Wednesday, August 12, 2015

எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா? ஆபத்து - ஒரு உஷார் ரிப்போர்ட்

படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்
ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும்.
உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும்.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், சாத்தியமான எண்கூட்டை அமைக்க ஒரு நிரல் எழுதினார். அதில் கிடைத்த எண்களை அனைத்தையும், ஃபேஸ்புக் நிரலி உருவாக்க மென்பொருளுக்கு அனுப்பினார். உடனே ஆயிரக்கணக்கான தனிநபர்களின் சுய விவரங்கள் தடையில்லாமல் வந்து குவிந்திருக்கின்றன.
இது குறித்து மொயாண்டின் மேலும் கூறியதாவது
இந்த பாதுகாப்பு ஓட்டையின் காரணமாக, கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கூட, பொதுவெளியில் தங்கள் மொபைல் எண்களைப் பதிவேற்றியிருக்கும் ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடமுடியும்; பின்னர் அதையே மற்ற நிறுவனங்களுக்கு விற்கவும் முடியும்.
கடந்த ஏப்ரலில் ஃபேஸ்புக்கிடம் இப்பாதுகாப்புப் பிரச்சனை குறித்துத் தெரிவித்த பின்னரும், அந்த ஓட்டைகள் அடைக்கப்படாமல்தான் இருக்கின்றன. இதன் மூலம் கிட்டத்தட்ட 15 லட்ச ஃபேஸ்புக் பயனாளிகள், தங்களின் தகவல்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர், என்று கூறினார்.
சென்ற வருடத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, ராண்ட் கார்ப்பரேஷனின் தேசிய பாதுகாப்பு பிரிவு சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தனிநபர்களின் புகைப்படங்கள், பெயர்கள், தொலைபேசி எண்கள், கல்வித் தகவல் மற்றும் வசிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் இருக்கும் சட்டவிரோதமான வணிக தளங்களால் திருடப்படுகின்றன.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள், திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைக் காட்டிலும் அதிகம் உபயோகமானவை என்கிறது ராண்ட் நிறுவன ஆய்வு.

  • தமிழ் இந்து நாளிதலுக்கு என்னுடைய கடந்த 08/08/2015 4 நாட்களுக்கு முன் நடந்த அனுபவத்தினை பகிர்கிறேன். நான் அதிகமாக fb la அதிகமான காமென்டுகள் ஈட்டுள்ளேன்.தமிழ் ஆங்கில நாளேடுகளின் fb பேஜ்ல். என்னுடைய fb la என்னுடைய சவுதி அரேபியா மொபல் இலக்கம் மேலும் என்னுடை முழுதகவல்களையும் fb la போட்டுளேன். நான் இட்ட கமெண்ட்ல ஒரு திருட்டு கும்பல் எனக்கு புது டெல்லில் இருந்து தொடர்புகொண்டு உங்களுடைய நண்பர் அப்துல்லா என்பவர் கிரிடிட் கார்டுக்கு பணம் செலுத்தவில்லை அவருடைய மொபல் எண் ஆப் செய்துள்ளார் ஆல்டர் நண்பர் உங்களுடைய எண்ணை கொடுத்துள்ளார் என்று டெல்லியில் இருந்து பேசும் நபர் விவரத்தினை ஸ்மார்ட்டாக கூறுகிறார்.எந்த அப்துல்லா என்று எனக்கு தெரியவில்லை.நீங்கள் உங்களது கிரிடிட் கார்ட் ச்வ்ச் எண்ணை தாருங்கள் என்று அமைதியாக கூறுகிறார்.உங்கள் நண்பருக்கு நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் நீங்கள் இந்தியா வந்தால் போலீசார் கைதுசெய்வார்கள் என்று கூறினார். நான் பின்வரும் 011‍ 43088226 டெல்லி எண்ணை கூகிலில் சர்ச் செய்தேன்.கீழ்காணும் ஒரு தகவல் பதியப்பட்டுள்தினை அறிந்து நீங்கள் சொல்லும் அந்த அப்துல்லா மொபல் இலக்கத்த
    about 8 hours ago
     (0) ·  (0)
     
    • S
      Siva  
      IT துறை யின் பெரிய சாபக்கேடு இந்த தனி நபர் விவரங்களை திருடும் கும்பல்கள்..இதை வாங்குவோர் நிறைய உள்ளனர்..திருட்டு பொருள் வாங்குவது தவறு என்று தெரிந்தும்..
      Points
      4225
      about 10 hours ago
       (0) ·  (0)
       
      • S
        பொது மக்கள் பயன் அடைய ஹிந்து தமிழ் பிரசுரம் செய்தமைக்கு மிக்க நன்றி.
        about 11 hours ago
         (1) ·  (0)
         
        SSethu Up Voted
        • M
          Mumbai  
          கிரிமினல் வேலை படிச்சவனும் செய்யுறான்.
          Points
          9700
          about 11 hours ago
           (1) ·  (0)
           
          SSethu Up Voted
          • Swaminathan Murugaiyan Sr. Program Manager at Servion Global Solutions 
            கிரிமினல் வேலைகளை, இந்த காலத்தில் படிச்சவன் மட்டும்தான் செய்கிறான்.
            about 7 hours ago
             (1) ·  (0)
             
          • A
            Anand  
            இதில் மட்டுமில்லை.. android மொபைல் இல் accept கொடுக்கும் போது எல்லா சாப்ட்வேர் களும் நம் தகவல்களை திருடுகின்றன... இது எத்தனை பேருக்கு தெரியும்...
            about 13 hours ago
             (2) ·  (0)
             
            • SI
              This news very correct.
              about 14 hours ago
               (0) ·  (0)
               
              • V
                பேரன்புல்டையீர் வணக்கம், முன்னவர் செய்ததை பின்னவர் செய்கிறார். நன்றி.
                Points
                325
                about 15 hours ago
                 (0) ·  (0)
                 
                • V
                  பேரன்புடையீர் வணக்கம், தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. பொது மக்கள் பயன் அடைய ஹிந்து தமிழ் பிரசுரம் செய்தமைக்கு மிக்க நன்றி.
                  Points
                  325
                  about 15 hours ago
                   (0) ·  (0)
                   
                  • S
                    SSethu  
                    சைபர் கிரைம் வளர்ச்சி ஆபத்தின் அறிகுறி
                    Points
                    1570
                    about 15 hours ago
                     (0) ·  (0)
                     
                    • சிந்திக்க வேண்டியதாகவும், சிக்கல் மிக்கதாகவும் , சீர்செய்ய வேண்டியதாகவும் தெரிகிறது .
                      Points
                      150
                      a day ago
                       (0) ·  (0)
                       
                      • முகநூல் கணக்குகள் எப்படி திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைக்காட்டிலும் அதிகமாக ஆபத்தானது என்பதை சிறிது விளக்கியிருக்கலாம் !

                      நன்றி - த இந்து

                      0 comments: