Thursday, August 14, 2014

சினேகாவின் காதலர்கள்

சினேகாவின் காதலர்கள்-

சினேகாவின் காதலர்கள் சினேகாவின் கதை அல்ல: இயக்குனர் விளக்கம்

snehavin kadhalargal is not snehas story says director
 பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் எழுதி இயக்கும் படம் சினேகாவின் காதலர்கள். தமிழன் டி.வி.தயாரிக்கிறது. அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோயினாக நடித்த அத்வைதா இதில் ஹீரோயின் மற்ற அனைவரும் புதுமுகங்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் கோவையில் 25 நாட்கள் முடிந்திருக்கிறது.

"பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோதுதான் கொடைக்கானலில்  படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் இரண்டு நாட்கள் தவிர எங்களுக்கு மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. படத்தின் முக்கிய கேரக்டர் ஹீரோயின்தான். அவர்தான் சினேகா. அந்த கேரக்டருக்கு சுமார் 200 பேர் வரை பார்த்து இறுதியாக அத்வைதா தேர்வு செய்யப்பட்டார் அவர் இப்போது கீர்த்தி என்று பெயர் மாற்றி உள்ளார். படத்தின் தலைப்பை பார்த்து விட்டு பலர் இது நடிகை சினேகாவின் கதை என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. கேரக்டர் பெயர் சினேகா என்பதைத் தவிர வேறெந்த தொடர்பும் கிடையாது. ஒரு இளம் பெண்ணின் வாழக்கையில் கடந்து செல்லும் சில ஆண்களைப் பற்றிய கதை. அந்த ஆண்களில் அந்த பெண் யாரை தன் துணையாக தேர்வு செய்கிறாள். ஏன் என்பது மாதிரியான கதை. 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடக்க உள்ளது" என்றார் இயக்குனர் முத்துராமலிங்கன். 
Sneha fear of Snehavin kadhalarkal
பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தில் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து கமல்ஹாசன் வரை ஜோடி சேர்ந்து ஒரு பெரிய ரவுண்டே வந்தார். பின்னர், தனது மார்க்கெட் சறுக்கிக்கொண்டு வந்த நேரத்தில் விஜயசாந்தி பாணியில் பவானி ஐபிஎஸ் என்றொரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்து தனக்குள் இருந்த ரப் அண்ட் டப் சினேகாவை வெளியே கொண்டு வந்தார்.

அதையடுத்து, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோதிலிருந்தே தான் காதலித்து வந்த நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசி ஆனார் சினேகா. இருப்பினும் நடிப்பு ஆசை அவரை ஆட்டுவிக்க, சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிப்பவர், உன் சமையல் அறையில், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில், திடீரென்று சினேகாவின் காதலர்கள் என்ற டைட்டீலில் ஒரு படத்தைப்பற்றிய செய்திகள் வெளியாகின. சினேகாவின் காதலர்கள் என்றதும், திருமணத்துக்கு முன்பு அவர் காதலித்தவர்களைப்பற்றிய கதைதானோ என்று நினைத்து அந்த செய்தியை அனைவரும் ஆர்வத்துடன் படித்தனர். ஆனால், அது வேறொரு சினேகாவைப்பற்றிய கதை. அந்த படத்துக்கும் நடிகை சினேகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை செய்தியில் படித்தும் சலித்துக்கொண்டனர்.

ஆனால், இந்த செய்தி சினேகா வட்டாரத்தையும் ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. அதென்ன சினேகாவின் காதலர்கள். ஏதாவது வம்பு புடிச்ச செய்தியாக இருக்குமோ என்று அவர்கள் அவசர அவசரமாக அந்த செய்தி பரபரப்புடன் படித்துள்ளனர். இது வேறு சினேகாவைப்பற்றிய கதை என்று அமைதியடைந்திருக்கின்றனர்.

என்றாலும் சினேகாதான் ரொம்ப பதறிப்போனாராம். அதனால் அவுட்டோரில் இருந்த அவரிடம் இது வேறு படத்தின் கதை. படத்தில் நடிக்கும் கேரக்டரின் பெயர் சினேகாவாம் அதைத்தான் டைட்டீலாக்கி உள்ளனர். நீ பயப்படும்படியாக எதுவும் இல்லை என்று அவரை ஆசுவாசப்படுத்தினார்களாம்.

0 comments: