Showing posts with label ஆர் பார்த்திபன். Show all posts
Showing posts with label ஆர் பார்த்திபன். Show all posts

Wednesday, December 26, 2012

மேஜிக் ரைட்டர் சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

(கண்டிப்பாக படிக்கவும் !!!)


1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள்,
இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி

... கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம்
அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.



2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக
இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு
கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான்
இருக்கும்.



3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப்
போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு
உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும்
குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்
செய்யாதீர்கள்.



4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல்
இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
\

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில்,
முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்
ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.



6. இந்தச்
தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு
ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத
கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.



7.
வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ்
வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக்
கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.



8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும்
உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம்
வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக
சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.



9. ஒன்பது
மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.



10. படுக்கப்
போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது
பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது
காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.



இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நன்றி - ஆர் பார்த்திபன் ஃபேஸ்புக் , அமரர் சுஜாதா ..

Sunday, February 19, 2012

அம்புலி 3டி - திக் திக் திகில் பக் பக் பகீர் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLJs3_5j4rQ6BDALEtNy4nir82fOFkmZOFoG6c5YKZL7WKxtOYsdhf9IP0mDvMGr6DbCsCe1dBnGVLUQucVWzcDzfhfE95I7BCCfbawtO_4KyX9J3bWzIkE7EusnC1m6FK28qCI2qCU4A/s1600/20x10.jpgதமிழ்ல ஏகப்பட்ட படங்கள்  ஹாலிவுட் படங்கள்ள இருந்து திருடி வந்தாலும் ,  3டி யா வந்த படம் மை டியர் குட்டிச்சாத்தான்.. 18 வருஷங்களுக்கு முன்னால நான் சின்னக்குழந்தையா இருந்தப்ப வந்த படம், அதுக்கப்புறம் அன்னை பூமின்னு கேப்டன் கேவலமான ஒரு படத்துல நடிச்சாரு.. இப்போ வந்திருக்கற இந்தப்படம் ஓரளவுக்கு நல்ல திகில் படமா , ஆர் பார்த்திபன் குணச்சித்திரமா நடிக்க பல புது முகங்களை வெச்சு எடுத்திருக்காங்க.. நல்ல முயற்சி.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அங்கே சோளக்காட்டு பொம்மை இருக்கற வயக்காடு ஏரியா.. அங்கே யாரும் போக வேணாம்.. அம்புலி அடிச்சுடும்னு ஒரு பேச்சு இருக்கு.. நம்மாளுங்க வேணாம்னு சொன்னாத்தான் வேணும்பான்,,

ஒரு லவ் ஜோடி... ஹீரோ அந்த வழியாப்போறப்ப  அவனை அம்புலி துரத்துது.. எஸ் ஆகி வந்து பகல்ல அம்புலி பற்றி விசாரிக்கறாரு..

1957 - ல  வெலிங்க்டன் காலேஜ்ல ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சில மனிதனோட ஆயுளை அதிகரிக்கும் மருந்தை கண்டு பிடிக்கறாரு.. அந்த காலத்துல எல்லாம் மனிதனோட சராசரி ஆயுள்  100 ஆண்டுகள் ( இப்போ 60 டூ 70) .ஆனா அவர் கண்டு பிடிச்ச மருந்தை சாப்பிட்டா  150 வருஷங்கள் வாழலாமாம்.. 


http://vanavilfm.com/wp-content/uploads/2011/07/ambuli-300x199.jpg

அவர் ஆராய்ச்சிக்கு சோதனை எலியா  கணவன் இல்லாத ஒரே ஒரு பையன் மட்டும் உள்ள கர்ப்பிணிப்பெண்ணை தேர்ந்தெடுக்கறாரு..மருந்தை அந்த பெண்ணுக்கு ஊசி மூலம் செலுத்தறாரு/..

ஏதோ ஒரு மிஸ்டேக்கால அந்த குழந்தை எசகு பிசகா ராட்சசன் போல பிறக்குது.. அம்மா பிரசவத்துல அவுட்.. சூரிய கிரஹணத்தன்னைக்கு பிறந்ததாலதான் அப்படி இருக்குன்னு ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க.. ( சூரியன்னாலே தமிழ் நாட்டுக்கு கிரஹனம் தான்.)

 அந்தக்குழந்தை தான் அம்புலி.. ஊர் மக்களை அடிச்சு சாப்பிடுது.. நைட் டைம்ல மட்டும்  அதனால பேய்னு மக்கள் நினைக்கறாங்க.. ஆர் பார்த்திபன் தான் அந்த அம்புலியோட அண்ணன்.. 

2 லவ் ஜோடிகள் எப்படி அந்த அம்புலி கிட்டே இருந்து தப்பிக்கறாங்க .. அம்புலியை யார் போட்டுத்தள்ளுனாங்க என்பது க்ளைமாக்ஸ்,.. 

படம் போட்டு முதல் 20 நிமிஷம் ஒண்ணும் புரியலை.. படம் ஊத்திக்கிச்சோன்னு நினைக்கறப்ப 20 நிமிசத்துக்குப்பின் தான் கதை ஸ்டார்ட் ஆகுது.. 

அம்புலியின் அம்மாவாக வருபவர் உமா ரியாஸ்.. கர்ப்பிணிப்பெண்னாக  ஒரு படத்துல நடிச்சாலும் நடிச்சார், எல்லா படமும் அதே ரோல் தான் இனி தருவாங்க போல பாவம்.. ஆனா நல்ல நடிப்பு.. 

ஆர் பார்த்திபன் மொத்தமே 6 சீன்ல தான் வர்றார்.. நடிக்கவெல்லாம் வாய்ப்பு இல்லை.. 

அஜய், ஸ்ரீஜித், சனம் , திவ்யா நாகேஷ் இவங்க தான் படம் பூரா வர்ற காதல் ஜோடி.. குறை சொல்ல முடியாத நடிப்பு.. கதை நடக்கறது  1978 -1979 கால கட்டம் என்பதால் அதே கால கட்ட உடை நடை பாவனைகள், நடனம் எல்லாம் ஓக்கே.. 

http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/big/13476B_amb08.jpg

இயக்குநர்கள் (2 பேர்) பாராட்டு பெறும் இடங்கள்

1. திரைக்கதையில் தொய்வில்லாமல் செம விறு விறுப்பாக கதையை நகர்த்திய விதம்.. 

2. பெரிய நடிகர்கள் யாரையும் நம்பாமல் கதையின் மீதும் , இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெரும்பாலும் புது முகங்களை வைத்தே எடுத்தது.. 

3. திருட்டு டி வி டி யை தடுக்க 3 டி யில் படம் எடுத்தது. ( ஒரே கல்லுல 2 மாங்கா.. பர பரப்புக்கு பரபரப்பு.. காசுக்கு காசு)

4. தமிழில் அம்புலி என்றால் நிலா என்ற அர்த்தத்தை மாற்றி யோசித்தது..

5. சந்திர முகி படத்துக்குப்பிறகு ரசிக்கும்படியான ஒரு திகில் படத்தை கொடுத்தது.. 


http://www.mysixer.com/wp-content/gallery/ambuli-first-3d-movie-in-tamil-gallery/jothsha-sanam-setty.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய இடங்கள் +  லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  நான் கடவுள் வில்லன் ஆண்டவன் தன் 8 வயசு சிறுமியுடன் காட்டுவழியில் நடக்கும்போது அதுவும் இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்க அவர் மகளிடம் நீ இங்கேயே இரு என்று அவரை அம்போ என விட்டுட்டு தனியா போறார்.. அம்புலி அவர் மகளை கொன்னுடுது.. எந்த அப்பாவாவது அப்படி செய்வாங்களா?

2.  எல்லா காலேஜிலும் லீவ் 2 மாசம் தான்.. அதிக பட்சம் ரெண்டரை மாதம்.. ஆனால் படத்தில் ஹீரோ படிக்கும் காலேஜில் 4 மாசம் லீவ் அவ்வ்வ்வ்

3.  சோளக்காட்டு வழியா போனா ஆபத்துனு ஊர் எச்சரிச்சும் அது எப்படி சொல்லி வெச்ச மாதிரி எல்லா பக்கிகளும் முறை வெச்சு போய் மாட்டிக்கறாங்க..?

4. மிட் நைட்ல காதலியை யாருக்கும் தெரியாம ரகசியமா சந்திக்க வர்ற காதலன் சத்தம் இல்லாம வந்த வேலையை பார்த்துட்டு போவானா? புல்லாங்குழல் எல்லாம் ஊதிட்டு காட்டிக்கொடுப்பானா? ( கமுக்கமா இருக்க வேணாமா கணேசா? )

5.  தன் குழந்தை அசுரனா, அவலட்சணமா பிறந்தா ஒரு அம்மாவுக்கு 2 வழி இருக்கு 1. எங்காவது அநாதை ஆசிரமத்துல விடுவது.அல்லது பிறந்த இடத்துலயே விட்டுட்டு நைஸா ஓடி வந்துடறது  2.. அந்த குழந்தையை கொலை செய்து விடுவது.. இதெல்லாம் செய்யாம யாராவது தூக்கு போட்டு சாவாங்களா? தான் செத்துட்டா தன் 8 வயசு பையன் அநாதையா மாறிடுவானே?ன்னு நினைக்க மாட்டாங்களா?

6. ஆர் பார்த்திபன் நினைச்சா தன் தம்பியை சின்ன வயசுலயே கொலை செஞ்சிருக்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு பெரிய ராட்சசனா வளர்ந்து ஊர் மக்களை எல்லாம் அடிச்சு உலையில் போடறதை வேடிக்கை பார்த்துட்டு, க்ளை மாக்ஸ்ல ஏன் கொலை செய்ய பார்க்கறார்?

7. அந்த கிராமத்துல அத்தனை பேர்  அநியாயமா செத்தும் போலீஸ் ஏன் எட்டிப்பார்க்கலை? ஹீரோ போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செஞ்சும் போலீஸ் ஃபோட்டோ ஆதாரம் கேக்குதே ஏன்?

8. காதலை சொல்லி ஒரு நாள் கூட ஆகலை, அதனால நோ கிஸ் அப்டினு ஹீரோயின் பாப்பா சொல்லுது.. ஆனா அதை தொடர்ந்து வர்ற பாட்டில் மெயின் மேட்டர் தவிர எல்லா வேலயையும் ஹீரோ செஞ்சுடறார் எப்டி?

9. ஹீரோ சோளக்காட்டு வழில போறப்ப சைக்கிள விட்டுட்டு ஓடி போறாரு
.. அப்புறம் வேற ஒரு ஃபிரண்டை கூட்டிட்டு அதே இடத்துக்கு பயந்து பயந்து ஏன் வரனும்? காலைல வந்துடக்கூடாதா?

10. கதை 1978 -80 ல நடக்குது.. அடிக்கடி சொதப்பிட்ட என்ற வசனம் வருது.. அந்த வார்த்தை புழக்கத்தில் வந்ததே 2006ல தான் ( வசனத்தில் சொதப்பியது எப்படி?)
http://www.virakesari.lk/cinema/cine-news-img/ambuli/ambuli-_32_.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்

 1.  காதல்ங்கறது....

டேய் ரோமியோ.. போதும்டா அடக்கி வாசி.. 

2. நான் ஊருக்குள்ள வர்றதை வேட்டு வெச்சு கொண்டாடறாங்க போல.. 

நாய், நரிக்கு கூட அப்படித்தான் செய்யறாங்க.. 

3.  டியர்.. என் ரூமை எப்படி கண்டு பிடிச்சீங்க?

ரோமியோ ஜூலியட் காலத்துல இருந்தே ஹீரோயின் ரூம் மாடில தானே?

4. எதுக்காகடா இங்கே வந்தீங்க?

 சும்மா உங்களை எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.. 

நான் என்ன உங்க அத்தை பொண்னா?

5. நான் பூங்காவனத்தோட க்ளோஸ் ஃபிரண்டுங்க..

என்னை விட க்ளோஸா?

6.  டேய்.. வாடா அம்புலியோட அண்ணன் வாரான், போய் ஒளிஞ்சுக்கலாம்.. 

அந்த கட்டிலுக்கு அடில பாம்பு வளர்த்தறேன், பார்த்து கடிச்சுடப்போகுது.. 

7. ஊருக்கே ஊது பத்தி விக்கறவங்க நாங்க,எங்களுக்கே தூபமா?

8. உன் ஸ்கூட்டரை குடு..

ம்ஹூம்

 ம், பெரிய கர்ணனோட கசின் பிரதர்...

9.. டியர்.. நான் எதுக்கு வந்தேன்னு சொல்லு பார்க்கலாம்.. 

 என் கிட்டே உதை வாங்கவா?

10.  மான் கறி சாப்பிடறீங்களா?

அய்யய்யோ நான் சைவம்.. 

மான் கூட சைவம் தான்

11. டியர்,, நீ அங்கே போகாதே அது இனிஷியல் ஸ்டேஜ்ல லவ் பண்றவங்க போக வேண்டிய இடம்.. நாம இங்கே போவொம் ஹி ஹி ஹி 

12. கடவுளை நாம அணுக காரணமே  அவர் மேல எந்த தப்பும் இல்லாம இருக்கறதால தான்.. 


http://cinema.natpu.in/wp-content/gallery/ambuli/29_full.JPG


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சந்திரமுகி, காஞ்சனா மாதிரி திகில் பட ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.. குழந்தைகளும் பார்க்கலாம்.. 

ஈரோடு ஸ்ரீசண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - 1 - 3டி கண்ணாடியை போட்டு படம் பார்க்கரது செம ஜாலி.. வலது கண்ணை மூடி பார்த்தா எல்லாம் பச்சையாவும் , இடது கண்ணை மூடிப்பார்த்தா எல்லாம் சிவப்பாவும் தெரியுது.. அதுல ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம்.. தியேட்டர்ல எல்லாரையும் கண்ணாடியோட பார்க்க செம காமெடி.. 

டிஸ்கி 2 - படம் விட்டு போறப்ப நைஸா அந்த கண்ணாடியை சுடலாம்னு பலர் ஐடியா பண்னாங்க. ஆனா தியேட்டர் வாசல்ல நின்னு கவனமா கலெக்ட் பண்ணிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 3 - படம் போட்டு டைட்டில்ல எழுத்து ஓடுனப்ப எனக்கு எழுத்தே தெரியல.. பக்கத்துல ஒரு லவ் ஜோடி உக்காந்திருந்தது./. உங்களுக்கு தெரியுதா ஏதாவதுன்னேன்.. சாரி நாங்க படம் பார்க்க வர்லைன்னாங்க.. அடங்கோ.. 

டிஸ்கி 4 - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர் நான் இந்தப்பட டைரக்டரா இருந்தா அந்த அம்புலி கேரக்டரை பெண் கேரக்டர் ஆக்கி ஸ்பீசஸ் 2 படத்துல வர்ற மாதிரி அம்புலி அந்த வழியா வர்ற ஆண்களை ரேப் பண்ணி கொலை பண்ற மாதிரி காட்டி இருப்பேன் கில்மாக்கு கில்மா, சுவராஸ்யத்துக்கு சுவராஸ்யம்  ஹி ஹி

http://mmimages.mmnews.in/gallery/2012/Feb/2053_L_galvpf.gif

Saturday, November 19, 2011

வித்தகன் - எள்ளல் நிறைந்த ஆர் பார்த்திபன் வசனங்கள் - காமெடி கலாட்டா

வித்தகன் படத்துல குண்டக்க மண்டக்க பார்த்திபன்  பேசும் காமெடி டயலாக்ஸ்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4erdS3XxxvyLpkt-1ek50B8C1EpzM3ybYI74taM8T8ofa00LJ77dl8VhWseyWjDEVLo37pOC5W6C_BIR_TIpZPCxnAQ-uNmW_T4MMpKKm3uilnhjcEqukCQT-kFNYedVFq4-0wQ2crSw/s1600/Poorna+Aadu+puli+Actress+Hot+Stills+%25281%2529.jpg

1. சார்... கொலைகாரனை கண்டு பிடிச்சிடுவீங்களா? சார்?

ஹலோ, அரை மணி நேரமா தேடிட்டு இருக்கீங்களே, உங்க பேனா அதை கண்டு பிடிங்க முதல்ல..ஒரு நிருபருக்கு பேனா தான் முக்கியம்.. 

-------------------------------

2.  யோவ். டெபுடி கமிஷனர் சொன்னா ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் கேட்கனும்..

ஓக்கே, சொல்லுங்க சார் கேட்கறேன்.. 

நீ அரெஸ்ட் பண்ணி இருக்கறது நம்ம ஆளுய்யா..

அப்டின்னா நாம ரவுடியா? அவன் போலீஸா?

---------------------------------------------

3. என்னய்யா பண்றே?

உங்க சேர் ஆட்டம் அதிகமா இருந்துச்சு சார்.. 

ஓஹோ.. ஆப்பு வைக்கறியா?

---------------------------------------------------

4. அவன் ஒரு அநாதை சார். 

அநாதைன்னா எனக்கு உசுரு.. அவன் உசுர நான் எடுத்துடறேன்..

---------------------------------------------

5. வில்லன் - ஏ சின்னா கூலா இருக்கனும்.. சார்..

ஆனா நான் கூழைகும்பிடு போட்டு பழக்கம் இல்ல சார்.. 

----------------------------------

6. வில்லன் - ஏ சி ! எழுதி வெச்சுக்குங்க.. 

ஆங் . பேப்பர் எடுத்துக்கறேன் இருங்க.. ம் இப்போ சொல்லுங்க சார்,. எழுதி வெச்சுக்கறேன்..

நான் சொல்ல மாட்டேன் 
அப்புறம் நான் எப்படி எழுத?

----------------------------------------
7. விளையாட்ல கூட போலீஸ் தோற்கக்கூடாது.. விளையாட்டுக்குக்கூட திருடன் ஜெயிச்சுடக்கூடாது.. 

-----------------------------------

8. சும்மாவே நீங்க தண்ணி காட்டுவீங்க.. ஆளை பிடிச்சுட்டா சுண்ணாம்பு தடவி அனுப்பிட மாட்டீங்க?

-------------------------------------

9. வாட் டூ யூ மீன்? 

மீனோ , கருவாடோ  நம்ம 3 பேருக்கும் 3 பங்குன்னு சொல்றேன் சார்.. 

--------------------------------

10. ஹலோ மிஸ்.. கைல மருதாணீ வெச்சிருக்கீங்களா?

நோ. ஏன் கேட்கறீங்க?

அப்புறம் ஏன் சும்மா நிக்கறீங்க? கை தட்டலாமே?

--------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_EvfXYx4Jhsx-VO8_G1JONFGVz1CjISCLDb8FGzBcnmK7lvbwiOxOTbe-xsXRLSgsa5RLPDmJRBZGemU5hx-6f2HPb2XVzg_jo9soZdrLyOHWrn0XdH22RGAghfg7BQD3xOSafsZ1JLWC/s1600/poorna-hot-navel-stills-04.jpg

11. என் சபைல பாவிகளுக்கு மன்னிப்பே இல்லை.. ஒன்லி தண்டனைதான்

--------------------------

12.  மிஸ்.. ஏன் என்னையே சுத்தி சுத்தி வர்றீங்க?

ரவுத்ரனோட பழகுன்னு சொன்னாங்க. 

அது ரவுத்ரம் பழகு.. ஹய்யோ அய்யோ.. 

----------------------------------------------

13.  உங்களூக்கு ஸ்விம்மிங்க் தெரியுமா?

அதுக்கு ஸ்பெல்லிங்க் மட்டும் தெரியும்.. 

நீச்சல் தெரியாததால் இளம்பெண்  பலி -ன்னு நியூஸ் வரப்போகுது.. 

------------------------------------------

14. உங்களைப்போய் நான் எப்படி அடிக்கறது ?

போய் அடிக்க முடியாது, வந்து தான் அடிக்கனும்.. 

-------------------------------------

15. நேத்து ஒரு ஜிலேபி செத்துப்போச்சு

எப்டி?

அதை தூக்குல போட்டுக்குடுத்துட்டாங்க.. 

-------------------------------------

16.  ஹலோ..

ஹலோ சொல்லுங்க சேனா தான் பேசறேன்..

ஃபோனை சேனா கிட்டே குடு..

சபாஷ்.. எப்டி பேசுனது சோனா இல்லைனு கண்டு பிடிச்சே?

இப்போ நீ தான் சொன்னே.. இதுக்குப்பேர் தான் போட்டு வாங்கறது..

----------------------------------------------

17.  இப்போ நெம்பர் ஒன் இடத்துல இருக்கற பத்ரியை நீ போட்டுடு.. அப்புறம் சேனாவான நான் நெம்பர் டூ ப்ளேஸ்ல இருந்து நெம்பர் ஒன் ப்ளேஸ் போயிடுவேன்.. நீ என் ப்ளேஸ் வந்துடலாம்.. எப்பூடி?

எதுக்கு சுத்தி வளைக்கனும்? டைரக்ட்டா நானே அந்த இடம் வந்துடறேனே?

--------------------------------------

18.  ஹீரோயின்.. - ஹலோ 2 இளநி ... ( ஆர்டரிங்க்)

ஹீரோ - ஹலோ அந்த இளநி கட் பண்ணு ( கேன்சல்)

சார்.. இளநின்னா கட் பண்ணி தான் தருவோம்.. 

-----------------------------

19.  எதுக்கு இப்போ அழறே.. அழுது முடிச்ச பின் போ நான் கிளம்பறேன்

அழுகையே நிக்கலையே எப்டி போறது?

ஓரமா உக்காந்து அழுதுட்டு அப்புறம் போ ( சோபாவுல உன் அழுகையை உக்கார வெச்சுட்டு போ - சி. பி )
---------------------------------------

20.  அடடா.. கிஸ் பண்ணி கிட்டே போறப்ப வந்துட்டானே.. உன் பேர் என்ன கரடியா?

 இல்லைங்க , சிங்க முத்து 

நல்ல பேரு.. 

------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbt4ju_SnQcfLspyfBGps7XWSmROZr9Tj9y4MdqoD4SxeniW1xa-NPh_RjeZEZ5NxFEe4VlyVSUmiHYg_fIHcT2gGiTI3_1wLwqIoEQWZE6K-Pocvlh2RQJYgtZPlrQ8SUrge8AaHGBW8Z/s1600/poorna-hot-navel-stills-02.jpg

21.  ஹீரோயின் - 2 விரல்ல ஒண்ணை தொடுங்க.. 

ஹீரோ - ஏய்.. எதுக்கு 3 விரலை நீட்றே.. சரி ஒண்ணை தொடறேன் 

அய்யய்யோ.. மேரேஜ்க்கு பிறகு  தொட வேண்டியதை இப்போவே தொட்டுட்டீங்க.. 

-------------------------------------

22. சரி சரி கிளம்பு.. எப்போ பாரு எதாவது மர்டர் பண்ணிக்கிட்டு.. இங்கே எல்லாம் நீ வரக்கூடாது.. 

--------------------------------

23.  தோசையைக்கூட 3வது பக்கம் திருப்பி போடறவன் அந்த ஏசி 

-------------------------------

24. என் பலமே உன் பலத்தை பற்றி தெரிஞ்சிக்கிட்டதுதான்

--------------------------------

25.  நான் ஒரு குட்டி காம்பஸ்.. நீங்க வோர்ல்ட் மேப்.. நீங்க சொல்லுங்க , நான் கேட்டுக்கறேன்./. 

----------------------------------

26.  தம்பி.. நீ ஹீரோ.. ஒரே ஒரு ஃபிளஸ்பேக் வெச்சுக்கிட்டு அலப்பறை பண்ணாதே.. நான் வில்லன்.. ஏகப்பட்ட கொலைகள் செஞ்சவன்.. 

---------------------------------

27. நாங்க எல்லாம் சைலண்ட்டா வயலண்ட்டா இருக்கறவங்க.. 

------------------------------

28. விருந்தாளிக்குப்பிறந்தவங்க விருந்துக்கு வர்றவங்களை துரத்தக்கூடாதும்மா..

----------------------------

29. சார்.. அவன் கிட்டே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கீங்க.. அவன் ஏற்கனவே செத்துட்டான்.. 

