Friday, March 27, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27 /3// 2015 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை


1 வலியவன் =ராயல் ,சன்டிகா, அ பூரணி

2 மனதில் ஒரு மாற்றம்


3 நதிகள் நனைவதில்லை’
4 சுட்ட பழம் சுடாத பழம்
5 CSK
6 DRAGON BLADE  ( அபிராமி )

7 காலகட்டம் ( அண்ணா)

8 சரித்திரம் பேசு ( சங்கீதா)

9 JIL ( TELUGU)


10 THE DARK BURKING


#27/3/15



1 வலியவன்

கவுதம் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா இதுவரை தமிழில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும், அவர் தனியாக சோலோ நாயகியாக இதுவரை நடித்ததில்லை. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென், விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமார், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனால் முதல்முறையாக சோலா நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ள படம் 'வலியவன்' என்பது குறிப்பிடத்தக்கது. 


எனவே இந்த படத்தின் ரிலீஸை அவர் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் சரவணன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, 'இந்த படத்தின் ஹீரோயின் கேரக்டரை நான் உருவாக்கியபோது என் மனதில் தோன்றியது ஆண்ட்ரியா மட்டுமே. அவரை தவிர இந்த கேரக்டருக்கு நான் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கவில்லை' என்று கூறினார்.


எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இயக்கியுள்ள மூன்றாவது படம் வலியவன்' என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய், ஆண்ட்ரியா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகவும், சுபாரக் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். எஸ்.கே ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.


டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ள நா.முத்துக்குமார் மூன்று பாடல்களை எழுதியுள்ளார். மேலும் விவேகா இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



 மனதில் ஒரு மாற்றம்


கோட்ராக் பிலிம்ஸ் சார்பில் K.பொட்டால் முத்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘மனதில் ஒரு மாற்றம்’. 
இப்படத்தில் மதன் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர்.  இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநரான ஜனா வெங்கட் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் சு.பார்த்திபன் அவர்களின் குரு குலத்தில் சினிமா கற்றவர். மேலும் இயக்குநர் சாமி அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இவர் இயக்கிய குறும் படமான ‘வின்னிங் ஸ்டார்’ 2004-ம் ஆண்டு கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நடந்த குறும் பட  விழாவில் திரையிடப்பட்டது.  அடுத்ததாக 2007-ல் இவர் இயக்கிய ‘அப்பா என் செல்லம்’ குறும் படமும் பாராட்டினைப் பெற்றது. அதேபோல் இப்போது இயக்கி இருக்கும் இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ படமும் எல்லோராலும் பாராட்டப்படும் என நம்புகிறார்.
ஒளிப்பதிவாளர் சாய் நந்தா.  இவர் மறைந்த ஒளிப்பதிவு மேதை அசோக்குமார் மற்றும் ஹாஜீ அனுமோல் ஆகியோர்களிடம் பணியாற்றியவர். அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார். இவருடைய அப்பா பூபதி அவர்கள் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  அண்ணாமலை, உவரி சுகுமார், தென்றல் ராம்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள்.
படம் பற்றி பேசிய இயக்குநர் ஜனா வெங்கட்,  “ஆணுக்கும், பெண்ணுக்கும் வாலிபப் பருவத்தில் ஏற்படுகிற வேதியியல் மாற்றம், அவர்களைப் பொருத்தவரையிலும் காதல் திருவிழா.
ஆனால் இந்தக் காதல்  திருவிழா எத்தனை பெற்றோர்களால் அங்கீகரிக்கப்படுகிறது என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணுற்றொன்பது சதவிகிதம் நிராகரிக்கப்படுகிறது என்றுதான் பதில் வரும். ஆகவே, எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு விஷயம்தான் திருவிழா. ஒரு சாரருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு சாரருக்கு துக்கத்தையும் கொடுப்பதற்கு பெயர் திருவிழாவே அல்ல.  அந்த வகையில் இந்தக் காதலும் திருவிழாவே இல்லை.                                                 
இதுவரையிலும் காதல் ஒரு அமிர்தமாகவும் அருமருந்தாகவும்தான், புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. அந்த காதல் என்ற அமிர்தத்தால், அருமருந்தால் ஏற்படுகிற பக்க விளைவை இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படத்தின் மூலம் பட்டவர்த்தனமாக பதிவு செய்திருக்கிறோம். இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படத்தை பார்க்க ஒரு காதல் ஜோடி வந்தார்கள் என்றால் படம் முடிந்து வெளியே போகும்போது அவர்கள் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு தெளிவான மனநிலையோடு அவரவர் வீட்டிற்கே செல்வார்கள் என்று நம்புகிறோம்.
‘புகையிலை புற்று நோயை உண்டாக்கும்’.. ‘குடி குடியைக் கெடுக்கும்’.. ‘சிகரெட் உடல் நலத்திற்கு தீங்கானது’ போன்ற எச்சரிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுபோல், காதலினால் ஏற்படுகிற கொலைகள், தற்கொலைகள் போன்ற பல தீய செயல்களை தடுக்க இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த மனதில் ஒரு மாற்றம் திரைப்படம் இளைஞர்களால் மட்டுமின்றி பெற்றோர்களாலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திருவிழாவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.’’ என்கிறார் டைரக்டர் ஜனா வெங்கட்.                    
பாம்யார்ட் S.சரவணன் இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 


3  நதிகள் நனைவதில்லை’
இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி, திரு.மயில்சாமி அண்ணாதுரை, ‘நதிகள் நனைவதில்லை’ படத்தைப் பார்த்து இயக்குனர் பி.சி.அன்பழகனை பாராட்டியிருக்கிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான இந்தியா அனுப்பிய ‘மங்கள்யான்’ பயணத்திற்கு பெரும் பங்காற்றிய விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை, தனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கும் இல்லை என்றும் அதற்கு நேரமும் இல்லை என்றும் கூறி வந்த நிலையில், நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படத்தை பார்க்க விருப்பப்பட்டார்.
அதன்படி சமீபத்தில் சென்னை இசைக் கல்லூரியில், உள்ள தாகூர் பிலிம் சென்டர் பிரிவியூ தியேட்டரில் அவருக்காக திரையிடப்பட்ட காட்சியில், தனது மனைவியுடன் வந்து மயில்சாமி அண்ணாதுரை ‘நதிகள் நனைவதில்லை’ படம் பார்த்தார்.
படம் முடிந்த பிறகு, படத்தில் நன்றாக நடித்த ஹீரோ ப்ரணவ்வையும், இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனையும் வாழ்த்திய மயில்சாமி அண்ணாதுரை, “படத்தின் கதையும், வசனங்களும், பாடல்களும், படமாக்கப்பட்ட விதமும் தம்மை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.
மேலும் “உச்ச கட்டமாக படத்தில் நடக்கும் க்ளைமேக்ஸ் காட்சிகளும், டேம் காட்சிகளும் பார்ப்பதற்கு பரபரப்பாக இருக்கின்றன. கன்னியாகுமரியின் ஒட்டு மொத்த அழகையும் வெண்திரை இல்லாமல் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகளையும் ரசிக்கும் படியாக படமாக்கியுள்ள இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், குடும்பத்தோடு பார்க்க கூடிய உயர்ந்த கருத்துக்கள் கொண்ட காட்சிகளை வைத்து, இது ஒரு முக்கியமான படம், என்று சொல்லும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார். படம் முடிந்த பிறகும், படத்தின் அநேக காட்சிகள் மனசை விட்டு அகல மறுக்கின்றன. இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு இந்த படம் திருப்பத்தை தரும்.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றும் பாராட்டினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘நதிகள் நனைவதில்லை’ பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, பாடல்களை வெளியிட்டார். சினிமா நிகழ்சிகளில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வரும் மயில்சாமி அண்ணாதுரை, கலந்துகொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றொர்கள், தங்கள் கனவுகளை பிள்ளைகளின் தலையில் போட்டு உடைக்கக் கூடாது.. அவரவர் கால்களில்தான்… அவரவர் பயணங்கள்.. நம்பிக்கையில்லாத மனிதனுக்கு இதயமும் சுமைதான்… குறுக்கு வழியின் துணை கொண்டு, மஹால்களை கட்டுவதைவிட…நேர்வழியின் கரம் பற்றி குடிசையில் தூங்குவதே ஆத்ம செல்வமாகும் என்ற உயர்ந்த கருத்துக்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ‘நதிகள் நனைவதில்லை’.
இதில் ப்ரணவ், மோனிகா, நிசா, காயத்திரி, கல்யாணி, சரிதா, செந்தில், பாலாசிங், மதுரை முத்து, சிங்கமுத்து, குண்டு கல்யாணம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். செளந்தர்யன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் கவனிக்க, சண்டைப் பயிற்சியை தவசிராஜ் செய்திருக்கிறார்.
தான் இயக்கும் படங்களின் மூலம் மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல கருத்துக்களையும், மக்களுக்கு நம்பிக்கை தரும் விஷயங்களையும் சொல்லும் பி.சி.அன்பழகனின், இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.


சுட்ட பழம் சுடாத பழம்


ஆர்.ஆர். சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் ஆர்.சிவன், ஆர்.செல்வன் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு சுட்ட பழம் சுடாத பழம் என பெயரிடப்பட்டு உள்ளது.


இதில் ராஜா, காஷ்மீரா முக்கிய கேரக்டரில் அறிமுகமாகின்றனர். ரோபோ சங்கர், மகாநதி சங்கர், சுருளி மனோகர், கிங்காங், பயில்வான் ரங்கநாதன், லதாராவ், ஆர்.செல்வம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவா.ஜி இயக்குகிறார்.


குழந்தைக்காக மழலை பட்டாளம், களத்தூர் கண்ணம்மா போன்ற குழந்தைகளுக்கான பட வரிசையில் குழந்தைகள் படமாக இப்படம் தயாராகிறது என்றார் இயக்குனர். முழு நீள காமெடி படமாகவும் இருக்கும் என்றார்.


இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், தனது சொந்தக் குரலில் கொங்கனிக்கா, கொங்கனிக்கா என்ற பாடலை பாடி அதற்கான காட்சியில் ஆடி நடித்துள்ளார். குழந்தைகளும், பெற்றோரும் சேர்ந்து பார்க்கும் படமாக உருவாகிறது என்று தெரிவித்தார்.
இப்படத்தின் பாடல்களுக்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார். ஆர்.ஹெச் அசோக் ஒளிப்பதிவு செய்கிறார். பின்னணி இசை: கணேஷ் ராகவேந்திரா, எடிட்டிங்: இளங்கோவன், நடனம் : ரமேஷ் ரெட்டி, செந்தாமரை, பாடல்: முத்து விஜயன், ஜெயமுரளி, வைரபாரதி.



5  சி.எஸ்.கே – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா
csk
சி.எஸ்.கே – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா படத்தின் பாடல்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அறிமுக இயக்குனர் எஸ்.சத்தியமூர்த்தி இயக்கும் படம் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா. இவர், பிரகாஷ் ராஜ், கே.வி. குகன் ஆகியோரிடம் உதவியாளராய் பணிபுரிந்தவர். புதுமுக இசையமைப்பாளர் சித்தார்த் மோகன் இந்த த்ரில்லர் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். எஸ்.எஸ்.பிலிம் பேக்டரி படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து இசையமைப்பார் சித்தார்த் மோகன் கூறுகையில், “இப்படத்தில் வேலை செய்தது தினம் தினம் ஒரு புது அனுபவமாய் இருந்தது. இயக்குனர் சத்தியமூர்த்தி எழுதியுள்ள முருகன் பாட்டு அனைவரின் எண்ணங்களை வருடும் வண்ணம் அமைத்துள்ளோம். ‘காஞ்சிபோன’ என்ற பாடலை எழுதியது மிகவும் புதிய அனுபவமாய் இருந்தது. அனைவரது கவனத்தை ஈர்க்க ஒரு விதமான பிசிக் சப்தத்தை பின்னணி இசையில் சேர்த்துள்ளோம். அனைத்து பாடல்களும் எல்லாவிதமான ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு உறுதுணையாய் இருந்த பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் எனது குழுவினர் அனைவருக்கும் நன்றி.” எனக் கூறினார் அறிமுக இசையமைப்பாளர் சித்தார்த் மோகன். இதனிடையே சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா படத்தின் பாடல்கள் பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை வைப்ரன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.


6  தனது புதிய படத்தைப் பற்றி ஜாக்கி சான்
dragon-blade-poster
தனது அடுத்த புதிய படமான ‘டிராகன் பிளேட்’ (Dragon Blade) படம் குறித்த சில தகவல்களையும் ஜாக்கி சான் குணசீலனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரையேறும் சரித்திர கால, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய படம் டிராகன் பிளேட்.

அடுத்த இரண்டு வாரங்களில் தனது புதிய படத்தை விளம்பரப்படுத்த மீண்டும் கோலாலம்பூருக்கு வருகை தரவிருப்பதாகவும் ஜாக்கி சான் தன்னிடம் தெரிவித்ததாகவும் குணசீலன் கூறியுள்ளார்.
உலக அரங்கில் ஜாக்கி சான் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், பழக்கவழக்கங்களில் மிகுந்த பணிவும், எளிமையும், சாதாரண மக்களோடு மக்களாக கலந்து பழகும் தன்மையும் கொண்டவராக இருந்தார் என்றும் குணசீலன் ஜாக்கி சான் குறித்து புகழாரம் சூட்டினார்.
“நான் அவரோடு இருந்த 2 மணி நேரமும் சிரித்த முகத்துடனேயே இருந்த ஜாக்கி சான், நான் கேட்ட கேள்விகளுக்கும், சலிக்காமல் பதிலளித்தார். அவரோடு அன்று நான் செலவிட்ட அந்த இரண்டு மணி நேரங்களும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாக அமைந்துவிட்டது. டத்தோ விருது கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம், ஜாக்கி சானோடு இரண்டு மணி நேரம் அளவளாவிய பெருமைமிகு தருணம் என பிப்ரவரி 1 எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது” என மகிழ்ச்சியும், பெருமையும் பொங்க டத்தோ குணசீலன் தெரிவித்துள்ளார்.

7 காலகட்டம்



சரித்திரம்பேசு”
அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “சரித்திரம்பேசு” என்றுபெயரிட்டுள்ளனர்.அகிலன் படத்தில் நடித்த மதுரை டாக்டர் சரவணன் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு இதில் ஜோடி கிடையாது.இளம் ஜோடிகளாக கிருபா – கன்னிகா இருவரும் அறிமுகமாகிறார்கள்.
“பதினெட்டாம் குடி” என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகேஸ்வரன் போஸ் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். பசங்க படத்தில் சிறுமியாக நடித்த தாரணி இதில் யோகேஸ்வரன் போஸ் ஜோடியாக நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, வெங்கல்ராவ், பரளி நாகராஜ், பாண்டிராஜ்,செல்லத்துரை,கிரிகெட் மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஜெகதீஷ் – வி.விஸ்வம்
இசை – ஜெயகுமார். இவர் இசையமைப்பாளர் தேவாவிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியவர்.

சரித்திரம்பேசு படம் பற்றி என்ன சொல்கிறார் இயக்குனர்!
தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கும் கிருபாவும் அவரது நண்பர்களும் கொலை என்று சொன்னாலே தூரம் ஓடுபவர்கள். ஆனால் சூழ்நிலை அவர்களை எப்படி கோபக்காரர்களாக மாற்றியது என்பதை திரைக்கதை அமைத்து கமர்ஷியல் படமாக்கி இருக்கிறேன்.முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி ஆக்ஷன் கலந்து பரபரப்பான படமாக உருவாகிறது. அகிலன் படத்தில் நடித்த மதுரை டாக்டர் சரவணனின் கதாபாத்திரம்பரபரப்பாக பேசப்படும் என்கிறார் இயக்குனர் ஸ்ரீ மகேஷ்



நன்றி  - மாலை  மலர்    தினமணி

0 comments: