Sunday, March 08, 2015

புறம்போக்கு -ஆர்யா, விஜய்சேது பதி, ஷாம், கார்த்திகா யார் டாப்?-இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். பேட்டி

  • ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, கார்த்திகா
    ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, கார்த்திகா
  • ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, ஷாம், ஆர்யா
    ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, ஷாம், ஆர்யா
‘‘இந்த சமூகத்தின் எல்லா பிரதிபலிப்புகளும் சிறைச்சாலைக்குள்ளும் இருக்கிறது. சிறைக்குள் ஒரு பயங்கரவாதியும் இருந்திருக்கிறான். உலகை மாற்றி அமைக்க முயற்சித்த ஒரு புரட்சியாளனும் இருந்திருக்கிறான். ‘சிறைச்சாலைக்குள் நுழையும்போது ஒரு கிராமத்துக்குள் நுழையும் மனநிலையோடு செல்’ என்கிறார் மாவோ.
‘புறம்போக்கு’ படத்தின் வழியே நானும் அப்படித்தான் நுழைய முயற்சி செய்திருக்கிறேன்’’ என்று பேசத் தொடங்குகிறார், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பை முடித்து, டப்பிங் மற்றும் ஒலி, ஒளிக் கலவை பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து…
இந்தப் படத்துக்காக ஆர்யா, விஜய்சேது பதி, ஷாம், கார்த்திகா ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
குலுமணாலியில் பனிப்பொழிவோடு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி னோம். வாசல் கடந்து இறங்கினால் 2 அடி முதல் 3 அடி வரை பனி இருக்கும். 60 பேர் கொண்ட குழுவோடு சரியாக திட்டமிட்டு புறப்பட்ட பயணம் அது. கிட்டத்தட்ட 50 நாட்கள்.
ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கப் பட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டோம். எந்த பாதிப்பும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்தோம். ஒரு கட்டத்தில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. அந்த பாதிப்புக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி பயனுள்ளதாக இருந்தது.
இரவு மரங்கள் மீது தூங்கும் பனி காலை 7 மணிக்கு சூரியன் உதித்ததும் உருகிவிடும். மரங்களில் பூத்திருக்கும் அந்த பனித் துளிகளை படமாக்குவது எனது திட்டம். அதனால் அதிகாலை நேரத்திலேயே ஆர்யாவும், கார்த்திகாவும் மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருந்தனர். ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையிலான தயாரிப்பு என்பதால் எல்லா முடிவு களையும் நானே எடுக்க முடிந்தது.
இப்படத்துக்கு இயல்பான ஆட்கள் அமைந்தது இலகுவாக படப்பிடிப்பை நகர்த்த உதவியது. ஆர்யாவுக்கு ஷூட்டிங் இல்லை என்றால்கூட அன்று செட்டில் இருப்பார். இதனால் யாருடைய பகுதியையும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கும் சூழல் அமைந்தது.
அரசியலை ஆழமாக உற்று நோக்கு பவர் நீங்கள். நம் நாட்டில் கார்ப்பரேட் கலாச்சாரம் வேரூன்றி வருகிறதே?
ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிட் டுள்ள விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது. ஒரு கிராமத்தில் ஆண்டொன் றுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்கிறார்கள். அதற்காக 5000 பேர் வேலையும் செய்கிறார்கள். நிகர லாபமாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கிறது. இந்த நேரத்தில் அந்த கிராமத்துக்கு ஒரு வங்கி வருகிறது.
அதே நிலத்தில் நெல்லுக்கு பதில் புல் விளைவிக்கலாம் என்றும், அதை ஆடுகளுக்கு உணவாக்கி, வளர்ந்த ஆடுகளை விற்கும்போது ஆண்டுக்கு ஒன்றரை கோடி லாபம் கிடைக்கும் என்றும் யோசனை கூறுகிறது வங்கி. மேலும், இந்தப் பணிக்கு 5000 பேர் தேவையில்லை. கிராமத்தில் இருக் கும் 500 பேர் உழைத்தால் போதும் என்ற யோசனையையும் முன் வைக்கிறது.
நல்ல யோசனை என்று கிராம மக்கள் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆண்டின் முடிவில் வங்கி கூறியதுபோல நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், அந்த கிராமத் தில் வேலையில்லாமல் இருந்த 4500 பேரும் ஊரைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயம் உருவாகிறது.
ஏங்கெல்ஸ் இங்கே, ‘ஆடுகள் மனிதனை துரத்தி விட்டன’ என்று முடித்திருப்பார். சரியான பொருளாதார அறிஞர்களால் நாடு வழிநடத்தப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நாட்டில் இன்றைக்கு பூதாகரமாக வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியால் நாம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்கிற அச்சம் உண்டாகிறது. எல்லாவற்றிலும் அந்நிய மூலதனம் வருவது தவறு. இது எதிர்கால சந்ததியை வேறொரு இடத்துக்குத் தள்ளிவிடும்.
தற்போதைய சினிமா லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே?
சினிமாவின் மூலம் சமூக மாற் றத்துக்கு வித்திட முடியும் என்கிற போக்கு மாறி லாபம் மற்றும் வரு மானத்தை நோக்கிய பயணமாக இது மாறிவிட்டது. இது சரியாகப் படவில்லை. இது தொடர்ந்தால் தெருக்களை திரையரங்குகளாக மாற்றுவதுதான் சரியாக இருக்கும் என்று படுகிறது. படத்தை வெளியிட திரையரங்குகளே கிடைக்கவில்லை என்றால் சாலையோரத்தில் வேட்டி கட்டி படம் காட்ட வேண்டியதுதான்.
மலையாள இயக்குநர் ஜான் ஆப்ரஹாம், ‘அம்ம அறியான்’ என்ற ஒரு படத்தை எடுத்தார். கிராமம் தோறும் நிதி வசூல் செய்து, படத்தை எடுத்து, அதே மக்களிடம் போட்டுக் காட்டினார். அதற்கென ஒரு அமைப்பை உருவாக்கி கேரளா முழுக்க படத்தை திரையிட்டார். திரையில் தோன்றும் அவர்கள்தான் நேரிலும் வந்து தெருவில் திரைப்படத்தை போட்டுக் காட்டிவிட்டு செல்வார்கள். ஜான் ஆப்ரஹாம் கஷ்டப்பட்டு செய்ததை இன்றைய டிஜிட்டல் வளர்ச்சியால் எளிதாக செய்ய முடியும்.
மெகா சினிமாவில் புதிய அனுபவங்களோடு மக்களை பார்க்க வைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது சாத்தியமே இல்லை என்றால் ஜான் ஆப்ரஹாம் செய்தது மாதிரி கிளம்ப வேண்டியதுதான்.
‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் படத் தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட காரணம் என்ன?
தாமதம் எல்லாம் இல்லை. குறித்த காலத்தில் படத்தை முடித்திருப்பதாகவே கருதுகிறேன். மூன்று ஹீரோக்கள், மும்பையில் உள்ள நாயகி என்று எல்லோரையும் ஒன்றிணைத்து. பணி யாற்ற வேண்டும். குலுமணாலி, ஜெய் சால்மர், பெங்களூரு, சென்னையில் சிறைச்சாலை செட் என்று லொக்கேஷன் களை அமைக்கவே நிறைய காலம் ஆனது.
நான் இமாச்சல பிரதேசத்தில் ஷுட்டிங்கில் இருக்கும்போது சென்னை யில் சிறைச்சாலை செட்டை போட முடி யாது. ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து அறைகள் தொடங்கி அறை யின் வண்ணம் வரைக்கும் சரியாக கவனிக்க வேண்டும். இந்த சிறைச் சாலை செட்டுக்கே 2 மாதங்கள் எடுத்துக்கொண்டோம். அதில் படப் பிடிப்பு 2 மாதங்கள். ஆகமொத்தம் 4 மாதங்கள் ஆனது.
அப்படி பார்க்கும்போது சரியான நேரம்தான் எடுத்துக்கொண்டோம். எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதைக்களத்தை அமைத்திருந்தேன்.
விவசாயத்தை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கவிருப்பதாக கூறினீர் களே?
விவசாயத்துக்கு உகந்த நிலப்பரப்பு நம்முடையது. அதை சரியாக பயன் படுத்தவில்லை. விளை நிலங்களின் உற்பத்தி இந்த ஆண்டு மட்டும் 6 சதவீதம் குறைந்திருப்பதாக கணக் கெடுப்பு கூறுகிறது. பாரம்பரிய விதை களை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழலை இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் உருவாக்கி வைத்திருக் கிறது.
ஒவ்வொரு பகுதி மண்ணின் வெப் பத்துக்கும், குளிர்ச்சிக்கும் விதைகளின் பரிணாம மாற்றம் உண்டு. இதெல்லாம் இப்போது நமக்கு மட்டுமே என்று இல்லை. யாரிடமோ பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் மர்மமான பிரச்சினைகள்தான்.
இப்படி விவசாயப் பின்னணியில் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரம்மாண்ட படம் எடுக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அது அடுத்த படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பார்க்கலாம்.
எஸ்.பி.ஜனநாதன்


நன்றி- த  இந்து

0 comments: