Wednesday, March 18, 2015

டிராபிக் ராமசாமிக்கு ட்விட்டரில் பெருகும் ஆதரவுக் குரல், ஜெ அதிர்ச்சி

டிராபிக் ராமசாமி | கோப்புப் படம்
டிராபிக் ராமசாமி | கோப்புப் படம்
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஆதரவுக் குரல் பெருகியவண்ணம் உள்ளது.
இதற்காக, #WeStandWithTrafficRamasamy என உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக், சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி முன்னிலை வகித்துள்ளது.
டிராபிக் ராமசாமி மீதான நடவடிக்கையை விமர்சித்து பலரும் ட்விட்டர் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அத்துடன், டிராபிக் ராமசாமி இதுவரை சமூக ஆர்வலராக மேற்கொண்ட செயல்பாடுகளை அவர்கள் நினைகூர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்ததும் சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து, டிராபிக் ராமசாமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடனடியாக அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 9 மணி அளவில் டிராபிக் ராமசாமி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அதிகாலையில் கைது செய்து சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது நினைகூரத்தக்கது.


  • Thiya  
    வாய்மையே வெல்லும் , எனக்கு வெட்கமாக இருக்கிறது அம்மாவிற்கு ஓட்டு போட்டதிற்கு
    about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
       
    • K.J.Sebhastian  
      வெட்கம். 6 கோடி மனிதர்களும் முட்டாள்கள் என்ற எண்ணம் தான் எல்லா அத்துமீறல்களுக்கும் கரணம்
      about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
      • Gokul  
        Great salute for honourable man......
        about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Gowthul Alam  
          என்ன ஒரு நல்ல மனிதர் நாம் கடவுளிடம் அவர் நலமாக வேண்டுவோம்
          about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Manickam  
            நல்லவருக்கு துணை இருப்போம்
            Points
            2830
            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Ravi Jayavijayan  
              ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. சமூக சேவை செய்யும் நல்லவர் சிறைக்கு உள்ளே. தண்டிக்கப்பட்ட குற்றவாளி சிறைக்கு வெளியே. வாழ்க தமிழ்நாடு. ஜெ ரவி
              Points
              1595
              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Vasanthan Manivannan Engineer at Naraiuran Controls India Pvt Ltd 
                மக்கள் முதல்வரை விமர்சித்தல் தமிழக முதல்வர் சும்மா இருப்பர ஒரு நாட்டுக்கு ஒரு முதல்வர் தன இருக்க வேண்டும். புகழ் படும் புலவர்கள் நடத்தும் ஆட்சியில் இவருக்கு ஏன் இந்த வேலை
                Points
                160
                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Issac  
                  81 வயது வாலிபரை கைது செய்து தமிழக காவல்துறை உலக சாதனை. விரைவில் பதக்கம், வீட்டு மனை , ரொக்க பரிசு தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும்........
                  Points
                  1130
                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • TMZ  
                    ஜெ பேனர் கிழித்தார். அம்மா தூக்கி உள்ளே போட்டுடாங்க. ட்விட்டரில் அஜித்துக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லாமல் சண்டை போடும் இளைஞர் இவருக்காக ஆதரவு தெரிவித்தால் நன்று/
                    Points
                    2510
                    a day ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                    • S Sivakumar Sankaranarayanan Librarian at Doordarshan National (DD1) 
                      தமிழக காவல் துரையின் அவல நிலை..
                      Points
                      135
                      a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                      • Muthu  
                        லஞ்சம் வாங்கவில்லை என்பதற்க்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறார் . நமது போலீஸ் நல்ல போலீஸ் .
                        a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                        • Kalyan  
                          போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்ற டிஜிட்டல் பேனர்களை எடுக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்.இதில் எந்த கட்சி என்று பேதம் பார்க்காமல் சமூக கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு பெரியவரை அதிகாலையில் போய் தமிழக காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.அ.தி.மு.க ஆட்சியை நினைக்கும் போது "விநாசகாலே விபரத புத்தி" நினைவுக்கு வருகிறது.
                          Points
                          165
                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • Ramachandran Textiles  
                            (இந்தியன் தாத்தா போல)
                            a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                            • Ramachandran Textiles  
                              இவர் வயதானவர் அது மட்டுமல்ல இவர் சமூக ஆர்வலர் இவர் மீது பளிவாங்கும் நோக்கத்தில் சிலர் வேன்டுமென்ரே பொய் குட்றம் சாட்டு கிரார்கள் ஆகயாள் இவருக்கு தயவு செய்து மக்களுடய ஆதாரவு வேன்டுகிரேன். ராமசந்திரன் பிள்ளை மதுரை தமிழ்நாடு கன்சூமர் தலைவர்
                              a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                              • Pulliyappan  
                                நீதி மன்றமும் இல்லாதிருந்தால் இந்த ஆட்சி கொடுங்கோல் ஆட்சி தான்.எப்பயாவது அவரை வெளியே நடமாட முடியாத அளவுக்கு படுக்க வைக்க பினாமி ஆட்சி தலைவி எண்ணப்படி செய்கிறது.
                                Points
                                430
                                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • Vijay  
                                  தமிழ் தத்தா....(இந்தியன் தாத்தா போல)
                                  Points
                                  350
                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                  • Raj  
                                    கண்டிக்கின்றேன்
                                    Points
                                    390
                                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                    • N  
                                      this is our democracy no one stand against political power, it is our fate court alone can stand, here too.
                                      Points
                                      170
                                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                      • Clitus  
                                        நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய க
                                        a day ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
                                        • ZAKIR  
                                          இந்த கொடுமையை கண்டிக்கின்றேன் மக்களுக்காக போராடும் இந்த போராளிக்கு பொதுமக்கள் கட்சி வேறுபாடின்றி தோள் கொடுக்கவேண்டும் அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் பின்புலமாக செயல்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
                                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                          • ZAKIR  
                                            டிராபிக் ராமசாமி தமிழ் நாட்டின் அன்ன ஹசாரே, இவரின் பின்னால் இளைநர்கள் திரளவேண்டும். சினிமா நடிகர்களின் பின்னால் போவதை விடுத்து இவரைபோன்ற பொதுநலவாதிகளின் பின்னால நாம் ஒன்று சேரவேண்டும்.
                                            a day ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                                            • Abkhan  
                                              தமிழ் நாடு அரசு தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டேயிருக்கிறது. நீதி மன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டாலும் நிறைவேற்ற முடியாது. மக்கள் தான் தண்டணை வழங்க முடியும். செய்வார்களா?
                                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                              • ஜெய்.ரமணா  
                                                நல்ல மனிதர் ! அரசியலை சமூக சேவையாக செய்யாமல் சம்பாரிக்கும் தொழிலாக செய்து அராஜகங்களை அரங்கேற்றி வரும் அரசியல் ரௌடிகள் இவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு திருந்த வேண்டும் !
                                                Points
                                                7195
                                                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                • Iyyappan M  
                                                  டுடே எங் ஹீரோ ராமசாமி ...
                                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                  • SUBRAMANIAN  
                                                    இப்போதும் சொல்கிறேன் தமிழனுக்கு அறிவு குறைய காரணம் இந்த மீடியா உலகம்தான் .தயவு செய்து கேட்க்கிறேன் உண்மையை மட்டும் உரக்க சொல்லுங்கள் ,அம்மா துதி பாடாதீர் . எதிர்கால சமுகத்திற்கு நாம் எதாவது நல்லது செய்து விட்டுப்போவோமே .
                                                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                    • Kamal  
                                                      அவர் செய்த பாவம் போக்கு வாரத்துக்கு இடைஞ்சலாக இருந்த அரசியல் தலைவர்களின் பானர்களை அகற்ற முயற்சித்ததுதான். தமிழ் நாட்டில் முதுகெலும்பு இல்லாத அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் இவரின் நேர்மையான செயலை சகித்து கொள்ளமாட்டார்கள்தாம்.
                                                      Points
                                                      1070
                                                      a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                                                      • Laxlaxmanaperumal  
                                                        நல்ல தமிழ்மகன் (ஜயா டிராபிக் ராமசாமி)
                                                        Points
                                                        455
                                                        a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                                                        • Jayarathan  
                                                          ட்ராபிக் Ramasamij அவர்கள் மதிப்புமிகுந்த சமூக சீர் திருத்ததவாதி, நாம் அனைவரும் அவர்க்கு பாதுக்காப்பாகவும் முழு ஆதரவும் தர மக்கள் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் மக்கள் சேவைல்யில் க. ஜெயரதன் - சமூக ஆர்வலர் லிபர்ட்டி பௌண்ட்செசன்
                                                          2 days ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                                                          • JAIKANTH  
                                                            வயதையும் அனுபவித்து வரும் நோயையும் காரணம் காட்டிதான் இந்த மூதாட்டி ஜெயலலிதா ஜாமீன் பெற்றார். அதுவும் கண்டிசனல் பெயில் கொடுத்தார்கள் . இப்போது எண்பத்து இரண்டு வயது முதியவரை எந்த அடிபடையில் கைது செய்தார்கள்? விடிந்தால் ஓடி ஒளிந்து கொள்வாரா? விடியும் வரைகூட கருணை காட்ட தெரியாத துறைதான் காவல் துறையா? காஷ்மீரில் 150 பேரை கொன்ற தீவிரவாதியை அந்த அரசு விடுதலை செய்யுமாம் . ஆனால் மக்கள் சேவையாற்றும் ராமசாமி போன்றவர்களுக்கு கொலை மிரட்டல் விட்டார் என்று கைது நடவடிக்கை. இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா? இதைதான் இந்திய அரசியல் அமைப்பு பெருமை பேசுகிறதா? இந்த விசயத்தில் போலீஸ் நீதி மன்ற தீர்ப்பை மீறி உள்ளது.காவல் துறை செய்யவேண்டிய செயலை செய்து நீதியை காப்பாற்றினால் அவர்களுக்கு சிறைதான் பரிசா?
                                                            2 days ago ·   (4) ·   (0) ·  reply (1) · 
                                                            • sridharan  
                                                              இங்கி pdp அரசு இல்லையே
                                                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                            • Arul Siva  
                                                              பத்திரிக்கைகள் உண்மையான தரவுகளை தருகிறதா என்கின்ற சந்தேகம் வலுக்கிறது. மதிபிற்குரிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை - புரசைவாக்கம் பகுதியில் இருந்த பதாகைகளை அகற்றுமாறு போராட்டம் நடந்தபொழுது ஏற்பட்ட தகராற்றில் - வேப்பிரி காவல் நிலையத்தில் புகர் செய்யப்பட்டதன் பெயரில் கைது செய்யப்பட்டார். இதற்கும் முன்னால் முதல்வர் விட்டிற்கு அருகில் பதாகைகளை அகற்றுமாறு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என மற்ற கட்சியின் தலைவர் திரித்து கூறுவதை பரப்புவதா?
                                                            நன்றி - த இந்து

                                                            0 comments: