமிக்கு தக்க பாதுகாப்பு அளிக்கவும் ஆவன செய்யவேண்டும்.. 

சாமி ஒப்படைத்த ஆதாரங்களில் முக்கியமானது, பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகிய மூவரும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆறு பக்க ஆவணம். தவிர, ஸ்பெக்ட்ரம் தொடர்பாக 2008 ஜனவரி 15ம் தேதி, நிதி அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிய கடிதம். அதைத் தொடர்ந்து, ஜனவரி 30ம் தேதி நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணம். மேலும், 2008 ஏப்ரல் 21ம் தேதி ஸ்பெக்ட்ரம் பற்றி அமைச்சர் ராஜா, சிதம்பரத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.


சி.பி - இந்த வழக்கில் ப சிதம்பரம் ஆஜர் ஆவதை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் விரும்பவில்லை, காரணம் அதற்கு அடுத்த கட்டமாக பிரதமரும், அவருக்குப்பின்னால் இருந்து இயக்கி வரும் சோனியா காந்தியும் வழக்கை எதிர் கொள்ள வேண்டி வரும் எனப்தால் இதற்கு முட்டுக்கட்டை போட முயலக்கூடும்.. இந்தியாவில் நடக்கும் மிக பெரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQONY3B73DuvQJFR9pLxX0awWviiNm0ysxH2d3PnlHiW1Y8kqN7aoSNBnBvEE7_BAh4t5fG_9TKG7YUDrZ5K-1wVxGX5vRfDMAsgLA8Z0UhncV0cvL1m9FD3E8ihhH4EzZ9l8KTgkSTBL7/s1600/susamay.jpg

அத்துடன், 2011 மார்ச்சில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பின் விவரம். கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில் தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்' என்றும், 2003ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரத்தையும் சாமி சமர்ப்பித்தார்.


சி.பி - அசிஸ்டெண்ட் மேனேஜர் தப்பு செய்யறார்னா மேனேஜர் சரி இல்லைன்னு அர்த்தம் .. மேனேஜர் செயல்பாட்டால கம்பெனிக்கு நஷ்டம் வருதுன்னா அதுக்கு மேனேஜரை நியமித்த & மேனேஜரை கண்காணீக்க வேண்டிய  ஜி எம் பொறுப்பேத்துக்கனும்.. மேனேஜர் - சிதம்பரம், ஜி எம் - மன்மோகன்சிங்க்

சிதம்பரத்திற்கு பங்கு:அனைத்து ஆதாரத்தையும் சமர்ப்பித்த சாமி கோர்ட்டில் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டு உள்ளது. ஒன்று, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு, 2001ம் ஆண்டு விலையை நிர்ணயித்தது. இரண்டாவது, ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதித்தது. இந்த இரண்டு குற்றங்களிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. இங்கே சமர்ப்பித்த ஆதாரங்கள் அதை உறுதி செய்கின்றன.

எனவே, இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகள் உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டவை. இந்த விவரங்களை சிதம்பரம், ராஜாவிடம் தெரிவிக்கவில்லை. எனவே, தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிதம்பரம் மீது, "நம்பிக்கை சதி மோசடி' யின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா மட்டும் அல்லாமல், அவரோடு சேர்த்து சிதம்பரத்திற்கும் பங்கு இருக்கிறது.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

சி.பி - போற போக்கை பார்த்தா ஆ ராசாவை விட ப சிதம்பரத்துக்குத்தான் அதிக பங்கு இருக்கும் போல தெரிதே? சிதம்பர ரகசியம் எப்போ வெளில வரப்போகுதோ? சிதம்பரம் எப்போ உள்ளே போகப்போறாரோ? வெயிட்டிங்க்



அதிகாரப்பூர்வ ஆவணங்கள்:இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சிலவற்றையும் சமர்ப்பிக்கும்படி கூறினார். அதை ஏற்பதாக சாமி பதிலளித்தார். அத்துடன், இந்த ஆதாரங்கள் தொடர்பான விசாரணையை ஜனவரி 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சி.பி - இந்த மாதிரி பிரச்சனையான கேஸ்களை முடிஞ்ச வரை சீக்கிரமா விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடறது நாட்டுக்கு நல்லது.. அப்புரம் சாதிக்பாட்சா மாதிரி சாட்சி தற்கொலை செஞ்சுக்குவார், அல்லது கொலை செய்யப்படுவார்..

Sunday, May 29, 2011

ஜெ வின் முதல் தலை வலி - கரூரைக் கலக்கும் உர ஊழல்... பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !

http://tamilnews.ebest.in/images/news/fertibag-d.jpg

கரூரைக் கலக்கும் உர ஊழல்...

பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !
பிரச்னை 


தமிழக அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்களை, கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று மோசடி செய்த அரசு அதிகாரிகள், அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

'டான்பெட்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், அரசிடம் இருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த கூட்டுறவு அமைப்புகள், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உரத்தை மானிய விலையில் வழங்கி வருகின்றன.


இந்த அடிப்படையில் திருச்சியில் உள்ள 'டான்பெட்’ நிறுவனத்திடமிருந்து கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்துக்கு வந்த உர மூட்டைகளை வைத்துத்தான் ஊழல் நடந்திருக்கிறது.

இதுகுறித்து, வழக்கை விசாரித்து வரும் கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சூர்யகலாவிடம் கேட்டபோது, ''தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் மூலம் மானிய உரங்களில்  முறைகேடு நடப்பதாக அடிக்கடி தகவல் வந்தது. இதையடுத்து விசாரணை செய்தபோது, 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

பல இடங்களிலும் பணியாற்றும் உயர்அதிகாரிகள் கூட்டுப்போட்டுக் கொண்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்'' என்றவர் கொஞ்சம் விவரமாக சொல்ல ஆரம்பித்தார். 

''675 டன் யூரியா, 235 டன் டி.ஏ.பி. ஆகக்கூடி 910 டன் உரங்களை, தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மைய தனிஅதிகாரி செல்லமுத்து, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கும்... சென்னையிலிருக்கும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ என்ற நிறுவனத்துக்கும் விற்பனை செய்ததிருப்பதாக ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.

அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்காக இந்த உரத்தை வாங்கியிருப்பது போல ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்களிடமிருந்து பணம் பெறப்பட்டு, தனி அதிகாரி செல்லமுத்து தனியாக துவங்கியிருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், இந்த நிறுவனங்களுக்கும் அந்த உரங்கள் செல்லவில்லை. கணக்கு மட்டுமே காட்டி பணத்தை வாங்கிச் சுருட்டிக் கொண்டு, வெளிமார்க்கெட்டில் மொத்த உரத்தையும் விற்றுள்ளனர். இதன் மூலமும் பெரும் பணத்தை சுருட்டியுள்ளனர்.

'டான்பெட்’, வேளாண்துறை, காகித ஆலை, பால்மர் லோரி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்தக் கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

தனி அலுவலர் செல்லமுத்து, 'டான்பெட்' துணை மேலாளர் பரமசிவம், உதவி வேளாண் இயக்குநர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொதுமேலாளர் (கொள்முதல் பிரிவு) ராஜகோபாலன், த.நா. காகித ஆலையின் உதவிப்பொது மேலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ உயர் அதிகாரிகளான முருகன், அனிமேஷ் சத்தோவ் பாத்யா ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று சொன்னார் சூர்யகலா.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வையாபுரி, ''இந்த 910 டன் உர ஊழல் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கூட்டுறவு சங்கங்கள் ஊழலின் உறைவிடமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் மட்டுமல்ல, டிராக்டர்கள் பொக்லைன், போர்வெல் இயந்திரங்கள்கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை தனியார் ரியல் எஸ்டேட் நிலங்களை சமன்படுத்த அதிக வாடகைக்கு விடப்படுகிறது.

கூட்டுறவு என்றாலே, கூடி ஊழல் செய்யும் இடமாக மாறிவிட்டது. பணி ஓய்வு பெறும் காலம் வரை ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கூட்டுறவுச் சங்க அலுவலர்களுக்கு இருப்பதால்... முறைகேடுகள் முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் ஆய்வு செய்வதுடன், கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விவசாயப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் சங்கங்கள் செயல்படும்போதுதான் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்'' என்று சொன்னார்.

அமராவதி உழவர் இயக்க அமைப்பாளர் இரா. முருகானந்தம், ''உர ஊழலில் ஈடுபட்டுள்ள ஏழுபேரும் சாதாரண கடைநிலை ஊழியர்கள் அல்ல. பொறுப்பான அதிகாரிகள். ரசாயன உரம் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேப்பம் பிண்ணாக்கிலும் முறைகேடு நடந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வேப்பம் பிண்ணாக்கு குறித்து விசாரணை செய்தால், பல முறைகேடுகள் வெளிவரும்'' என்றார்.

பசுமை விகடன் இதழில் விவசாயத்தை வைத்து நடத்தப்படும் ஊழல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் உர ஊழல் தொடர்பாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டே வந்திருக்கிறோம். தற்போது, அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி - பசுமை விகடன்

Wednesday, May 04, 2011

மாட்டியது கலைஞர் டி வி.. விரட்டியது சி பி ஐ .. -- ஜூ வி.. ரிப்போர்ட்

லைஞர் டி.வி-க்கு பணம் கைமாறியதை 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.ஐ. மிக சீரியஸ் கண்ணோட்டத்தில் பார்க்கிறது!
'கடனாக வாங்கினோம். கடனை அடைத்துவிட்டோம்.’ என்று முதல்வர் கருணாநிதியும் கலைஞர் டி.வி-யும் சொல்லி வர... இந்தப் பணம் வந்த வழிமுறைகள் அத்தனையையும் அம்பலப்படுத்தி உள்ளது சி.பி.ஐ.

இந்த விவகாரம் வெளியில் வந்ததுமே கலைஞர் டி.வி-யின் இயக்குநர் சரத்குமார் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
'2007-08 ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம், பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்து இருந்தது. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2009 ஆகஸ்ட் வரை பெறப்பட்ட 200 கோடி ரூபாயைக் கடனாகப் பாவித்து, மொத்தப் பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டுவிட்டது.

அந்தத் தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் தரப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் செலுத்தப்பட்டது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே!’ - இதுதான் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!

இதற்கிடையே, 'சன் டி.வி-யில் இருந்த தனது பங்குகளைப் பிரித்து வாங்கிய வகையில், 100 கோடி ரூபாய் என் மனைவி தயாளுவுக்குக் கிடைத்தது. அதைத்தான் கலைஞர் டி.வி-யில் அவர் முதலீடு செய்தார்.' என்று பணத்தின் ஒரு பகுதிக்கு முதல்வர் கருணாநிதி திடீரென்று ஒரு கணக்கு சொல்லியிருக்கிறார்.

மாறாக, 'கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த விவகாரத்தில் நிச்சயமாக முறைகேடு நடந்து உள்ளது' என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது!

'அதாவது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், 2008 டிசம்பர் மாத இறுதியில், ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த எட்டிஸாலட் நிறுவனம்  3,228 கோடியும் ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்  381 கோடியும் முதலீடு செய்து பங்குகளை வாங்கின.

ஆ.ராசாவிடம் இருந்த செல்வாக்கின் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதற்கு நன்றிக் கடனாக, ஸ்வான் நிறுவனம் பணத்தை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்தது!’ என்கிறது சி.பி.ஐ.

ஸ்வான் டெலிகாமை சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா இருவரும் நடத்தும் மற்றொரு நிறுவனம்தான் டிபி ரியாலிட்டி. இது, பங்குச் சந்தையில் பதிவு பெற்ற நிறுவனம். இந்த டிபி ரியாலிட்டி, டைனமிக்ஸ் ரியாலிட்டி என்ற மற்றொரு நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறது. இந்த டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு, கட்டுமானத்தில் ஈடுபடும் இரண்டு துணை நிறுவனங்களும் உண்டு.

இப்படி சிலந்தி வலையாகப் பரவி இருக்கும் நிறுவனங்களில், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசீப் பால்வா, ராஜீவ் அகர்வால் போன்றவர்கள் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப் பல பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி... அதன் பெயர்களில் கடன்கள் வாங்கி, அந்தப் பணத்தை வேறு காரணங்களுக்குத் திசை திருப்பிவிடுவார்கள்.

இதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்தான்  200 கோடியை கலைஞர் டி.வி-க்கு வெவ்வேறு தேதிகளில் வழங்கியது என்று சொல்லும் சி.பி.ஐ., இந்தப் பணமும் நேரடியாகச் செல்லவில்லை என்​கிறது.

'இந்த டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்,  209 கோடியை குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுக்கிறது. 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் வரை வெவ்வேறு தவணைகளில் இந்த பணத்தைக் கொடுத்து உள்ளார்கள் (இது பற்றி தனியாக ஒரு பெட்டிச் செய்தி).

ஷாகித் பால்வாவின் சகோதரர் ஆசிப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும் இதில் இயக்குநர்கள். இந்த நிறுவனம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வியாபாரங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த நிறுவனம் தனது பெயரை குஸேகான் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்று மாற்றிக்கொண்டு, கடன் வாங்குவதும் மற்ற கம்பெனி​களுக்கு கடன் கொடுப்பதுமான பணிகளைச் செய்தது.

இதன்படி, டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய  209 கோடியில்,  200 கோடியை சினியுக் நிறுவனத்துக்கு குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் கொடுத்தது. அதே 2008 டிசம்பர் 23 முதல் 2009 ஆகஸ்ட் 7 வரையிலான கால கட்டங்களில் கிட்டத்தட்ட ஏழு தவணைகளில் டைனமிக்ஸ் மாதிரியே குஸேகானும் கொடுத்தது.

இதையடுத்து சினியுக் நிறுவனம் இதே காலகட்டத்தில் (23.12.2008 முதல் 7.8.2009) ஆறு தவணைகளில் இந்த  200 கோடியை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்து உள்ளது...’ என்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல்,  சுற்றிவளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த  200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.வி-க்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது.

அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர்.

இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டிபி குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு  510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது),  200 கோடியை கடனாக மாற்றிக்கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன.

முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ.

2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது. கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில்  31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த  31 கோடியில்  25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார்  6 கோடி மட்டுமே காட்டப்பட்டது.

இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய  25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம்  214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர். அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை.

கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும் சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.

3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன. 19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதாம்.

அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக்கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம் வரை வாங்கிக்கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக்கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை (தயாரித்து) காட்டி வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள். இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம் வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து  25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது.

இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த  25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. 2ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை மாற்றினார்கள்...’ என்கிறது.
4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது.

ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன்,  200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது. 2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது.

டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில்  200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது. ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி.

பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது.

இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.
இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார்  30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார்  25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார்  23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன.

கடனைத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி. தனது விளம்பர வருமானத்திலும் மற்றும் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் ( 70 கோடி) இந்தியன் வங்கியில் ஓ.டி-யாக கடன் வாங்கியும் சமாளித்ததாகக் கூறப்படுவதை குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. மிக விவரமாக ஆராய்ந்து இருக்கிறது.

''கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த வரை, தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதைக் காட்டினாலே, குற்றம் நிரூபணம் ஆகிவிடும். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன!''

என்கிறார் வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினி.
வரும் மே 6 அன்று, செம்மொழி விருது வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. அதே தினம் கோர்ட்டில் ஆஜராகப்போகும் கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுக்க இருக்கும் விருது எப்படி இருக்கும் என்பதை இந்தியாவே எதிர்பார்க்கிறது!

நன்றி - ஜூ வி