Friday, April 03, 2015

வித்தார கள்ளி டி எம் பார்க்கப்போனாளாம்.கட்டைல போறவனுங்க.......

1  +2 சயின்ஸ் டீச்சர் என் பேஸ்புக் பார்த்துட்டு போன் பண்ணி ஏண்டா நீ இன்னும் திருந்தவே இல்லையா?ன்னு கேட்டுட்டாங்க.ஷேம்.ஷேம் பப்பி ஷேமாப்போச்சு



============



2 கன்னிப்பொண்ணுங்களுக்கு  வாழ்த்து  சொல்லும்போது கூட “ என்னை  மாதிரியே நல்ல  மாப்ளை  உனக்குக்கிடைக்கனும்”னு  பிட்டை  ஓட்டிடுவான் நெட் தமிழன்




===================




3  வலது  கையால   காத்தில்  ஒரு வட்டம்  போட்டுட்டே  இடது கையால ஒரு  சதுரம்  போடு.உன்  டேலண்ட்  ஊருக்கு  தெரியும்.-ட்விட்டரில் நான் கற்றது




======================





4  சன்யாசம்  போறேன், சன்யாசம்  போறேன்  -னு  சொல்லிட்டே  லேடீஸ் ஹாஸ்டலை 3  முறை  சுத்தி  வந்தாராம்  சன்னியாசி!இது  எப்டி இருக்கு நீ யோசி!




===============




5   வித்தார கள்ளி டி எம்  பார்க்கப்போனாளாம்.கட்டைல போறவனுங்க கொத்துகொத்தா  காலை வணக்கம்  வெச்சானுங்களாம் # நவீன  சொலவடை




===================



6  நேத்து  நான் போட்டிருந்த டிரஸ்சே  சரி இல்லை

இன்னைக்கு மனசே  சரி இல்லை
நாளை  என்  மனசு  என் வசம்  இல்லை # பிரபல  fb அப்டேட்டுகள்


==================

7  நைட் பூரா ஃபேஸ்புக்கில் குடி இருந்ததால் கண்ணெல்லாம் எரிகிறதா?நந்தியாவட்டைப்பூவைகண்ணில் வைத்திருந்தால் குளிர்ச்சி


===================

8 கோடைக்கு மோர் சாப்பிட்டா நல்லதுன்னா தமிழன் பீர் சாப்பிடறான்.இளநீர் குடிச்சா குளிர்ச்சின்னா கள்ளு/சாராயம் குடிக்கறான்


=============


9 ட்விட்டர்ல /FB ல பாலோயர்ஸ் வர்றாங்க்ளோ இல்லையோ சம்சாரம் டெய்லி நம்மளை பாலோ பண்ணிக்கிட்டே இருக்கு.யார் கூட என்ன பேசறான்?னு கண்காணிக்குது


-----------------------



10 ஷீபா ,ஜெபா,சுபா,ரூபானு ஏகப்பட்ட பேர் இருக்காங்க.டிஎம் அனுப்பும்போது ஒரு தபாக்கு 2,தபா பார்த்து அனுப்பனும் போல.




=================




11 செவ்வாய் தோஷம் உள்ள பெண்களுக்கு அரிய வாய்ப்பு.எனக்கு செவ்வாய் நாலில் இருப்பதால் செவ் தோஷம் உள்ள பொண்ணுங்களோட மட்டும்தான் கடலை போடனுமாம்



=================




12 நான் சின்னப்பைய்னா இருக்கும்போது மொட்டை மாடி வந்தா காத்து வாங்கிட்டு.வேடிக்கை பார்ப்பேன்்.இப்பவெல்லாம் டிவியே கதினு கிடக்குது ஊருசனம்




================



13 ஏழைங்க ,அன்றாடங்காய்ச்சிகள் எல்லாம் அரக்க பரக்க வரிசைல நின்னு கரண்ட் பில் கட்டிடறாங்க.ஊரான் ஊட்டுக்காசை அடிச்சு உலைல போட்டவங்க பம்மறாங்க




==================




14 வாழ வந்தான் வீட்டுக்கு மருமகளா வரும் பெண்ணை வாழ வந்தான் வீட்டுக்கு வாழ வந்தவர்னு வாழ்த்தனுமோ?




================



15 நயன் தாரா வும் ரோஹித் தும் 1

எதிர்ல யார் இருக்காங்கனு பார்த்துட்டு பர்பார்ம் பன்றதில்லை.சிக்சர் தான்


============


16 கவர்மெண்ட் வேலை கிடைத்தவன் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன்
சாத்தானால் சபிக்கப்பட்டவன்


===============


17 அன்பே நிஷி! செடியை நடு! என கட்டளை வாக்கியமாகச்சொன்னாலும் அது நடு”நிசி”க்கீச்சு ஆகிவிடுமோ?

==================


18 அன்பே அஞ்சனா! உங்கப்பா பத்திரிக்கை வைக்க வந்தாரு.நாலணா வெச்சாரு.அட்லீஸ்ட் எட்டணா வெச்சிருந்தா ஹால்ஸ் மிட்டாயாவது வாங்கி இருப்பேன்


=================


19 இன்று அகில உலக சிட்டுக்குருவி தினமாம்.எனவே செல் ரிங்க்டோனாக சிட்டுக்குருவி தொட்டுத்தழுவி பாட்டை வைக்கவும் ( மார்ச் 20)


====================

20 என் ஆளுக்கு 10 வது எக்சாம் நடப்பதால் இடைக்கால நிவாரணமா நான் என் ஆள் திரும்ப வர வரைக்கும்
யாரையாவது லவ் பன்னலாம்னு இருக்கேன் னு ஒரு FB sms


=================

0 comments: