Sunday, December 27, 2015

பதினோரா வது கொலை!-பட்டுக்கோட்டை பிரபாகர்

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்வார்கள்.


பெரும்பாலான குற்றவாளிகளின் வாழ்க்கையிலும் அப்படி உருவா வதற்கான சூழல் இருக்கலாம். ஒரே இர வில் ஒருவன் கொள்ளைக்காரனாகிவிட லாம் என்று தீர்மானம் செய்து, அப்படியே கொள்ளைக்காரனாக மாறி வங்கியைக் கொள்ளையடித்துவிட முடியாது. இன்றைக்கு கொலைசெய்யலாம் என்று வண்டிக்கு பெட்ரோல் போடுவது மாதிரி சாதாரணமாக செய்வதில்லை. கூலிப் படையில் காசுக்காக இரக்கமே இன்றி கொலைகளைச் செய்கிற யாரும் “இது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு’’ என்று சொல்வதில்லை. எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும்.


நேனிதாஸின் கதை மிக அழுத்தமானது. அமெரிக்காவில் பிறந்த நேனி தாஸ், தனது சின்ன வயதில் பள்ளியில் சேர்ந்து படித்துப் பெரிய அரசு அதிகாரி யாக வளரத்தான் ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய தந்தை அவளை பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நினைத்து, வேலைக்கு அனுப்பி சம்பா தித்து வரச் சொன்னார். அங்கேயே விழுந்தது அவள் மனதில் முதல் விரிசல்.



பதின்பருவத்தில் நேனிதாஸுக்கு ஒரு நல்ல உடை வாங்கித் தந்ததில்லை அவள் தந்தை. அவளுக்கு வயிறார சாப்பாடு போட்டது இல்லை. கொஞ்சம் திருத்தமாக மேக்கப் போட்டுக்கொள்ள வும் அனுமதி இல்லை. வெளியே எங்கும் தனியாகப் போகக் கூடாது. ஆண் நண்பர் களுடன் பழகக் கூடாது. பார்ட்டிகளுக்கு, விழாக்களுக்குப் போகவே கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள்!



ஆனால், மறுக்கப்படுவதைத்தானே மனித மனம் விரும்பிச் செய்யும்? எதை எல்லாம் வீட்டில் மறுக்கப்பட்டதோ, அதையெல்லாம் பிடிவாதமாக நாடியது அவளுடைய மனசு.



நேனிதாஸ் கனவுகளில் மிதந்தாள். கற்பனை சுகத்தில் மகிழ்ந்தாள். மனதில் காதல் பொங்கி வழிந்தது. காதல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே படித்தாள். பத்திரிகைகளுக்கு தனது பெயர் போடாமல் காதல் கட்டுரைகள் எழுதி அனுப்பினாள். மற்றவர்களின் காதல் அனுபவங்களை ஆர்வமாகக் கேட்டாள். ஆனால், அவளின் காதலைப் பகிர்ந்துகொள்ள ஓர் ஆண் மகனைச் சந்திக்கவே இல்லை. அதாவது சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.



16 வயதில் பெற்றோர் பார்த்து வைத்த திருமண வாழ்வை ஏற்று, ஆயிரம் கனவுகளுடன் புதிய வாழ்வில் நுழைந்தாள். அங்கே நேனிதாஸின் ஒவ் வொரு கனவும் முறிக்கப் பட்டது. அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவளுக்கு அவளு டைய தந்தையைவிட மோச மானவனாக அவன் அமைந் தான். அவனுடைய வார்த்தை கள் சாட்டையடிகளாக விழுந் தன. அவனுடைய நடவடிக்கை எதுவுமே அவளுக்குப் பிடிக்காமல் போனது. ஆனாலும், அவனோடு பொறுமையாக வாழ்ந்து குழந்தைகளும் பெற்றாள்.



வெளியே கடைக்காரர்களிடம், கார் டிரைவர்களிடம் என்று எவரிடம் அவள் பேசினாலும் அவனுக்கு சந்தேகம். மனம் நொந்துபோன அவள் புகைப் பழக்கத்துக்கும், மதுப் பழக்கத்துக்கும் ஆளானாள். தினமும் குடித்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு போதைக்கு நேனிதாஸ் அடிமையானாள்.


திடீரென்று உடல்நலம் கெட்டு அவளது கணவன் இறந்தபோது அவள் அழவே இல்லை. மனதுக்குள் கொண் டாடியபடி, வெளியே பொய் துக்கத்தில் இருந்தாள். இதைத் தொடர்ந்து உடனடியாக இரண்டாவது திருமணமும் செய்துகொண்டாள்.



புதிய கணவனின் செயல்களிலோ மர்மம் இருந்தது. அவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தான். அவனைத் தேடி காவல் துறை ஆசாமிகள் அடிக்கடி வந்து போனார்கள். அந்தத் துறையில் தனக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் சொன்னதை நேனிதாஸ் நம்பினாள்.



