Friday, August 28, 2015

தனி ஒருவன்

தனி ஒருவன் என்ன மாதிரி படம்? - ஜெயம் ரவி, மோகன் ராஜா பேட்டி



மோகன் ராஜா இதுவரை இயக்கிய படங்களில் தனி ஒருவன் படத்துக்குதான் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். படத்தின் கதையும், கான்செப்டும் அப்படி.

படம் குறித்து ராஜாவும், அண்ணன் ராஜா குறித்து ஜெயம் ரவியும் கலகலப்பாக அளித்த பேட்டி உங்களுக்காக.
 
ஜெயம் ரவி:
 
 
உங்கள் அண்ணன் பற்றி சொல்லுங்க...?
 
ராஜா எப்படின்னா, ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதாவது ஊசிதான் குத்துவார். ஆனா, வலிக்கவே வலிக்காது. ஒவ்வொரு விஷயத்தையும் அந்த மாதிரி நமக்குள்ள ஏத்துவார். ஒரு சீன்னா அந்த சீன் மட்டுமே கிடையாது. ஸ்கிரிப்ட்ல அந்த சீனுக்கு முன்னாடி பின்னாடி உள்ளதெல்லாம் ஒரு சீன்ல பிரதிபலிக்கும். அதையெல்லாம் வச்சுதான் நம்மகிட்ட வேலை வாங்குவார். அவருக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன். இந்த மாதிரி ஒரு நல்ல படம் எடுக்கிறது அவரோட கடமை.
 
விஜய்யை வைத்து படம் செய்துவிட்டு அடுத்தப் படத்தை உங்களை வச்சு பண்ணியிருக்கார். எப்படி ஃபீல் பண்றீங்க?
 
விஜய் அண்ணா மாதிரி ஒரு பெரிய ஹீரோவுக்கு படம் பண்ணிட்டு, மறுபடி தம்பிக்குதான் பண்ணுவேன்னு சொன்னது ரொம்பவே பெரிய விஷயம். அது எனக்குக் கிடைச்ச ஆசிர்வாதமா நினைக்கிறேன். 
 
படப்பிடிப்பில் அண்ணன் எப்படி?
 
ஒரு நல்ல சைக்கோ எங்க அண்ணன். ரெண்டு வருஷமா எங்க எல்லோரையும் போட்டு அவ்வ்வவ்வளவு சந்தோஷப்படுத்தியிருக்கிறாரு (சிரிக்கிறார்). ஆனா, அதுக்கு பலனா படத்தைப் பார்க்கும் போது உண்மையிலேயே புல்லரிக்குது. என்னோட கரியர்ல ரொம்ப ரொம்ப முக்கியமான படமா தனி ஒருவன் இருக்கும்.


நன்றி - வெப்துனியா

0 comments: