Showing posts with label ஆட்சி. Show all posts
Showing posts with label ஆட்சி. Show all posts

Friday, May 30, 2014

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்

முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய 10 முக்கிய விஷயங்களை அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அந்த 10 முன்னுரிமைகளாவன:

1.மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கையை வளர்த்தெடுத்தல்.

2. புதிதான கருத்துக்கள் மற்றும் சுதந்திரமாக பணியாற்றுதலை வரவேற்பது.

3. கல்வி, சுகாதாரம், நீராதாரம், எரிசக்தி, சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தல்.

4. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் மின் ஏலத்தை வளர்த்தெடுத்தல்.

5. அமைச்சகங்களுக்கு இடையிலான விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு ஏற்பாடு.

6. அரசு எந்திரத்தில் மக்கள் நலனுக்கான அமைப்பை ஏற்படுத்துதல்.

7. பொருளாதார விவகாரங்களுக்கு உடனுக்குடன் முன்னுரிமை அளித்தல்.

8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுச் சீர்திருத்தங்கள்.

9.அரசின் கொள்கையை குறித்த காலத்தில் செய்து முடித்தல்.

10. அரசுக் கொள்கைகளில் நிலையான போக்கைக் கடைபிடித்தல் மற்றும் திறமையாக செயல்படுதல்.
இந்த 10 முன்னுரிமைகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் மாநில அரசுகள் முன்மொழியும் விவகாரங்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்குமாறு நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றச் செயல்பாடு குறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், சபாநாயகர் ஜூன் 6ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். 


  • UNNIKRISHNAN THAMPI  from Kuwait
    நமஸ்தே ஜி மக்கள் குறை திர்க்கும் மோடி ஜி வாழ்த்துக்கள் -பாரத்மாதக்கி ஜெய் .
    about 16 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • Thangadurai  
    Doing this 10 quote we are proved
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    அமைச்சர்கள் செவி கொடுத்து கேட்டார்களா?
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • M.Siva  from Bangalore
    முதல்ல பெட்ரோல்,டீஸல்,காஸ் விலைகளை குறைத்து மக்கள் தலைமேல் சுமந்துள்ள பாரத்தை குறைத்தாலே இந்த மோடி ஆட்சிக்கு வெற்றிதான்.. செய்யமுடியுமா..?, இந்த 10 திட்டங்களும் செயல்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது வேண்டும்..100 நாட்களில் ஆரம்பிக்கதான்முடியும்..
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Abdul Jailani  from Salem
    அறிவிப்பு நன்றாகவே இருக்கிறது. இது புதுமண தம்பதிகளின் தேனிலவு கால வாக்குறுதிகளாக இருந்துவிடக்கூடாது. உண்மையிலேயே செயல் படுத்தினால் நாடு சிறக்கும். வாழ்த்துக்கள்.
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Donald  from Dubai
    சூப்பர்....
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • SRINIVASAN G  
    தங்க யு ஜி
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • g.r.rajagopal  from Kolkata
    நல்ல தொடக்கம் காலாவகாசம் வேண்டும் நிர்வாக சீர்திருத்தம் அவசியம் பொறுத்திருந்து பார்ப்போம்.
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • syed Ziaudeen  from Sharjah
    நீங்களும் இந்தியன், நானும் இந்தியன்.ஜாதி ,மதம் ,சிறுபான்மையினர், பெரும்பாயினர் -என்று பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்தீர்கள் என்றால் மக்கள் மனதில் இடம் பெறலாம் .சோனியா காந்தி இடம் மன்மோகன் சிங்க் ,கேட்டது மாதிரி மற்றவர்களிடம் கேட்கவேண்டாம் .இந்தியாவுக்கு வரும் காலங்கள் நல்லதாகவே நடக்க பிராத்தனை செய்வோம்
    about 17 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • ஜான்  from Bangalore
    விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை இல்லையா.
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Ragam Thalam  from Chennai
    நூறு நாட்களில் விலைவாசியை குறைத்தாலே மக்களின் 50% கவலை தீர்ந்துவிடும்.
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • ஜெ.பி  from Chennai
    அரசியல் வாதிகளை நம்பாமல் நேர்மையான அதிகாரிகளை துணைக்கு வைத்துகொண்டால் இந்த 10 விசயங்களையும் செவ்வனே திட்டமிட்டுள்ள நாட்களுக்குள் முடித்து வெற்றி பெறலாம் !ஏதேனும் ஒரு திட்டம் தொடங்கினால் எப்படியேனும் ஏதேனும் ஒரு விஷயம் ஒரு சாராருக்கு பாதகமாக இருக்கும் (உ .ம் உள்கட்டமைப்பு,நீராதாரம், சாலைகள்) அதை ஆராய்ந்து திறம்பட கையாண்டால் வெற்றி நிச்சயம் !
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • R.selvam  
    மக்களுக்காக சேவை செய்ய அழைக்கும் மோடிக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
    about 19 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Muthuaiyer  from Hyderabad
    இந்த 10 திட்டங்களும் நல்லவைதான். ஆனால் கால அவகாசம் கொடுத்திருப்பதுதான் குறைவாய் இருக்கிறது. ஆனால் இந்த அரசு இவற்றை திறம்படச் செய்யும் என்ற நம்பிக்கை கண்டிப்பாய் இருக்கு.
    about 19 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Prabhakar  from Muscat
    அரசியல்வாதிகளால் கேட்டு போனோம் என்று சொல்லும் அரசு அதிகாரிகளுக்கு மாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. மக்களுக்காக சேவை செய்ய அழைக்கும் மோடிக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
    about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • A.Gomathinayagam  from Chennai
    பழைய அரசில் பணியாற்றிய அதிகாரிகள் தான் தொடர்கிறார்கள் 'அவர்களை கொண்டு விரைவாக மக்களுக்கு நன்மைகளைஅளிப்பது பெரிய சவால்
    about 19 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • கா.சந்திரமோகன்.சேலம்.  
    இந்தியாவின் நிஜமான சூப்பர் ஹீரோவின் சிறப்பான பத்து அடிப்படை திட்டங்கள்.அருமை.
    about 20 hours ago ·   (1) ·   (6) ·  reply (0) ·  promote to News Feed
  • CHITHIRAI SELVAN  from Kovilpatti
    இந்த நிலைமை நீடிச்சா santhosam தான்
    about 20 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Gopinath Govindarajan at Advocate 
    மோடி அவர்களின் பத்து கட்டளைகளையும் செம்மையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவது அரசு அதிகாரிகளின் செயல்பட்டை பொறுத்துதான் உள்ளது. ஆகவே அரசு அதிகாரிகள் அனைவரும் நமது பாரத பிரதமரின் எண்ணங்களை வெறும் எழுத்து வடிவிலான அறிவிப்பாக நினைக்காமல் அரச கட்டளையாக பாவித்து செயல்படுத்தவேண்டும் – கோபிநாத், வழக்கறிஞர், கோவை
    about 20 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • THIRUMOORTHI  from Mumbai
    அறிவிப்பு நன்றாகவே இருக்கிறது. இது புதுமண தம்பதிகளின் தேனிலவு கால வாக்குறுதிகளாக இருந்துவிடக்கூடாது. உண்மையிலேயே செயல் படுத்தினால் நாடு சிறக்கும். வாழ்த்துக்கள்.
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    THIRUMOORTHI   Up Voted
  • abdul kareem  from Dubai
    காங்கிரசிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா போன்ற உணர்வு ஏற்படுகிறது
    about 20 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • malarvel kai.aravinthkumar  from Salem
    புதிய இந்தியாவில் உள்ளாது போல் உள்ளது.
    about 20 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) ·  promote to News Feed
    indian  · இனியன்   Down Voted
  • சபரி ராஜ்  
    பிரதமரின் உத்வேகம் அனைத்து அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும். அப்போது தான் திட்டங்கள் மக்களை சீக்கிரம் சென்றடையும்.
    about 20 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
    sarguns   Down Voted
  • Mauroof Dubai  from Dubai
    மோடியின் 10 கட்டளைகள் - "நமோ தஸ்". இவர் சார்ந்த கட்சி கொள்கையின் படி இவை 11 கட்டளைகளாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். விடுபட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், அதை 11-வது கட்டளை என்று சொல்ல மாட்டேன். விடுபட்ட அந்த ஒன்றுதான் கட்டளை எண் 1. அறிவிக்கப்பட்ட/வெளியிடப்பட்ட 10 கட்டளைகளும் செவ்வனே நிறைவேற நம் (பாஜக-வின்) தாய்ச் சபை (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் நமது (பாஜக-வின்) அசூர வளர்ர்சிக்கு பேருதவியாய் இருந்துவரும் Corporate என்றழைக்கப்படும் பெருநிறுவனங்களின் ஒப்புதல் மற்றும் ஆதரவைப் பெற்றிட உறுதி பூணுதல்/அரும்பாடு படுதல்.
    about 21 hours ago ·   (5) ·   (18) ·  reply (0) ·  promote to News Feed
    indian   Up Voted
  • Natheem  from Chennai
    நீங்க சொல்ற இந்த 9, 10 பாயிண்ட் பத்தி சரியா புரியல? ஆர் எஸ் எஸ்-ஓட கொள்கைதான பி ஜே பி அரசோட கொள்கை. உங்களோட 3 முக்கிய கொள்கை 1- அயோத்தியில் ராமர்கோவில் கட்டனும் 2- காஸ்மிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குற 370 சட்டபிரிவை நீக்கணும் 3- சேது சமுத்திர திட்டத்த நிறைவேற்ற கூடாது. இதைதான உங்களோட கொள்கைன்னு சொல்றீங்க? முதல் 100 நாளோட அரசின் பணின்னு இத குறிபிற்றுகீங்க ஆனா அதுவே பி ஜே பி ஆட்சியோட கடைசி 100 நாலா இருக்கும் அத மறந்துராதிங்க.
    about 21 hours ago ·   (11) ·   (58) ·  reply (0) ·  promote to News Feed
    m Eleyas  Up Voted
    sabaaa  · Ravi Chandran  Down Voted
  • nagalakshmi  from Mumbai
    இவை அனைத்தையும் செய்து முடித்தால் மகிழ்ச்சி ....
    about 21 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • stanislas Perianayagam at Government from Mumbai
    மோடியின் பத்து முன்னுரிமைகளை இரண்டாக சுருக்கலாம்.முதலாவது,மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கை .இரணடாவது அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை.எரிவதை இழுத்தால் கொதிப்பது நிற்கும் என்பது ஆட்சி முறைமைக்கு முற்றிலும் பொருந்தும்.முடிவுகளில் தவறுகள் நேரிடலாம்;நேரிடும்.எனினும் வெள்ளை உள்ளம் படைத்த அணுகுமுறை அனைத்து தரப்பையும் ஈர்க்க வல்லவை.ரகசியம் என்பதே சுயநலத்தின் விளைவாக மட்டுமே இருக்க முடியும்...
    about 21 hours ago ·   (1) ·   (0) ·  reply (1) ·  promote to News Feed
    • M.Siva  from Bangalore
      அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்..ஆனால் நல்ல முயற்சி.. வெற்றிபெற அனைவரும் முயற்சிக்கவேண்டும் ..
      about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Mohammed Nayeem  from Vellore
    Saying is Easy But doing is?
    about 22 hours ago ·   (5) ·   (2) ·  reply (1) ·  promote to News Feed
    Natheem   Up Voted

நன்றி - த இந்து

Thursday, November 17, 2011

பஸ், பால், மின் கட்டண உயர்வு - ஜெ அறிவிப்பு # காமெடி கடுப்பு கும்மி

  தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெரும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார். 

இதன் படி கட்டண உயர்வு விவரம் வருமாறு: பஸ் கட்டணம் சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி சென்னையில் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பஸ்களில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பஸ்களில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ்சில் மற்றும் சொகுசு ‌பஸ்களில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவா உயர்த்தி வசூலிக்கப்படும். நகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் இருக்கும். ஆவின் பால் லிட்டருக்கு 17. 75 லிருந்து 24 ஆக ( 6. 25 ) உயர்த்தப்படுகிறது. விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து 20 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 26லிருந்து 28 ஆக உயர்கிறது.



1.ஜெ வின் சின்னம் இரட்டை இலை. அவர் ஆட்சியில் பொருட்கள் எல்லாம் இரட்டை விலை

---------------------------------------

2. மகாஜனங்களே, இன்று ஒரு நாள் மட்டும் விலை ஏற்றத்திற்கு எதிராக ட்வீட் போடுங்க, நம் குரல்கள் கோட்டையை எட்டட்டும் .opp

----------------------------------

3. பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தால் சசிகலாவின் கணவர் கணவர் மட்டும் அல்ல , நாம் அனைவருமே நடராஜன்கள் ஆகி விட வேண்டும் போல் இருக்கே?

-------------------------------------

4. கலைஞர் - விலையேற்றம் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.. மானம் உள்ள தமிழன் இது பற்றி பேசுவான் # அய்யோ தலைவரே,,அப்போ......

-----------------------------

5. எம் ஜி ஆர்-ன் ஆவி - ஹூம் சினிமால நல்லா ஆடுனாங்க, அரசியல்லயும் செம ஆட்டம் போடறாங்க.அண்ணா என்னை மன்னியுங்கள்

------------------------------------------

6. விலை ஏத்தனும்னு நினைச்சா டாஸ்மாக், சிகரெட், கஞ்சா, மட்டன், சிக்கன் இப்படி ஏத்துங்க மேடம்

------------------------------------

7. மேடம், எதுக்காக இப்படி தமிழர்களை பழி வாங்கறீங்க?

2006-ல என்னை பழி வாங்குனாங்களே? மறக்க முடியுமா? பழிக்குப்பழி

-------------------------------------------

8. டம் டம் மேடம், எதுக்காக எல்லா விலையையும் இப்படி உயர்த்துனீங்க?

தமிழர்கள் சிக்கனமா இருக்கனும்னு உணர்த்த

-----------------------------------------

9. நடிகைஅமலா பால் தனது சம்பளத்தை 32% உயர்த்தினார், மேலும் ஜெ வுக்கு நன்றி சொன்னார் @ இமேஜினேசன்

------------------------------------------

10. ஜெ திருப்பதி மாதிரி இறங்கி வர மாட்டாங்க.. விலையை ஏற்றி விட்டு மக்கள் வயிற்றில் அடிப்பாங்க

------------------------------------

11. அதிகார மமதையில் ஆடாதே..நம்பி வந்த  நடுத்தர மக்களை கை விடாதே

------------------------------

12. ஷாக் அடிக்குது சோனா......நீ துள்ளற வீணா.. ஹார்ட் துடிக்குது தானா.. நீ கோர்ட் பக்கம் போனா

-----------------------------

13. மேடம், சகுனமே சரி இல்லை.. பால் விலையை ஏத்தி நம்ம ஆட்சிக்கு பால் ஊத்திட்டீங்கனு நினைக்கறேன்

----------------------------------

14. எழவு வாசம் இலைவசம், இலவசம் விலை ஏற்றம்

-----------------------------------

15. டாக்டர் பட்டம் கொடுத்தாங்கங்கறதுக்காக இப்படி தமிழக மக்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்கனுமா? மேடம்?

---------------------------------------

16. வேலாயுதம் படத்துல விஜய் பால்காரரா நடிச்சப்பவே நினைச்சேன்யா.. இப்படி பால் விலை கன்னா பின்னான்னு ஏறும்னு

---------------------------------------

17. அன்பில்லாத அம்மா! இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியல.. இங்கே இருக்கும் தமிழனையாவது சாகடிக்காமல் காப்பாற்றவும்

-----------------------------------

18. அதிமுக - அடங்காமல் திமிருடன் முரண்டு பிடிக்கும் கழகம்????

--------------------------------

19. அமாவாசைன்னா  பைத்தியம் முத்தும், அம்மா உங்க ஆசைகளால எங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கே?

---------------------------------

20. ஆட்டமா? விலை ஏற்றமா? ஏத்தமா? உனக்கு இது ஏத்ததா? வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் இருக்குது, செக்‌ஷன் 365

----------------------------------

21.உடன் பிறப்பே!பிசாத்துப்பணம் 1 3/4 லட்சம் கோடிக்காக கழக ஆட்சியை இறக்கி வைத்தாய்.அரக்கியை ஆட்சி பீடத்தில் ஏற்றிவைத்தாய்!அனுபவி தமிழா அனுபவி

-----------------------------------------

22. போஸ்ட் கார்டு விலை50 பைசா தானே? அதை ஏன் ஒரு ரூபாய் ஆக்கிட்டீங்க?

பால் விலை ஏறுன மாதிரி தபால் விலையும் ஏறிடுச்சோ என்னவோ?

-------------------------------------------------

23. வணக்கம் ஜெயா செய்திகள்.. எந்தெந்த பொருள்கள் எல்லாம் விலை ஏறவில்லை என்பது பற்றி ஒரு பார்வை.....

----------------------------------------

24. கார்த்திகை 1 அன்னைக்கு விளக்கேத்தி வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி விலையை ஏத்தி வைச்சுட்டீங்களே?

--------------------------------------

25.அண்ணே.. டீ இன்னும் வர்லை.. 

டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

-----------------------------------------------
26. .சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு

-----------------------------------------------

27. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.

-----------------------------------------

Monday, March 28, 2011

கேபிள் சங்கரை வம்புக்கு இழுத்த செந்தில்


http://www.kollywoodtoday.com/gallery/actress/anjali/images/anjali_027.jpg 

1. பத்திரிகைச் செய்தி: தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 13க்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் உள்ள, "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது. அதனால், கமிஷனின் உத்தரவுப்படி, கடைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டப்படி கடையை மூடுனா கடைல ஒர்க் பண்றவங்க செட்டப்படி சைடுல கடையை திறந்து வெச்சு டபுள் மடங்கு லாபம் பார்த்துடுவாங்க..நட்டம் கவர்மெண்ட்டுக்கும், குடிமகனுக்கும் தான்.. 


--------------------------------------------------

2. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: கடந்த பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது. அதன் அடிப்படையில், மக்கள் எங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், தேர்தல் அறிக்கை, மக்களின் நம்பிக்கைக்குரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்ணே.. அப்புறம் ஏன் நீங்களும், கலைஞரும் சென்னைல போட்டி போடாம இடத்தை மாத்தறீங்க..?போடா வெண்ணை அப்படின்னு சொல்லக்கூடாது,,


-----------------------------------------------------
http://www.cinespot.net/gallery/d/370379-1/Tapsi+photos+_19_.jpg
3. பா.ம.க., தேர்தல் அறிக்கை: பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். புகையில்லா தமிழகம், பூரண மதுவிலக்கு ஆகியவற்றை அமல்படுத்த பாடுபடுவோம்.

தமிழகத்தை குஜராத் ஆக்க பாடுபடுவோம்னு சொல்றீங்க.. சந்தோஷம்.. ஆனா நீங்க கூட்டணி வெச்சிருக்கறது தி மு க கூட.. தமிழகத்தை பீகார் மாதிரி ஆக்காம கலைஞர் ஓய மாட்டார் போல... 


----------------------------------------

4. மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: ஊழல், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்ற பலவற்றால், தி.மு.க., அரசு தோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கூறப்பட்ட இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம், இந்த முறை கூறப்படவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்தல், வன்முறை போன்ற தி.மு.க.,வினரின் தில்லுமுல்லு செயல்களை வாக்காளர்கள் நிராகரித்து, முறியடிப்பர்.

எல்லா இடங்களையும் இலவசமா மக்களுக்கு கொடுத்துட்டா மந்திரிங்க என்ன பண்ணுவாங்க..இருக்றதை அள்ளிக்குடுத்துட்டு தொண்டு செய்ய அவங்க என்ன இளிச்ச வாயர்களா? 

----------------------------------
http://www.teluguflavours.com/gallery/allgallerys/Models/876/Tapsi%20Panu%20(3).jpg
5. பார்லிமென்ட் பா.ஜ., தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி கூட்டாக அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில், எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனக் கூறி, பார்லிமென்ட்டை தவறாக வழி நடத்துகிறார் பிரதமர். இந்த விஷயத்தில், பார்லிமென்ட் கமிட்டி கண்டறிந்த உண்மைக்கு மாறான கருத்தை பிரதமர் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற லஞ்சம் கொடுக்கப்பட்டது, தற்போது நிரூபணமாகியுள்ளது. லஞ்சம் கொடுத்து, கட்சி மாறி ஓட்டளிக்க வைத்ததன் மூலம் ஆதாயமடைந்த முதன்மை பயனாளிகள் பிரதமரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தான்.

ஆமா.. இது வரை நடந்த எல்லா நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் இது மாதிரி நடந்திருக்கே.. என்னமோ புதுசா சொல்றீங்க.. காலம் காலமா நடந்துட்டு வர்ற சம்பிரதாயத்தை மாத்த முடியுமா? நம்ம இந்தியா பழம்பெரும் பாரம்பரியம் மிக்கதாச்சே.. ?

---------------------------------------

6. லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு: காங்கிரஸ், பா.ஜ., கூட்டணியில் இடம் பெறாமல், சில கட்சிகள் உள்ளன. மூன்றாவது அணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை, இந்த கட்சிகள் உணர்ந்துள்ளன. இதை செயல்படுத்த, அனைத்து கட்சித் தலைவர்களும், வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் திரள வேண்டும்.

மூன்றாவது அணியும்,ராமராஜன் படமும் ஒண்ணு தான்.. வேலைக்காகாது...

----------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP1U86zMIPEkcZkcj4mbxYH9Sjmu35JmSNunYDCnnIs1-jAqCuzpdBcQi_vuaNH13Rh0TcKyiK-9aeYNAhZ5FCeOGGYmAf6ltsigDHQIyCmm6d5jQcGcfIV9Kvq9WQx2WL711VkYraTvRe/s640/Tamanna+47852+(17).jpg
7. நகைச்சுவை நடிகர் செந்தில் பேட்டி : தமிழகத்தில் திருக்குவளை மன்னராட்சியை ஒழிக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இலவச, "டிவி'களை கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியவர் ஏன், "கேபிள்' இணைப்பை இலவசமாக வழங்கவில்லை?

கேபிள் சங்கர் பிளாக்ல போய் சப்ஸ்கிரைப் பண்ணிக்கிட்டா இலவசமா அவரோட படைப்புகள்  ரீடர்ல வருமே... இதுக்கு எதுக்கு கலைஞர் லெவலுக்கு போறீங்க? 

---------------------------------------

8. தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பேச்சு: உண்டு கொழுத்த முதலைகளாக, மக்களை ஏமாற்றி பிழைக்கும் கட்சிகளாக திராவிடக் கட்சிகள் உள்ளன. "இலவசம்' என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, முட்டாளாக்கி, பிச்சைக்காரர்களாக்கி வருகின்றன. அவர்களுக்கு நமது கூட்டணி சிம்மசொப்பனமாக உள்ளது.

முதல்ல சொன்ன மேட்டர் சீரியஸா யோசிக்க வேண்டியதுங்கண்ணா.. கடைசியா சொன்னீங்களே.. சிம்ம சொப்பனம், ( SIM  ம சொப்பனம்) பேட்டரி சொப்பனம், செல்ஃபோன் சொப்பனம்னு .. நீங்க ஒரு தமாஷ்காரர்ங்கண்ணா.. 

------------------------------------

9. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேச்சு: கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்க தமிழக அரசு மறுத்து விட்டது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமில்லை என முதல்வரும், அவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களும் நிரூபித்து விட்டால், எங்களது கோரிக்கையைக் கைவிட்டுவிடுவோம்.

கள் இறக்க அனுமதி கொடுத்துட்டா அரசுக்கு வரக்கூடிய வருமானங்கள் குறைஞ்சிடும்.எல்லா பயனையும் விவசாயிங்களே அடைவாங்க.. அந்த அளவு அரசியல்வாதிகளை இளிச்ச வாயர்கள்னு நினைச்சீங்களா?


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல அஞ்சலி சேலை கட்றக்குள்ள ஃபோட்டோகிராஃபருக்கு அவசரம் போல.. ஆனா அவர் ஃபோட்டோ எடுக்கறப்ப நியாயமா அஞ்சலி கையை குறுக்க தானே கட்டி பதட்டப்படனும்? சிரிச்சுக்கிட்டே போஸ் குடுக்குதே ? #டவுட்டு


டிஸ்கி 2  - ரெண்டாவது ஸ்டில்லுல தப்ஸி போட்டிருக்கற சேலை ஹீரோக்களுக்கு ரொம்ப சிரமத்தை குடுக்கும்.. டூயட் சீன்ல குத்தும்...அதனாலதான் ஒரு பாதுகாப்புக்காக அப்படி டிரஸ் போட்டிருக்காங்க போல.. பொது நலன் கருதி  வெளியிடுவோர்  அட்ரா சக்க அல்டாப் பேர்வழி.. ஹி ஹி

டிஸ்கி 3  - மூணாவது ஸ்டில்லுல தப்ஸியைப்பார்த்ததும் எனக்கு 2 மேட்டர் நினைவு வருது. 1. ஊட்டி, கொடைக்கானல் ரோட்ல வைக்கப்ட்ட போர்டுகளான அபாய வளைவுகள் ஜாக்கிரதை, குறுகிய சாலை கவனமாக செல்லவும்.. ஹி ஹி . 2. அவர் அவுட் ஆஃப் ஃபேஷனான ரப்பர் வளையல் போட்டிருந்தாக்கூட அதுலயும் மேட்சுக்க்கு மேட்ச் போட்டிருக்கார் பாருங்க..

டிஸ்கி 4.   - கடைசி ஸ்டில்லுல பாருங்க தமனா கை கழுத்து வெறுமையா இருப்பதை.. பாப்பாவுக்கு எக்ஸ்ட்ரா அணிகலன்கள் பிடிக்காது போல..அந்த இமேஜ் எல்லையை மீறி ஓவர்லேப் ஆகற மாதிரி இருக்கு கரெக்ட் பண்ணுங்க (தமனாவை அல்ல அவரோட இமேஜை)  அப்படின்னு கமெண்ட் போட நினைப்பவங்க.. கவனிக்க நான் வேணும்னு தான் அப்படி போட்டேன்.. அவங்க நம்மை ஆக்ரமித்த விதத்தை விளக்கும் சிம்பாலிக் ஷாட் அது.. ஹி ஹி  ( இவனுக்கு மனசுல கே பாலச்சந்தர்னு நினைப்பு)

டிஸ்கி 5  - பதிவின் டைட்டிலுக்கும், பதிவுக்கும் சமபந்தம் இல்லையே என யோசிப்பவர்கள் கமெண்ட் 7 ஐ பார்க்கவும்.. ஹி ஹி இப்படிக்கு சமாளிஃபிகேஷன் சண்முகராஜன்.

டிஸ்கி 6 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்கு

டிஸ்கி A - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி B - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி C SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

Tuesday, October 19, 2010

சிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ

http://img.dinamalar.com/data/gallery/gallerye_053656373_108996.jpg

கலைஞருக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும் செய்தி.ஏற்கனவே கோவை,திருச்சி என ஜெ கூட்டிய கூட்டங்கள் அவருக்கு அலர்ஜி ஆகி விட்டது,போட்டிக்கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் கடுப்பில் இருந்தார்.இப்போ மதுரை,அதுவும் அழகிரியின் கோட்டையில்.




அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில், மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர் மிரட்டல்களையும் மீறி  லட்சக்கணக்கானோர் குவிந்தனர். சித்திரைத் திருவிழா கூட்டத்தையும் மிஞ்சும் வகையில், திரண்ட தொண்டர்களால் மதுரையே குலுங்கியது.
கோவை, திருச்சியை தொடர்ந்து, மதுரையில் கடந்த மாதம் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது. பல காரணங்களால் ஆர்ப்பாட்ட தேதி தள்ளிபோனது. அக்., 18ல்(நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.நீண்ட நாட்களுக்கு பிறகு, ஜெயலலிதா மதுரை வருவதால், தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். பல லட்சம் பேர் குவியும் வகையில், மதுரை ரிங் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சி பெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உழைத்தனர்.

"மதுரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கக் கூடாது, மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும்' என, ஜெயலலிதாவுக்கு தொடர் மிரட்டல்கள் விடப்பட்டன. அதை பொருட்படுத்தாமல், ஜெயலலிதா சென்னையில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம், மதுரை வந்தார்.அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்கள் பிரசாதம் கொடுத்து வரவேற்றனர். பின் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையம் முதல் மேடை வரை சீருடை அணிந்த மாணவரணியினர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தனர்.விமான நிலையம் நோக்கி வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களை போலீசார் தடுத்ததால், தொண்டர்கள் மறியல் செய்ய முயன்றனர்.

அப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க., பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், "இந்த நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவரது காருக்கு பின்னால் தான் நாம் செல்ல வேண்டும்' என சமரசம் செய்ததால், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.தொண்டர்களால் நிரம்பி வழிந்த ரிங் ரோட்டில், கட்சியினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு, மாலை 4.18 மணிக்கு மேடைக்கு ஜெயலலிதா வந்தார். மாலை 4.44 மணிக்கு பேச்சை துவக்கி 6.39க்கு முடித்தார்.பேச்சின் பெரும்பகுதி மத்தியமைச்சர் மு.க.அழகிரியை தாக்குவதிலேயே இருந்தது. பின், தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பேசினார்.

"இந்த ஆட்சியில் எனக்கும் பாதுகாப்பு இல்லை; பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை' என்றார்.பெரியாறு பிரச்னையில் தி.மு.க., ஆட்சியின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், தொடர் மின்வெட்டு, விலைவாசி, சட்டம் ஒழுங்கு, ரேஷன் அரிசி, லாட்டரி சீட்டு கடத்தல், சினிமா, கேபிள், "டிவி' துறைகளில் குடும்ப ஆதிக்கம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆவேசமாக எடுத்துரைத்தார்.ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயந்து, திருச்சி கூட்டம் குறித்து சரியாக செய்தி வெளியிடவில்லை என ஊடகங்களையும் சாட, ஜெயலலிதா தவறவில்லை.

இந்நிலையில், கூட்டம் நடந்த ரிங் ரோட்டின் சில பகுதிகளில் மழை பெய்தது. மேடை அருகே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள், அவரது பேச்சை கவனித்தனர். மொத்தத்தில் சித்திரைத் திருவிழாவையும் மிஞ்சும் வகையில் லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்த மதுரை மலைத்தது.போலீஸ் பாதுகாப்பு: ஜெ.,வுக்கு தொடர் மிரட்டல் காரணமாக, எப்போதும் இல்லாத அளவிற்கு தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மூன்று டி.ஐ.ஜி.,க்கள், ஏழு எஸ்.பி.,க்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் வரட்டும்; மக்கள் முடிவு அப்போது தெரியும்! : அ.தி.மு.க., ஆட்சி அமைய "கவுன்ட் டவுண்' துவங்கியது :  ஜெயலலிதா பேசியதாவது:வைகை கரைக்கு நான் வரக்கூடாது என்பதற்காக, எனக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை அழைப்பிதழாக ஏற்று நீதிகேட்க வந்துள்ளீர்கள். தெற்கு தமிழகத்தின் நுழைவுவாயிலாக இருக்கும் மதுரை, பாண்டிய மன்னர்கள் ஆதரவுடன் தமிழ் சங்கங்கள் தோன்றிய மதுரை. மகாலை உருவாக்கிய திருமலை நாயக்கர் ஆட்சி செத மதுரை. சிலப்பதிகாரத்தின் மையமாக இருந்த மதுரை. குற்றமற்ற கணவனுக்கு தண்டனை கொடுத்ததால், கற்புக்கரசி கண்ணகியால் எரிக்கப்பட்ட மதுரை. வீர பெண்மணி ராணிமங்கம்மாள் ஆட்சி செத மதுரை. வன்முறை, சுயநலம் உள்ள மதுரையாக இருப்பதை எப்படியும் எதிர்ப்பீர்கள் என நம்புகிறேன். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உட்பட நானும் தமிழகத்தில் ஆட்சி செத போது, தமிழ்நாடு எப்படி இருந்தது?

கருணாநிதி தந்திரம்: "தம்பி தலைமை ஏற்கவா' என்று நெடுஞ்செழியனை அண்ணாதுரை அழைத்தார். "நீ முகம் காட்டினால் 30 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும்' என எம்.ஜி.ஆரை அண்ணாதுரை அழைத்தார். கருணாநிதியை அழைக்கவில்லை. ஆனால் தமிழக அரசியலில் போதாத காலம், கருணாநிதியை தந்திரங்கள் வென்றன. மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்குவது, கோரிப்பாளையம் பள்ளிவாசல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவை மதுரை என்றாலே நம் கண் முன் நிற்கும். ஆனால் இப்போது வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளைதான் மனக்கண் முன் நிற்கின்றன.

இரு அரசுகள்: ஒருகாலத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தூங்கா நகராக இருந்த மதுரை, தற்போது தூங்க முடியாத நகராகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு அரசுகள் உள்ளன. கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் சென்னையில் இருக்கும் ஒரு அரசு. அழகிரி தலைவராகவும், "பொட்டு' சுரேஷ் துணைக்கு இருப்பவராகவும் மற்றொரு அரசு இருக்கிறது. மதுரைக்கு ஸ்டாலின் வரவேண்டுமானால், அழகிரியிடம் விசா வாங்கிகொண்டுதான் வரவேண்டும். லீலாவதி கொலை வழக்கை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்காக தண்ணீர் கொண்டு வர பாடுபட்ட, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி பஜாரில் கொலை செயப்பட்டார். நான்கு தி.மு.க.,வினர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க.,விற்கு வேலை பார்க்க பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

பயம் இல்லை: இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர வேண்டுமா என மக்களாகிய நீங்கள் முடிவு செய வேண்டும். எனக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. தா.கிருஷ்ணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றதும், தி.மு.க.,வினர் அஞ்சுகின்றனர். ஜெயா "டிவி' எனது பேச்சை நேரடியாக ஒளிபரப்புகிறது. யாரோ ஒருவர் இதைகண்டு அஞ்சுகிறார். இவர்கள் மிரட்டலை பார்த்து நான் பயப்படவில்லை.அரசியலுக்கு வந்தது முதல் பல கொலை மிரட்டலை பார்த்துவிட்டேன். பொ வழக்குகள் போடப்பட்டன. கொலை முயற்சி நடந்தது. யார் அஞ்சுகிறார்கள், யார் அஞ்சவில்லை என இந்த கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது. நான் முதல்வராக இருந்தபோது, மின்வெட்டு கிடையாது. உபரி மின்சாரத்தை பக்கத்து மாநிலத்திற்கு விற்றதன் மூலம் வருவா கிடைத்தது. அனைத்து அனல்மின் நிலையங்களும் பராமரிக்கப்பட்டன. தரமான நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. தற்போது அனல்மின்நிலையம் மோசமாக பராமரிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகள் கருணாநிதி குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளன. மதுரையில் ஐ.டி. பூங்கா பணிகள் தாமதமாக நடப்பதற்கு காரணம் இருக்கிறது. அழகிரி பெயரில் மாட்டுத்தாவணி அருகே பல கோடி ரூபா செலவில் கட்டடம் கட்டப்பட்டு, ஐ.டி. நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

கூட்டத்தை தடுத்த போலீஸ்: கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி, பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன. என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை "ஆஹா... ஓஹோ...' என எழுதச்சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும். கருணாநிதி குடும்பத்திற்கு ஆறு சினிமா கம்பெனிகள் உள்ளன. சென்ற ஜனவரி முதல் வெளியான 63 படங்களில் 34 படங்கள் இவர்கள் தயாரித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மற்றவர்கள் தயாரித்த 40க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட தயாரிப்பாளர்களை அனுமதிக்கவில்லை. தியேட்டர் உரிமையாளர்களையும் எச்சரித்துள்ளனர்.

நல்ல தீர்ப்பு: மதுரையில் நடக்கும் இந்த கூட்டத்தை ஜெயா "டிவி' நேரடியாக ஒளிபரப்புகிறது. ஆனால் பல இடங்களில் கேபிள் ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுகின்றனர். என்னை அரசியலில் இருந்து விரட்டவும், ஒழித்துக் கட்டவும் முயற்சி நடக்கிறது. நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? எனது தலைமையில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்க விரும்புகிறீர்களா? இதற்கு அடுத்த தேர்தலில் நல்ல தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும். இலங்கை பிரச்னைக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததுதான் கருணாநிதியின் காமெடி. வரும் தேர்தலில் கருணாநிதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர், அழகிரி மத்தியமைச்சர், கனிமொழி எம்.பி., இப்படி உலகில் எங்காவது குடும்ப அரசியல் உண்டா? எனது ஆட்சியில் லாட்டரி விற்க தடைவிதித்தேன். இன்றும் அந்த தடை உள்ளது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் லாட்டரி விற்கப்படுகிறது. வாகனங்களில் கடத்துகிறார்கள்.

இலவச பம்ப் செட்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் துயரங்களை எடுத்து கூறினேன். மறுநாளே இலவச பம்புசெட் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். 19 லட்சம் பேருக்கு இதை வழங்க 190 ஆண்டுகளாகும். இலவச வீடு வழங்கும் திட்டத்தில் 75 ஆயிரம் ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளார். இதில், ஒரு கழிப்பறை மட்டுமே கட்ட முடியும். நானூறு சதுரடி கொண்ட வீட்டிற்கு 3 லட்சம் ரூபா செலவாகும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம்: ஒரு காலத்தில் இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது தடம் மாறிவிட்டது. இந்தியாவே வெட்கி தலைகுனியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவர்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு, தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1 லட்சம் ரூபாக்கு மேல் கொடுக்கலாம். தமிழக நலனுக்காக மைனாரிட்டி தி.மு.க., அரசை தூக்கி எறிய வேண்டும். அந்த சக்தி உங்களிடம் உள்ளது. அனைத்து நதிகளும் இறுதியில் கடலை நோக்கி செல்கிறது. ஒரே ஒரு நதி கடலில் கலக்காமல் கண்மாயில் முடிகிறது. அது வைகை. சிவனுக்கு ஆலகால விஷம் கொடுத்ததால், கடலில் கலக்கக்கூடாது என நதிக்கு ரோஷம் வந்தது. இப்படி நதிக்கு கூட ரோஷம், வீரமுள்ள மண் மதுரை. அ.தி.மு.க., ஆட்சி அமைவதற்கான "கவுன்டவுண்' முன்பே துவங்கிவிட்டது.மதுரைக்கு பூரண விடுதலை கிடைக்கும். தீய சக்திகள் அப்புறப்படுத்தப்படுவர். தமிழக மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது. பணத்தை கொடுத்தால், வாக்காளர்கள் அடிபணிந்து ஓட்டுப்போடுவர் என்ற நம்பிக்கையில் தி.மு.க., உள்ளது.

கூட்டணி எப்படி: கூட்டணி எப்படி இருக்குமோ என்ற சிறிய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். எனது கணிப்பு சரியாக இருக்கும். மேலும், 2011 ல் கோட்டையை பிடிக்கும் ஒப்பற்ற இயக்கமாக அ.தி.மு.க.,இருக்கும். மதுரையில் 4 மணியிலிருந்து "கரன்ட்கட்' செயப்பட்டுள்ளதாக தற்போது எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது. எனது பேச்சின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்க்கக்கூடாது என கருணாநிதி "பவர்கட்' செதுள்ளார். அடுத்த தேர்தலில் கருணாநிதியின் "பவரை' கட் செது, அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செவீர்களா?இவ்வாறு ஜெயலலிதா பேசினார். முன்னதாக மதுரை நகர செயலாளர் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசினர்.

 ஜெ.,கூறிய கூட்டணி கதை :  மதுரை ஆர்பாட்டத்தில் பேசிய ஜெ.,  கூட்டணி குறித்து சொன்ன கதை:பொறியாளர் ஒருவர் மூன்று கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினார். ""இப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் 30 டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு குண்டூசி எடையைக்கூட பாலம் தாங்காது; இடிந்துவிடும்,'' என்றார். ஒரு லாரி 30 டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாலத்தில் சென்றது. மறுமுனையில் லாரியை வரவேற்க, அதிகாரிகள் திரண்டிருந்தனர். லாரி மீது சில புறாக்கள் அமர்ந்திருந்தன. குண்டூசி எடைக்கு மேல் புறாக்கள் இருக்குமே என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், லாரி மறு முனையை அடைந்தது. இது குறித்து அந்த பொறியாளரிடம் ," புறாக்கள் அமர்ந்ததால், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்குமே,' என மக்கள் கேள்வி எழுப்பினர். பொறியாளர்,""இந்த ஒன்றரை கிலோ மீட்டரை லாரி கடந்தபின், டீசல் செலவாகிவிட்டது. புறாக்கள் அமர்ந்திருந்தாலும், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்காது,'' என்றார். அதுபோல் எனது கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக இருக்கும் என்றார்.

பரிசல்காரன் கதை:  முதல்வர் கருணாநிதியை குற்றம்சாட்டி ஜெ., கூறிய பரிசல்காரன் கதை: நான்குபுறமும் தண்ணீரால் சூழப்பட்ட கிராமத்திற்கு செல்ல பரிசல்காரர் இருந்தார். ஒருநாள் அந்த பரிசலில் ஆட்கள் ஏறும்போது, அங்கு விளக்குமாறு விற்பவர், ஒரு குரங்காட்டி, ஒரு பாம்பாட்டியும் உடன் ஏறினார். அப்போது கடைசியாக வந்தவர், மோசமானவர் என்பதால், அவரை ஏற்ற பரிசல் காரர் மறுத்தார். பொதுமக்கள் அவரின் கை, கால்களை கட்டிப் போட்டுவிடுவோம். அதனால் ஆபத்து வராது என்றனர். ஆனால் பரிசல்காரன், "கட்டிப்போட்டாலும் ஏதாவது செதுவிடுவான் என்று கூறி ஏற்ற மறுத்தார். பொதுமக்கள் மீண்டும் வற்புறுத்தியதால், அவரது கை, கால்களை கட்டியபடி வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏற்றினார். நடுவழியில் செல்லும்போது, அந்த நபர் தனதுவாயால் விளக்குமாற்று குச்சியை உருவி, குரங்கின் கண்ணில் குத்த, அது துள்ளி பாம்பாட்டியின் கூடை மீது விழுந்தது. இதனால் பாம்புகள் பரிசலுக்குள் சிதறி ஓட, அதில் பயணித்தவர்களும் பதறி நடுங்கி, ஓடினர். இதனால் பரிசல் நடு ஆற்றில் கவிழ்ந்தது. பரிதாபம் காட்டியவரால் படகு நீரில் மூழ்கி பலர் இறந்தனர். அதைப் போல தமிழக அரசியலில் புகுந்தவர்தான் திருக்குவளை தீய சக்தியான கருணாநிதி.

குலுங்கி குலுங்கி சிரித்த ஜெ.,: * விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ஜெ., வழிநெடுக தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு மாலை 4.18 மணிக்கு மேடை ஏறினார்.
* "மைக்' முன்பு பேச ஆரம்பித்த கட்சி அமைப்பு செயலாளர் கருப்பசாமி, "மைக்" கீழாக சென்று "அம்மாவுக்கு வணக்கம்' என்று கும்பிட, ஜெ., சிரித்தார். பின், தொடர்ந்து பேசிய
கருப்பசாமி, கருணாநிதியை கிண்டல் செய்து "எத்தனை பெரிய மனிதருக்கு" என்ற பாடலை பாட, ஜெ., குலுங்கி குலுங்கி சிரித்தார்.
* மதுரையின் பல இடங்களில் கேபிள் "டிவி' இணைப்பு துண்டிக்கப்பட்டதால், "டிவி'யில் நேரடி ஒளிபரப்பை காணமுடியவில்லை என புகார் எழுந்தது. சில இடங்களில் மின் தடை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது பற்றி மின்வாரிய மதுரை மண்டல தலைமை பொறியாளர் நச்சாடலிங்கம் ,"" மதுரையில் தினமும் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை அமலில் உள்ளது. இதை ஆறு பிரிவாக பிரித்து அமல்படுத்துகிறோம். நேற்று கூடுதலாக மின்தடை செய்யவில்லை. அவ்வாறு கூறுவது தவறு,'' என்றார்.
* மதுரை ஒலி,ஒளி அமைப்பு பிரபலமானது. ஆனால் முதன்முறையாக சேலம் மகுடஞ்சாவடியில் இருந்து ஒலி,ஒளி அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். தடை செயப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் தாராளமாக பயன்படுத்தப்பட்டன.
*ஜெ., பேசிக்கொண்டிருக்கும்போதே, வெளியூர் தொண்டர்கள் தங்கள் ஊர்களுக்கு சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.
*இதற்கிடையே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் பேச்சை கவனித்தனர்.
* 12 ரூபா தண்ணீர் பாட்டில், 30 ரூபாக்கு விற்கப்பட்டது.
* ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கண்டன கோஷங்கள் எழுப்புவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜெ கோஷங்கள் எதையும் எழுப்பாமல் பேச்சுடன் கூட்டத்தை முடித்துக் கொண்டார்.
*கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா கூறினாலும், வெகு ஜாக்கிரதையாக "தகவல்கள் தெரிவிக்கின்றன' என கூறினார்.
* பேச்சின் இடையே இருமல் ஏற்பட்டது. பேச்சில் ஒன்பது முறை எம்.ஜி.ஆர்.,பெயரை உச்சரித்தார். எம்.ஜி.ஆர்., பாடல் உட்பட ஆறு பாடல்களை பாடினார். இரண்டு கதைகள் மூலம் கருணாநிதி ஆட்சிக்கு வந்தது பற்றியும், கூட்டணி குறித்தும் விளக்கினார்.

ஜெ., பாதுகாப்பில் 3000 போலீசார்: நேற்று தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், டி.ஐ.ஜி.,க்கள் சந்தீப் மித்தல்(மதுரை), சைலேஷ் குமார் யாதவ் (திண்டுக்கல்), அமல்ராஜ் (ராமநாதபுரம்), எஸ்.பி.,க்கள் மனோகரன் (மதுரை), தினகரன்(திண்டுக்கல்), பாலகிருஷ்ணன்(தேனி), பிரதீப்குமார் (ராமநாதபுரம்), பிரபாகரன் (விருதுநகர்), ஆஸ்ரக் கார்க் (நெல்லை), ராஜேந்திரன்(கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில், 20 டி.எஸ்.பி.,க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள், 250 எஸ்.ஐ.,க்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 20 வெடிகுண்டு தடுப்பு பிரிவு குழுக்களும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டன. நகரில் போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் துணை கமிஷனர்கள் ராஜேந்திரன், சின்னசாமி மற்றும் உதவிகமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜெ., ஆர்ப்பாட்டம்: ரிங் ரோடு ஸ்தம்பித்தது?* சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்ட ஜெ., மதுரைக்கு 1.40 மணிக்கு வந்தார்.
* ஜெ.,வை வரவேற்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து இரு பட்டர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து மூன்று பட்டர்கள், சிறப்பு பூஜைகள் செத பிரசாதங்களுடன் வந்தனர்.
* மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு வரை மாநில மாணவரணி செயலாளர் நயினார் நாகேந்திரன், கோவை புறநகர் மாணவரணி செயலாளர் சந்திரசேகர் தலைமையில் கட்சி தொண்டர்கள் சீருடை அணிந்து பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.
*அ.தி.மு.க., தொண்டர்கள் பெரும்பாலானோர் வேன், லாரி "டாப்'களில் ஆபத்தான வகையில் உட்கார்ந்து பயணித்தனர். போலீசார் கண்டுகொள்ளவில்லை.
* மதியம் 12.45 மணிக்கு கட்சி நிர்வாகிகள் கார்கள், விமான நிலையம் ரோட்டில் அனுமதிக்கப்படாததால், ரிங் ரோடு மற்றும் மண்டேலா நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
* இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெ., வரும் நேரத்தில் அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட முயன்றனர்.  அவர்களை நிர்வாகிகள் சமரசம் செதனர்.
* கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், பா.பி., கட்சியினர் கொடிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
* மேடை அருகே புதிய தமிழகம் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த பெரிய கொடிகளை அசைத்தனர். அதை பார்த்த அவைத் தலைவர் மதுசூதனன், "தொண்டர்களுக்கு மறைக்கும் வகையில் இருப்பதால் ஓரமாக சென்று அசைக்கவும்' என அந்த கட்சி தொண்டர்களை கேட்டு கொண்டார்.
* மேடை அருகே பிரம்மாண்டமான கட்-அவுட்களில் மீது ஏறியிருந்த தொண்டர்களை இறங்கி வருமாறு, தொடர்ந்து "மைக்'கில் மதுசூதனன், பாலகங்கா எம்.பி., கேட்டு கொண்டனர்.
*மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த இரு தொண்டர்கள், தங்கத்தால் அலகு குத்தி வந்தனர்.
*ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்காக 20 ஏக்கர் பரப்பளவில் தயார் செயப்பட்ட இடத்தில், வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே தொண்டர்கள் குவிந்தனர். அவர்களை மகிழ்விக்க குத்தாட்டம், இன்னிசை கச்சேரி நடந்தது. சென்னை ஆவடி முன்னாள் கவுன்சிலர் பானுமதி  மேடை அருகே குத்தாட்டம் போட்டார்.
* கடும்வெயிலை தாங்க முடியாமல் தொண்டர்கள் பலர் நிழல் தேடி அலைந்தனர். மூன்று கி.மீ., தூரத்திற்கு நெரிசல் இருந்ததால், ஆர்ப்பாட்டத்திற்கு பலர் ரிங் ரோடு வழியாக வரமுடியவில்லை.
* போலீசை நம்பாமல் ரிங் ரோடு முதல் ஆர்ப்பாட்ட மேடை வரை சீருடை அணிந்த தொண்டரணியினர் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.
* மைக்செட் வசதிகள் போதுமானதாக இல்லாததால், சிவகங்கை ரோடு சந்திப்பில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், "மேடை அருகே என்ன நடக்கிறது' என்று தெரியாமல் தவித்தனர்.
* இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ரிங் ரோடு முழுவதும் ஆக்கிரமித்திருந்தன.
* ஆர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே, பாண்டி கோயில் எதிர்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உட்பட சுற்றுப்புற பகுதி கடைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில்,நேற்று மதியம் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து, சூறையாடினர். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த 4 போலீசார் ஒன்றும் செய முடியாமல் தவித்தனர்.
* கூட்டம் அதிகமானதால், சிந்தாமணி ரிங் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதில் வந்த தொண்டர்கள் அருகில் உள்ள வீட்டு உரிமையாளர்களிடம், "எவ்வளவு கி.மீ., நடந்து செல்ல வேண்டும்' என்று கேட்டதற்கு, "ஏழு கி.மீ., நடக்க வேண்டும்' என்று கூறினர். "அவ்வளவு தூரம் எங்களால் நடக்க முடியாது என சோர்ந்து அங்கேயே நின்றனர்.
இந்த செய்தியும் படமும்தினமலரில் இருந்து சுட்டது.