Friday, May 27, 2022

KuttavumShikshayum (மலையாளம் ) -CRIME AND PUNISHMENT - சினிமா விமர்சனம் (இன்வெஸ்டிகேஷன் டிராமா)


இயக்குநர்  ராஜீவ்  ரவி  வித்தியாசமான  பர்சனாலிட்டி . கமர்ஷியல்  மசாலா அயிட்டங்கள்  இருக்காது. ரியலிஸ்டிக்  சினிமா  தான்  இவர்  சாய்ஸ். வைரஸ்  உட்பட  பல  படங்களின்  ஒளிப்பதிவாளர் . 2016 ல்  துல்கர்  சல்மான்  நடிப்பில்  வந்த Kammatti Paadam  தான்  இவரது   முந்தைய  படம் 

ஹிரோ ஒரு  போலீஸ்  ஆஃபிசர். ஒரு  நகைக்கடைல  கொள்ளை  நடக்குது.விசாரிக்கப்போறார். அங்கே  கடை  ஓனரோட  மகன்  அசால்ட்டா  வீடியோ  கேம்ஸ்  விளையாடிட்டு  செல்லும் கையுமா  எப்பவும்  இருக்கான் , அவன்  முகத்துல  களவு  போன  கவலையே  இல்லை அவன்  மேல  அவருக்கு  ஒரு   டவுட். அவனோட  செல்  ஃபோன்  நெம்பரை  சைபர்  க்ரைம்  போலீஸ்  மூலமா  டிராக்  பண்ணினா  இடுக்கி  மாவட்டம்  வண்ணப்புரம்கற  ஊர்ல  இருந்து  ஒரே  ஒரு  ஃபோன்  நெம்பர்ல  இருந்து  அடிக்கடி  கால்ஸ் , மெசேஜ்  வருது.  விசாரிச்சா  அவனோட  கேர்ள்  ஃபிரண்ட்


 யார்  மீதாவது  டவுட்  இருக்கா?னு   விசாரிச்சா இதுக்கு  முன்னால  கடைல  வேலை  செஞ்சு  இப்போ  கடைல  இல்லாத  ஒரு    ஆளைப்பத்தி  சொல்றார்  கடை  ஓனர்  , அவனைத்தொக்காத்தூக்கிட்டு  வந்து  விசாரிச்சா   அவன்  இல்ல.  சிசிடிவி  கேமரா  மூலம்  சந்தேகத்துக்கு  இடமான  வாகனங்கள் , ஆட்கள்   நடமாட்டம்  இருக்கா?னு  பார்த்ததுல    இந்த  ஏரியா  ஆட்களே  இல்லை . வடக்கே  இருந்து  வந்த  ஆட்கள்  தான்  இந்த  வேலையை  செஞ்சதுனு  தெரிய  வருது .  மேலிடத்தின் அனுமதியுடன்  4  பேர்  கொண்ட  டீமுடன்  ஹீரோ   பயணம்  பண்றார். அவர்  தான்  எடுத்துக்கிட்ட  வேலையை  வெற்றிகரமா  எப்படி  முடிச்சார்  என்பதுதான்  மிச்ச  மீதிக்கதை 


ஹீரோவா  ஆசிஃப் அலி  பிரமாதமான  ஆக்டிங் . முகச்சாயலில்  நம்ம  ஊரு  காக்க  காக்க  சூர்யா  வை  நினைவுபடுத்தறார்

ஹேர்  ஸ்டைல் , பாடி  லேங்க்வேஜ்  என  போலீஸ்  மிடுக்கு  பக்கா . அவரது  டீம்  மெம்பர்ஸ்  எல்லாரும்  கச்சிதமான  நடிப்பு


 ஹீரோவுக்கு    ஜோடி  இல்லை , ஹீரோயின்  இல்லை , காமெடி  டிராக்  இல்லை , மாமூம்  கமர்ஷியல்   விஷயங்கள்  இல்லை 

முதல்  பாதி  என்கொயரில  சுமார்   வேகத்துல  போகுது , பின்பாதி  நல்ல  வேகம். க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என   எதுவும்  இல்லை 


ஒளிப்பதிவு   கனகச்சிதம், எடிட்டிங்  இசை  ஓக்கே  ரகம் 


சபாஷ்  டைரக்டர் 


1  போலீஸ்  ஆஃபிசர்கள்  யூனிஃபார்மில்  இருக்கும்போது  வைக்கும்  சல்யூட்கள் , மஃப்டில   இருக்கும்போது  ஹையர்  ஆஃபீசர்களுக்குக்காட்டும்  மரியாதை  இவற்றை  கச்சிதமாக  பிரித்துக்காட்டியது. அந்த  டீம்  மெம்பர்சுடனான  கெமிஸ்ட்ரி 


2  திருடன்  கிட்டேயே  திருடிய  திருடன்  என  அரசியல்வாதிகள்  வீட்டில்  நிகழும்  திருட்டுகளைப்பற்றி  காமெடிகள்  பார்த்திருக்கோம்,  இதுல  கேரள  போலிசிடமே  லஞ்சம் அல்லது  கிஃப்ட்    கேட்கும்  வட  மாநில  போலீஸ்   அசத்தல் 


3   க்ளைமாக்சில்   திருட்டுக்கும்பல்  இருக்கும்  கிராமமே  போலீஸ்  கூட்டத்தை  துரத்துவது  அவர்கள்  தப்பிக்க  முயல்வது  பரபரப்பான  படப்பிடிப்பு  , கூடவே  இதுவரை  நாம்  பார்க்காத  காட்சி  அமைப்பு 


4   ஓவர்  ஹீரோயிசம், ஹீரோ  பஞ்ச்  டயலாக் ,  ஃபைட்  என  எதுவுமே  இல்லாதது  ஆறுதல். போலிஸ்  சப்ஜெக்ட்  படத்தில்  ஃபைட்  சீன்  கூட  இல்லாதது  ஆச்சரியம், சேசிங்  மட்டுமே  உண்டு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   அவ்ளோ  கஷ்டப்பட்டுக்கண்டுபிடிச்ச  ஒரு  கொள்ளையனை  கை விலங்கிட்டு  பாதுகாப்பா  வெச்சிருக்கறதெல்லாம்  ஓக்கே , ஆனா  நைட்  டைம்ல  அவனைப்பாதுகாக்க  ஷிஃப்ட்  முறைல  மாத்தி  மாத்தி  தூக்கம்  கெட்டு  பாதுகாப்பது  எதுக்கு ? அவனுக்கு  மயக்க  மருந்தோ , தூக்க  மருந்தோ  கொடுக்கலாமே? அலல்து  கை  காலை  கட்டிப்போட்டு  ரிலாக்ஸா  இருக்கலாமே? 


2  கொள்ளையன்  பாத்ரூம்  போகனும்  என்றதும்  ஒரு  போலீஸ்  அவனை  நம்பி  கை விலங்கை  ரிலிஸ்  செய்து  பாத்ரூம்க்கு  அனுப்ப  அவன்  ஈசியா  தப்பறான். அது  கிராமம்,  அவன்  ஆண்  ,  ஓப்பன்  பிளேஸ்ல  போ  என  அனுப்பி  கண்காணிப்பில்  வைத்திருக்கலாமே? அட்லிஸ்ட்  கால்ல  கயிறு  கட்டி  வெச்சிருக்கலாம்


3  கொள்ளையர்கள்  இருக்கும்  ஊருக்கு   வெறும் நாலஞ்சு  பேர்  மட்டும்  போவது  ஆபத்தாச்சே?  தகவல்  கிடத்ததும்  பெரிய  படையோட  போய்  இருக்கலாமே? 


ரசித்த    வசனங்கள்


1   புதுசா  ஒரு  ஊருக்கோ , மாநிலத்துக்கோ  போனா  அங்கே  கிடைக்கற  சாப்பாட்டை  சாப்பிட்டு பழகிக்கனும்


2 ஒரு  குற்றவாளியைபிடிச்சா  போலிஸ்க்கு  கிடைக்கும்  பாராட்டு, பிரமோசனை  விட    அவனை  தப்ப  விட்டா  கிடைக்கற  தண்டனை  அதிகம்


3  குற்றவாளியை  முதல்ல  காட்டிக்கொடுப்பது  அவன்  கண்  தான்


  இது  உண்மை  சம்பவம்கறாங்க, ஆல்  செண்ட்டர்  ஆடியன்சுக்கும்  இது  பிடிக்காது. குறிப்பிட்ட ஆடியன்ஸ்க்கு  மட்டுமே  பிடிக்கும், விரைவில் நெ ட்  ஃபிளிக்ஸ்  ரிலீஸ் 




 சிபிஎஸ்  ஃபைனல் கமெண்ட் -Kuttavum Shikshayum (மலையாளம்) - நகைக்கடைக்கொள்ளையர்களை தேடிச்செல்லும் மாறுபட்ட த்ரில்லர் . டூயட், மொக்கை காமெடி எதுவும் இல்லாமல் சொல்ல வந்த கதையை ரா வா சொன்ன விதம் குட் , ரேட்டிங் - 3 / 5 #KuttavumShikshayum

Monday, May 23, 2022

மவுனம் சம்மதம் (1990) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் & கோர்ட் ரூம் டிராமா)

 


📷
மவுனம் சம்மதம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் & கோர்ட் ரூம் டிராமா)
மெகா ஸ்டார் மம்முட்டி தமிழில் அறிமுகமான முதல் படம்.ரஜினியின் அதிசயப்பிறவி , 13ம் நம்பர் வீடு போன்ற படங்களுடன் சத்தமே இல்லாம 15/6/1990 ல் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன படம்.டைட்டிலைப்பார்த்து பலரும் இது ஏதோ ரொமாண்டிக் மெலோ டிராமானு ஸ்கிப் செஞ்சிருக்கவும் வாய்ப்புண்டு . போதாததுக்கு பிரமாதமான மெலோடி ஹிட் கல்யாணத்தேன் நிலா காய்ச்சாத பால் நிலா பாட்டுக்காகவே பார்த்தவர்கள் பலர்
ஹீரோயின் அமலாவோட அண்ணன் ஜெய்சங்கர் ஒரு அப்பாவி. இவரோட தம்பி சரத் குமாரோட மனைவி திடீர்னு ஒரு நாள் வீட்டில் எரிந்த நிலையில் பிணமா கிடக்கறார். சம்பவம் நடந்தப்போ சரத் குமார் வீட்டில் இல்லை . இது தற்கொலையோ?னு போலீஸ் நினைக்குது . அப்போ ஜெய்சங்கரோட தொழில் எதிரி நாகேஷ் இதுதான் சாக்குன்னு சில போலி சாட்சிகளை வெச்சு அது ஜெய்சங்கர் செஞ்ச கொலை தான்னு ஜோடிச்சு மாட்டி வைக்கிறார்.
மாலைமலர் மாதிரி நியூஸ்காரங்களுக்கு கொண்டாட்டம் , பிரபல தொழில் அதிபர் தம்பி சம்சாரத்தை தன் சம்சாரமா நினைச்சு தொடப்பார்த்திருக்கார், மசியலைன்னதும் கொன்னுட்டார்னு கதை கட்டி விடறாங்க
கோர்ட்ல கேஸ் நடக்குது , ஜெய் சங்கருக்கு பாதகமா தீர்ப்பு வருது .அந்தக்காலத்துல ஜோக்கே சோல்லத்தெரியாம தான் சொல்ரதுதான் செம காமெடினு அவரே நினைச்சு அவரே சிரிச்சுக்குவாரே ஒய் ஜி மகேந்திரன் அவர்தான் ஜெ3ய் சங்கரோட வக்கீல் . அவரால ஒண்ணும் பண்ண முடியலை , சரி அப்பீல் பண்ணலாம்னு அவரோட ஃபிரண்ட் மம்முட்டி மூலமா கேஸ் நடத்தறாங்க.
ஹீரோ மம்முட்டி அந்த கேசை நடத்தி ஜெய் சங்கர் நிரபராதினு தீர்ப்பு வாங்கிக்கொடுக்கறதோட மட்டும் இல்லாம யார் கொலையாளி, எதுக்காக நடந்த கொலைனும் கண்டு பிடிக்கிறார். க்ளை மாக்ஸ் ட்விஸ்ட் நல்லாருக்கு
ஹீரோ மம்முட்டி தமிழ் பேசி நடிச்ச முதல் படம் , இது ஈரோடு ஆனூர்ல ரிலீஸ் ஆகி 30 நாட்கள் ஓடுச்சு ஆச்சர்யமான விஷயம் , இவரோட நடிப்பைப்பற்றி புதுசா சொல்ல என்ன இருக்கு? யதார்த்தமான நடிப்பு . அமலாவிடம், பம்மும்போதும் சரி சவால் விடும்போதும் சரி கோர்ட் காட்சிகளில் வாதிடும்போதும் சரி , முத்திரை பதிக்கும் நடிப்பு
நாயகி அமலா . அமலாவின் அதிக பட்ச அழகு அக்னி நட்சத்திரம் , ஜீவா,வேலைக்காரன் , மெல்லத்திரந்தது கதவு போன்ற படங்களில் தான் செமயா இருக்கும்,. இதுல முதலுக்கு மோசம் இல்ல ரகம் தான் ( என்னமோ 1 கோடி ரூபா முதல் போட்டு படம் எடுத்த மாதிரியே பேசறான் பாரு )
வேலைக்காரனாக சார்லி கச்சிதமான நடிப்பு சரத்குமார் மனைவியாக ஸ்ரீஜா அதிக வாய்ப்பில்லை . அவரது முன்னாள் காதலனாக கொஞ்சம் பிரபலம் ஆன முகத்தை போட்டிருக்கலாம்
படம் போட்ட முதல் 40 நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோதான் , யார் யார் என்ன என்ன கேரக்டர்கள்? ஹீரோ பில்டப் ஹீரோ ஹீரோயின் சந்திப்பு மோதல் இப்டி 46 நிமிசம் போன பின் மெயின் கதைக்கு வருது . அதுக்குப்பின் சுவராஸ்யமான திரைக்தை. டிஸ்னி ஹாட் ஸ்டார்ல யூ ட்யூப்ல கிடைக்குது . பார்க்கறவங்க முதல் 46 நிமிசம் ஸ்கிப் பண்ணிட்டு பின் பார்க்கவும்.
ரசித்த வசனங்கள்
1 ஒரு வக்கீல் எல்லா கேஸ்லயும் ஜெயிக்கனும்னு அவசியம் இல்லை அவனால முடிஞ்ச வரை திறமையா வாதிடலாம் , அவ்ளோ தான்
2 என் பேரு அழகு
\
சரி , பேருலயாவது அழகு இருக்கே ?
அவன் பேரு ஜெய் சேகர் .. ஏதாவது ஒரு கேஸ்லயாவது ஜெயிச்சிருக்கானா? கேள்
3 இவரு சாதாரண வக்கீல் இல்லை , இவரு ஒரு கேஸ்ல வாதிடறார்னா எதிர் த்து வாதிடும் வக்கீல் லைப்ரரி போய் நோட் ஸ் எடுப்பாங்க , அங்கே போனா அவங்களுக்கு முன்பே ஜட்ஜ் நோட்ஸ் எடுத்திட்டு இருப்பார்
4 நிக்கற மரத்தை சாய்க்கவும் என்னால முடியும், சாய்ச்ச மரத்தை நிக்க வைக்கவும் முடியும்
5 யோவ் நீ எல்லாம் என்னா ஆளு ? 25 வருசமா பியுனா இருக்கற என் கிட்டே கிடைக்காத தகவலா ஆறு மாசமா மேனேஜரா இருக்கும் அந்த ஆள் கிட்டே கிடைச்சுடப்போகுது?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல டெட் பாடி பின்னந்தலைல அடிபட்டிருக்கு என்ற தகவல் தெரிஞ்சிடும்கறது கொலையாளிக்கு தெரியாதா? என்ன தைரியத்துல டெட் பாடியை எரிச்சுட்டா அது தற்கொலையா நினைச்சுக்குவாங்கனு நினைக்கறார்?
2 உயிருள்ள பொண்ணு தீப்பிடிச்சு எரியும்போது கதறல் சத்தம் ஊரையே தூக்கும், யாருக்கும் கேட்கலையா>னு கோர்ட்ல யாரும் வாதிடவே இல்லையே ?
3 முன்னாள் காதலியை சந்திக்க வரும் காதலன் இப்படியா லூஸ் மாதிரி கூட்டுக்குடித்தனம் இருக்கற வீட்டுக்கு வருவான் ?
4 சாதா குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணுக்கு துப்பாக்கி எப்படி கிடைச்சுது ? சம்பவம் நடந்த பின் ரிப்போர்ட்ல அந்த துப்பாக்கி பற்றி தகவலே இல்லையே?
5 சரத் குமாரின் மனைவி ஒரு பேங்க்ல ஒர்க் பண்ணினார் , அப்போ ஒரு காதலன் இருந்தான் என்பது ஃபிளாஸ்பேக் கதை , ஓக்கே , ஆனா அதே ஊரில் வாழ அவள் எப்படி ஒத்துக்கிட்டா? பின்னாளில் காதலனால் பிரச்சனை வரும் என யூகிக்க மாட்டாளா? பொதுவாக பெண்கள் மேரேஜ்க்குப்பின் ஏரியா மாறிடுவாங்களே ?
6 டெட்பாடியிடம் நகை மிஸ்சிங் என்ற கேள்வியே யாரும் கேட்கலையே?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம், மம்முட்டி ரசிகர்களும் பார்க்கலாம் . ஆனந்த விக்டன் மார்க் 42 ரேட்டிங் 2.5 / 5
Release date: 14 January 1989 (India)
Director: K. Madhu
Music director: Ilaiyaraaja
Screenplay: S. N. Swamy

Language: Tamil

Sunday, May 22, 2022

12TH MAN -2022 (மலையாளம் ) சினிமா விமர்சனம் ( இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர் )

 



ஜீத்து ஜோசஃப் + மோகன்லால்  கூட்டணி  ஆல்ரெடி  த்ரிஷ்யம் 1 (  பாபநாசம்) த்ரிஷ்யம் 2 என  இரு  மெகா  ஹிட்  த்ரில்லர்களை  தந்தது  என்பதால்  ஏகப்பட்ட  எதிர்பார்ப்புகள் . அவற்றை  பூர்த்தி  செஞ்சுதா?  சாஞ்சுதா?  பார்ப்போம்

விரைவில்  திருமணம்  நடக்க  இருக்கும்  ஒரு  ஜோடி ,  ஆல்ரெடி  மேரேஜ்  ஆன  4  செட் ஜோடி  ( செட்டுன்னாலும்  ஜோடின்னாலும்  ஒண்ணுதானே? ) ஒரு  டைவர்ஸ்  ஆன  பொண்ணு  மொத்தம்  11 பேரு  ஒரு  பேச்சிலர்  பார்ட்டில  கலந்துக்கறாங்க . இவங்க  11 பேருமே  +2  ரீயூனியன் , காலேஜ்  ரீ யூனியன்  மாதிரி  ஒரு  வாட்சப்  க்ரூப்ல  இருக்கறவங்க. பார்ட்டில  ஒரு  விளையாட்டு . எல்லாரும்  அவங்கவங்க   ஃபோனை  டேபிள்ல  வைக்கனும், ஒரு  மணி  நேரத்துக்கு  யார்    ஃபோனுக்கு  என்ன  கால்  வந்தாலும்  ஸ்பீக்கர்ல  போட்டு  பேசனும், மெசேஜ்  வந்தா  அதை  பப்ளிக்கா  படிச்சுக்காட்டனும்


இந்த  ஜாலி  கேலி  கேம்ல  ஆரம்பத்துல  ஒரே  ரகளையா  போய்க்கிட்டு  இருக்கு அப்போ  ஒரு  ட்விஸ்ட் .. மேரேஜ்  ஆகப்போகும்   சித்தார்த்தோட  நண்பன்  ஃபோன்  பண்றான், ஸ்பீக்கர் ல  ஃபோன்  இருப்பது  தெரியாமல் “அந்த  க்ரூப்பில்  உள்ள  ஒரு  பொண்ணுக்கு  சித்தார்த்  கூட  இருக்கும்  கள்ளத்தொடர்பு  பற்றியும் , அவளுக்கு  கர்ப்பத்தடை  மாத்திரை  வாங்கிக்கொடுத்தது  பற்றியும்  ஓப்பனா  சொல்லிடறான்


கூட்டத்துல  இருக்கும்  மொத்த  11  பேர்ல  6  பெண்களில்  ஒருவர்  டாக்டர். நானே  டாக்டர்  நான்  எதுக்கு  இன்னொருவர்  கிட்டே  டேப்லெட்  கேட்பேன், அது  நான்  இல்லைனு  சொல்லிடறா. டைவர்ஸ்  லேடி  நான்  எதா  இருந்தாலும்  துணிச்சலா  ஃபேஸ்  பண்ணுவேன், நான்  இல்லைங்கறா ./ அப்போ  மீதி  இருக்கும் 4 பேருல  சித்தார்த்தை  மேரேஜ்  பண்ணிக்கப்போற  பொண்ணு தவிர    மீதி  இருக்கும்  மூவரில்   யாரோ  ஒருவர்  கூட தான்  கனெக்சன்  போல, 


 சொல்வதெல்லாம்  உண்மை  டி  வி  ரியாலிட்டி  ஷோ  மாதிரி   ஆகிப்போச்சு.. சித்தார்த்தை  மேரேஜ்  பண்ணிக்கும்  ஐடியாவையே  கேன்சல்  பண்ணிடலாமா?னு மணப்பெண்  யோசிக்குது . சித்தார்த்தின் இந்த  தவறான  நடத்தை  பற்றி  கோபமாக  விமர்சிக்கும்  ஷைனி  கொலை  செய்யப்படுகிறார். அந்தக்கொலையை  செய்தது  யார்  என்பதை   12 வது  நபராக  வரும்  ஹீரோ  துப்பு  துலக்குவதுதான்  மிச்ச  மீதிக்கதை


படத்தில்  ஹீரோவா  இன்வெஸ்டிகேஷன்  ஆஃபிசரா  மோகன்லால். கச்சிதமான  நடிப்பு , ஓப்பனிங்க்  சீனில்  ஓசி  சரக்கு  கேட்கும்  ஆளாக  சாதா ஆளாக  வரும்போது  அவர்  காட்டும்  பாடி  லேங்க்வேஜ் , பின்  பாதியில்  போலீஸ்  ஆஃபிசராக  காட்டும்  மிடுக்கு  நல்ல  ட்ரான்ஸ்ஃபர்மேஷன். (  ஆனா முன்  பாதியில்  வரும் மோகன்லால்  கேரக்டர் அவ்ளோ  தூரம்  இறங்கி இருக்கனுமா?  என்பது  என்  தனிப்பட்ட  சந்தேகம் )

சபாஷ்  டைரக்டர் 

இந்தப்படத்துல  ரெண்டு  முக்கியமான  விஷயங்களை  சொல்லியே  ஆகனும். டைரக்டரை  பாராட்டியே  ஆகனும்.


 1 ஒவ்வொருவர்  தரும்  வாக்குமூலம் அல்லது  ஃபிளாஸ்பேக்    சீன்  ஓப்பனிங்  ஆகும்  இடமும்  அது  ஃபினிஷிங்  ஆகும்  விதமும்  கேமரா  கட்  ஆகும்  இடமும்  அபாரம் . எடிட்டர் ,  ஃபோட்டோகிராஃபர் , டைரக்டர்  மூவரும்  அபாரமான  உழைப்பு. 


2  அதே  போல்  விசாரணை. எதிராளியை  பேச  வைத்து  அவங்க  வார்த்தையை  வெச்சே  மடக்கும்  உத்தி   அருமை .  அவங்க  விளையாண்ட  ஸ்பீக்கர்  ஃபோன்  ஐடியாவையே  எக்ஸ்டண்ட்  பண்ணி  துப்பு  துலக்கும்  ஐடியாவும் குட் 


முதல்  40  நிமிஷம்  போராகத்தான்  மூவ்  ஆகுது .  கதையில்  வரும் 11  கேரக்டர்களும்  நம்  மனசில்  பதியவே  ஒரு  மணி  நேரம்   ஆகிடுது. பின்  பாதியில்  நல்ல  விறுவிறுப்பு \

\ஆனா த்ரிஷ்யம்  படத்தில்  இருந்த  க்ரிஷ்பான  திரைக்கதை  இதில்  மிஸ்சிங் வித்தியாசமான  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  தான்  , ஆனா  த்ரிஷ்யம்  உடன்  கம்பேர்  பண்ணிட்டு  பார்ப்பவர்களை  திருப்திப்படுத்தாது . 


 அனுசிதாரா , வெயில்  பிரியங்கா , அனுஸ்ரீ , லியோனா  லிசா, ஷிவ்தா  அனைவரும்  நடிப்பும்  குட்   ஆண்கள்  நால்வர் ஷைஜூ, க்ரூப், ராகுல் , மாதவ்  ஓக்கே  ரக  நடிப்பு 


ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  ஓடும்  படம்  என்பதால்  ஒரு  சலிப்பு  வருது . கொலையாளி  யார்  என  தெரியும்போது  சரி சரி  படம்  முடிஞ்சுதா?என்ற  எண்ணம்  தான்  தோணுது 


எடிட்டர்  வினாயக் , ஒளிப்பதிவாளர்   சதீஷ்  க்ரூப்  இருவரும்  கடுமையான  உழைப்பு , அனில்  ஜான்சன்  பிஜிஎம் ஓக்கே  ரகம்  தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1 கொலை  செய்யப்பட்ட   பெண்  பைப்போலார்  பேஷண்ட்  என்பதற்கும்   திரைக்கதைக்கும்  என்ன  சம்பந்தம்,? 

2   ஏற்கனவே  எரேஸ்  பண்ன  கசமுசா  வீடியோ  க்ளிப்  என்னிடம்  இருக்கு  என  மிரட்டுபவரிடம்  5  லட்ச  ரூபா   தர  தயாரா  இருப்பவர்  அப்படி  க்ளிப்பிங்  இருக்கா?னு  ஃபோனை  செக்  பண்ணாமல்  ஏமாறுவது  எப்படி?


3   பத்து  லட்ச  ரூபா  பணத்தேவை  உள்ளவர்  தவணையாக  5  லட்சமாக  இருவரிடம்  ஏன்  கேட்கனும்? வீடியோ  காட்டி  மிரட்டி  அவர்ட்டயே  ஏன்  கேட்கலை ? 


4    ஓப்பன்  ஃபோன்  போட்டி  வைக்கும்போது  சைலண்ட்  மோடில்  அல்லது  ஏரோப்ளேன்  மோடில்  யாராவது  ஃபோனை  வெச்சிருக்காங்களா?  என்பதை  ஏன்  யாரும்  செக்  பண்ணலை ? (  ஹீரோ  தான்  கண்டுபிடிக்கனுமா?  அந்த  11  பேரில்  ஒருவருக்குக்கூடவா  அந்த  ஐடியா  வர்ல >) 


6  காலைல  கிளம்பறவங்க  மிட்  நைட்  வரை  எல்லார்  ஃபோனும்  ஆன்ல  இருப்பது  எப்படி ? பவர்  பேங்க்கும்  இல்லை ,  ஒருவருக்குக்கூடவா  பேட்டரி  டவுன்  ஆகாது ? 


7  டெட்  பாடி  உடலில்  உள்ள  ஃபிங்கர்  பிரிண்ட்டை  வெச்சு  மேட்ச்  பண்ணாலே  அங்கே  இருக்கும்  கொலைகாரன்  யார்?னு  தெரிஞ்சிடுமே? அதை  ஏன்  செய்யலை ?   


மனம்  கவர்ந்த  வசனங்கள் \\


1   காசையே  பார்த்துட்டு  இருந்தா  வாழ்க்கை  எப்படி வாழ? 


வாழ்க்கைல    காசுதான்  முக்கியம், அது  இல்லாம  எப்படி  வாழ்க்கை  வாழமுடியும்?


2   குடும்பத்தைப்பற்றி  அவருக்கு  அக்கறை  இல்லை ,  வேலை , பணம்  இந்த  ரெண்டிலும்  தான்  அவர்  கவனம்  பூரா 

 எந்த  வேலையா  இருந்தாலும்  ஃபுல்  கான்செண்ட்ரேஷன்  பண்ணினாதான்  ஜெயிக்க  முடியும், ஜெயிச்சா தானே  குடும்பத்தைப்பார்க்க முடியும் ? 


3   மிஸ்!  உங்களை  எங்கேயோ  பார்த்த  நினைவு  இருக்கே?


 இதெல்லாம்  ஓல்டு  டெக்னிக், ஏதாவது  புதுசா  ட்ரை  பண்னலாமில்ல? 


4   எவ்வளவு  கருத்தொருமித்த  தம்பதியா  இருந்தாலும் ,  க்ளோஸ்  ஃபிரண்ட்சா  இருந்தாலும்  பகிரப்படாத / பகிரக்கூடாத    ரகசியங்கள் அ வரவர்க்கு  இருக்கும் 


சி.பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   த்ரிஷ்யம்  புகழ்  ஜீத்து  ஜோசப்  அட்லீ  அவதாரம்  எடுத்து  30 %   * 3  படங்கள்  + 10%  சொந்த  சரக்கு  போட்டு 

1  12 Angry Men (1957 film)நெட் ஃபிளிக்ஸ்  கோர்ட் ரூம்  டிராமா 


2  An Inspector Calls (2015 TV film)  த்ரில்லர் 


3  Perfect Stranger (2007 film) 

  சைக்கோ  த்ரில்லர்   ,  இதன்  ரீமேக்  ( NOTHING TO HIDE ( FRENCH)

எடுத்த  படம்தான்  இது . இந்த  3  படங்கள்  பார்க்காதவர்கள்    பார்க்கலாம்.  டிஸ்னி  ஹாட்  ஸ்டார்  ரிலீஸ் .  பிரமாதமான படமும்  இல்லை ,  வேஸ்ட்டும்  இல்லை,  பார்க்கலாம்  லெவல்   ரேட்டிங்  2.25  / 5 



Friday, May 20, 2022

நெஞ்சுக்கு நீதி (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )


 ஜெய்  பீம்  மாதிரி  ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு  இழைக்கப்படும்  அநீதிக்கு  போராடும்  ஹீரோவின்  கதைதான் இந்த  ஆர்ட்டிக்கிள் 15(2019) ஹிந்திப்படத்தின்  அஃபிசியல்  ரீமேக். ஒரு  நல்ல  கரைம்  த்ரில்லர்  கதையில்  சாமார்த்தியமாக ஜாதிய  ஏற்றத்தாழ்வுகளை  சுட்டெரிக்கும்  கூர்மையான  வசனங்களால்  ஒரு  மாறுபட்ட  த்ரில்லர்  மூவியைப்பார்த்த  அனுபவம்  கிடைக்குது 


பொள்ளாச்சி  பக்கம்  ஒரு  கிராமம். தலித்  சிறுமிகள் மூவர்  காணாம  போறாங்க. அதுல  ரெண்டு பேர்   மரத்தில்  தூக்கில்  தொங்கறாங்க, இன்னொரு  ஆள்  காணோம் , போலீஸ்  ஆஃபீசராக  வரும்  ஹீரோ  அந்த  கேசை  துப்பு   துலக்கி   போலீஸ்  துறை , அரசியல்  துறை  தலையீடுகளைத்தாண்டி  எப்படி  ஜெயிக்கிறார்  என்பதே  திரைக்கதை 


ஹீரோவா  உதயநிதி  ஸ்டாலின். தனிப்பட்ட  முறையிலும்  சரி  , அரசியல்  ரீதியாகவும்  சரி    சிற்சில  விமர்சனங்கள்  இருந்தாலும்  உதயநிதி , அருள் நிதி  இருவரையும்  ஒரு  விஷயத்துக்காக  பாராட்டியே  ஆக  வேண்டும் . தங்களுக்கு  என்ன  வருமோ  அந்த  மாதிரி  ரோலை  தேர்வு  செய்வது . ஓவர்  பில்டப்போ  , ஹீரோயிசமோ  காட்டாமல்  முடிந்தவரை  அடக்கி  வாசிப்பது . பணபலம்  ,பதவி  பலம்  இருந்தாலும்  சக்திக்கு  மீறி  எதுவும்  செய்யாததே  சபாஷ்  போட  வைக்குது


உதயநிதிக்கு இது  ஒரு  முக்கியமான  படம் . போலீஸ்  ஆஃபீசர்  ரோலுக்கு  அவரால்  என்ன  அளவு  நியாயம்  செய்ய  முடியுமோ  அந்த  அளவு பண்ணி  இருக்கார் , ஃபிட்டான  தொப்பை  இல்லாத   பாடி  , க்ளோஸ்  ஹேர் கட்  எல்லாம்  பக்கா, வசனங்களூம் , பிஜிஎம்மும்  அவருக்கு  பக்க பலம் . வெல்டன்  உதயநிதி 


ஹீரோயினாக   மனைவியாக  வரும் தன்யா  வுக்கு  அதிக  காட்சிகள்  இல்லை . தன்  தங்கைக்காகப்போராடும்   ஷிவானி  குட்  ஆக்டிங்க்.   ஆரி  அர்ஜூனன்  ஓக்கே ரகம் 


படத்தின்  முக்கிய  வில்லனாக , அரசியல்வாதியாக  வரும்   ராகுல்  தயாரிப்பாளர்களில்  ஒருவர்  போல .ஓக்கே ரகம்   சர்க்கிள்  இன்ஸ்பெக்டராக  வரும்   சுரேஷ்  சக்ரவர்த்தி  ஹீரோவுக்கு  முன்  கும்பிடு  போட்டு  குழையும்  நடிப்பிலும் சரி  ,  ஹீரோ  இல்லாத  போது  பண்ணும்  வில்லத்தனமும்  சரி  தெனாவெட்டான  நடிப்பு 


இளவரசு , மயில்சாமி  கொடுத்த  கேரக்டர்களை  சரியாக செஞ்சிருக்காங்க .  சாயாஜி  ஷிண்டே  ஒரே  காட்சியில்  வந்தாலும்  ஸ்கோர்  பண்றார் 


 இசை   திபு  நினன்  தாமஸ்  பிஜிஎம்மில்  பின்னி  இருக்கார்  2   பாடல்களூமே  குட்  என்றாலும்  கதகளி  பாட்டு  செம 


வாட்டாக்குடி  இரணியன்  படத்துக்குப்பின்  புரட்சிகரமான வசனங்கள்  இதில்  தான். வசனகர்த்தா  கலக்கி  விட்டார் 


 சபாஷ்  டைரக்டர் ( அருண்ராஜா  காமராஜ்)


1    ஒரு  அஃபிசியல்  ரீமேக்  படத்தை  வெற்றிப்படமாக  கொடுப்பது  எளிதல்ல . தமிழுக்கு  தக்கபடி  சில  சீன்கள்  மாற்றி  அதே  உயிரோட்டத்துடன்  தருவது  பாராட்ட  வேண்டியது. குறிப்பாக  ஒரிஜினல்  படத்தில்  வட  மாநிலத்தில்  நடக்கும்  கதையை  சாமார்த்தியமாக  பொள்ளாச்சி  பாலியல்  பலாத்கார  சம்பவத்துடன்  கோர்த்து   கதை  அமைத்ததும், ஹீரோ  கேரக்டரை  உயர்த்திப்பிடிக்கும்  வசனங்களை  திட்டமிட்டு  பயன்படுத்தியதும்  அட  போட  வைக்குது


2  ஹீரோ  சக  போலீஸ்  ஆட்களிடம்  அவர்கள்  ஜாதி  பற்றி  விசாரிக்கும்  இடம் தியேட்டரில்  கைதட்டலை  அள்ளி  விட்டது (  எற்கனவே  இதே  போல  ஒரு  காட்சி  ஜெய்பீம்ல  வந்தாலும்  இதுவும்  ஓக்கே  தான் ) 


3    ஒரிஜினல்  படத்தில்  தூக்கு  மாட்டிக்கொண்ட  இரு பெண்களும்  லெஸ்பியன்கள்  என்பது  போல  காட்சிகள்  நீளும் ,  தமிழுக்காக  அதை அடக்கி  வாசிச்சிருக்காங்க 


4  இது  போன்ற  க்ரைம்  த்ரில்லரில்  குற்ரவாளியை  ஆரம்பத்திலேயே  அடையாளம்  காட்டினாலும்  அது  போக  மீதி  இரண்டு  குற்ரவாளிகளை  க்ளைமாக்சில்  காட்டும்  ட்விஸ்ட்  குட் \


5  கணவன்  மனைவியான  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  ஃபோன்  மூலம்  உரையாடிக்கொள்வது  அப்பப்ப  கேஸ்  டீட்டெய்ல்  ஷேர்  செய்வது  தமிழ்  சினிமாவுக்கு  புதுசு 


6   திருப்பூரில்   பட்டியல்  இன  பெண்  என்பதால்  சத்துணவுப்பணியாளர்  சமைத்த  சாப்பாட்டை  கொட்டுவது  சாமார்த்தியமாக  கதை  ஓட்டத்தில்  சேர்த்தது ,    பெரியார்  அம்பெத்கார்  சிலைகள்  கூண்டுக்குள்  இருப்பதற்கான  விளக்கம்  எல்லாம்  அபாரம்  (  இவை  ஒரிஜினல்  வெர்சன்ல  இல்லை  ) 


7  பிறபடுத்தப்பட்ட  வகுப்பைச்சேர்ந்த  பெண்  டாக்டராக  இருந்தாலும்  எனக்கும்  முன்  அவ  கோட்  போடக்கூடாது  என  போலீஸ்  ஆஃபீசர்  சொல்ல  ஒரு  கட்டத்தில் அந்த  லேடி   டாக்டர்  போலீசை யே  மாட்ட  விட்ட  பின்  ஸ்லோமோஷனில்  கோட்  போட்டு  நடப்பது  கூஸ்பம்ப்  மொமெண்ட் 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்   , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   தலித்  பெண்களை  ரேப்  செய்யும்  மூவரும்   ஈசியாக  தப்பிக்க  வாய்ப்பு  இருந்தும்  மடத்தனமாக  மரத்தில்  தொங்க  விடுவது  ஏன்?  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  ரேப்  செய்தது  தெரியாதா?  சம்ப்ள  உயர்வு  கேட்டதற்கு  பதிலடியா ஒரு  பயம்  வரனும்  என  சால்ஜாப்  சொல்லப்படுது , சம்பந்தப்பட்ட  பெண்கள்  காணாமல்  போனாலே  போதுமே?


2   பாதிக்கப்பட்ட  மூன்று  பெண்களில்  ஒரு  பெண்  தப்பிக்கிறார்.   குற்ரவாளிகளில்  இருவர்  போலீஸ்  டிபார்ட்மெண்ட்  ஆட்கள்  அவர்கள்  மோப்ப  நாயை  வைத்து  அந்தப்பெண்ணை  சேஸ்  பண்ண வில்லையே?  ஏன்? 


3    காணாமல்  போன  சிறுமியைக்கண்டுபிடிக்க  ஹீரோ  அந்த  புரட்சி  பேசும்  ஆளை  உதவிக்கு  அழைத்தால்  ஈசியாக  வந்திருப்பாரே? அதை  விட்டுட்டு  சுற்றி  வளைத்து  இழுப்பது  ஏன்? 


  நச்  வசனங்கள்    (  தமிழரசன் பச்சமுத்து)


1    அப்பா  , நம்ம  தாத்தாவை  இங்கே  எரிக்காம    ஏன் அங்கே  எரிச்சோம்?

'நம்மல இங்க எரிக்க தாண்டா விடுவாங்க எரிய விடமாட்டாங்க', '


2   தீ கூட எங்களுக்கு தீட்டாச்சு', 


3   இந்திய  அரசியல்  சட்டத்தை  உருவாக்கிய  அம்பேத்காரையே  இன்னும்  ஜாதிய  தலைவராத்தான்  சிலர்  பார்க்கறாங்க ? 


4 நம்ம  வலிகளைப்போக்கத்தான்  கட்சினு  நினைச்சா   நம்ம  வலிகளை  வெச்சுத்தான்  கட்சினு  ஆகிடுச்சு 


5  சார்  , இது  கவர்மெண்ட்  ஸ்கூல்; அப்படி  பண்ணக்கூடாது 


  நாம  தான்யா  கவர்மெண்ட்  டே


6   உங்க  சட்டம்  சிஸ்டத்தைக்காப்பாத்தும் , நியாயத்தைக்காப்பாத்துமா? 

7  எல்லாத்தையும் ஹீரோ மாதிரி உடனே மாத்திர முடியாது'


, 'ஹீரோவ எதிர்பார்க்காதவங்க வேணும்


எல்லாரும் சமம்னா யார் ராஜா?

 சமம்னு நெனைக்கிறவன்தான் ராஜா'


, '9  கோட்டால போட்ட டாக்டர் கோட்', 


'10  நடுவுல நிக்கிறது இல்ல சார் நடுநிலை; நியாயத்தின் பக்கம் நிக்குறது தான் நடுநிலை', 



11  ஒருத்தன் நல்லவனா இருக்குறதும் கெட்டவனா இருக்குறதும் சாதியில இல்ல குணத்துல இருக்கு'


12 , 'வலியில கத்துனா கூட ஏன் கத்துறன்னு தான் கேப்பாங்களே தவிர, அடிக்கிறவன எதிர்த்து பேசமாட்டாங்க', 

'13  சட்டம் தான் இந்த நாட்டின் தேசிய மொழி'

14  இந்தி கத்துக்குறது ஆர்வம். கத்துக்கணும்னு கட்டாயப்படுத்துறது ஆணவம்'

15    2000    வருசமா    நாங்க பட்டினி  கிடந்ததே  அவங்களுக்குப்புரியல 16 


16   வதந்திகளை  பரப்பறதை  விட   வதந்தியை  நம்புவது  ஆபத்தானது 


17  ஜெயிலுக்குப்போனவன்னு   ஏன் யோசிக்கறீங்க? அரசியல்  பண்ண  ஒரு  ட்ரெய்னிங்னு நினைங்க


18   சரியானவங்க  கைல  சட்டம்  இருந்தா  போது ம் , தப்பானவங்க ச்ட்டத்தைக்கைல  எடுக்க  வேண்டிய  அவசியம் இல்லை 


19   ஒவ்வொரு  ஜாதிக்கும்  ஒரு  குணம்  இருக்கும், அதும்படிதான்  நடப்பாங்க 


20   இந்த  உலகத்துல  தப்பு  பண்றவங்க  5%  பேர்னா  அதை  வேடிக்கை  பார்க்கறவங்க 85%  பேரு , தப்புக்கு  துணை  போறவங்க  10%  பேரு 


சி பிஎஸ் ஃபைனல் கமெண்ட் -


நெஞ்சுக்கு நீதி −நேர்த்தியான திரைக்கதை,பொறி பறக்கும் புரட்சிகர வசனங்கள் ,நெஞ்சை நெகிழ வைக்கும் நெறியாள்கை,உதயநிதியின் கச்சிதமான நடிப்பு,வெரிகுட் க்ரைம் த்ரில்லர், எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் 48 ,( 50 போடவும் வாய்ப்பு இருக்கு ) ரேட்டிங் 3.25 / 5

Friday, May 13, 2022

DON - டான் - 2022 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா)

 


ஹீரோ அப்பாவுக்கு  பயந்தவர். ரொம்ப  கண்டிஷனான  அப்பாவோட  ஆதிக்கம்  அவருக்கு  பாகற்காய்.  ஸ்கூ;ல்  படிக்கும்போதே  ஒரு  லவ். ந்த  லவ்  ஒர்க்  அவுட்  ஆகற  டைம்ல  அப்பா  மேல  பயத்துல  பேக்  அடிக்கறாரு.  அதனால  நாயகிக்கு  அவர்  மேல  செம  காண்டு 


  காலேஜ் ல  சேரும்  ஹிரோ  அங்கே பிரின்சிபல்  வடிவில்  கண்டிஷனான  வில்லனை  சந்திக்கிறார். அவரோட  மோதி  ஜெயித்தாரா?  இல்லையா? அப்பாவோட  கனவு  நிறைவேறுச்சா? ஹீரோவோட  லட்சியம்  என்ன  ஆச்சு? இதுதான்  பின்  பாதி  திரைக்கதை 


  ஹீரோவா அடுத்த  ரஜினி ,  அடுத்த  விஜய்  ஆகத்துடிக்கும்  சிவகார்த்திகேயன்.முதல்  பாதி  பூரா  ஜாலி  வாலா  காமெடி  காதல்  கலாட்டாக்கள் தான்.நீண்ட  இடைவெளிக்குப்பின்  கலகலப்பான  சிவகார்த்திகேயனை  ரசிக்க  முடியுது .வில்லனுடனான  மோதலில்  அசத்தும் ஆக்சன்  நடிப்பு, பின்  பாதியில்  அப்பா  செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்    உருக  வைக்கிறார்


ஹீரோவோட  அப்பாவா  சமுத்திரக்கனி. வழக்கமாகப்பேசும்  அட்வைஸ்கள்  இல்லை  ஆனா    நல்ல  நடிப்பு  இருக்கு , இவரோட  கேரக்டர்  ஸ்கெட்ச்  சந்தோஷ்  சுப்ரமணியம்  பிரகாஷ்ராஜ்    கேரக்டரை  நினைவுபடுத்துது 


வில்லனா  , பிரின்சிபாலா    எஸ்  ஜே  சூர்யா. இவரது  கேரக்டர்  நண்பன்  பட  சத்யராஜ்  கேரக்டரை  நினைவுபடுத்துது.  மாநாடு  கேரக்டர்  பாதிப்பிலிருந்து  அவர்  இன்னும்  வெளி  வரவில்லை  போல . இருந்தாலும்  அவரது  நடிப்பு  தியேட்டரில் அப்ளாஸ்  மழை 


 நாயகியா  பிரியங்கா  அருள்  மோகன்.  ஸ்கூல்  கேர்ளாக  ஓக்கே , ஆனா  காலேஜ்  கேர்ளாக  வரும்போது   சுமார்தான் . கமல்  படங்களில்  அவர்  நடிக்கும்  சீன்களில், இந்தா  பாரு  என்  நடிப்பை  என  நல்லாவே  நடிப்பது  தெர்யும், அதே  மாதிரி    இவ்ரது  நடிப்பும்  அப்பட்டமா  நடிப்புனு  தெரியுது. இன்னொரு  பெரிய  குறை  ஹீரோ  கூட  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகல. ரஜினி  முருகன்,  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம், ரெமோ  இவற்றிலெல்லாம்  ஹீரோ  ஹீரோயின்  கெமிஸ்ட்ரி  செமயா  இருக்கு,ம்

ஹீரோவ்ன்  அம்மாவாக  ஆதிரா  பாண்டிய  லட்சுமி  க்ளைமாக்சில்  அசத்தல்  நடிப்பு .இன்னொரு  சரண்யா  ஆக  எல்லா  வாய்ப்பும்  இருக்கு


ஹீரோயின்  தோழியாக  வரும்  கேரளா  சேச்சி  ஓக்கே  ரகம் 

இவர்கள்  போக  முனீஸ்காந்த் , பால  சரவணன் ,  ஆர் ஜே  விஜய் , சிவாங்கி   போன்றவர்கள்  காமெடிக்கு  கை  கொடுக்கிறார்கள் 


 முக்கியமான  ஹீரோ  அனிரூத். அவரது  இசையில்  3  பாட்டு  செம  ஹிட்டு , பிஜி எம்  பக்கா 


இயக்கி  இருப்பவர்  புதுமுகம், இவரது  குரு அட்லீ.,  குரு  எவ்வழி  சிஷ்யன்  அவ்வழி , அதாவது  எங்கெ   எங்கே  இருந்து  சுடறோம்கறது  முக்கியம்  இல்லை  ,நல்ல  கதம்ப  மாலையா  தர்றமா? என்பது  முக்கியம், அந்த  வகையில்  முதல்  படத்தை  வெற்றிப்படமாகவே   கொடுத்திருக்கிறார்


சபாஷ்  டைரக்டர் 


1   ஹீரோ  ஹிரோயின்  சம்பந்தப்பட்ட  அந்த  ஸ்கூல்  லவ்  போர்சன்  அபாரம்.  தனுஷ்  நடித்த  3  பட,ம்  நினைவு  வந்தாலும்  செம  ஜாலியா  கொண்டு  போன  விதம் 


2 க்ளைமாக்சில்  அப்பாவின்  தியாகத்தை  உணரும்  ஹீரோ  வருந்தும்  காட்சி அம்மா  பேசும்  டயலாக்ஸ்  எல்லாமே  பெண்கள் மனதைக்கவரும்  அபாரமான  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்


3   வசனகர்த்தா  பல  இடங்களில்  உள்ளேன்  அய்யா  சொல்கிறார்.  பாலீசான  டயலாக்ஸ் 


4   எஸ்  ஜே  சூர்யா  நடிப்பு  ஆங்காங்கே   ஓவர்  ஆக்டிங்  என்றாலும்  ரசிக்க  முடிகிற  மாதிரி  காட்சி  அமைப்புகள் 


5  ஜலபுலஜங்  பாடல்  காட்சி  படமாக்கப்பட்ட  விதம்  அதற்கு  ஹீரோவின்  கலக்கலான  டான்ஸ்  மூவ்மெண்ட்ஸ் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோ  படிப்பில் ஆர்வம்  இல்லாதவர் , லாஸ்ட்  பென்ச்  ஸ்டூடண்ட்  ஆனா   சிஸ்டத்தை  ஹேக்  செய்வது ,  வேற  ஒரு  அக்கவுண்ட்  பாஸ்வார்டு  கண்டுபிடித்து  லாக்  இன்  செய்வது  போன்ற  தகிடுதித்த  டெக்னிக்கல்  திறமைகள்  இவ்ளோ  வெச்சிருப்பது  எப்படி ?  இது  போக  என்  கிட்டே  என்ன  திறமை  இருக்குனு  கண்டுபிடிக்கறேன்னு  படம்  பூரா  சொல்லிட்டே  இருக்காரு 


2  கல்லூரி  பேராசிரியர்களுக்கே  எக்சாம்  வைப்பது  கொஞ்சம்  கூட  நடைமுறை சாத்தியமே  இல்லை 


3  க்ளைமாக்சில்  வில்லன்  திடீர்  என  நல்லவனாக  மாறுவது நம்பவே  முடியலை.  படத்தில்  சில  கேரக்டர்களே  அவரா  இப்படி  மாறிட்டார்  நம்பவே  முடியலையே  என  சாமார்த்தியமாக  டய்லாக்  வேற  வெச்சிருக்காங்க 


4    இயக்குந்ர்  சிபி  சக்கிரவர்த்தியின் உண்மைக்கதைனு  பேசிக்கறாங்க. ஹீரோ  டைரக்ட்  பண்ற  பட  விஷயத்துல  விண்ணைத்தாண்டி  வருவாயா  க்ளைமாக்ஸ்  போர்சன்  ஞாபகம்  வருது 


5  ஹீரோ  தனக்கான  துறை  சினி  ஃபீல்டுதான்  என  தேர்ந்தெடுப்பது  ஆழமா  பதியலை ந். அது ந் போக  ஆல்ரெடி  இதே  போல  ஹீரோ  சினி ஃபீல்டில்  ஜெயிக்கும்  தாவணிக்கனவுகள் ,  உட்பட  பல  படங்களில்  பார்த்தாச்சு, புதுசா  யோசிச்சு  இருக்கலாம் 

நச்  டயலாக்ஸ்


1   தன் பிள்ளை ஹீரோ ஆகனும்கறதுக்காக கடைசி வரை தன்னை வில்லனாவே காமிச்சுக்கறவர்தான் அப்பா #DonFDFS


2   வாழ்க்கைல தான் என்னவா ஆகப்போறோம்னு எவன் கண்டுபிடிக்கறானோ அதை சரியா செயல்படுத்தி ஜெயிக்கிறானோ அவன் தான் டான் #DonFDFS


3 எனக்காக அவர் என்ன பண்ணாரு?னு கேட்டுட்டேன், ஆனா அவருக்காக அவரு எதுவுமே பண்ணிக்கலை #DonFDFS


4 இன்னொரு குழந்தை பெத்துக்கிட்டா உன் மேல வெச்சிருக்கற பாசம் குறைஞ்சிடுமேனு வேற குழந்தையே வேணாம்னு சொன்னவர்தான் உன் அப்பா #DonFDFS


5 எனக்கு வர வேண்டிய எல்லா சந்தோஷங்களையும் என் மகனுக்கு கொடுத்துடு சாமி , என் மகனுக்கு வர வேண்டிய எல்லா கஷ்டங்களையும் எனக்கு கொடுத்துடு #DonFDFS



6 யாருக்கு பெஸ்ட் ஃபேமிலி அமைஞ்சிருக்கோ யாருக்கு நல்ல ஃபிரண்ட்ஸ் இருக்கோ அவன் தான் டான்


7 சைக்கில் ஓட்ட கத்துக்கும்போது கீழே விழுந்து எழுந்து கத்துக்கற மாதிரி பெற்றோர்களும் குழந்தைகளை வளர்க்கறப்ப சில தப்புக்கள் பண்ணி தான் குழந்தை வளர்ப்பு பற்றிக்கத்துக்கறாங்க


8 தான் ஆசைப்பட்ட ஒண்ணுக்காக கஷ்டப்படத்தயாரா இருக்கறவன் கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பான்


9 பசங்க பண்ற தப்பை விட அவங்க வாழ்க்கை தான் முக்கியம்னு அவங்க பண்ற தப்பை மன்னிச்சு விடும் வாத்தியார்கள் இன்னும் இருக்காங்க


10 குளத்துல கல் எறியற அந்தப்பையனைப்பாரு , முதல்ல எறியும் கல்லை விட ரெண்டாவது எறியும் கல்லுக்குதான் சக்தி அதிகம் , ஏன்னா முதல்ல எறிஞ்ச கல்லுக்கு இலக்கு இல்லை ரெண்டாவது எறிஞ்ச கல்லுக்கு முதல் கல் போன தூரத்தை விட அதிக தூரம் போகனும்கற இலக்கு இருக்கு , நீ செய்யும் முயற்சிகளும் அப்படித்தான் , முதல் முயற்சி தோற்றுப்போனா என்ன? ரெண்டாவது முய்ற்சி செய் , ஜெயிப்பே


11 லைஃப்ல ஜெயிச்சவங்களை லவ் பண்றதை விட தான் லவ் பண்றவன் லைஃப்ல ஜெயிக்கறதைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க


12 வாத்தியார் ஆகனும்கறதுக்காக எம் ஏ படிச்சவனை விட எம் ஏ படிச்சுட்டு வேற வேலை கிடைக்காம வாத்த்யார் ஆனவங்க தான் அதிகம்


13 ஓட்டப்பந்தயத்துல முயல் , ஆமை ரெண்டுமே ஜெயிக்கும், ஆனா முயலாமை மட்டும் என்னைக்கும் ஜெயிக்காது


14 பொண்ணுங்க சொல்லிட்டுப்போனா அது பிரேக்கப் இல்லை, சொல்லிக்காம போனா அதான் பிரேக்கப்


15 எக்ஸ் லவ்வருக்கு எதுக்குடா எக்ஸ்ட்ரா ஃபீலிங்க்?


16 நான் நிச்சயம் ஜெயிப்பேன்னு நம்பறேன் ஆனா எப்போ எப்படினு தான் தெர்யல



17 பிரப்போஸ் பண்ற பசங்க மனசைப்பார்க்காம அவங்க முகத்தைப்பார்த்து பொண்ணுங்க நோ சொன்னா லாஸ் பசங்களுக்கு இல்லை , பொண்ணுங்களுக்குதான்


18 ஆக்சிஜன் இருந்தாதான் உயிர் வாழலாம்னு சொன்னாங்க, இப்போ குறிக்கோள் இருந்தாதான் வாழ முடியும்னு சொல்றாங்க



19 இவ்ளவ் கம்மியா மார்க் வாங்கி இருக்கியே? வீட்ல எதும் சொல்ல்லை?


வாத்தியார் சரி இல்லைனு சொல்லி வெச்சிருக்கேன்


20 டேய் , ஆன்னா ஊன்னா உன் ஃபேமிலில எல்லாரும் என்னை பெருசு பெருசுன்னு கூப்பிடறாங்கடா’’


அதை விடு பெருசு


21 நான் போய் 10 பேரோட வர்றேன்’

எதுக்கு?  கண்பது  ஹோமம்  பண்ணவா? 


22  திருவள்ளுவர்  கூட  40  வது  அதிகாரமா  கல்வி  பற்றி  சொன்னவர்  14  வது  அதிகாரமா  ஒழுக்கமுடைமை  பற்றி  சொல்றார். அப்போ  கல்வியை  விட  ஒழுக்கம்  ரொம்ப  முக்கியம் 

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - டாண் (2022) − முதல் பாதி நண்பன் டைப் காலேஜ் கலாட்டா ,3 டைப் ஸ்கூல் கலாட்டா, பின் பாதி அப்பா செண்ட்டிமெண்ட்ஸ். சி.கா,எஸ்ஜே சூர்யா,சமுத்திரக்கனி நடிப்பு டாப்,

நாயகி நடிப்பு எடுபடல.பெண்களுக்கு பிடிக்கும் மெலோ டிராமா.விகடன் மார்க் 41 , ரேட்டிங் 2.5 / 5