Showing posts with label இயக்குநர். Show all posts
Showing posts with label இயக்குநர். Show all posts

Wednesday, September 02, 2015

நைட் ஷோ' - மலையாளத்தில் வெளியான ‘ஷட்டர்' படத்தின் மறுஆக்கம்தானா? - எடிட்டர் /இயக்குநர் ஆண்டனி சிறப்பு பேட்டி

தமிழ் சினிமாவில் பிரபலமான படத்தொகுப்பாளர்களில் ஒருவர் ஆண்டனி. தற்போது அவர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரிடம் இயக்குநர் அனுபவத்தைக் கேட்டபோது, எடிட் செய்ததுபோலக் கச்சிதமான பதில்கள் வந்து விழுந்தன.
மலையாளத்தில் வெளியான ‘ஷட்டர்' படத்தின் மறுஆக்கம்தான் நீங்கள் இயக்கியிருக்கும் 'நைட் ஷோ' என்று தெரியும். இப்படம் உருவான விதத்தைப் பற்றி சொல்லுங்கள்.
‘ஷட்டர்' படத்தின் ரீமேக் உரிமையை இயக்குநர் விஜய் வாங்கி வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஒருநாள் அவருடைய படத்தின் எடிட்டிங் வேலைகளில் இருந்தபோது, “நீங்க படம் இயக்குறீங்களா?” என்று கேட்டார். இவ்வளவு படங்கள் எடிட் பண்ணிட்டோம், இயக்குநர் படுற கஷ்டத்தை நாமளும் பட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து “சரி” என்றேன். உடனே 'ஷட்டர்' ரீமேக் என்றார், “நானும் பார்த்திருக்கிறேன், எனக்கு ரொம்ப பிடித்த படம்” என்று ஆரம்பித்த படம்தான் 'நைட் ஷோ'.
சத்யராஜிடம் பேசுவதற்கு மட்டும்தான் நான் இயக்குநர் விஜயுடன் சென்றேன். மற்ற நடிகர்கள், எத்தனை நாட்கள் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்த்தது இயக்குநர் விஜய்தான். நான் தினமும் காலையில் போய் இன்றைக்கு என்ன காட்சி எடுக்கிறோம் என இயக்கிட்டு வருவேன் அவ்வளவுதான்.
முதல் படமே மறுஆக்கம் பண்ணலாம் என்று தோன்றியது ஏன்?
ரீமேக் படமாக இருந்தாலும் நடிகர்களிடம் அந்தப் படத்தைப் போலவே வேலை வாங்க வேண்டும். முதல் படத்தை ஏற்ககெனவே ஹிட் அடிச்ச படத்தோட ரீமேக்காக பண்ணுவது சேஃப்டி என்றுகூடச் சொல்லலாம்.
இயக்குநர் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்..
எடிட்டிங்கில் எப்போதும் ஏ.சி. அறையிலேயே உட்கார்ந்திருப்பேன். இயக்குநரானதும் முதல் நாள் காலை 7:30 மணிக்குப் படப்பிடிப்பு தளத்துக்குப் போனேன். படப்பிடிப்புக்கு அப்பப்போ போயிருக்கிறேன். ஒருமுறை நடித்தும்கூட இருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தோளில் பாரமில்லை. இயக்குநராகப் படப்பிடிப்பு தலத்துக்குப் போனவுடன் தான் கேரவாவேன், நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்கள் என மொத்த பாரமும் தெரிந்தது. இவ்வளவு பேரிடம் நாம்தான் வேலை வாங்கப் போகிறோமா என்று தயக்கம் இருந்தது. முதல் ஒரு இரண்டு மணி நேரம்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அதற்கு பிறகு ஒன்றும் தெரியவில்லை.
உங்களது இயக்குநர் நண்பர்கள் என்ன சொன்னார்கள்?
நான் வெளிப்படையாப் பேசக் கூடியவன். அவர்கள் படங்கள் என்னிடம் வரும்போது இந்தக் காட்சி வேண்டாம், அந்தக் காட்சி வேண்டாம் என்று வெட்டிவிடுவேன். இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு பண்ணி எடுத்தோமே என்று இயக்குநர்களுக்கு ஜீரணிக்க முடியாத ஒரு நிலை இருக்கும். அப்போது சில இயக்குநர்கள் எல்லாம் “வாடி... நீ படம் இயக்குவேல்ல அப்போ தெரியும் வலி” என்று கிண்டல் பண்ணுவார்கள். இப்போது தெரிகிறது ஒரு இயக்குநருடைய வலி. நான் இயக்கிய பல காட்சிகளை, நல்லாயில்லை என்று தூக்கி எறிந்தேன். கெளதம் மேனன் என் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒரு எடிட்டராக மன அழுத்தம் ஏற்படும்போது எப்படி அதிலிருந்து விடுபடுகிறீர்கள்?
முதல் விஷயம், நான் தொடர்ச்சியாகப் பணியாற்ற மாட்டேன். கொஞ்சம் நேரம் எடிட் பண்ணுவேன், பிறகு படத்தின் இயக்குநர்கள் மற்றும் உதவியாளர்களோடு கேரம் போர்டு ஆடுவேன். இல்லை என்றால் அரட்டை அடித்துக்கொண்டிருப்பேன். கொஞ்சம் நேரம் கழித்து போய் 3 காட்சிகள் எடிட் பண்ணுவேன். மதியமாகிவிடும், இயக்குநருக்கு நானே சமைத்துப் பரிமாறுவேன். அப்புறம் ஒரு மணி நேரம் ரெஸ்ட், பிறகு எடிட் பண்ணுவேன்.
3 மணி நேரம் கதை சொல்லுதல் என்பது போய், 2:15 மணி நேரத்தில் கதை சொல்லும் முறை வந்துவிட்டது. ஒரு எடிட்டராக இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இப்போது உலகமே ரொம்ப பிஸியாக மாறிவிட்டது. ஒரு ரசிகனோட பார்வையில் உட்கார்ந்தால், படம் சீக்கிரமே முடிந்துவிட்டதே என்று தோன்ற வேண்டும். நான் எடிட் பண்ணிய படங்களே இந்த நேரத்தை தாண்டியிருக்கிறது, காரணம் கதைதான். இது பெரிய கதை, ஆகையால் படம் நீளமாக இருக்கட்டும் என்று இயக்குநர் விரும்பும்போது அதைச் செய்துகொடுக்க வேண்டியது எடிட்டரின் பணி. பெரிய கதையில் குறைக்க வேண்டும் என்று இரண்டு, மூன்று காட்சிகளைத் தூக்க முடியாது. சில காட்சிகளைக் தூக்கினால் படத்தின் கதையே மாறிவிடும்.
இயக்கமா, எடிட்டிங்கா? இனி எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?
எனது முக்கியமான பணி எடிட்டிங்தான். சின்னக் கதை, 30 நாள் படப்பிடிப்பு என்று வரும்போதுதான் இயக்கப் போவேன். எனது அடுத்த படத்தை இன்னும் நான் யோசிக்கவில்லை.
ஆண்டனி


நன்றி-த இந்து

Saturday, July 04, 2015

புலி- கலக்குமா? - இயக்குநர் சிம்புதேவன் சிறப்பு பேட்டி

  • ‘புலி’ படப்பிடிப்பில் சிம்புதேவன், விஜய்
    ‘புலி’ படப்பிடிப்பில் சிம்புதேவன், விஜய்
ஒரு இயக்குநருக்கு, என்ன தேவையோ, அது கிடைத்துவிட்டாலே படத்தின் வெற்றி உறுதியாகிவிடும். வலிந்து பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்று முயற்சித்தால் தப்பாகத் தெரியும். இந்தக் கதைக்கு என்ன தேவையோ அது படத்தில் இருக்கும் என்று வார்த்தைகளில் நம்பிக்கையை உரித்தார் விஜய் நடித்துவரும் புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவன். படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருந்தவருடன் உரையாடியதிலிருந்து…
‘புலி' படத்தின் தொடக்கம் எப்படி அமைந்தது?
‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படம் வெளியான சமயத்தில் விஜயைச் சந்தித்து இக்கதையைக் கூறினேன். கதையைக் கேட்ட உடனே பிடித்திருக்கிறது, உடனே தொடங்கலாம் என்றார்.
படத்தின் நாயகன் விஜயைத் தவிர ஸ்ரீ தேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், தம்பி ராமையா, சத்யன், பிரபு, விஜயகுமார் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதே போல படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன்பாகக் கற்பனை எப்படிக் காட்சியாக வர வேண்டும் என்பதை வடிவமைத்துவிட்டேன். இதுபோன்ற படங்களில் இயக்குநருக்குப் போதிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும். எனது கற்பனையை சரியாகத் திரையில் கொண்டுவருவதற்கு அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்களின் படப்பிடிப்புக்குக் காலவரையின்றி அதிக நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நான் அனைத்தையுமே சரியாக முன்பே திட்டமிட்டுவிட்டதால், தொடர் படப்பிடிப்பு மூலமாகக் குறைவான நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம்.
‘புலி' படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தால் வரலாறுப் படம்போல் தெரிகிறதே?
இப்படத்தை ஒரு ஃபாண்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் என்று கூறுவேன். போரும் காதலும் கலந்த கதை. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும் வகையில்தான் இப்படத்தின் கதையை நான் வடிவமைத்திருக்கிறேன். இக்கதை ஒரு கற்பனைதான். எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமலும், புதிதான ஒரு உலகம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது உறுதி. இது ஒரு புதுமையான களம், அதில் புகுந்து விளையாடியிருக்கிறார் விஜய்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக உங்களின் திட்டமிடல் என்ன?
இப்படத்தை இடைவெளியின்றி முடித்திருக்கிறோம். கடந்த ஒரு வருடமாக, ‘புலி' படத்திற்கான கிராஃஃபிக்ஸ் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இப்படத்தின் கதைக்களத்தைக் காட்டுவதற்கு கலை இயக்குநர் முத்துராஜ், ‘மகதீரா', ‘நான் ஈ' உள்பட பல படங்களில் பணியாற்றிய கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் ஆகிய இருவரது பணிகள் முக்கிய பங்கு வகிக்கும்.
செட் தவிர காடு, மலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. அதற்காக கேரளம், ஆந்திரம், தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம்.
2014 நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால், அதற்கு முன்பே ஒவ்வொரு காட்சியும் எப்படி வர வேண்டும் முன்னதாகத் தீர்மானித்துவிட்டதால், படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றவுடன் மிகவும் எளிதாக வேலை நடந்தது.
முதல் முறையாக விஜயுடன் பணியாற்றிய அனுபவம்..
முதல் முறையாக ஒரு முன்னணி நாயகன், ஒரே படத்தில் நிறைய நடிகர், நடிகைகள் என்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது பொறுப்பு அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேபோல் விஜயும் தனது கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து செயல்பட்டார்.
சண்டைக் காட்சிகள், உடைகள் என இப்படத்தில் விஜய் நிறைய காட்சிகளுக்கு அதிக உழைப்பைத் தந்திருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக வாள் சண்டை கற்றுக்கொண்டார். காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியபோது மாலை படப்பிடிப்பு முடிந்ததும் அங்கிருந்து ஊருக்குள் சென்று தங்கி, திரும்பி வர தாமதமாகும் என்பதால் பக்கத்து கிராமத்தில் வீடு எடுத்துத் தங்கினோம். விஜய் சாருக்கு தனியாக ரூம் போடப்பட்டது. ஆனால், வேண்டாம் என்று மறுத்து அவரும் எங்களுடனேயே 40 நாட்கள் தங்கிவிட்டார். பெரிய நடிகர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். கதையைக் கேட்டவுடன் என்ன சொன்னார்?
இக்கதையை நான் எழுதும்போதே, அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். மும்பையில் போய் கதை கூறும்போது, மிகவும் தயக்கத்துடன்தான் கதையைக் கேட்க ஆரம்பித்தார். கதையைக் கேட்ட உடனே ‘ரொம்ப நல்லாயிருக்கு, கண்டிப்பாக பண்ணுகிறேன்’ என்று தெரிவித்தார்.
‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்துக்குப் பிறகு நிறைய கதைகள் வந்தன, இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஸ்ரீ தேவி என்னிடம் கூறினார். ஸ்ரீ தேவியைத் தமிழ்த் திரையில் எதிர்பார்க்கும் அனைவருக்குமே இப்படம் உற்சாகம் தரும்.
‘புலி' படத்தின் புகைப்படங்கள், வீடியோ முன்னோட்டம் என அறிவித்த நாளுக்கு முன்பே இணையத்தில் வெளியானது பரபரப்பைக் கிளப்பியதே?
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நமக்கு எப்படி நண்மையாக அமைகிறதோ அதேபோலப் பல பின்னடைவுகளுக்கும் வழிகோலுகிறது. அப்படித்தான் இதுபோன்ற நிகழ்வுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போதுகூட இது தொடர்பான விஷயங்களில் மேலும் கவனமாக இருக்க வேண்டும் என நிறைய மாற்றங்களைப் படக் குழுவில் கொண்டுவந்திருக்கிறோம். இனிமேல் இது தொடர்பாக எதுவும் நடக்காது, எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகிலும் நடக்காது.


நன்றி -த இந்து

Thursday, July 02, 2015

மாரி -பக்கா கமர்ஷியல் கலக்கல் - இயக்குநர் பாலாஜி மோகன் சிறப்புப் பேட்டி

  • பாலாஜி மோகன் (படம்: எல்.சீனிவாசன்)
    பாலாஜி மோகன் (படம்: எல்.சீனிவாசன்)
  • ‘மாரி’ படத்தில் தனுஷ்.
    ‘மாரி’ படத்தில் தனுஷ்.
‘மாரி’ படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே கிடைத் துள்ள வரவேற்பால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
‘மாரி’ திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?
ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் ‘மாரி’ யில் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் பார்க்கும் வழக்கமான கமர்ஷியல் படப்பாணியில் இல்லாமல் வேறு மாதிரி இருக் கும். என் முந்தைய இரண்டு படங்களிலும் கதையை முழு மையாக எழுதி முடித்துவிட்டு, அதன் பிறகு நாயகனைத் தேர்வு செய்தேன். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது தனுஷ் சாரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ஒரு ரசிகனாக தனுஷ் சாரை எப்படி பார்க்க வேண்டும் என நினைத்தேனோ, அப்படியே இந்தக் கதையை எழுதி இயக்குகிறேன்.
உங்கள் முதல் இரண்டு படங் களை விட இப்படத்தின் பட்ஜெட் அதிகம். நட்சத்திரங்களும் அதிகம். அது கஷ்டமாக இல்லையா?
அதை நான் ஒரு பெரிய விஷயமாக மனதில் ஏற்றிக் கொள் ளவில்லை. என் முந்தைய படங் களைப் போல இதன் படப்பிடிப் புக்கு போனேன், கதையில் எழுதப்பட்ட காட்சிகளை இயக்கி னேன். அவ்வளவுதான். பெரிய செட், பெரிய நடிகர்கள் என்று மனதில் எதையும் ஏற்றிக் கொள் ளாமல் முந்தைய படங்கள் போலவே மிக வேகமாக எடுத்து விட்டேன்.
குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரை படமாக முதலில் மாறியது உங்களின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம்தான். இப்போது பலரும் அதைக் கடைப்பிடிக்கிறார்களே?
வெள்ளித்திரை படங்கள் என் றால், ஒரு சின்ன யோசனையை வைத்துக் கொண்டு அதை படமாக பண்ணுவதுதான். அதையே இப்போது ஒரு குறும்படத்தை வைத்து வெள்ளித்திரை படமாக மாற்றுகிறார்கள். குறும் படத்தை வைத்துக் கொண்டு இயக்குநராகும் வாய்ப்பை பெறு வது ஹாலிவுட்டில் சாதாரணமாக நடக்கிறது. ஒரு புதிய இயக்கு நரின் குறும்படங்கள், அதை அவர் படம் பிடித்திருக்கும் விதம் ஆகியவை தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும். இதை ஒரு நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
‘மாரி’ படத்தின் பாடல்கள் எல்லாமே குத்துப் பாடல் ரகத்திலேயே இருக்கிறதே?
இப்படத்தின் கதை அப்படி. இதில் வேறு மாதிரியான பாடல் கள் எதையுமே திணிக்க முடி யாது. படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
தனுஷ் - ரோபோ சங்கர் காமெடிக் கூட்டணி எப்படி வந்திருக்கிறது?
இப்படம் முழுக்க தனுஷ் சாருடன் ரோபோ சங்கர் வருவார். இருவரின் வசனங்கள், காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அதே போல, இப்படம் ரோபோ சங்கருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் .
உங்கள் முந்தைய படங்களைவிட ‘மாரி’ படத்தின் டிரெயிலர் கமர்ஷியலாக இருக்கிறதே. உங்களுக்கு கமர்ஷியல் இயக்குநராக வேண்டும் என்று ஆசையா?
வெவ்வேறு கதைக்களங்களில் படம் பண்ண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துக்கு பிறகு வேறு மாதிரி படம் பண்ண வேண்டும் என்று ஆசைப் பட்டேன். சூழ்நிலை காரணங் களால் ‘வாயை மூடி பேசவும்’ அமைந்து விட்டது. அந்தப் படத்துக்கு முன்னால் பண்ணி யிருக்க வேண்டிய படம் ‘மாரி’. ஒன்றரை வருடங்கள் கழித்து பண் ணலாம் என்று தனுஷ் சார் சொன்னதால் இப்படம் தாமதம் ஆனது அவ்வளவுதான். ‘மாரி’ படத் துக்கு பிறகும் நான் வெவ்வேறு களங்களில்தான் படம் பண் ணுவேன்.
‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையே. அதற்கு என்ன காரணம்?
அப்படத்தின் இரண்டாம் பாதி யில் வசனங்களே இருக்காது. இதை எவ்வளவு சரியாக பண்ணி னாலும், அப்படம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே போய் சேரும் என்று தொடங்கும்போதே தெரியும். தயாரிப்பாளர் சசிகாந் திடம் நாலு கதைகளை நான் கொடுத்திருந்தேன்.
அவற்றில் இருந்து அவர் ‘வாயை மூடி பேசவும்’ கதையைத்தான் தேர்வு செய்தார். அதைத்தான் படமாக எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் நான் நினைத்ததை விட அதிகப்படியான மக்களிடம் போய் அப்படம் சேர்ந்தது.


thanx - thehindu

Sunday, June 28, 2015

‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 ? -மாயி’, ‘திவான்’ இயக்குநர் பேட்டி

  • ’அதிபர்’ படத்தில் ஜீவன், சந்தியா
    ’அதிபர்’ படத்தில் ஜீவன், சந்தியா
  • சூர்யபிரகாஷ்
    சூர்யபிரகாஷ்
‘மாணிக்கம்’ படத்தின் மூலம் மண் வாசனை இயக்குநராக அறிமுகமானவர் சூர்யபிரகாஷ். சரத்குமார் நடிப்பில் ‘மாயி’, ‘திவான்’ படங்களை இயக்கிய இவர், நடிப்பிலிருந்து விலகியிருந்த ஜீவனை ‘அதிபர்’ படத்தின் மூலம் திரும்பவும் அழைத்துவந்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
‘வருஷ நாடு’ படத்தின் இயக்கத்திலிருந்து பாதியில் நீங்கள் விலகிவிட்டதாக செய்தி வெளியானதே?
பாதியில் வெளியேறினேன் என்று வெளியான செய்தி பொய். அந்தப் படத்தை முழுமையாக முடித்துத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பிச் சான்றிதழ் பெற்றுத்தந்த பிறகே அதிலிருந்து வெளியேறினேன். நான் நேசித்து இயக்கிய படம் அது. எனது மாமன் மகனின் காதலை அப்படியே படமாக்கினேன். நிலக்கோட்டை அருகில் உள்ள வாடிப்பட்டியில் நடந்த உண்மைக் கதை அது. ‘தைரியம்’ பட நாயகன் குமரன் நாயகனாக நடித்தார். சிருஷ்டி டாங்கேயை நாயகியாக நடிக்க வைத்தேன். அதன் பிறகே அவர் மேகா படத்தில் நடித்து இன்று முன்னணி நாயகியாக இருக்கிறார்.
‘நான் அவனில்லை’ படத்துக்குப் பிறகு ஜீவன் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவரை எப்படி மீண்டும் இழுத்துவந்தீர்கள்?
நான் முதலில் கதை சொல்லச் சென்றபோது “ரசிகர்களின் மனதை வருடுகிற மாதிரியான அதிக மென்மையும் அளவான வன்மையும் நிறைந்த கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே மறுபடியும் நடிப்பதாக இருக்கிறேன். எனது பழைய இமேஜ் எதுவும் இருக்கக் கூடாது. அதேநேரம், மற்ற கதாபாத்திரங்களுக்கும் சரியான முக்கியத்துவம் இருக்க வேண்டும்” என்றார். அவர் எப்படி எதிர்பார்த்தாரோ அப்படிப்பட்ட கதையாக ‘அதிபர்’ இருந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டார். ரசிகர்களின் மனதை வருடும் மறுபிரவேசமாக இந்தப் படம் இருக்கும்.
ஜீவன் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்?
இதுவும் ஒரு உண்மைக் கதைதான். கட்டுமான நிறுவனம் ஒன்றைச் சிறு அளவில் தொடங்கி இன்று சென்னையில் முன்னணிக் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக அதை வளர்த்துக் காட்டியிருக்கிறார் நேர்மையான இளைஞர் ஒருவர். அவரை இந்தத் துறையிலிருந்து அப்புறப்படுத்தப் பல போட்டி நிறுவனங்கள் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தினார்கள். அதையெல்லாம் அவர் முறியடித்து எழுந்து நின்றார். அவர் யார் என்பதைச் சொல்வது தனது வாழ்க்கைக் கதையைப் படமாக்க அனுமதி தந்த அவருக்குச் செய்யும் நன்றியாக இருக்காது. அந்தத் தொழிலதிபராகத்தான் ஜீவன் நடிக்கிறார்.
செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று நேர்மையாக வாழும் சிவா கதாபாத்திரத்தில் ஜீவன் வருகிறார். ஆனால், அவரது நேர்மையே பலருக்கும் சவக்குழியாகும்போதுதான் சிக்கல் வருகிறது. நம்புகிறவர்களை எல்லா வகையிலும் ஏமாற்றலாம் என்ற நோக்கத்தோடு ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் வரும் ரஞ்சித் நேருக்கு நேர் சந்தித்து சவால் விடாமல் பின்னும் சதிவலை ரசிகர்களைப் பதைபதைக்க வைக்கும்.
வழக்கம்போல இந்தப் படத்திலும் நட்சத்திரங்களைக் குவித்திருக்கிறீர்களே?
நிஜ வாழ்க்கையில் நாம் நிறைய பேரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி யிருக்கும்போது நாயகன், நாயகி, வில்லன், குணச்சித்திரம் என்று ஏன் சினிமாவில் மட்டும் எண்ணிக்கையைச் சுருக்க வேண்டும்? ரஞ்சித் தவிர சமுத்திரக்கனி, நந்தா, ரிச்சர்ட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் டி. சிவகுமார் சிபிஜ அதிகாரியாக நடித்திருக்கிறார். நாயகியாக சந்தியா நடித்திருக்கிறார். எல்லோருக்குமே சமமான முக்கியத்துவம் கதையில் இருக்கிறது. ஜீவன் நாயகன் என்றாலும் இதையொரு மல்டி ஸ்டாரர் படம் என்று கூறலாம்.
நந்தாவுக்கு என்ன வேடம்?
நந்தா கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் நடிகர் அல்ல. இந்தப் படத்தில் டேவிட் என்ற இளம் ரவுடி. ரவுடியாக நடித்தாலும் நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்பதால் ஒப்புக்கொண்டார்.
நண்பன் கேட்டுக்கொண்டதற்காக நிழலுலகை விட்டு விலகி நல்லவனாக மாறுகிறார். பாதை மாறியவர்கள் திரும்பி வருவதில் இருக்கும் சிக்கலைச் சந்திக்கும் நந்தா அதைக் கடந்துவர முடிந்ததா என்ற அம்சத்துடன் அவரது கதாபாத்திரம் பயணிக்கும். இதை ஒரு சமூக த்ரில்லர் எனலாம். ஆனால், யதார்த்தமான நகைச்சுவையும் படம் முழுவதும் இருக்கும்

நன்றி - த இந்து

Saturday, May 23, 2015

இன்று நேற்று நாளை’ - ஃபேண்டசி காமெடி த்ரில்லர் - ஜீரோ கிலோமீட்டர்’ இயக்குநர் திருப்பூர் ரவிக்குமார் பேட்டி

இணையத்தில் பிரபலமான குறும்படங்களில் ஒன்று ‘ஜீரோ கிலோமீட்டர்’. அதில், திருப்பூரில் கதவைத் திறக்கும் நாயகன் சென்னையில் இறங்கி நடக்கும் அதிசயம் நடக்கும். அந்தக் குறும்படத்தின் இயக்குநர் ரவிக்குமாருக்கு, கோடம்பாக்கம் தன் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்..
திருப்பூரில் நூல் விற்பனை செய்யும் சாதாரண குடும்பத்துப் பையன். பள்ளியில் படிக்கிறப்போ ‘கனவு’ என்ற அமைப்பு நடத்திய குறும்பட விழாவில் படங்களை ரசித்துப் பார்த்தேன். இதேமாதிரி நாமளும் குறும்படம் எடுக்கலாம்ணு தோணுச்சு.
10 நிமிடம் மட்டும் பேட்டரி நிற்கும் ஒரு வீடியோ கேமரா கிடைச்சது. அத வச்சு ‘லீவு’ன்னு ஒரு குறும்படம் பண்ணேன். அதுக்குக் கிடைச்ச கைதட்டல், பாராட்டுனால அதைவிட நல்ல படங்களை எடுக்க முடியும்ணு தோணுச்சு. அப்படித்தான் ‘ஜீரோ கிலோமீட்டர்’ குறும்படத்தை எடுத்தேன். அது என்னை சினிமா வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திடுச்சு.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?
‘முண்டாசுப்பட்டி’ பட இயக்குநர் ராம், பால்ய நண்பன். சிறுகதைகளும் நிறைய படிப்பேன். ஒரு சிறுகதையைத் தேர்வு செஞ்சு அதை எழுதின எழுத்தாளரிடம் அனுமதி வாங்கி, குறும்படமா எடுத்து நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். என்னோட படத்தைக் காத்திருப்பு பட்டியலில் வச்சுருந்தாங்க. ஆனா, ராம் படம் தேர்வாயிருச்சு. ராமோட நிகழ்ச்சியில பங்கேற்க சென்னை வந்தேன்.
அப்போ 32 படங்கள்தான் நாளைய இயக்குநர்ல திரையிடுவாங்க. என் படத்தைவிட மோசமா எடுத்த படங்களுக்கு திரையிடல்ல இடம் கிடைச்சிருந்தது. அதனால நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கிட்ட பேசினேன். கூடுதலா நான்கு படங்களைத் திரையிட்டாங்க. என்னோடதும் அதுல ஒண்ணு. அப்படியே இறுதிச் சுற்றுவரைக்கும் வந்தோம். என்னோட `ஜீரோ கிலோமீட்டர்’ படம் 3-வது இடத்தைப் பிடிச்சது. முதல் பரிசு கிடைக்கலேன்னாலும் அங்கே நலன் குமரசாமி நட்பு கிடைச்சது.
இடையில் `கனாக் காணும் காலங்கள்’ தொலைக்காட்சி தொடர் இயக்கியது நீங்கள்தானே?
ஆமாம். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியோட இறுதிச் சுற்றுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தார் இயக்குநர் பாண்டியராஜ். முதல் மூன்று இடங்களைப் பிடிச்ச யாராவது ஒருவரை உதவி இயக்குநரா சேர்த்துக்கிறதா சொல்லியிருந்தார். அவர் கிட்டப் பேசினேன். அவர் அடுத்த படத்துக்கு கூப்பிடுறதா சொன்னார். அப்போ நலன் குமரசாமி, `கனாக் காணும் காலங்கள்’ வாய்ப்பு இருக்கு போலாமான்னு கேட்டார். ஒப்புகிட்டேன்.
அதுல நான் இணை இயக்குநர். சில நாட்கள்லயே தனியா ஷூட் பண்ண ஆரம்பிச்சேன். நலன் தனியா ஷூட் பண்ணுவார். முதல் நாள் செஞ்ச தப்ப அடுத்த நாள் சரி பண்ணிக்குவோம். அப்புறம் நலன் தொடர்லேர்ந்து வெளியே போயிட்டாரு. நான் தனியா தொடர்ந்தேன். மாசம் முடிஞ்சா கணிசமான சம்பளம் கைக்கு வரும். அதனால் லகான் கட்டின குதிரை மாதிரி மண்டை முழுக்க எபிசோட்கள்தான் ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு கட்டத்துல எங்க இப்படியே தேங்கிருவோமோன்னு நெனச்சு, அங்க இருந்து வெளியே ஓடியாந்துட்டேன்.
வந்த உடனே வாய்ப்பு கிடைச்சதா?
அதுக்கும் நலன்தான் காரணம். அவர் `சூது கவ்வும்’ படம் பண்ணினப்போ அதுல நான் இணை இயக்குநர். அப்போ அந்தப் படத்தோட தயாரிப்பாளர் சி.வி. குமார் “உங்ககிட்ட கதை இருக்கா”ன்னு” கேட்டார். இருக்கு சார் ஒன்லைன்தான், டெவலப் பண்ணணும் அப்படின்னேன். அவர் “சீக்கிரமா ரெடி பண்ணுங்க”ன்னு உற்சாகப்படுத்தினார். அப்படி உருவான கதைதான் இது.
இது என்ன கதை?
டைம் மெஷின் மூலமா சுதந்திரப் போராட்ட காலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் செல்லும் விஷ்ணுவும் கருணாகரனும் அடிக்கும் லூட்டிகள்தான் கதை. ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிச்சிருக்கார். இது ஹியூமர் ஃபேன்டஸி.
முதல் படத்திலேயே ஃபேன்டஸி கதையைக் கையாளுவது கடினமாக இல்லையா?
எனக்கு அது ஈஸியான சப்ஜெக்ட்தான். ஆடியன்ஸும் ஈஸியா புரிஞ்சு ரசிக்கிற மாதிரி திரைக்கதை இருக்கும். என்னோட அடுத்த படமும் ஃபேன்டஸி படம்தான்.
நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள்னு உங்களுக்கு விருப்பமான தேர்வை செய்ய முடிஞ்சதா?
இந்தப் படத்தோட மதிப்பு எவ்வளவு, யார் இருந்தா எவ்வளவு ஜெயிக்கும் அப்டின்னுதான் தயாரிப்பாளர் பார்ப்பார். நானும் அறிமுக இயக்குநர்தான். பெரிய நட்சத்திரங்கள், இசையமைப்பாளர், கேமராமேன் அப்படின்னு எடுக்கறதா இருந்தா, பெரிய இயக்குநரை வச்சே படம் எடுத்துருவாங்களே! மற்றபடி, நாம சினிமா எடுக்கணும்னுதான் வந்திருக்கோமே தவிர, குறிப்பிட்ட சிலரை வச்சு சினிமா எடுக்கணும்னு வரலையே.

நன்றி - த இந்து

Friday, April 10, 2015

புலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி


'வசமாகச் சிக்கிய எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி

கா. இசக்கிமுத்து

த  இந்து

சென்னையின் பிரம்மாண்டமான பின்னி மில்லில் பதுங்கியிருக்கிறது ‘எலி’. அங்கே அண்ணாந்து பார்க்கவைக்கும் அரங்குகள் அமைத்து, அதில் வடிவேலு நகைச்சுவை நாயகனாக நடித்துவரும் ‘எலி' படத்தைப் படமாக்கிவருகிறார் இயக்குநர் யுவராஜ். ‘தெனாலிராமன்’ படத்தைத் தொடர்ந்து வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து ஆச்சரியப்படுத்தியிருப்பரைப் படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம்..
யுவராஜ்
‘எலி' என்ற தலைப்பே கிச்சு கிச்சு மூட்டுகிறதே?
மிக மோசமான ஒரு கொள்ளைக் கூட்டம். அதைப் பிடிக்க அந்தக் கூட்டத்துக்குள் நுழைகிறார் வடிவேலு. கெட்டவர்கள் கூட்டத்துக்குள் ஒரு நல்லவன் நுழைந்துவிட்டால், “இந்தக் கூட்டத்துக்குள்ளே ஒரு எலி இருக்கான்டா. அவனைக் கண்டுபிடிச்சு அடிச்சுக் கொல்லுங்கடா” என்பார்கள்.
அதனால்தான் ‘எலி' என்று தலைப்பு வைத்தேன். கொள்ளைக் கூட்டத்துக்குள் அவர் மாட்டிக்கொண்டு முழிப்பதும், அந்தக் கூட்டத்தைப் பிடித்தாரா, இல்லையா என்பதுதான் கதை. 1960-களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
வடிவேலு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ‘தெனாலிராமன்' படத்தை இயக்கினீர்கள். ஆனால் வெற்றி கிடைக்கவில்லையே என்ன காரணம்?
“நீங்கள் கிரிக்கெட் விளையாடி இருப்பீர்கள் என்று நினைத்து வந்தோம். ஆனால் செஸ் விளையாடிக்கொண்டிருந்தீர்கள்” என்று முகநூலில் ஒரு ரசிகர் விமர்சனம் பண்ணியிருந்தார். அந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன. வடிவேலு மறுபடியும் நடிக்க ஆரம்பிக்கிறார், எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி ரொம்ப காமெடியாகப் பண்ணவில்லை. சிரிக்கவைத்து, கூத்தடித்து அனுப்பிவிட்டார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்ற விஷயத்தில் நானும், வடிவேலும் தெளிவாக இருந்தோம்.
அதனால்தான் ‘தெனாலிராமன்' என்ற ஒரு பாத்திரத்தைக் கனமாக அமைத்தோம். “நல்ல மரியாதையான ஒரு படம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த காமெடி அதில் இல்லை” என்று படத்தைப் பார்த்த நிறைய குடும்பத்தினர் எங்களுக்குத் தெரிவித்தார்கள். எந்த இடத்தில் தவறு நடந்தது என்றால் ரசிகர்கள் முழுக்க காமெடி படம் என்று நினைத்து வந்துவிட்டார்கள்.
நாங்கள் நல்ல படம் கொடுத்திருந்தோம். ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தை எடுக்கவில்லை. இப்போது “இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் இந்தாங்க ‘எலி'” என்று விருந்து கொடுக்கப் போகிறோம். விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறார்கள்.
ஒரு படம் தோல்வியடைந்தும் மறுபடியும் அதே இயக்குநர் - நடிகர் இணைவது ஆச்சரியமாக இருக்கிறதே?
எங்கள் இருவருக்குள்ளும் நல்லதொரு புரிதல் இருக்கிறது. ‘தெனாலிராமன்' படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு காமெடிப் படம் பண்ணலாம் என்று பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதனால்தான் திரும்பவும் வாய்ப்புக் கொடுத்தார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது, கருத்துப் பரிமாற்றம் தான் இருக்கிறது.
மூன்றாவது வாய்ப்பு அமைந்தால் என்ன செய்வீர்கள்?
அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. இப்போதைக்கு ‘எலி' பண்றோம். அடுத்த படத்துக்கான கதையையும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் படம் முடித்த உடனேயே பண்றோமா, கொஞ்சம் நாட்கள் கழித்து பண்றோமா என்பது அவரது விருப்பம்தான்.
வடிவேலுவை வைத்துப் படம் பண்ணி னால், அவருடைய தலையீடு இருக்கும் என்று ஒரு பேச்சு நிலவுகிறதே?
“தொடர்ச்சியாக இவ்வளவு காமெடி வசனங்கள் அள்ளிக் கொடுக்குறீங்க. நீங்கள் ஏன் இயக்கக் கூடாது” என்று அவரிடமே நான் கேட்டிருக்கிறேன். அப்போது “இல்லை நண்பா. நீ ஒரு காட்சி கொடு. அதில் நான் காமெடி கலந்து சூப்பராகச் சொல்வேன். ஆனால் அடுத்த காட்சி இதுதான் என்று எனக்குத் தெரியாது. நீ என்னிடம் ஒரு விஷயம் சொல்லு, அதை நான் காமெடியாக்கி உன்னைச் சிரிக்க வைக்கிறேன்” என்றார். இதை ஏன் இப்படி எடுக்கக் கூடாது என்றெல்லாம் என்னிடம் கூற மாட்டார்.
முதலில் கதையைச் சொல்லச் சொல்வார். கதையைக் கேட்டவுடன், இந்த இடத்தில் எனக்கு இது சரியாக வருமா என்று கேட்பார். சரியாக வரும் என்று கூறியவுடன், முழுக் கதையையும் மூளையில் ஏற்றிக்கொள்வார். ஒரு வாரத்துக்குள் அந்தப் பாத்திரத்துக்கு என்ன பண்ணலாம், பண்ணக் கூடாது என்று மனதில் முடிவு செய்துவிடுவார். அதற்கு பிறகு நாம் என்ன சொன்னாலும், அதில் தலையிடவே மாட்டார்.
காட்சி இதுதான் என்று கூறியவுடன், வசனத்தில் இப்படிப் பண்ணலாமா என்று நிறைய சாய்ஸ் சொல்லுவார். ஆனால் மறந்தும் கதை, திரைக்கதை ஏரியாவுக்குள் வடிவேலு தலையிடுவதில்லை. ஒரு காட்சி சொன்னால் இதுக்கு முன்னால் என்ன காட்சி, பின்னால் என்ன காட்சி என்று கேட்பார். அதற்குத் தகுந்தவாறு நடிக்க வேண்டும் என்று சொல்வார். அவ்வளவுதான். அந்தக் காட்சிக்குள் அவருடைய விளையாட்டு நடக்கும்.
மறுபடியும் காமெடியனாக களம் இறங்குவது குறித்து வடிவேலு உங்களிடம் எதுவும் கூறியிருக்கிறாரா?
அடுத்த அடுத்த படங்கள் பண்ணுவேன் என்று சொல்வார். யார்கூடப் பண்ணினால் நல்லாயிருக்கும் என்று என்னிடம் கேட்பார். உடனே அதை எப்படி நான் சொல்லுவேன் சார்.. நீங்கதான் சொல்லணும் என்பேன். அவசரப்படாமல் பண்ணுவோம் யுவராஜ், எனக்கு இது பிடித்திருக்கிறது என்பார்.
மக்களை சிரிக்கவைக்கச் சரியான படங்கள் அமைய வேண்டும் என்பார். நிறையப் பேர் அவரிடம் கதை சொல்ல வருகிறார்கள். இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிடுவார். ‘எலி' முடியட்டும், முடிந்தவுடன் பேசலாம் என்று கூறியிருக்கிறார்.


நன்றி  - த  இந்து

Wednesday, February 04, 2015

சினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க வேண் டிய 3 தகுதிகள் - இயக்குநர் சீனுராமசாமி

சினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு 3 தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்’ என்று, திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையும் மனோ மீடியா கிளப்பும் இணைந்து நடத்தும் 3 நாள் கரிசல் திரைவிழா பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று தொடங்கியது.
இயக்குநர் சீனுராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசும்போது, ‘இந்நிகழ்வில் பறை இசை இசைத்தது நமது பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு மூன்று தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஒன்று அதீத ஆர்வம், அதுவே சினிமா இயக்க அடிப்படைத் தேவை, இரண்டு சினிமாவின் மீதான காதல், மூன்றாவது தரமான இலக்கிய வாசிப்பு. உலகத்திரைப்படம் என்று தனியாக எதனையும் கூற முடியாது. ஒரு வாழ்வியல் முறை எவ்வளவு எதார்த்தமாக, ஆழமாக பதிவு செய்யப்படுகிறதோ அதனை வைத்தே அது உலகத்தரம் பெறுகிறது.
புரட்சி கருத்துகள் நிராகரிப்பு
திரைப்படத்தை தணிக்கை செய்கையில் ஆபாசமான காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் நீக்கப்படுவதைப்போல புரட்சிகரமான கருத்துக்களை உடைய காட்சிகளும் தணிக்கைக் குழுவினரால் நிராகரிக்கப்படுகின்றன.
சத்திய ஜித் ரே போன்ற இயக்குநர்களை முன்னோடிகளாக கொண்ட இந்திய சினிமாத் துறையில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி நமது திறமையினை பறைசாற்றி வருகின்றன.
வீழ்ச்சி என்று பார்க்கையில் ‘நாயக பிம்பம்’ எனும் படிமம் அதிகரித்து, எதார்த்த சினிமாக்கள் குறைந்து முழுக்க முழுக்க கதாநாயகனைத் தூக்கி நிறுத்தும் படங்கள் வரத் தொடங்கியுள்ளன.
குடிக்கு எதிரான காட்சி
குடிப்பழக்கத்தின் காரணமாக கலாச்சாரம் எனும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட சமூகம் அநீதியை எதிர்க்கும் திராணியற்றிருக்கிறது. எனவே தான் எனது படங்களில் குடிநோய்க்கு எதிரான காட்சிகளை அமைக்கிறேன்’ என்றார் அவர்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ தலைமை வகித்தார். தொடர்பியல் துறைத் தலைவர் பெ.கோவிந்தராஜு கருத்துரை வழங்கினார். தொடர்பியல் துறை மாணவர் கு.நாகரத்தினம் வரவேற்றார்.
மாணவர் பி.ஹாட்லின் ஜெனித்த ரால்ப், 3 நாள் நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார். மாணவி வெ.அபிநயா நன்றி கூறினார்.
மதியம் போட்டியாளர்கள் அனுப்பிய குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடுவராக ‘தமிழ் ஸ்டூடியோ’ அமைப்பின் நிறுவனர் மோ.அருண் செயல்பட்டார். இதை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இத்திருவிழா நாளை வரை நடைபெறுகிறது.


நன்றி  - த இந்து

Sunday, February 01, 2015

அமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து சரண் -அஜித் காம்போ படம்

ஆயிரத்தில் இருவர்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருந்த இயக்குநர் சரணை சந்தித்தோம்.
“இந்தப் படத்தில் முதல் 10 நிமிடத்தில் கதையை சொல்லிவிடுவேன். அதற்கு பிறகு எல்லாமே சம்பவங்கள்தான். முதல் 10 நிமிட கதையை அடிப்படையாக வைத்து நிகழும் நிகழ்வுகள்தான் மொத்த படமுமே” என்று ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தைப் பற்றிய விளக்கத்துடன் பேச ஆரம்பித்தார் சரண்.
‘செந்தட்டி காளை செவத்த காளை’ படத்தைத்தான் ‘ஆயிரத்தில் இருவர்’ படமாக மாற்றி இருக்கிறீர்களா?
‘செந்தட்டி காளை செவத்த காளை’ படமும் ‘ஆயிரத்தில் இருவர்’ படமும் வெவ்வேறு கதை. அந்தப் படம் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. அந்தப் படத்துக்காக நான் பேசி வைத்த நடிகர், நடிகைகள் அனைவருமே ‘ஆயிரத்தில் இருவர்’ கதைக்கு பொருத்தமாக இருந்தார் கள். ஆகையால் அவர்களை வைத்தே இதைப் படமாக்கி விட்டேன். மற்றபடி இரண்டு படங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
நீங்களும் அஜீத்தும் இணைந்து பல படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் அவருடன் இணையும் திட்டம் இருக்கிறதா?

அஜீத் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ‘அசல்’ படத்துக்கு பிறகு இன்னொரு படத்தை இணைந்து செய்யலாம் என்று நானும், அவரும் பேசினோம். இதுபற்றி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி யிருந்தோம். ஆனால் சில காரணங்களால் அப்படத்தை செய்ய முடியவில்லை. மீண்டும் இணைந்து படம் பண்ணுவதற்கான சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக பண்ணுவோம்.
எனக்கும் அவருக்குமான நட்பு எப்படி என்றால், நாங்கள் எப்போதுமே திடீரென்றுதான் இணைந்து படம் செய்ய முடிவெடுப்போம். அவர் கூப்பிட்டு பேசிய அடுத்த நாள் முதல் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம். ‘அட்டகாசம்’, ‘அசல்’ எல்லாமே அப்படித்தான் நடந்தது. அந்த மாதிரியான வாய்ப்பு எப்போது வேண்டு மானாலும் வரலாம்.
‘காதல் மன்னன்’ படத்தில் அஜீத்தை சாக்லெட் பாயாக காட்டினீர்கள். ஆனால், தற்போது அவர் கமர்ஷியல் படங்களில் சிக்கிக் கொண்டாரே?
நான் ‘காதல் மன்னன்’ படம் பண்ணியதே ஒரு கமர்ஷியல் பார்வையில்தான். மறைந்த இயக்குநர் பாலசந்தர் அப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு, “இந்த கதையை மூன்று விதமாக எடுக்கலாம். அந்த மூன்று விதங்களில் நீ கமர்ஷியலாக பண்ணி யிருக்கிறாய். நல்லாயிருக்கு” என்று பாராட்டினார்.
தற்போது ஒரு குறும்படம் இயக்கி வெற்றி பெற்றாலே சினிமா இயக்குநர் ஆகிவிடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே? 


இது வரவேற்கத்தக்கதுதான். நல்ல படம் எடுக்கும் எல்லாருக்குமே இங்கு வாய்ப்பு இருக்கிறது. புதிதாக வருபவர்கள் இயக்குநர் களிடம் இருந்து கற்றுக்கொண்டும் வரலாம், கல்லூரியில் படித்து விட்டும் வரலாம். யாரிடமும் கற்றுக் கொள்ளாமல் இயக்குநர் மணிரத்னம் தனிமுத்திரை பதித்து இருக்கிறாரே.
அதேபோல குறும் படம் எடுத்து சினிமா உலகுக்குள் நுழைபவர்களாலும் தனி முத்திரை பதிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் அவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது, வரவேற்கும் விதமாகத்தான் பேச வேண்டும் என்று சொன்னால் அது தவறு.
குறும்படம் எடுத்து சினிமாவுக்கு வருபவர்களில் 5 சதவீதம்பேர் நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் வருகிறார்கள். மீதமுள்ள 95 சதவீதம் பேர் இயக்குநர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பாக மட்டுமே குறும்படங்களை பயன் படுத்திக் கொள்கிறார்கள். பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்.
இப்படி நிறையப் பேர் வருவதால் ‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். அவர்களுக்கான களம் இது அல்ல என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். 

 thanx - the hindu

 



  • Namale kathaya thirudidan padam எடுக்குறோம் maththavangala குறை சொல்றோம் போலினு.
    about 17 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) ·
       
  • sundar  
    ....‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். .... என்றும் ......பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்......என்றும் சொல்லியுள்ளார். எடுத்த படம் ஒழுங்கா போகலை என்றால் அவஸ்தை படும் தயாரிப்பாளர்கள் தவிர நடிகர், நடிகையரும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு என்னபாடு படப்போகிறார்களோ??? போலீஸ், உண்மைவிளம்பி டி.வீ நிகழ்ச்சிகளுக்கு கொண்டாட்டம்தான்.
    Points
    1165
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    "போலி இயக்குநர்கள் பெருகிவிட்டார்கள்" இப்படியெல்லாம் யோசிப்பதை விட்டு விட்டு, புதுசா மக்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல படங்களை கோடாங்க. ஜெர்மன் கவிஞன் Goethe சொல்ற மாதிரி, "All truly wise thoughts have been thought already thousands of times; but to make them truly ours, we must think them over again honestly, till they take firm root in our personal experience." இத முதலில் follow பண்ணுங்க சரண் சார், நீங்க உண்மையான படத்தை எடுக்கலாம். உண்மையிலேயே அனைத்து படைப்பாளிகளும் போலியானவர்களே. அவனவனுக்கு தான் தெரியும் தாம் எங்கிருந்து திருடுகிறோம் என்று...
    Points
    1815
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • skv  
    செத்தவீட்டுலேதான் தலைய விரிச்சுன்னு ஆடுவாக அன்று .இன்று சினிமாலே எல்லாமே அப்படிதான் இருக்கு உடைக்கோ பஞ்சமொபஞ்சம் திருமானமான பெண்கள் எவாலுமே தாலியே போடறது இல்லே சிநிமாகாரிகளைபார்த்து குடும்பபெங்களும் அப்படியே பின்பர்ருகிரார்களே அதுதான் கொடுமை

Sunday, January 25, 2015

ஓம் சாந்தி ஓம் - பிசாசு , டார்லிங் வரிசையில் பேய்ப்படம் -திருச்சி இயக்குநர் பேட்டி

‘ஓம் சாந்தி ஓம்’ ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா
‘ஓம் சாந்தி ஓம்’ ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா
“மூளைக்குள் உதிக்கும் ஒரு யோசனையை எழுத்தாக கொண்டு வருவதே பெரிய வேலை. அந்த எழுத்தை காட்சியாக படம்பிடிப்பது அதை விட கடினமான பொறுப்பு. இதை இந்தப் படத்தின் வழியே ஆரோக்கியமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநராக நுழையும் எனக்கு இந்தப் படம் நல்ல பேரை வாங்கிக்கொடுக்கும்’’ என்று நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறார், ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் இயக்குநர் சூரிய பிரபாகர். 
ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா நடிப்பில் ஆத்மாக்களின் மனநிலையை கருவாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அவருடைய முதல் பட அனுபவங்களைப் பற்றி பேசினோம்...
இந்தப் படம் திகில் படம் என்று கூறப்படுகிறதே?
எல்லோரும் இதை ஆவிகள் சம்பந்தப்பட்ட படம் என்றுதான் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. இறந்துபோன நம் முன்னோர்களை நினைவுபடுத்திக்கொள்ளும் ஆத்மா சார்ந்த படம் இது. அவர்கள் நம் அருகில் இருந்தால் எப்படி உதவியாக இருப்பார்கள் என்பதைத்தான் இதன் கதை உணர்த்தும். இந்தப் பின்னணி யில் ஒரு கார் கம்பெனியில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா இருவருக்குமான காதலை கலந்து பொழுதுபோக்காக படம் நகரும்.
தமிழ் சினிமாவில் இப்போது திகில் படங்கள் மீது ஒரு காதல் ஏற்பட்டுள்ளதே?
நாங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டோம். அப்போது திகில் மற்றும் பேய் படங்கள் வரவே இல்லை. இன்று பல படங்கள் தொடர்ச்சியாக வருவதால் இன்றைய சூழலுக்கு பொருத்தமான படம் இது என்று சொல்லலாம். 
‘ஓம் சாந்தி ஓம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஷாருக்கான் நடித்த படம் வெளிவந்திருக்கிறதே?
இது ஆத்மாக்கள் சார்ந்த கதை என்பதால் சாந்தி என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும் என்று இந்த பெயரை வைத்தோம். மற்றபடி அந்தப் படத்தின் கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இப்படத்தின் சில காட்சிகளை கம்போடியாவில் படமாக்கியிருக்கிறீர்களே?
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான இடம். இந்திய அளவிலான படங்களில் இதுவரை யாரும் அங்கு படம்பிடித்ததாக தெரியவில்லை. உலகின் அழகான இடங்களில் அதுவும் ஒன்று என்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம்.
உங்களைப்பற்றி..?
திருச்சி அருகில்தான் என் சொந்த ஊர் இருக்கிறது. பொறியியல் படிப்பு முடித்த நான், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தேன். கதிர், சரவ ணன் சுப்பையா, செந்தில்குமார், சுப்ரமணியம் சிவா, எஸ்.ஜே. சூர்யா என்று பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளேன். நண்பர் எம்.ராஜேஷின் படங்களின் கதை விவாதங்களிலும் பங்குபெற்றுள்ளேன். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உருவான கதைதான் இது.
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் அருமைச்சந்திரனிடம் கதை சொல்வதற்கு வாய்ப்பு அமைந்த போது, எம்.ராஜேஷ்தான், இந்தக் கதையை கூறுமாறு சொன்னார். அவர் சொன்னபடியே இந்தக் கதை தயாரிப் பாளருக்கும் பிடித்துப் போனது. தயாரிப்பாளர் கட்டப்பொம்மன் உள்ளிட்ட மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் என்பதால் அவரிடம் எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்தது.

thanx - the hindu

Friday, April 19, 2013

ஊமை விழிகள் இயக்குநர் ஆர் அரவிந்தராஜ் பேட்டி

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு கம்பீரமான அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குநர் அரவிந்தராஜ். அப்போது பிரமாண்ட செலவில் 'ஊமை விழிகள்’ இயக்கியவர், இப்போது சிம்பிள் பட்ஜெட்டில் 'கவிதை’ இயக்குகிறார்.



''சினிமாவுக்கு வந்து பல வருஷமாச்சு. வயசும் 50-க்கு மேல் ஆயிடுச்சு. சினிமாவில் என்னதான் சாதிச்சோம்னு திரும்பிப் பார்த்தா, ஒண்ணுமே புலப்படலை. 'எதிர் நீச்சல்’ படத்தில் ஒரு கேரக்டர் எப்பவும் இருமிக்கிட்டே இருக்கும். ஆனா, அந்த கேரக்டர் முகத்தை பாலசந்தர் ஸ்க்ரீன்ல காட்டவே மாட்டார். ஆனா, 'இருமல் தாத்தா’னு அந்தப் பேர் மட்டும் இப்பவும் மனசுல நிலைச்சிருக்கே... அப்படி பளிச்னு மனசுல நிக்கிற மாதிரி புதுசா ஏதாவது செய்யணும்னு தோணுச்சு... அதுதான் 'கவிதை’ படம்!


பிரமாண்டமான கப்பல் காதல் 'டைட்டானிக்’. ஆனா, ஒரு சின்னப் படகில் தவிக்கும் நாயகியின் காதல் 'கவிதை’ இந்த மினி டைட்டானிக். பிப்ரவரி 14-ம் தேதி 'ஐ லவ் யூ’ சொல்ல காதலனைத் தேடி கடற்கரைக்கு வரும் காதலி சுனாமியில் சிக்கிடுறா. கடல் நீருக்குள் கவிழ்ந்திருக்கும் படகுக்குள் இருக்கும் சின்ன காற்று இடைவெளியில் மூச்சு விட்டுட்டு இருக்கா. 24 மணி நேர நிகழ்வுகள்ல அவ தப்பிக்கிறாளா, இல்லையாங்கிறதுதான் படம்.


 ரெண்டு மணி நேரம் ஓடும் படத்துல ஸ்க்ரீன் முழுக்கத் தெரிவது கடலில் சிக்கிய படகு ப்ளஸ் ஹீரோயின் மகாகீர்த்தியின் முகம் மட்டும்தான். செல்போன் உரையாடல் மூலம் பின்னணிக் குரலாக நாயகியின் அம்மா, காதலன், சுனாமி மீட்புக் குழுவினரின் குரல்கள் கேட்கும். 28 சதுர அடி தான் 'கவிதை’ படத்தின் மொத்த ஸ்க்ரீன் ஸ்பேஸும். 



பிளாக் ஸ்க்ரீன் மிக்ஸிங்னு ஒரு டெக்னிக்கைப் படத்தில் பயன்படுத்தி இருக்கோம். அதாவது, சுனாமி சீன் வரும்போது ஸ்க்ரீன் இருட்டா ஆகிரும். அப்போ சுனாமி ஏற்படுவதைத் துல்லியமான சத்தங்கள் மூலமாக மட்டுமே நீங்கள் உணரும்வகையில்  பிரமாதமா செய்திருக்கோம்!''


   
''சுவாரஸ்யமான முயற்சிதான். ஆனா, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், உங்க மகள் மகா கீர்த்தியையே ஹீரோயினா நடிக்கவெச்சது ஏன்?''   



''வழக்கமா 'நான் நடிக்க வந்தது ஒரு ஆக்சிடென்ட்’னு எல்லா நடிகைகளும் பேட்டி கொடுப்பாங்க. ஆனா, என் பொண்ணு நடிகையானது நிஜமாவே ஆக்சிடென்ட்தான்.  'கவிதை’ படத்தில் கீர்த்தி நடிக்க ஆசைப்பட்டா. ஆனா, நான் 'நோ’ சொல்லிட்டேன். அப்புறம் மஞ்சுனு ஒரு குஜராத் பெண்ணை நடிக்கவெச்சோம். முக்கால்வாசிப் படம் முடிஞ்சு, 20 லட்சத்துக்கு மேல செலவும் ஆயிடுச்சு. திடீர்னு அந்தப் பொண்ணு எஸ்கேப். கண்டுபிடிக்கவே முடியலை. மஞ்சு நடிச்ச காட்சிகளை எல்லாம் எடுத்துட்டா படமே இல்லை. புராஜெக்ட்டையே மறந்துட்டேன்.


திடீர்னு ஒரு நாள் ஞாபகம் வந்து 'கவிதை’ புராஜெக்ட்டைத் தூசு தட்டினேன். அப்போ தயாரிப்பாளர் பெஞ்சமின்தான் கீர்த்தி நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார். விஷ§வல் கம்யூனிகேஷன் படிச்ச பொண்ணு. 2012 'மிஸ் தமிழ்நாடு’ ஜெயிச்ச பொண்ணு. முக்கியமா பாதிப் படத்தில் எங்கேயும் தப்பிச்சுப் போக முடியாத பொண்ணு. இவ்ளோ தகுதிகள் இருக்கேனு கீர்த்தியையே ஹீரோயின் ஆக்கிட்டேன். அப்பா சினிமாவில் இருந்தவரே தவிர, கீர்த்திக்கு சினிமா புதுசுதான்.  



இன்னொரு விஷயம்... 'ஊமை விழிகள்’ பட யூனிட்ல லைட்பாயா வேலை பார்த்த பெஞ்சமின்தான், 'கவிதை’ படத்தின் தயாரிப்பாளர்!''



 வாசகர் கருத்து 



1. இது ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து திருடிய கதை... படத்தின் பெயர் "Burried". 



2. ஆங்கிலத்தில் வந்த "Buried" கதைதான் இது. அதில் ஈராக்கில் சிக்கிய ஒரு truck driver -இன் 24 மணி நேர போராட்டம்.

Buried - 2010
Paul is a U.S. truck driver working in Iraq. After an attack by a group of Iraqis he wakes to find he is buried alive inside a coffin. With only a lighter and a cell phone it's a race against time to escape this claustrophobic death trap. 




3. சுவாரஸ்யமான முயற்சியா .. அட பாவி... Buried படத்தோட காப்பி மாதிரி தெரியுதே...சரி சரி inspiration னு வச்சிக்கலாம்...



4. How is that Indian movie makers simply copy a story line from a foreign movie and claim that to be their creation? This story line is a copy of the movie "Buried". 


 நன்றி - விகடன்

Friday, April 12, 2013

எம் ஜி ஆர் கூப்பிட்டும் ஏன் நான் போகலை ? -உதிரிப்பூக்கள் -இயக்குநர் மகேந்திரன் பேட்டி

பிரார்த்தனையிலும் காமத்திலும்தான் ஐம்புலன்களும் ஐக்கியமாகி ஒரு புள்ளியில் குவியும்னு சொல்வாங்க. நான் அதில் படைப்புத் தொழிலான சினிமாவையும் சேர்த்துக்கிறேன்!'' - கண்களைச் சுருக்கிச் சிரிக்கிறார் மகேந்திரன். 


'முள்ளும் மலரும்’, 'உதிரிப்பூக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'ஜானி’ உட்பட 12 படங்களில் தமிழ் சினிமாவின் திசையைப் புரட்டிப்போட்ட யதார்த்த இயக்குநர் இப்போது மீண்டும் களத்தில். சத்யராஜ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருந்தவரைச் சந்தித்தோம்...



'' 'முள்ளும் மலரும்’ படம் வெளிவந்து 35 ஆண்டு களுக்குப் பிறகும் அந்தப் படம்குறித்த சிலாகிப்பும் சிலிர்ப்பும் இருக்கிறது. ஆனால், படம் உருவான காலகட்டத்தில் என்ன மாதிரியான அனுபவம் கிடைத்தது?''


''நான் சினிமா டைரக்டர் ஆகணும்னு ஊசிமுனை அளவுகூட விரும்பியது இல்லை. 'முள்ளும் மலரும்’ நாவலில் எனக்குப் பிடிச்ச சின்னச் சின்ன விஷயங்களை எடுத்து விஷ§வலுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை அமைச்சேன். எந்த சினிமாவிலும் பொதுவா படம் முழுக்கச் சண்டை போடுறவங்க, க்ளைமாக்ஸ்ல 'மன்னிச்சிடு’னு சொல்லி சமரசம் ஆகிடுவாங்க. ஆனா, 'முள்ளும் மலரும்’ படத்தில் நான் அப்படி ஒரு வழக்கமான க்ளைமாக்ஸ் வைக்கலை. காளி கொஞ்சம் மனசைச் சமாதானப்படுத்திக்குவானே தவிர, கடைசி வரை தன் இயல்பில் இருந்து மாற மாட்டான்.


 தங்கச்சி கல்யாணத்துக்குச் சம்மதிச்ச பிறகும்கூட, 'இப்பவும் எனக்கு உங்களைப் பிடிக்கலை சார்’னு சரத்பாபுகிட்ட சொல்வான். மனித சுபாவம் அப்படித்தான்.


ரொம்ப ரசிச்சு ரசிச்சு... இழைச்சு இழைச்சு அந்தப் படத்தை எடுத்தேன். ஆனா, படத்தோட டபிள் பாசிட்டிவ் பார்த்துட்டு, 'அங்கே ஒரு டயலாக்... இங்கே ஒரு டயலாக் இருக்கு. என் தலையில மண்ணை வாரிப் போட்டுட்டியே’னு தயாரிப்பாளர் வேணு செட்டியார் கன்னாபின்னானு திட்டினார். செட்டியார் பையன் என்னை அடிக்கவே வந்தார். ஆனா, படம் வெளியாகி மூணு வாரத்துக்கு அப்புறம் பிளாக்ல டிக்கெட் விக்கிற அளவுக்கு ஹிட் ஆச்சு.


 'இந்தா பிளாங்க் செக். எவ்வளவு பணம் வேணும்னாலும் எடுத்துக்கோ’னு சந்தோஷமாக் கொடுத்தார் வேணு செட்டியார். 'வேணாம்ணே... எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீங்க. அது எத்தனையோ கோடிக்குச் சமம். அதுவே எனக்குப் போதும்’னு செக்கைத் திருப்பிக் கொடுத்துட்டேன். அந்தப் படத்தில் நடிச்சதுக்குத்தான் ரஜினிக்கும் ஸ்டேட் பெஸ்ட் ஆக்டர் விருது கிடைச்சது. ரஜினிக்குக் கிடைச்ச முதல் விருது என் படம் மூலமாக் கிடைச்சதில் எனக்கு டபுள் சந்தோஷம். அந்த 'முள்ளும் மலரும்’ நினைவுகள் இன்னும் எனக்குள் சந்தோஷத்தை விதைச்சிட்டுதான் இருக்கு!''


''அப்போதைய சினிமா சூழல் பிடிக்காமல்தான் நீங்கள் படம் இயக்கியதாக முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டு இருந்தீர்கள். இப்போது தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கிறது?''


''காளி சொன்ன அதே வசனம்தான்... 'இப்பவும் எனக்குப் பிடிக்கலை சார்!’ ஆரம்ப கால தமிழ் சினிமாவையே என்னால் ஏத்துக்க முடியலை. அப்போ புராண, இதிகாசக் கதைகளையும், நாடகங்களையும் மட்டுமே படங்களா எடுத்தோம். ஆனா, இப்பவும் டிராமா வடிவத்திலேயேதான் சினிமா இருக்கு. 1955-லேயே 'பதேர் பாஞ்சாலி’ படம் எடுத்துட்டார் சத்யஜித் ரே. 

அந்தக் காலகட்டத்தில்தான் அதீத நடிப்பு, அளவில்லாத பாடல்கள் வெச்சு ஹரிதாஸ், அசோக்குமார் படங்கள் எடுத்துட்டு இருந்தோம். 'பராசக்தி’, 'மனோகரா’ படங்களில் ரசிகர்களுக்கே வாய் வலிக்கிற அளவுக்கு வசனம் பேசுவாங்க. பல படங்கள் அழுவாச்சிக் காவியங்களா இருந்தன. கட்டாயக் கல்யாணமா இருந்தாலும் சேடிஸ்ட் புருஷனா இருக்கக் கூடாது. மனைவியின் உணர்வுகளுக்கு மரியாதை தர்ற நல்ல கணவனா இருக்கணும். இதைத்தான் நான் சினிமாவிலும் எதிர்பார்க்கிறேன்!''


''ஏன் இவ்வளவு விரக்தி. அப்படி தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிக்காத அம்சம் என்ன?''


''ஏங்க... இந்தியாவுல எவ்வளவு ஊழல் நடக்குது. நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மின்வெட்டுனு நாட்டுல எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், அது எதையுமே கண்டுக் காம, காதலை மட்டுமே படமா எடுத்துத் தள்றோம். வெளிநாட்டு மக்கள் இந்திய சினிமாக்களைப் பார்த்துட்டு, 'ஒவ்வொரு நாட்டுக் கும் ஒரு பிரச்னை இருக்கு. உங்க நாட்டுல 'ஐ லவ் யூ’ சொல்றது மட்டும்தான் சார் பிரச்னையா இருக்கு’னு கேலி பேசும் அளவுக்குத்தான் தமிழ் சினிமா இருக்கு. காதல் சொல்ல மெனக்கெடுறதுதான் சினிமாவா? லாஜிக் இல்லாத ஆக்ஷனும் டூயட்டும் எங்கேயும் ரீச் ஆகாது!''


''சரி... நல்ல சினிமாவா இருக்க எது அவசியம்?''


''வழக்கமான பாதையில் இருந்து கொஞ்சம் விலகினாலே அது நல்ல சினிமாதான். நல்ல சினிமாவுக்குப் பெரிய பட்ஜெட், பெரிய ஆர்ட்டிஸ்ட் தேவை இல்லை. மனசுதான் தேவை. உதாரணம் சொல்லி விளக்கும் அளவுக்குக்கூட இங்கே சூழல் இல்லை. பல மராட்டிய, இரானிய, கொரியன் படங்கள் தென்னிந்திய ரசிகர்களின் பார்வைக்கே வர்றதில்லை. மல்டிஃப்ளெக்ஸ் தியேட்டர்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களை மட்டும்தான் திரையிடுறாங்க. டி.வி, டி.வி.டி., திரைப்பட விழாக்கள்னு எங்கேயும் அப்படியான யதார்த்த சினிமாக்களைப் பார்க்க வாய்ப்பு இல்லாத சாமான்ய ரசிகனுக்கு, நாம காட்டுவதுதான் சினிமா. 


பாட்டு, டான்ஸ், ஃபைட் இருக்கும் மசாலாப் படம் பார்த்துட்டு, இதுக்கு மேல சினிமானு ஒண்ணு கிடையாதுனு நினைப்பாங்க. இப்படி ஒரே மாதிரி படங்கள் வர்றதால, மக்கள் அதைத்தான் விரும்பிப் பார்க்கிறாங்கபோலனு ஒரு கருத்துப் பிம்பம் உருவாகும். ஆனா, உண்மை என்ன? கேரளாவுல கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபடு றாங்க. அதுக்கு மிக முக்கியக் காரணம், அங்கே தரமான இலக்கிய ரசனையின் மேல் சினிமா கட்டமைக் கப்பட்டு இருக்கு. மக்கள் மன நிலையை ஆரோக்கியமான திசை களை நோக்கி மோல்டு பண்ற கலை தான் சினிமா. சும்மா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு தியேட்டர்ல அரட்டை அரங்கம் நடத்தக் கூடாது!''


(மேலும் மேலும் மகேந்திரன் உணர்ச்சிவசப்பட்டதால்,  உரையாடலைத் திசை திருப்பினேன்...)

''எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கமான அலைவரிசை இருந்ததே?''


''அழகப்பா கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னால் நான் தமிழ் சினிமாவின் அபத்தங்களைப் புட்டுப்புட்டு வெச்சுப் பேசினேன். அப்பவே என்னைக் கவனிச்சிருக்கார் அவர். அப்புறம் சென்னைக்கு வந்து அவரோட அறிமுகமாகி, சினிமா வாய்ப்புகளில் எனக்கு பிரேக் கிடைக்காம மூணு தடவை நான் ஊருக்கே போயிரலாம்னு முடிவெடுத்தப்போ, 'வேண்டாம்’னு தடுத்து நிறுத்தியவர் அவர்தான்.

 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூணு தேசிய விருதுகள் ஜெயிச்சது. விருதுகளைப் பெற்றுக்கொள்ள டெல்லிக்குப் போனோம். அப்போ அங்கே எம்.ஜி.ஆரும் இருந்தார். அவர் கால்ல விருதைவெச்சு, 'இந்த விருதுக்கு நீங்கதான் காரணம்’னு சொன்னேன். 'குடத்துல இருக்குற விளக்கை எடுத்து வெளியேவெச்சேன். பிரகாசமா எரியுறது மகேந்திரன் சாமர்த்தியம். நான் ஏன் சினிமாவுக்கு உங்களை இழுத்துவந்தேன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களா?’னு சிரிச்சார்.


 'நாளைக்கு ராமாபுரம் தோட்டத்துக்கு வாங்க. ஒரு முக்கியமான பொறுப்பை உங்ககிட்ட ஒப்படைக்கப்போறேன்’னு சொன்னார். பெரிய பொறுப்பு எதுவும் கொடுத்துருவாரோங்கிற பயத்துல நான் போகவே இல்லை. ஒருவேளை நான் அன்னைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும், இப்போ நான் எங்கே இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியலை!''


''இப்போதைய தமிழ் சினிமாவில் உங்களை ஈர்த்திருக்கும் இயக்குநர்கள் யார்?''


''முதல் படம் நல்லா பண்ணியிருக்கார்னு ரொம்ப ஆர்வமா சிலருக்கு போன் பண்ணிப் பாராட்டுவேன். ஆனா, அறிமுக வாய்ப்பில் புதுமுகங்களை வெச்சு நல்ல படம் தருபவர், அடுத்த படத்திலேயே பெரிய ஆர்ட்டிஸ்ட், பெரிய பட்ஜெட்னு ரூட் மாறிடுறார். யாரையும் நம்ப முடியலை. உலக சினிமா டிரெண்ட் தெரிஞ்ச சின்சியர் இயக்குநர்களும் இங்கே இருக்காங்க. முதல் படத்துல திரும்பிப் பார்க்க வைத்த ஒரு இயக்குநர், அடுத்த படத்துலயும் சிந்திக்கவெச்சார். ஒரு படம் தோல்வி அடைஞ்சாலும் அலட்டிக்காமத் தன் பாணியைத் தொடர்ந்து சினிமா பண்ணிட்டு இருக்கார் இன்னொருத்தர். இப்படி ரெண்டு, மூணு இயக்குநர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே சமயம், ஒண்ணு, ரெண்டு படங்கள் மட்டும் நல்லா வர்றது தமிழ் சினிமாவுக்கு நல்லது இல்லையே!''


''உங்களுக்குப் பிறகு ரஜினிக்குள் இருக்கும் நடிகனை வேறு யாரும் கண்டுகொள்ளவே இல்லையே?''


''இன்னைக்கும் ரஜினி மகா நடிகன்தான். அதுல சந்தேகம் வேண்டாம். ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் ரஜினி இப்படித்தான் இருக்கணும், நடிக்கணும்னு முடிவுபண்ணிட்டாங்க. ஆக்ஷன் படங்களில் நடிப்பது புலி வாலைப் பிடிச்ச மாதிரி. அதை ரஜினியாலும் விட முடியலை. சாண்டில்யனின் சரித்திர நாவல் ஜலதீபம். அதன் மூன்றாவது பாகத்தில் 'என் வழி தனி வழி’னு கடல் தளபதி கன்னோஜி சொல்வான். அதைத்தான் இப்போ ரஜினி செய்துட்டு இருக் கார். அமிதாப் பச்சன் நடிப்பை ரொம்ப சுலபமா கிராஸ் பண்ற திறமையும் சக்தியும் ரஜினிக்கு இருக்கு. ஆனா, அதுக்கு அவரோட ரசிகர்கள் வழிவிடணும்!''  


''நீங்கள் இயக்கும் பட வேலைகள் எப்படிப் போய்க்கொண்டு இருக்கின்றன?''


''குடும்ப உறவுகளை மையமாவெச்சு சத்யராஜ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு படம் இயக்குகிறேன். கொடைக்கானல்தான் லொகேஷன். ரெட் ஒன் கேமராவில் ஷூட் பண்ணலாம்னு திட்டம். பழைய உற்சாகத்தை உணர்றேன்!''


நன்றி - விகடன்


 வாசகர் கருத்து 


 1. மகேந்திரனது படங்களை பார்த்திருக்கின்றேன். "லாஜிக்கும் (தர்க்கமும் என்று தமிழில் சொல்லலாம்) இல்லாத ஆக்ஷனும் டூயட்டும் ரீச் ஆகாது என்கிறார்". சரி. இவர் அப்படி ஏதாவது படமெடுத்திருக்கின்றாரா? கேள்வி கேட்டால் இல்லையென்று தானே சொல்ல வேண்டியிருக்கும்.

தமிழ் சினிமாவின் அவலங்களை பற்றி பேச எந்த தமிழ் திரைப்பட படைப்பாளிகளுக்கும் அருகதை இல்லை எனவே சொல்லவேண்டும். தனிமனித துதிபாடலின் வெளிப்பாடாகவே தமிழ் சினிமா வளர்ச்சியடைந்திருக்கின்றது. என்ன செய்வது? பார்ப்பது மந்தைகள்ளல்லவா? மீறி எவராவது வித்தியாசமாக படமெடுத்தால் திரையரங்கு பற்றி எறிந்துவிடும். அந்த அளவிற்கு சகிப்பின்மை மற்றும் அறிவின்மை.

ரஜினிகாந்தை மகா நடிகன் என்று இவர் விவரித்ததும் இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை காணாமல் போக செய்துவிட்டார்.



2. மகேந்திரன், பா இயக்குனர்கள் எல்லாரும் ஒரே டைப் தான். தாங்க தான் தமிழ் சினிமாவோட சரித்திரத்தையே மாதிட்டோம்னு சொல்வாங்க. எல்லாருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, யாதார்த்த எடுங்க இல்லேன இரானியன் சினிமா பாருங்க. ரொம்ப சிம்பிள்.




3. தமிழ் சினிமா - இப்படித்தான்

1. யாரவது படத்தோட முதல் சீன்ல சாகும் போது, சொல்ல வந்த ரகசியத்தை சொல்லாம செத்துடுவாங்க.. இதுவே கடைசி சீனா இருந்தா எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டு தான் சாவாங்க.

2. சாகும் போது கண்ணை திறந்திட்டேதான் சாவாங்க, நம்ம ஹீரோ கண் இமைகளை தடவி மூடுவார்.

3. நீங்க எல்லாம் தொண்டை கிழிய பேசி கிளாஸ் எடுத்தாலும் கடைசில இருக்கற Studentsக்கு கேக்குமான்னு சந்தேகம் தான்.. ஆனா ஹீரோ பாடறது நாலு கிலோமீட்டர் சுத்தளவுல எல்லோருக்கும் கேக்கும்.

4. ரேப் சீனை தடுக்கவரும் நம்ம ஹீரோ (படுபாவி பய ) , வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.ஆனா அந்த பொண்ணு ஹீரோயினா இருந்து அதுவே அடுத்த சீன்ல அரைகுறையா ஆடும் போது நம்மாளு கண்டுக்க மாட்டாரு..

5. கிளைமாக்ஸ் பைட்டுல நிராயுதபாணியா நிற்கிற ஹீரோவை வில்லன் குத்தவோ சுடவோ வரும் போது அவரை யாரவது பின்னாடி இருந்து குத்திடுவாங்க.. வில்லன் மெதுவா சரிய பின்னாடி யாருன்னு பார்த்தா செகன்ட் ஹீரோயினோ, கடைசியா திருந்தின வில்லியோ இருப்பாங்க.


6.ஹீரோவிடம் மாட்டிவிடும் தனது கையாளை வில்லன் குறி பார்த்து சுடுவான் ...கையால் அருகிலே ஜென்ம விரோதி ஹீரோவை சுட மாட்டான் ...

7.என்ன சோக காட்சி என்றாலும் ஹீரோயின் புல் மேக்கப்தான் ...

இன்னும் சொல்லி கொண்டே போகலாம் 


4. ஒருவேளை நான் அன்னைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும், இப்போ நான் எங்கே இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியலை!"
யூகங்கள் :
1. அரசவை இயக்குனர் பதவி
2. Film Institute Chairman
3. தமிழ்நாடு டாக்குமெண்டரி படத் தயாரிப்பு.
4. கலைமாமணி விருது குழுவின் தலைவர்.
5. டாக்டர் பட்டம்.

நல்ல வேளை, மனிதர் பிழைத்தார். 


5. நல்ல எண்ணங்கள் கொண்ட படைப்பாளி தான் கடவுள் ,அந்த வரிசையில் மகேந்திரன் ஒரு கடவுளே .தன் மக்களுக்கு நல்ல ரசனை கொண்ட எண்ணங்களை பகிர்ந்தளித்தார் .மக்கள் ரசனையை உயர்வாகவே மதிப்பிட்டார் .மகேந்திரன்,நீங்கள் தன் படைப்பாளி .இந்த சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது .


6. நல்ல இயக்குனர் தான் ஆனால் இவர் எடுத்த 12 படங்களில் 3 தானே
ஞாபகம் இருக்கிறது..மீதி? இவர் இயக்கிய மற்ற படங்கள்

ஜானி(சுமார் படம் நல்ல பாடல்கள்)
அழகிய கண்ணே
அன்புள்ள மலரே
கண்ணுக்கு மை எழுது
மெட்டி (இவர் சொதப்பிய நல்ல கதை )
நண்டு (இவர் சொதப்பிய நல்ல கதை)
ஊர் பஞ்சாயத்து
சமஸ்தானம்
கை கொடுக்கும் கை(கன்னட பட ரீமேக்)


7. இடைவெளியில் தமிழ் சினிமா வேறு பரிமாணத்திற்குப் போய் விட்டது. தொழில் நுட்பம், காட்சியமைப்பு, போன்றவை எல்லாம்...

ஆரண்ய காண்டம் போன்ற படங்களும் இதே ஊரில் தான் படமாக்கப் பட்டிருக்கின்றன என்பதையும் இவர் உணர்ந்து கொண்டால் நல்லது. கமர்சியலாக வெற்றி பெற வேண்டும் என்பது தான் இங்குள்ள நெருக்கடி.

ரசிகர்களை அதற்குத் தயார் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது.

ஹன்சிகாவையும், அஞ்சலியையும் தானே இன்னமும் அட்டைப் படத்தில் போட்டு விற்று காசு பார்க்க வேண்டியிருக்கிறது... 



8. நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மின்வெட்டுனு படம் எடுத்தா சென்ஸார் வெட்டுவான் இல்லைன்னா அம்மா வெட்டும் .
அது சரி , நீங்க அப்படி ஏதாவது படம் எடுக்காமல் குடும்ப உறவுகளை மையமாவெச்சு படம் எடுக்க காரணம் ?
ஐயா , நான் உங்கள் படங்களின் தீவிர ரசிகன். உங்கள் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறேன் .
'கை கொடுக்கும் கை' முதல் பாதி அப்படியே , உரிமைக்குரல் படம்.
'ஊர்ப் பஞ்சாயத்து' எதில் சேர்த்தி ?
'அழகிய கண்ணே' , ஓமன் படத்தின் உங்கள் பிரதிபலிப்பு.