அவன் உடம்பில் இருந்து வீசும் பெண்கள் உபயோகிக்கும் செண்ட் வாசனையைப் பற்றி அவள் கேட்டபோது, அவனால் அவளுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால், அது என் பலவீனம் என்று ஒப்புக்கொண்டான். பிறகுதான் தெரிந்தது, தினமும் விதவிதமானப் பெண்களைத் தொட்டாக வேண்டும் என்கிற அவனது காம உணர்வு. அதற்குப் பணம் தேவை. பணத்துக்காக அவன் ரகசியமாக குற்றங்கள் செய்திருக்கிறான். விசாரிக்க வரும் அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்து சமாளித்திருக் கிறான்.



அவனும் திடீரென்று இறந்துபோனான். உறவினர் கள் நேனிதாஸின் நிலைமைக் காகப் பரிதாபப்பட்டார்கள். ஆறுதல் சொன்னார்கள். அப்போதும் அவள் திருமணத்தின் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை மாற்றிக்கொள்ளவே இல்லை. மூன்றாவதாகவும் ஒரு கணவனைத் தேடிக் கொண்டாள்.



மூன்றாமவன் இதற்கு முந்தையவர் களைப் போல இல்லை. அவனுக்கு ஒரே ஒரு பலவீனம்தான். அவனுக்கு தினமும் சூதாட வேண்டும். அதற்கு முதலில் அவளுடைய நகைகள் பலியாகின. பிறகு, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் எடுத்துச் சென்று விற்றுவிடுவான்.



மனம் வெறுத்துப் போன நேனிதாஸ் அவன் இறக்கக் காத்திருந்து, கடைசி முயற்சியாக நான்காவதாக ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்தக் கணவன் படு மக்கு. அவனோடு இருந்த அவனுடைய அம்மாதான் … அங்கே இவளுக்கு வில்லி. சீரியல்களில் வரும் மாமியாரைப் போல அதிகாரம் செய் வதும் வேலைகள் வாங்குவதுமாக நேனிதாஸைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.



மன உளைச்சலுக்கு மருந்தாக தன் அம்மா வீட்டுக்குச் சென்றால், அங் கேயும் இவளை விமர்சித்து இவளின் அம்மாவும் கடுமையாகத் திட்டினாள். தனது உடன் பிறந்த இரண்டு சகோதரி களும் இவளின் வாழ்க்கையைக் கிண்டல் செய்தார்கள். பொது விழாக்களில் வைத்து இவளை அவமானப் படுத்தினார்கள்.



போதாக்குறைக்கு இவளுக்குப் பிறந்த இரண்டு பெண்களும் தாய் என் றும் பார்க்காமல் இவளை அலட்சியப் படுத்தினார்கள். எங்கும் மரியாதை இல்லை. எல்லோருக்கும் நேனிதாஸின் வாழ்க்கை கேலிப் பொருளானது.
ஒரு சுபயோக சுபதினத்தில் இவள் தன் மாமியாரை உணவில் விஷம் வைத்துக் கொன்றாள். முதலில் அது வெளியில் தெரியவில்லை. பிறகு காவல் துறையின் தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டு, நேனிதாஸ் கைது செய்யப்பட்டாள்.



தொடர் விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான தகவல்கலைக் கொட்டினாள் நேனிதாஸ். மாமியாரைக் கொன்றது இவளின் முதல் கொலை இல்லை; அது அவளுடைய பதினோரா வது கொலை!



இவள் மனதைக் காயப்படுத்திய ஒவ் வொருவரையும் ரகசியமாக திட்டமிட்டு, அது கொலை என்று வெளியே தெரியாத படி கொலை செய்திருக்கிறாள். இவளின் நான்கு கணவர்களுக்குமே இயற்கை மரணம் நேரவில்லை. அத்தனை பேரை யும் நேனிதாஸ்தான் கொன்றிருக்கிறாள். கணவர்கள் மட்டுமல்ல; சொந்த தாய், இரண்டு சகோதரிகள், இரண்டு மகள்கள், ஒரு பேரன் உட்பட அவளுக்கு மன வருத்தம் கொடுத்த அத்தனை பேரையும் கொலை செய்திருக்கிறாள்.



இவளை விசாரித்த நீதிமன்றம் மரண தண்டனை தர நினைத்து, பிறகு.. இவளின் சூழ்நிலை, மனநிலை எல்லாவற்றையும் கணக்கில் எடுத் துக்கொண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்தபோது ரத்தப்புற்று நோய் வந்து நேனிதாஸ் இறந்து போனாள்.




குற்றவாளிகள் பிறப்பதில்லை; உரு வாக்கப்படுகிறார்கள் என்னும் கூற்றை நேனிதாஸின் வாழ்க்கை நிரூபித்தது. ஒரு மனநலக் கணக்கெடுப்பில் திருமணங் களில் தோல்வியைச் சந்தித்த ஒரு சில பெண்கள் தங்களுக்குள் கொலை செய் யும் எண்ணம் வந்ததாக ஒப்புக்கொண் டிருக்கிறார்கள். அந்த எண்ணம் தீவிர மடைகிற தருணத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தால் அது செயலாகிவிடுறது.



- நிறைந்தது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

தஹிந்து

0 comments: