Showing posts with label அமீர். Show all posts
Showing posts with label அமீர். Show all posts

Wednesday, March 06, 2013

விஸ்வரூபம் - பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர்

1,விஸ்வரூபம் விவகாரம்; மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்!!

விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர் அமீர். அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் ‌போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர்.

இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில் காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.  அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவது போல அமைந்துள்ளது

 

 

2. .நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!

 விஸ்வரூபம் படத்திற்கு தானே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இந்த வெற்றியை தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக கமல் கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படம் தடைகள் பல கடந்து தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. 
 
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் கசோலையாகவும், பணமாகவும், தங்களது வீட்டு சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

விஸ்வரூபம் படத்திற்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் தனக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தமது அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு தம்மை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வருக்கும், ஊடக பங்காளிகளுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், இப்படத்தை அவர் பார்க்கவும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளேன்.

இந்த படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பலர் இப்படத்தை பார்த்து என்னை பாராட்டியுள்ளனர். அந்த பாராட்டு ஒன்றே எனக்கு போதும். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன். டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.

விஸ்வரூபம் படம் தொடர்பாக விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் தம்பி விஷாலுக்கு குரல் கொடுக்க நான் தயார். ஏற்கனவே சொன்னது தான். நான் எப்பவும் போல் அனைவருக்கும் அன்பை கொடுக்கிறேன். ஆனால் அவர்கள் திருப்பி அதே அன்பை நம் மீது காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்-2 வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரிஆஸ்பன் தயாரிக்கும் ஒருபடத்திலும், பிறகு எனது நிறுவனத்திலேயே மூ என்று ஒரு படத்தையும் இயக்க உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார். 
 
 
 
 
 
3.பிரமாண்ட இயக்குனரை மிரட்டிய கமலின் விஸ்வரூபம்! முதல்முறையாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது. கமலின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் படத்தை தடை செய்ய தமிழக அரசு முன்வர, கமல் இந்த நாட்டை விட்டே வெளியே போவேன் என்று கூறும் அளவுக்கு பிரச்னை பெரிதாக, கடைசியில் பிரச்னையெல்லாம் ஓய்ந்து, பல தடைகளை கடந்து படமும் ரிலீஸ் ஆனது. தமிழகம், புதுவை தவிர்த்து பிறமாநிலங்களில் ஜன-25-ம் தேதியும், தமிழகத்தில் பிப்-7ம் தேதியும் படம் ரிலீஸ் ஆனது. படமும் அனைத்து தரப்பினரால் பாராட்டு பெற்றது. அதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக அப்படத்தில் பூஜா குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா குமார் இதனை தெரிவித்தார். ரூ.95 கோடியில் உருவான விஸ்வரூபம் படம் இப்போது ரூ.200 கோடி வசூல் செய்து இருப்பது கமல் உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. அதே மகிழ்ச்சியோடு விஸ்வரூபம் பார்ட்-2 பணிகளை ரொம்ப துரிதமாக செய்து வருகிறார் கமல். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் விஸ்வரூபம்-2-வும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.  


தமிழில் சினிமாவைப்பொறுத்தவரை ஹாலிவுட்டுக்கு இணையான படங்களை தருபவர் என்ற பெருமை இதுவரை டைரக்டர் ஷங்கருக்கு மட்டும்தான் இருந்தது. ஆனால் கமலின் விஸ்வரூபம் படம் வந்த பிறகு அந்த பெயரை போய் விட்டது. ஷங்கர் படம் ஹாலிவுட் படம் மாதிரி என்றால், கமலின் படம் ஹாலிவுட் படமே என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதோடு, விஸ்வரூபம் படத்தைப்பார்த்த ஷங்கரும் அதிர்ச்சியடைந்து போய் இருக்கிறார். கமல் என்ற நடிகருக்குள் இத்தனை பெரிய இயக்குனரா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் அவர், ஒரு டைரக்டராய் நாம் இன்னும் நிறைய யோசிக்க வேண்டும் போலிருக்கிறதே என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்.

அதன்காரணமாக, ரஜினியை வைத்து தான் இயக்கிய எந்திரன் படத்தை விடவும் இப்போது விக்ரமைக்கொண்டு இயக்கி வரும் ஐ படத்தை இன்னும் பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார். அதனால் இதுவரை 80 கோடி பட்ஜெட்டில் ஐ படத்தை பண்ண பட்ஜெட் போட்டு வைத்திருந்தவர், இப்போது 145 கோடி வரை பட்ஜெட் உயர்த்தியிருக்கிறாராம். அதோடு, படத்தை உலக அளவில் பப்ளிசிட்டி செய்து வெளியிட்டு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
 
 
 
 
4.விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி...?!! -  விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் 15 நாட்களில் படத்திற்கான எல்லாம் வேலைகளும் முடிந்து தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தடைகள் பல கடந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் கடந்த பிப்-7ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் ஜன-25ம் தேதியும், வடமாநிலங்களில் பிப்-1ம் தேதியும் ரிலீஸ் ஆனது. படமும் ஹாலிவுட் தரத்தில் வந்திருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் விஸ்வரூபம் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். அதன்படி விஸ்வரூபம் முதல் பாகம் தயாரான போதே பார்ட்-2வுக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், விஸ்வரூபம் பார்ட்-2விலும், கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஆகியோரே முக்கிய ரோலில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி விரைவில் கமல், ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் படத்தில் பணியாற்ற இருப்பதால் விஸ்வரூபம்-2 வேகமாக முடித்துவிட எண்ணியிருந்தார். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் படி,  இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்தும் விடும் என்றும், அதனைத்தொடர்ந்து விரைவில் படமும் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
 
 
 
5.விஸ்வரூபம் 2க்கு பிறகு ஹாலிவுட்! கமல் முடிவு!! விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகத்தை முடித்த பிறகு ஹாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். பெங்களூருவில் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விஸ்வரூபம் பிரச்னையில் திரையுலகம் மற்றும் பத்திரிகைகள் எனக்கு ஆதரவாக இருந்ததாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. விஸ்வரூப பிரச்னை திடீரென்று பொது பிரச்னையாக மாறி விட்டது. கமல்ஹாசனுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட வேண்டுமா? என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.

பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த வாரம் விஸ்வரூபம் படம் வெளியாக உள்ளது. விஸ்வரூபம் இந்தி படம் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் வெளியாகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே விஸ்வரூபம் தமிழ் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் படத்தை முதலில் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பாக டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அது பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டு விட்டது. டி.டி.எச். மூலம் படம் வெளியிடும் புதிய முறை இன்று இல்லாவிட்டாலும் நாளை அமலுக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அடுத்தபடியாக ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னேவுடன் பணியாற்ற உள்ளேன். ஆனால், எனது விஸ்வரூபம் படத்தின் 2வது பாகத்தை முடித்த பிறகே அவருடன் பணியாற்றுவேன். இந்த ஆண்டுக்குள் விஸ்வரூபம் 2வது பாகம் வெளியாகும் என்று நம்புகிறேன். அந்த படம் இந்தியாவை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும். ஆனால், விஸ்வரூபம் முதல் பாகத்தை போன்று விமர்சனங்கள் எதுவும் வராத வகையில் பார்த்து கொள்வேன், என்றார்.
 
 
டிஸ்கி - டைட்டிலில் வந்த   பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர் 2ம் தனித்தனி மேட்டர்


Sunday, April 24, 2011

ரஜினியை தாக்கினேனா? - இயக்குநர் அமீர் VS விகடன் பேட்டி - காமெடி கும்மி

http://lh6.ggpht.com/__KO8CeenItc/SxCQcAZ9A_I/AAAAAAAACxQ/E7NHGoaV2xc/yogi_thumb3.jpg'


து வந்தாலும் சரி’ என்கிற தைரியத்தில் இதயம் திறப்பவர் இயக்குநர் அமீர். 


1. ''அமளிதுமளிபிரசாரம், அமோக வாக்குப்பதிவு... அடுத்து யாருடைய ஆட்சின்னு நினைக்கிறீங்க?'' எனக் கேட்டதுதான் தாமதம்... சிதறு தேங்காயாகச் சீறத் தொடங்கிவிட்டார் அமீர்.

இதுக்கு ஏன் சீறனும்? யோகி படம் உல்டான்னு சொல்றாங்களே.. அது நிஜமா?ன்னு கேட்டாத்தானே கோபம் வரனும்?

''என்னோட 'ஆதிபகவான்’ படத்தைப் பற்றிக் கேட்பீங்கன்னு பார்த்தா, அடுத்த முதல்வர் யாரா? அதிகமான வாக்குப் பதிவு யாருக்குச் சாதகம்னு தெரியாமல் இரண்டு கட்சிகளுமேஅல்லாடும் நிலையில், 'தலைப் பிள்ளை ஆண்... தப்பினால் பெண்’ என நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்?

ஆதிபகவன்.. டைட்டிலைப்பார்த்தாலே தெலுங்கு டப்பிங்க் வாசனை தெரியுது.. சத்தியமா படம் தேறாது.. 

இந்தத் தேர்தலில் ஜெயிச்சது வாக்காளர்களும் தேர்தல் ஆணையமும்தான். ஆனால், இந்தத் தேர்தலில் அரசியல் நாகரிகம்தான் பலிகடாவாகிவிட்டது. நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்குத் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கட்ட விழ்த்து விடப்பட்டன. 

ஆமா.. அண்ணன் அசிஸ்டெண்ட் டைரக்டர்சை திட்டற மாதிரி ஹி ஹி 

திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பற்றிப் பேசாமல், 'குடிக்கிறார், அடிக்கி றார்’ என்று பேசி சந்தி சிரிக்கவைத்துவிட்டார்கள். நேற்று வரை அரசியல் அரிச்சுவடி தெரியாத சிரிப்பு நடிகர்கள் இன்றைய தேர்தலைத் தீர்மானிக்கும் கருவிகளாக உருமாற் றப்பட்டார்கள். இந்தக் கேலிக்கூத்துகளைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!''

 அண்ணன் வடிவேல் கால்ஷீட் கேட்டு கிடைக்காத கோபத்தை இப்படி தீர்த்துக்கறார் போல.. ஹி ஹி 

2.''வடிவேலுவின் பிரசாரத்தைச் சொல்கிறீர்களா?''


''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிக்கிறேன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகனும் இன்றைக்கு எங்கே போனார்கள்?


 சிம்ரன் புருஷன் கூட குடும்பம் நடத்தபோய்ட்டார்( அவரோட புருஷன் கூடத்தான்.. யாரும் ஜெர்க் ஆகாதீங்க.. ). சினேகன் இப்போ சினேகா கூட சினேகமா இருக்காராம்.. ஹா ஹா நல்லா கேட்கரார்யா டீட்டெயிலு..


காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? 

அப்போ கேப்டன் கூட எந்த பிரச்சனையும் இல்லையே..?

விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தகராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம். 

அப்போ அரசியல் என்ன இதுக்குத்தான் பயன் படுத்தனும்?ஊழலும் பண்ணக்கூடாது,சொத்துத்தகராறுக்கும் யூஸ் பண்ணக்கூடாதுன்னா எப்படி?

இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன்.

 இல்லையே. நீங்க ஃபாரீன் டி வி டி யை கவனிச்சு சுட்டுட்டு இருக்கறதா சொல்றாங்களே..? ஹி ஹி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV__HkeEGx3NqF5J1Me9boRba3Y2JZOG24SdFBO7fgPFjr69qn6KTdvhjAzDyNGb5YwLeZC7X78V81x-dokG17bZ9P2geHuLd7LkcLXGDNk4KE94Ah62xq6My-pNtRoMaLw5GhkBCpOaE/s1600/ameer.jpg
வடிவேலு அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் என்றால், அதை விற்கிறவன்? இதைக் கேட்பதால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். இரு கட்சிகளுமே மதுக் கடை விஷயத்தில் ஒரே கொள்கையோடுதான் இருக்கின் றன. அரசே நடத்தும் மதுக் கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா, ஏன் அர சாங்கமே அந்தக் கடைகளைத் திறந்து வெச்சிருக்கு? ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம்!''


 என்ன ஒரே வித்தியாசம்னா ரேஷன் கடைல லேடீஸ் கூட்டம் அதிகமா இருக்கும், டாஸ்மாக்ல ஜென்ட்ஸ் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்.. 

3. ''அப்படி என்றால், மது குடிப்பது தவறு இல்லை என்கிறீர்களா?''

''ஒரு தாய் என்ன கொடுத்தாலும் குழந்தை அதைச் சாப்பிடுகிறது. காரணம், தாய் விஷத்தைக் கொடுக்க மாட்டாள் என்கிற நம்பிக்கை. மது குடிப்பது தவறு. ஆனால், அரசாங்கமே ஊற்றிக் கொடுக்கும் நிலையில், குடிப்பவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? உலகக் கோப்பை வாங்கிய மகிழ்ச்சியில் பல கோடி பேர் பார்க்க ஷாம்பெயின் பாட்டிலைத் திறந்து, சச்சினும் டோனியும் குடிக்கிறார் களே... அது மது இல்லையா?''

அப்போ.. அரசாங்கம் டாஸ்மாக்கை இழுத்து மூடிட்டா எல்லா பயல்களும் திருந்திடுவாங்களா? ஒரு பயலும் பாண்டிச்சேரிக்கோ,கேரளாவுக்கோ போக மாட்டானா?

4. ''வேட்பாளரை விஜயகாந்த் அடிச்சதா பரபரப்பு கிளம்பியதே?''

''அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், நிச்சயமா அது தப்புதான். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சாரா இல்லை, உதவியாளரைத் தட்டினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

 தெளிவா தெரியலயா? ஏன்? நீங்களும் மப்புல இருந்தீங்களா? 

ஆனால், அவர் அடிச்ச மாதிரியான காட்சிக்கு பின்னணி இசை எல்லாம் அமைச்சு, கிராஃபிக்ஸ் வேலைகளைக் காட்டியது, அடிச்சதை விட மோசமான விஷயம். குடிச்சதையும் அடிச்சதை யும் சொல்லிச் சொல்லியே, மக்களோட பிரச்னை களை மறக்கடிச்சிட்டாங்களே... அதுதான் ஜீரணிக்க முடியாத துரோகம்!''


 அதெல்லாம் யாரும் மறக்கலை.. மே 13 பாருங்க.. ரிசல்ட்டை.. மஞ்சள் துண்டைக்காணோம்.. ராசா துணியைக்காணோம்னு ஆளாளுக்கு ஓடரதை.. 

5. ''வடிவேலுவின் பேச்சுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாசாரம். யாரையும் திட்டிப் பேசினா, நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுக்கும் சிங்கமுத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது. 'விஜயகாந்த்துக்கு கேப்டன்கிற பட்டம் ஏன்?’னு கேட்கிற வடிவேலுக்கு 'வைகைப் புயல்’ என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா?


 இந்தப் புயல் எந்த மரத்தை பேத்துச்சு... எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்டச் செயலாளர் தொடங்கி ரௌடிங்க வரைக்கும் அத்தனைப் பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தைப் பத்தி இவ்வளவு பேசுற வடிவேலு, அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும்? ஆட்சி மாறி னால் அதோ கதி ஆகிடும்கிற பயம்தானே? 'எப் போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன்!’ என 87 வயதிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத் திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு? 

ஆமாமா.. கலைஞரின் அரசியல் நாகரீகம் உலகறிந்ததுதான்..

சினிமாவில் ஒரு காமெடி நடிகரோட ரோல்... ஹீரோ பின் னால் ஒளிந்துகொள்வதுதான்! நிஜத்திலும் வடிவேல் அதைத் தான் பண்ணி இருக்கார். கலைஞர், ஸ்டாலின், அழகிரிங்கிற ஹீரோக்கள் பின்னால் ஒளிஞ்சு நின்னு பேசினார்!''

 வில்லன்களை ஹீரோக்கள் என சொல்லும் காலம் இது.. 



6. ''இப்போ இவ்வளவு வெளிப்படையா பேசுற நீங்க, தேர்தலுக்கு முன்னரே பேசி இருக்கலாமே... தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்பழகன் தயாரிப்பில் படம் பண்றதால் தயங்கிட்டீங்களா?''

''தயாரிப்பாளர் அன்பழகன் என்னிடம் இதுவரைக்கும் அரசியல் பேசியதே இல்லை. ஓர் இயக்குநரா என்னை அவர் மதிக்கிறார். அதைவிட அதிகமா நான் அவரை மதிக்கிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவுதான் எங்களுடையது. தேர்தலுக்கு முன்னர் இதை நான் பேசி இருந்தால், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு பாடுவதா முத்திரை குத்தி இருப்பாங்க. மூச்சுக் காத்துக்குகூட முத்திரை குத்துற ஊர் இது. மே 14-ம் தேதி முதல்வர் பதவியில் யார் உட்கார்ந்தாலும், அவங்களுக்கு என்னோட அன்பான கோரிக்கை... நீங்க முதல்வரான உடனேயே திரைத் துறையில் இருந்து ஒரு கூட்டம் ஓடி வரும். மாலை மரியாதை செய்து, 'பாராட்டு விழா நடத்துறோம்... தேதி கொடுங்க’ன்னு கேட்கும். அய்யாவா இருந்தாலும், அம்மாவா இருந்தாலும், ஒருபோதும் அதுக்கு மயங்கிடாதீங்க. அந்தக் கூட்டத்தை விரட்டி அடிங்க. சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க. அதில் அரசியலைக் கலக்காதீங்க.

 தானாத்தேடி வர்ற புகழை. பாராட்டை யாராவது வேணாம்னு சொல்வாங்களா?

நடிகர்கள் அரசியல் ஆசையோட அலையுறாங்கன்னா, அதுக்குக் கட்சிகள்தான் காரணம். பிரசாரத்துக்கு கூப்பிடுறாங்க... வாய்ஸ் கொடுங்கன்னு சொல்றாங்க... உடனே கூடுற கூட்டமும் கிடைக்கிற வெற்றியும் தன்னால் நடந்ததா நடிகர்கள் கனவோட திரியுறாங்க. நாளைக்கே வடிவேலு தனிக் கட்சி ஆரம்பிச்சாலும், ஆச்சர்யம் இல்லை. யாரோ ஒருத்தர் எழுதிய வசனங்களைப் பேசிப் பழகிய வாய்கள் நாளைக்கு யாரை நோக்கியும் திரும்பும்!''


ரஜினியை மறைமுகமாத்தாக்கறீங்களோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihutaWQb4YM_vqi71v0dfR6pbIyrk9UTrEpEpXPxDZZAzxqKqQs2QBM3wvBPppMTumgcrs177EvSq99gjwCtjdGsJRLR-xAQQkoOKtwbLRbqtbVeXU8q5zScM2JJBus9t_9ysb-Oskqp0/s1600/viddiyaabalan.jpg
7.''அப்படின்னா திரைத் துறையினர் அரசியலுக்கு வரவே கூடாதா?''



''அப்படிச் சொல்லலை. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை சினிமாவில் மூழ்கிக்கிடந்திட்டு, திடீர்னு அரசியல் அவதாரம் எடுப்பதைத்தான் கண்டிக்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கு. 2016 தேர்தல் களத்தில் நிச்சயம் இந்த அமீர் இருப்பான். இதை வைத்து, ஆட்சியைப் பிடிக்கிற ஆசைக்காரர்களில் என்னையும் ஒருத்தனா நினைச்சுடாதீங்க.

 மாணவ ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலமா அனைவரையும் வாக்களிக்கவைக்கிறதுதான் நான் செய்யப் போற அரசியல். 'மாணவ மறுமலர்ச்சித் திட்டம்’னு ஆரம் பித்து, ஏழை மாணவர்களின் படிப்புக்கு மாணவர்களே உதவும் திட்டத்தை கும்பகோணம் கல்லூரியில் தொடங்கிவைத்து, பல கல்லூரிகளிலும் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

 இன்றைக்கு ஒற்றை மனிதரா ஊழலுக்கு எதிரான ஒருங்கிணைப்பை அண்ணா ஹஜாரே ஏற்படுத்தி இருக்கார். தள்ளாத வயதில் அவர் செய்ததை துள்ளும் வயதில் உள்ள நம்மால் செய்ய முடியாதா என்ன?!''

சினிமாக்காரங்க சி எம் ஆக நினைக்கறது தப்பில்லை.. ஆனா எல்லா சினிமாக்காரங்களுமே தான் தான் அடுத்த சி எம்னு நினைச்சுக்கறாங்க.. அதான் தப்பு..