Showing posts with label ஆரோகணம். Show all posts
Showing posts with label ஆரோகணம். Show all posts

Wednesday, December 26, 2012

ஆரோகணம் - நடிகை விஜி பேட்டி

நடிகை விஜி பேட்டி

சின்னத்திரையும் சினிமாவும் ஒண்ணுதான்!

விஜய் கோபால்

ஆரோகணம்படம் மூலம் நல்ல நடிகை என பெயர் பெற்றுவிட்டார். இந்த சந்தோஷம் எப்படி இருக்கு என்றோம்.
நான் கடைசியா நடிச்சதுஅண்ணா மலைதொடர். அது முடிந்ததும் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஒரு தாயாக என் மகள்கள் சுரக்ஷா, லவ்லின் இருவரையும் கவனிக்க வேண்டும். கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும் என்பதிலேயே கவனம் இருந்தது. அவர்களோட படிப்பு எனக்கு முக்கியம். இப்போ இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்து போகும்வரை தங்களைப் பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால்தான்அழகிதொடரில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இயக்குனர் வி.சி.ரவி என்னிடம் வந்து கதை சொன்னபோது, இரவு 10.30 மணிக்கு வரும் சீரியலா? மக்களிடம் போய் சேருமா? என யோசித்தேன்.
நல்ல கதை. நிச்சயம் ரசிப்பார்கள் என்றார்இயக்குனர். குழப்பத்தோடு அக்கா சரிதாவிடம் போய்க் கேட்டேன்.
உனக்கு ஏத்த கதை. தைரியமா பண்ணுன்னு சொன்னா. கணவர், மகள் எல்லோரும் உற்சாகப்படுத்தினாங்க. இப்போது இந்தத் தொடர் பார்த்துட்டுப் பக்கத்து வீட்டு குடும்பத்தை ஜன்னல் திறந்து பார்ப்பதுபோல இருக்கு என பாராட்டுகிறார்கள்.
ஒரு தடவை நீலகிரி போயிருந்தேன். அந்த ஊரில் மக்கள் இரவு 8.30 மணிக்கே தூங்கிடுவாங்களாம். அழகி தொடர் பார்க்க இரவு 10.30 க்கு அலாரம் வைத்து, எழுந்து பார்க்கிறோம் என்றார்கள். சிங்கப்பூர், மலேசியா, என வெளிநாடுகளில் இருந்து பாராட்டு. நல்ல வேளை மிஸ் பண்ண இருந்தேன்.

அழகிசீரியல் பார்த்துட்டு தான் லட்சுமி ராமகிருஷ்ணன்ஆரோகணம்படத்துக்கு தேர்வு செய்தாரா?
சூர்யாவின்நந்தா’, பரத்தின்எம்மகன்போன்ற படங்களுக்கு அழைப்புகள் வந்தன. அப்பவும் குழந்தைகளுக்காக நடிக்கலே. ஒரு பங்ஷன்லே லட்சுமி ராமகிருஷ்ணன் என்னைப் பார்த்தாங்க. படத்திலே நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. கதை என்னன்னு கேட்டேன். ஸ்கிரிப்ட் கொடுத்து விட்டாங்க. ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.
இப்பவும் அக்கா சரிதாகிட்டே போய் ஒபினியன் கேட்டேன். இது ரீச் ஆகும் நடின்னு சொன்னாங்க. உடனே .கே. சொன்னேன். கோயம்பேடு, மைலாப்பூர் என பல பகுதிகளில் 20 நாட்கள் படமாக்கினார்கள். கோயம்பேடு பகுதியில் படமாக்கியபோது பல பெண்கள்அழகிசீரியல் நடிப்பைப் பாராட்டினாங்க."
சினிமாவில் இருந்து நடிகைகள் சின்னத் திரைக்கும் வருவாங்க. நீங்கள் சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு போகிறீர்கள்?
நல்ல கதை எங்கிருந்தாலும் அதை தேடி பயணிப்பதில் தப்பு இல்லை. சின்னத்திரை, சினிமா இரண்டுமே ஒன்றுதான். கதைதான் பேசவேண்டும்."


நன்றி - கல்கி , புலவர் தருமி 

Friday, October 26, 2012

ஆரோகணம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtlkTxJ1iFmgoiSECtbk5ghCcxge-zbG74omb9KFzCWKwGOcM3n2kGI-KQqX0CoM-e8I2Gilrz8cdcqkzwx-puwvOiQTEM1aQcEU0j7k1qMzGbjq5TfPlQK0R97aRrIXPu9tBOeIgXM-U/s1600/Aarohanam.jpg

எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க்லயே ஒரு ஆக்சிடெண்ட். விபத்துக்கு காரணமானவங்க மேல் தட்டு வர்க்கத்தை சார்ந்த ஃபீமேல் தட்டு சர்ப்பங்கள்.. ஐ மீன் 2 ஹை கிளாஸ் லேடீஸ். விபத்துக்குள்ளானது  ஒரு சாதாரண லேடி.. 


அந்த லேடி மேரேஜ் ஆகி 2 குழந்தைகள் இருக்கு.. தேர்தல் வர்ற நேரத்துல எல்லாம் எப்படி கலைஞருக்கு ஈழத்தமிழர் நினைவு வருதோ அப்படி  இக்கட்டான டைம்ல  எல்லாம் அந்த லேடிக்கு பயங்கர கோபம் வருது.. என்ன கோளாறுன்னா . ஒரு வித மன நோய் .அதாவது சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் தனுஷ்க்கு மயக்கம் என்ன, 3 ஆகிய படங்களில் வருமே அந்த மாதிரி பை போலார் டிஸ் ஆர்டர் வியாதி,.,

புருஷன் காரன் சரி இல்லை.. பொதுவாவே  ஆம்பளைங்க அக்கம் பக்கம் பாரடா சின்ன  வீடுடா, ஆகாசப்பார்வை என்ன?ஜொள்ளு ராசா அப்டிங்கற மனோபவம் உள்ளவங்க என்ற மனோ பாவம் உள்ள அவ புருஷன் அவளை அம்போன்னு விட்டுட்டு வேற ஒரு லேடி பின்னால போயிடறான், எலக்‌ஷன் முடிஞ்சதும் கேப்டனுக்கு ஜெ டாட்டா காட்டின  மாதிரி.. ,


அவ தனியா 2 பேரையும் வளர்த்தறா.ஒரு பொண்ணு, ஒரு பையன், பொண்ணுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு . இந்த மாதிரி ஒரு சூழல்ல தான் இந்த விபத்து நடக்குது, என்ன ஆகுது? என்பதே மிச்ச கதை.. 




அபலைப்பெண்ணா, மனநோய் பிடித்த பெண்ணா வர்ற விஜி நடிப்பு ஓக்கே. அவர் நெத்தில இருக்கற எட்டணா சைஸ் குங்குமத்துக்கு சமமா அவர் கண்கள்  அடேங்கப்பா.. சாமி வந்த மாதிரி ஆடும்போதும், திடீர் திடீர்னு  முறைக்கும்போதும் அப்ளாஸ் வாங்குகிறார்.அழகி சீரியல் ரொம்பவே யூஸ் ஆகி இருக்கு போல..



அவரது பொண்ணா வரும் ஃபிகர்  யார்னு சரியா தெரியல , பேரு ஜெயகுஹோனினு நினைக்கறேன். சிக்குன்னு இருக்கு பாப்பா.. மிக கண்ணியமான ஆடை வடிவமைப்பால், கவுரவமான தோற்றத்தால் மனம் கவர்கிறார்.



அழகிரி மாதிரி கெட்டப்ல வரும் ஜெயப்ரகாஷ் தேவை இல்லாத கேரக்டர், அதே போல் சம்பத். உமா பத்மநாபன் பியூட்டி பார்லர்க்கு 2 டைம் அட்டர் டைம்ல போய்ட்டு வந்த மாதிரி ஓவர் மேக்கப், ஆனாலும் ரசிக்க வைக்கிறார், அவர் கூட வரும்  லேடி கி கி கி


http://www.tamilnow.com/movies/gallery/aarohanam/tamil-movie-aarohanam-332.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஏய், டிரைவர் வெச்சுக்கலையா? 


நோ, பிரைவேசி போயிடும் 



2. அண்ணே, பார்ட்டிக்கு லேட் ஆகுது


 அந்த பார்ட்டியை  விடுடா, இந்த பார்ட்டியை பாரு



3. இந்தக்காலத்துல பொண்டாட்டி நல்லா இருக்கும்போதே  தொடுப்பு வெச்சுக்கறானுங்க, இவ இப்படி இருக்கா.. நான் வேற ஒரு பொண்ணு கூட போனா என்ன தப்பு?


http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-aarohanam-movie-audio-launch/images/tamil-movies-aarohanam-movie-audio-launch01.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. தமிழ் சினிமான்னா மினிமம்  2 மணி நேரமாவது ஓடற மாதிரி நீளம் வேணும் , இல்லைன்னா தமிழனுக்கு குடுத்த காசு வேஸ்ட்டோன்னு எண்ணம் வந்துடும், இருந்தாலும்  30 நிமிஷத்துல சொல்ல வேண்டிய கதையை சுவராஸ்யமாய் ஒன்றரை மணி நேரம் இழுத்து சொன்னது.



2. கே பாலச்சந்தர் மூலம் பப்ளிசிட்டிக்காகவோ, நிஜமாகவோ ஒரு பாராட்டை வாங்கி அதை விளம்பரம் பண்ணியது 



3. ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன், வேலை வாங்கிய விதம் , வெரி லோ பட்ஜெட் ( ஜஸ்ட் 34,55,500 தானாம்)  எல்லாம் அபாரம், திரைக்கதை அமைத்த விதம்  அழகு.


http://www.cinemahour.com/gallery/events1/audioreleases/Aarohanam%20Movie%20Audio%20Launch/5684599Aarohanam_Movie_Audio_Launch-(7).jpg

திரைக்கதையில் சில ஆலோசனைகள்



1. படத்துல முதல் ரீல்லயே அந்த லேடி உமா கிட்டே இங்க்லிபீஸ்ல பேசிட்டே இருக்கு, அது எப்படி சாமான்ய ஜனங்களுக்கு புரியும்? அட்லீஸ்ட் திரையிலாவது தமிழ்  மொழிபெயர்ப்பை ஓட விட்டிருக்கலாம், ஒரு லைன், 2 லைன்னா பரவாயில்லை, கிட்டத்தட்ட  ஏ 4 ஷீட்ல ஒன்றரை பக்கம் பேசுது


2. ஜெயப்ரகாஷ்க்கு இங்க்லீஷ் தெரியாது ஓக்கே, ஆனா இங்க்லீஷ் தெரிஞ்ச ஒரு பி ஏ வைக்கூடவா கூட வெச்சுக்க மாட்டார்? ஒரு எம் எல் ஏ வேற அவரு.. அந்த காமெடி எடுபடலை




3. நோயால் பாதிக்கப்பட்ட ஹீரோயின் ஹாஸ்பிடல் உள்ளே.. பையனும், பொண்ணும்  டாக்டர் எதிரே. சைக்கிள் கேப்ல டாக்டர் எதுக்கு  ஆறுதல் சொல்ற மாதிரி அந்த பொண்ணு தோள்ல தட்டிக்குடுக்கறாரு? பயப்பட ஒண்ணும் இல்லைன்னு வெறும் வசனமா சொன்னா போதாதா? அவர் ஃபேமிலி டாக்டரும் இல்லை, அடிக்கடி பார்த்து பழக்கம் ஆன டாக்டரும் இல்லை


4. ஓப்பனிங்க் சீன்ல 45 கிமீ வேகத்துல போகும் கார் ஹீரோயினை ( 50 வயசு ) இடிச்சு அவரை 7 அடி உயரத்துல தூக்கி போடுது. ஆனா அவர் மேல ஒரு கீறல் கூட விழலை.. நம்பற மாதிரியே இல்லை. ஆனா சால்ஜாப்பா ஒரு டயலாக் பின்னால சேர்த்து இருக்கீங்க. ( இதெல்லாம் மெடிக்கல் மிராக்கிள், 10 வது மாடில இருந்து  கீழே விழுந்தவன் எல்லாம் துளி காயம் இல்லாம பிழைச்சிருக்கான்னு ) ஆனாலும் உறுத்துது



5. படத்துல ஹீரோயினுக்கு என்ன ஆச்சு? என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்ணீன மாதிரி விபத்து நடந்ததையே கடைசில காட்டி இருந்தா இன்னும் பெப் கூடும்


6.  ஹிட்சாக்கின் கருத்தான ஒரு சஸ்பென்ஸ்  எப்படி இருக்கனும்கற  விளக்கப்படி காட்சிகள் இல்லை. ஆடியன்ஸ்க்கு  ஹீரோயின்க்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுடுது, ஆனா படத்துல வர்ற கேரக்டர்ஸ்க்கு தெரியல , அவங்க பாட்டுக்கு 3 ரீல்க்கு தேடிட்டே இருக்காங்க. போர் அடிக்குதே. பொதுவாவே தமிழ் சினிமால பலர் பண்ற தப்பு இதுதான். புலன் விசாரணை படத்துல வர்ற மாதிரி கேரக்டர் காணாம போனா என்ன ரீசன்? எதனால காணோம் என்பது ஆடியன்சுக்கும் தெரியக்கூடாது


7. இந்தக்கதைக்கு சம்பந்தம் இல்லாம அந்த ஜொள்ளு ஜக்கு கேரக்டர் எதுக்கு?


8.  எப்படிப்பட்ட கெட்ட புருஷனும் பொண்டாட்டியை திட்டுவான், கண்டுக்காம இருப்பான், அன்பு செலுத்தாம இருப்பானே தவிர  “ நீ கைல காசு இல்லைன்னா என்ன பண்ணுவே? தொழிலா? அப்டினு எல்லாம் கேட்க மாட்டான். ஒரு பெண்ணா பெண்ணாதிக்கவாதியா அந்த வசனத்தை வெச்சாலும் ஆண்கள், பெண்கள் யாருமே அதை ஏத்துக்க மாட்டாங்க..


9. ஒரு மோசமான கணவன் உலகத்துல  பலர் இருக்கலாம், ஆனா மோசமான அப்பா அதுவும் பெண் குழந்தை கொண்ட அப்பா இருக்க முடியாது,  ரொம்ப ரேர். அப்படியே இருந்தாலும்  இந்த மாதிரி மேரேஜ் டைம்ல இப்படி நடந்துக்க மாட்டான்.


10.  எப்பவும் ஆணை வில்லனா காட்டனும்னா மனைவி மேல பாசம் இல்லாத மாதிரி காட்டுனா ஏத்துக்குவாங்க, ஆனா மகள் , மகன் மேல பாசம் இல்லாத கேரக்டர்னா செற்கையா இருக்கும்.


11. ஹீரோயினுக்கு விபத்தில் காயம் ஆகி , அந்த காயத்தை ஏற்படுத்திய குற்ற உணர்வில் ஹாஸ்பிடல் செலவை ஏற்று  அப்படியே  நோயை குணப்படுத்தினார்கள் என்று கதையை கொண்டு போய் இருக்கலாம், அதே போல் ஹீரோயினுக்கு அந்த நோய் வந்ததே கணவனின் கொடுமை தாங்காமல் தான் என்பது மாதிரி காட்டி இருக்கலாம்







எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 சி. பி கமெண்ட் - இது நல்ல படம் எடுப்பதற்கான ஆரோக்யமான முயற்சி தானே தவிர பலரும் சொன்னது போல் இது  பிரமாதமான படம் அல்ல. பெண்கள் , ஆரோக்யமான சினிமாவை விரும்புவர்கள் பார்க்கலாம்.


 இந்தப்படத்தை பற்றி சிலாகித்து கே பாலச்சந்தர் ஆற்றிய மேடைப்பேச்சு


http://www.adrasaka.com/2012/10/blog-post_620.html

Thursday, October 25, 2012

ஆரோகணம்

ஆரோகணம்' பட இயக்குநர் லட்சுமியை பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதம்

 'ஆரோகணம்' பட இயக்குநர் லட்சுமியை பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதம்
சென்னை,அக்.20(டி.என்.எஸ்) லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி அக்டோபர் 26 இல் உலகமுழுவதும் வெளிவரத்தயாராக இருக்கும் 'ஆரோகணம்' படம் பார்த்தவர்களை எல்லாம் பரவசப்டுத்தியுள்ளது.ஆரோகணம் பார்த்து மிகவும் மகிழ்ந்த- நெகிழ்ந்தவர்களில் ஒருவர் நூறுபடங்களை இயக்கியவரும், தாதா சாகேப் விருது வாங்கியவருமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். படம் பார்த்து விட்டு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது மனம்திறந்த வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"கே. பாலசந்தர்,

சென்னை.அன்புள்ள லட்சுமி

மறைந்த டி.பி.ராஜலக்ஷ்மியின் காலம் தொட்டு, தமிழ் சினிமா பல பெண் திரைப்பட இயக்குநர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சினிமாத் தொழில் துறையில் அவர்கள் யாருமே ஊக்குவிக்கப்படவில்லை என்பதும், அதனால் அவர்களில் எவருமே இந்திய சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்பதும் உண்மையிலேயே வருத்தத்துக்குரிய விஷயம்.

குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் தகுதி பெற்ற, சினிமாவுக்குப் போதுமான அளவு தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கின்ற அபர்ணா, சுஹாஸினி, ரேவதி போன்ற பல பிரபலங்களும், வாய்ப்பு கிடைத்தால் இன்னும் பல சாதனைகள் புரியக்கூடிய ‘பீப்ளி லைவ்’ படப் புகழ் இயக்குநர் அனுஷா ரிஸ்வி போன்ற இயக்குநர்களும் இருந்தாலும், இந்திய சினிமாவில் நடிகைகளுக்குக் கிடைத்த அதே அளவு ஊக்குவிப்பு பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், பெண் இயக்குநர்களிடமிருந்து நமக்கு சில அருமையான பங்களிப்புகளும் கிடைத்துள்ளன. சிறப்புமிக்க அந்த வரிசையில் சமீபத்திய வரவு, ‘ஆரோகணம்’ என்ற உங்களின் முதல் படைப்புடன் நீங்கள்!

உங்களைப் பார்த்தபோது, உங்களது துணிச்சலை நிரூபிக்க ஏன் திரைப்பட இயக்கம் என்னும் இவ்வளவு கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்  என நான் முதலில் வியந்தேன். ஆனால் படத்தைப் பார்த்த பின்புதான், உங்களை உந்தித் தள்ளியது நல்ல சினிமா மீதான உங்களது காதலும் பெருவிருப்பமும் தான் என்று முழுமையாகப் புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் முடிந்தது.

‘ஆரோகணம்’ திரைப்படத்தில், அந்த விவரித்தலில் ஓர் ஆர்வமும் உற்சாகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களது கதாபாத்திரங்கள் பெண்மைக்குரிய நுட்பமான அறிவோடு இருப்பது, நிஜமாகவும் நம்பக்கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் அவலநிலையில் இருந்தாலும் உறுதியானவர்கள்..

விவேகமற்றவர்களாக இருந்தாலும் பாராட்டுக்குரியவர்கள்! உங்கள் செலுலாய்ட் கதைப்பரப்பில் உலவும் கதாபாத்திரங்கள் எல்லாம் அதற்குத் தொடர்பில்லாதது போல் தெரிந்தாலும், எப்படியோ கதைக்கான முக்கியமான பகுதியாகிவிடுகின்றனர். நன்கு பரிச்சயமான மற்றும் அவ்வளவாக பரிச்சயமில்லாதமுகங்கள் அனைவருமே அவர்களின் தற்செயலான மற்றும் தீவிரமான பாத்திரப்படைப்புகளால் மனதில் ஆழப்பதிகின்றனர்.


 கருவை எடுத்துரைப்பதில் கொண்டிருக்கும் கட்டுப்பாடு அதேசமயம் கதையின் வேகம்.. இரண்டுமே உண்மையில் மிகுந்த பாராட்டுக்குரியவை. வசனங்களும் அவற்றைப் பேசியிருக்கும் விதமும் மிகச் சரியாக நிறைவாக அமைந்துள்ளன.

இப் படத்தில், வைக்கப்பட்டிருக்கும் கேமரா கோணங்கள் ஆகட்டும்.. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்‘லொகேஷன்’கள் ஆகட்டும்.. எடுக்கப்பட்டிருக்கும் ‘ஷாட்’கள் ஆகட்டும்.. எல்லாவற்றிலுமே தொழில்நுட்ப நுண்ணறிவு பெருமளவில் தெரிகிறது. ‘க்ளோஸ்&அப்’ காட்சிகளில், அவை வைக்கப்பட்டிருக்கும் நிலை (பொஸிஷன்) மற்றும் காலஅளவு (டியூரேஷன்) ஆகியவை மிகச் சரியாக இருப்பதால் உண்மையில் மனதில் ஆழப்பதிவதாய் இருக்கிறது. இந்தப் பெருமை அனைத்தும் உங்களது தொழில்நுட்பக் கலைஞர்களின் குழுவுக்கும் உங்களின் கூரிய சினிமாக் கற்பனைக்குமே!

படத்தின் இசையும் எந்தவித உறுத்தலும் இன்றி, நம் மனதைக் கவர்கிறது. இரண்டு பாடல்களும் அவற்றைப் படமாக்கியிருக்கும் பின்புலமும் மிக அழகான கலவையாக வெற்றிபெறுகின்றன. இதனாலேயே, மிகத் தீவிரமான அதேசமயம் சுவாரஸ்யமான இந்தத் திரைப்படத்தின் ‘மியூஸிகல் வேல்யூ’ கூடியிருக்கிறது.

ஒரு திரைப்படம் என்பது, அதைப் படைப்பவருடைய ஆத்மாவின் பிரதிபலிப்பு. அது, அந்தப் படைப்பாளியின் மனதின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.. அவருடைய உள்நோக்கங்களைப் பகிரங்கப்படுத்துகிறது.. அவருடைய நாட்டத்தை வரையறுக்கிறது.. அவருடைய பெருவிருப்பத்தை

விவரிக்கிறது.. இந்த அளவுகோல்களால், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த எதிர்காலமுள்ள திரைப்படப் படைப்பாளிகளில் ஒருவராக நீங்கள் தோன்றியிருக்கிறீர்கள்.

துரிதமாக விரைந்துகொண்டிருக்கும் என் படைப்பாற்றலின் இந்த அந்திப்பொழுதில், இடையில் சிறிது நிறுத்தி என்னைச் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். என் காலத்தை நிறுத்தி, அப்படியே உறைய வைத்துவிட்டீர்கள்.. தொடர்ந்த அந்த 2 மணி நேரத்தில் உங்கள் புத்திசாலித்தனம், முழுமை, உறுதியான நம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றைக் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள், தமிழ் சினிமாவை இன்னும் சிறிதுஉயரத்தில் நிற்கச் செய்திருக்கிறீர்கள்.. இன்னும் கொஞ்சம் கர்வத்தோடு நடைபோட வைத்திருக்கிறீர்கள்..

இவை இரண்டையும் பெண்மைக்குரிய நேர்த்தியோடு செய்திருக்கிறீர்கள்! மேலும், இந்தப் படத்தை நம்பமுடியாத அளவில் மிகக் குறைந்த செலவில் எடுத்திருப்பதுதான் இதில் மிகவும் திகைப்பூட்டும் விஷயம்!

அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! மற்ற படைப்பாளிகள் உங்கள் மதிநுட்பத்திலிருந்து தங்களுக்கான குறிப்பை எடுத்துக் கொள்வார்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன். இந்த ‘ஆரோகணம்’ படத்துக்காக மட்டுமல்ல, இன்னும் நீங்கள் இயக்கத் தீர்மானிக்கவிருக்கும் 99 படங்களுக்கும் சேர்த்து வெற்றியே கிடைக்க நான் வாழ்த்துகிறேன்.


உங்கள் 100&வது திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும், அந்த விழா நிகழும் வேளையில்.. நிச்சயம் அது நடக்கும்.. அப்போது, நான் இந்த மாலை நேரத்தையும் இந்த இடத்தையும், ஒரு படைப்பாளியாகவோ ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றவனாகவோ இல்லாமல், நல்ல சினிமாவின் காதலனாக நான் பகிர்ந்துகொண்டதை நீங்கள்

நினைவுகூர்வீர்கள் என்று நம்புகிறேன்..!

‘ஆரோகணத்’தின் அத்தனை எழுச்சியூட்டும் குறிப்புகளுக்கும் நன்றி லக்ஷ்மி.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்!

விஜியைப் பற்றி ஒரு வார்த்தை… சரிதாவை வைத்து நான் வரலாறு படைத்திருக்கிறேன்.. உண்மையிலேயே உயர்ந்த காவியங்கள் படைத்துள்ளேன். அந்தத் திறமை உண்மையிலேயே மரபு வழி வந்தது என்று விஜி நிரூபித்திருக்கிறார். மேலும், அவரும் என்னுடைய கண்டுபிடிப்பு என்பதை இந்தவேளையில் சொல்லிக்கொள்வதில் நான் அளவுகடந்த பெருமிதம் கொள்கிறேன். அவருடைய ஆற்றலை மீண்டும் கண்டெடுத்திருப்பதற்கு உங்களுக்கு மிகுந்த பாரட்டுக்கள்.

குறைபாடற்ற விதத்தில் நடிகர்களுக்குப் பாத்திரங்களைப் பகிர்ந்தளித்திருக்கும் உங்கள் பாங்குக்கு,

வெல்டன் லக்ஷ்மி!

ஜெய்ஹிந்த்!

கே.பாலசந்தர். (டி.என்.எஸ்)
Oct 20, 2012 







https://lh6.googleusercontent.com/-7AdflGlYRdk/UIFam8iFgEI/AAAAAAAAjyk/befPUkQ94LQ/6%2520SHEETa.jpg 

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஆரோகணம்'
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல்முதலாக இயக்கியுள்ள ஆரோகணம் திரைப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது.
தமிழில் மிக குணசித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு நடிப்பு தவிர மேலும் பல திறமைகளும் உண்டு.



கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் இப்போது ஆரோகணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில்சம்பத், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், உமா பத்மநாபன், ராஜி விஜயசாரதி ஆகியோருடன், புதியவர்களான விரேஷ்,ஜெய் குஹேனி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.



'ஆரோகணம்' படத்தை ஏவிஏ புரொடக்ஷன் சார்பாக திரு. அனுப் தயாரிக்க, மங்கி கிரியேட்டிவ் லேப் இணைந்து தயாரித்துள்ளது.


நன்றி - சென்னை ஆன் லைன், மாலை மலர் , சினிமா 123