---------------------------------------

30.  இப்போ உங்களை ஃபோன்ல பத்ரி கூப்பிடுவான் பாருங்க..
அது எப்படி உனக்கு தெரியும்? 

நாந்தான் கதை வசனம் டைரக்‌ஷன் எல்லாம்.. எனக்கு தெரியாதா?

------------------------------------

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/05/poorna-hot-stills12.jpg

31.  வில்லன் - என்னை இங்கே அடைச்சு வெச்சிருக்கியே.. எப்போ ரிலீஸ் பண்ணுவே?

 நீங்க என்ன புதுப்பட சி டியா? ரிலீஸ் பண்ண. 

--------------------------------

32. சார்.. உங்களை ரிலீச் பண்ணியாச்சு.. ஓடிப்போங்க இங்கே இருந்து.. 


சார்.. நான் தெரியாமத்தான் கேக்கறேன்..

அதானே தெரிஞ்சா அப்புறம் எதுக்கு கேட்கறீங்க?

---------------------------------

33.  ரொம்ப தாங்க்ஸ்..

எனக்கு தாங்க்ஸ் சொன்னா பிடிக்காது.. ஆனா அவருக்கு பிடிக்கும்.. இன்னொருக்கா அவர் கிட்டே தாங்க்ஸ் சொல்லிட்டு ஓடிப்போயிடு.. 

-------------------------------------

34.  1000 புழுக்களை ஒரு தொட்டில போட்டா அது ஒண்ணை ஒண்ணு சாப்பிட்டு கடைசில ஒரே ஒரு புழுதான் மிச்சம் இருக்குமாம்.. அந்த மாதிரி ரவுடிங்களை எல்லாம் மோத விட்டா இப்படி அடிச்சுக்கிட்டு சாவானுங்க.. 

---------------------------------------

35. உனக்குத்தெரியாத விஷயமே கிடையாதா?

ம் ம் என்னோட மரணம்.. 

-----------------------------------------

36. வில்லனின் அடியாள் - நம்ம பாஸ் கூட இருக்கறவனையே வரிசையாப்போட்டுத்தள்ளறாரே  தவிர ஹீரோவை கை வெக்க முடியலையே.. 

-----------------------------------

37.  அவர் ஏன் அங்கே விழுந்து கிடக்கறார்.?

யூரின் பாஸ் பண்றேன்னு போனார்.. லைஃப்ல ஃபெயில் ஆகிட்டார் போல.. ஹி ஹி நான் தான் போட்டுத்தள்ளிட்டேன்..

-----------------------------------------

38.  பில் கிளிண்ட்டனே என் கூட சாப்பிட வந்தாலும் நான் தான் பில்லை குடுப்பேன்.. 

இல்லை நான் தான் குடுப்பேன்..

அதெல்லாம் முடியாது நாந்தான் பில்லை குடுப்பேன்.. நீ பணத்தை குடு ஹி ஹி 

----------------------------------

39.  அவனை தள்ளிட்டுப்போ.. 

என்ன முறைக்கறே, என் பொண்டாட்டியை மட்டும் தள்ளிட்டுப்போனியே.. 

----------------------------------

40.  அய்யா.. நான் ஒண்ணு சொல்ரேன் கோவிக்காதீங்க.. வேட்டி கட்டுனா  அண்டர்டிராயர் போடனும், அட்லீஸ்ட் கோவணமாவது கட்டனும்..

யோவ், செத்த கிளிக்கு எதுக்குய்யா சிங்காரம்?

-----------------------------------------------

http://media.onsugar.com/files/2011/05/20/2/1667/16672856/22/poorna6_001.jpg

 டிஸ்கி - ஆர் பார்த்திபனின் வசன பதிவுக்கு சம்பந்தமே இல்லாம எதுக்கு ஹீரோயின் ஃபோட்டோ? அப்டிஒனு யாரும் விசனமா கேட்காதீங்க.. சிம்மா கண்ணுக்கு குளுமை.. ஹி ஹி

டிஸ்கி 2 -

1911 - அட்டர் ஃபிளாப் ஆன ஜாக்கிசானின் 100வது படம் - சினிமா விமர்சனம்

 

வித்தகன் - வின்னர் - சினிமா விமர்சனம்