Wednesday, March 20, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

தமிழக அரசு, பொள்ளாச்சி வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,யில் இருந்து, சி.பி.ஐ.,க்கு தானாக மாற்றி இருக்கிறது. இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது -திருமாவளவன்:  # இதையே திமுக ஆட்சில செஞ்சிருந்தா தானே மாற்றிய தானைத்தலைவன் வாழ்கனு கோஷம் போட்டிருப்பாரு


மாத்தினாலும் ஏசும், மாத்தலைன்னாலும் புறம் [பேசும் , வையகம் இதுதானடா


===================


எங்கள் கட்சி சார்பில், வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின், தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளேன்.-சரத்குமார்: # 40 பேரு கிடைக்கனும் இல்ல? லேசுப்பட்ட காரியமா?

===========

3 லோக்சபா தேர்தலில், நான் போட்டியிடவில்லை.-சரத்குமார்:  #எம். பி ஆகாமயே பிரதமர் ஆக ரூட் கண்டுபிடிச்ட்டாரோ?


============

4பா.ஜ., ஆட்சியில், பெரு நிறுவன முதலாளிகள் மட்டுமே, சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். நடுத்தர, சாதாரண மக்கள், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்- மார்க்., கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், பிரகாஷ் கராத்:  # அப்போ ஆளூங்கட்சிக்கு டெபாசிட்டே கிடைக்காதுங்கறீங்களா?


=================

 தொண்டர்களின் விருப்பம் காரணமாக, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்-தீபா: # 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் கண்டுபிடிக்கவே மாமாங்கம் ஆகுமே?

அப்படி விரும்புன தொண்டர்கள் லிஸ்ட் ஆதார் கார்டோட தர முடியுமா?நம்ம கட்சில தொண்டர்கள் இருக்காங்க என்பதே அதிர்ச்சியான செய்திதான்


====================


தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்கு, பா.ஜ.,வுக்கு மற்ற கட்சிகளின் தயவு தேவைப்படும். அந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்-சரத்பவார்:  # அப்போ எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதுனு நீங்களே ஒத்துக்கறீங்க?


=================

ஜெயலலிதாவுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற, அ.தி.மு.க., கோரிக்கையை, நிச்சயமாக ஆதரிப்போம்-அன்புமணி:  # வேற வழி ?

இல்ல, எதிர்த்துதான் பாருங்களேன்

 ஜெ படம் திறக்க எதிர்ப்பு, நினைவகம் அமைக்க எதிர்ப்பு , இதுக்கு மட்டும் ஆதரவு?

================

இந்தியாவுக்கு, பொய் சொல்லாத பிரதமர் வேண்டும்.-இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் #அதுக்கு அரிச்சந்திர மகாராஜாவைத்தான் கூட்டிட்டு வரனும்



=============

எங்கள் கூட்டணி, தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல; மக்கள் நலனுக்காக, மாநில அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், கூட்டணி அமைத்து போராடி வருகிறோம்=  இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் # மக்கள் நலக்கூட்டனிக்கு போன தடவையே தோல்விதானே கிடைச்சது?

===================


10 தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்காக, எங்களை யாரும் கூட்டணிக்கு அழைக்கவே இல்லை.-  அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின், தமிழ் மாநில பொதுச் செயலர், பி.வி.கதிரவன் # உண்மையை ஓப்பனா ஒத்துக்கற அந்த மனசுதான் சார் கடவு:ள்

  ஜெ  தீபா , சரத்குமார் சமக்  இப்படி உதிரிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி:  உருவாக்கலாமே?


================
1  ஸ்டாலின்,  என்ன பேச வேண்டும் என்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி உளறுகிறார். 'திருப்பூரில், துறைமுகம் அமைப்பேன்' என்கிறார். அங்கு எப்படி துறைமுகம் அமைப்பார் என்றே தெரியவில்லை. -அ.தி.மு.க., - எம்.பி., -கே.என்.ராமச்சந்திரன்   # இது என்ன பிரமாதம்? முதல்ல கடல் அங்கே கொண்டுவரப்படும், பிறகு துறைமுகம் அமைக்கப்படும்
================
12     லோக்சபா தேர்தலுக்காக, அ.தி.மு.க., அமைத்துள்ள, 'மெகா' கூட்டணியை கண்டு, எதிர்க்கட்சிகள் கதிகலங்கி உள்ளன-கே.என்.ராமச்சந்திரன் #   அதிமுக வை திட்டுன கட்சி, திட்டிட்டு இருக்கற கட்சி கூட கூட்டணி வெச்சா?
 மக்களே கதிகலங்கி இருக்காங்க

================
13மற்றவர்கள், தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள, ஏதேதோ செய்கின்றனர் என்பதற்காக, தி.மு.க.,வின் இளைஞர் பட்டாளமும், தங்களை சதா வெளிப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. ராணுவ வீரர்கள், தினந்தோறும் சாலையில் நின்று, தங்கள் பலத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. போர் வந்தால்தான், அவர்களின் வீரம் வெளிப்படும்.- தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர், சிவா #  எதுக்கு ரஜினியை வம்புக்கு இழுக்கறிங்க?=================
14   :அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்று, சட்டசபையிலும், லோக்சபாவிலும் பணியாற்றி உள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பின், என் தாய் கட்சியான, அ.தி.மு.க.,வில், இரட்டை இலை சின்னத்தில், வேலுார் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். இக்கூட்டணியில் நான் இணைந்தது, என் தாய் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது-ஏ.சி.சண்முகம் # பொதுவா தாய் வீட்டுக்கு வரும் பொண்ணூங்க சீதனமா எதையாவது தாய் வீட்ல இருந்து சுருட்டிட்டு போய்டுவாங்களாம், நாம எப்படி>
===============
15  ஓட்டு உரிமை என்பது, துப்பாக்கி தோட்டாக்களை விட, மிகப்பெரிய சக்தி. இதை, அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஓட்டு தான், நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது-இந்திய துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு # எனை நோக்கி பாயும் தோட்டானு ஆளாளுக்கு கதி கலங்கி இருக்காங்க
===================
16 மக்கள் நீதி மையத்தோடு கூட்டணி வைத்தால், நாம் காணாமல் போய்விடுவோம் என்ற பயம், ஆண்ட கட்சிகளுக்கு இருக்கிறது. - கவிஞர் சினேகன் # ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது
============
17  கமலை கூட்டணிக்காக நெருங்க,அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். - கவிஞர் சினேகன்   # கூட்டணீப்பேச்சுவார்த்தைல கமல் என்ன பேசறார்னே புரியாதே?அதான் [பம்மறாங்க
===============
18  மக்கள் மனம் கவர்ந்த நடிகராக கமலை பார்ப்பதே, இந்த பயத்திற்குக் காரணம். மற்றபடி, எங்களுக்கு ஓட்டு வங்கி இல்லை என்பதெல்லாம், பரிசுத்தமான பொய்.- கவிஞர் சினேகன் # ஒரு தேர்தலிலாவது நின்னு வாக்கு வாங்கின பின்னாடிதான் வாக்கு வங்கியைப்பத்தியே பேச முடியும்
=================
19  உண்மையான, அ.தி.மு.க.,வினர், எப்போதும் எங்கள் பக்கமே உள்ளனர். டெண்டர்களுக்காக சென்றவர்கள் மட்டுமே, இ.பி.எஸ்.,சிடம் உள்ளனர்-  கர்நாடக மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி #  தொண்டர்கள் இருக்காங்களா? கண்ணுக்கு எட்டுனவரை கட்சி குண்டர்கள் தான் தெரியறாங்க
=====================
20   லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் 
தேர்வையே, பா.ஜ., தான் செய்யப் போகிறது.- கர்நாடக மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி# ஓஹோ அப்போ பாஜக வேட்பாளர் தேர்வை அதிமுக செய்யுமா? எக்சேஞ்ச் ஆஃபரா?

0 comments: