Thursday, July 30, 2020

சில நேரங்களில் சில மனிதர்கள் ( 1977)– சினிமா விமர்சனம்




சாகித்ய அகாடமி விருது  பெற்ற  எழுத்தாளர், இலக்கிய சிங்கம்  ஜே கே எனும்  ஜெய காந்தன் ஆனந்த விகடன்ல  அந்தக்காலத்துல   முத்திரை  சிறுகதையா அக்னி பிரவேசம்  என ஒரு சிறுகதை  எழுதினார். அது  பலரின்  பாராட்டுதல்களைப்பெற்றது. அதுக்குக்கிடைச்ச   வரவேற்பைப்பார்த்து பிரமித்த  அவர் அதை  டெவலப்  பண்ணி  கங்கா எங்கே  போகிறாள்?  என்ற நாவல்  எழுதினார், அது  அக்னிப்பிரவேசம்  கதையின் தொடர்ச்சியாக  அமைத்தார். கதை  முடியும் இடத்தில்  நாவல்  துவங்கும்,  அதுதான்  சினிமாவாக   சில நேரங்களில்  சில  மனிதர்கள் 

பொதுவா  எழுத்தாளர்களின்  கதைகள்  சினிமா ஆகும்போது  சினிமாவுக்கு  ஏத்தபடி கதை சொல்றேன்னு அதை  சிதைச்சிடுவாங்க., அந்தத்த்தப்பு  இதுல  நடக்கலை , பீம்சிங்  தன் வ்ழக்கமான  பாணியிலிருந்து  விலகி  இதை  எடுத்திருந்தார் 

முதல்ல  அந்த  சிறுகதை  என்ன? என்பதை  சுருக்கமா  பார்த்துடுவோம், ஆல்ரெடி  அந்த  கதை  படிச்சவங்க  இந்த  பத்தியை ஸ்கிப்  பண்ணிடலாம்.  ஒரு மழை நாள். பஸ் ஸ்டாப்ல  நாயகி    பஸ்க்கு  வெய்ட்டிங். எல்லாரும்  அவங்கவங்க    பஸ்  வந்ததும்  ஏறிப்போறாங்க. நாயகி  போற  பஸ்  மட்டும்  வர்லை. காத்திருக்கையில் அவள்  முன்  ஒரு கார் நிதானமா வந்து  நிற்குது, பின் கதவை  திறந்து  விடறார்  கார்  ஓனர். நாயகி  கொஞ்சம்  யோசிச்சு  பின்  வேற  வழி இல்லாம  அதில்  ஏறிக்கறா . யாரும்  எதும் பேசலை. கார்  பாட்டுக்குப்போய்க்கிட்டு இருக்கு . கொஞ்சம்  தூரம்  போனதும் இது நான் போக வேண்டிய வழி இல்லையே? காரை நிறுத்துங்கனு நாயகி சொல்லியும்  கார் ஓனர்  அதை சட்டை செய்யலை ஒரு தனிமையான  இடத்துல  நிக்குது.   கார்  ஓனர் இறங்கி  பின் கதவைத்திறந்து  உள்ளே  போறார்.10  நிமிசம்  கழிஞ்சு  காரை நாயகி  வீட்டுக்கு  அருகே  தெரு  முனையில்  டிராப்  பண்ணிட்டு  போய்டுது  கார். நாயகியின்  அம்மா  விபரம்  அறிந்து   அவள்  தலையில் ஒரு குடம் தண்ணீர்  ஊற்றிஅவ்ளோ  தான்  நீ சுத்தம்  ஆகிட்டே  அப்டிங்கறா. அதான் கதை

இந்தப்படத்துல  நாயகிக்கு அதே சம்பவம் நடக்குது , ஆனா  வீட்ல  ஆர்ப்பாட்டம் பண்ணி  ஊரைக்கூட்டி  அவமானப்படுத்திடறாங்க. கெட்டுப்போனவளுக்கு இங்கே இடம்  இல்லைனு  துரத்தி  விட்றாங்க நாயகி  ஒரு உறவுக்காரர் (  தாய்மாமா) வீட்ல தங்கி  மேல்  படிப்பு  படிக்கறா. 12  வருடங்கள்  கழித்து  ஒரு ஆஃபிஸ்ல  அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசரா  ஒர்க் பண்றதைக்காட்றாங்க

 நாயகி  தன்னை  இந்த  நிலைக்கு ஆளாக்கின  பணக்காரரை  ஒரு எழுத்தாளர்  மூலமா அடையாளம்  தெரிஞ்சுக்கறா. அந்தப்பணச்க்காரருக்கு  ஒரு குடும்பம் இருக்கு , மனைவி 3   வாரிசுகள் . இதுக்குப்பிறகு  நடக்கும்  சம்பவங்கள்  தான் மிச்ச்ச  மீதி  திரைக்கதை

இந்த  படத்துல  குறிப்பிட்டுச்சொல்லவேண்டியது  2 அம்சங்கள் . கதாசிரியரின்  திரைக்கதை  அமைப்பும், நாயகியின்  கேரக்டர் ஸ்கெட்சும். அந்தக்காலத்துலயே  அபாரமான  புரட்சிப்பெண்ணா  வடிவமைக்கப்பட்ட  கேரக்டர்  (  பிற்காலத்தில்  வந்த  ஆர் சி சக்தியின்  சிறை  கூட இதே  கதை  அமைப்பின் சாயல் தான் , புதிய  பாதை கூட )

 நாயகியா  அபாரமான  உடல் மொழி , அட்டகாசமான  நடிப்பு  என  கலக்கி  இருந்தார்  லட்சுமி . அப்பாவிப்பெண்ணாக  காரில்  ஏறும்போது  ஒரு வித  நடுக்கம் காட்டிய  அவர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசராக  காட்டும் கெத்து  அழகு . மாமா, அம்மா  முன் சோபாவில் கால் மேல் போட்டு அமரும் கம்பீரமும்  அருமை / சபலிஸ்ட்  மாமாவை   லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  பண்ணுவதும்  , க்ளைமாக்ஸில்  பொங்குவதும்  அற்புதம் . சோர்வாகவே  இருக்கும்  அவர்  நாயகனைக்கண்டதும்  சூரியனைக்கண்ட  தாமரை மாதிரி , சூரிய காந்திப்பூ மாதிரி  நந்தியாவட்டை இதழ் போல சிரிப்பது கண்கொள்ளாக்காட்சி . க்ளைமாக்ஸில் அவர்  குடைக்குள்  மழை  பார்த்திபன்   மாதிரி  , மயக்கம் என்ன  தனுஷ்  மாதிரி , பிக்பாஸ் ஜூலி  மாதிரி  கற்பனையில்  கற்பிதம்  செய்து  வாழ்வது  உருக்கம்

 நாயகனா  ஸ்ரீகாந்த் . இவர்  தான் ஒன்றும் அவ்ளோ நல்லவன் கிடையாது  என  வெளிப்படையாக  சொல்லிக்கொல்லும் கெட்டவன்  என  கேரக்ட்சர்  ஸ்கெட்ச்  அமைக்கப்பட்டாலும்  கதாசிரியர்  அந்த கேரக்டர்  மேல்  மரியாதை அல்லது  பரிதாபம்  ஏற்படும் வகையில்  தான்  அமைத்திருக்கிறார்.  எனக்கு  அப்டி ஏதும்  பரிதாபம் வரவில்லை . ஒரு வேளை  அந்தக்கால  லேடீஸ்  ஆடியன்சுக்கு  அப்டி  உணர்வு  வந்திருக்கலாம்

சபலிஸ்ட்  மாமாவாக  வருபவர்  நடிப்பு  கனகச்சிதம். ரைட்டர்  ஏகே  வாக  வரும் நாகேஷ்  கேரக்டரை  ஜே கே  தன்னைப்போலவே  சாயலில்  அமைத்திருக்கிறார்

லட்சுமியின் அம்மா  கேரக்டர்  கூட நல்ல நடிப்பு , ஆனா  அவர் சகோதரர் , நங்கையா  போன்றவர்கள்  நடிப்பு  நாடகத்தனம் . அதே போல்  ஆஃபீசில்  லட்சுமியின்   உதவியாளராக வரும்  பெண்மணியின் நடிப்பில் , உடல் மொழியில்  ஒரு செயற்கைத்தன்மை  எட்டிப்பார்க்கிரது

 எம் எஸ் வி இசை  அருமை

 நச்  வசனங்கள்

1        இலக்கியம்  என்பது  நமக்குப்பிடிச்ச விஷயங்களைப்பட்டியல் போடுவதல்ல
2        நமக்குப்பிடித்தமானவற்றை மட்டுமே தருவது  வாழ்க்கை அல்ல
3        ஏன்  வீட்டுக்குள்ளே  இல்லாம  வெளில  வாசல்ல  திண்ணைல  இருக்கீங்க?
மழை வரும்போது  வீட்டுக்குள்ள்ளே  ஒழுகும், அதான்

4        அதுக்கப்புறம் என்னென்னமோ நடந்துடுச்சு , ஆனா  கல்யாணம்  மட்டும் நடக்கலை
5          சஸ்பென்ஸ்  கதை  நான் எழுதறதில்லை , கடைசிப்பக்கத்தை  முதல்லியே படிச்சுட்டா மேட்டர்  ஓவர்
6          ஊர்  எப்படி வேணா  பேசட்டும்
 ஒரு பொண்ணோட வாழ்க்கைல  ஊர் பேசறதுதான்  முக்கியம்

7        நீங்க  யாரையாவது  லவ்  பண்ணி  இருக்கீங்களா?  அட்லீஸ்ட்  உங்க பொண்டாட்டியையாவது
8        நம்ம  ஆத்துக்குழந்தையை  நாமளே  கரிச்சுக்கொட்டுனா ஊர் ஏன் பேசாது?
9        அவர்  யாரு?
 ஹீ   ஈஸ்  மை மேன்

10    எங்க  அப்பாவுக்கு  டீசண்ட்டான  ஃபிரண்ட்ஸ்  உண்டு  என்பதே  உங்களைப்பார்த்த  பின் தான்  தெரியும்
11     எத்தனை  புலிகள்  பசுத்தோல்  போர்த்திட்டு  திரியுதுங்கனு  எனக்கு தெரியும்
12     அம்மா, இவ்ளோ  பேசறியே , நீ அப்பா  செத்த  பி  உன் தலைமுடியை  சிரைச்சா  வெச்சுக்கிட்டே? எண்னெய் தடவிப்படியபடிய  வாரிக்கலை?
13    உன்  பேரு  வீணாக்கெட்டுப்போய்க்கிட்டு இருக்கு, கெட்டுப்போறது கூட  தப்பில்லை “வீணா” கெடுது
14      நம்மைப்பற்றி 
15    தெரிஞ்சவங்க  நாசூக்கா  இருந்தா நாமும்  அப்[டியே இருந்துக்க  வேண்டியதுதான்


சபாஷ்  டைரக்டர்

1   நாயகி   தன் அம்மாவிடம்  கோபமாக   ஒரு வார்த்தை  விட்டு விடுவார். அப்பா இறந்த பின் அந்தக்கால  லேடீஸ் போல  நீ  மொட்டையா  ஆடிச்சுக்கிட்டே? எண்னெய்  போட்டு தலை சீவி சிங்காரிச்க்கலை? என்பார். அடுத்த நாள்  காலைல  ஆளைக்காணோம், பார்த்தா  நிஜமாவே  மொட்டை  போட்டு  வந்திருப்பார்.  அதிர்ச்சி ஆன  நாயகி  கண்களில்  கண்ணீர்  வழிய   நிற்பார் . டச்சிங்கான  சீன்  ( ஆனா  அம்மா கிட்டே  ஒரு சாரி   கேட்டிருக்கலாம் )

2  ஒரு நாள்  அம்மாவும், மாமாவும்  இல்லாத  ஒரு மாலைப்பொழுதில்  தன் காதலன்  வீட்டுக்கு வரப்போகிறான் என்ற குதூகலத்தை  அவர் கண்களில் , முகத்தில் , நடையில்  காட்டும்  விதம்  அற்புதம், ஆனா கரெக்டா  அந்த  டைமில்  மாமா  வந்து  விடுவதும்  முகம் சுருங்குவதும்   வெல்டன்  டைரக்டர்  சொல்ல  வைக்கிறது


3   நாசூக்காக  அம்மாவிடம்   நீ போகும் முன் மாமாவையும்  ஊருக்கு  அனுப்பிட்டுப்போ என்பதும்  அதை  ஏற்று  அவரை  பேக்  பண்ண  அம்மா செய்யும் முஸ்தீபுகள்  அழகு


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதை  நெருடல்கள்

1        நாயகன்  ஒரு செயின் ஸ்மோக்கர் , அதுபோக குடி  வேற . ஒரு வருங்கால  கேன்சர்  பேஷண்ட்ட்டை , கிட்னி ஃபெய்லியர்  பார்ட்டியை  ஒரு சீன்ல கூட நாயகி கண்டிக்கவே இல்லையே? முன் பின்  அறிமுகம் இல்லாதவங்களைக்கூட டாக்டர் ராம்தாஸ்  கண்டிக்கறாரு. இவ்ளோ  வாய் பேசும் நாயகி  இது கூட செய்யலயே?  (  கதாசிரியர் ஜே கே வும் ஒரு தம் பார்ட்டி  தான்  , தண்ணி  பார்ட்டிதான். அதனால் கூட இருக்கலாம்)

2   கோடீஸ்வரரான  நாயகனின்  மகள்  எப்போதும்  வீட்டில் மாடர்ன்  டிரஸ்  அதாவது  அரைகுறை  டிரஸ்  தான் போட்டிருக்கா , ஆனா  காலேஜ்  ஃபேர்வெல்  பார்ட்டி அன்னைக்கு  மட்டும்  8    முழ  சேலை  கட்டி  ஒரு செண்ட்டிமெண்ட்  டயலாக் வேற  பேசுது. பொருந்தவே  இல்லை . அதே  போல நாயகி லட்சுமி கிட்டெ  ஒரு செண்ட்டிமெண்ட்  டயலாக்  பேசும்போது மட்டும்  சேலை  காஸ்ட்யூம், மத்த டைம்ல  தொடை தெரியும் அளவு சார்ட்ஸ் , பனியன்

3  நாயகியின் அம்மா  ஒரு ஸ்வீட்  கொடுத்து  இது  என்ன?னு சொல்  பார்ப்போம் எனும்போது நாயகி   ருசி  பார்த்துட்டு  பாதாம் அல்வாவா? என கேட்க  இல்லை உருளைக்கிழங்குல  பால், சர்கக்ரை  சேர்த்தது  அப்டிங்குது. அவ்ளோ  வித்தியாசம்  கூடவா  தெரியாது, உருளைக்கிழங்கு  எங்கே  இருக்கு , பாதாம்  எங்கே இருக்கு ?

4   நாயகன்  நாயகி கிட்டே  ஒரு இடத்துல  நான்  கெடுத்த  ஒரே பெண்  நீ தான் அப்டிங்கறார். இன்னொரு சீனில்  நான் உன்னை ரேப் பண்ணுனதா நினைக்கலை, உனக்கு  சம்மதம்  இருந்துச்சுனு நினைச்சேன்கறார், இன்னொரு சீன்ல  நான் லேடீஸ்  மேட்டர்ல  அயோகியன் தான், பலர் வாழ்க்கையை  சீரழிச்சிருக்கேன்கறார். குடிகாரன்  கேரக்டர்னா  எபடி  வேணா  உளறலாமா? ?

5    எனக்கும் என் மனைவிக்கும்  பல வருடங்களா  எந்த  டச்சும் இல்லைனு  ஒரு சீன்ல டயலாக்  சொல்றார்  நாயகன், அதாவது  நாயகியை  டச்  பண்ணி  12  வருசம்  கழிச்சு  பார்க்கும்போது  கடந்த  12- 15   வருசமா மனைவி  கூட டச்  இல்லைனு அர்த்தம்  வர்ற  மாதிரி . அப்போ அவர்   வாரிசுகள்  8 வயசுல  10 வயசுல  18 வயசிலனு 3  இருக்கே? அந்த  18 வய்சு  பொண்ணு  ஓக்கே,  மத்த  2ம் எப்படி  பிறந்திருக்கும்?னு  நாயகி கேட்கவே இல்லை?

6  தனக்குப்பிடிக்காத  ஆண்  தொட்டா  பெண்ணுக்கு கம்பளிப்பூச்சி  ஊறுவது  போல் அருவெறுப்பாதான்  இருக்கும் , ஆனா  நாயகி அந்த  சபலிஸ்ட்  மாமா  அந்தத்தடவு  தடவறான், பெருசா  எதிர்ப்பே   காட்டலையே? க்ளைமாக்ஸ்லதான்  பொங்குது

7  என்னதான்  கதாசிரியர்  தன் படைப்பு மேல்  ஒரு பெருமிதம்  மிக்கவரா  இருக்கட்டும், அதுக்காக  படத்துல  வர்ற  மேக்சிமம்  கேரக்டர்ஸ்  எல்லாமே  அந்த  அக்னி  பிரவேசம்  கதையை சிலாகிப்பது  போல்  காட்சி  வைத்தது  என்னமோ மாதிரி  இருக்கு

 சி.பி ஃபைனல்  கமெண்ட் -  அந்தக்காலத்தில்  வந்த  அபூர்வமான  கதை அம்சம் கொண்ட  நல்ல  படம் , பார்க்காதவங்க  பாருங்க , லேடீஸூக்கு ரொம்பப்பிடிக்கும் . விகடன்  எதிர்பார்ப்பு மார்க் 50 ( ஆக்சுவலா எவ்ளோ  கொடுத்தாங்கனு தெரில )  ரேட்டிங்  3 / 5

3   

Wednesday, July 29, 2020

ராஜ தந்திரம் (2015)– சினிமா விமர்சனம் ( ராபரி த்ரில்லர்)


Live Chennai: Rajathanthiram 2 be produced,Rajathanthiram 2,Veera

ஹீரோவும் , அவரோட  நண்பர்கள்  2 பேரும்  ஃபிராடுப்பசங்க, சாமார்த்தியமா  மத்தவங்களை  ஏமாற்றி  காசு  சம்பாதிக்கறவங்க  சாதா  திருடனா  இருக்கற  இவங்களை  ஒரு கோஷ்டி  ஸ்பெஷல்  திருடங்களா  அதாவது  கொள்ளைக்காரங்களா  மாத்த  விரும்புது , எம் எல் ஏவா இருக்கறவங்க எம் பி ஆக ஆசைபப்டற  மாதிரி.

நகரத்துல  மெயின்  ரோட்டில்  இருக்கும்  நகைக்கடையை கொள்ளை  அடிக்கனும், இதான் பிராஜெக்ட், ஆனா  ஹீரோ அதுக்கு ஒத்துக்கலை. அந்தக்கடுப்புல  அந்தக்கோஷ்டி  ஹீரோவை எக்கு தப்பா  மாட்டி விடுது

 கடுப்பான  ஹீரோ  நேரா   அந்த  நகைக்கடை  ஓனர் கிட்டேயே  போய்   இந்த மாதிரி  இந்த ஆள்  உங்க  நகைகக்டையைக்கொள்ளை  அடிக்க  பிளான் போடறாங்க அப்டினு போட்டுக்குடுத்துட்றார்

அதுக்கப்புறம்   எதிர்பாராத  சில  திருப்பங்கள்  நிகழுது

இன்ன தேதில  இன்ன டைம் ல நகைகக்டையைக்கொள்ளை அடிக்கப்போறோம்னு பப்ளிக்கா சவால்  விட்டு  ஒரு பக்கம்  போலீஸ்  காவல் இருக்க , இன்னொரு பக்கம் நகைக்கடை ஓனர் ஆட்கள்  இருக்க  அந்த  நகைகக்டை  எப்படி  சாமார்த்தியமா  கொள்ளை  அடிக்கப்படுது   என்பதுதான்  செமயான க்ளைமாக்ஸ்   

எனை  நோக்கி  பாயும் தோட்டா  படத்தின்  இசை  அமைப்பாளர்  தான் இந்தப்படத்தில்  காமெடியன் ரோல்,  சும்மா  வெளுத்து  வாங்கி  இருக்கார்

நடுநிசி  நாய்கள்  ஹீரோ வீராதான்  இதுல  ஹீரோ , அதுல வாங்குன  கெட்ட பேருக்கு  இது நல்ல   மாற்று. 

நாயகி  ரஜீனா  கேசண்ட்ரா. அதிக   வாய்ப்பில்லை  இருந்தாலும் வந்தவரை  ஓக்கே 


நரேன் ஒரு நல்ல  கேரக்டர்  பண்ணி இருக்கார் அவரது  குணச்சித்திர  நடிப்பு  மனசைத்தொடுகிறது

நகைக்கடை  ஓனர் நடிப்பு கலக்கல் ரகம். பச்சோந்தித்தனமான  நடிப்புல பட்டையைக்கிளப்பறார்

இளவரசு  தமிழ்  சினிமாவால் உரிய  மரியாதை  அளிக்கப்படாத  மிகப்பிரமாதமான  ஒரு நடிகர். அவர்  ரோலும் நடிப்பும் குட்

ஒ:ளிப்பதிவு , எடிட்டிங்  கலக்கல்  ரகம்,  திரைக்கதை  இயக்கம்  அபாரம்


சபாஷ்  டைரக்டர்

1        ஓப்பனிங்  சீனில்  பைக்கை  பேரம்  பேசி  தள்ளி  விடுவதும்  பின் ஆட்டையைப்போடுவதும்  செமயான  காட்ட்சி
2        மல்ட்டி லெவல்  மார்க்கெட்டிங்க்கு ஆள்  பிடிக்கும்  நாயகியை ஒரு கட்டத்தில்  நாயகன் தவறுதலாகப்பேச  அதற்குப்பின் வரும்  ஊடல்கள், சமாதானங்கள்  அனைத்தும்  கவிதை  ரகம்
3          நகைக்கடை  கொள்ளை  பற்றிய  பிளானை  நாய்கன் வில்லனுக்கு  ஃபோனில் அப்டேட்டிக்கொண்டே  காரியத்தைக்கச்சிதமாக முடிப்பது  கலக்கலான  காட்சி
4         ஃபைனான்ஸ்  கம்பெனி  ஆரம்பிக்க  வைத்து  , பிளாங்க்  செக்கில் சைன் பண்ன  வைத்து  வில்லன்  மாட்டி விடும்  நரித்தனம்  அருமை



நச்  டயலாக்ஸ்

1    வாழ்க்கைல  பணம்  தரும்  தைரியத்தை  வேற  யாரும் தரமுடியாது என்ற   உண்மையை தெரிஞ்சவன் நான்

2   அடுத்தவங்களோட பேராசையை முதலீடாவெச்சு நாங்க பணம் சம்பாதிக்கறோம் இது தப்பா?  ( சதுரங்க  வேட்டை சாயல்)

3   வாழ்க்கைல நடக்கும் பல சுவராஸ்யங்கள் நமக்கு முன் கூட்டியே தெரியாது  , அப்டி தெரிஞ்சா  அதுல சுவராஸ்யம் இருக்காது

4        முருகா!  என்னைக்காப்பாற்று, எல்லார் கிட்ட இருந்தும்  என்னைக்காப்பாத்து
5        பொதுவா டபுள் கேம் தான் ஆடுவாங்க, இந்தப்பொண்ணு நம்ம மூணு பேரையும் வெச்சு ட்ரிபிள் கேம் ஆடுதே?
6        பிளட்  டொனேட் பண்னப்போறேன்
 சரி போ, ஆனா உன் உடம்புல  பிளட்  எங்கே  இருக்கு? சொல்லிட்டுப்போ

7        ஆசைபப்டலாம், ஆனா பேராசைப்படக்கூடாது
8    இழந்தவங்களோட அழுகையை இன்னைக்குதான் முதன் முதலா பார்க்கறேன்

8        இழந்ததை  திரும்பப்பெற்று விட்டால் அது தனி மகிழ்ச்சி
9        நாம கடன் வாங்கிட்டு அவனைக்கடன்காரன்னு சொல்றோம்
10    உனக்குதான் எல்லா உண்மையும்  தெரிஞ்சுதே? அப்றம் ஏன் என் கிட்டே கேட்கறே?

 உன்மையை  உன் வாயால கேட்கனும்


11    சொல்றதெல்லாம் உண்மையா  இருந்தாப்போதும், உண்மையை எல்லாம் சொல்லனும்கறது இல்லை

12    நல்லது  பண்ண  ந்ல்ல  மனம்  இருந்தா  மட்டும் பத்தாது , பணமும் வேண்டும்

13 பணம்  போட்டுதான் லாபம்   சம்பாதிக்கனும்னு இல்லை ம் நம்பிக்கையை வெச்சும் பணம்  சம்பாதிக்கலா,ம்

13    நல்லது  பண்னனும்னு  நினைக்கறவங்க  அல்பாயுசுல  போய்டறாங்க  , கெட்டது  பண்ணனும்னு நினைக்கறவங்க  நீண்ட நாள்  வாழறாங்க ,
14    எதிரியை விட்டு விலகி இருந்தா  அவன் என்ன பண்றான்?னு நமக்குத்தெரியாது , அவன் கூடவே  இருந்தாதான்  அவன் திட்டம் நமக்குத்தெரியும்
15  நல்லது  பண்னனும்னு  நினைக்கறவங்க    கூட  நாம  இருக்கறதும்  ஒரு நல்லதுதான்
Rajathandhiram || Tamil Movie Stills / Posters - Veera, Regina Cassandra  (HD) - YouTube
லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1        பொதுவா  பைக்  செகன்ட்ஸ்  வாங்கறவஙக்  தன் தரப்பு மெக்கானிக் கிட்டே ஒரு கருத்து  கேட்டுட்டுதான் வேல்யூவேசன் போடுவாங்க . விற்க வர்றவன் தரப்பு மெக்கானிக் பேச்சைக்கேட்க மாட்டாங்க
2   ஆம்வே  மாதிரி  எம் எல் எம் பிஸ்னெஸ் க்கு ஆள் சேர்க்கும் நாயகி  தனக்கு எல்லாம் தெரியும், ஆண்கள்  எப்[படி எதுக்கு  வந்து  பேசறாங்க  என தெரியும், ஆனா ஒரு லிமிட்வெச்சிருக்கேன்  என்று சொல்வதும்  , குடும்பக்கஷ்டம்  அதான் என  சமாளிப்பதும்   மனதைத்தொடவில்லை . படிச்ச  பொண்ணுக்கு  எத்தனையோ வேலை கிடைக்குமே? ஏன் இதை தேர்வு செய்தார்? என்பதற்கு விடை இல்லை

2        நாயகன்  நாயகியிடம் இந்த  வேலை  செய்ய்றதுக்கு... என்ஃஅ ஆரம்பித்து  ஒரு தவறான்  சொற்றொடரைப்பிரயோகிக்கிறார். தான் காதலிக்கும் அல்லது  காதலை  வெளிப்படுத்த  நினைக்கும்  பெண்ணிடம்  யாரும்  இப்படிப்பேச மாட்டாங்க . ரொம்ப  டிராமாட்டிக்கான சீன் அது
3        நரேன்  வெளிநாடு  எங்கும்  போகவில்லை, எதுக்காக  பிளாங்க்  செக்  போட்டுத்தரனும் ? ஆன் லைன் பேமண்ட் , நெஃப்ட் , கூகுள்  பே இருக்கக்கவலை எதுக்கு ?
4  நகைக்கடை  உள்ளே  லாக்கர்  இருக்கும்  அறையில்  சிசிடிவி  கேமரா  வெச்சா  வேலை  முடிஞ்சது அடைச்செய்யாம  ஓனர்  செய்யும்  ஏற்பாடுகள்  எல்லாம் காடிஹ்ல் பூ   ரகம்

 சி.பி ஃபைனல் கமெண்ட்  -  ரத்த  சேதம்   இல்லாமல்  ,   டீசண்ட்டான  ராப்ரி  த்ரில்லர்  படம்  பார்க்க  நினைப்பவர்கள்  குடும்பத்துடன்  பார்க்க வேண்டிய  பிரமாதமான  படம்   ரேட்டிங்   3.5 / 5




Tuesday, July 28, 2020

VICKY DONOR (HINDI - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா)

நாயகி  ஒரு பேங்க் ல ஒர்க்  பண்ணுது, நாயகன்  வழக்கம்  போல  வெட்டாஃபீஸ். பேங்க்ல  அக்கவுண்ட்  ஓப்பன்  பண்ண  இண்ட்ரோ  சைன்  யாராவது போடனும், ஏன்? நீங்களே  போடுங்க அப்டினு பிட்டைப்போடறாரு. இப்டியே  அடிக்கடி காரணமே  இல்லாம  தண்டமா  பேங்க்  வந்து  வந்து  இருவருக்கும்  இடையே  பழக்கம்  ஆகுது. ஒரு சுபயோக  சுப தினத்தில்  ஹீரோ  ஹீரோயின்  கிட்டே ப்ரப்போஸ்  பண்றாரு, அதுவும்  ஓக்கே சொல்லிடுது


2 பேரும்  ஜாலியா  சுத்தறாங்க .அஞ்சு  வருசம்  ஆனாலும்  ஆண்  எப்பவும்  ஜாலியா சுத்தறதுல  சலிக்க  மாட்டான், ஆனா  பெண்  எப்பவும்  சேஃபர் சைடு . எப்போ  மேரேஜ்  பண்ணிக்கலாம்னு கேட்குது. எனக்கு  ஒரு நல்ல  வேலை  கிடைக்கட்டும்  அதுக்கப்புறம்  பண்ணிக்கலாம்னு ஹீரோ  சொன்னதும் ஹீரோயின்  கடுப்பாகுது. லவ் பண்ண , ஊர் சுத்த   வெல்லாம்  எதுவும் தேவைப்படலை? மேரேஜ்க்கு  மட்டும் தான்  இது   தேவையா?னு கேட்குது


இந்தக்கதைல  3  ட்விஸ்ட்  இருக்கு . ஒரு ட்விஸ்ட்  ஹீரோ  பார்ட்  டைம் ஜாப்  ஆக  ஒரு வேலை  பண்றார். சட்டப்படி  தவறில்லாத  ஒரு சமூக  சேவை  மாதிரிதான்  அது. ஆனா அந்தக்கால  ஜெனெரேசன்ல வளர்ந்தவங்க  சீக்கரம்  ஏத்துக்க  முடியாத  அல்லது  ஜீரணிச்சுக்க  முடியாத  சம்பவம்  அது. அதை  வெச்சு  ஒரு  20 நிமிசம்   காமெடி  டிராக்  ஓடுது


 2  வது  ட்விஸ்ட்  ஹீரோயினுக்கு  3  வருசம்  முன்பே  மேரேஜ்  ஆகி  டைவர்ஸ்  ஆகிடுச்சு. அதை  ஓப்பனா  ஹீரோ  கிட்டே  சொல்லிடுது, ஹீரோ  அதை  சாதாரணமா  எடுத்துக்கிட்டாலும்  அவர்  குடும்பம் ஜீரணிக்க முடியல .அப்புறம்  அவங்க  எப்படி  ஏத்துக்கறாங்க  என்பதில்  இன்னும் ஒரு சின்ன  ட்விஸ்ட்  இருக்கு , இது ட்விஸ்ட்  2 ல  பி  கேட்டகிரி


3  வது  ட்விஸ்ட்   2  பேருக்கும்  மேரேஜ்  ஆனபின்  ஹீரோயினுக்கு   ஒரு பிராப்ளம், ஒரு குழந்தைக்கு அவரால  நேரடியா  தாய்  ஆக  முடியாத  சூழல்



இதை  எல்லாம்  அவங்க  எப்படி ஃபேஸ்  பண்றாங்க?  இறுதியில்  சுபமா? என்பதை  வெண் திரையில் காண்க 


 2012  ல் ரிலீஸ்  ஆன  இந்த  ஹிந்திப்ப்டம்   செம ஹிட்  அடிச்சதால  8 வருசம்  கழிச்சி  2020 ல  தமிழ்ல  ஹரீஷ்  கல்யாணை  வெச்சு   பண்ணாங்க , ஹிந்தி  அளவுக்கு  பிரமாதமா  போகலைன்னாலும்  சுமாராப்போச்சு. 15  கோடில  தயாரான இந்த  ஹிந்திப்படம் பாக்ஸ்  ஆஃபீசில்  67  கோடி  வசூலிச்சது கிட்டத்தட்ட  முதலீட்டைப்போல்  5  1/2  மடங்கு லாபம்


 ஹீரோவா  ஆயுஷ்மான் குரானா . இவர்  நடிச்சு  நான்  பார்க்கும்  3 வது  படம் . முதல்  படம்  அந்தாதூன்,2 வது  படம்          முதல்  2 படங்களும்  க்ரைம்  த்ரில்லர்  என்பதால்  இதில்  காமெடி  , செண்ட்டிமெண்ட் அப்டினு வெரைட்டி  ஆக்டிங்  காட்டி  இருக்கார் . நல்லா  ஒர்க் அவுட்  ஆகி இருக்கு 


ஹீரோயினா  யானி  கவுதம்   இவர்  காதலியா  இருக்கும் வரை  சராசரி  நடிப்பு , மனைவி ஆனபின்  ஆங்காரம், கோபம், சோகம்  என நவரசங்களையும் பிழியும்  நடிப்பு . நல்லா  பண்ணி  இருக்கார் 


 டாக்டரா  வர்ற  ரோல்  மிக  பிரமாதம். ஹீரோ - டாக்டர்  காம்போ  காட்சிகளில் காமெடி  டிராக்  வருவதால்  தனியாக்  காமெடி  டிராக்  தேவைபப்டலை  போல 


 சபாஷ்  டைரக்டர்


1   ஹீரோ  பண்ற  பார்ட்  டைம்  ஜாப்  அடிப்படையாக்கொண்டு  அமைக்கப்பட்ட  காட்சிகள்  இதுவரை  இந்தியா  சினிமாக்களில்,  வராத  அம்சம். கொஞ்சம்  பிசகினாலும்   ஆபத்தான  அம்சம். மிக  சாமார்த்தியமாகக்கையாண்ட விதம்  குட் 


2   என்னைப்பற்றிய உண்மைகளை நான்  மேரேஜ்க்கு  முன்பே  சொன்னேன், ஆனா  நீ ஏன்  உன்னைப்பற்றிய  உண்மைகளை  சொல்லலை? என  நாயகி மடக்கும்  விதம்  பிரமாதம்


3  குழந்தை பிறப்புக்கு  தகுதி  இருக்கா? என்ற  டெஸ்ட்  எனக்கு  மட்டும் தானா? ஏன் நீ  டெஸ்ட்  பண்ணலை? என  நாயகி  கேட்கும்போது  ஒரு ஆத்திரத்தில்  நாயகன்  உடைக்கும்  அந்த  ரகசியம் வெளிபப்டும்  காட்சி   வெரிகுட்  டைரக்சன்


4   நாயகனின் பாட்டி  கேரக்ட்ர்  ஸ்கெட்சை  மாடர்ன்  லேடியாகவும், நாயகனின் அம்மா  கேரக்டரை  அந்தக்கால  சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவராகவும்   அமைத்தது , அதை   வைத்து  , அந்த  முரணை  வைத்து  அமைக்கப்ட்ட  காட்சிகள்  அருமை 


5  க்ளைமாக்ஸ்க்கு முன்  வரும்  அந்த  15  நிமிடக்காட்சிகள்  நெகிழ்ச்சி . இந்த  போர்சன்  பெண்களை  மிகவும் கவரும். குறிப்பாக  மேரேஜ்  ஆகி  சில  வருடங்கள்  குழந்தை  இல்லாமல்  சிரமப்பட்ட  தம்பதிகள்  மனம்  விரும்பிப்பார்க்கக்கூடும்

நச்  டயலாக்ஸ்

1  பேங்க்ல  அடுத்தவங்க பணத்தை  எண்ணுவது  எல்லாம் ஒரு வேலையா? நாம சம்பாதிக்கனும், அதை நாம எண்ணனும்

2  மிஸ்!  உங்களுக்கு  பாய் ஃபிரண்ட்ஸ்  யாரும்  இல்லையா?

 ஆமா,  எப்படித்தெரியும்?

 அப்டி இருந்திருந்தா  நாய் மாதிரி  பின்னாலயே  சுத்திட்டு  இருப்பாங்களே? சிங்கிளாத்தானே  இருக்கீங்க?


3   இதுவரைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கு  எஸ்   சொல்லவே இல்லை

, எஸ்  மிஸ், ஆனா  நோ  கூட தான் சொல்லலை?


4   இது சும்மா  வேஸ்ட்  ஆகப்போறதுதானே? தானமா  தந்தா  என்ன?

 அதுக்காக  சிண்ட்டெக்ஸ்  டேங்க்லயா சேவ்  பண்ணி  வைக்க முடியும்?


5  டாக்டர், அட் லாஸ்ட்  உங்க  அலெக்சாண்டரைக்கண்டுபிடிச்சுட்டீங்க

 ஆமா, அந்த  விஷயத்தை  அவனை உணர  வைக்கனுமே? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  ஊர்ல  1008  ஆண்கள்  இருக்காங்க . அவங்களை  எல்லாம்  விட்டுட்டு  டாக்டர்  ஹீரோ பின்னாலயே சுத்திட்டு இருப்பது  ஓவர்  டோஸ். அதுக்கான  காரணங்க்ளை  சொல்லி  சமாளிக்கறாங்க , ஆனா  பலவீனமான  காரணம் 


2  டாக்டரோட   பி.ஏ  ஹீரோவைப்பார்க்க ஆட்டோவில் வர்றார். வாசலிலேயே  இருக்கும் ஹீரோ அவருக்குத்தர வேண்டிய ஒரு பொருளை  தந்து  அனுப்பறார், நாயகி  அதைபபார்த்து  டவுட்  வந்து  அது யாரு? என்ன விஷயம்?னு  3 டைம் கேட்டும் ஹீரோ ஒண்ணும் இல்லைனு சாமாளிக்கிறார். ஏன் பம்மனும்?   தெரிஞ்ச  நண்பர் . ஒரு உதவி கேட்டார் , தந்து  அனுப்பினேன்னு எதுனா சொல்லி சமாளிக்கலாமே?


3  ஹீரோவுக்கு  மார்க்கெட்  நிலவரம் தெரியாது, எதுக்காக  டாக்டர்  அவர்  டிமாண்ட் பர்சன்னு  வாலண்ட்ரியா  சொல்லி ரேட்  ஏற்றி விடுகிறார்?


4   நாயகிக்கு  குழந்தை  பாக்கியம்  இல்லை  என்றதும் ஒரு பரிதாப இமேஜ் ஏற்படுது, ஆனா  ஒரு சீனில்  ஏன் உனக்கு டெஸ்ட்  எடுக்கலை? என சீறூம்போது  வில்லி  இமேஜ்  விழுதே. அந்த  இடத்தில் அவரது  ரீ ஆக்சன் கொஞ்சம்  ஓவர் டோஸ்  மாதிரி  படுது


5  இது  சட்டப்பூர்வமான  சேவை தான்  என  சொல்லும் டாக்டர்  ஆன் லைன்  நெஃப்ட் மூலம்  பணத்தை நாயகன்  அக்கவுண்ட்க்கு மாற்றி விடாமல்    கேஷாக  25  லட்சம்  ஒரு பேக்கில்  போட்டு கொடுத்து  அனுப்புவது ஏன்?  அந்த  சீனில்  போலீசில்  மாட்டும் காட்சிகள்  தவிர்த்திருக்கலா,மே?


6 கிட்டத்தட்ட  25  வருடங்களா  நாயகனின் அம்மா  அழகு  நிலையம்  நடத்தி  வருகிறார், நாயகன் உதவியா  இருக்கார் . நாயகியின் பெற்றோர்  நாயகன் என்ன ஜாப் என கேட்கும்போது  தடுமாறாமல்  அழகு நிலையம் நடத்தறோம்னு சொல்லலாமே?


7  போலீஸ் அந்த   கேஷ்  25 லட்சம்  பிடித்ததும்  அந்தப்பணம்  தவறான  தொழில்  செய்ததால்  கிடைத்ததா?  என கேட்பதும், அக்கம் பக்கம்  வீடுகள்  அவங்களைக்கேவலமாகப்பார்ப்பதும்  நாடகத்தனம், அவங்க  இத்தனை  வருசமா  அங்கே  போனவங்க  தானே? தெரியாதா?


 சி.பி ஃபைனல் கமெண்ட் -   முன்  பாதி காமெடி , ரொமான்ஸ்னு போவதால்  ஆண்களுக்குப்பிடிக்கும், பின் பாதி  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  அதிகம் என்பதால்  பெண்களுக்குப்பிடிக்கும்.  நல்ல  ஃபேமிலி டிராமா . ரேட்டிங்  3 / 5