Monday, December 14, 2015

ட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015

வழக்கம்போல, டுவிட்டரில், மழையும் கேலி மற்றும் கிண்டலுக்கான பொருளாகி உள்ளது. எனினும் இங்கும் யதார்த்த நிலவரத்தை, 140 எழுத்துக்களில் சித்திரிப்பவர்கள் உள்ளனர்.
15நவம்பர் 18,2015
Picture
‏சி.பி.செந்தில்குமார்@senthilcp
அமைச்சரே!மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க? மன்னா! மழை நிவாரண உணவு பாக்கெட்ல உங்க போட்டோ பிரின்ட் பண்றோம்
Picture
பயங்கர கோபக்காரன் ‏@KobaKaaran Nov 2
ஐப்பசி எல்லாம் மழை காலம்டா... இப்போ மேலடுக்கு சுழற்சியானதுனு சொல்லி எதோ புதுசா நடக்கற மாதிரி செய்தி போடறீங்களேடா... நல்லா வருவீங்க
Picture
காக்கைச் சித்தர் ‏@vandavaalam
வருசம் பூரா பெங்களூர்ல மழை பெய்யுது. எவ்ளோ அமைதியா இருக்கு ஊரு. 2 நாள் மழை பெஞ்சதுக்கே ஏங்க இப்பிடி பண்றீங்க?
Picture
நாடோடிச் சிறுத்தை ‏@T_cheeta
மழையா பெய்ய போகுதுனு குடை இல்லாம வெளியே வந்தா, கொஞ்ச நேரத்துல மழை சோனு பெய்யுது; சரினு குடை வாங்கினு வெளியே வந்தா மழை காணும்
Picture
Sen ‏@Sen_Tamilan
அம்மா சொன்னதை கடைபிடிப்பதில் சென்னை மாநகராட்சி தான் முதலிடம்!
சாலை நடுவே மழை நீர் சேகரிப்பு!
Picture
DoliyayBuzzi ‏@asraamji
விட்ட இடத்தை கொட்டிப் பிடித்தது நீர்... ஏரிக்குள் வீடு கட்டுன... உன் வீட்டுக்குள் ஏறி வந்துச்சு பாத்தியா...
Picture
Muthu kumar ‏@muthukumar00007
இந்த இலட்சணத்துல போரூர் ஏரியை வேற மூடிறேன்னாங்க...
Picture
சர்வ அதிகாரி ‏@jaleelmoh
நன்றாக பொழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. விவசாயம் பெருகட்டும். குடிநீர்ப் பஞ்சம் போகட்டும் என்று வாழ்த்த ஒரு ஆள் இல்லை.
Picture
கவிதா ‏@kavitha129
ஆதார் கார்டு வச்சிருக்கற மாதிரி எல்லாருக்கும் நீச்சல் அடிக்கத் தெரிந்து வச்சிருக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வருவாங்களா?

--http://www.dinamalar.com/twitter_galatta_detail.asp?id=103

0 comments: